Friday, December 5, 2014

சமையல் காஸ் மானிய விண்ணப்பம்: படிக்காதவர்கள் அல்லல்படும் அவலம்



சமையல் காஸ் நேரடி மானியத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை, பூர்த்தி செய்ய தெரியாமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.மத்திய அரசு, சமையல் காஸ் சிலிண்டருக்கு, வழங்கி வரும் மானிய தொகையை, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, கடந்த 2013ல் துவக்கியது.

காங்., ஆளும் மாநிலங்கள்:

இத்திட்டத்திற்கு, தமிழகம் உள்ளிட்ட, பல மாநில அரசுகள், கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்., ஆளும் மாநிலங்களில் மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்தியில், புதிதாக அமைந்த பா.ஜ., அரசு, நேரடி மானிய திட்டத்தில், சில மாற்றங்கள் செய்து, கடந்த மாதம் 15ம் தேதி, 11 மாநிலங்களில் உள்ள, 54 மாவட்டங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அடுத்த மாதம் முதல், நாடு முழுவதும், காஸ் சிலிண்டர் நேரடி மானியம் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள காஸ் ஏஜென்சிகளில், நேரடி மானியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட்டு வருகின்றன.

* வாடிக்கையாளர், தங்களின் காஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்.


* 'ஆதார்' அட்டை இருந்தால், ஒரு விண்ணப்பம்; 'ஆதார்' அட்டை இல்லாதவர்களுக்கு, மற்றொரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

'ஆதார்' அட்டை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியது:


* 'படிவம் - 1', 'படிவம் - 2' என, இரண்டு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


* 'படிவம் - 1'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகலுடன், வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கியில் வழங்க வேண்டும்.


* பின், 'படிவம் -2'ஐ, பூர்த்தி செய்து, 'ஆதார்' அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், காஸ் ஏஜென்சியிடம் வழங்க வேண்டும்.


* வாடிக்கையாளர் முகவரியில் மாற்றம் இருந்தால், அதற்கான சான்றை அளிக்க வேண்டும்.

'ஆதார்' அட்டை இல்லதாவர்கள் பின்பற்ற வேண்டியவை:

'படிவம் - 3'ஐ, பூர்த்தி செய்து, காஸ் ரசீது நகலுடன், வங்கியில் வழங்க வேண்டும் அல்லது 'படிவம் - 4'ஐ, பூர்த்தி செய்து, வங்கிக் கணக்கு எண் நகல், காஸ் ரசீது நகல் ஆகியவற்றை, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்க வேண்டும். அவ்வாறு, காஸ் ஏஜென்சிகளிடம் வழங்கப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், வரும் ஜனவரி முதல், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், காஸ் மானியம் வரவு வைக்கப்படும் என, தெரிகிறது.


763 ரூபாய்:


இதையடுத்து,பொது மக்கள், சந்தை விலையில், அதாவது, இம்மாத விலையான, 763 ரூபாய் கொடுத்து, சமையல் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில், மானிய தொகை வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், சமை யல் காஸ் சிலிண்டர், நேரடி மானியம் வழங்கும் திட்டத்திற்கு, பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மொத்த பணத்தையும் கொடுத்து, காஸ் வாங்க முடியாது. வங்கிக்கு சென்று பணம் எடுக்க, பல கட்டுப்பாடுகள் உள்ளதால், தற்போது உள்ளபடியே, குறைந்த விலையில் காஸ் வழங்க வேண்டும்.


மகேஷ்வரி, சேப்பாக்கம்

விண்ணப்பங்கள், ஆங்கிலத்தில் உள்ளதால், படிக்காதவர்களால், அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. நேரடி மானிய திட்டத்தால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. எனவே இந்த திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.

முனியம்மாள், ஐஸ் அவுஸ்

விலைவாசி உயர்ந்துள்ளதால், அதிக விலை கொடுத்து, காஸ் வாங்க முடியாது. நேரடி மானிய திட்டத்தின் மூலம், வங்கியில், எப்போது பணம் போடுவர் என, தெரியாது. இதனால், பழைய முறையே தொடர வேண்டும்.

சாந்தா, திருவல்லிக்கேணி

- நமது நிருபர் -

DAILY THANTHI NEWS

தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள் பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடக்கம் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 19-ல் தொடங்குகிறது

exam time table for plus two and plus one

பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 100 மையங்கள் அமைக்கப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 125 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளும் எழுதுகிறார்கள்.

இந்த தேர்வுகளுக்கான அதிகாரபூர்வ கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.

இதன்படி, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 5-ந்தேதி தொடங்கி, மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 19-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது.

பிளஸ்-2அட்டவணை

பிளஸ்-2 தேர்வுக்கான அட்டவணை விவரம் வருமாறு:-

2015-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

6-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

9-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

10-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

13-ந்தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்புத்தமிழ்.

16-ந்தேதி- வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

18-ந்தேதி- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.

20-ந்தேதி- அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்.

23-ந்தேதி- வேதியியல், அக்கவுண்டன்சி.

27-ந்தேதி- இயற்பியல், பொருளாதாரம்.

31-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.

எஸ்.எஸ்.எல்.சி. அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-

மார்ச் 19-ந்தேதி- தமிழ் முதல் தாள்.

24-ந்தேதி- தமிழ் இரண்டாம் தாள்.

25-ந்தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

26-ந்தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்.

30-ந்தேதி- கணிதம்.

ஏப்ரல் 6-ந்தேதி- அறிவியல்.

10-ந்தேதி- சமூக அறிவியல்.

தேர்வு தொடங்கும் நேரம்

பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு முடிவடையும்.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் மாணவ- மாணவிகளை புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு விடைத்தாளில் இடம்பெறுகிறது. அது மட்டுமில்லாமல், மாணவ- மாணவிகளின் பதிவு எண்களும் அந்த விடைத்தாளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்டார் மந்திரி; வேறு என்ன வேண்டும்?

21–ம் நூற்றாண்டில் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லோருமே அவரவர் வழிபடும் தெய்வங்கள், அவரவர் பின்பற்றும் மதங்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார்களேதவிர, பெரும்பாலான மக்களுக்கு மதங்கள் மீது வெறி இல்லை. மதத்தலைவர்கள்கூட அடுத்த மதங்களின் தலைவர்களோடு நட்புபாராட்டும் நல்ல பண்பு வளர்ந்துவருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான், சமீபத்தில் கிறிஸ்தவ மதத்தலைவரான போப் ஆண்டவர், துருக்கி நாட்டுக்கு சென்றதும், அங்கே இஸ்தான்புல் நகரில் உள்ள ஹாகியா சோபியா மசூதிக்கு சென்று வழிபாட்டில் கலந்துகொண்டதும், நல்ல மதநல்லிணக்கத்துக்கு அச்சாரமாக விளங்குகிறது. மதங்களுக்கிடையே நல்ல பேச்சுவார்த்தைகள் இருப்பதன் மூலம், நல்ல உறவுகளை வளர்த்து, தீவிரவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று கூறியிருக்கிறார். அதேபோல இந்தியாவிலும், பிரதமர் நரேந்திரமோடி, இந்துமத கோட்பாடுகளில் அதிக நம்பிக்கை உள்ளவர் என்றாலும், அடுத்தமத தலைவர்களுக்கு உரியமரியாதையை கொடுக்க தவறியதில்லை.


இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் பா.ஜ.க. மந்திரி சபையில் 21 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அதில், நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் சேர்க்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் ஒரு பிற்பட்டவகுப்பில் பிறந்த இந்த 47 வயது பெண் சாமியார், ஏற்கனவே மந்திரிசபையில் இருக்கும் உமாபாரதி போல, ஒரு துறவிதான். காவி உடைதான் அணிந்திருப்பார். பத்தேப்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்முறை எம்.பி., ஒரு ஆசிரமத்தில் சேர்ந்துள்ள நிரஞ்சன் ஜோதி சாமியார், ராமர் கோவில் பற்றி சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். டெல்லியில் சட்டசபை தேர்தல் வருவதையொட்டி, பா.ஜ.க. சார்பில் ஒரு பேரணி நடந்தது. இந்த பேரணியில், நிரஞ்சன் ஜோதி சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ராமரின் மக்களே. நாட்டை விற்றுவிட்ட சிலர் நாட்டை திவாலாக்கிவிட்டனர். அத்தகையவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடமாட்டார்கள் என்று சொன்னதெல்லாம் சரி, அதன்பிறகு அவர் பேசிய பேச்சுக்கள்தான், நாடு முழுவதிலும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது. முஸ்லீம்கள் மசூதிக்குசென்று வழிபடுகிறார்கள். நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். நாங்கள் அதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால், ராமர் பற்றி பேசினால் மட்டும் அதை மதவாதம் என்று சொல்கிறார்கள். நான் என்னை மதவாதி என்று சொல்பவர்களிடம் கேட்கிறேன், நீங்கள் இப்படி சொல்கிறீர்களே அதைவிட என்ன மதவாதம் இருக்கிறது?, இன்னும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், இந்த நாட்டில் கிறிஸ்தவர்களாக இருக்கட்டும், முஸ்லீம்களாக இருக்கட்டும், அவர்களெல்லாம் ராமரின் குழந்தைகள்தான். இதை நம்பமறுப்பவர்கள், இந்த நாட்டையே நம்பமாட்டார்கள். நான் டெல்லி மக்களை கேட்கிறேன், ராமரின் குழந்தைகள் ஆளும் அரசு வேண்டுமென்று நினைக்கிறீர்களா?, அல்லது ராமரை நம்பாத முறைகேடாக பிறந்தவர்கள் ஆளும் அரசு வேண்டுமா? என்று கேட்டார். இது, நாடு முழுவதிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தனது கோபத்தின் வெளிப்பாடாக, இதுபோன்ற பேச்சுக்களையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது. நாட்டுக்கு புது விலாசத்தை கொடுக்கவேண்டாம் என்று கண்டன கணைகளை வீசிவிட்டு, மத்திய மந்திரி நிரஞ்சன் ஜோதி சாமியாரை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறிவிட்டார். பெண் சாமியார் நிரஞ்சன் ஜோதியும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். ஆனாலும், எதிர்க்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ளாமல், மந்திரியை ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என்று அவையில் அமளி ஏற்படுத்தி நடத்தவிடவில்லை. பிரதமரும், மந்திரி மன்னிப்பு கேட்டுவிட்டார், அதை ஏற்றுக்கொண்டு, அவையை நடத்துவோம் என்று கேட்டார். நிச்சயமாக பெண் மந்திரி பேசியது தவறுதான். ஆனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலுமே அவர், ‘மன்னிப்பு கேட்டபிறகு, வேறு என்ன வேண்டும்?’. பொதுவாக, திருவள்ளுவர் சொன்னதுபோல, ‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப்பட்டு’ என்பது அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்றாகும்.

Thursday, December 4, 2014

SINGAPORE: Three hundred people have been caught for consuming alcohol during prohibited timings

SINGAPORE: Three hundred people have been caught for consuming alcohol during prohibited timings since temporary measures to maintain public order in Little India came into effect on Apr 1 this year, police said on Thursday (Dec 4).
Four establishments were also found to have committed liquor licensing breaches after the Public Order (Additional Temporary Measures) Act kicked in. 
"Police have also worked with the relevant government agencies to install 43 cameras and 42 'lighting sites' to further enhance the security of Little India," Rochor NPC Commanding Officer Ho See Ying said to reporters after a site visit at Little India.
These lighting sites are mostly congregation areas, back alleys and fields. More than 100 lamp posts have been installed at the sites. Temporary spotlights powered by generators, which were installed after the Little India riot, will be removed before the end of the year.
Sheltered bus terminals have also been built at Tekka Lane and Hampshire Road. These allow workers to board and alight from buses that ferry them from Little India to their dormitories.
The measures had been introduced in the wake of the Dec 8, 2013 Little India riot. The incident saw approximately 400 people running riot after a fatal accident involving a bus and a foreign worker at Racecourse Road. A Committee of Inquiry had found that alcohol and intoxication had played a factor in the night's events.

CLARIFICATION REGARDING EQUIVALENCE OF NATIONAL INSTITUTE OF OPENING SCHOOLING FOR ADMISSION IN MBBS COURSE BY MEDICAL COUNCIL OF INDIA


இனி, அனைவருக்கும் ஓய்வூதியம்!

ந்திய அரசின் அனைவருக்கும் ஓய்வூதிய திட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கு இல்லை. ஆனால், இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகளில் அனைத்திலும்  நடைமுறையில் உள்ளது.

இந்த NPS (National Pension System) திட்டத்தில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். முதலில் ரூ.600 செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் ரூ.100 செலுத்த வேண்டும். இந்திய அரசு உங்கள் கணக்கில் வருடம்தோறும் ரூ.1000 செலுத்தும் (முதல் நான்கு ஆண்டுகள் வரை).

உங்களுக்கு 60 வயது ஆகும் பொழுது உங்கள் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம். மீதி தொகையிலிருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும். இதற்கு 8 முதல் 12% வரையிலான கூட்டுவட்டியும் உண்டு.

அதுமட்டுமல்லாமல், NRI-க்கள் மற்றும் PPF சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். PRAN-Permanent Retirement Account Number உள்ளவர்கள், கீழ்நிலை / ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஓய்வூதியம் பெற இந்தத்  திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும்.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள் என அனைவரும் இதில் முகவர்களாக சேர்ந்தும் வருமானம் ஈட்டலாம்.

மேலும் விவரங்களை http://pfrda.org.in/index1.cshtml?lsid=86 எனும் இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

-இந்துலேகா.சி

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...