Thursday, September 28, 2017

மெழுகுவர்த்தி ஒளியில் பிரசவம் : ஆரம்ப சுகாதார நிலைய அவலம்
பதிவு செய்த நாள்28செப்
2017
00:35

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி, பிரசவம் பார்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த குமராட்சியைச் சேர்ந்த நித்யா என்பவர், பிரசவத்திற்காக, குமராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, 24ம் தேதி இரவு, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. பதற்றம் அடைந்த மருத்துவக் குழுவினர், மெழுகுவர்த்தி ஏற்றி, அந்த வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துஉள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஜெனரேட்டர் வசதி இருந்தும், அதற்கு டீசல் நிதி ஒதுக்கப்படாததால், இயக்கப்படாமல் காட்சிப் பொருளாக மாறி விட்டது.
'இனியாவது, கடலுார் மாவட்ட நிர்வாகம், ஜெனரேட்டர் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டீசல் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...