Sunday, November 9, 2014

'ஸ்நாப் டீல்' மூலம் பணம், செல்போன்: வாடிக்கையாளருக்கு அடித்தது தீபாவளி 'லக்'

கோப்புப் படம்: ப்ளூம்பெர்க்

‘ஸ்நாப் டீல்' வலைத்தளம் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்குக் கிடைத்ததோ செங்கல். ஆனால் அதற்குப் பிறகு பணமும் திரும்பக் கிடைத்ததோடு, எதிர்பாராத விதத்தில் செல்போன் ஒன்றும் பரிசாகக் கிடைத்துள்ளது.கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் அந்த அதிர்ஷ்டக்கார வாடிக்கையாளர்!

தீபாவளி தினத்தன்று தன் மனைவிக்குப் பரிசளிப்பதற்காக ‘ஸ்நாப் டீல்' வலைத்தளம் மூலம் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆவலோடு பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு பார்சல் வந்தவுடன் அதிர்ச்சி. காரணம், அதற்குள் அவர் ஆர்டர் செய்திருந்த செல்போன் இல்லை. மாறாக, ஒரு செங்கல்லும், ஒரு விம்பார் சோப்பும் தான் இருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்தார். அந்தப் பதிவை 19,000 பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து 'ஸ்நாப் டீல்' வலைத்தளம் அவரிடம் மன்னிப்புக் கேட்டது. மேலும், பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. இதற்குக் காரணம் கூரியர் நிறுவனம்தான் என்றும் கூறியது. இதற்கிடையே, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட விம் பார் சோப் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தெரியவந்தது.

கிருஷ்ணமூர்த்திக்கு நேர்ந்த அனுபவத்தை அறிந்து, தன்னுடைய சொந்த செலவில் அவருக்கு அவர் ஆர்டர் செய்த செல்போனை அனுப்பி வைத்துள்ளது ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம். அதோடு தனது தயாரிப்பான விம் லிக்விட் சோப் இரண்டு பாட்டில்களையும் பரிசாக அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறு கையில், "துரதிர்ஷ்டவசமாக விம் பார் சோப் வாடிக்கையாளர் ஒருவருக்கு எதிர்மறையான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எனினும், இதை ஒரு விளம்பரமாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்களின் பரிசை அந்த வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டது மனநிறைவை உண்டாக்குகிறது" என்றார்.

தனக்கு அடித்த ‘ஜாக்பாட்' குறித்து மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி அந்நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டூ வீலர் டாக்ஸி 10 ரூபாய்!



நகரத்தில், ரெண்டு கிலோ மீட்டர் தூரம் அவசரமா போகணும்னா, பஸ்ஸுக்கு காத்திருக்க பொறுமை வேணும். ஒரு ஆட்டோவைப் பிடிச்சுப் போகலாம்னா, '50 கொடு 60 கொடுங்கிறாங்க. மனசு வராது. அந்த நேரத்துல, மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து,10 ரூபாய் கொடுங்க, நான் டிராப் பண்றேன்' என்றால் எப்படி இருக்கும்? இதுதாங்க, 'டூ வீலர் டாக்ஸி' கான்செப்ட்.

சீனாவின், முக்கியமான நகரங்களில் இந்த டூ வீலர் டாக்ஸி மிகவும் பிரபலம். அங்கு, 5 கிலோ மீட்டர் தூரம் வரை 50 ரூபாய். டாக்ஸி, ஆட்டோவைவிட ரொம்பக் குறைவு என்பதால், சீனாவில் ஹிட் ஆனதும் பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, கம்போடியா, கேமரூன், இந்தோனேஷியா, நைஜீரியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளிலும் டூ வீலர் டாக்ஸி ஜோரா செயல்படுது. அங்கே, ஆட்டோவுக்கு ஸ்டாண்டுகள் இருப்பது போல பைக் டாக்ஸிக்கும் ஸ்டாண்டுகள் உண்டு.

இந்தியாவில்...

நம் நாட்டில், முதலில் ஆரம்பமானது கோவாவில். இங்கு, பல வருடங்களாக டூ வீலர்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. டூ வீலர் டாக்ஸி டிரைவர்களை 'பைலட்' என்கிறார்கள். மஞ்சள் கலரில் இருக்கும் இந்த மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் பயணிக்க, மினிமம் 10 ரூபாய் செலுத்த வேண்டும். 2 கிலோ மீட்டருக்கு மேல், 1 கிலோ மீட்டருக்கு 4 ரூபாய். இதில், டூரிஸம் பேகேஜும் இருக்கு. அதிலேயே கோவா நகரத்தைச் சுற்றிவிடலாம்.

அடுத்து, டூ வீலர் டாக்ஸி கேரளாவில் அறிமுகமானது. 'டாப் கியர் ரெண்ட்-ஏ-பைக்' (Top Gear Rent-A-Bike) என்ற பெயரில், ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இங்கு, கிலோ மீட்டருக்கு 4 ரூபாய். டிரைவரோடு சேர்ந்து, இந்த டூ வீலர் டாக்ஸியில் பயணம் செய்பவருக்கு, 1 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் வசதியும் உண்டு. டூ வீலர் டாக்ஸி டிரைவர்களுக்கு என்று தனி யூனிஃபார்ம்.

'போக்குவரத்து நெரிசலால் டாக்ஸி, ஆட்டோவில் சென்றாலும் நேரம் வீணாகும். டிராஃபிக்கில் சிக்கினாலும் இந்த டூ வீலர் டாக்ஸியில், குறுகிய 'கேப்'பில் புகுந்து புகுந்து சென்று, சீக்கிரமாகவே இடத்தை அடையமுடிகிறது. அதோடு, பணமும் மிச்சம்' என்கிறார்கள், இதில் பயணம்செய்த வாடிக்கையாளர்கள்.

என்.மல்லிகார்ஜுனா

Saturday, November 8, 2014

தாமதங்களுக்கு இடம் தராமல் இருப்பதே அரசுக்கு தரும் பலம்.

அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான், தகவல் பெறும் உரிமைச் சட்டம். வெளிநாடுகளில் தகவல் கேட்டு விண்ணப்பித்த ஒரு வாரத்தில், அதற்கான உரிய பதில்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று இந்தியாவிலும் அரசு நடவடிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாக்குவதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் இதன் வேகம் புல்லட் ரயில் அளவில் இருந்தது. அதன் பின்னர் எக்ஸ்பிரஸ் அளவிலும், இப்போது போனால் போகிறது என்று பாசஞ்சர் அளவிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது, தகவல் கேட்டு விண்ணப்பித்தால் அதற்கு உரிய பதில், உடனடியாக கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக, சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கான பதில் கிடைக்காததால் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி சிறிது, சிறிதாக ஆரம்பித்த சிக்கல் இப்போது, மத்திய தகவல் ஆணையத்தில் வந்து நிற்கிறது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜிவ் மாதூர் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி ஓய்வு பெற்றார். தலைமை ஆணையரை நியமிக்கும் குழுவில், எதிர்க்கட்சி தலைவர் இல்லாததால் புதிய தலைவர் கடந்த 2 மாதங்களாக நியமிக்கப்படவில்லை. மேலும் 10 தகவல் ஆணையர் பணியிடங்களில் 3 காலியாக உள்ளது. இதனால், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கிடைக்காத ஏராளமானவர்கள், மத்திய தகவல் ஆணையத்துக்கு புகார்களை அனுப்பிவிட்டு மோட்டுவளையத்தை பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த 31ம் தேதி வரை இதுபோன்று 24,150 புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் இது குறித்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், இப்போதுதான் மத்திய தகவல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நியமிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் ஆணையம் நியமனம் செய்யப்படலாம். இந்த நடவடிக்கையை முன்னரே செய்திருந்தால், புதிய ஆணையரின் வேலைப்பளு குறைந்திருக்கும்; தகவல் கேட்டு விண்ணப்பித்த ஏராளமானவர்களுக்கும் உடனடியாக பதில் கிடைத்திருக்கும். தாமதங்களுக்கு இடம் தராமல் இருப்பதே அரசுக்கு தரும் பலம்.

UGC warns colleges against awarding fancy degrees

The University Grants Commission on Friday issued circulars to universities urging them to abide by its norms for awarding degrees. It pointed out that universities advertised in national dailies about degrees with nomenclature that the commission had not notified in the gazette.

The circular pointed out that candidates with such degrees faced litigation at a later stage and were denied certificates even after they cleared the National Eligibility Test. In July, the UGC issued a notification with details of the nomenclature of degrees that could be awarded.

In Tamil Nadu too, there are State-run universities awarding fancy degrees. For instance, a premier college in Coimbatore, affiliated to Bharathiar University, offers a three-year B. Com programme under the following nomenclatures: e-commerce; computer application; professional accounting; accounting and finance; retail marketing; business process and services; financial system; and foreign trade. Over 2,000 students pursue these programmes in the college.

The university withdrew its four-year B. Com degree after the UGC disbanded the programme following a protest by Delhi University students some months ago. “The State and deemed universities should not violate the UGC rules. Students faced problems when BA English Literature was offered as BA Language and Literature. This is a subversion of the UGC rules, and we have alerted the university [to this] time and again,” said C. Pichaandy, vice-president of the Association of University Teachers.

“Colleges say such degrees are saleable but this is a way of deceiving parents. Since there is a demand for B. Com, the government could well start separate colleges for commerce and regulate the degrees as it has been done in Delhi,” he said.

இப்படியுமா ஏ.டி.எம்மில் திருடுவார்கள்?



தானியங்கி பணம் எடுக்கும் எந்திரமான ஏ.டி.எம்.மில் திருட்டு என்பது அந்த எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே நடந்துதான் வருகிறது. ஆனால் பெங்களூருவில் நடந்த ஒரு வங்கியின் ஏ.டி.எம்.மில் இருந்து, தொடர்ந்து பணம் லட்சக் கணக்கில் திருடப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படிக் கூட நூதன முறையில் கொள்ளை அடிக்க முடியுமா? என்று திருட்டையே தொழிலாக வைத்துள்ளவர்களையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த பெங்களூரூ கொள்ளை.

பெங்களூருவில் உள்ள கார்ப்பரேசன் வங்கி ஏ.டி.எம். ஒன்றில்தான் இந்த கைதேர்ந்த கொள்ளை நடந்துள்ளது.வழக்கமாக ஏ.டி.எம். கார்டை திருடி, பின் நம்பர் கண்டுபிடித்து மொத்தப் பணத்தையும் திருடுவார்கள். அல்லது போலி ஏ.டி.எம். கார்டை வைத்தும் திருடுவார்கள்.

மேலும்,ஏ.டி.எம். எந்திரத்தில் பசை தடவிய மெல்லிய குச்சியை விட்டுத் திருடினார்கள். இன்னும் சிலர் மெசினில் பணம் வைக்க வரும் ஊழியர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து பணப் பெட்டிகளை திருடியும் சென்றார்கள். அதன் உச்சக் கட்டமாக சில கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்தும், அதை அப்படியே 'அலேக்கா' தூக்கிச் சென்றும் பணத்தை லபக்கியுள்ளனர். தடுத்த காவலர்களைக் கொல்லவும் கொள்ளையர்கள் தயங்கியதில்லை.

ஆனால் இதில் எதிலுமே அடங்காத கொள்ளைதான் இது. திருட்டில் ஈடுபட்ட அந்த நபர், ஏ.டி.எம். கார்டை செருகி, சரியான பின் நம்பரை டைப் செய்து, தேவையான ரூபாயின் மதிப்பையும் டைப் செய்துவிட்டு சில நொடிகளில் தனது கையை, பணம் வெளிவரும் ஷட்டரில் வைத்து விடுவார். உடனே பணம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் என்று ஏ.டி.எம். எந்திரம் அதில் உள்ள புரோகிராமுக்கு தகவல் அனுப்பிவிடும். அப்படியே அந்த நபர் சில நொடிகள் கழித்து கையை ஷட்டரிலிருந்து எடுத்ததும், ஷட்டரை விட்டு பணம் வெளியே வரும்.

இதனால் எந்த நபரின் அக்கவுண்டிலிருந்து பணம் 'டெபிட்' ஆனாதோ, அந்த நபரின் கணக்கில் அதே தொகை மீண்டும் கிரெடிட் ஆகிவிடும். இதனால் பணம் எடுத்த நபரின் அக்கவுண்டில் பண இருப்பு குறையாமல் அப்படியே இருக்கும்.

இந்த முறையிலேயே 66.58 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு கார்ப்பரேசன் வங்கியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நூதனக் கொள்ளையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்காக 15 ஏ.டி.எம். கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருட்டில் ஈடுபட்டவர்களின் சி.சி.டி.வி. பதிவுகள், கைரேகைகள், ஸ்லிப்புகள், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை வைத்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்களைப் பிடிக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

எப்படியெல்லாம் திருடுறாங்க...ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ..?

இடைவேளை தாகம்



அண்மையில் ‘கத்தி’ திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். நிலத்தடி நீரை உறிஞ்சி விவசாய நிலங்களை மலடாக்கும் சமகாலப் பிரச்சினையைக் கவனப்படுத்தும் கதை. குக்கிராமங்கள் வரை வேர் பிடித்து, பெட்டிக் கடைகளிலும், கலர்ஃபுல்லாகத் தொங்கும் பன்னாட்டுக் குளிர்பான கம்பெனிகளின் கொள்ளை முயற்சியில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நிலத்தடி நீர் வளத்தைக் காக்கும் போராட்டங்களின் தேவையை முன்வைப்பது பாராட்டிற்குரியது.

உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைகளுக்காகவும் வாழும் காலம் எல்லாம் போராட்டக் களங்களில் நின்று சத்தமாகப் பேசிப் பேசி, கத்திக் கத்தி காதுகள் செவிடாகிப் போன பொதுவுடைமைத் தோழர் ஜீவானந்தத்தின் பெயரைக் ‘கத்தி’ படத்தின் போராட்ட நாயகனுக்குச் சூட்டி இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.

எல்லாம் சரி கோக், பெப்சிக்களின் நுரை பொங்கலில், குமுறும் விவசாயிகளின் கவலையைப் படம் பார்ப்போர் உள்வாங்கிக் கொண்டனரா?

படத்தின் இடைவேளையில் கோக், பெப்சி வகையறாக்களின் வியாபாரம் அதிகமாகவே நடந்தது. கோக், பெப்சியில் தாகம் தணிந்து, புத்துணர்ச்சியுடன் படத்தின் பிற்பகுதியை ரசிக்கத் தயாரானது கூட்டம்.

திரைப்படங்கள் பிரச்சினையை முன் வைப்பது ரசிப்பதற்கு மட்டுமா? அல்லது உணர்வுபூர்வமாக உள்வாங்கி, பிரச்சினைக்கு எதிரான மனநிலையை வளர்த்துக் கொள்வதற்கா?

‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்றொரு ஆங்கிலப் படம். சூரியனையே திருப்பிச் சுடும் அரேபியா பாலைவனத்தையும், சிக்கிக்கொள்பவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் மணற்புயலையும், அதன் வெப்பத் தகிப்பையும் யதார்த்தமாகச் சித்திரித்த படம். மேலை நாடுகளில் இத்திரைப்படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் இடைவேளை நேரத்தில் குளிர்பானங்களை வாங்கி அருந்துவோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாம். ஏசி தியேட்டரில், அதுவும் ஒரு கும்பலுக்கே தாகம் எடுக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தாகம் குடித்துத் தீர்த்த குளிர்பான பாட்டில்கள் அதிகம் என்பது உண்மை.

‘படம் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் தாகம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. திரைப்படத்தில் ஒருவருக்குப் பாம்பு கடித்து விட்டால், அதை லயித்துப் பார்ப்பவர்களுக்கும் விஷம் ஏறுமா என்ன? ஆனாலும் அங்கே தாகம் எடுத்தது உண்மை. காரணம், படம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தங்கள் மனதளவில் அரேபியப் பாலைவனத்துக்கே சென்றுவிட்டனர். அதன் தகிப்பையும், வறட்சியையும் அனுபவித்து விட்டனர். அவர்களின் உடல்கள் தியேட்டரில் அமர்ந்திருந்தன. மனத்தின் நாக்குகளோ பாலைவன தாகத்தால் வறண்டன. அதுதான் உண்மை. இத்தகவலை ‘அடுத்த விநாடி’ என்ற நூலில் நாகூர் ரூமி சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால், ‘கத்தி’ படம் பார்த்த பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு மேற்கண்ட நிகழ்வுக்கு எதிர்நிலையில் மனம் இயங்கி இருக்க வேண்டாமா? நம் மனதிற்கு ஏன் வறண்ட விவசாய மண்ணின் தாகம் உணரப்படவில்லை? விவசாயி களின் பரிதாப நிலைகண்டு கசிவு ஏற்படவில்லை? பன்னாட்டு கம்பெனிகளின் சுரண்டல் கண்டு ஏன் கோபம் வரவில்லை?

கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம், கே.பாலசந்தரால் கால் நூற்றாண்டுக்கு முன் திரைப்பட மாக வந்தபோது, “ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து, தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும் வரை, கண்ணான கண்மணியே கண்ணுறங்கு சூரியனே” என்று படத்தில் வரும் தாலாட்டுப் பாடல், படம் பார்த்த என்னை அன்றிரவு முழுக்கத் தூங்க விடாமல் செய்தது.

குடிதண்ணீருக்காக அப்படம் எழுப்பிய உணர்வுகளும், உறுத்தல்களும் படம் பார்த்தோர் மனங்களில் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தின் மனசாட்சி யையும் உலுக்கியது. மாவட்ட நிர்வாகத்தைக் கரிசல்பட்டி வட்டாரத்தை நோக்கிப் படையெடுக்க வைத்ததும், குடிதண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வைத்ததும் தமிழகத்தில் நிகழ்ந்தது நிதர்சனம்.

இன்றோ, ‘கத்தி’ திரைப்படம் இடைவேளையில் கோக், பெப்சி அருந்திவிட்டு, மீண்டும் பிரச்சினையை ரசிக்கும் மேம்போக்கு மனநிலை கொண்ட பார்வையாளர்களுக்கான பொழுதுபோக்குத்தன்மை கூடிய கூர்மை குறைந்த படமாக இருக்கிறது. என்றாலும் ‘கத்தி’யின் முனைப்பைத் தங்கள் புத்தியில் ஏற்றிக்கொள்ளப் பார்வையாளர்கள் தவறியதற்கு யாரைக் குற்றம் சொல்வது? முக்கியப் பிரச்சினையைப் பேசும் படத்தைப் பொழுதுபோக்கு படமாகத்தான் எடுப்பேன் என்று அடம்பிடிக்கும் இயக்குநரையா? அல்லது தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதோடு தன் கடமை முடிந்துவிட்டது எனக் கருதும் அரசாங்கத்தையா? அல்லது எதையுமே மழையில் நனைவதுபோல் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பார்வையாளர்களையா? வெற்றிப்பட வரிசையில் வந்துவிட்டது ‘கத்தி’! அடுத்த படத்தில் இன்னும் அதிக கோடிகளுக்கான வாய்ப்பில் நடிகரும், இயக்குநரும். வழக்கம் போல் தாகம் தணிக்க கோக், பெப்சி! எப்போதும் போல் தாகத்துடன் தமிழர்கள்!

கட்டுரையாளர் உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்

Friday, November 7, 2014

ஐடியா பிடிப்பது எப்படி?




சிம்பிளாக ஆரம்பிப்போம்... 'ஐடியா' என்றால் என்ன?

'ஐடியான்னா ஐடியாதான்! அதை எதுக்கு விளக்கணும்?' என்கிறீர்களா? சூப்பர்!

அந்த அளவுக்கு யோசிக்கத்தான் நமது மூளை பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு ஐடியா இல்லை என்றால், சிக்கிமுக்கிக் கல்லில் இருந்து நெருப்பு தோன்றி இருக் காது; கோணல்மாணலான பாறை சக்கர வடிவம் எடுத்திருக்காது; இட்லி ஆவியில் வெந்திருக்காது; வழுவழு தாளில் அச்சிடப் பட்டு இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டு இருக்காது. ஐடியாக்கள் தான் இந்த உலகை இயக்குகின்றன!

நீங்கள் பள்ளி-கல்லூரி மாணவர், ஊழியர், வணிகர், இல்லத் தலைவி,அரசியல் வாதி, வெட்டி ஆபீஸர் என வாழ்வின் எந்தப் படிமத்தில் இருந்தாலும், உங்க ளுக்குள் உதிக்கும் 'ஐடியா'தான் உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். ஜாக் ஃபாஸ்டரின் 'HOW TO GET IDEAS' என்கிற புத்தகத்தைப் படிக்கப் படிக்க மூளைக்குள் பளிச் பளிச் பல்ப்.

அமெரிக்காவில் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர் களுக்குப் பல்லாண்டுகள் பயிற்சி அளித்த ஜாக், 'மாத்தி யோசி' டிராக்கில் பயணிக்கவைக்கிறார். இனி, புத்தகத்தில் இருந்து...

சிந்திக்க வேண்டாம், சங்கடம்!

நம்மவர்களிடம் உள்ள பெரிய சிக்கலேநம் மனத் தடைதான். ஒரு காரியம் பிராக்டிகலாகச் சாத்தியமா என்று சிந்திப்பதிலேயே நமது சக்தியைச் செலவிட்டுச் சோர்ந்துவிடுகிறோம். அட்லீஸ்ட், சிந்தனை அல்லது கற்பனைகளையாவது குறுக்கிக்கொள்ளாமல் பிரமாண் டப் பந்தல் விரிப்போமே!

இந்தச் சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள். உயரமான இரண்டு கட்டடங்கள் எதிரெதிரே அமைந்து இருக்கின்றன. இரண்டுக்கும் நடுவே நீளமான பலகை ஒன்று கிடத்தப்பட்டு இருக்கிறது.

நீங்கள் ஒரு கட்டடத்தில் இருந்து இன்னொரு கட்ட டத்துக்கு அந்தப் பலகை மீது நடந்து செல்ல வேண் டும். கீழே விழாமல் சென்றால், உங்களுக்கு ஊக்கத் தொகை 1,000 ரூபாய். கீழே விழுந்தால், உங்கள் சிதறல்களை ஒரு கோணிக்குள் அடக்கிவிடலாம்.

'அடப் போங்கப்பா! 1,000 ரூபாய்க்காக எந்த மடையனாவது ஆயுளையே அடகுவைப்பானா?' என்று நினைத்து, நீங்கள் அடுத்த சிப் சிந்தனைக்குக்கூட உங்கள் கற்பனையை நகர்த்த மறுத்துவிடுவீர்கள். ஆனால், மறு முனையில் உங்கள் காதலியை வில்லன் கடத்திவைத்திருக்கிறான்; நீங்கள் பலகையில் நடந்து மறுபுறம் வரவில்லை என்றால், அவளை அவன் அந்த அபார உயரத்தில் இருந்து 'தொப்'பெனக் கீழே போட்டு விடுவான். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ('போட்டா போட்டுக்கட்டும்... வேற பார்ட்னர் தேடிக்குவேன்' என்பது 'ஐயகோ ஐடியா!' அது வேண்டாம்!)

துணையைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்கள் சிந்தனை பரபரவென்று அந்தப் பலகையில் நடந்து கடக்கும் சாத்தியங்களை அலசி ஆராய்வதில் பயணிக் கத் தொடங்கும். பேலன்ஸுக்குக் கையில் ஒரு கம்பு எடுத்துக்கொள்ளலாமா, கீழே குனிந்து பார்க்காமல் நடந்தால் தலை சுற்றாது, செருப்பைக் கழற்றிவிட்டு நடப்போம் என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்குவீர்கள். இப்போது உங்கள் கவனம் எல்லாம் உங்கள் துணை யைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே.

ஆக, இப்போது உங்கள் லட்சியத்தை அடைவதற்கான வழிகளைச் சிந்திக்கும் வேளையில், உங்களுக்குள் புதுப்புது ஐடியாக்கள் முளைத்துக் கிளம்பும். எந்தப்பிரச் னையை எதிர்கொள்ளும்போதும் இந்த மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். இறுதி இலக்கை நோக்கித் தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்!

ஒரு சின்ன டெஸ்ட்!

கிட்டத்தட்ட கோவா போல, அமெரிக்காவின் பிரபல கடற்கரை சுற்றுலாத் தலம் அது. சுற்றுலா மட்டுமே அங்கு ஒரே பிரதான வருமானம். வார இறுதி நாட்களில் அங்கு குவியும் கல்லூரி இளைஞர்களின் அட்டகாசம் ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனது. அவர்களை அடக்க வேறு வழி தெரியாமல், துடுக்குத்தனம் செய்யும் இளைஞர்களைக் கைது செய்து ஓர் இரவு மட்டும் சிறையில் அடைத்துவைக்க முடிவு செய்தார் காவல் துறை உயர் அதிகாரி.

புரொஃபஷனல் குற்றவாளிகள் இல்லை என்பதால், கைது செய்யப்படும் இளைஞர்களுக்கு ஜெயிலில் சிக்கன் உணவு வழங்கப்பட்டது. நாளடைவில் ஜெயிலுக்குச் செல்வது அவமானம் என்ற நிலை மாறி, ஜெயில் சிக்கன் உணவு சாப்பிடுவது இளமையின் அடையாளம் என்பதாக மாறியது. அதுவரை தப்புத்தண்டா செய்ய வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர்கள்கூட 'ஜெயில் சிக்கன் கௌரவம்' தேடி 'நானும் ரௌடிதான்' என போலீஸோடு மோதி விளையாட ஆரம்பித்தார்கள். சிறைக்கு வெளியே 'ஜெயில்ஃபுல்' போர்டு மாட்டும் அளவுக்கு நெரிசல்.

'இளைஞர்களை அடக்கி ஒடுக்க, இருக்கும் போலீஸ் ஃபோர்ஸ் போதாது!' என்று புலம்பி, டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு இடத்தைக் காலி செய்தார் உயர் அதிகாரி.

புதிதாக வந்த உயர் அதிகாரி நிலைமையை ஆராய்ந் தார். ஒரே ஒரு மாற்றம்தான் செய்தார். அதன் பின் இளைஞர்கள் அடங்கி ஒடுங்கி, போலீஸைப் பார்த்த துமே வாலைச் சுருட்டிக்கொண்டு பதுங்கினர்.

மாற்றம்?

ஜெயிலில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிக்கன் சாப்பாட்டை நிறுத்திவிட்டு, பிறந்த குழந்தை களுக்கு வழங்கப்படும் செரிலாக், பவுடர் பால் போன்ற பச்சப் புள்ள உணவுகளை வழங்கச் சொன்னார்.

இந்த 'கைப்புள்ள ட்ரீட்மென்ட்'டில் வெட்கம் பிடுங்கித் தள்ள, இளைஞர்கள் தாங்களாக மனம்திருந்தி னார்கள்.

அந்த மகா மாற்றத்துக்குக் காரணம் ஒரு சின்ன 'ஐடியா'.

உங்களுக்குள் எப்போது நிகழும் அந்த மகா மாற்றம்?! 

- கி.கார்த்திகேயன்

39 govt MBBS NRI seats go for ₹25L to non-NRI students in Karnataka

39 govt MBBS NRI seats go for ₹25L to non-NRI students in Karnataka  Sruthy Susan Ullas and Sandeep Moudgal 01.02.2026 TNN Bengaluru : A pol...