Friday, January 2, 2015

அரபு நாடுகளில் எல்.ஐ.சி., கிரெடிட் கார்டு அறிமுகம்

வெளிநாடுகளில் முதன் முறையாக எல்.ஐ.சி., நிறுவனம் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து எல்.ஐ.சி.,இண்டர்நேஷனல் தலைமைசெயல்அதிகாரி ராஜேஸ் கந்த்வால் கூறியதாவது:
இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி ., நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் எல்.ஐ.சி.. இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனது எல்லையை விரிவுபடுத்தியது. பக்ரைன் நாட்டில் முதன் முறையாக தனது கிளையை துவக்கியது. தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இந்நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு சிறந்த நம்பகத்தன்மை கொண்ட நிறுவனமாக தேர்வு பெற்றது. இதனையடுத்து துபாயில் இயங்கி வரும் பர்ஸ்ட் கல்ப் ஆப் பேங்க் மூலம் ஜீவன் நிவேஷ் பாலிஸியை 8 வாரங்களில் 100 மில்லியன்டாலர் அளவிற்கு பாலிசியை விற்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியை அளிக்கும் விதமாக கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு்களை எல்.ஐ.சி.,நிறுவனம் கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...