Friday, December 5, 2014

தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடக்கம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 19-ல் தொடங்குகிறது

exam time table for plus two and plus one

பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 125 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளும் எழுதுகிறார்கள்.

இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.

இதன்படி, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி, மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 19-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது.

பிளஸ்-2அட்டவணை

பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-

2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

6-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

9-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

10-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

13-ந்தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ்.

16-ந்தேதி- வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

18-ந்தேதி- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.

20-ந்தேதி- அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்.

23-ந்தேதி- வேதியியல், அக்கவுண்டன்சி.

27-ந்தேதி- இயற்பியல், பொருளாதாரம்.

31-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-

மார்ச் 19-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

24-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

25-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

26-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

30-ந்தேதி- கணிதம்.

ஏப்ரல் 6-ந்தேதி- அறிவியல்.

10-ந்தேதி- சமூக அறிவியல்.

தேர்வு தொடங்கும் நேரம்

பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும்.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் மாணவ- மாணவிகளை புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாளில் இடம்பெறுகிறது. அது மட்டுமில்லாமல், மாணவ- மாணவிகளின் பதிவு எண்களும் அந்த விடைத்தாளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்டார் மந்திரி; வேறு என்ன வேண்டும்?

21–ம் நூற்றாண்டில் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லோருமே அவரவர் வழிபடும் தெய்வங்கள், அவரவர் பின்பற்றும் மதங்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்களேதவிர, பெரும்பாலான மக்களுக்கு மதங்கள் மீது வெறி இல்லை. மதத்தலைவர்கள்கூட அடுத்த மதங்களின் தலைவர்களோடு நட்புபாராட்டும் நல்ல பண்பு வளர்ந்துவருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்தலைவரான போப் ஆண்டவர், துருக்கி நாட்டுக்கு சென்றதும், அங்கே இஸ்தான்புல் நகரில் உள்ள ஹாகியா சோபியா மசூதிக்கு சென்று வழிபாட்டில் கலந்துகொண்டதும், நல்ல மதநல்லிணக்கத்துக்கு அச்சாரமாக விளங்குகிறது. மதங்களுக்கிடையே நல்ல பேச்சுவார்த்தைகள் இருப்பதன் மூலம், நல்ல உறவுகளை வளர்த்து, தீவிரவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று கூறியிருக்கிறார். அதேபோல இந்தியாவிலும், பிரதமர் நரேந்திரமோடி, இந்துமத கோட்பாடுகளில் அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும், அடுத்தமத தலைவர்களுக்கு உரியமரியாதையை கொடுக்க தவறியதில்லை.


இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் பா.ஜ.க. மந்திரி சபையில் 21 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அதில், நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் சேர்க்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் ஒரு பிற்பட்டவகுப்பில் பிறந்த இந்த 47 வயது பெண் சாமியார், ஏற்கனவே மந்திரிசபையில் இருக்கும் உமாபாரதி போல, ஒரு துறவிதான். காவி உடைதான் அணிந்திருப்பார். பத்தேப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்முறை எம்.பி., ஒரு ஆசிரமத்தில் சேர்ந்துள்ள நிரஞ்சன் ஜோதி சாமியார், ராமர் கோவில் பற்றி சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். டெல்லியில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, பா.ஜ.க. சார்பில் ஒரு பேரணி நடந்தது. இந்த பேரணியில், நிரஞ்சன் ஜோதி சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ராமரின் மக்களே. நாட்டை விற்றுவிட்ட சிலர் நாட்டை திவாலாக்கிவிட்டனர். அத்தகையவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்று சொன்னதெல்லாம் சரி, அதன்பிறகு அவர் பேசிய பேச்சுக்கள்தான், நாடு முழுவதிலும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது. முஸ்லீம்கள் மசூதிக்குசென்று வழிபடுகிறார்கள். நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், ராமர் பற்றி பேசினால் மட்டும் அதை மதவாதம் என்று சொல்கிறார்கள். நான் என்னை மதவாதி என்று சொல்பவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் இப்படி சொல்கிறீர்களே அதைவிட என்ன மதவாதம் இருக்கிறது?, இன்னும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், இந்த நாட்டில் கிறிஸ்தவர்களாக இருக்கட்டும், முஸ்லீம்களாக இருக்கட்டும், அவர்களெல்லாம் ராமரின் குழந்தைகள்தான். இதை நம்பமறுப்பவர்கள், இந்த நாட்டையே நம்பமாட்டார்கள். நான் டெல்லி மக்களை கேட்கிறேன், ராமரின் குழந்தைகள் ஆளும் அரசு வேண்டுமென்று நினைக்கிறீர்களா?, அல்லது ராமரை நம்பாத முறைகேடாக பிறந்தவர்கள் ஆளும் அரசு வேண்டுமா? என்று கேட்டார். இது, நாடு முழுவதிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தனது கோபத்தின் வெளிப்பாடாக, இதுபோன்ற பேச்சுக்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டுக்கு புது விலாசத்தை கொடுக்கவேண்டாம் என்று கண்டன கணைகளை வீசிவிட்டு, மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதி சாமியாரை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிவிட்டார். பெண் சாமியார் நிரஞ்சன் ஜோதியும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஆனாலும், எதிர்க்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ளாமல், மந்திரியை ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என்று அவையில் அமளி ஏற்படுத்தி நடத்தவிடவில்லை. பிரதமரும், மந்திரி மன்னிப்பு கேட்டுவிட்டார், அதை ஏற்றுக்கொண்டு, அவையை நடத்துவோம் என்று கேட்டார். நிச்சயமாக பெண் மந்திரி பேசியது தவறுதான். ஆனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலுமே அவர், ‘மன்னிப்பு கேட்டபிறகு, வேறு என்ன வேண்டும்?’. பொதுவாக, திருவள்ளுவர் சொன்னதுபோல, ‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப்பட்டு’ என்பது அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும்.

Thursday, December 4, 2014

SINGAPORE: Three hundred people have been caught for consuming alcohol during prohibited timings

SINGAPORE: Three hundred people have been caught for consuming alcohol during prohibited timings since temporary measures to maintain public order in Little India came into effect on Apr 1 this year, police said on Thursday (Dec 4).
Four establishments were also found to have committed liquor licensing breaches after the Public Order (Additional Temporary Measures) Act kicked in. 
"Police have also worked with the relevant government agencies to install 43 cameras and 42 'lighting sites' to further enhance the security of Little India," Rochor NPC Commanding Officer Ho See Ying said to reporters after a site visit at Little India.
These lighting sites are mostly congregation areas, back alleys and fields. More than 100 lamp posts have been installed at the sites. Temporary spotlights powered by generators, which were installed after the Little India riot, will be removed before the end of the year.
Sheltered bus terminals have also been built at Tekka Lane and Hampshire Road. These allow workers to board and alight from buses that ferry them from Little India to their dormitories.
The measures had been introduced in the wake of the Dec 8, 2013 Little India riot. The incident saw approximately 400 people running riot after a fatal accident involving a bus and a foreign worker at Racecourse Road. A Committee of Inquiry had found that alcohol and intoxication had played a factor in the night's events.

CLARIFICATION REGARDING EQUIVALENCE OF NATIONAL INSTITUTE OF OPENING SCHOOLING FOR ADMISSION IN MBBS COURSE BY MEDICAL COUNCIL OF INDIA


இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

ந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை. ஆனால், இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகளில் அனைத்திலும்  நடைமுறையில் உள்ளது.

இந்த NPS (National Pension System) திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். முதலில் ரூ.600 செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் ரூ.100 செலுத்த வேண்டும். இந்திய அரசு உங்கள் கணக்கில் வருடம்தோறும் ரூ.1000 செலுத்தும் (முதல் நான்கு ஆண்டுகள் வரை).

உங்களுக்கு 60 வயது ஆகும் பொழுது உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். இதற்கு 8 முதல் 12% வரையிலான கூட்டுவட்டியும் உண்டு.

அதுமட்டுமல்லாமல், NRI-க்கள் மற்றும் PPF சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். PRAN-Permanent Retirement Account Number உள்ளவர்கள், கீழ்நிலை / ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஓய்வூதியம் பெற இந்தத்  திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இதில் முகவர்களாக சேர்ந்தும் வருமானம் ஈட்டலாம்.

மேலும் விவரங்களை http://pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

-இந்துலேகா.சி

கொலையாளிகள் ஆகும் குழந்தைகள்

வன்முறையில் ஊறிய சமூகத்தின் பிரதிபலிப்புதான் குழந்தைகளின் வன்முறைகள்!

ஆறு வயதுச் சிறுவன் தன் வகுப்பில் படிக்கும் ஆறு வயதுச் சிறுமியிடம் என்னென்ன பேசுவான்? தான் அணிந்து வந்திருக்கும் புத்தம் புதிய உடை பற்றி? அப்பா வாங்கித்தந்த புதிய பொம்மை குறித்து? இப்படித்தான் ஏதாவது பேசுவான் என்று நீங்கள் நினைத்தீர்களானால் மன்னிக்கவும், உங்கள் கணிப்பு தவறு.

அமெரிக்காவில் மவுன்ட் மாரீஸ் டவுன் ஷிப்பில் ஓர் ஆறு வயதுச் சிறுவன் தன் வகுப்பில் படிக்கும் தன் வயதுச் சிறுமியிடம் துப்பாக்கியால் பேசியிருக்கிறான்.

ஒரு வண்ணத்துப்பூச்சியைப் போலப் பாடித் திரிந்த காய்லா ரோலண்ட் எனும் அந்தச் சிறுமி சக மாணவனின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி வகுப்பறையிலேயே துடிதுடித்து இறந்துபோனாள். உயிரைப் பறித்தவனும் உயிரை இழந்தவளும் மழலைகள்.

உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!

மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஒரு குழந்தை, கொலையாளியாக மாறிப்போனது எப்படி?

அந்தச் சிறுவன் அன்றைக்குப் பள்ளிக்கூடம் வரும் போதே ஒரு செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கியையும் ஒரு கத்தியையும் கூடவே கொண்டுவந்திருந்தான். கத்தியைப் பார்த்துவிட்ட இன்னொரு குழந்தை ஆசிரியரிடம் முறையிட, ஆசிரியர் கத்தியைப் பிடுங்கி வைத்துக்கொண்டார். ஆனால், துப்பாக்கி யாருடைய கண்ணிலும் படவில்லை. கணினிப் பயிற்சிக்காக குழந்தைகள் வகுப்பு மாறிச் செல்லும் நேரம். காய்லா அந்தச் சிறுவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தாள்.

அப்போது அந்தப் பொடியன் சொன்னான்: “உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.”

“அதற்காக..?” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் அவன் துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கிச் சரமாரி யாகச் சுட்டான். காய்லாவின் வயிற்றைத் துளைத்தபடி குண்டுகள் பாய்ந்தன.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காய்லா சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனாள்.

துப்பாக்கிக் குண்டுகள் வெடித்த உடனேயே பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக் கதவு களை மூடும்படி உத்தரவிட்டார். அந்தச் சிறுவன் தப்பி ஓடுவதற்கோ ஒளிந்துகொள்ளவோ முயற்சி செய்ய வில்லை. அவனைத் தலைமை ஆசிரியரிடம் அழைத்து வந்தார்கள். பிறகு, போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள். இது நடந்தது 2000-ல்.

அந்தச் சிறுவனின் தந்தை டெட்ரிக் ஓவன்ஸ் பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். போதை மருந்து களை வைத்திருந்ததாக போலீஸார் அவனைக் கைது செய்திருந்தார்கள். சிறுவனும் எட்டு வயதான அவனுடைய மூத்த சகோதரனும் தாய் டாமர்லாவுடன் தங்கியிருந்தார்கள். அவன் வைத்திருந்த துப்பாக்கி அவனுடைய தாய்மாமனுக்குச் சொந்தமானதாம். தாய் மாமனின் வயது என்ன தெரியுமா? 19.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான தந்தை. சோடா பாட்டில்களும் வயர்களும் சிதறிக்கிடக்கும் வீடு. உடைந்த கண்ணாடி ஜன்னல்கள். அவற்றின் மேல் ஒட்டப்பட்ட நீலத்தாள்கள். ஏறத்தாழ வெளிச்சமே இல்லாத அறை. இரண்டு சிறுவர்களும் படுத்துக் கொள்வதற்கு ஒரு சோபா. அந்தச் சிறுவன் ஒரு நரகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். இப்போது சொல்லுங்கள்: காய்லா ரோலண்ட்டைக் கொன்றது யார்? அந்தச் சிறுவனா, அவன் வளர்ந்த சூழ்நிலையா?

இந்தியா விதிவிலக்கில்லை

இத்தகைய குற்றச் செயல்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அரங்கேறத் தொடங்கி விட்டன. தமிழகத்தின் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில்கூட மாணவர்களிடையே வன்முறை மனோபாவம் மேலோங்கிக் காணப்படுகிறது. நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து விட்டதாக ஒரு மாணவன் இன்னொரு மாணவனைக் கொன்றதாகச் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. சென்னையில், வகுப்பு ஆசிரியை வீட்டுப் பாடம் எழுதாத ஒரு மாணவனைக் கண்டித்ததால் அந்த மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட செய்தி தமிழகத்தையே உலுக்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நலகொண்டா மாவட்டத்தில் உள்ள கோடா கோடா கிராமத்தில் ஒரு மதரஸாவில் படித்துவந்தான் அப்துர் ரஹ்மான். வயது 7. இவனை அதே மதரஸாவைச் சேர்ந்த 12 வயது முதல் 14 வயது வரையுள்ள மூன்று மாணவர்கள் சேர்ந்து கொன்று ஒரு மரத்தில், தூக்கில் தொங்க விட்டார்கள். என்ன காரணம்? மாணவன் இறந்தால் மதரஸாவைப் பூட்டிவிடுவார்கள்; விடுமுறை கிடைக்கும் என்பதற்காக.

குழந்தைகள் இப்படி வழிகெட்டுப்போவதற்கும் குற்ற வாளிகள் ஆவதற்கும் மூத்த தலைமுறையினரைத் தவிர வேறு யாரைப் பொறுப்பாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை சொல்ல வேண்டியவர்களும் அவர்கள்தாம்.

மரபணு காரணமா?

‘குழந்தைகளைக் கொலையாளிகளாய் மாற்றுவது எது?’ என்பதையே மனநல ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமாகவே சிலரிடம் மரபணுக்கள் மூலம் ‘குற்ற வாசனை’ இருக்க வாய்ப்புண்டு என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆயினும் இந்தக் கருத்தை அறிவியல் உலகம் பரவலாக ஏற்றுக்கொள்ளவில்லை. சூழ்நிலைகள்தான் குற்றவாளிகளை உருவாக்குகின்றன என்ற தீர்மானத்தைத்தான் பெரும்பாலான மனநல ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். “கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்பது போன்ற பாரபட்சமான- இன அடிப்படையிலான நிலைப்பாடுகளை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

அன்றாட வாழ்க்கையிலும் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் அதிக அளவில் இடம்பெறும் வன்செயல்கள், வீட்டில் பெற்றோர்களுக்கு இடை யிலான சண்டை சச்சரவுகள், தாய்-தந்தையரால் புறக்கணிக்கப்படுவதன் மூலம் உண்டாகும் உணர்வுக் கொந்தளிப்புகள், மோசமான சூழல்கள் போன்றவற்றால் உருவாகும் பிரச்சினைகள்தான் குழந்தைகளைக் குற்றவாளிகளாக ஆக்குகின்றன. இளம் பருவத்தில் தாய்-தந்தையரின் அரவணைப்போ, பாசமோ கிட்டாத குழந்தைகள் உடல் அளவிலும் மனத்தளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். துயரங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் தொடர்ந்து ஆளாகும் குழந்தைகளின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் அந்தக் குழந்தைகள் சமுதாயத்தின் மீதும் சக உயிர்கள் மீதும் வெறுப்பும் குரோதமும் கொள்கின்றன. இத்தகைய குழந்தைகளிடம் ‘சமூகத்துக்கு எதிரான ஆளுமைச் சீர்குலைவுகள்’ காணப்படும். தொடக்கத்திலேயே கவனித்தால் இப்படிப்பட்ட குழந்தைகளின் உணர்வுகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

உயிருக்கு மதிப்பில்லை

2000-ல் தன்னுடைய தாய்-தந்தையரைக் கொன்று சக தோழர்கள் 24 பேர் மீதும் குண்டுமழை பொழிந்த 15 வயது கிப் பிங்கிள் தன்னுடைய வளர்ப்பு மிருகங்களைச் சித்திரவதை செய்து ரசிப்பவனாக இருந்தானாம். இதுபோன்ற குழந்தைகளின் மனசாட்சி நாளடைவில் மரத்துப்போய்விடும். திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் காமிக்ஸ் கதைகளும், கொலை செய்வதையும் பழிக்குப்பழி வாங்குவதையும் சிறப்பான செயல்களாகச் சித்தரிப்பதால் அவை அப்படியே குழந்தைகள் மனதில் தங்கி பெரிய பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இதனை நிரூபித்திருக்கின்றன. இப்படி வளரும் குழந்தைகளிடம் மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற எண்ணம் தோன்றினால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

எண்பதுகளில் இருந்ததைவிட அமெரிக்காவில் குழந்தைக் கொலையாளிகளின் எண்ணிக்கை இப்போது இருமடங்காகிவிட்டது. பள்ளிக்கூட வாசல்களில் மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. முழுமை யான சோதனைகளுக்குப் பின்னர்தான் மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். கலாச்சார ஆக்கிரமிப்பின் காரணமாக நம் நாட்டுப் பள்ளிக் கூடங்களின் வாசல்களிலும் இனி மெட்டல் டிடெக்டர் வைக்கப்பட்டாலும் வியப்பதற்கில்லை!

- சிராஜுல் ஹஸன், மூத்த இதழாளர், ‘சமரசம்’ இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர்.

விலகாத அழிவின் நிழல்



டிசம்பர் 2, 1984. நள்ளிரவு. கடுங்குளிர். நாய்கள் ஓலமிடுகின்றன. ஊர் பாதித் தூக்கத்தில் எழுகிறது. மூச்சுத் திணறுகிறது. காற்றுக்காகக் கதவைத் திறந்து வெளியே வருபவர்கள் காற்றில் எரிச்சலை உணர்கிறார்கள். இன்னதென்று யோசிக்கும் முன் ‘யூனியன் கார்பைடு’ தொழிற்சாலையிலிருந்து அபாயச் சங்கு ஒலிக்கிறது. ஓடுகிறார்கள். சரிகிறார்கள். சாகிறார்கள். விடிந்தபோது வீதியெங்கும் மனிதப் பிணங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடைகள், பறவைகளின் உடல்கள். அன்று தொடங்கி போபால் மக்கள் போராடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் செத்திருக்கிறார்கள். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிறக்கும் ஒவ்வொரு 25-வது குழந்தையும் குறைபாடுடைய குழந்தையாகப் பிறக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. பரப்பளவுக்கு நிலத்தடி நீர் நஞ்சாகியிருக்கிறது. இன்னமும் ‘யூனியன் கார்பைடு’ விட்டுச்சென்ற 350 டன் நச்சுக் கழிவு அகற்றப்படவில்லை.

*இந்தியாவில் தொழில் தொடங்க உரிமம் கோரி, யூனியன் கார்பைடு நிறுவனம் 1.1.1970-ல் விண்ணப்பித்தது. நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த விண்ணப்பத்தின் மீது 31.10.1975-ல் திடீரென முடிவெடுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பு அமலில் இருந்த காலம் அது.

*போபால் ‘யூனியன் கார்பைடு’ ஆலை மிக அபாயகரமான ரசாயனங்களைக் கையாள்வது அன்றைக்குப் பெரும்பான்மை மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கொள்கலன் வெடித்து விஷ வாயு கசிந்தால், எப்படி எதிர்கொள்வது என்பது அங்குள்ள மருத்துவர்களுக்குக்கூடச் சொல்லப்பட்டிருக்கவில்லை.

*சம்பவம் முடிந்து நான்காவது நாள் ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் போபால் வந்தார். மத்தியப் பிரதேச அரசு அவரையும் அவருடைய இந்திய சகாக்களையும் கைதுசெய்தது. அவருடைய ஆலையின் விருந்தினர் மாளிகையிலேயே அவர் தங்கவைக்கப்பட்டார். அடுத்த சில மணிநேரங்களில் ஆண்டர்சனை விடுவித்தார் முதல்வர் அர்ஜுன் சிங். அரசு விமானத்திலேயே டெல்லிக்கு அனுப்பி, அங்கிருந்து அமெரிக்கா செல்ல வழிவகுத்தார். அன்றைய தினம் மத்தியப் பிரதேசத்தில்தான் சாகர் என்ற ஊரில் இருந்தார் வெளியுறவுத் துறையைத் தன்வசம் வைத்திருந்த பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், ஆண்டர்சன் விவகாரம் அவருக்குத் தெரியாது எனச் சாதித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இது தொடர்பான பதிவுகளே வெளியுறவுத் துறையிடம் இல்லை என்று பின்னாளில் அறிவித்தது அரசு.

*அமெரிக்க நீதிமன்றங்களை நாட ஆரம்பித்தார்கள் போபால் மக்கள். அமெரிக்காவில் இந்த வழக்கை நடத்தினால், பெரும் தொகையை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும்; இந்தியாவிலேயே வைத்து முடித்துவிடலாம் என்று ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு ஆலோசனை சொன்னவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். பல ஊடகங்களும் விலைபோயின. ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தச் சம்பவத்தை, தொழிலாளர்களின் சதியால் நடந்தது என்றெல்லாம்கூட எழுதின.

*இந்தியாவில் வழக்கு விசாரணை நடக்க ஆரம்பித்த பின், முதலில் இழப்பீடாக 300 கோடி டாலர்களைக் கேட்ட இந்திய அரசு, ஒருகட்டத்தில் அமெரிக்க நெருக்கடிக்கு உடன்பட்டு, 47 கோடி டாலர்களுக்குச் சம்மதித்தது. இதையும் பெற மக்கள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதிக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்திலேயே ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தைக் கையகப்படுத்தியது ‘டௌ’ நிறுவனம். உலகின் மோசமான தொழிற்சாலைப் பேரழிவான இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்தது நம்முடைய நீதிமன்றம். குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை: 2 ஆண்டு சிறை, ரூ. 1.01 லட்சம் அபராதம். இத்தனை அனுபவங்களுக்குப் பின்னரும், சர்வதேச நிர்ப்பந்தங்களால் மக்கள் பாதிப்படையும் வகையில் அணுசக்தி இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியது மன்மோகன் சிங் அரசு.

*‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தின் சார்பிலும் ‘டௌ’ நிறுவனம் சார்பிலும் செயல்பட இங்கு பலருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் ‘யூனியன் கார்பைடு’ சார்பில் ஆஜரானவர் நானி பால்கிவாலா. ‘டைம்’ இதழுக்கு 1984-ல் அளித்த பேட்டியின்போது, “இந்தியாவில், ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால், அடுத்த நூற்றாண்டில்தான் தீர்ப்பு வரும்” என்று சொன்னார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் மனு சிங்வி, பாஜகவின் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருவருமே ‘டௌ’ நிறுவனத்துக்குச் சட்ட ஆலோசனை வழங்கியவர்கள். 2008-ல் பாஜக ‘டௌ’ நிறுவனத்திடமிருந்து நன்கொடையைப் பெற்றது.

*போபால் மக்கள் நீண்ட காலமாகப் போராடினார்கள், வாரன் ஆண்டர்சனைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று. பிழைப்புக்காக ஸ்வீடனிலிருந்து அமெரிக் காவுக்கு வந்த ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன். ‘யூனியன் கார்பைடு’ நிறுவனத்தில் ஒரு விற்பனையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசகார ரசாயனத் தொழிற்சாலைகளால் விளையும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று ஏகாதிபத்திய நாடுகள் யோசித்த நாட்களில், அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாண்டி ‘யூனியன் கார்பைடு’ நிறுவனச் செயல்பாடுகளை மூன்றாம் உலக நாடுகளான லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஆசிய நாடுகளுக்குக் கொண்டுசென்றவர். ஏகாதிபத்திய சேவையாலேயே பின்னாளில் அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர். கடந்த செப்.29 அன்று இறந்தார்.

*பேரழிவின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் தவிக்கும் போபால் மக்கள் நவீன சிகிச்சைக்கும் தொடர் சிகிச்சைக்கும்கூட போதிய உதவியில்லாமல் பரிதவிக்கிறார்கள். அந்தக் கழிவுகளை எப்படி அகற்றுவது என்று நம் அரசுக்கு இன்னும் தெரியவில்லை. இதற்கென ரூ. 25 கோடி நிதி ஒதுக்கி ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஜி.ஐ.எஸ்.’ நிறுவனத்திடம் கழிவகற்றும் பணியை ஒப்படைத்தது. ஆனால், கழிவுகளை அகற்றுவதில் உள்ள சவால்கள், விபத்து அபாயம், அதற்குப் பொறுப்பேற்கும் சுமை உள்ளிட்ட விஷயங்களை யோசித்த அந்த நிறுவனமும் பின்வாங்கிவிட்டது. கழிவு நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கி மனிதர்களை முடக்கிக்கொண்டிருக்கிறது. துரோங்கள் தொடர்கின்றன. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...