Friday, January 2, 2015

HC DIRECTS BANK TO GIVE LOAN TO STUDENT

அரபு நாடுகளில் எல்.ஐ.சி., கிரெடிட் கார்டு அறிமுகம்

வெளிநாடுகளில் முதன் முறையாக எல்.ஐ.சி., நிறுவனம் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து எல்.ஐ.சி.,இண்டர்நேஷனல் தலைமைசெயல்அதிகாரி ராஜேஸ் கந்த்வால் கூறியதாவது:
இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி ., நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் எல்.ஐ.சி.. இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனது எல்லையை விரிவுபடுத்தியது. பக்ரைன் நாட்டில் முதன் முறையாக தனது கிளையை துவக்கியது. தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இந்நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு சிறந்த நம்பகத்தன்மை கொண்ட நிறுவனமாக தேர்வு பெற்றது. இதனையடுத்து துபாயில் இயங்கி வரும் பர்ஸ்ட் கல்ப் ஆப் பேங்க் மூலம் ஜீவன் நிவேஷ் பாலிஸியை 8 வாரங்களில் 100 மில்லியன்டாலர் அளவிற்கு பாலிசியை விற்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் விதமாக கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு்களை எல்.ஐ.சி.,நிறுவனம் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

தை அமாவாசைக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

தை அமாவாசையையொட்டி, காசி, கயா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வரும் வகையில், சிறப்பு சுற்றுலா ரயிலை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியதாவது:வரும் 17ம் தேதி, மதுரையில் புறப்படும் சுற்றுலா ரயில், சென்னை சென்ட்ரல் வழியாக, காசி, கயா, அலகாபாத், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு சென்று, 27ம் தேதி திரும்புகிறது. தை அமாவாசை தினமான, 20ம் தேதி, கயாவில், மூத்தோர் திதி கொடுக்க வசதி செய்யப்படும்.சுற்றுலா செல்ல, 10,010 ரூபாய்; 21,670 ரூபாய்; 29,150 ரூபாய் என, மூன்று வித கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஓட்டலில் தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி, உணவு, சுற்றுலா தகவலர் ஆகியவை கட்டணத்திற்குள் அடங்கும். தகவல்களுக்கு, 98409 02916 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.நமது நிருபர்

'ஆன் - லைன் விசா'அதிகரிக்கிறது விண்ணப்பம்

புதுடில்லி:இந்திய நகரங்களுக்கு, சுற்றுலா வரும் வெளிநாட்டினருக்காக, 'விசா ஆன் அரைவல்' முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், இணையம் மூலம், அந்த விசா கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 22 ஆயிரம் விசாக்கள், இணையம் மூலம் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி முதல் நவம்பர் வரை, 25 ஆயிரம் ஆன் அரைவல் விசாக்கள் வழங்கப்பட்டன. நவ., 27 முதல், ஆன் - லைன் மூலம், விசா ஆன் அரைவலுக்கு விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அனுமதித்தது.அந்த தேதியிலிருந்து, டிச., 31 வரை, 22 ஆயிரம் விசாக்கள், ஆன் - லைன் முறையில் வழங்கப்பட்டு உள்ளன.பொழுதுபோக்கு, மருத்துவ சிகிச்சை, வர்த்தகம் போன்ற பல காரணங்களுக்காக, அதிகபட்சம் 30 நாட்கள், இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல, ஆன் - லைன் விசா கோரிவிண்ணப்பிக்கலாம்.

சென்னையிலிருந்து சென்ற முகமதுகான், சிங்கப்பூரில் 8 மணி நேரம் மட்டும் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோவை வந்தார்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு ‘சில்க் ஏர்லைன்ஸ்’ விமானம் கோவை வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த முகமதுகான் (வயது 41) என்பவரின் சூட்கேசில் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி நான்கும், 100 கிராம் கட்டிகள் 10-தும் ஆக மொத்தம் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 26 லட்சம் ஆகும்.

என்ஜினீயரிங் பட்டதாரி

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முகமதுகான் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு 5 முறை சென்று சென்னை வழியாக வந்துள்ளார். அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தாரா? என்று விசாரணை நடக்கிறது.

தற்போது சென்னையிலிருந்து சென்ற முகமதுகான், சிங்கப்பூரில் 8 மணி நேரம் மட்டும் தங்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோவை வந்தார். எனவே அவர் தங்கம் கடத்தி வருவதற்காகவே சிங்கப்பூருக்கு சென்றது தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோவை சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் குமரேஷ் தெரிவித்தார்.

காத்திருக்கும் 4ஜி சூறாவளி



2 ஜியை விட 3 ஜியைப் பெரிய விஷயமாகக் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்குள் 4 ஜி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் ஆரம்பமாகிவிட்டன. அநேகமாக எல்லா ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுமே 4 ஜி போன்களுக்கான திட்டத்தை வைத்திருக்கின்றன. மைக்ரோசாப்டின் லூமியா 638 போன் 4 ஜி வசதி கொண்டதாக அறிமுகமாகி உள்ளது.

ஹுவேய் சார்பிலும் 4 ஜி போன்கள் அறிமுகமாக உள்ளன. செல்போன் சேவை நிறுவனங்களும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் கன்சல்டன்சி நிறுவனமான பிடபிள்யுசி ( PwC) அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒன்னரைக் கோடி4 ஜி சந்தாதாரர்கள் இருப்பார்கள் எனக் கணித்துள்ளது. மேலும் இந்தியாவில் வை-பை மையங்களும் அதிகரிக்கும் என இதன் கணிப்பு தெரிவிக்கிறது. இதன் விளைவாகப் போட்டி அதிகரித்து விலை குறைப்பும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 7–ந்தேதி வேலை நிறுத்தம்



நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், 7–ந்தேதி ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

ஸ்டிரைக்

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும், வருகிற 7–ந்தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுபற்றி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் வங்கிகளின் ஒட்டுமொத்த லாபத்துக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்படி, 23 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வருகிறோம்.

ஆனால், வங்கிகளின் நிர்வாக அமைப்பாள இந்திய வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முன்வருகிறது.

இந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும். அதை வலியுறுத்தி, 7–ந்தேதி நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

7–ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு பிறகும், ஊதிய உயர்வு அளிக்கப்படாவிட்டால், 21–ந்தேதி முதல் 24–ந்தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்பிறகு, மார்ச் 16–ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் திட்டமிட்டுள்ளது.

NEWS TODAY 25.05.2026