Sunday, September 17, 2017

Fear of judicial whip ends govt employees' strike

Government offices are not rest houses for the employees. Government servants cannot act like masters of public."

TNN | Sep 16, 2017, 10:34 IST

CHENNAI: In the end, it was fear of the judicial whip that did the trick. The week-long strike by various government employees unions, demanding wage revision and old pension scheme, was withdrawn on Friday, and staffers returned to offices by 2pm, after the Madras high court made it known it would crack the whip if the strike was not called off immediately and unconditionally.

A bench of Justice K K Sasidharan and Justice G R Swaminatha, which had on September 7 restrained JACTO-GEO from going ahead with the proposed strike, said: "The indefinite strike paralysed the administration. The employees on strike are not permitting the public to visit the collectorate and other government offices. These premises are virtually under the control of employees who treat it as if it is their private property.

"They have no right to remain at the government office day and night, and make it their abode. Government offices are not rest houses for the employees. Government servants cannot act like masters of public."

The bench was passing orders on a contempt petition that was filed seeking action against the association office-bears who had wilfully violated the injunction orders of the court and continued their strike.

Justice Sasidharan, writing the judgment for the bench, listed a number of apex court verdicts to drive home the point that there was no fundamental or legal or statutory right for anyone to go on strike, and that a constitutional court had ample jurisdiction to grant declaratory relief in matters like this.

The bench initially gave counsel for the association 15 minutes to consult the officebearers and inform the court of their stance. When counsel returned and said they would like to convene the general body meeting to announce their decision, the bench rejected the argument saying in view of the injunction order granted by the court on September 7 itself, there was no question of taking the general body's permission for withdrawal of the strike.

After the judges said the court would see that its orders were enforced, the association agreed to suspend the strike with a request that the settlement proceedings be initiated.

LATEST COMMENTExcellent judgement. Great work by the court. The Govt employees cannot make public sub seventh to them. They are there to serve people and implement Govt orders.qrst asdd

The bench then directed the Tamil Nadu chief secretary to take up the issue with the government, and said it must address the various issues raised by the employees and submit its views to the court on September 21. Noting that it hoped the government would approach the issue with an open mind in view of unconditional withdrawal of the strike, the judges pointed out that the employees' associations had agreed to resume work on Friday itself.

"We, therefore, direct the employees, including teachers, who have been on strike, to report to duty immediately, and in any case by 2pm on Friday," said the bench.
Traffic diversion for ODI match in Chepauk

TNN | Sep 16, 2017, 23:36 IST

Chennai: Police have announced traffic diversions to facilitate vehicle movement in and around Chepauk as the one-day international cricket match between Indiaand Australia is to be held at the M A Chidambaram stadium on Sunday. The traffic diversions will be effected from 11am to 3pm, a release said. Bells Road will be made one way, with entry from Wallajah Road and vehicles will not be allowed to enter from Bharathi Salai. This will be made vice versa when the match is over.

Vehicles from Kamarajar Salai towards Bharathi Salai will not be allowed except MTC buses and for vehicles with valid pass. Canal Road will be made one-way, with entry from Bharathi Salai. Vehicles with passes bearing the letters M, P, T, W, V and MTC buses coming from Anna Salai into Wallajah Road will be allowed on Bells Road. Vehicles bearing letters B and R will not be allowed on Bells Road and will be directed to park at MRTS and Pattabiram Gate.

Vehicles coming from War Memorial and Gandhi Statue with passes bearing letters M, P, T, W, V and MTC buses will be allowed through Bharathi Salai. Other vehicles will be directed to the service road for parking on Foreshore Service Road. Vehicles without passes would be parking their vehicles on Foreshore Estate Road. Parking arrangements for about 3,350 vehicles have been made for vehicles with passes.
அசுரவேகத்தில் செல்லும் தனியார் பஸ்கள் பதறுது மனசு:தினம் தினம் நடக்குது பெரும் விபத்துக்கள்
பதிவு செய்த நாள்16செப்
2017
23:18


ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்வதால், பொதுமக்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உடல் ஊனம் அடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, அருப்புகோட்டையிலிருந்து மதுரைக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. மேலும், தென்காசி, திருநெல்வேலி, தேனிக்கும் தனியார் பஸ்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அரசு பஸ்களை விட கட்டணம் குறைவு, குறைந்த நேர பயணம் என்பதால் அதிகளவில் பயணிகள் தனியார் பஸ்களுக்காக காத்திருந்து பயணிக்கின்றனர்.இதில் போட்டி இல்லாத வழித்தடங்கள் மற்றும் கிராம வழித்தடங்களின் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று,
பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர். ஆனால், மதுரையிலிருந்து ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை வழித்தடங்களில் அரசு பஸ்களுடன் போட்டிபோட்டு வருவாயை தனியார் பஸ்கள் பெறுகின்றன.அரசு பஸ்களுடன் ஒப்பிடுகையில் தனியார் பஸ்கள்
சுத்தமாகவும், இருக்கைகள் மற்றும் ஜன்னல்கள் பழுதில்லாமல் இருப்பதும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதனால் நாளுக்குநாள் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களுடைய வருவாயை பெருக்கும் வகையில் அதிவேகங்களில் தனியார் பஸ்கள் செல்வது பயணிகளுக்கு ஒருவித விபத்து அபாயத்தை ஏற்படுத்துகிறது. எதிர்திசையில் வரும் வாகனங்களும் அதிவேகமாக வந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயமே உள்ளது. தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்திலும் தினமும் பல சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் காயமடைந்து உடல்ஊனமடைந்தும், பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

திட்டமிடல் அவசியம்அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியில் விபத்தில்லா நிலையை ஏற்படுத்த அரசு நிர்வாகம் சரியான திட்டமிடல் மிகவும் அவசியமாகும். பஸ் ஊழியர்கள் கூறுகையில், 'முன்பு மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தான் ராஜபாளையம், சிவகாசி, அருப்புகோட்டைக்கு பஸ் புறப்படும். தற்போது மாட்டுதாவணியிலிருந்து புறப்படுவதால் துாரம் அதிகரித்தநிலையில், போதிய இயக்கநேரம் வழங்கப்படாமல் இரு நகரத்தின் பஸ் ஸ்டாண்ட்களை தொட்டு வரும் நிலையில் தனியார் பஸ்கள் இயங்குகிறது.ஏதாவது ஒரு இடத்தில் காலதாமதம் ஏற்பட்டால் கூட அரசு பஸ் நிர்வாகங்கள் எங்களை டிக்கெட் ஏற்ற அனுமதிப்பதில்லை. எனவே தான் கூடுதல் வேகத்தில் மிகவும் கவனத்துடன் பயணிக்கிறோம். நேரங்களை மாற்றியமைத்து போதிய ஓய்வு நேரங்கள் கொடுத்து பஸ்களை இயக்கினால் மட்டுமே விபத்தில்லாநிலையில் பயணிக்கமுடியும்,'என்கின்றனர்.அரசு நிர்வாகம்தான் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்தி, விபத்தில்லா நிலையை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவையாகுது ஓய்வு

ஸ்ரீவில்லிபுத்துார் ரவிந்திரநாத், ''குறைந்த கட்டணம், விரைவுபயணம், பழுதில்லாத இருக்கை வசதிகள் இருப்பதால் தனியார் பஸ்களை விரும்பி பயணிக்கின்றனர். போதியநேரம் இல்லாததால் பஸ்கள் அதிவேகத்தில் பயணிக்கிறது. எதிரில் வரும் டூவீலர் ஓட்டிகள் மற்றும்நடந்துசெல்வோர் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை, தரமில்லாத ரோடு ஆகியவை நாளுக்குநாள் விபத்தினை அதிகரிக்கிறது. தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுபடுத்த, அப்பஸ்களுக்கு ஒரு டிரிப்பிற்கும் மற்றொரு டிரிப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் ஒருமணிநேரம் ஓய்வு கொடுத்து பஸ்களை இயக்கினால், தனியார் பஸ்களினால் ஏற்படும் விபத்து இழப்புகள் குறையும்,''என்றா
இறந்தவர்களுக்கு டிக்கெட்வாங்கிய ரயில் பயணியர்
பதிவு செய்த நாள்16செப்
2017
20:08

ஜபல்பூர், : மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து செல்லும் ரயிலில், இறந்தவர்களுக்கும் டிக்கெட் வாங்கி செல்லும் பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் ஆச்சரியமடைந்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜபல்பூரில் இருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள, இந்து, ஜைனர்கள் மற்றும் புத்த மதத்தினரின் புண்ணிய தலமான, கயாவுக்கு செல்லும் ரயிலில், சோதனையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்து வருகிறது.

ஜபல்பூரில் இருந்து, கட்னி, சத்னா, ரீவா மற்றும் இடாரசி ரயில் நிலையங்களுக்கு இடையில், எட்டு மணி நேரம் நடந்த சோதனையில், இறந்த மூதாதையரின் பெயரில் டிக்கெட் எடுத்த பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் வியந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணியர், பொது மற்றும் படுக்கை வசதி டிக்கெட்டுகளை வாங்கியது தெரியவந்தது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:தற்போது, பித்ருபட்சம் என்னும், 'மஹாளயபட்சம்' நடக்கிறது. அப்போது, பித்ருலோகத்தில் இருக்கும் நம் மூதாதையர், பூமிக்கு நம்மை பார்க்க வருவதாக ஐதீகம். பீஹாரில் உள்ள கயாவில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய செல்வதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒரு பயணி, 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த மூதாதையருக்கு டிக்கெட் வாங்கியதாக கூறினார்.
மலேசியாவில் 23 பேர் சாவுக்கு காரணமான சிறுவர்கள் கைது
பதிவு செய்த நாள்16செப்
2017
23:06

கோலாலம்பூர், மலேசியாவில், உறைவிடப் பள்ளியில் தீ வைத்து, 23 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு சிறுவர்களை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள உறைவிடப் பள்ளி மாணவர்கள் சிலர், சிறுவர்கள் சிலரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும்நடவடிக்கையாக, அந்த சிறுவர்கள், சமீபத்தில் அந்த பள்ளிக்கு தீ வைத்தனர்.இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள், 21 பேர் உட்பட, 23 பேர்பலியாயினர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், தீ விபத்துக்கு காரணமான, 11 - 17 வயதுடைய சிறுவர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஆறு பேர், போதை மருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்17செப்
2017
01:41

செங்கல்பட்டு :செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., ரேடியோலஜி மாணவர்களுக்கு பட்டம்அளிப்பு விழா நடந்தது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரியில், பி.எஸ்சி.,. ரேடியாலஜி முதலாமாண்டு பட்டம் அளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில், முதல்வர் உஷா சதாசிவன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

துணை முதல்வர், அனிதா, துணை கண்காணிப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 50 மாணவர்களுக்கு பட்டங்களை,முதல்வர் உஷா சதாசிவன் வழங்கினார். விழாவில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

பதிவு செய்த நாள்16செப்
2017
22:46

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.

மாத சம்பளம்சி ல ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலைநேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம்நடத்துகின்றனர்.அதனால், பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், ௧௦ம் வகுப்பு எடுக்கும்பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்,அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது

.தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்குகற்றுத் தருவதாக கூறப்படுகிறது.எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் படிக்கும், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின்டியூஷன் வகுப்புக்குசெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எச்சரிக்கை: இதற்காக, மாதந்தோறும், ௧,௦௦௦ - ௩,௦௦௦ ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர். - நமது நிருபர் -
புதர்மண்டி கிடக்கும் காருகுறிச்சி அருணாசலம் சிலை! பிரபல நாதஸ்வர கலைஞருக்கு நினைவிடம் வருமா?

பதிவு செய்த நாள்16செப்
2017
20:16




திருநெல்வேலி, பிரபல நாதஸ்வர கலைஞர், காருகுறிச்சிஅருணாசலத்தின் சொந்த கிராமத்தில், அவரது சிலை யை சுற்றி, புதர் மண்டி கிடக்கிறது. 'அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்' என, கிராமத்தினர்வலியுறுத்தி உள்ளனர்

.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்துள்ளது காருகுறிச்சி கிராமம். மறைந்த பிரபல நாதஸ்வர கலைஞர் அருணாசலம் பிறந்த ஊர். அவரது தந்தை பலவேசம், கோவிலில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார்.சினிமா துறைஅங்குள்ள பண்ணையார் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நாதஸ்வரம் வாசிக்க, கூறை நாடு நடேச பிள்ளை என்ற நாதஸ்வர வித்வான்வந்திருந்தார்.அவருக்கு தரப்பட்ட மரியாதையை பார்த்த பலவேசம், தாமும் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள விரும்பினார். அது முடியாமல் போகவே, தன் மகன் அருணாசலத்தை, சிறு வயதில் அதற்காக பழக்கினார்.திருவாவடுதுறை ராஜரத்தினத்திடம், தன் மகனை நாதஸ்வரம் கற்க அனுப்பி வைத்தார். குருகுல வாசம் போல, அவரிடம் இசையை கற்றுத் தேர்ந்த அருணாசலம், பின்னாளில் சினிமா துறையிலும் கோலோச்சினார்.கொஞ்சும் சலங்கை என்ற படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துள்ள, சிங்காரவேலனே தேவா' என்ற பாடல் மிகவும் பிரபலம்.சென்னை தமிழிசை சங்கத்தின் இசை விழாவில், அருணாசலத்தின் நாதஸ்வர கச்சேரியை, வானொலி நிலையம், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பியது.

அருணாசலத்தின் கச்சேரிக்குப் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் கும்பகோணம் தங்கவேல், வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர், தவில் வாசித்துள்ளனர்.அவருக்கு சங்கீத கலாநிதி விருதை, அரசு வழங்கியது. காருகுறிச்சியை விட்டு, கோவில்பட்டிக்கு புலம் பெயர்ந்த அருணாசலத்தின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியில், நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும், வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய சம்பவம், இன்றளவும் காருகுறிச்சியில் பெருமையாக பேசப்படுகிறது.

கோரிக்கைகாருகுறிச்சி கிராமத்தின் முகப்பில், நாதஸ்வரத்தை கையில் பிடித்தாற் போல, அருணாசலத்தின் சிமென்ட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை பராமரிப்பின்றி, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அவரது பூர்வீக வீட்டையும் யாரோ வாங்கி விட்டனர்.காருகுறிச்சியில், அனேக மாக எல்லோரது வீடுகளிலும், அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்கும் படமோ, அவர் நேரு, காமராஜ் போன்றோருடன் இருக்கும் கருப்பு, வெள்ளை படங்களோ சுவற்றில் இடம் பிடித்திருக்கின்றன. 1907ல் பிறந்து, 1964ல் மறைந்த இசை மேதைக்கு, காருகுறிச்சியில் நினைவிடம் அமைக்க வேண்டும்என்பதே, அந்த ஊர் மக்களின் கோரிக்கை.மேலும், 'அங்கு, அவரது இசைத்தட்டுகள், பழைய புகைப்படங்கள் போன்றவற்றை, காட்சிப்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், காருகுறிச்சி கிராம மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.

Saturday, September 16, 2017

ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’: அன்பு வாசக நெஞ்சங்களே...


ங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நேசம் மிகுந்த வாசகர்களாகிய உங்களது ஊக்கமும் பங்களிப்பும்தான், நம் நாளிதழின் தனித்துவமான வெற்றிப் பயணத்துக்கு முக்கியமான காரணம். தொடங்கிய நாள் முதல் இன்று வரை, எழுத்துரு தொடங்கி எழுதும் உள்ளடக்கம் வரையில் அனைத்திலுமே உங்களின் அக்கறையான கருத்துகள் எதிரொலிக்கின்றன. அதுவே, தேவைக்கேற்ற மாற்றங்களுக்கு வித்திட்டு, கூடிச் செல்லும் பொலிவுக்கும் கிரியா ஊக்கியாக அமைந்துள்ளது.

தமிழால் இணைவோம் எனும் முழக்கத்துடன் தன் பயணத்தைத் தொடங்கிய நம்முடைய நாளிதழ் தமிழ் - தமிழர் முன்னேற்றப் பணியில் வரும் ஆண்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தலைநகர் சென்னையில் தொடங்கியிருக்கும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியும் தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றிவரும் பல்துறை வல்லுநர்களைக் கவுரவிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘தமிழ் திரு’ விருதுகளும் அதன் தொடக்கம்தான். ‘தி இந்து’ மொழிசார் பணிகளில் தன்னை மேலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம்முடைய வாசகர்களின் தொடர் வலியுறுத்தலின் வெளிப்பாடே இதுவும்!

139 வருஷங்களுக்கு முன் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகை தொடங்கப்பட்டபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஒவ்வொரு பிறந்த நாளிலும் நாங்கள் நினைவுகூர்கிறோம், “பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல; சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளை செழுமைப்படுத்தி, உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையை பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்”

அதனடிப்படையில்தான், அன்றாடச் செய்திகளை அளிப்பதே நாளிதழ்களின் பணி என்றிருந்த நிலையை இன்று நாம் தமிழிலும் வெற்றிகரமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் செய்திகளை அளிக்கும் அதே நேரம், நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் மதச் சார்பின்மை, சாதிய எதிர்ப்பு, மாநிலங்கள் உரிமை, பாலின சமத்துவம், சமதர்மம் உள்ளிட்ட உயர் விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதோடு மது ஒழிப்பு, நீர்நிலைகள் மேம்பாடு, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், அரசு நிறுவனங்கள் - பள்ளிகள் மேம்பாட்டுக்குத் துணை நிற்பது என்று சமூகத்தின் அடிப்படை வளர்ச்சி தொடர்புடைய ஒவ்வொரு விஷயங்களிலும் ஆழப் பயணிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு தமிழ்ச் சமூகத்தின் அறிவுக்கும் சிந்தனைக்கும் புதிய வாயில்களைத் திறந்து காட்டி வருகிறோம்.
நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள். அதற்கு உங்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பின் அடையாளம்தான், நான்கு ஆண்டுகளுக்குள் ’தி இந்து’ தமிழ் உங்கள் இதய சிம்மாசனத்தில் எட்டிப் பிடித்திருக்கும் இந்த உயரம்!
பெருமையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்பெருகிவரும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். உங்கள் நல்லாதரவோடு என்றும் தொடரும் இந்த அற்புதமான பந்தமும் பயணமும்!
- கே.அசோகன்,ஆசிரியர்

medical council of india public notice



அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

vikatan 
அண்ணாவைப் பற்றிய இந்த 10 சுவாரஸ்யங்கள் தெரியுமா..?

றிஞர் அண்ணா 1963-ம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. எம்.என். லிங்கம் என்ற உறுப்பினர், "தமிழ்நாடு என பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார். “நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று அண்ணா கேட்டதும், காங்கிரஸ் உறுப்பினரிடம் இருந்து பதிலேதுமில்லை.

முதல்வராக அண்ணா இருந்தபோது, அவரின் பேச்சு எதிர்க்கட்சியினரும் ரசிக்கும்படியாக இருக்கும். ஒரு சமயம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மிருகக்காட்சி சாலைக்கு நான் தந்த ஆண் புலிக்குட்டி சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த பெண் புலிக்குட்டி மட்டும் நன்கு கவனிக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். அப்போது குறுக்கிட்ட அண்ணா, "சம்பந்திகள் இருவரும் உட்காரந்து, உங்கள் பிரச்னையைப் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்றதும் சபை சிரிப்பால் நிறைந்தது.
பெரியார் தன் முதுமைப் பருவத்தில் செய்துகொண்ட திருமணத்தினால், அண்ணா அவருடன் முரண்பட்டார். பெரியாரின் செயலால் கருத்துவேறுபாடு கொண்ட திராவிடர் கழகத்தினர், அண்ணா தலைமையில் திரண்டனர். பெரியாரின் செயலால் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்தக் கண்ணீர் கடலாகி, அதில் பெரியார் மூழ்குவதாகவும் அட்டைப்படம் வெளியிட்டது திராவிட நாடு. எரிச்சலான பெரியார், அண்ணாவின் ஆதரவாளர்களை 'கண்ணீர்த் துளிகள்' என கிண்டலடித்தார். தி.மு.கழகம் உருவானது. ஆனாலும், பெரியாரை தரம் தாழாமல் விமர்சனம் செய்து கண்ணியம் காத்தார் அண்ணா. 
பெரியாருடன் முரண்பட்டு அரசியல் செய்தாலும், 1967 தேர்தலில் தி.மு.க வென்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற அண்ணா முதலில் சென்று சந்தித்தது பெரியாரைத்தான். தி.மு.கழகத்தின் வெற்றியை பெரியாருக்குக் காணிக்கையாக்குவதாகச் சொல்லி காலில் விழுந்து ஆசி பெற்றார் அண்ணா. இதன்மூலம் அவர் தன்னை சங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டதாக பெரியார் நெகிழ்ந்து எழுதினார்.

அண்ணா ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல; தேர்ந்த நடிகரும்கூட. தான் எழுதிய 'சந்திரோதயம்', 'சந்திரமோகன்' போன்ற நாடகங்களில் நடித்தும் இருக்கிறார்.  புகழ்பெற்ற 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் எம்.ஜி.ஆர். ஆனால், என்ன காரணத்தினாலோ தொடர்ந்து அதில் நடிக்கமுடியாத சூழல் உருவானது. அப்போது அந்த கதாபாத்திரத்திற்கு, தனது இல்லத்தில் தங்கியிருந்த 'கணேசன்' என்ற நாடக நடிகரை நடிக்க வைத்தார் அண்ணா. அந்த நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒருநாள் அந்த நாடகத்தைக் காணவந்த பெரியார், கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “நாடகம் நடந்த இரண்டரை மணிநேரமும் நான் கணேசனை காணவில்லை. சிவாஜியையே கண்டேன்” என நெகிழ்ந்தார். அந்த நடிகர்தான், நடிகர் திலகம் 'சிவாஜி' கணேசன்.

பரபரப்பு அரசியல் தலைவர் என பெயர் எடுத்தாலும் அண்ணாவுக்குள் ஒரு படைப்பாளி எப்போதும் உண்டு. பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு நேரம்கடந்து வீடு திரும்பினாலும், தன் டைரியில் ஓவியம் வரைவது, ஜோக் எழுதுவது என தனக்கு பிடித்தமானவற்றைச் செய்து அந்தநாளின் டென்ஷனைக் குறைத்துக்கொள்வார். போராட்டங்களில் கலந்து சிறை செல்லும்போது அண்ணா தன்னைக் காண வருபவர்களிடம் கேட்கிற விஷயம் ஒன்று புத்தகம். மற்றொன்று வெள்ளைத்தாள். அதில் விருப்பம்போல் படங்களை வரைந்து தள்ளுவார். போர் வீரன், வனம் என அவர் வரைந்த ஓவியங்கள் இன்றும் காணக்கிடைப்பவை. அவர் தன் டைரியில் எழுதிவைத்த ஜோக்குகளில் ஒன்று இது....

ஹோட்டலில் சாப்பிட வந்தவர்: "ஏம்பா.. வடை இவ்வளவு மோசமா இருக்கு...சின்னதாவும் இருக்கே?"
சர்வர்: "பின்னே, என்னங்க...மோசமாகவும் இருந்து, பெரியதாவும் இருந்தா தின்ன முடியாதுங்களே? அதான்!"

ண்ணாவுக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு. அண்ணாவிடம் ரசித்த விஷயம் என்ன என்று எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேட்டபோது, "பொதுக்கூட்டத்தில் மற்றவருக்குத் தெரியாமல் லாவகமாக, அவர் மூக்குப்பொடி போடும் அந்த சில விநாடிகள் பார்க்க ரசனையாக இருக்கும்" என்று பதிலளித்தார். ஆம், அத்தனை ரசனையாக மூக்குப்பொடி போடுவார் அண்ணா.
இரவு நெடுநேரம்வரை எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் வழக்கம் கொண்டவர் அண்ணா. அதனால், பகல் 10 மணிக்கு மேல்தான் எழுதுவார். காஞ்சிபுரத்தில் அவரைக் காண வருபவர்கள், அவருக்காக வீட்டில் வாசற்படியில்  காத்திருப்பதைப் பார்க்கும் அவரது சித்தி, “கட்சிக்கு உதயசூரியன்னு பேரை வெச்சிட்டு, ஒருநாளும் அது உதிக்கறதைப் பார்க்க மாட்டேங்குறானே" என குறைபட்டுக் கொள்வார் காத்திருப்பவர்களிடம். இதைக்கேட்டு, அந்த இடமே சிரிப்பொலியால் அலறும்..
1968-ம் ஆண்டில் மருத்துவக்கல்லுாரி மாணவர் ஒருவருக்கும், பஸ் நடத்துனர் ஒருவருக்குமான மோதல் பெரிய பிரச்னையாகி பேருந்து தொழிற்சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தன. அண்ணா தலையிட்டும் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. மாணவர் சார்பாக, அண்ணா மன்னிப்பு கேட்டும், அவர்கள் மனமிரங்கி வரவில்லை. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, அண்ணா மயக்கமுற்றார். வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அண்ணாவுக்குப் புற்றுநோய் எனத் தெரியவந்தது. 
லைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், அண்ணாவுக்குமான நட்பு ஆச்சரயமானது. கலைவாணருக்காக அண்ணா எழுதிய கதை “நல்லதம்பி”. கதைப்படி, படத்தில் கலைவாணருக்கு ஒரே ஒரு கதாநாயகிதான். அது பானுமதி. அந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது, அண்ணா ஒருமுறை கலைவாணர் இல்லத்திற்குச் சென்றார். அப்போது தன் கணவருடன் தான் நடிக்கமுடியவில்லையே என கலைவாணரின் மனைவி 'மதுரம்' கவலைப்பட்டதை அவரின் செயல்மூலம் தெரிந்துகொண்டார் அண்ணா. அன்றிரவே "நல்லதம்பி" படத்தின் கதையில் மதுரத்திற்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, கலைவாணருக்கு ஜோடியாக்கினார் அண்ணா. 
தனக்கு புகழ்கொடுத்த அந்தப் படத்திற்கு சன்மானமாக, அண்ணாவுக்கு ஒரு காரை பரிசளித்தார் கலைவாணர். காஞ்சிக்கு நேரில்வந்து அதை தந்ததோடு, பெட்ரோல் தட்டுப்பாடு நிலவிய காலம் என்பதால் குறிப்பிட்ட காலம்வரை அந்தக் காருக்குத் தேவையான பெட்ரோல் டோக்கன்களையும் கொடுத்தார் கலைவாணர்.
ந்தி எதிர்ப்பு நிலை, திராவிட நாடு கோரிக்கை இவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தவர் அன்றையப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அவர், சென்னை வந்தபோது தி.மு.க.-வினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டியதற்காக 'நான்சென்ஸ்' என தி.மு.க. தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். அதே நேரு, மாநிலங்களவைக்கு அண்ணா தேர்வாகிச் சென்றபோது, அவரது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு அயர்ந்துபோனார். நேரம் கடந்ததை மாநிலங்களவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, உணர்ச்சிவயப்பட்டு குறுக்கிட்ட நேரு ‘அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்; பேசவிடுங்கள்” என கேட்டுக்கொண்ட அதிசயம் நடந்தது. அண்ணாவின் உரை அந்த அளவுக்கு நேருவைக் கட்டிப்போட்டது.
ண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப் பேசிவிட முடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர். ஒருமுறை பெரியாரைக் காண சுதேச கிருபாளினி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை என பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார். இதை குறிப்பிட்ட கிருபாளினி, "நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரை சுமந்து விற்றுக் கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால், இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார். அதற்குப் பதில்கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே, குறுக்கே புகுந்த அண்ணா, " 'விபூதி அணிந்தவன் சிவ பக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாகப் போட, அமைதியானார் கிருபளானி.
திராவிட நாடு கொள்கையை அண்ணா முன்வைத்தபோது பெரும் சர்ச்சையானது. தி.மு.க-வை தடைசெய்ய வசதியாக, மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வரும் அளவுக்குப் போனது. 1962-ம் ஆண்டு சீனப் படையெடுப்பின்போது, உருவான கொந்தளிப்பான அரசியல் சூழலில், திராவிட நாடு கோரிக்கையை அண்ணா கைவிடுவதாக அறிவித்தார். திராவிட நாடு ஆதவாளர்கள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்குப் பயந்து அண்ணா பின்வாங்கி விட்டதாக அவர்கள் விமர்சித்தனர். 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில், நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் கொடுத்து விடுவதாகும். நாம் அப்படி நடந்துகொண்டால், வருங்காலத் தலைமுறை நம்மைச் சபிக்கும்' என்று 1962 அக்டோபர் மாதம் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்ததும், திராவிட நாடு கொள்கையை தான் கைவிட்டதற்கான காரணத்தை தெரிவித்தார் அண்ணா. இதன்மூலம் தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவர் என்பதை நிரூபித்தார் அவர்.

அதேசமயத்தில் ''கழகத்தை அழிக்க சட்டம் கொணர்ந்தனர். சட்டத்தைத் திருத்தி கழகத்தைக் காத்தோம். 'சூட்சுமம்' புரிகிறதா தம்பி?" என்று தி.மு.க. தொண்டர்களுக்கும் தன் நிலைப்பாட்டை புரியவைத்தார் அண்ணா. 
1967-ம் ஆண்டு தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. பதவியேற்புக்கு தலைவர்கள் கோட் சூட்டுடன் தயாராகிக் கொண்டிருந்தபோது, தனது  நுங்கம்பாக்கம் வீட்டில் கவலையோடு இருந்தார் அண்ணா. “தவறு நடந்து விட்டது. இவ்வளவு சீக்கிரம் நாம் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடாது. இன்னும் சில காலம், நாம் பொறுத்திருந்திருக்க வேண்டும். நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரசையே துார எறிந்துவிட்டு, நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள். நம் மீது பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொன்னார். 
ரசியல் கட்சிகள் அநாகரீகமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலைதான் இன்றைய அரசியல். ஆனால் 1967 தேர்தலில் காமராஜர் தோற்ற தகவல் வந்தபோது, எதிர்முகாமில் இருந்த அண்ணா கலக்கமுற்றார். "காமராஜர் போன்ற அனுபவசாலிகள் தோற்றது நமக்கும் தோல்வி போன்றதே. சட்டமன்றத்தில் அவர் இருந்திருந்தால், நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட அது உதவியிருக்கும்” என மனம் திறந்து சொன்னார் அண்ணா. "வெற்றியைக் கொண்டாடுகிறேன் பேர்வழி" என தோற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியை சங்கடப்படுத்தக் கூடாது. கொஞ்சநாள் கொண்டாட்டங்களை தள்ளிப்போடுங்கள்" என கண்ணியத்தோடு தன் தம்பிகளுக்கு கட்டளையிட்டார். 1957 தேர்தலில் அண்ணாவின் வீட்டுமுன் அவரை அருவெறுப்புடன் விமர்சித்து எழுதி வைக்கப்பட்டது. "இரவில் படிக்கச் சிரமமாக இருக்கும். ஒரு லாந்தர் விளக்கை வையுங்கள். இதை எழுதியவரின் தகுதியை ஊர் தெரிந்து கொள்ளட்டும்" என்றார் தம்பிகளிடம். 
வாரிசு அரசியல் போன்ற ஜனநாயகத்திற்கு விரோதமான விஷயம் இன்று தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், அண்ணா தன் வாரிசுகள் எவரையும் அரசியலில் ஈடுபடுத்தியதில்லை. கட்சி விவகாரங்களில் தலையிட வைத்ததுமில்லை. அண்ணாவின் மறைவுக்குப்பின், கருணாநிதி ஒருமுறையும், அ.தி.மு.க உருவாகி அக்கட்சி சந்தித்த முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்த அண்ணாவின் வளர்ப்புப் புதல்வர் பரிமளத்தை அணுகினார் எம்.ஜி.ஆர். அண்ணாவைப்போன்றே அவரது துணைவியாரும் தன் மகனை அரசியலில் ஈடுபடுத்துவதில்லை என்பதில் உறுதியாக நின்றார். 
ண்ணா வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை 1980-ம் ஆண்டு நினைவு இல்லமாக்கியது தமிழக அரசு. திறப்பு விழாவில் கலந்துகொண்ட அன்றைய குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி, "இந்த எளிய இல்லத்தில் பிறந்த ஒருவர், பின்னாளில் ஒரு மாநிலத்துக்கு முதல்வரானது என்பது ஜனநாயகம் இங்கு தழைப்பதையேக் காட்டுகிறது. நான் அண்ணா அளவுக்கு படித்தவனல்ல என்றாலும், சாமான்யனாகிய நானும் குடியரசுத் தலைவராக ஆனதற்கு நமது ஜனநாயக அமைப்பே காரணம்" என்றார். அநேகமாக மாநில முதல்வராக இருந்த ஒருவரின் நினைவு இல்லத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தது என்பது அதுவே முதல்முறை.
ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி பேசுகையில், "திராவிட இயக்க அரசியல்வாதியாக அண்ணாவைப் பார்த்தாலும், அவர் ஒரு காந்தியவாதியாகத்தான் இருந்தார். எதையும் யாருக்கும் புரியும் வகையில் சொல்வதில் அவர் கெட்டிக்காரர். குடும்பக் கட்டுப்பாட்டை பற்றி பேசும்போது பாமரர்களுக்கு புரியும்படி “பெருமாளுக்கு இரண்டு பிள்ளைகள்” எனக் கூறினார். தீவிர நாத்திகவாதியான அவர், மக்களுக்குப் புரிய வேண்டுமென்பதற்காக தன் கொள்கைளை தள்ளிவைத்து, கடவுளை துணைக்கு அழைக்கவும் தயங்கவில்லை. அவர் ஒரு ஜென்டில்மேன்" என்றார்.

அரசு  குழந்தைகள் நலமருத்துவமனை முடங்கியது ! திடீர் மின் தடையால் விபரீதம்!

திடீர் மின்வெட்டு காரணமாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நேற்று மாலைமுதல் இரவுவரையில் பல மணி நேரத்துக்கு முடங்கியது.  அரசு மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்திருந்த தாய்மார்கள், இந்த திடீர் மின்வெட்டால் பதறினர். சுகாதாரத்துறை மந்திரியான டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில், 'தற்காலிக கருத்தடை ஊசி' அறிமுக விழாவும் நேற்றுதான் இங்கு நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  மருத்துவமனையின் ஐந்தாம் தளத்தில் மந்திரி பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்த அதே இடத்தில்தான்  தாய்-சேய் நலம் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவும் இயங்கி வருகிறது.  இதே ஐந்தாம் தளத்தில்தான் மின் தடையும் ஏற்பட்டது.இந்த திடீர் மின் தடை காரணமாக இன்குபேட்டரில்  வைக்கப் பட்டிருந்த குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் நிலைகொள்ளாமல் தவித்தனர். இன்னொரு பக்கம், சுகாதாரத்துறை மந்திரிபங்கேற்கும் விழாவின் போது இப்படி ஆகி விட்டதே என்று மருத்துவமனை நிர்வாகமும் பதறியது.  வேறுவழியில்லாமல் குழந்தைகளுடன் பெற்றோர்கள், மருத்துவமனையை விட்டு காற்றோட்டமான மரத்தடியில் தஞ்சம் புகுந்தனர்.

ஐந்தாம் தளத்தில் நடக்கவிருந்த விழாவும், மின் தடை காரணமாக வேறு தளத்துக்கு உடனடியாக மாற்றப்பட்டது. மின்தடையை உடனே  சரிசெய்ய  மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏதும் உடனுக்குடன் பலனளிக்கவில்லை.விழாவில் பங்கேற்க வந்திருந்த மந்திரி விஜயபாஸ்கர், அங்கிருந்த சூழ்நிலையைப் பார்த்ததும், மருத்துமனை அதிகாரிகளைக் கூப்பிட்டு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.  மந்திரியை அருகில் பார்த்துவிட்ட,குழந்தைகளின் பெற்றோர்கள், "மருத்துவமனையில் எங்களைப் பாடாய்ப் படுத்துகின்றனர். எல்லாவற்றுக்கும் பணம் கேட்டு இங்குள்ள ஊழியர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். டாக்டர்களிடம் இது குறித்து சொன்னால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... மின்சாரம் திடீரென்று போனதால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளோம். ஜெனரேட்டர் வசதி கூட இல்லை" என்று வரிசையாகப் புகார்களை அடுக்கினர். 'கண்டிப்பாக இதை நான் கவனிக்கிறேன்" என்று உறுதியளித்த மந்திரி விஜயபாஸ்கர், இன்னொரு தளத்தில் ஏற்பாடு செய்திருந்த அதே அரசு விழாவில் பங்கேற்க கிளம்பி விட்டார். ஏழைகளுக்கு அரசு மருத்துவனைதான் நோய்க்காலங்களில் நிரந்தர ஆதரவு என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது... அதை உறுதியாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

HC ORDER

ED attaches properties worth Rs 10 cr in medical college bribery case

TNN | Sep 13, 2017, 20:44 IST




NEW DELHI: In a donation and bribery case against the owner of a medical college in Vadodra, the Enforcement Directorate on Wednesday attached properties worth Rs 10 crore acquired by the college president Mansukh Shahon charges of money laundering.

Mansukh Shah, president of Sumandeep Vidyapeeth in Vadodra, was accused of accepting Rs 20 lakh as bribe for giving admission to a student. A case was registered against him after the anti-corruption bureau (ACB) of Ahmedabad caught him with the bribe money in February this year. The ACB case was later turned into a money laundering case under the Prevention of Money Laundering Act by the ED.

"The student had paid the bribe for admission and for being allowed to appear for the MBBS exam conducted by the university," according to ED.

The ED probe later revealed that Mansukh Shah was running a racket of collecting bribe from his students in lieu of their admission to various courses and for appearance in exams. "The bribe was collected by his accomplices Vinod alias Bharat Savant and Ashok Tailor," a senior the ED officer said.

Shah and his family members had invested the bribe money in shares of dormant listed companies. Shah used these inactive companies to launder the money routing them through a complex network of shell companies. "Shah and his family members purchased shares of these shell companies at a very low price and later sold them at a high cost and deposited the proceeds in his bank accounts," the officer said.

The bribe money was shown as capital gains from share transactions. The ED has traced and attached such laundered money to the tune of Rs 10 crore, out of which Rs 1.73 crore was bank balances in the saving bank accounts and Rs 8.35 crore in fixed deposits in the names of Shah and his family members. The case is still under investigation.

MEDICAL DIALOGUES

Read more at Medical Dialogues: ED attaches property worth Rs 10 crore of Mansukh Shah, the man who sold Medical Seats and Marks 

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக் கோரி பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

kalviseithi

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்த சமுத்திரகனி மகன் காளிமுத்து (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் காளிமுத்துவும் கலந்து கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் இல்லையென்றால் ஆசிரியர்கள் எப்படி காலம் தள்ள முடியும் என பேசினாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்திய காளிமுத்து வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கு மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று காலை காளிமுத்து இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கூறுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்ட ஆசிரியர் தற்கொலை செய்தது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்றார்.

ஆசிரியர் தற்கொலை விவகாரம் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக காளிமுத்து மதுவுடன் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டதாக சிவகிரி போலீசார் தெரிவித்தனர்.
திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?

எஸ்.கதிரேசன்

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.
எப்படி..?




திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான 'கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தைத் தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது. திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வான்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அனந்தாழ்வான்?

வாருங்கள் திருவரங்கத்துக்குச் செல்வோம்...

திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. 'நாம் திருவரங்கத்தில் நந்தவனமும், தபோவனமும் அமைத்துக்கொண்டு பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக் கிறோம். ஆனால், 'சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்' என சதா சர்வகாலமும் பாடிப் புகழும் வேங்கடமுடையானுக்கு இப்படி ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம்.



அதை ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தும்விட்டார். தெரிவித்ததோடு நில்லாமல், 'உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக்கொள்ளப் போகிறீர் ?' எனக் கேட்கவும் செய்தார். ஆனால், பசுஞ்சோலைகளும் மருதாணிப் பூக்களும் செழித்துக் கிடக்கும் காவிரிக்கரையில் நீராடிவிட்டு, அரங்கனைத் தொழும்போது கிடைக்கும் சுகானுபவம் வேறெங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எவரும் வாய் திறக்கவில்லை.

'குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?' என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான், கண்களில் வைராக்கியம். உதட்டில் புன்முறுவல். அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு 'திருமாலை சேவை' செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.

'அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். முதல் காரியமாக பெருமாளை வணங்கிவிட்டு வந்து உணவு அருந்துங்கள். களைப்பு தீர ஓய்வு எடுங்கள். நாளை முதல் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம்' என்றார். அனந்தாழ்வானும் அவரது மனைவியும் அப்படியே செய்தனர்.





திருமலையில் குடிசை ஒன்றைக் கட்டினார். அதனருகே நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமாநுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் செடிகள் பூத்துக் குலுங்கின. தண்ணீர் பிரச்னை எழவில்லை. கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே சிறுபள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்இட்டு உயரமாக நிரப்பி, பள்ளத்தை ஆழப்படுத்தினார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.



மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, 'நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக, அந்தச் சிறுவனைப் பார்த்து, 'உன் வேலை எதுவோ அதைப் போய் செய்' என்று அனுப்பிவிட்டார்.

தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான்.
எனவே, 'வேலை செய்ய கூலியே வேண்டாம். நான் மண் சுமக்கிறேன். மண் சுமந்த புண்ணியம் தங்கள் மனைவிக்கே கிடைக்கட்டும்' என்றான் சிறுவன். 'பாவ புண்ணிய விஷயங்களில் சிறுபையனான இவன் தனக்கு புத்திமதி சொல்கிறானே என ஆத்திரமுற்ற அவர் 'அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாமல் போய்விடு. கண்டிப்பாக இவ்விஷயத்தில் நீ தலையிடாதே' என்று சிறுவனைக் கடிந்துகொண்டு அங்கிருந்து அனுப்பினார்.



சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. என்ன ஆச்சர்யம்... அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

'' தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் ''என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.

'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, ''சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை''என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான். இதனால், கோபம் தலைக்கேற கடப்பாறையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.



அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும் தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.

''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க'' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.

'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்''என்று அசரீரியாகக் கேட்டார்.

''கருணைக் கடலே! உன் அருளே வேதனை போக்கும். கஷ்டம் துடைக்கும். என்னை மன்னியுங்கள் சுவாமி'' என்றார். பெருமாளோ மோகனமாக தனக்கே உரிய புன்னகையை உதித்தார்.

'சரி ' ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.

'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும்விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.
சவுதி அரேபியாவில் புரட்சியை முன்னெடுத்த தனி ஒருத்தி!

vikatan

ஜெ.சரவணன்

பெண்களுக்கான சுதந்திரம் என்பது சவுதி அரேபியாவில் இன்னமும் நடக்காத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த நிலையை மாற்றும் முயற்சியில் முதல் அடியை தனிஒருத்தியாக எடுத்து வைத்திருக்கிறார் மனால் அல் ஷரிஃப்.



மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் மனால் சமீபத்தில் அமெரிக்காவுக்கு மாற்றுதல் செய்யப்பட்டார். சவுதி அரேபியாவில் பெண்கள் அனைவரும் ஆண்களில் நிழலில்தான் வாழ வேண்டும் என்ற நிலை இன்னமும் நீடித்து வருகிறது. அங்கே காரைக் கூட பெண்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. அப்படி மீறி ஓட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையிலிருந்து அமெரிக்காவின் வாழ்க்கை முறைக்கு மாறிய மனால், தானாக வாகனத்தை ஓட்டும்போது சுதந்திர உணர்வை அனுபவத்திருக்கிறார். அது அவருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் தந்திருக்கிறது.

மீண்டும் அவர் சவுதி அரேபியாவுக்கு வந்தபோது இந்த மாற்றத்தை தனது நாட்டில் ஏற்படுத்த திட்டமிட்டு துணிந்து இறங்கியுள்ளார். ஏற்கெனவே சவுதி அரேபிய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மாற்றத்தை வேண்டி பிரசாரம் செய்துவரும் நிலையில், மனால் அல் ஷரிஃபின் கார் ஓட்டும் புரட்சியானது தொடங்கியிருக்கிறது. அதற்காக அவர் சிறையில் ஒன்பது நாள்கள் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவரது இந்த முன்னெடுப்பு சவுதி மக்களிடையே வரவேற்பை உண்டாக்கியது. எல்லோரும் அதற்காக களம் இறங்கி போராட ஆரம்பித்தனர். சவுதியில் மாபெரும் மாற்றங்கள் நிகழ இந்தத் தனி ஒருத்தியின் முன்னெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாராட்டப்படுகிறது.

Reservation charts on trains set to disappear

Bengaluru Division’s successful initiative makes the Ministry to emulate it elsewhere too

The Ministry of Railways has decided to discontinue pasting of reservation charts on reserved coaches of all trains originating from some railway stations on an experimental basis for three months.
The stations are New Delhi, Hazrat Nizamuddin, Mumbai Central, Mumbai Chatrapati Shivaji Terminus, Chennai Central, Howrah and Sealdah.
In a circular to Railway Zones concerned on Thursday, the Ministry asked them to issue necessary instructions to all. The measure should be monitored and the feedback be sent to the Ministry after two months to enable it to take a final decision on the issue, said Vikram Singh, Director (Passenger Marketing), Railway Board.
This follows a green initiative by South Western Railway’s Bengauru Division (SBC) that is saving about Rs. 60 lakh on papers.
From November 8, 2016, the SBC decided not to paste charts on reserved coaches of all trains originating from the Bengaluru City and Yeshwantpur Railway Stations.
While availability of alternatives to know berth details was one of the reasons for taking the decision, the measure was expected to save substantial money to the national exchequer.

South India’s only luxury train fully booked on Dasara trip

A big boostThe Karnataka State Tourism Development Corporation has scheduled two Dasara special trips this year.  

The Golden Chariot, which has 44 cabins, bears good tidings for Karnataka tourism

The Dasara holidays this year are expected to give a much-needed boost to Karnataka tourism, with the State’s luxury train, The Golden Chariot, booked to capacity on its second trip closer to the festival date.
The Golden Chariot, a joint venture between the Karnataka government and the Railway Ministry, has 44 luxury cabins that can accommodate 88 people. A typical journey on this train is a seven-night package tour of South India, which has traditionally averaged an occupancy rate of 33%.
However, with the grand Mysuru Dasara celebrations set to be held from September 21 to 30, the Karnataka State Tourism Development Corporation (KSTDC) has scheduled two short-haul Dasara special trips this year, each of two nights and a day: one from September 23 to 25, and the second from September 29 to October 1.
The corporation also reduced the ticket rate to Rs. 25,000 a person for Indians this year, down from Rs. 30,000 last year. The package is inclusive of accommodation, meals, sight-seeing, and Mysuru palace events.
“While the response to the September 23 trip has been lukewarm, the September 29 trip is full. Most people who have booked are from Bengaluru, and some are from New Delhi. One reason why so many Indians have booked the Dasara special could be the price, which is much lower than what it costs for our other trips [nothing below Rs. 1.8 lakh on a single occupancy basis],” said KSTDC Managing Director Kumar Pushkar.
Holiday season
State tourism prospects usually pick up around Dasara, when the festivities attract a large number of tourists from North India. But last year, unrest over the Cauvery dispute had dampened tourist inflow, besides causing the cancellation of four of the five Golden Chariot trips planned around Dasara. But given the positive response to the Dasara specials this year, the Tourism Department is hoping for a revival of sorts as the holiday season comes around.
It is not just the Golden Chariot that is seeing brisk bookings. KSTDC’s hotels, too, are nearly full ahead of Dasara. Officials said that all its properties in and around Mysuru have 95% occupancy as of Friday, with even its properties in north Karnataka enjoying 60% occupancy. This is in sharp contrast to the scene last year when even its prime properties in Kodagu, Mysuru, Srirangapatna, and Hampi had only 40% occupancy, while the overall occupancy had fallen by 30 to 35% compared with the previous year.

Fly directly from Madurai to Singapore, New Delhi

The wait is over:Minister of State for Finance and Shipping Pon Radhakrishnan launching Singapore flight service at Madurai airport on Friday. R. Gopalakrishnan, MP, and V.V. Rajan Chellappa, MLA, are seen.Photo: G. MoorthyG_Moorthy  

Alliance Air to launch second Chennai flight service soon

Friday was a red-lettered day for Madurai airport. For, it got its first direct flight to Singapore with Air India Express, a wholly-owned subsidiary of Air India, launching its international service from Madurai. Besides, it also launched the first non-stop air connectivity to New Delhi from here.
This is the fourth international flight service from Madurai and Singapore is the third international destination after Colombo and Dubai.
Minister of State for Finance and Shipping Pon Radhakrishnan formally launched the Madurai-Singapore flight service by lighting a lamp and cutting a cake in the presence of MP R. Gopalakrishnan and MLA V.V. Rajan Chellappa.
The bookings in Madurai-Singapore sector was very encouraging, Air India, Regional Director, South, Capt. S. Arulmani told The Hindu.
Stating that the initial bookings for the flights in the sector was between 85% and 87%, he said AIE was looking to make the four-days-a-week service to daily service based on patronage. “We are not only looking at Singapore, but also planning to operate to Kuala Lumpur and the middle east from Madurai,” he added.
AIE is operating a Boeing 737-800 NG aircraft with a seating capacity of 186-189. Capt. Arulmani said that the patronage for the newly-launched Madurai-Chennai flight service by Alliance Air, another subsidiary of Air India, was very good. “We are planning a second flight service. As and when we receive additional aircraft, we will simultaneously launch second flight service to Tiruchi and Coimbatore also from Chennai,” he added.
Additional manpower
The Singapore flight also marked night operations from Madurai airport. “We have 24 additional Central Industrial Security Personnel for the round-the-clock operation. We also expect more for Airports Authority of India officials on deputation. We can handle many more night flights from Madurai hereafter,” he added.
Air India Express offers free baggage allowance of 20 kg on the Madurai-Singapore sector. The non-stop service between Madurai and Delhi will cut the travel time to three hours. The maiden flight IX 684 had 145 passengers, including a 25-member delegation from Tamil Nadu Chamber of Commerce and Industry. Its senior president S. Rethinavelu wanted AI Express to launch Madurai-Kuala Lumpur service with the Madurai-Singapore aircraft on the other three days of the week.

Refund 'excess' fees: overseeing committee



In a direction that is likely to benefit students who have obtained seats in private medical and dental colleges, the admission overseeing committee has said that colleges who charged “excess fees” over and above the prescribed amount have to refund students.

Biometric attendance in Secretariat from today

The State government has decided to introduce biometric attendance system for the Secretariat employees from Saturday.
The Chief Minister, the Chief Secretary, and every employee working in the Secretariat has to mark his or her attendance through the biometric system. “The biometric attendance will come into force from Saturday,” Mr. Naidu said on Friday. “Through the biometric attendance system, the government intends to record the working hours,” he said.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...