Friday, September 29, 2017

மின் கட்டணம் செலுத்த கிடைக்குமா அவகாசம்?
பதிவு செய்த நாள்29செப்
2017
00:31


தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு, நுகர்வோரிடம் எழுந்துள்ளது.

வீடுகளில், மின் வாரிய ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்
.
இல்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின், அபராதத் தொகையுடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் இணைப்பு வழங்கப்படும். ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று முதல், வரும் திங்கள் வரை, தொடர்ந்து அரசு விடுமுறை.

மின் நுகர்வோர் கூறியதாவது: இணையதளம், மொபைல், 'ஆப்' வசதிகளை, மின் வாரியம் ஏற்படுத்தி இருந்தாலும், பலரும், மின் கட்டண மையங்களில் தான், கட்டணத்தை செலுத்துகின்றனர். இது, அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள், விடுமுறையாக இருந்தால், அதற்கு அடுத்து வரும், முதல் வேலை நாளில், அபராதம் வசூலிப்பதில்லை. தற்போது, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என, தொடர்ந்து விடுமுறை. இந்த நாட்களில், கட்டணம் செலுத்த கடைசி நாள் உள்ள நுகர்வோர், செவ்வாய் கிழமை கட்டணம் செலுத்தினால், அபராதத்தை தவிர்ப்பர். 

தொடர் விடுமுறையால், பலர், ஊர்களுக்கு சென்றுள்ளனர். மாத இறுதியில் பண்டிகைகளும் வந்ததால், செலவு அதிகம் இருக்கும். அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...