Friday, September 29, 2017

தஞ்சை - திருச்சி சோதனை ஓட்டம் : 30ல் ரயில்கள் நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள்29செப்
2017
01:03

விருத்தாசலம்: தஞ்சை - திருச்சி இருவழி பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதால், 30ம் தேதி, ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

தஞ்சாவூர் - திருச்சி இடையே, இருவழி ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன. பொன்மலை - சோழகம்பட்டி இடையிலான, 20 கி.மீ., பாதையில், 30ம் தேதி, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டம் நடக்கிறது.
இதனால், அன்று ஒரு நாள் மட்டும், திருச்சி மார்க்கத்தில் வந்து செல்லும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, திருச்சி - சென்னை சிறப்பு ரயில், 30ம் தேதி, மாலை, 3:35 மணிக்கு பதிலாக, 2:00 மணி நேரம் தாமதமாக, 5:35 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து, விருத்தாசலம், சேலம், கரூர் மார்க்கமாக திருச்சி செல்லும். இதேபோல், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், 29ம் தேதி, திருச்சியில் இருந்து, கரூர், சேலம், விருத்தாசலம் வழியாக சென்னை செல்லும்.
மேலும், அன்று, கடலுார் - திருச்சி பாசஞ்சர் ரயில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்; திருச்சி - கடலுார் பாசஞ்சர் ரயில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இத்தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

Govt puts time riders to receipt, utilisation of funds under FCRA

Govt puts time riders to receipt, utilisation of funds under FCRA Bharti.Jain@timesofindia.com 08.04.2025 New Delhi : Centre has put a three...