Thursday, December 4, 2014

மரணத்தின் கோரத் தாண்டவம் நிகழ்ந்தபோது...


என்ன காரணம்?
1984, டிசம்பர்-2 அதிகாலை அந்தக் கொடிய விபத்து நடந்த தருணத்தில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்த மொத்த மீத்தைல் ஐசோசயனைடின் அளவு 63 டன். 610, 611, 619 ஆகிய எண்கள் இடப்பட்ட கலன்களில் மொத்த மீத்தைல் ஐசோசயனைடும் வைக்கப்பட்டிருந்தன. விதிமுறைப்படி, இந்தக் கொள்கலன்களெல்லாம் பாதிக்கு மேல் நிரப்பப்படக் கூடாது. ஏதாவது வேதிவினை நிகழ்ந்தால் அதைத் தடுப்பதற்கான வேதிப்பொருளைச் செலுத்துவதற்காகத்தான் அப்படி ஒரு விதிமுறை. ஆனால், 610 என்ற கலனில் 42 டன் மீத்தைல் ஐசோசயனைடு வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அந்தக் கலனின் முழுக் கொள்ளளவு இது. அப்பட்டமாக எல்லாம் மீறப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம் இது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கை என்று சொல்லி முன்னரே கைவிட்டிருந்தார்கள்.

ஊழியர்களின் அறியாமை, நிர்வாகத்தின் பொறுப்பற்றதனம், அரசின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து இந்தப் பேரழிவை நிகழ்த்தியது.

மரணத்தின் திசை

போபாலின் ஹமீதியா மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை நிகழ்த்தியபோது தெரிந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டிய திசை ஒன்றுதான்: ஹைட்ரோசயனைடு அமிலம். அந்த அமிலத்துக்கு ஒரு எதிர்மருந்து இருக்கிறது: சோடியம் தையோசல்ஃபேட். இந்தக் கண்டுபிடிப்பை பெரிய டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஹைட்ரோசயனைடுக்கு இங்கே என்ன வேலை என்பதுதான் அதற்குக் காரணம். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடிலிருந்து ஹைட்ரோசயனைடு அமிலம் உருவாகக் கூடும் என்பது அந்த பெரிய டாக்டருக்குத் தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருந்தால் ஏராளமானோரை உடனடியாகக் காப்பாற்றியிருந்திருக்கலாம்.

இறப்பிலும் ஆதாயம் தேடி…

முன்வாசலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தை அனுப்பி போபால்வாசிகளைக் கொன்ற அமெரிக்கா, பின்வாசல் வழியாக வேறு சிலரையும் அனுப்பியது: அமெரிக்க வழக்கறிஞர்கள்! பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்கள் இப்படியெல்லாம் பேசினார்கள்: “யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சும்மா விடக் கூடாது. நாங்கள் உங்களுக்காகவே வந்திருக்கிறோம். அமெரிக்காவில் அந்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து, உங்களுக்கு உரிய நிவாரணம் வாங்கித்தருகிறோம். சாதாரணத் தொகையல்ல: ஆளுக்கு ரூ. 10 லட்சம். மொத்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எங்கள் கட்டணம்.”

உண்மையான வில்லன்

உண்மையான வில்லன் மீத்தைல் ஐசோசயனைடு அல்ல, ஹைட்ரோசயனைடு அமிலம்தான். போபால் பேரழிவில் பெரும்பாலான மரணங்களுக்கும் பாதிப்புகளுக்கும் காரணம் அதுதான். உயர் வெப்பநிலையில் மீத்தைல் ஐசோசயனைடு பல்வேறு வாயுக்களாகப் பிரிகிறது. அதில் ஒன்றுதான் ஹைட்ரோசயனைடு அமிலம்.

கடவுளைச் சந்திக்கும்போது…

பேரழிவுக்கு மத்தியில்தான் மனிதர்களின் உன்னத குணங்களும் அற்ப குணங்களும் வெளிப்படும் என்பது உண்மை. ஒரு முஸ்லிம் பெண்ணின் பிரேதத்தை மீட்புப் பணியினர் எடுத்துச் செல்ல முயன்றபோது இந்துப் பெண் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். தன் கையிலுள்ள வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்களை அந்த முஸ்லிம் பெண்ணுக்குச் சூட்டிவிட்டுச் சொல்லியிருக்கிறார்: “இந்தப் பெண் என்னுடைய தோழி. கடவுளைச் சந்திக்கும்போது அவள் அழகாக இருக்க வேண்டும்.”

நடைப்பிணமான நாயகன்

நூற்றுக் கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாவின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மருத்துவமனையில் பிணங்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரர் ஒரு உடலிலிருந்து சிறு அசைவு தென்பட்டதைப் பார்த்து உடனடியாக டாக்டரிடம் தெரிவிக்க, இறந்துகொண்டிருந்த அந்த உயிரை டாக்டர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. வி.கே. சர்மாதான். உயிர்பிழைத்தாலும் வி.கே. சர்மா நடைப்பிணம் போன்றுதான் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கானோரைக் காப்பாற்றிய அவருக்கு இந்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை எவ்வளவு தெரியுமா? 35,000 ரூபாய்தான்.

உயிரைக் காப்பாற்றிய ஈரத் துண்டு

ஈரத் துண்டு எத்தனை பேர் உயிரை அப்போது காப்பாற்றியது தெரியுமா? பிறருடைய உயிரைக் காப்பாற்றச் சென்றவர்கள்கூட ஈரத் துண்டை முகத்தில் பொத்திக்கொண்டுதான் சென்றார்கள். வலுகுறைப்பானாகத் திறம்படச் செயல்பட்டது ஈரத் துண்டு. பிழைத்தவர்களில் பலரும் கும்பிடும் தெய்வங்களுள் ஈரத் துண்டும் ஒன்று.

அதீத மூச்சு ஆபத்தே

விஷவாயு கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றவர்கள்தான். வேகமாக ஓடியபோது அதிகக் காற்றை உள்ளிழுக்க நேர்ந்ததால் விரைவாக அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அவர்களோடு ஒப்பிட்டால், வீடுகளில் ஒடுங்கி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு சற்றுக் குறைவே.

நாயகன்

போபால் ஸ்டேஷன் மாஸ்டர் வி.கே. சர்மாதான் உண்மையான ‘நாயகன்’. விஷவாயுவின் அசுரத் தாக்குதலுக்கு மத்தியில் அந்த ஸ்டேஷனை நெருங்கிக்கொண்டிருந்த கோரக்பூர் ரயிலின் பயணிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே! லாந்தர்களுடன் அவர் அனுப்பிய ஆட்களாலும் ரயிலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிளாட்ஃபாரத்தை நோக்கி ரயில் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த சர்மாவுக்குப் பகீரென்றிருந்தது. உடனடியாக ஒலிபெருக்கியில் உருது, இந்தியில் எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தார். மேலிட ஆணை இல்லாமல் ரயிலை உடனடியாகக் கிளம்பாமல் ஓட்டுநர் காத்திருந்தார். முகத்தில் பொத்திய ஈரத் துணியுடன் பிணக் குவியல்களைத் தாண்டி வேகமாக ஓடிய சர்மா, ஓட்டுநரிடம் அவசரஅவசரமாகத் தகவல்களைத் தெரிவிக்கவும், ரயில் உடனடியாகப் புறப்பட்டது.

எல்லாம் இழந்த பின்னும்…

சஜீதா பானுவின் நிலைதான் இன்னும் மோசம். போபால் பேரழிவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், யூனியன் கார்பைடு கம்பெனியில் ஏற்பட்ட வாயுக் கசிவில் அவள் தன்னுடைய கணவர் முகம்மது அஷ்ரஃபை இழந்திருந்தார். அதாவது, அந்த விஷவாயுவின் முதல் பலியே அஷ்ரஃப்தான். போபால் பேரழிவின்போது தன்னுடைய குழந்தை ஒன்றையும் சஜீதா இழந்தார். இருந்தும், இன்று வரை அவருக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

மரணத்தின் பால்

அந்தப் பேரழிவின்போது பலரையும் காப்பாற்றிய டாக்டர் சர்க்காரால் அதற்குப் பிறகு ஒருபோதும் அந்தக் காட்சியை மறந்திருக்க முடியாது. போபால் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பிணக் குவியல்களுக்கு மத்தியில் ஏதோ அசைவைக் கண்டிருக்கிறார். அருகே வந்து பார்த்தார்: இறந்துகிடந்த தன் தாயின் உயிரற்ற மார்பை ஒரு குழந்தை சப்பிக்கொண்டிருந்தது!

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

NO WATER TO DRINK, LIQUOR FLOWS FREELY, SAYS JUDGE

Chennai: Observing that even drinking water is scarce in most parts of our country but the other water (alcohol) flows aplenty in every nook and corner of the nation in which families are drowning, the Madras high court has asked the Central and State governments as to why they have not considered implementation of total prohibition to protect the people from the evils of liquor.

Suo motu impleading the Union government, TN government, Tasmac and DGP as respondents in the appeals, which sought enhancement of compensation awarded to the dependents of two who died in an accident due to drunken driving in the city in 2011, Justice N Kirubakaran posed 16 queries and directed the counsels for impleaded respondents to get their response by December 11.

“There are more chances for the people to consume alcohol in view of availability of liquor very easily in liquor shops and bars throughout India, except Gujarat, and drive vehicles. When the governments themselves open up liquor shops and simultaneously have established bars to allow the people to consume liquor, such course paves way for drunken driving causing more accidents resulting in loss of lives, disablement of many human beings, damage to the properties etc., attracting various provisions of IPC and Motor Vehicles Act,” Justice Kirubakaran observed.

It was the bounden duty of the governments to eradicate the evil of drinking by total prohibition which will be in the interest of the citizens, families and consequently, the society, the judge added.The judge said after all the father of our nation was against liquor and he said “Drugs and Drink are the two arms of the devil with which he strikes his helpless slaves into stupefaction and intoxication”.

There were dangerous consequences of drinking including commission of many crimes. Families were shattered because of drinking. Health, wealth and peace of mind were lost due to alcohol, and mostly sufferers were women and children and they were affected physically, psychologically and economically.

MED SCAM: MCI SUMMONS OFFICIALS

Satesman News Service 

KOLKATA, 29 NOV: The Medical Council of India (MCI), which is carrying out a probe into the alleged fudging of marks in the West Bengal Joint Entrance Examination (medical), has asked the Director of Medical Education (DME) and the chairman of the Joint Entrance Board to appear before the MCI's Delhi office on 4 December with all documents.
A highly-placed source in the MCI said that if state government officials fail to turn up with the documents it would take up the issue seriously. The decision has been taken as the state government was allegedly not cooperating with the MCI in its investigation and not providing the documents.
The MCI had earlier written to the state government seeking the documents relating to the procedure of the examination, the method of distribution of marks and the original answer papers of all the candidates. But the state government was reluctant to provide the documents. Senior officials of both the state health department and the joint entrance board have been saying that they have not received any letter from the MCI.
The Statesman broke the news about the fudging of marks in the medical entrance examination on 20-21 November giving all the details on how the two state government departments allegedly increased the marks of the candidates who failed to secure the minimum eligibility marks in the examination and ensured their admission in various medical colleges.
Quoting a source in the MCI, The Statesman had earlier reported that the Central regulating authority will look into the database of the marks of the students that are available with the JEE board. OMR (optical mark recognition) sheets and response sheets of all the candidates will also be looked into. If the investigation proves that the numbers which were sent to the MCI by the medical colleges were fudged, strong action will be taken against those who are involved in the scam.
The state government's decision to increase the marks of as many as 677 students under the general and reserve category who are studying medical after failing to secure the minimum eligibility marks might jeopardise the future of these candidates.

Editorial: Off Your Marks, page 6

STUDENTS PANIC AS LEOPARD VISITS SCHOOL

தண்டனை தேவை By ஆர். வேல்முருகன்


கும்பகோணத்தில் தனியார் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் நூறு குழந்தைகள் உயிரிழந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு சிறிதாவது பாதுகாப்பு கிடைத்தது.

இதேபோல பல சம்பவங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொரு சம்பவத்திலும் ஏற்பட்ட தவறை உணர்ந்து, அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அண்மையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

இதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காரணமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சரே வக்காலத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல்வேறு புள்ளி விவரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தப் புள்ளி விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எத்தனைக் குழந்தைகளின் உயிர் மோசமான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அமைச்சரோ, துறைச் செயலரோ அல்லது மருத்துவர்களோ சொல்லவில்லையே.

அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக பத்திரிகைச் செய்தி வெளியிட்ட மருத்துவர் சங்கத்தினர் கூட எத்தனை குழந்தைகள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்லவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் பெண்களுக்குச் சிறு வயதில் திருமணம் என்பதும் பெண் குழந்தைகளென்று தெரிந்தால் கர்ப்பத்திலேயே கொல்லப்படுவதும் மிகவும் சாதாரணமாக நடந்த, நடந்து கொண்டிருந்த சம்பவங்கள்தான். இப்போதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் கிராமங்கள் அதிகம் உள்ளன. படிப்பறிவு குறைந்த மக்கள் அதிகம்.

தமிழக அரசு இந்த மக்களுக்கும் சேர்த்துத்தான் கிராம சுகாதார செவிலியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது.

கர்ப்பம் தரித்த நாள் முதல் அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவரிடம் செல்ல வேண்டிய நாள் ஆகியவற்றை கிராம சுகாதார செவிலியர்கள் கண்காணிக்க வேண்டும்.

கர்ப்பம் தரித்திருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ உடல் நிலை மோசமாக இருந்திருந்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கோ அழைத்துச் சென்றிருக்கலாம்.

ஆனால், அவ்வாறெல்லாம் நடைபெற்றதாகத் தெரியவில்லை. மேலும், தேவைப்பட்டால் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அப் பெண்களுக்கும் உதவியிருக்க முடியும்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தனி வார்டு உள்ளது. இதில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்தான் உயிரிழந்துள்ளன.

தருமபுரியை விட முன்னேறிய சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

பொதுவாக எந்த அரசு மருத்துவமனையென்றாலும் ஏழை, எளிய மக்கள்தான் சிச்சைக்காக வருகின்றனர்.

பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை ஆணென்றாலும் பெண்ணென்றாலும் அதற்கெனத் தனியாக செவிலியர்களுக்குக் கப்பம் கட்டினால் மட்டுமே பெற்றவர்களுக்குத் தகவல் கிடைக்கும்.

அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்துகொண்டே தனியார் மருத்துவமனைகளில் ஆலோசகர்களாகப் பணிபுரியும் மருத்துவர்கள் ஏராளமானவர்கள்.

தனியார் மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

தருமபுரி அரசு மருத்துவமனையிலேயே பச்சிளம் குழந்தையின் சிறுகுடலில் இருந்த ஓட்டைகளை அடைத்து அந்த உயிரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

திறமை மிகுந்த மருத்துவர்களின் உதவியோடு குழந்தைகள் காப்பாற்றப்படுவதை மறுப்பதற்கில்லை. பின் எப்படி நிகழ்ந்தது இந்த குழந்தைகளின் மரணம்?

மருத்துவர்களையும் செவிலியர்களையும் காப்பாற்றுவதற்கும் எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பதற்கும் வேண்டுமானால் வெற்றுப் புள்ளி விவரங்கள் பயன்படலாம்.

ஆனால், எதிர்காலத்தைக் கண்களில் சுமந்தபடி தாய்மைப் பேறடையும் பெண்களுக்கும் தங்களுக்கு வாரிசு கிடைக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் கணவனுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அது எவ்வளவு பெரிய பேரிழப்பு?

அரசு இந்த விஷயத்தில் யார் மீது தவறு எனக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாவதைத் தவிர்க்க இயலாது!

Source: Dinamani 4.12.2014 

வரவேற்கத்தக்க மாற்றங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் சில அதிரடித் திட்டங்களில் முதியோருக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் "ஜீவன் பிரமாண்' எனப்படும் கணினி வழி இருத்தல் தற்சான்றை தானே வழங்கும் நடைமுறையும் ஒன்று. நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இத்திட்டத்தால், நாடு முழுவதிலும் ஓய்வூதியம் பெறும் ஒரு கோடி முதியோர் பயனடைவர்.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சம் பேர் தற்போது ஓய்வூதியம் பெறுகின்றனர். இதற்கு இணையாக மாநில அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்களும், பொதுத் துறை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோருமாக சுமார் 75 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் நீங்கலாக, ராணுவ வீரர்கள் சுமார் 25 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த "ஜீவன் பிரமாண்' நடைமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதுள்ள நடைமுறைப்படி, ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளுக்கு நேரடியாக வந்து, தாங்கள் உயிருடன் இருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இந்தக் கடமையைச் செய்யாவிட்டால், அடுத்து வரும் ஜனவரி முதல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிடும். ஆகவே, ஓய்வூதியம் பெறுவோர் நேரடியாக வங்கிக்கு வந்து, தங்கள் இருத்தலை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

பல முதியோருக்கு அவர்கள் சேமிப்புக் கணக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கிளைக்கு நேரடியாக வருவது சிரமமானது. முதுமையும் நோயும் முக்கியக் காரணம். சிலரால் துணை இல்லாமல் வருவது சாத்தியமே இல்லை. பெரும்பாலோர் பணி ஓய்வுக்குப் பிறகு மகன் அல்லது மகளைச் சார்ந்து வாழ்வதால் அவர்கள் செல்லும் ஊர்களுக்குத் தாங்களும் சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இந்த இருத்தல் சான்றுக்காக மட்டுமே வங்கிக் கிளைக்கு வந்து செல்வது, உடல், மனம் இரண்டையும் சோர்வடையச் செய்யும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது இந்த சிரமத்தைப் பிரதமர் இல்லாமல் செய்திருக்கிறார்.

இந்த நடைமுறை ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்தது. விரல் ரேகை, கண்பாவை போன்ற உயிர்மை அடையாளங்கள் (ஆண்ர் ம்ங்ற்ழ்ண்ஸ்ரீ) மூலம் ஒருவரது இருத்தலை கணினி வழியாக உறுதி செய்ய வல்லது. தற்போது நவீன செல்போன்கள் புழக்கத்தில் இருப்பதாலும், கணினி மையங்கள் பலவற்றிலும் இதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாலும் இந்த நடைமுறை எளிதாக இருக்கும். முதியோருக்கு அதிக சிரமங்களைத் தராது.

ஆதார் அட்டைக்குப் பதிவு செய்யப்படும் வேளையில், அனைத்து விரல்களின் ரேகை, கண்பாவை போன்ற உயிர்மை அடையாளங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒவ்வோர் ஆண்டும் கணினி வழியாக இவற்றை உறுதிப்படுத்துவது எளிது. அலுவலகங்களில் வருகைப் பதிவேடு, திருப்பதி கோயிலில் வழிபாட்டு முன்பதிவு போன்றவற்றில் உயிர்மை அடையாளம் எவ்வாறு மிக இயல்பாக உள்ளதோ, அதேபோன்றதுதான் கணினி வழியாக இருத்தல் தற்சான்று வழங்குவதும்! விரைவில் ஏ.டி.எம். மையங்களில் ரகசிய எண்களுக்குப் பதிலாக உயிர்மை அளவுகோல் பயன்படுத்தப்படும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்த நடைமுறை முதியோருக்குச் சிரமங்களைக் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்ற அக்டோபர் மாதம், வருங்கால வைப்புநிதி தொடர்பான இன்னொரு நல்ல மாற்றத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (யு.ஏ.என்.) எனப்படும் ஒரேயொரு வருங்கால வைப்புக் கணக்கு எண் திட்டம்! இது சற்றொப்ப நான்கு கோடிப் பேருக்கு நன்மை பயக்கும்.

தற்போதைய நடைமுறைப்படி, ஓர் ஊழியர் வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறிச் செல்லும்போது, ஒவ்வொரு நிறுவனத்திலும் அவருடைய பி.எப். கணக்கு எண், புதிய நிறுவனத்தின் மூலம் புதிதாக வழங்கப்படும். முந்தைய நிறுவனத்தில் பணியாற்றிய காலத்துக்கான பி.எப். தொகையை வரவு வைக்க, பல படிவங்களைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்தப் படிவங்களில் சிலவற்றை முந்தைய நிறுவனம் பூர்த்தி செய்து, செலுத்திய தொகையை உறுதிப்படுத்தாமல் வரவு வைத்தல் சாத்தியமில்லை.

வெளியேறிவிட்ட ஊழியர் மீது முந்தைய நிறுவனம் கரிசனம் காட்டாது. இதனால், தனியார் நிறுவன ஊழியர்கள் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர். இப்போது ஒருவர் தனக்கான ஒரேயொரு பி.எப். கணக்கு எண் (யு.ஏ.என்.) வைத்திருந்தால் போதும். எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் இந்தக் கணக்கில் பி.எப். தொகையை வரவு வைக்க முடியும். வரவேற்கத் தக்க மாற்றங்கள்!

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கை வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை வைத்திருப்பதாக ஒப்புதல் அளித்தவர்கள் மீது மார்ச் 31–ந் தேதிக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியர்களின் கருப்பு பணம்

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்றும், அவர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மூத்த வக்கீலான ராம்ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே மத்திய அரசு 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தாக்கல் செய்திருந்தது.

தப்பிக்க வாய்ப்புள்ளது

அதில் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக தாபர் இந்தியா குழுமத்தின் முன்னாள் இயக்குனரான பிரதீப் பர்மன், கோவாவை சேர்ந்த சுரங்க நிறுவன அதிபரான ராதா சதீஷ் டிம்லோ, குஜராத்தை சேர்ந்த பிரபல தங்க வியாபாரி சிமன்லால் லோகியா உள்பட 627 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. மனுதாரரான ராம்ஜெத்மலானி வருகிற மார்ச் மாதத்திற்குள் வெளிநாடுகளில் கருப்பு பணத்தை வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை மீட்காவிட்டால் அவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

மார்ச்சுக்குள் நடவடிக்கை

இதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோகத்கி, அரசாங்கத்திடம் இந்த விஷயம் குறித்து அனைத்து தகவல்களும் இருக்கிறது என்றும், மார்ச் மாதத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்,

இதற்கு நீதிபதிகள் உரிய காலத்துக்குள் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து முடிக்கவில்லை என்றால் அரசாங்கம் இதுகுறித்து சட்டரீதியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் அல்லது அந்த நடவடிக்கையை எடுப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

துயரமான அம்சம்

ராம்ஜெத்மலானி, சிறப்பு புலனாய்வுக்குழுவில் பங்கேற்கும் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் இந்த விசாரணையில் ஆஜரானது விசாரணை நடைமுறைக்கு எதிரானது என தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் சிறப்பு புலனாய்வுக்குழு தான் விசாரணையில் ஆஜராவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் ஆஜராகி உள்ளதாகவும் கூறினார்.

விசாரணையின் இறுதியில் வக்கீல் ராம்ஜெத்மலானி, தான் கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவருவதில் அரசாங்கத்துக்கு உதவி செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் அரசாங்கத்துக்கு எதிரான அணியில் இப்போது உட்கார்ந்திருப்பதாகவும் அதுதான் இந்த அரசாங்கத்தின் துயரமான அம்சம் என்றும் கூறினார்.

இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜனவரி 20–ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...