Thursday, February 12, 2015

நீங்கள் அவமானப்படுத்தியது யாரை?

Return to frontpage

நல்ல முன்னுதாரணங்களைத் தேடி எடுத்துக்கொள்வது முன்னேற்றப் பாதையில் செல்வோருக்கான அடையாளங்களில் ஒன்று. சென்னை மாநகராட்சியின் ‘புதிய வரிவசூல்’ முறையை என்னவென்று சொல்வது?

சொத்துவரி செலுத்தத் தவறிய நட்சத்திர விடுதியின் முன்பு திருநங்கையரை ஆட விட்டு வரி வசூல் செய்த சென்னை மாநகராட்சியின் செயல் அவமானகரமானது மட்டுமல்ல; மனித உரிமை மீறலும்கூட. பெங்களூரு, தெற்கு டெல்லி போன்ற மாநகராட்சிகள்தான் சென்னை மாநகராட்சிக்கு இந்த விஷயத்தில் ‘முன்னோடிகள்’! பிஹாரின் பாட்னா மாநகராட்சி இன்னும் ஒரு படி கீழிறங்கி, பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிக்கவும் திருநங்கைகளை ரசக் குறைவான விதத்தில் பயன்படுத்தியது. வசூலிக்கும் வரியில் 4%-ஐ பாட்னா மாநகராட்சி திருநங்கைகளுக்கு வழங்கியது. மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த மாநகராட்சி இந்த நடைமுறையைக் கைவிட்டது. அதேபோல், பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கையை ‘நாகரிகமற்ற செயல்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித் திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

இதை வெறும் சென்னை மாநகராட்சியின் தவறாக மட்டும் பார்க்க முடியாது. நம் மனோபாவத்தின் குறியீடுகளில் ஒன்று இது. இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்தில் மூன்றாம் பாலினத் தோரை இழிவுபடுத்தியதும் இதே போன்ற செயல்தான். ‘ஐ’ படத்துக்கெதிராகத் திருநங்கைகள் போராடியும் அந்தப் படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. திருநங்கைகளின் எதிர்ப்பு அந்தத் திரைப்படத் தரப்பிடம் மட்டுமல்ல; பொதுமக்களிடமும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு குறியீடுதான்.

காலம்காலமாகச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் தான் மூன்றாம் பாலினத்தோர். ஒடுக்கப்பட்ட தரப்புகளிலேயே கடைநிலையில்தான் அவர்களை நாம் வைத்திருக்கிறோம். அவர்களில் சிலர் பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்கள்; குறிப்பாக, வலுக்கட்டாயமாகப் பிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்; இன்னும் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதற்கான சூத்ரதாரிகள் நாம்தான் என்பதை மறந்துவிட முடியாது. அவர்கள் கண்ணியமாக வாழ நாம் என்ன வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்? சக மனிதர்களாகக் கூட அவர்களை மதிப்பதில்லையே? கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர்களுடைய குரல் பொதுச் சமூகத்தின் காதுகளில் சற்றே விழ ஆரம்பித்திருக்கிறது. சில உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அவர்களுடைய வாழ்நிலையில் மிகச் சிறிய அளவிலாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தை மீண்டும் பின்னோக்கித் தள்ளுகின்றன இந்தச் சம்பவங்கள்.

ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்றால் ஒருவர் மேல் சமூகம் தொடர்ந்து சுமத்திவந்திருக்கும் அவமானத்தைக் கருவியாகக் கொண்டு இன்னொருவரை அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? மாநகராட்சியின் உயர் அதிகாரிகளுக்கு இந்தப் பிரக்ஞையெல்லாம் சற்றும் இல்லை என்பது அவர்கள் மற்ற விஷயங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான ஒரு சோறு பதம். உண்மையில், மாநகராட்சி அவமானப்படுத்தியது நட்சத்திர விடுதிக்காரர்களையோ திருநங்கைகளையோ அல்ல; தன்னையே அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு சமூகம் தனது சிறுபான்மையினரையும், விளிம்புநிலையி னரையும் நடத்தும் விதத்தைக் கொண்டுதான் அது எவ்வளவு நாகரிகம் அடைந்த சமூகம் என்று மதிப்பிடப்படும். எனில், நமது நாகரிகத்தின் முகமோ தற்போது கிழிந்து தொங்குகிறது!

பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வழித்தட எண்களில் மாற்றம்

பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக 20 வழித்தடங்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இப்போது 806 வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு சில வழித் தடங்களில் பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில பேருந்துகள் மாறுபட்ட வழித்தட எண்களிலும் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பிட்ட வழித் தடத்தில் ஒரே எண் கொண்ட பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிராட்வேயிலிருந்து வெவ்வேறு வழிகளில் தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் 102 என்ற எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது 21ஹெச் பேருந்து வழித்தடம் 102 எனவும், டி21 என்ற வழித்தடம் 102கே என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன.

இதுபோல் டி51 வழித்தட பேருந்துக்கு 95 என்ற எண்ணும், டி51எஸ் என்ற வழித்தடத்துக்கு 95சி என ஒரே எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 20 வழித் தடங்களில் முதல் கட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் அனைத்துப் பேருந்துகளிலும் பழைய எண், புதிய எண் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அறிவிப்புகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று வார காலங்களில் பிற பேருந்துகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

அரசு பணியில் ஆர்வம் காட்டாத சிறப்பு பிரிவு டாக்டர்கள்: 1,737 இடங்களுக்கு 433 பேர் மட்டுமே தேர்வு

அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும் டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஓரளவு இருந்தாலும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உயர் மருத்துவம் படித்த (எம்.எஸ்., - எம்.டி.,) சிறப்பு டாக்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, '1,737 சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, அரசு அறிவித்தது. தேர்வு நடத்தாமல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 'வாக் இன் இன்டர்வியூ' முறையில், ஆட்தேர்வு நடந்தது. அரசு பணியில் சேர சிறப்பு டாக்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நீண்ட காலம் ஆட்தேர்வு நடத்தியும் 25 சதவீத டாக்டர்கள் கூட கிடைக்கவில்லை. தேர்வான டாக்டர்கள் பட்டியலை எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சை, மகளிர் நோய் பிரிவில் - 73; பொது அறுவை சிகிச்சை - 46; குழந்தைகள் சிகிச்சை - 43 பேர்; முடநீக்கியல் பிரிவில் - 27 பேர் உட்பட, மொத்தம், 433 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளுக்கு ஒருவர் கூட வரவில்லை. எம்.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு பிரிவு டாக்டர் இடங்களை நிரப்ப போதிய ஆட்கள் கிடைக்கவில்லை.

அரசுப் பணியில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. வந்தவரை தேர்வு செய்தோம்' என்றார். இப்படி சிக்கலான நிலையில் அரசு எப்படி மற்ற இடங்களை நிரப்பப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்தரநாதன் கூறுகையில், ''சிறப்பு பிரிவு டாக்டர்களை தனியார் மருத்துவமனைகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சம்பளம் குறைவு ஒரு பிரச்னை என்றாலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் வரத் தயங்குகின்றனர். மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் இந்த சிக்கல்கள் தீரும்,'' என்றார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை

பரமக்குடி: 'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தாட்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுரை வழங்கியுள்ளது. அதன் விபரம்: விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது. வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் துணைவேந்தர் மு.ராஜாராம் தகவல்



அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 5–ந்தேதி தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைகிறது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவு மே மாதம் வெளிவரும். மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அண்ணாபல்கலைக்கழக ஒருங்கிணைப்பு கல்விக்குழு கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அவரிடம் என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:–

கடந்த ஆண்டு போல கலந்தாய்வு

தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. கட்டிடக்கலை கற்பிக்கும் கல்லூரிகள் 44 உள்ளன.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்.சேர்வதற்கு பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகள் விண்ணப்பிப்பார்கள்.




கடந்த வருடம் போலவே என்ஜினீயரிங் கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடக்கும். எந்தவித மாற்றமும் இல்லை. விண்ணப்பம் ரூ.500–க்கு விற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும். ஆனால் அவர்கள் அதற்கு உரிய சான்று கொடுக்கவேண்டும்.

ஜூன்மாத இறுதியில் கலந்தாய்வு

விண்ணப்ப படிவம் 2 லட்சத்து 40 ஆயிரம் அச்சடிக்கப்பட உள்ளது. கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 40 நாட்களுக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும். புதிதாக வரக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகள் எத்தனை என்பது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற இயலாது. என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கிய 3 நாட்களுக்கு பின் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் தங்களை, முதல் பட்டதாரி மாணவர் அல்லது மாணவி என்று குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அதற்கான சலுகையை அவர்கள் பெறமுடியும்.

இவ்வாறு பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

பேட்டியின்போது அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன், பேராசிரியர் ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

Wednesday, February 11, 2015

Union health ministry demands explanation over dental appointments

Union ministry of health and family welfare has pulled up the Dental Council of India (DCI) over invalid appointments of its members while seeking an urgent reply in the matter.

Recently, the DCI had appointed at least 55 to 60 members under section 3(d) and (e) of the Dentist Act, 1948 in which a notification with the health ministry is mandatory.

"It has come to the notice of the ministry that DCI has been issuing notifications for other categories of the Dentist Act, 1948, especially u/s 3(d) and (e)without consulting the central government in the matter. In this connection, attention is invited to the provisions under chapter II of the Dentist Act, 1948, which empowers the central government to constitute the council. The membership to the council is valid only if he/she is appointed by the central government by an order or notification. The practice of DCI of not sending names of the selected/nominated candidates for notification by the government, therefore, is not correct in view of the statuary provision," said Sudhir Kumar, under secretary, health ministry in a letter to the DCI.

The DCI is constituted by an act of Parliament - The Dentists Act 1948 (XVI of 1948) - with a view to regulate the dental education, dental profession and dental ethics thereto came into existence in March 1949.







"Any violation of statutes is illegal. Illegal persons are enlisted by the council just to settle some personal score," said Dr J.M. Jeyaraj, former member of the DCI.

He said: "Upon unearthing the gross violations, the government has written to DCI that membership is invalid without notification and nominations and elections have to be done as per statutes and regulations. If the DCI remains defiant, the government will be forced to deal with an iron hand into large-scale corruption in DCI with arrests and raids that could sully its image."

The council elects from the members its president, vicepresident and members of the executive committee. The elected president and the vice-president are the ex-officio chairman and vice chairman of the executive committee. The executive committee is the governing body of DCI dealing with all procedural, financial and day-to-day activities and affairs of the council.

When contacted, DCI president Dr Dibyendu Mazumder said: "I have already verbally replied to the health ministry about the matter. There was a court order in which the court allowed to include members without notification in one case. I will be replying to the ministry soon on the issue."

Experts in the dental field claim that the court order was for a case 20 years ago which doesn't mean that DCI has got the power to include names without central government notification and in violation of nomination.


Read more at: http://indiatoday.intoday.in/story/union-health-ministry-demands-explanation-over-dental-appointments/1/417759.html

Tuesday, February 10, 2015

போலீசுக்கு துணிச்சல்

logo

சில தினங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்திலேயே நடந்த ஒரு கொலை மிகவும் பயங்கரமான சம்பவமாக இருந்தது. ஒரு கொலை வழக்கு தொடர்பாக வேலூர் சிறையில் கைதியாக இருந்த வரதன் என்பவர் கோர்ட்டில் விசாரணைக்காக கையில் விலங்கு போடப்பட்டு, ஒரு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் 2 ஏட்டுகளின் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டார். கோர்ட்டு வளாகத்துக்குள் அவரை அழைத்துக்கொண்டு போகும்போது முதலில் 2 பேர்களும், அதைத்தொடர்ந்து மேலும் சிலரும் அந்த கைதியை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதில் மிகவும் கண்டிக்கத்தகுந்த செயல் என்றால், அந்த கைதியின் பாதுகாப்புக்காக கைகளில் துப்பாக்கியோடு இருந்த போலீஸ் ஏட்டுவும், ரிவால்வார் வைத்திருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டரும், ஏதோ ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல மிகவும் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதுதான். அவர்களின் பணியே அந்த கைதியை பாதுகாப்பாக ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கும், மீண்டும் கோர்ட்டில் இருந்து ஜெயிலுக்கும் கொண்டுபோவதுதான். ஆனால், தங்கள் கடமையை ஆற்றுவதற்கு முயற்சிசெய்யாமல், ஓடி ஒளிந்தார்கள் என்றால், தமிழக போலீசாருக்கு துணிச்சல் ஊட்டும் பயிற்சிகளை அளிக்கும் வகையில், புதிய திட்டங்களை வகுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது.

இவ்வளவுக்கும் பழிக்கு பழிவாங்கும் முன்விரோதம் காரணமாக, இந்த கைதியின் உயிருக்கு ஆபத்து என்று ஏற்கனவே உளவுப்பிரிவு எச்சரித்து இருக்கிறது. அப்படியிருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. கையில் துப்பாக்கி கொடுத்திருப்பது எதற்காக என்றே தெரியாத போலீசாரை பாதுகாப்புக்காக மேல் அதிகாரிகள் அனுப்பியிருக்கிறார்கள். கோர்ட்டு வளாகங்களில் கைதிகளை கொலை செய்வது தொடர்கதையாகிவிட்டது. பழைய காலங்களில் இதுபோல கோர்ட்டில் கொலை செய்தவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். இவ்வாறு என்கவுண்டரில் போலீசார் சுட்டதால் கொஞ்சகாலத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் கோர்ட்டு வளாகங்களில் நடக்காமல் இருந்தது.

பூந்தமல்லி கோர்ட்டில் நடந்த இந்த சம்பவம், எதிர்காலத்தில் இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்கவேண்டுமானால், என்னென்ன நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்? என்பதை பகிரங்கப்படுத்திவிட்டது. முதலில் போலீசாருக்கு காக்கி உடை உடலில் அணிந்தவுடன் எத்தகைய அளவில் தைரியமாக தங்கள் கடமையை ஆற்றவேண்டும் என்ற பயிற்சியை அளிக்கவேண்டும். மேலும், எளிதில் கையாளக்கூடிய நவீனரக துப்பாக்கிகளை வழங்கவேண்டும். இன்னும் தமிழக போலீசாருக்கு பழையகாலத்தில் உள்ள 410 மஸ்கட் ரக துப்பாக்கிதான் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கையில் தூக்கிக்கொண்டு வருவதற்கும், இதுபோன்ற சம்பவங்களில் தோளில் வைத்து சுடுவதற்கும் நிச்சயமாக சிரமம்தான். எனவே, வெளிநாடுகளில் வழங்கப்பட்டுள்ளதுபோல, நவீனரக துப்பாக்கிகள் வழங்கப்படவேண்டும். வேலைக்கு தேர்வானபோது அளிக்கப்படும் பயிற்சிகளில் துணிச்சலை ஊட்டும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அடிக்கடி துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பயிற்சி கொடுத்து, யார் குறிதவறாமல் மின்னல் வேகத்தில் கையில் எடுத்து சுடுகிறார்களோ, அவர்களையே முக்கிய பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தவேண்டும். மேலும், போலீசாருக்கும் ஒரு குறை இருக்கிறது. முன்பெல்லாம் என்கவுண்டரில் இதுபோல குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் போலீசார் வீரமிக்கவர்களாக கருதப்பட்டு, மேல் அதிகாரிகளாலும், சமுதாயத்தாலும் பாராட்டுப்பெற்று வந்தனர். ஆனால், இப்போதோ உடனடியாக விசாரணை என்ற பெயரில் வெகுகாலத்துக்கு துறை ரீதியாகவும், வழக்குகளுக்காக கோர்ட்டுகளுக்கும் அலையவேண்டிய நிலை இருக்கிறது. மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்தாலேபோதும், வீரம் தானாக வரும் என்கிறார்கள் போலீசார்.

NEWS TODAY 20.08.2026