Sunday, January 11, 2015

வாங்க பொங்கல் வைக்கலாம்!

தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் தினம் பிரதானமானது. அதுவும் பானை வைத்து கொண்டாடும் பொங்கல் மட்டுமில்லாமல் பலவகையான பொங்கலும் அந்த தினங்களில் உண்டு என்கிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி லட்சுமி மணிகண்டன்.
 "மிக்ஸி, கிரைண்டர், ஓவன், கியாஸ் அடுப்பு  என்று அதிநவீன அடுப்பறை சாதனங்கள் பல தோன்றி விறகில்லா சமையலை வினாடி நேரத்தில் செய்து முடிக்கும் ‘ஈஸி’ கிச்சன் யுகத்தில்தான் நாம் இருக்கிறோம்.  பண்டிகை பட்சணங்கள், பலகாரங்களைக்கூட மெனக்கெட்டு வீட்டில் செய்வதில்லை யாரும். குளுகுளு கண்ணாடி ஷோரூம் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள இனிப்புகளை, கைவீசிப்போய் கணக்குப் பார்க்காமல் காசு கொடுத்து பை நிரப்பி கொண்டுவந்து ருசித்து கொண்டாடுகிறோம். தை முதல் நாள் பொங்கலைக்கூட குக்கர் விசில் குலவையிட கொண்டாடும் காலம் இது.
அந்தக்காலத்தில் அப்படியில்லை.... தை மாதம்தான் விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். முக்கிய அறுவடை காலமும் அதுதான். பருவமழை தவறாமல் பெய்த காலத்தில், ஆடிப்பட்ட விவசாயம் அமோக விளைச்சலை கொடுத்தது. தினை, சாமை, வரகு, குதிரைவாலி என்று சிறுதானிய வெள்ளாமை தை மாத அறுவடையில் வீடு வந்து சேர்ந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு தோதாக மூன்று நாள் பொங்கல் பண்டிகையை முகம் மலர்ந்து கொண்டாடினார்கள்.

முதல் நாள் வாசல் பொங்கல்:  மெழுகிக்கோலமிட்ட வாசலில் அடுப்புக்கல் கூட்டி, தோகை சரசரக்கும் தோரணக்கரும்பு ஊன்றி, மஞ்சள் கொத்து கோர்த்து பானைகளில் தொங்கவிட்டு, பூசுற்றி பொட்டுவைத்து  பகலவனுக்கு ஒரு பச்சரிசி பொங்கல், குலசாமிக்கு ஒரு தினை அரிசி பொங்கல், மூத்தகுடியாம் முன்னோர் நினைவாக வரகரிசி பொங்கல் என்று மூன்று பொங்கல் வைத்து முதல் நாளை கொண்டாடுவார்.

 இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்:  தொழுவம் மெழுகி, கால்நடைகள் கழுவி, கழுத்து மணி மாட்டி, கொம்புச்சாயம் பூசி, வண்ணப்பொடிகள் தூவி, சந்தனம் தெளித்து, குங்குமம் இட்டு, மாட்டுக்கு ஒரு பொங்கல், பட்டிகாக்கும் நாய்க்கும் ஒரு பொங்கல், ஆட்டுக்கு ஒரு பொங்கல், களத்து மேட்டு காவல்
தெய்வத்துக்கும் ஒரு பொங்கல் என்று பல பொங்கல் வைத்து, மஞ்சு விரட்டி மாடு பிடித்து படையலிட்டு பழமும் சர்க்கரை பொங்கலும் கலந்து ஆவினுக்கு ஊட்டி கொண்டாடும் பொங்கல் அது..

மூன்றாம் நாள் காணும் பொங்கல்: வீட்டில் செய்த பலகாரங்கள் கரும்புடன் கனிகள் பல கூடையில் நிரப்பி, புத்தாடை பளபளக்க, பூவாசம் கமகமக்க, கொம்பு, சேகண்டி, மத்தளம், உருமை, வாத்தியங்கள் முழங்கும் சத்தம் முன்செல்ல... இளசுகள் சேர்ந்து ஓடைக்கரை மரநிழலில் கூடி, அரளி, ஆவாரை, சரக்கொன்றை பூக்களைப்பறித்து வீசி விளையாடி, பேசி உறவாடும் காணும் பொங்கல் காளையரும் கன்னியரும் கண்ணால் பேசி காதலை பரிமாறும் பொங்கல். இப்படியாக, நடக்கும் பொங்கல் பலகாரம் படைக்க, அன்றைய மக்கள் பயன்படுத்தியது ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை மண்பானை, கலயம், சுட்ட அடுப்பு, ஆரோக்கியம் கெடுக்காத சிறுதானியங்கள்.

காலம் அதை மறந்து போனாலும், எங்களைப் போன்ற சிலர் இன்னும்  அதை கடை பிடித்து கொண்டாடி வருகிறோம்.

வாருங்கள் எங்கள் வீட்டிற்கு... பணியாரம், கொழுக்கட்டை, கைமுறுக்கு, கம்புசாதம், கைகுத்தல் அரிசி சோறு, கீரைகுழம்பு, கொள்ளுரசம், வாழைதண்டு பொரியல், ராகிதோசை என்று ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, விறகு அடுப்பு பயன்படுத்தி சமைக்கிறோம்... வெண்பொங்கல், தினை, வரகு, சாமை, கைகுத்தல் அரிசி பொங்கல் என்று தினம் ஒரு பொங்கல் சமைக்கிறோம்... பாரம்பரியம் காக்கிறோம்" என்கிறார்.

- ஜி.பழனிச்சாமி

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?


ணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள்  அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.
சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதாவது, ''சிக்கன் மட்டுமல்ல... இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.
ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்!

-ஆறுச்சாமி

ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு!



சிறு குழந்தையிலிருந்தே தேசிய கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும் ஞாபகம் வருவது "கொடி காத்த குமரன்" என்ற பெயரை தான்!

ஆம், சாகும் தருவாயிலும் நமது தேசிய கொடியை தரையில் விழாமல் தாங்கி பிடித்தவர் அல்லவா! இன்று அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர் 4, 1904 அன்று பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.



1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுபாட்டுகளை எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.

ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. ஆனாலும்
உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது. படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில் அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.

- ஜி.கே.தினேஷ் ( மாணவப் பத்திரிகையாளர்)

பெண்களின் கருமுட்டையைச் சேமிக்க புதிய சலுகைகள்: கார்ப்பரேட் நிறுவனங்கள் தருவது வரமா சாபமா?...by இந்துஜா ரகுநாதன்

Return to frontpage

தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் கரு முட்டையை உறைய வைக்கும் மருத்துவ செலவை முற்றிலும் தாமே ஏற்றுக்கொள்வோம் என்ற சலுகையை பிரபல கணிகனி மற்றும் இணையதள நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் ஃபேஸ்புக் கடந்த மாதம் அறிவிததுள்ளன. இச்செய்தி உலகம் முழுவதும் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணியின்மீதுள்ள ஆர்வத்தினாலும் வேலைச்சுமையாளும் இளம்பெண்கள் தாய்மையை தவறவிடும் அவலம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு என்று இந்த நிறுவனங்கள் பெருமையோடு கூறிவருகின்றன. உண்மையில் இச்சலுகை பெண்களுக்கு வரமா சாபமா?

கருமுட்டையை உறைய வைப்பதற்காக சுமார் 20,000 டாலர்கள் வரை இந்நிறுவனங்கள் செலவிடத் தயாராக உள்ளன. இவ்வளவு செலவு செய்யும் இந்நிறுவனங்கள் அளிக்கக் கூடிய இச்சலுகை அவர்களது லாபத்திற்காகத்தான் என்பது ஒருவகையில் உண்மையென்றாலும் பணியின் உச்சத்தை அடைய விரும்பும் பல பெண்களுக்கு வரப் பிரசாதம் என்றும் கூறப்படுகிறது.

கருமுட்டை சேமிப்பு / வங்கி என்றால் என்ன?

பெண்களுக்கு கரு உருவாக முக்கிய பங்கு வகிக்க் கூடியவை முட்டைகள்தான். இது செழுமையாக இருக்கும்போது கர்ப்பம் உண்டாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண்ணின் வயது கூடக் கூட முட்டையின் செழுமை குறையத் தொடங்குகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் பெண் கருத்தரிப்பது மிகவும் கடினம். பொதுவாக 20-30 வயது வரை கருமுட்டை செழுமையுடன் இருப்பதால் அவ்வயது பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைந்துவிடுகிறார்கள்.

பெண்கள் தங்களின் மேல்படிப்பு, பணி, திருமணத்தில் தாமதம் பேன்ற காரணங்களால் கர்ப்பம் அடையும் சூழ்நிலையில் இல்லாதவர்கள், தகுந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி தன் செழுமையான கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள மையங்களில் உறைய வைத்து சேமித்து வைக்கமுடியும். சுமார் 10 ஆண்டுகள் வரை இந்த கருமுட்டைகளை சேமித்துவைத்து தேவையான போது அப்பெண்ணின் கருப்பையில் மீண்டும் செலுத்தி கருவுறச் செய்யமுடியும்.

வரமா? சாபமா?

உலகெங்கும் நடைபெற்ற ஆய்வுகளின் படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியைத் தொடங்கும் ஆண், பெண் இருபாலாரும் ஒரே ஊதிய விகிதத்தில்தான் பணியமர்த்தப் படுகின்றனர். அதாவது 18 வயதில் பணியைத் தொடங்கும் இருசாராரும் ஒரே சம்பளத்தில் பயணித்தாலும், பெண்களின் வயது ஏற ஏற நிறைய தடைக்கற்கள் ஏற்படுகின்றன.

திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றின்போது எடுக்கும் ஓய்வினால் அவர்களுடைய பணி அனுபவம் தடைப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பும்போது பதவிஉயர்வு பறிக்கப்பட்டுவிடுகிறது. சம்பளமும் பழைய இடத்திற்கு போய்விடுகிறது. 40 வயதில் பணிபுரியும் பெண்களின் வருமானம், அவருடன் பணியில் சேர்ந்த ஆணின் மொத்த வருமானத்தில் 25% இழப்பு ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில் ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி அந்தஸ்த்தை ஒரு பெண் அடைவது வெறும் கனவுதான். இதனால் முப்பதுகளில் உள்ள ஒரு பெண் பதவி உயர்வை முன்னிட்டு தனது பெருமைக்குரிய குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுகிறாள். இதன் காரணமாகவே, கார்ப்பரேட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள கருமுட்டை சேமிப்பு சலுகை திட்டம் வரம்தான் என்கின்றனர் பலர். தனது கரு முட்டையைச் சேமித்து வைத்துக்கொண்டால் போதும் அப்பெண் தனக்குத் தேவையானபோது தாய்மை அந்தஸ்தைப் பெறமுடியும். மேலும் இதை வரவேற்கும் பெண்கள் குடும்பம், அலுவலகப்பணி என இரு குதிரைகளிலும் பயணித்து வெற்றி இலக்கைத் தட்டிச் செல்லலாம் என்கிறார்கள் அவர்கள்.

சர்ச்சைகள்

ஒரு நிறுவனம் இது போன்ற சலுகையை அறிவிக்கும்போது அது மறைமுகமாக பெண் ஊழியர்களை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதாக எதிர்ப்பு வலுத்துவருகிறது. கருமுட்டை சேமிப்பு செலவை நிறுவனமே ஏற்பதால் அவர்கள் கூறும் பொழுதில் தான் குழந்தை பெற்றுக்கொள்ள அழுத்தங்கள் தர அதிக வாய்ப்புள்ளது என்பது இவர்கள் வாதம்.

ஒரு பெண் பணியில் சேரும்போதே இத்தனை ஆண்டுகள் திருமணம் கூடாது, குழந்தைபேறும் கூடாது என்று பல நிறுவன மனிதவள மேம்பாடு அதிகாரிகள் கறாராக காண்டிராக்டில் கையெழுத்து வாங்கி கொண்டுதான் பணிநியமன உத்தரவைத் தருகின்றனர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு பெண் தான் சுயத்தோடு தன் முடிவை எடுக்க இது தடைக்கல்லாக இருக்கும் என்ற அச்ச உணர்வையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மேலும் எந்த வயதில் குழந்தை பெற்றுகொண்டாலும் அதற்குரிய பணி ஓய்வும், இடைவேளியும் ஏற்படுவதை தவிர்க்கமுடியாத நிலையில் கர்ப்பத்தை தள்ளிபோடுவது நிறுவனங்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

குழந்தை வளர்ப்பில் சிக்கல்கள்

30 வயதுக்கு மேல் கருமுட்டையின் செழுமை குறையத் துவங்குவதால் கருவுருவது சற்று சிரமம் ஆகிவிடுவதாக பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றான. முட்டையின் செழுமையைக் காக்க அதை சேமித்துவிட்டு பின்னர் காலதாமதமாக அதை உபயோகப்படுத்துவதால் குழந்தைப்பேறு 100% உறுதி என்று சொல்லிவிட முடியாது.

30 வயதை கடக்கும் பெண்கள் பலருக்கு, மன அழுத்த்தினால ஹார்மோன் கோளாறுகள், கருப்பையில் கட்டி, வேறு சில எதிர்பாராத உடல் ரீதியான பிரச்சனைகள் உண்டானால் செழுமையான கருமுட்டை இருந்தும் குழந்தைப்பேறு அடையும் வாய்ப்பு அரிதாகிவிடும் அபாயமும் உள்ளது. இதை தவிர உரிய வயதில் குழந்தை பெற்றுக கொள்வதால் உடலளவிலும், மனதளவிலும் ஒரு பெண்ணால் தன் குழந்தைக்கு தேவையான அரவணைப்பைத் தரமுடியும். காலம் கடந்து பெற்றுக் கொள்வதால் வயது காரணமாக குழந்தையைப் பெற உடல் வலிமையின்றி மிகவும் பலவீனமாகவே இருக்கும் நிலை உருவாகும்.

பெண்கள் எதிர்பார்க்கும் தேவையான சலுகைகள்

பெண்கள் கணினி, ஐடி நிறுவனங்களில் சாதனைகளை எட்டவேண்டும், உச்சத்தை அடையவேண்டும் என்று உண்மையிலேயே கார்ப்பரேட்டுகள் நினைக்குமானால் அவர்கள் பெண்களுக்குச் செய்துதர வேண்டிய சலுகைகள் ஏராளமாக உள்ளன. திருமணம், குழந்தைக்குப் பிறகு, பெண்களின் பணி இடைவேளையைத் தடுக்க ஒரு சகஜநிலையை அமல்படுத்த வேண்டும்.

குழந்தை பிறந்து 3 அல்லது 6 மாத ஓய்வுக்கு பின் திரும்பும் பெண்களுக்கு வேலைநேரத்தில் சலுகை, அலுவலத்துக்குள்ளேயே குழந்தை பராமரிப்பு மையம், தேவையான நேரம் குழந்தையைப் பார்க்க அனுமதி, எல்லாநாட்களிலும் இல்லையென்றாலும் சிலநாட்களில் வீட்டிலிருந்தே பணிகளை முடிக்கத்தக்க வாய்ப்புச்சூழல்கள், ஓய்வு நாளை கணக்கிடாத நல்ல சம்பளம் ஆகியவற்றை வழங்க முன்வரவேண்டும்.

எந்த ஒரு பெண்ணும் கொடுத்த பணியை சிறப்பாகவே முடித்துவிடும் வல்லமை படைத்தவள். இதைக் கருத்தில்கொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ள இச்சலுகையால் வீட்டில் குழப்பம், சண்டை, மன உளைச்சல், கவலை என்ற நிலையை உருவாக்கும். குடும்பம் என்ற கலாச்சாரக்கட்டுக்கோப்பு மேலும் மேலும் சிக்கலாகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com

No record as per MCI guidelines, forum fines doctor Rs 60,000 -

Kartik Kumar

The Indian Express


For not maintaining the medical record of a patient according to the Medical Council of India guidelines, a doctor has been ordered to pay a compensation of Rs 60,000 by the district consumer disputes redressal forum of Chandigarh.

Vanita Kumar, a resident of Sector 21, approached Dr Shanujeet Kaur, an expert of in-vitro fertilisation at Mangal Nursing Home in Sector 23, in December 2012 for treatment in view of her inability to conceive.

After examining her and putting her through many tests, Dr Kaur assured her that she was physically fit to undergo IVF treatment, and that she would conceive a child. On the doctor’s advice, she got admitted to a private hospital in Sector 9 to undergo IVF treatment.

During the process of picking the egg from the ovary, there was bleeding, but the patient was reassured that there was no need to worry. However, after self-research, the patient came to know that if at the time of picking up of egg bleeding starts, then it is assumed that the IVF operation had failed and the doctor could not do the embryo transfer.

But Dr Kaur nevertheless carried out an embryo transfer. After six days, the patient’s condition deteriorated, she started bleeding and had acute pain in her lower abdomen, but was told that she was having acute gastritis. She then got herself admitted to the Government Medical College and Hospital, Sector 32, where she was diagnosed with secondary septicaemia, caused on account of the IVF egg pick-up.

Following her discharge from the hospital, the complainant filed a case in the consumer court, alleging medical negligence and deficiency in service. Dr Kaur denied there was any medical negligence.

The forum also did not find any evidence of medical negligence during the IVF procedure, but said there was deficiency in service because Dr Kaur did not maintain the medical record of the patient according to the guidelines of the Medical Council of India.

Therefore, the doctor was directed to pay Rs 50,000 for deficiency in service and Rs 10,000 towards litigation cost within a period of 30 days at 12 per cent interest.

-

Get Accreditation by June 25, UGC Tells Colleges and University

VELLORE: The University Grants commission (UGC) has made it mandatory for all colleges and universities in the country to get accredited by June 25, 2015, said vice-chairman of UGC, Dr H Devaraj while delivering the valedictory address on Saturday at the two-day international conference on ‘Internationalisation of Higher Education and Quality Assurance’ hosted by VIT University.

Speaking on the sidelines of the conference, Devaraj said that UGC was planning to introduce an effective monitoring system for quality education in universities. He said that under the National Mission on Education through information and communication technology, e-pathshala for 27 undergraduate courses will be made available online and free of cost within the next three months.

UGC is also introducing online courses open for anyone, free of cost. A total of 100 Kaushal Kendras together with 102 community collegeswill be established for research in vocational education and as centres for excellence in skill development, he said.



He underlined the need for increasing the Gross Enrollment Ratio in higher education, currently around 19 per cent. UGC has focused on sustainable development of academic institutions for the last 60 years and it will now shift to improving the quality of education and human resources.



தொடங்கியது அறிவுலகக் கொண்டாட்டம்....700 அரங்குகள் | 5,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள்





NEWS TODAY 27.05.2026