Thursday, December 4, 2014

வரவேற்கத்தக்க மாற்றங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் சில அதிரடித் திட்டங்களில் முதியோருக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் "ஜீவன் பிரமாண்' எனப்படும் கணினி வழி இருத்தல் தற்சான்றை தானே வழங்கும் நடைமுறையும் ஒன்று. நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தால், நாடு முழுவதிலும் ஓய்வூதியம் பெறும் ஒரு கோடி முதியோர் பயனடைவர்.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சம் பேர் தற்போது ஓய்வூதியம் பெறுகின்றனர். இதற்கு இணையாக மாநில அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்களும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோருமாக சுமார் 75 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் நீங்கலாக, ராணுவ வீரர்கள் சுமார் 25 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த "ஜீவன் பிரமாண்' நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதுள்ள நடைமுறைப்படி, ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு நேரடியாக வந்து, தாங்கள் உயிருடன் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இந்தக் கடமையைச் செய்யாவிட்டால், அடுத்து வரும் ஜனவரி முதல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிடும். ஆகவே, ஓய்வூதியம் பெறுவோர் நேரடியாக வங்கிக்கு வந்து, தங்கள் இருத்தலை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பல முதியோருக்கு அவர்கள் சேமிப்புக் கணக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கிளைக்கு நேரடியாக வருவது சிரமமானது. முதுமையும் நோயும் முக்கியக் காரணம். சிலரால் துணை இல்லாமல் வருவது சாத்தியமே இல்லை. பெரும்பாலோர் பணி ஓய்வுக்குப் பிறகு மகன் அல்லது மகளைச் சார்ந்து வாழ்வதால் அவர்கள் செல்லும் ஊர்களுக்குத் தாங்களும் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இந்த இருத்தல் சான்றுக்காக மட்டுமே வங்கிக் கிளைக்கு வந்து செல்வது, உடல், மனம் இரண்டையும் சோர்வடையச் செய்யும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது இந்த சிரமத்தைப் பிரதமர் இல்லாமல் செய்திருக்கிறார்.

இந்த நடைமுறை ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்தது. விரல் ரேகை, கண்பாவை போன்ற உயிர்மை அடையாளங்கள் (ஆண்ர் ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ) மூலம் ஒருவரது இருத்தலை கணினி வழியாக உறுதி செய்ய வல்லது. தற்போது நவீன செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாலும், கணினி மையங்கள் பலவற்றிலும் இதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாலும் இந்த நடைமுறை எளிதாக இருக்கும். முதியோருக்கு அதிக சிரமங்களைத் தராது.

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்யப்படும் வேளையில், அனைத்து விரல்களின் ரேகை, கண்பாவை போன்ற உயிர்மை அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் கணினி வழியாக இவற்றை உறுதிப்படுத்துவது எளிது. அலுவலகங்களில் வருகைப் பதிவேடு, திருப்பதி கோயிலில் வழிபாட்டு முன்பதிவு போன்றவற்றில் உயிர்மை அடையாளம் எவ்வாறு மிக இயல்பாக உள்ளதோ, அதேபோன்றதுதான் கணினி வழியாக இருத்தல் தற்சான்று வழங்குவதும்! விரைவில் ஏ.டி.எம். மையங்களில் ரகசிய எண்களுக்குப் பதிலாக உயிர்மை அளவுகோல் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்த நடைமுறை முதியோருக்குச் சிரமங்களைக் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்ற அக்டோபர் மாதம், வருங்கால வைப்புநிதி தொடர்பான இன்னொரு நல்ல மாற்றத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (யு.ஏ.என்.) எனப்படும் ஒரேயொரு வருங்கால வைப்புக் கணக்கு எண் திட்டம்! இது சற்றொப்ப நான்கு கோடிப் பேருக்கு நன்மை பயக்கும்.

தற்போதைய நடைமுறைப்படி, ஓர் ஊழியர் வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்லும்போது, ஒவ்வொரு நிறுவனத்திலும் அவருடைய பி.எப். கணக்கு எண், புதிய நிறுவனத்தின் மூலம் புதிதாக வழங்கப்படும். முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய காலத்துக்கான பி.எப். தொகையை வரவு வைக்க, பல படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களில் சிலவற்றை முந்தைய நிறுவனம் பூர்த்தி செய்து, செலுத்திய தொகையை உறுதிப்படுத்தாமல் வரவு வைத்தல் சாத்தியமில்லை.

வெளியேறிவிட்ட ஊழியர் மீது முந்தைய நிறுவனம் கரிசனம் காட்டாது. இதனால், தனியார் நிறுவன ஊழியர்கள் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர். இப்போது ஒருவர் தனக்கான ஒரேயொரு பி.எப். கணக்கு எண் (யு.ஏ.என்.) வைத்திருந்தால் போதும். எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் இந்தக் கணக்கில் பி.எப். தொகையை வரவு வைக்க முடியும். வரவேற்கத் தக்க மாற்றங்கள்!

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்தவர்கள் மீது மார்ச் 31–ந் தேதிக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியர்களின் கருப்பு பணம்

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்றும், அவர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மூத்த வக்கீலான ராம்ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தாக்கல் செய்திருந்தது.

தப்பிக்க வாய்ப்புள்ளது

அதில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனரான பிரதீப் பர்மன், கோவாவை சேர்ந்த சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தை சேர்ந்த பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோகியா உள்பட 627 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. மனுதாரரான ராம்ஜெத்மலானி வருகிற மார்ச் மாதத்திற்குள் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை மீட்காவிட்டால் அவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

மார்ச்சுக்குள் நடவடிக்கை

இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோகத்கி, அரசாங்கத்திடம் இந்த விஷயம் குறித்து அனைத்து தகவல்களும் இருக்கிறது என்றும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்,

இதற்கு நீதிபதிகள் உரிய காலத்துக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து முடிக்கவில்லை என்றால் அரசாங்கம் இதுகுறித்து சட்டரீதியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் அல்லது அந்த நடவடிக்கையை எடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

துயரமான அம்சம்

ராம்ஜெத்மலானி, சிறப்பு புலனாய்வுக்குழுவில் பங்கேற்கும் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் இந்த விசாரணையில் ஆஜரானது விசாரணை நடைமுறைக்கு எதிரானது என தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் சிறப்பு புலனாய்வுக்குழு தான் விசாரணையில் ஆஜராவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் ஆஜராகி உள்ளதாகவும் கூறினார்.

விசாரணையின் இறுதியில் வக்கீல் ராம்ஜெத்மலானி, தான் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு உதவி செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் அரசாங்கத்துக்கு எதிரான அணியில் இப்போது உட்கார்ந்திருப்பதாகவும் அதுதான் இந்த அரசாங்கத்தின் துயரமான அம்சம் என்றும் கூறினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜனவரி 20–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Wednesday, December 3, 2014

NURSING DEGREE FROM FOUR INDIAN BODIES VALID IN SINGAPORE



NEW DELHI: Singapore has agreed to recognise degrees from four nursing institutions in India, a development that comes after nearly a decade of intense negotiations between the two countries and promises to widen overseas employment opportunities for Indian nurses.

India is close to signing a mutual recognition agreement (MRA) for nurses with Singapore under the comprehensive free trade pact signed in 2005, even as talks continue with other FTA partners such as Japan and Korea, officials said.

Nursing degrees awarded by Delhi ­based All India Institute of Medical Sciences, Manipal College of Nursing, Christian Medical College (Vellore) and College of Nursing, Trivandrum will be recognised by the Southeast Asian nation, one of the officials said.

"Singapore has agreed to recognise degrees four of our institutes. Just a few more approvals are required for the MRA to be finally inked. This will open avenues for our nurses to go and practise in Singapore at competitive packages," said the official, requesting
anonymity.

The MRA for nursing with Singapore had met a roadblock after the Indian Nursing Council insisted that every nurse trained at any of the country's recognised institutions should be eligible to practise in Singapore.

"The idea is to start with some and then scale them up," said the official.The MRA is aimed at enabling professionals in India and Singapore to offer services in each other's territory as the pact will give recognition to their degrees in both the countries. It will open up a safer avenue for Indian nurses, who also end up in countries like Iraq facing severe security threats. In July, 46 Indian nurses were rescued by the government.

India and Singapore had signed a comprehensive economic cooperation agreement ( CECA) in 2005, cutting customs duties on goods,but progress is still awaited on movement of professionals.

The government is also negotiating MRAs for other professions including chartered accountancy, architecture, medicine and dentistry with Singapore.

India is making efforts to expand the scope of its services exports, beyond information technology. Services sector is a primary driver of the Indian economy, clocking exports of $151 billion in 2013 ­14 compared to $312 billion worth of merchandise shipments.

Although India has similar comprehensive pacts with Japan and South Korea, there has been no progress on the services front with these countries. "It is a challenge, it require reforms before it can happen. Services trade is a slow process," the official added.

Experts hailed the progress in agreement on nursing.

"If the government has reached till here, it is a big positive step in the right direction. Let us be clear that singing an MRA is not easy and requires synergy of standards and matching of qualification, which requires a lot of goodwill," said Arpita Mukherjee, professor, Icrier. "It will be very good for the nurses and it may also lead to easier access of Indian nurses to other Western nations with which Singapore has an MRA, like the United States," she said.

CME: Medical council makes 30-min ethics sessions mandatory

Continuing medical education (CME) programmes to upgrade professional skills now comes with a rider. Every CME programme will include a half-hour session on ethical conduct. Not only that, the Maharashtra Medical Council (MMC) on Wednesday gave
a strong push to introduce ethics as a subject in MBBS curriculum.

“Students are taught to diagnose and treat patients as part of the MBBS curriculum. We want to reinforce that he/she has several roles to play in the world of medicine,” Dr Kishore Taori, President of MMC told The Indian Express.

“As per the code of medical ethics of the Medical Council of India (MCI) — reward or financial gain is a subordinate consideration and we want to stress professional conduct, etiquette and ethics by doctors,” he said.

The code has been in existence for some years but there is a need to reinforce it and MMC at its executive committee meeting on Wednesday decided to make it compulsory for CMEs to set aside a half-hour session on ethical conduct. It may be recalled that it was mandatory for doctors and medical associations to participate and organize CMEs to gain credit points for renewal of registrations after every five years.

“Apart from learning about new modalities of treatment and getting exposure to recent advances in various branches of medicine, doctors will have to undergo sessions on ethical conduct as part of the CMEs,” Taori added. “The aim is to revert to our original objective outlined in the code of ethics to render services with full respect for the dignity of the profession.”

Physicians should command confidence of patients and for that, a course in communication skills has been introduced in the MBBS curriculum, Dr Arun Jhamkar, Vice-Chancellor of the Maharashtra University of Health Sciences told The Indian Express. “We floated the concept of reinforcing values in medical education by organising a four-day course on yogic practice and meditation.”

While the University of Sydney has decided to emulate this concept, Jhamkar was surprised at objections raised by some groups.
“However, we will continue efforts to introduce modules on professional ethics and conduct in MBBS curriculum,” Jhamkar said.
A meeting of the academic council on November 25 will decide, he added.

- See more at: http://indianexpress.com/article/cities/pune/cme-medical-council-makes-30-min-ethics-sessions-mandatory/#sthash.wM8GKnHc.dpuf

போபால் விபத்து - நடந்ததும் நடப்பதும்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள் காலையில் தினசரிகளைப் படித்த, வானொலி செய்தியைக் கேட்ட, தொலைக்காட்சியில் பார்த்த உலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சோகப் பொழுது அது. ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, உலகமே அதிர்ந்த துயரம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் நிகழ்ந்தது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி நள்ளிரவு நேரம். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் பூச்சிமருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. துருப் பிடித்த குழாய்கள், கசிந்து கொண்டிருந்த அடைப்புத் தடுக்குகள் (வால்வ்) ஆகியவை காரணமா என்று தெரியவில்லை. குழாய் உடைந்து தண்ணீர் அங்கிருந்த ரசாயனம் தேக்கி வைத்திருந்த தொட்டி ஒன்றில் பாயத் தொடங்கியது.

இ - 610 (E-610) எண்ணுள்ள அந்தத் தொட்டியில் 60 டன் மீதைல் ஐசோ சயனேட் (எம்.ஐ.சி) என்கிற உயிர்க்கொல்லி ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இது எந்த அளவுக்கு விஷத்தன்மையுடையது என்றால், அந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளி, தினந்தோறும் பத்து லட்சத்தில் 0.002 பங்குக்கு அதிகமாக அந்த ரசாயனக் கலவையின் நெடிகூடப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு அதி ஆபத்தான ரசாயனம்.

இந்த மீதைல் ஐசோ சயனேட்டில் தண்ணீர் கலந்ததும், அதனால் உருவான வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் எம்.ஐ.சி., ஹைட்ரஜன் சயனைட், மோனோமீதைல் அமைன், கார்பன் மோனோ ஆக்சைட் தொடங்கிய 16 ரசாயன வாயுக்கள் புகைமண்டலமாக எழுந்தன. ஏறத்தாழ 40 டன் விஷவாயு உற்பத்தியாகி அடுத்த சில வினாடிகளில் சுற்றிலும் புகைமண்டலமாகப் பரவத் தொடங்கியது.

எந்தவொரு ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமல்லவா? ஆபத்து நிறைந்த யூனியன் கார்பைடின் போபால் பூச்சிமருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் பாதுகாப்புக் கருவிகள் இந்த அளவிலான வெப்பத்தையும், அழுத்தத்தையும் எதிர்கொள்ளும் அளவில் அமைக்கப்பட்டிருக்கவில்லை. அங்கே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாட்டில் இருக்கவில்லை அல்லது சரியாக வேலை செய்யவில்லை அல்லது பராமரிப்பில் இருந்தன.

பிறகென்ன? புகைமண்டலம் மேலெழுந்து அந்தத் தொழிற்சாலையை அப்படியே சூழ்ந்து கொண்டுவிட்டது. இரவு நேரக் காற்றின் துணையுடன் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த போபால் நகரப் பகுதிகளையும் தனது மரணப் பிடியில் சிக்க வைக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விஷவாயு. சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் நுரையீரல்களில் நுழைந்து மரண தாண்டவமாடத் தொடங்கிவிட்டிருந்தது அந்த உயிர்க்கொல்லி ரசாயன வாயு.

இருபது, முப்பது அடிகளுக்கு ஒன்றும் தெரியாத அளவுக்குப் புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அதிகாலை ஒரு மணி அளவில் போபால் நகரின் பல பகுதிகள் ஒரு விஷவாயுக் கொலைக்களனாகக் (Gas chamber) காட்சி அளித்தன.

அந்தத் தொழிற்சாலையே புகைமண்டலத்தால் சூழப்பட்டிருக்கிறது. உடனடியாக, எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டுமா இல்லையா? ஒலிக்கவில்லை என்பதல்ல உண்மை. அது அணைக்கப்பட்டுக் கிடந்தது என்பதுதான் கொடுமை. அதனால் விஷவாயு போபால் நகர மக்களின் நுரையீரல்களில் நுழைந்து, கண்கள் எரியத் தொடங்கியபோதுதான் எங்கேயோ விஷவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதே மக்களுக்குத் தெரியத் தொடங்கியது.

அதிகாலை ஒரு மணி அளவில், மூச்சுத் திணறலுடனும், இருமலுடனும் போபால் நகர மக்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் எங்கும் புகைமண்டலம். அருகில் இருப்பவர்களைக்கூடச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. கண்களில் எரியும் கொள்ளியைச் சொருகியதுபோல எரிச்சல். அங்குமிங்கும் மக்கள் ஓடத் தொடங்கினார்கள். புகைமண்டலத்திலிருந்து விடுபட்டால் போதும் என்கிற பயத்திலும், பீதியிலும் அலறி அடித்துக்கொண்டு ஓடியவர்களில் பலர் தடுக்கி விழுந்து இறந்துபோன சோகக் கதைகள் ஏராளம்.

அதற்குப் பிறகு அங்கே ஏற்பட்ட கலவரச் சூழலில் பெற்றோரிடமிருந்து பிரிந்து சென்ற குழந்தைகள் பலர். அங்குமிங்கும் பரபரப்பில் ஓடுபவர்களால் மிதிபட்டு இறந்த குழந்தைகளும், முதியவர்களும் கணக்கிலடங்கார்.

விஷவாயுவைச் சுவாசித்த அடுத்த சில வினாடிகளில் பலருக்கும் அவர்களது கழிவு உறுப்புகள் மீதிருந்த கட்டுப்பாடு தளர்ந்தது. அவர்களையறியாமலே சிறுநீரும், மலமும் போகத் தொடங்கின. புகைமண்டலத்தில் கழிவறையைத் தேடிச் செல்லும் நிலையிலும் அவர்கள் இல்லை. இன்னும் பலர் கட்டுப்படுத்தவே முடியாமல் வாந்தியெடுக்கத் தொடங்கி விட்டிருந்தனர். விஷவாயுவின் குமட்டல் நெடியால் இருமலும் வாந்தியுமாக அவஸ்தைப்பட்டவர்கள் ஏராளம்.

பலர் விஷவாயுவின் தாக்குதலைத் தாங்கும் சக்தி இல்லாமல் விட்டில் பூச்சிகள்போல செத்து விழுந்தனர். ஏதோ நுரையீரல் தீப்பிடித்து எரிவதுபோலவும், வெடித்துவிடும் போன்றதுமான உணர்வுடன் மடிந்து விழுந்தவர்கள் ஏராளம். விஷவாயுவின் தாக்கத்தால் நுரையீரலில் நீர் நிறைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தவர்கள் பலர். பலருடைய மரண வாக்குமூலங்களும், பிரேதப் பரிசோதனைகளும் தெரிவிக்கும் தகவல்கள் இவை.

நூற்றுக்கணக்கில் தொடங்கி, ஆயிரக்கணக்கானோர் உயிருடன் போராடிக்கொண்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டபோது அவர்களுக்கு என்ன சிகிச்சை தருவது என்றுகூடத் தெரியாமல் விழித்தனர் அரசு மருத்துவர்கள். எந்தவிதமான விஷவாயு தாக்கியிருக்கிறது என்பது தெரியாததால், அதற்கு மாற்று மருந்து என்ன என்பதை அவர்களால் கண்டறியவோ, ஊகிக்கவோ முடியவில்லை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியைத் தொடர்புகொண்டு கேட்டால், அவர் சொன்ன விசித்திரமான பதில் என்ன தெரியுமா?

""கண்ணீர்ப் புகைக் குண்டு வெளிப்படுத்தும் புகை போன்றதுதான் இதுவும். அதனால் கண்களைத் தண்ணீர் விட்டுக் கழுவினாலே போதும். எரிச்சல் நின்றுவிடும்!'' என்பதுதான் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி அவர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குச் சொன்ன பதில். போபால் நகரில் பணக்காரர்கள் குடியிருக்கும் பகுதியில் பத்திரமாக வசித்து வந்த தொழிற்சாலை மருத்துவர் சம்பவம் நடந்த இடத்துப் பக்கம் தலைகாட்டக்கூட இல்லை.

மருத்துவமனைகளின் பிண அறைகள் இறந்தவர்களின் சடலத்தால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஆங்காங்கே மனிதச் சடலங்கள். அடுத்த மூன்று நாள்களும், மூன்று இரவுகளும் தொடர்ச்சியாக சடலங்கள் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வந்தன. போபாலின் பல்வேறு இடங்களில் இதுபோல கூட்டாக எரியூட்டு நடந்தவண்ணம் இருந்தது.

விஷவாயு தாக்கியதால் உடனடியாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்கிற நிஜமான கணக்கு கிடைக்கவே போவதில்லை. முதல் நாளில் மட்டுமே விஷவாயுவால் தாக்கப்பட்டு ஏறத்தாழ 8,000 பேர் உடனடியாக மரணத்தைத் தழுவியிருக்கக் கூடும் என்பது சில தன்னார்வ அமைப்புகளின் கருத்து.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்) என்கிற அரசு ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, அந்த முதல் நாள் இரவில் மட்டும் யூனியன் கார்பைட் தொழிற்சாலையைச் சுற்றிலும் வசிக்கும் ஏறத்தாழ 5.20 லட்சம் பேர்களின் ரத்தக்குழாய்களில் விஷவாயு நச்சு கலந்து அவர்களது அனைத்து உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீட்டு உபயோக காஸ் சிலிண்டருக்கு மானியம் ரத்து: ஜன., மாதம் தமிழகத்தில் அமலாக வாய்ப்பு?

சென்னை: காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' அட்டையை உடனடியாக பதிவு செய்ய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளதால், வீட்டு உபயோக, காஸ் சிலிண்டருக்கான மானியம், ஜன., மாதத்தில் ரத்து செய்யப்படும் என, தெரிகிறது.

பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கு என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது, மானியத்துடன் கூடிய, வீட்டு சிலிண்டர், 404.50 ரூபாய்; மானியம் அல்லாதது, 749.50 ரூபாய்; வர்த்தக பயன்பாடு, 1,465 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், 'வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள், தங்கள், 'ஆதார்' அட்டை எண்; வங்கி கணக்கு எண்களை, தங்கள் காஸ் ஏஜன்சியிடம் பதிவு செய்ய வேண்டும். 'ஆதார்' அட்டை இல்லாதவர், வங்கி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். 'ஆதார்' இல்லாமல், வங்கி கணக்கு எண் தருபவர்கள், மூன்று மாதங்களில், 'ஆதார்' அட்டை பெற்று, அந்த எண்ணை, காஸ் ஏஜன்சிகளுக்கு தர வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள் காஸ் ஏஜன்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் பதிவுக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏஜன்சியிடம் வழங்க வேண்டும்.பின், ஏஜன்சி வழங்கும் விண்ணப்பத்தை, வங்கியில், கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, பதிவு செய்யப்பட்ட பின், வீட்டு சிலிண்டருக்கான மானியம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட இருக்கிறது.பின், வாடிக்கையாளர்கள், சிலிண்டருக்கான முழு பணத்தை கொடுத்து, ஏஜன்சிகளிடம், சிலிண்டர் பெற வேண்டும். காஸ் ஏஜன்சிகள், வாடிக்கையாளரின், 'ஆதார்' அல்லது வங்கி கணக்கு எண் பதிவை, உடனடியாக துவக்கி, இம்மாதத்திற்குள் முடிக்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதையடுத்து, 'ஆதார்' எண் பதிவு செய்யும் பணியை, காஸ் ஏஜன்சிகள், நேற்று, முதல் துவக்கின. இதனால், வரும் ஜன., முதல், வீட்டு சிலிண்டருக்கான மானியத்தை, அரசு, ரத்து செய்து, வாடிக்கையாளர் வங்கி கணக்கில், வரவு வைக்க வாய்ப்புள்ளதாக, காஸ் ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

05.12.2014 TAMIL NADU TEACHERS EDUCATION UNIVERSITY CONVOCATION


Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...