Saturday, November 22, 2014

Obama Accepts Modi Invite, To Be Chief Guest on Republic Day

US President Barack Obama has accepted Prime Minister Narendra Modi's invite to be chief guest for the 2015 Republic Day | PTI File Photo

NEW DELHI: US President Barack Obama has accepted Prime Minister Narendra Modi's invite to be chief guest for the 2015 Republic Day, and will be the first US president to grace the occasion as chief guest.


"We have now received a confirmation through diplomatic channels of President Obama agreeing to come to India as the 1st US President for a Republic Day function as the Chief Guest," external affairs ministry spokesperson Syed Akbaruddin said in a statement.

He said the "prime minister had a very successful visit to USA earlier during the year in September. Following this, as a personal initiative, he did extend an invitation to President Obama to be the Chief Guest of our next Republic Day celebrations during a diplomatic conversation".

"Following that diplomatic conversation which the Prime Minister had with President Obama, a letter was sent in writing, formalizing that invitation," he said.

With Obama confirming he would attend, he would become the first US president to come to India a second time during his term of office.

"We will now look forward to this development which stems from the initiative of our PM, which followed their bilateral meeting in Washington," he said.

Breaking the news, Modi had tweeted: "This Republic Day, we hope to have a friend over...invited President Obama to be the 1st US President to grace the occasion as Chief Guest."

The invitation to Obama comes weeks after Modi's hugely successful visit to the US.

Modi and Obama also met on the sidelines of G20 summit in Brisbane Nov 14.

Obama had called Modi a "man of action".

This will be Obama's second visit to India. He had visited India in 2010 at the invitation of then prime minister Manmohan Singh and addressed a joint session of parliament.

50 லட்சம் பேருக்கு அங்கீகாரம் அதிரடி உத்தரவிட்டார் ஒபாமா



வாஷிங்டன்: அமெரிக்காவில், முறையான வழிகளில் இல்லாமல், சட்டவிரோதமாக குடியேறியதாக கருதப்படும், 50 லட்சம் பேருக்கு, அமெரிக்காவில் குடியிருக்க, சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி, அதிபர் ஒபாமா, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, அமெரிக்காவில் குடியிருக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது.


எச்.1பி விசா:

அதிக சம்பளம், வல்லுனர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு போன்ற பல காரணங்களால், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, அமெரிக்காவுக்கு லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு, எச்.1பி என்ற விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் அமெரிக்கா சென்றவர்கள், அங்கேயே தொடர்ந்து வாழ விரும்பினால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை. மாறாக, குறிப்பிட்ட காலத்திற்கு பின், கிரீன் கார்டு என்ற அட்டை வழங்கப்படுகிறது. இதற்கு, 'லீகல் பெர்மனென்ட் ஸ்டேட்டஸ்' என்று பெயர். எனினும், அத்தகையவர்கள் உட்பட பிறர், சட்டப்பூர்வமாக குடியேறியவர்களாக கருதப்படுவதில்லை. அந்த வகையில், 1.10 கோடி பேர், அமெரிக்காவின், 50 மாகாணங்களில் பல ஆண்டுகளாக வாழ்கின்றனர்; தங்களுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அத்தகையவர்களில், 50 லட்சம் பேருக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து வழங்கி, அதிபர் ஒபாமா, நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதை, அந்நாட்டின், 'டிவி'யில் தோன்றி அறிவித்தார். இதைக் கேட்ட, இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, அமெரிக்காவில் வேலை பார்க்க சென்றுள்ள லட்சக்கணக்கானோர் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த அறிவிப்பால், அமெரிக்காவில் குடியேறியுள்ள, 4.5 லட்சம் இந்தியர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும்.

யாருக்கு நன்மை


* அமெரிக்காவில் குடியேறியுள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, இனிமேல் கிரீன் கார்டு கிடைக்கும்.


* கணவன் அல்லது மனைவியில் யாராவது ஒருவருக்கு விசா கிடைத்து, மற்றவருக்கு கிடைக்காத நிலை இனிமேல் மாறும்.


* எச்.1பி விசா வைத்திருப்பவர்கள், ஒரே நிறுவனத்தை அண்டியிருக்க வேண்டியதில்லை; தேவைப்பட்டால், வேலை பார்க்கும் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம்.


* அங்கீகாரம் பெற்றுள்ள பிற நாடுகளின் தொழிலாளர்களுக்கு, அமெரிக்க சட்டப்படியான சலுகைகள் கிடைக்கும்.


* வெளிநாட்டு தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.



குடியேறிகள் நாடு தான் அமெரிக்கா:


அமெரிக்கா சென்றால் தங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம்; குழந்தைகளை படிக்க வைக்கலாம் என கருதி, ஏராளமானோர் இங்கு வருகின்றனர். அவர்கள், இந்த நாட்டிற்காக பாடுபடுகின்றனர். குறைந்த சம்பளத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்கள் சிறப்பான சேவையாற்றுகின்றனர்.

சிறப்பு அதிகாரம்:


இந்த நாடே, குடியேறிகள் நாடு தான். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சொன்னது போல, நானும் ஒரு குடியேறி தான். குடியேறிகளால் வளர்ந்த நாடு தான் அமெரிக்கா. அதனால், அமெரிக்காவில் குடியேறிய, 1.10 கோடி பேரில், 50 லட்சம் பேருக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்துகிறேன். ஏனெனில், பார்லிமென்டில் அதிக இடங்களை பெற்றுள்ள குடியரசு கட்சியினர், என் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். அதனால் தான், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று. கண்மூடித்தனமாக யாருக்கும் குடியேற்ற அனுமதி வழங்கப்பட மாட்டாது. தாயை விட்டு குழந்தைகளை பிரிக்கவோ, குடும்பத்திலிருந்து உறுப்பினரை பிரிக்கவோ போவதில்லை. நேர்மையான, நியாயமான, நம்பகத்தன்மை கொண்டவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அடைக்கலம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், பயங்கரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவானவர்களும், தீய எண்ணம் கொண்டவர்களும் விரட்டியடிக்கப்படுவர். இனிமேல், அத்தகையவர்கள் இங்கு குடியேறாத வண்ணம், தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக, மூன்று அம்ச கொள்கை பின்பற்றப்படும். இவ்வாறு, அதிபர் ஒபாமா பேசினார்.

SRI RAMACHANDRA POST GRADUATE ADMISSION NOTIFICATION FOR 2015-16

imggallerySRI RAMACHANDRA 

Friday, November 21, 2014

Permission for Commercial Employment after Retirement of CG Employees – Dopt orders

Permission for Commercial Employment after Retirement of CG Employees – Dopt orders

Procedure for grant of permission to the pensioners for commercial employment after retirement – revision of Form 25.

Retired Government servants proposing to take up commercial employment within a year of retirement are required to seek permission from the Government. They are required to apply for permission in Form 25 of CCS(Pension) Rules…


No. 27012/3/2014-Estt (A)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel and Training)

North Block, New Delhi the 19th November, 2014

OFFICE MEMORANDUM

Subject: Procedure for grant of permission to the pensioners for commercial employment after retirement — revision of Form 25.

The undersigned is directed to refer to Rule 10 of CCS (Pension) Rules, 1972 and to say that retired Government servants proposing to take up commercial employment within a year of retirement are required to seek permission from the Government. They are required to apply for permission in Form 25 of CCS(Pension) Rules. Form 25 prescribed under the said rule has since been reviewed with a view to simplify the procedure. The revised Form 25 is enclosed.

2. The revised form incorporates the conditions prescribed in clauses (b) to (f) of sub-Rule 3 of Rule 10. There is now no requirement for obtaining an affidavit as prescribed in Para 2(d) of this Departments’ 0M No. 27012/5/2000-Estt.(A) dated 5th December, 2006.

3. All Ministries/Departments are requested to bring this to the notice of all concerned.

4. Formal Notification of Rules will follow.

Sd/-
(G. Jayanthi)
Director


Source: Dopt

TN GOVERNMENT LIST OF HOLIDAYS 2015



நினைவுகளின் விசித்திர உலகத்தில் ஒரு சாகசப் பயணம்…



“அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம் துல்லியமாக விவரிப்பார். ஆனால், அன்று காலையில் என்ன டிபன் சாப்பிட்டீர்கள் என்று மாலையில் கேட்டால், அது மறந்துபோயிருக்கும்.

நம் எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் உண்டு. சில சம்பவங்கள் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். பல விஷயங்கள் மனதுக்குள் புதைந்து காணாமல் போய்விடும். இதுதான் நினைவாற்றலின் விசித்திரம். அது நமது திறன்களிலேயே அதிக மர்மமானதும் இனம் காண முடியாததுமாகும். மற்ற திறன்களைவிட அதிக ஸ்திரத்தன்மை உள்ளதும் அதிக காலம் நீடித்து உழைப்பதும் நினைவாற்றல்தான்.

வயதாக வயதாக மற்ற புலன்கள் நலிவடையும். உடலில் பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் பொருத்தப்படும். பழுதான இதயத்தையோ சிறுநீரகத்தையோ எடுத்துவிட்டுப் புதிய உறுப்புகளைப் பொருத்த முடிகிறது. ஆனால், நினைவுகளை அவ்வாறு செய்ய முடியாது. அவை அழியாமல் இருப்பவை. நினைவுகள் அழிந்துபோனால், நாம் வேறு ஒரு நபராக மாறிவிட்டதுபோலத்தான்.

பசுமை நிறைந்த நினைவுகள்

நினைவாற்றலில் இரு கூறுகள் உண்டு. நினைவுப் பதிவு மற்றும் நினைவு மீட்பு. நினைவுப் பதிவுகள் தூக்கத்தினாலும், தலையில் அடிபட்டாலும், மின்தாக்குதலாலும் பாதிக்கப்படுவதில்லை. திரைப் படங்களில் கடந்தகால நினைவுகளை இழந்துவிடும் கதாபாத்திரங்கள் புதிய நபராக மாறிவருவதைக் காண்கிறோம். உண்மையில், அது நினைவு மீட்புத் திறனில் ஏற்படும் பாதிப்புதான். ஹிப்னாடிச (மன வசியக் கலை) சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய முடியும். மனமே ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பல விஷயங்களை நினைவில் எழாமல் ஆழப் புதைத்துவிடுகிறது. மகத்தான வெற்றிகளையும் தீராத அவமானங்களையும் சட்டென நினைவுகூரும் வகையில், மேலாகப் பதிந்துவைக்கிறது. அவை எவ்வளவு காலமானாலும் பசுமை நிறைந்த நினைவு களாகவோ, ஆறாத ரணமாகவோ மனதில் நீடிக்கின்றன.

ஆனாலும், நினைவாற்றல் அவ்வளவு நம்பகமானதும் அல்ல. நினைவுகள் கணினியில் இட்ட நினைவுத் தரவுகளைப் போல மாறிலிகளல்ல. ஒவ்வொரு முறையும் ஒரு நிகழ்வை நினைவுகூரும்போது விவரங் கள் சிறிதுசிறிதாக மாற்றப்படுகின்றன. நாம் கண் ணால் காண்பது நினைவுப் பதிவாகிறது என்றாலும், அது நமது ஸ்தூலப் பார்வையையும் உணர்ச்சிக்

கண்ணோட்டத்தையும் பொருத்தே அமைகிறது. நீதிமன்றங்களில் ஒரு சாட்சி, “என் இரண்டு கண் களாலும் பார்த்தேன்” என்று சொன்னால் அவரை முழுமையாக நம்பிவிடக் கூடாது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்காலிக நினைவுகளும் நீடித்த நினைவுகளும்

மூளையில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. அவற்றுக்கிடையில் உள்ள இணைப்புகளின் மூலம் நினைவுப் பதிவு நிகழ்கிறது. ஒவ்வொரு இணைப்பும் ஒரு தகவலின் ஒரு கூறு. குறுகிய கால நினைவுகள் மின்தன்மையான இணைப்புகளாகவும், நீண்ட கால நினைவுகள் உயிரி வேதியியல் இணைப்புகளாகவும் உருவாகின்றன. மின் இணைப்புகள் தற்காலிகமானவை. உயிரி வேதியியல் இணைப்புகள் நெடுங்காலம் நீடிப்பவை. சில விஞ்ஞானிகள் நினைவுப் பதிவுகளைப் பல வகையாகப் பிரிக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் பழகுவது போன்றவற்றின் நினைவுப் பதிவுகள் ஒரு வகை. எவ்வளவு காலமானாலும் அவை மறந்து போகாது. எந்தெந்தத் தெருக்கள் வழியாகப்போனால் வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்குப் போகலாம் என்பது போன்ற நினைவுப் பதிவுகள் ஒருவகை. சில ஆண்டுகளுக்கு வெளியூரில் வசித்துவிட்டுத் திரும்பிவந்தால், அது மறந்துவிடும்.

சிறு வயதில் நினைவுப் பதிவுகள் தெளிவாகவும் விவரமாகவும் ஆழமாகவும் பதிந்துவிடுகின்றன. சிறு குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளுதல் என்ற கட்டாய மான காலகட்டம் ஒன்று உண்டு. அக்கட்டத்தில் அவை எல்லா அனுபவங்களையும் லபக்கென்று பிடித்து விழுங்கிவிட்டு, பிற்பாடு அவற்றைச் சாவகாசமாக மீட்டெடுத்து அசைபோடுகின்றன. மாணவர்களுக்கு இந்த உத்தி பெரிதும் பயன்தரும். ஒரு பாடத்தை ஓரிரு முறை படித்தபின், சும்மாயிருக்கும்போதெல்லாம் அதை ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டேயிருந்தால் அது மனதில் ஆழப்பதிந்துவிடும். தேர்வு எழுதும்

போது தானாக வெளிப்படும். எந்தவொரு விஷயமும் மறக்கப்படுவதில்லை. அடுத்தடுத்து வேறு பல புதிய விஷயங்கள் அதன்மேல் வைத்து அடுக்கப் படுவதால் பழைய விஷயம் அடியில் புதைந்து, மீட்டெடுக்கக் கடினமானதாகிவிடுகிறது. ஒவ்வொரு கணமும் மூளைக்குப் பல நூறு தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலானவை அடியில் புதைந்துவிடும். அதுதான் நமக்கும் நல்லது.

மனனம் தேவையா?

மனனம் செய்வதால் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைப் பல விஞ்ஞானிகள் ஏற்பதில்லை. கணித வாய்ப்பாட்டை நெட்டுருப்போட்டு ஒப்பிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களிடம் 7X8 எவ்வளவு என்று கேட்டால், அவர்கள் ஓரெட்டு எட்டு என்று ஆரம்பத்திலிருந்து மனதுக்குள் சொல்லிப் பார்த்துவிட்டே 7X8=56 என்கிறார்கள். கால்குலேட்டர்கள் இவ்வாறாக மனப்பாடம் செய்வதற்கு அவசியமில்லாமல் செய்துவிட்டன. அத்துடன் திருக்குறளை முதலிலிருந்து கடைசிவரை கடகடவென்று ஒப்பிக்கிற திறமை வேறு துறைகளில் பயன்படுவதில்லை.

ஒரு விஷயத்தை நினைவிலிருந்து எளிதாக மீட்டெடுக்க அதை வேறு பல விஷயங்களுடன் தொடர்பு

படுத்தி நினைவில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பண்டைய கிரேக்கர்கள் இக்கலையில் வல்லவர்கள். மல்லிகா என்ற பெண்ணின் பெயரை மறவாதிருக்க, மலர்களிலே அவள் மல்லிகை என்ற சினிமாப் பாடலுடன் அவளைப் பொருத்தி மனதில் ஏற்றிக்கொண்டால், மல்லிகையைப் பார்க்கிற போதெல்லாம் அவளுடைய ஞாபகம் வந்துவிடும்.

எந்த நினைவுக்கு முன்னுரிமை?

நினைவாற்றல் அதிகமாக இருப்பதற்கு மரபியல் காரணங்களும் உண்டு. வயதாகிறபோது நினைவு மீட்புத்திறன் குறையுமா குறையாதா என்பதைப் பற்றி எந்தவொரு முடிவுக்கும் வராத பட்டிமன்றங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஒரே மாதிரியான பல தகவல்கள் மூளையில் பதிகிறபோது அவற்றில் சிலவற்றை நினைவால் மீட்க முடிவதில்லை. வயதாக வயதாக அவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் ஏற்படும் பிரச்சினையே இதற்குக் காரணம். முதியவர் கள் நிகழ்காலத்தைவிடக் கடந்த காலத்துக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். வயதாக வயதாக மறதி அதிகமாகும் என்பது கட்டாயமில்லை. சில முதியவர் களுக்கு நினைவாற்றல் அதிகமாவதும் உண்டு.

நினைவாற்றல் திறனில் உடல் நலமும் பெரும் பங்கு வகிக்கிறது. பலவிதமான நோய்கள், மின்னதிர்ச்சிகள், தலைக்காயங்கள், நீடித்த குடிப்பழக்கம், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, இதயத்தாக்கு, மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல்போவது, நீரில்மூழ்கி மரண வாயில்வரை சென்று மீள்வது, மயக்க மருந்துகள் தவறாக அளிக்கப்படுவது, கார்பன் மோனாக்சைடு போன்ற விஷவாயுக்களைச் சுவாசிப்பது போன்றவற்றால் மின்னிணைப்புகள் சேதப்பட்டு நினைவுப் பதிவும் மீட்டெடுத்தலும் குலைந்துபோகும். அது நிரந்தர மறதிக்குக் காரணமாகும். மூளைக்குச் சேதம் ஏற் பட்டால் அதைச் சரிசெய்ய முடியாது. இருக்கிற குறைந்தபட்ச நினைவுகளை அடையாள அட்டைகள், வீடியோ பதிவுகள் போன்ற சாதனங்களின் உதவியுடன் மீட்டு வாழ்க்கை நடத்த வேண்டியதுதான்.

பார்ப்பதை அப்படியே மனதில் பதித்துக்கொள்ளும் ஆற்றல் சில அபூர்வ மனிதர்களுக்கு உண்டு. விவேகானந்தர் எவ்வளவு பெரிய நூலையும் ஒரே ஒருமுறை வேகமாகப் படித்துவிட்டு, பிறகு அதில் எந்தப் பகுதியைப் பற்றிக் கேட்டாலும் தவறின்றி விளக்குவாராம். சில ஆட்டோ ஓட்டுநர்களும், வாடகை கார் ஓட்டுநர்

களும் நகரின் எந்த மூலைமுடுக்குக்கும் விரைவில் போய்ச்சேரும் பாதைகளை நினைவில் வைத்திருப் பார்கள். சிலருக்கு முந்தாநாள் போய்விட்டு வந்த இடத்துக்கு மீண்டும் போக வேண்டுமென்றால் பாதை மறந்துபோகும். அவர்களுக்கு நிகழ்காலம் மட்டுமே பதிவாகிறது. கடந்த காலம் உடனடியாக மறந்து விடுகிறது.

காலமும் நினைவு மீட்புத் திறனை மங்கச் செய்யும். போன வருஷம் தாய் இறந்தபோது அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தவரை இன்று விசாரித்தால், “ஆமாம், வயதாகிவிட்டது போய்விட்டார்!” என்று சாதாரண மாகச் சொல்வார். நினைவுகளும் உணர்வுகளும் ஒன்றோடொன்று நெருங்கிப் பிணைந்தவை. ஒன்று மங்கினால் மற்றதும் மங்கும். அது ஒரு விதத்தில் நல்லதுதான்.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

Thursday, November 20, 2014

அவசரம் வேண்டாம்

பள்ளிக்கூட பருவத்தில் மாணவர்கள் எத்தனை மொழிகளை படிக்க ஆர்வமாக இருக்கிறார்களோ, எத்தனை மொழிகளை அவர்களால் படிக்க முடியுமோ, அதற்கேற்ற வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டியது, மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும். அதைவிடுத்து, நீ இந்த மொழியைத்தான் படிக்கவேண்டும், அந்த மொழியை படிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, அவர்களது உரிமையில் தலையிடுவது சரியல்ல. இந்தியாவைப் பொறுத்தமட்டில், மாநிலங்களில் அந்தந்த மாநில கல்வித்திட்டம் இருக்கிறது. அகில இந்திய அளவில் மத்திய செகண்டரி கல்வித்திட்டம் இருக்கிறது. இதுதவிர, மத்திய அரசாங்கம் நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான கல்வித்திட்டமும் இருக்கிறது. தமிழ்நாட்டில் உயர்நிலைப்பள்ளிக்கூடங்களில் 1965 வரை மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைப் படித்து வந்தனர். அதன்பிறகு இருமொழி கொள்கை அமலுக்கு வந்தபிறகு தமிழ், ஆங்கிலம் இருமொழிகளை மட்டும் படித்து வருகிறார்கள். இந்தி படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் இந்தி பிரசார சபா நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று அதை பயன்படுத்தி, அதற்குரிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள்.

சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய கல்வித்திட்டத்தின்கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் 3–வது பாடமாக ஏதாவது ஒரு மொழியை விருப்பப்பாடமாக படித்து வந்தனர். இதில் தமிழை விருப்பப்பட்டால் படிக்கலாம், அல்லது அந்த பள்ளிக்கூடங்களில் கற்றுக்கொடுக்கும் மலையாளம், கன்னடம், தெலுங்கு, பிரஞ்சு, ஜெர்மன் போன்ற ஏதாவது ஒரு மொழியைப் படிக்கலாம் என்று இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பள்ளிக்கூட கல்வியை முடிக்கமுடியும் என்ற நிலையைத் தடுக்க, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் கட்டாய மொழியாக கண்டிப்பாக தமிழை படிக்கவேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவின்படி, அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் முதல் வகுப்பில் இருந்து ஆங்கிலம், தமிழ் மற்றும் ஒரு மொழி ஆகிய 3 மொழிகளை மட்டுமே படிக்கமுடியும். இதிலும் முதல் இரு மொழிகளுக்குத்தான் தேர்வு இருக்கும். மூன்றாவதாக எந்த மொழியை எடுத்தாலும் அது விருப்ப மொழியாகத்தான் இருக்கமுடியும். ஆனால், இதைத் தாண்டி மேலும் ஒரு வெளிநாட்டு மொழியை படிக்க விரும்பும் மாணவர்கள் அதையும் விருப்பப்பாடமாகத்தான் படிக்க முடியுமே தவிர, அது தேர்வுக்கான பாடமாக இருக்காது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 40–க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் உள்பட நாடு முழுவதிலும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் உள்ள இடைநிலை வகுப்புகளுக்கான கல்வித்திட்டத்தில் திடீரென்று ஒரு மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. 6–வது வகுப்பு முதல் 8–வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை மாணவர்கள் படித்துக்கொள்ள வசதியாக 2011–ம் ஆண்டு ஜெர்மனி நாட்டோடு ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, ஜெர்மனி நாட்டு நிதி உதவியுடன் 700 ஆசிரியர்கள் ஜெர்மன் மொழியை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 80 ஆயிரம் மாணவர்கள் ஜெர்மன் மொழியை கற்று வந்தனர். இந்த கல்வி ஆண்டு முடிய இன்னும் 4 மாதங்களே இருக்கும் நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களின் ஆளுனர்கள் குழு கூட்டம், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதத்தை சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலையைப் பார்த்தவுடன் சமஸ்கிருதம் அல்லது ஏதாவது ஒரு இந்திய மொழி என்றார்கள். ஜி20 மாநாட்டுக்காக ஜெர்மனி சென்றிருந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம், ஜெர்மனி நாட்டு ஜனாதிபதி இதுபற்றி பேசியிருக்கிறார். ஜெர்மன் மொழியை படித்துவந்த மாணவர்கள் ‘டேர்ம்’ என்று சொல்லப்படும் முதல் பருவத்தை முடித்துவிட்டு, 2–வது பருவம் முடியும் நேரத்துக்கு வந்துவிட்டார்கள். இந்த நிலையில், திடீரென நீ ஜெர்மன் மொழியை படித்தது போதும், சமஸ்கிருத மொழியை படிக்க வேண்டும் என்று அவசர முடிவு எடுக்க வேண்டாமே! எந்த முடிவை எடுத்தாலும், நன்கு ஆலோசித்து, விவாதித்து, தேவையான காலஅவகாசத்தை கொடுத்து எடுக்க வேண்டும்.

Source: Daily thanthi 20.11.2014

NEWS TODAY 01,02.2026