Thursday, November 13, 2014

ஒன்று வாங்கினால்... ஒன்று இலவசமா?- ஆஃபர் ஆர்வலர்கள் கவனத்துக்கு!



மளிகைக் கடையில் மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது, எப்போதுமே கடந்த மாதத்தைவிட பில் அதிகமாகவே வரும். விலைவாசி உயர்வு மட்டும் அதற்குக் காரணமல்ல. நம் தேவைக்கு அதிகமான பொருட்களை நம்மை அறியாமலேயே நாம் வாங்குவதும் அதற்கு ஒரு காரணம்.

அப்படி வாங்க நம்மைத் தூண்டுவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கு விளம்பரங்கள், கண்கவர் ஆஃபர் அறிவிப்புகள், கவர்ச்சிகரமான விலைச் சலுகைகள்.

அப்படிப்பட்ட விளம்பரங்களை பார்க்கும்போது, அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.

ஆனால், அப்படி ஆஃபர்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும்போது சற்று கவனமாகவே இருங்கள். ஏனென்றால், அந்த பொருட்கள் பெரும்பாலும் குறுகிய காலத்தில் காலாவதியாகப் போவதாகவே இருக்கும். அல்லது முற்றிலும் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறியிருக்கும். எனவே, அவற்றை வாங்குவதில் அதிக கவனம் தேவை.

கடந்த ஆண்டு, சென்னை நகர் முழுவதும் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை மாநில உணவுப் பாதுகாப்பு நிறுவனம் பறிமுதல் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள்கூட காலாவதியான பொருட்களை ஆஃபர் போர்வையில் விற்பனை செய்கின்றன. வடசென்னையில், இப்படிப்பட்ட விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது" என்றார்

ஆனால் 10, 15 நாட்கள் வரை காலாவதி தேதி இருக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது அல்ல என கூறுகிறார் கடைக்காரர் ஒருவர்.

காலாவதிப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை புரிதலையாவது பெற்றிருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன்படி, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது சுகாதரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. உணவுப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாளும் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விரைவில் கெட்டுப்போகும் பிரெட், பால் போன்ற உணவுப் பதார்த்தங்களிலும் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மட்டுமே பெரும்பாலும் இந்தத் தேதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இயக்குநர் ஜி.சந்தனராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது சட்ட விரோதமானது. தண்டனைக்குரியது. அப்படிப்பட்ட விற்பனை நடைபெற்றால், அது குறித்து நுகர்வோர் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் நிச்சயமாக புகார் செய்யலாம். அதுபோல், காலாவதி பொருளை உட்கொண்டதால் நுகர்வோர் பாதிப்படையும் போது, அந்த பொருள் விற்கப்பட்டது கிரிமினல் குற்றமாகிவிடுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ரூ.5 லட்சம் வரை அபாராதம் விதிக்க வழி இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் விற்பனையாளர்களை மட்டும் முழுமையாக குற்றம்சாட்ட முடியாது. நுகர்வோரும் மலிவு விலை, சலுகை விலை, ஆஃபர் விற்பனை பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

காலாவதி தேதி வரும் வரை உணவுப் பொருட்களை கடைகளில் தேக்கி வைப்பதில் தவறில்லை, ஆனால், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு காலாவதியான பொருட்களை உடனடியாக அலமாரியில் இருந்து அகற்ற முறையான பயிற்சி அளித்தல் அவசியம் என கூறுகிறார் பிரபல சூப்பர் மார்க்கெட் அதிபர் ஒருவர்.

Source: Tamil Hindu

Gold Not Glittering Yet?


Source: New Indian Express

தகுதிகாண் பருவகாலம்

அரசு பணிகளிலும் சரி, முக்கியமான தனியார் நிறுவனங்களிலும் சரி, ஒருவர் புதிதாக பணியில் சேர்ந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்தை தகுதிகாண் பருவகாலம், அதாவது ‘புரபேஷன் பீரியட்’ என்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களுடைய பணித்திறமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் அவர்கள் அந்த பணிக்கு பொருத்தமானவர்களா? அல்லது அதைவிட குறைந்த பொறுப்புகள் கொண்ட பணிக்குத்தான் பொருத்தமானவர்களா?,அல்லது வேலைக்கே லாயக்கு இல்லாதவர்களா? என்பதை கணித்து, அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, நடைமுறையைத்தான் மந்திரிசபை மாற்றத்திலும், இலாகாக்கள் ஒதுக்கீட்டிலும் பிரதமர் நரேந்திரமோடி பின்பற்றுகிறார் என்பதை கடந்தவாரம் மேற்கொண்ட மந்திரிசபை மாற்றத்தில் நிரூபித்துக்காட்டிவிட்டார். கடந்த 5 மாதகாலத்தை அவ்வாறு தகுதிகாண் காலமாக வைத்து தன் மந்திரிசபையை மாற்றியுள்ளார். புதிதாக 21 மந்திரிகளை சேர்த்து, தன் மந்திரிசபையின் பலத்தை 66 ஆக ஆக்கியிருக்கிறார்.

5 தென்மாநிலங்களில் இருந்து 9 பேர்தான் மந்திரி சபையில் இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவருக்குத்தான் இடம் கிடைத்திருக்கிறது என்று விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரை சந்தித்தாலும், அவர்கள் எவ்வளவு படித்து இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், ஆங்கிலம் துளி கலப்பில்லாமல் தமிழிலேயே பேசும் அவரை கண்டிப்பாக தமிழ்நாட்டு கணக்கில்தான் சேர்க்கவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர்தான் பா.ஜ.க.வில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜ்ய சபையில்கூட வேறு யாரும் பா.ஜ.க. உறுப்பினராக இல்லை. ஆக, வேறு யாருக்கும் கொடுக்கவும் வாய்ப்பு இல்லை. அவருக்கும் இப்போது நடந்த மந்திரிசபை மாற்றத்தில் முக்கிய பொறுப்பான சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக, மத்திய மந்திரி என்பவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர். ஒரு மாநிலத்துக்கு மட்டுமானவர் அல்ல. அந்த வகையில், இப்போது மத்திய மந்திரிகளாக இருப்பவர்கள் அனைவரும், அனைத்து மாநிலங்களின் நன்மைக்காகவும் பாடுபடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை நாட்டு மக்களுக்கு இருக்கிறது.

அடுத்து ரெயில்வே துறை என்பது அன்றாடம் 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிச்செல்லும் 12 ஆயிரத்து 617 ரெயில்களையும், 30 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் 7,421 சரக்கு ரெயில்களையும் நிர்வகிக்கும் துறையாகும். இந்த துறையின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத மோடி, இந்த துறைக்கு வாஜ்பாய் மந்திரிசபையில் மின்சாரத்துறை மந்திரியாக பணியாற்றி புகழ்பெற்ற சுரேஷ் பிரபுவை தேடிப்பிடித்து கொடுத்து இருக்கிறார். அவரும் பதவி ஏற்பதற்கு முன்பு சிவசேனா கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து இருக்கிறார். சுரேஷ் பிரபு நிச்சயமாக மோடியின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்படுவார். வாஜ்பாய் காலத்தில் அவர், தன் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் அதிகாரி வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பூர்ணலிங்கம் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேடிப்பிடித்து எரிசக்தித்துறை கூடுதல் செயலாளராக்கினார். இந்தியாவில் மின்சார தட்டுப்பாட்டை போக்க 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீட்டி, தொடங்கப்போகும் காலத்தில் அரசியல் காரணங்களால் பதவி விலக நேரிட்டதால், அந்த திட்டங்களும் காற்றோடு கலந்த கீதங்களாகிவிட்டன. இப்போதும் அவர் புதிதாக எந்த திட்டங்களையும் அறிவிக்க வேண்டியது இல்லை. பயணிகளுக்கான வசதிகளிலும், ரெயில் போக்குவரத்திலும் தீவிர கவனம் செலுத்திவிட்டு, ஏற்கனவே இருந்த ரெயில்வே மந்திரிகள் குறிப்பாக கடந்த பட்ஜெட்டில் சதானந்த கவுடா அறிவித்த திட்டங்களையும் பட்டியலிட்டு நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்தாலே போதும். அவர் பதவியேற்றவுடனேயே ரெயில்வே திட்டங்களில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை வெளிநாட்டு மற்றும் தனியார் முதலீடுகளுக்கு ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள் இல்லை. இந்த ஒதுக்கீட்டிலும், இனி அறிவிக்கப்போகும் திட்டங்களிலும், தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு கிடைப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

Source: Daily thanthi

வங்கிகளும் ஊழியர்களும்!

வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த அதே வேளையில், அரசு வங்கிகளில் அரசுப் பங்கு 52% ஆகக் குறைக்கப்படும் என்றும் இதன் மூலம் அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்களின் போராட்டம் அரசை இத்தகைய முடிவுக்குத் தள்ளியதா அல்லது அரசு இத்தகைய முடிவை எடுத்ததால்தான் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தனவா என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது அரிது. அப்படியே பதில் சொல்வதாக இருந்தாலும், மழுப்பலாக, சந்தை தீர்மானிக்கும் என்று மட்டுமே சொல்ல முடியும்.

வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இந்திய வங்கிகள் நிர்வாகத்துக்கும் இடையே தீர்வு காணப்படாத ஒரே பிரச்னை ஊழியர்களின் சம்பளம் மட்டுமே! 25% ஊதிய உயர்வு தர வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்துகின்றன. வேண்டுமானால் 23% ஆக குறைத்துக்கொள்கிறோம் என்கின்றன. ஆனால், இந்திய வங்கிகள் நிர்வாகம் இதற்கு இணங்க மறுக்கிறது. 11% ஊதிய உயர்வு மட்டுமே சாத்தியம் என்கிறது.

வங்கி நிர்வாகம் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளும் ஊழியர் எண்ணிக்கையும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் மிக அதிகம். அதனால், ஓர் ஊழியர் மூலம் வங்கி அடையும் சராசரி லாபம் என்பது தனியார் வங்கிகளைவிட, அரசு வங்கிகளில் குறைவாக இருக்கிறது. ஆனால், தனியார் வங்கி ஊழியர்கள் அரசு வங்கி ஊழியர்களுக்கான (ஊதியத்தின் மூலமாக ஏற்படும்) செலவோ, சராசரியாக ஓர் ஊழியருக்கு 5.6 லட்சமாகத்தான் இருக்கிறது. ஓர் ஊழியர் மூலம் வங்கிக்குக் கிடைக்கும் உழைப்பு பலன் (புரடக்டிவிடி) தனியார் வங்கியில் அதிகமாகவும் அரசு வங்கிகளில் குறைவாகவும் இருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியில் (2010 ஆண்டு கணக்கின்படி) ஓர் ஊழியரால் கிடைக்கும் பலன் ரூ.44 லட்சம். ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.41 லட்சம். ஆனால், அரசு வங்கிகளில் ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரைதான். இதுதவிர, அரசு வங்கிகளின் ஓய்வூதியக் கடமைகள் தவிர்க்க முடியாதவை.

தனியார் வங்கிகளில் திறமையில்லாத நபர் பணியமர்த்தப்பட்டிருந்தால், அல்லது உழைப்பைத் தர மறுக்கும் ஊழியர்களை நீக்கிவிட முடிகிறது. அரசு வங்கிகளில் அதற்கு வாய்ப்பே இல்லை.

ஊழியர் சங்கங்கள் இதை ஏற்பதில்லை.

மேலும், இன்றைய வணிக அலுவல்கள் இணையத்தின் மூலம் நடைபெறுவது அதிகரித்து வரும் நிலையில், கிராமங்களில் உள்ளவர்கள் பணத் தேவையை ஏ.டி.எம். மூலமும் மற்ற சேவைகளை நகர, புறநகர வங்கிக் கிளையில் நேரடியாகவும் பெற்றால் மட்டுமே தனியார் வங்கிக்கு இணையாக நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்

படுத்த முடியும் என்று அரசு வங்கிகள் நிர்வாகம் நம்புகிறது. அதற்கு, நிறைய வங்கிக் கிளைகளை மூட வேண்டியிருக்கும். பணியாளர்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருக்கும். புதிதாக ஊழியர்களை நியமிப்பதை நிறுத்திவைக்க வேண்டியிருக்கும். இவற்றை செய்வதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

அரசு வங்கி ஊழியர்களில் தனிநபர் மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது உழைப்பு பலன் (புரடக்டிவிடி) தனியார் வங்கிகளுக்கு இணையாக உயராத நிலையில், 25% ஊதிய உயர்வு என்பது வங்கி நிர்வாகத்துக்குச் சாத்தியமில்லை என்பது நிர்வாகங்களின் வாதம்.

அரசு கொடுக்கும் வேளாண் கடன், கல்விக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட எல்லா கடன்களும் அரசு வங்கிகள் மூலம்தான் தரப்படுகின்றன. ஆகவே, அரசு வங்கிகளுக்கு நட்டம் ஏற்படுவதும், வருவாய் குறைவாக இருப்பதும் இயல்புதான். ஆனால், அரசு வங்கிகளில் தொழில்களுக்குத் தரப்பட்டு, திரும்பி வாராத கடன்தொகையைக் கணக்கிட்டால் அதன் அளவு மிக அதிகமாக இருக்கும். பிணை இல்லாமல், தொழிலுக்கான சந்தை இருக்கிறது என்பதை வல்லுநர்கள் மூலம் தீர்மானிக்காமல், வெறும் நம்பிக்கை அடிப்படையில் கடன் கொடுப்பதும், அரசியல்வாதியின் நெருக்கடிக்கு ஆளாவதும் அரசு வங்கிகளில்தான் அதிகம்.

வங்கியின் இயக்குநர்கள் குழுவில் அரசியல் சார்பில் யார் யாரையெல்லாமோ நியமிப்பதை எதிர்த்தும், தனிநபர்களின் தொழில் திட்டத்துக்கு பல நூறு கோடி ரூபாய் கடன் வழங்குவதை எதிர்த்தும் வேலைநிறுத்தம் செய்ய முன்வராத வங்கி ஊழியர்கள், தங்கள் நலனுக்காக மட்டும் வேலைநிறுத்தம் செய்வது எந்த வகையில் நியாயம்?

52 சதவீதப் பங்குகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை தனியாருக்கு விற்கும் அரசின் முடிவை பிறகு எவ்வாறு தடுக்க முடியும்?

Source: Dinamani

In a major boost to citizens and activists, a Committee set up by DoPT has recommended that there is no provision in the RTI Act or Rules to make any standard format for applications and so it should be done away with


Many Right to Information (RTI) applicants in Maharashtra and perhaps in other States where a standard format has been laid out by the respective governments face problems if they do not abide by it. Now, however, they are not bound by such a diktat, as a Committee appointed by the Department of Personnel & Training ( DOPT) has made it clear that no such provision (for specific format) exists in the RTI Act.

In the summary of the report issued by DoPT on 11th November, which will soon be circulated to the Public Authorities as guidelines, the Department clearly stated, “There should not be a model/ standard format for reply to the RTI application, as there is no such provision in the RTI Act or the RTI rules.”

The observations/ recommendations of the DoPT appointed Committee, instituted to evolve model format for RTI replies, comprised representatives of the Department, Ministry of Home Affairs (MHA) and Central Information Commission (CIC) and was submitted on 29th October.

Similarly, the Committee has recommended that the Public Information Officer (PIO) too need not have any typical format for replying though relevant details should be given in the reply and relevant sections should be quoted in case of denial of information.

After the circular of 17th October in Maharashtra by the state government, regarding, non-disclosure of “personal” details under RTI Act, there has been a lot of confusion and suppressing of information by the PIOs. Now, that this relevant and pro-public guidelines have been uploaded on the DoPT website, one hopes the Maharashtra government would issue a formal note.

Leading RTI activist Vijay Kumbhar, says, “The state government, which has been issuingcirculars by the dozens on issues like removing Anti-Corruption Bureau (ACB) from the RTI Act or confusing PIOs with the ‘personal’ information circular, should now gracefully make this important pro-people circular known through media and official websites of all public authorities. People are still harassed in case they do not file the RTI application in the required format as has been laid down by the state government.”

RTI activist and research scholar, Venkatesh Nayak though says that the DoPT did not do public consultation, before issuing the note. “The Government has issued guidelines for PIOs on how to reply to RTI applications. Strangely, the Committee comprising of a few government representatives has issued these guidelines without any consultation with others on the supply and demand side of information. While the guidelines are not bad, they are minimalistic. Civil society organisations (CSOs) and activists could have provided better advice to the Committee, if only if they had advertised this Committee's constitution. So much, for compliance with the consultation policy that was announced in January this year.”

Following are the observations of the Committee:

I. There is neither any provision in the RTI Ad or RTI Rules for a model/standard format of RTI application nor any provision for a model/standard format for reply to the RTI applications.

II. Presently, neither any standard practice nor any standard format is being used by the CPIOs in reply to the RTI applications.

In view of the above observations, the Committee has made the following recommendations :

a) There should not be a model/standard format for reply to the RTI application, as there is no such provision in the RTI Act or the RTI rules.

b) Moreover, keeping in view that there is no standard format for RTI applications, there could not be a standard format for their reply.

c) However, the following points can be uniformity adopted by the CPIOs while replying to the RTI applications:

i. The name, designation, official telephone no. and email I.D. of the CPIOs should be clearly mentioned.

ii. In case the information requested for is denied, reasons for denial quoting the relevant sections of the RTI Ad should be clearly mentioned.

iii. In case the information pertains to other public authority and the application is transferred under section 6 (3) of the RTI Act, details of the public authority to whom the application is transferred should be given.

iv. In the concluding para of the reply, there should be clearly mentioned that the First Appeal, if any, against the reply of the CPIO may be made to the First Appellate Authority within 30 days of receipt of reply of CPIO.

v. The name, designation, address, official telephone no. and e-mail I.D. of the First Appellate Authority should also be clearly mentioned.

 vi. Wherever the applicant has requested for certified copies of the documents or records, the CPIO should certify the documents or records by putting a seal of his name, designation and signing with date. Above the seal, the remarks that "documents/records provided under the RTI Act" should be endorsed.

(Vinita Deshmukh is consulting editor of Moneylife, an RTI activist and convener of the Pune Metro Jagruti Abhiyaan. She is the recipient of prestigious awards like the Statesman Award for Rural Reporting which she won twice in 1998 and 2005 and the Chameli Devi Jain award for outstanding media person for her investigation series on Dow Chemicals. She co-authored the book “To The Last Bullet - The Inspiring Story of A Braveheart - Ashok Kamte” with Vinita Kamte and is the author of “The Mighty Fall”.)

Source:  moneylife.in

PM launches digital life certificate for pensioners

Prime Minister Narendra Modi (third right) at the launch of
Jeevan Pramaan will allow self-certification; over a crore to be benefited

In a big relief to over a crore retired employees of government and PSUs, a pensioner can now digitally provide proof of his existence to authorities for continuity of pension every year instead of requiring to present himself physically or through a Life Certificate issued by specified authorities.

The “Jeevan Pramaan” scheme, an Aadhar-based Digital Life Certificate for pensioners, launched by Prime Minister Narendra Modi on Monday, is one more enabling mechanism for the benefit of the common man after the push towards self-certification.

“The proposed digital certification will do away with the requirement of a pensioner having to submit a physical Life Certificate in November each year, in order to ensure continuity of pension being credited into his account,” a PMO statement said.

The Department of Electronics and IT has developed a software application which will enable the recording of the pensioner’s Aadhar number and biometric details from his mobile device or computer, by plugging in a biometric reading device.

Key details of the pensioner, including date, time, and biometric information, will be uploaded to a central database on real-time basis, ultimately enabling the pension disbursing agency to access a Digital Life Certificate.

This will conclusively establish that the pensioner was alive at the time of authentication, the statement said.

The earlier requirement entailed that a pensioner either personally present himself before the pension disbursing agency, or submits a Life Certificate issued by authorities specified by the Central Pension Accounting Office (CPAO).

At present, 50 lakh individuals draw pension from the central government alone. A similar number draw pension from State and Union Territory governments. Several PSUs also provide pension benefits besides which over 25 lakh retired personnel draw pension from the Armed Forces.

Source: The Hindu


Wednesday, November 12, 2014

தேவையை மீறுகிறதா நமது செலவு பழக்கம்?

மீபத்தில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு மூலையில் ஓர் உடற்பயிற்சி இயந்திரத்தை மூட்டை கட்டி வைத்திருந்தனர். ஏன் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.
''இது ஆன்லைன் மூலம் ஒரு பொருள் வாங்கியபோது ஆஃபர் விலையில் கிடைத்தது. வீட்டு உபயோகப்பொருள் வாங்க ஆன்லைனில் தேடியபோது, அந்தப் பொருளின் விலையோடு கொஞ்சம் கூடுதலாகப் பணம் கட்டினால் இந்த இயந்திரமும் தருவதாகச் சொன்னார்கள். எனவேதான் வாங்கினோம். ஆனால், வாங்கிய நாளிலிருந்து இதைப் பயன்படுத்தவே இல்லை'' என்றனர். தேவைப்படாத பொருளுக்கு எதற்குப் பணத்தை விரயம் செய்தீர்கள் என்றால், சரியான பதில் இல்லை.

இதைப்போல இன்னொரு அனுபவமும் சமீபத்தில் கிடைத்தது. நண்பர் ஒருவரது வீட்டுக்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி ஒரு தையல் இயந்திரம் வாங்கி வந்திருந்தார். இத்தனைக்கும் அவருக்கு தையல் தொழில் தெரியாது. இனி, தையல் கலையைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டால், இல்லை என்று சொன்னார்கள். பிறகு ஏன்தான் இந்த தையல் இயந்திரத்தை வாங்கினீர்கள் என்று கேட்டேன். ''எனது தோழி ஒருத்தி வைத்திருக்கும் எல்லா பொருட்களும் நானும் வைத்திருக்கிறேன். அவளுக்கு தையல் தெரியும், எனக்கு தையல் தெரியாது, என்றாலும் அவள் வாங்கிவிட்டாள் என்பதற்காக நானும் வாங்கினேன்'' என்றார். இந்தப் பதிலை கேட்டபோது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் சமீப காலங்களாக மிகப் பெரிய மாற்றம் கண்டுவருகிறது என்பதைத்தான் இந்த இரு சம்பவங்களும் எடுத்துச் சொல்கின்றன. நுகர்வு மோகம் அதிகரித்து வருவதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். மேலும், மக்களின் சேமிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள்.

 தீவிரமான நுகர்வு பழக்கத்தின் விளைவு என்னவாகிறது? வாங்குகிற பொருள் நமக்குப் பயன்படுமா என்பது குறித்து சிந்திப்பதில்லை. அதற்குக் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை ஆராய்வதும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் செய்கிறேன் என்கிறது இந்தத் தலைமுறை.

நமது பொருளாதாரப் பழக்கவழக்கம் பெருமளவில் சேமிப்பை அடிப்படையாகக் கொண்டது. நமது மக்கள் தங்களது வருமானத்தில் சேமிப்புக்கும் ஒரு முக்கியமான இடத்தை ஆரம்பக் காலந்தொட்டே கொடுத்து வருகின்றனர். இதைக் குடும்பச் சேமிப்புப் பழக்கம் என்பார்கள்.

இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான தூண் இந்தக் குடும்பப் பொருளாதார அமைப்புதான். எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றாலும், அதன் பயன்பாடு என்ன, அது எவ்வளவு நாட்களுக்கு உழைக்கும், அந்தப் பொருளுக்குக் கொடுக்கும் மதிப்பு சரியானதுதானா என்பதை ஆராய்ந்த பிறகே செலவு செய்வார்கள்.

அமெரிக்காவில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, அமெரிக்க மக்கள் அதிகக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டாததுதான். அப்போது அமெரிக்காவில் பலரும் தங்கள் வருமானத்தைவிடவும் அதிகமாகக் கடன் வாங்கியிருந்தார்கள். தங்களது தேவைக்கும் அதிகமான நுகர்வு பொருட்களை வாங்கி அடுக்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அமெரிக்கா நிதி நெருக்கடியில் சிக்கியது.

ஆனால், அந்த நெருக்கடி நிலையிலும் இந்திய பொருளாதாரத்துக்குப் பெரிய பாதிப்பில்லை. காரணம், நமது இந்திய பொருளாதாரத்தின் சேமிப்பும் யோசித்து யோசித்துச் செலவு செய்யும் குணமும்தான்.

இதைத் தாண்டியும் இப்போதெல்லாம், ஆஃபர்களுக்காகப் பொருட்கள் வாங்குவதும், அடிக்கடி பர்ச்சேஸ்செய்வதும் ஹாபி என்கிற மாதிரி நமது செலவு பண்புகள் மாறி வருகிறது. நமது செலவுப் பழக்கம் ஏன் இப்படி மாறிவருகிறது என நிதி ஆலோசகர் சுபாஷினி அவர்களிடம் கேட்டோம்.

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப மக்களின் பொருளாதாரப் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம் தவிர்க்க முடியாது. என்றாலும், இப்படியான நுகர்வுப் பழக்கம் நமது இந்திய பொருளாதாரத்துக்குப் புதியது. பொருளையோ, சேவையையோ எதை வாங்கினாலும் அது நமக்கு முற்றிலும் பொருத்தமானதா, பயன்படுத்துகிறோமா என்பதை ஒன்றுக்கு இரண்டுமுறை கவனித்து வாங்கும் பண்பு நம்மிடம் உள்ளது.

அடிக்கடி ஷாப்பிங் செல்வது மனநிறைவு கொடுக்கிறது என்றாலும், அதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன என்பதை யோசிக்க வேண்டும். வருமானத்தில் இத்தனை சதவிதம்தான் இதர செலவுக்கு ஒதுக்க முடியும் என்றால், அந்த வரம்புக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மனதுக்கு நிறைவு தருகிறது என்பதற்காக எல்லா வரம்புகளையும் கடந்தால் நெருக்கடிகள் வருவதைத் தவிர்க்க முடியாது.

வருமானத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யும் குடும்பத்தில் இதுபோன்ற சிக்கல்கள் இருக்காது. திட்டமில்லாமல் செலவு செய்தால் அவசரத்துக்கு மருத்துவச் செலவுக்குகூட திண்டாட்டமாகிவிடும். மன திருப்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், அதற்காக என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பார்க்காமலேயே வாங்கிவிட முடியாது.

நமது குடும்ப வருமானத்திலிருந்து செலவு செய்யத் திட்டமிடும்போது, ஒவ்வொன்றுக்கும் இத்தனை சதவிகிதம் என பிரித்துக்கொள்ள வேண்டும். கடன்களுக்கும், ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கும் முதன்மை கொடுங்கள். அதற்கடுத்து சேமிப்பு, வீட்டுச் செலவுகள், மருத்துவம், குழந்தைகள் கல்வி என்று பிரித்துக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு மூன்றாவதாகத்தான் திட்டமில்லாத செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைகள் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால், அந்தத் தேவை அப்போதைக்கு அத்தியாவசியமா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் செலவு வீட்டில் உள்ள அனைவருக்கும் பயன்படுமா என்பதை அலச வேண்டும். குறிப்பாக, வீட்டுக்கு ஏசி இருந்தால் நன்றாக இருக்கும் என யோசிக்கிறீர்கள். இது தேவையா, அத்தியாவசியமா என்பது உங்களின் மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு உட்பட்டது. ஆனால், நிதித் திட்டமிடல் இல்லாமல் இந்தச் செலவு செய்தால் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக்கொள்வீர்கள்.

நமது அடிப்படை தேவை என்ன, எந்த அடிப்படையில் பொருளை வாங்குவது என்பது குறித்த குழப்பங்களைத் தீர்த்துக் கொள்ளும்போதுதான். நமது பணத்துக்கும் பங்கமில்லாமல், மனதுக்கும் நிம்மதியாகப் பொருட்களை வாங்க முடியும்" என்றார்.

ஒரு போன் வைத்திருப்பது தேவையாக இருக்கிறது. ஆனால், இன்றைய தலைமுறை இரண்டு போன்களை ஒரே சமயத்தில் வைத்திருப்பதும், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை போன் மாடல்களை மாற்றிக்கொண்டிருப்பதும் நமது செலவு பழக்கத்தின் சிறந்த அறிகுறியா என்பதை யோசிக்க வேண்டும்.

- நீரை.மகேந்திரன்

NEWS TODAY 01,02.2026