Sunday, September 17, 2017

மலேசியாவில் 23 பேர் சாவுக்கு காரணமான சிறுவர்கள் கைது
பதிவு செய்த நாள்16செப்
2017
23:06

கோலாலம்பூர், மலேசியாவில், உறைவிடப் பள்ளியில் தீ வைத்து, 23 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு சிறுவர்களை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள உறைவிடப் பள்ளி மாணவர்கள் சிலர், சிறுவர்கள் சிலரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும்நடவடிக்கையாக, அந்த சிறுவர்கள், சமீபத்தில் அந்த பள்ளிக்கு தீ வைத்தனர்.இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள், 21 பேர் உட்பட, 23 பேர்பலியாயினர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், தீ விபத்துக்கு காரணமான, 11 - 17 வயதுடைய சிறுவர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஆறு பேர், போதை மருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...