
Tuesday, March 24, 2015
Monday, March 23, 2015
'அறமும், ஒழுக்கமும் ஏட்டில் மட்டுமே படிக்கின்ற விஷயமாகி விட்டது!'
‘‘பள்ளிகளில் தேர்வு நடக்குபோது மாணவர்கள் பிட் அடிப்பது சாதாரண விஷயம். இதையெல்லாம் தடுக்க முடியாது. பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் தேர்வு நடத்த முடியாது. பெற்றோர்களே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?” - இப்படிச் சொன்னது ஒரு சுப்பனோ, குப்பனோ இல்லை. பீகார் மாநிலத்தின் கல்வி அமைச்சர் பி.கே.சாகி என்பதுதான் மீள முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது.
முழுமையாக கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடிக் கட்டடம் அது. கட்டத்தில் கொத்தனார்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் பரவிய அந்தப் படத்தைப் பார்த்த எல்லோருக்கும் முதலில் தோன்றியது இதுதான். அதன் பிறகுதான் தெரிந்தது அது பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் பள்ளிக்கூடம் என்பது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுப்பதற்காக வரிசைக்கட்டி நிற்கிறார்கள் மாணவர்களின் பெற்றோர்கள்.
நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்பது பொருள். இந்தியாவின் அறிவு சார்ந்த பெருமைகளில் முதன்மையாது, முக்கியமானது நாளந்தா பல்கலைக்கழகம். கி.பி.427-ம் ஆண்டு உருவான இந்தப் பல்கலைக்கழகம் உலகத்துக்கே கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் அறிவுக்கடல். ‘நுழைவுத் தேர்வு என்ற ஒரு விஷயம் நாளந்தா பல்கலைக்கழத்தில் இருந்துள்ளது. இங்கே விண்ணப்பிக்கும் மாணவர்களை அப்படியொரு தேர்வு வைத்துதான் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கே வந்து தங்கிப் படித்துள்ளனர். இங்கே படிக்க வரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடைகள் என அத்தனையும் இலவசமாகவே கொடுக்கப்பட்டுள்ளது’ என்று இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் தனது குறிப்பில் எழுதியிருக்கிறார்.
குப்தர்கள் காலத்தில் தொடங்கி அதன் பிறகு வழி வழியாக வந்த மன்னர்கள் எல்லோருமே நாளந்தா பல்கலைக்கழத்தின் செலவுகளுக்காக, 200 கிராமங்களில் வருவாயை தனியாகவே ஒதுக்கி வந்தனர். இதுமட்டுமல்ல... பல்கலைக்கழத்துக்குச் சொந்தமான நிலத்தில் காய்கறிகள் பயிரிடுவது, மாடுகள் வளர்ப்பது என்று உணவுத் தேவைக்கான அத்தனைக்கும் அங்கேயே கிடைத்தது. 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் நாளந்தாவில் படித்ததாகவும் குறிப்புகள் உள்ளது. இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழங்களாகச் சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களுடன் ஒப்பிடும்போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நாளந்தா பல்கலைக்கழகம். ‘ஏட்டில் உள்ளதை மட்டும் கற்றுத்தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது. மாணவர்களுக்கு விவாதங்களுடன் கூடிய படிப்பை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாளந்தா பல்கலைக்கழத்துக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் தேடி வருகிறார்கள்!’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நிற்க!
நாளந்தா பல்கலைக்கழம் அமைந்திருப்பது பீகார் மாநிலத்தில்தான். நாளந்தாவில் இருந்து 132 கிலோமீட்டர் தூரத்தில்தான் வைஷாலி மாவட்டம் உள்ளது. உற்றார், உறவினர் கூடி நின்று, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கிறார்கள். கல்வியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் மாநிலத்தில்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருகிறது. கல்வி அமைச்சர் சொல்லியிருக்கும் கருத்தைப் பார்த்தால் இது இந்த ஆண்டு புதிதாக நடந்த சம்பவமாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்டக் காரணத்தால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஒரு மாணவன் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்க வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அடுத்து ஆசிரியருக்கு! இங்கே பெற்றோர்களும் தவறுகளுக்குத் துணைபோக, ஆசிரியர்கள் அதற்குச் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1100 பேர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்திருப்பதை பீகார் அரசு கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இது சிக்கியவர்கள் மட்டும்தான். படிக்காமலேயே ஆசிரியராக இருப்பவர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பதால்தான் மாணவர்களுக்கு அறமும், ஒழுக்கமும் ஏட்டில் மட்டுமே படிக்கின்ற விஷயமாகி விட்டது. மாணவனுக்கு நல்லது, கெட்டது இரண்டையும் கற்றுத்தரும் இடம் பள்ளிக்கூடம்தான். நல்லதை கற்றுத்தர அங்கே நல்லவர்கள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் இருக்க வேண்டும். அஸ்திவாரமே சரியில்லாதபோது, கட்டடத்தை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?
கல்வியில் பின் தங்கிய மாநிலம் என்று வருத்தப்படுவதாலோ, ஊர்கூடி காப்பியடிக்க மாணவர்களுக்கு பிட் கொடுப்பதாலோ முன்னுக்கு வந்துவிட முடியாது என்பதை பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் உணர வேண்டும்!
-கே.ராஜாதிருவேங்கடம்
முழுமையாக கட்டி முடிக்கப்படாத அடுக்கு மாடிக் கட்டடம் அது. கட்டத்தில் கொத்தனார்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் பரவிய அந்தப் படத்தைப் பார்த்த எல்லோருக்கும் முதலில் தோன்றியது இதுதான். அதன் பிறகுதான் தெரிந்தது அது பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் பள்ளிக்கூடம் என்பது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுப்பதற்காக வரிசைக்கட்டி நிற்கிறார்கள் மாணவர்களின் பெற்றோர்கள்.

நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்பது பொருள். இந்தியாவின் அறிவு சார்ந்த பெருமைகளில் முதன்மையாது, முக்கியமானது நாளந்தா பல்கலைக்கழகம். கி.பி.427-ம் ஆண்டு உருவான இந்தப் பல்கலைக்கழகம் உலகத்துக்கே கல்வியின் சிறப்பை எடுத்துச் சொல்லும் அறிவுக்கடல். ‘நுழைவுத் தேர்வு என்ற ஒரு விஷயம் நாளந்தா பல்கலைக்கழத்தில் இருந்துள்ளது. இங்கே விண்ணப்பிக்கும் மாணவர்களை அப்படியொரு தேர்வு வைத்துதான் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் இங்கே வந்து தங்கிப் படித்துள்ளனர். இங்கே படிக்க வரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம், உடைகள் என அத்தனையும் இலவசமாகவே கொடுக்கப்பட்டுள்ளது’ என்று இந்தியாவுக்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் தனது குறிப்பில் எழுதியிருக்கிறார்.
குப்தர்கள் காலத்தில் தொடங்கி அதன் பிறகு வழி வழியாக வந்த மன்னர்கள் எல்லோருமே நாளந்தா பல்கலைக்கழத்தின் செலவுகளுக்காக, 200 கிராமங்களில் வருவாயை தனியாகவே ஒதுக்கி வந்தனர். இதுமட்டுமல்ல... பல்கலைக்கழத்துக்குச் சொந்தமான நிலத்தில் காய்கறிகள் பயிரிடுவது, மாடுகள் வளர்ப்பது என்று உணவுத் தேவைக்கான அத்தனைக்கும் அங்கேயே கிடைத்தது. 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் நாளந்தாவில் படித்ததாகவும் குறிப்புகள் உள்ளது. இன்று புகழ்பெற்ற பல்கலைக்கழங்களாகச் சொல்லப்படும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களுடன் ஒப்பிடும்போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நாளந்தா பல்கலைக்கழகம். ‘ஏட்டில் உள்ளதை மட்டும் கற்றுத்தரும் இடமாக கல்விக்கூடம் இருக்கக்கூடாது. மாணவர்களுக்கு விவாதங்களுடன் கூடிய படிப்பை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாளந்தா பல்கலைக்கழத்துக்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் தேடி வருகிறார்கள்!’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நிற்க!
நாளந்தா பல்கலைக்கழம் அமைந்திருப்பது பீகார் மாநிலத்தில்தான். நாளந்தாவில் இருந்து 132 கிலோமீட்டர் தூரத்தில்தான் வைஷாலி மாவட்டம் உள்ளது. உற்றார், உறவினர் கூடி நின்று, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிட் கொடுக்கிறார்கள். கல்வியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் மாநிலத்தில்தான் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருகிறது. கல்வி அமைச்சர் சொல்லியிருக்கும் கருத்தைப் பார்த்தால் இது இந்த ஆண்டு புதிதாக நடந்த சம்பவமாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நடந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்டக் காரணத்தால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஒரு மாணவன் தவறு செய்தால் அதைத் தட்டிக்கேட்க வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அடுத்து ஆசிரியருக்கு! இங்கே பெற்றோர்களும் தவறுகளுக்குத் துணைபோக, ஆசிரியர்கள் அதற்குச் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்புக் கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 1100 பேர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்திருப்பதை பீகார் அரசு கண்டுபிடித்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இது சிக்கியவர்கள் மட்டும்தான். படிக்காமலேயே ஆசிரியராக இருப்பவர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் பேர் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருப்பதால்தான் மாணவர்களுக்கு அறமும், ஒழுக்கமும் ஏட்டில் மட்டுமே படிக்கின்ற விஷயமாகி விட்டது. மாணவனுக்கு நல்லது, கெட்டது இரண்டையும் கற்றுத்தரும் இடம் பள்ளிக்கூடம்தான். நல்லதை கற்றுத்தர அங்கே நல்லவர்கள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் இருக்க வேண்டும். அஸ்திவாரமே சரியில்லாதபோது, கட்டடத்தை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?
கல்வியில் பின் தங்கிய மாநிலம் என்று வருத்தப்படுவதாலோ, ஊர்கூடி காப்பியடிக்க மாணவர்களுக்கு பிட் கொடுப்பதாலோ முன்னுக்கு வந்துவிட முடியாது என்பதை பீகார் மாநிலத்தின் முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் உணர வேண்டும்!
-கே.ராஜாதிருவேங்கடம்
வாட்ஸ் அப் வாத்தியார்கள்!...வாசகர் பக்கக் கட்டுரை
வினாத்தாளை படம் பிடித்து வாட்ஸ் அப் -இல் அனுப்பும் ஆசிரியர்கள் ஒருபுறம்..சுவர் ஏறி குதித்து ‘பிட்’ கொடுக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். இவை இரண்டுமே வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களாக இருக்கலாம்..ஆனால் களங்கப்பட்டு நிற்பது என்னவோ நம் கல்வித்துறையும் ஆசிரியர்களின் மாண்புமே.
வாட்ஸ் அப்-இல் கேள்வித்தாளை அவுட் செய்த ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அவர்கள் புனிதமான ஆசிரியப் பூந்தோட்டத்தின் களைகள். களைகள் களைந்தெறியப்படுவது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் மட்டுமே உண்மைக் குற்றவாளிகளா என்றால், இல்லை என்பதே பதில். தமிழ் நாட்டில் எந்த தனியார் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பும், பதினோராம் வகுப்பும் நடத்தப்படுவதே இல்லை. இது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அல்லது அவர்களை படிக்க வைக்கும் பெற்றோருக்கு தெரியாதா?
நூறு சதவீத தேர்ச்சியை முன்னிறுத்தி நடத்தப்படும் கல்வி வியாபாரங்கள் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் சென்று விட்டதா? கல்வித்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களில் எத்தனை பேரின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றனர்? அரசு பள்ளி வேண்டாம்..ஆனால் அரசு பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என நினைப்பது மட்டும் சரியா? பணத்தை தங்கள் பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்யும் பெற்றோருக்கு பணம் முக்கியமல்ல.
வாட்ஸ் அப்-இல் கேள்வித்தாளை அவுட் செய்த ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அவர்கள் புனிதமான ஆசிரியப் பூந்தோட்டத்தின் களைகள். களைகள் களைந்தெறியப்படுவது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் மட்டுமே உண்மைக் குற்றவாளிகளா என்றால், இல்லை என்பதே பதில். தமிழ் நாட்டில் எந்த தனியார் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பும், பதினோராம் வகுப்பும் நடத்தப்படுவதே இல்லை. இது கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அல்லது அவர்களை படிக்க வைக்கும் பெற்றோருக்கு தெரியாதா?
நூறு சதவீத தேர்ச்சியை முன்னிறுத்தி நடத்தப்படும் கல்வி வியாபாரங்கள் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் சென்று விட்டதா? கல்வித்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களில் எத்தனை பேரின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றனர்? அரசு பள்ளி வேண்டாம்..ஆனால் அரசு பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என நினைப்பது மட்டும் சரியா? பணத்தை தங்கள் பிள்ளைகளின் கல்வியில் முதலீடு செய்யும் பெற்றோருக்கு பணம் முக்கியமல்ல.

ஆனால் தங்கள் மகள் அல்லது மகனுக்கு கல்லூரியில் இலவச மருத்துவ அல்லது பொறியியல் சீட் வேண்டும். அதனைப் பயன்படுத்தி இந்த ‘சந்தைப்’ பள்ளிகள் முடிந்த வரை பணத்தை கறக்கின்றனர். அரசு பள்ளி மாணவன் ஒரு வருடத்தில் படித்து எழுதும் தேர்விற்கு இவர்கள் இரண்டு வருடமாக தங்கள் மாணவனை தயார் செய்கிறர்கள். அதுபோதாது என்று சனி,ஞாயிறு விடுமுறைகள் இல்லை, தீபாவளி பொங்கல் கொண்டாட்டங்கள் இல்லை.

இவ்வளவு கசக்கிப் பிழிந்தும் அவர்களின் மாணவர்கள் மாநில முதலிடம் பெற எத்தனை குறுக்கு வழிகள் இருக்கிறதோ அத்தனையும் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்று தான் சமீபத்திய ‘வாட்ஸ் அப்’ கேள்வித்தாள் பரிமாற்றம். இது ஒரு உதாரணம் மட்டுமே.
பத்தாம் வகுப்பைத் தவிர மற்ற எந்த வகுப்புகளிலும் சமச்சீர் பாடத்திட்டத்தை கடைப் பிடிக்காத, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டு சீட்டை நிரப்பாத தனியார் பள்ளிகளை கேள்வி கேட்பது யார்? அரசின் காதுகளுக்கு இவை எட்டுமா? கல்வி சீர்திருத்தம் கிட்டுமா? அரசுப் பள்ளி மாணவனின் நிலைமை மாறுமா? கல்வியை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த ‘சதுரங்க வேட்டையில்’ சதுரங்க ‘ராஜா’க்களை தப்பவிட்டு சாதாரண சிப்பாய்களை சிறைபிடித்து என்ன பயன்?
-மஹபூப்ஜான் ஹுசைன் ( காரிமங்கலம்)
பத்தாம் வகுப்பைத் தவிர மற்ற எந்த வகுப்புகளிலும் சமச்சீர் பாடத்திட்டத்தை கடைப் பிடிக்காத, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டு சீட்டை நிரப்பாத தனியார் பள்ளிகளை கேள்வி கேட்பது யார்? அரசின் காதுகளுக்கு இவை எட்டுமா? கல்வி சீர்திருத்தம் கிட்டுமா? அரசுப் பள்ளி மாணவனின் நிலைமை மாறுமா? கல்வியை மையமாக வைத்து நடத்தப்படும் இந்த ‘சதுரங்க வேட்டையில்’ சதுரங்க ‘ராஜா’க்களை தப்பவிட்டு சாதாரண சிப்பாய்களை சிறைபிடித்து என்ன பயன்?
-மஹபூப்ஜான் ஹுசைன் ( காரிமங்கலம்)
சிங்கப்பூரின் நிஜ நாயகன் லீ குவான் யூ !
எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதை சாதித்து காட்டிய லீ குவானின் மறைவு சிங்கப்பூர் மக்களிடையே மட்டுமல்லாது, உலக அளவிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
லீ குவான் யூ நவீன சிங்கப்பூரைச் செதுக்கியவர். சிங்கப்பூர் ராபல்ஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பல்வேறு தீவுகளைக்கொண்ட சில நூறு சதுரகிலோமீட்டர்கள் கொண்ட சிறிய தேசம் அது. ராபல்ஸ் கட்டுப்பாடுகள் அற்ற துறைமுகமாகச் சிங்கப்பூரை மாற்றினார். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் அப்பகுதி ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்வரை இருந்தது. லீ குவான் யூ நான்கு தேசியகீதங்கள் பாடுகிற அளவுக்கு நாட்டில் இந்த ஐம்பது வருட காலத்துக்குள் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.

லீ, செல்வம் வளம் மிகுந்த பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட தொழிற்துறையில் இயங்குகிற குடும்பத்தில் வளர்ந்தவர். தங்கத்தட்டில் ஏந்திப் பிள்ளையைக் கொண்டாடினார்கள். அவரின் இளம்வயது முதலாளித்துவக் காதல், பொருளாதார வீழ்ச்சியின்பொழுது விழுந்தது. குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருந்தது. அம்மா எண்ணற்ற வேலைகள் செய்து குடும்பத்தைக் கரை சேர்த்தார்.கேம்ப்ரிட்ஜில் படிக்கப்போன லீக்கு ஆங்கிலேயர்களின் நிறவெறி அதிர்ச்சியை அதிகரித்தது. பட்டங்கள் பெற்று நாடு திரும்பிய சூழலில், உலகப்போரில் ஜப்பான், பிரிட்டனைப் பந்தாடியது அவருக்கு இங்கிலாந்து மீதிருந்த காதலை அடித்து நொறுக்கியது.
ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.
முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.
ஜப்பானுக்குப் போரில் வேலை பார்த்து அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். சோசியலிசம் மீதான காதல் அரும்பி மறைந்திருந்தது.இங்கிலாந்து உலகப்போருக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூரைப் பிடித்துக்கொண்டது. PAP கட்சியை, தோழர்களோடு இணைந்து ஆரம்பித்தார் அவர். டோய்ன்பீ-யின் நூல்களை வாசித்தது பெரிய மாற்றத்தை அவருக்குள் உண்டாக்கியது. படைப்பாற்றல் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை மாற்றியமைப்பார்கள் என்கிற சிந்தனை ஆழமாக அவருக்குள் வேர்விட்டிருந்தது. ஜெர்மனி உலகப்போருக்குப் பின்னர் வலிமையான அரசாங்கத்தால் படிப்படியாக அற்புதமாக எழுந்தது அவரின் எண்ணத்தை வலுப்படுத்தியது.
முதல் முதலாகப் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது நடந்த தேர்தலில் அவரின் கட்சி ஒப்புக்கு போட்டியிட்டு நான்கு தொகுதிகளை வென்றது. மலேசியாவின் பிரதமர் எங்களோடு நீங்கள் இணையுங்கள் என்று அழைத்தார். லீ அதை முன் வைத்து, தேர்தலில் பிரிட்டனுக்கு எதிராக விடுதலை மற்றும் மலேசிய இணைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் கட்சி அமோக வெற்றிப் பெற்றது. மலேசியாவுடன் இணைந்தபிறகு சிக்கல்கள் ஆரம்பித்தன.

இயற்கை வளங்களோ, தங்களைப்போல ஒரே இனமாகவோ இல்லாத சிங்கப்பூர் மக்களை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எழுந்தன.ஒரு கட்டத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. சிங்கப்பூர் தனிதேசமாக உருவான பொழுது அது நீடித்து நிற்காது என்பதே பலரின் பார்வையாக இருந்தது. "பெருத்த துயரத்தோடு தான் இந்தப் பிரிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் !" என்று சொல்லிவிட்டு லீ சிலகாலம் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். பின்னர் எழுந்து வந்தார்.லீ தனக்கென்று பாதைகள் வகுத்துக்கொண்டார்.
ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,
சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்
பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.
சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.
ஜனநாயகம் என்றெல்லாம் பெரிதாக வாய்த் திறக்கக்கூடாது. தேசத்தின் தேவைகள் முக்கியம். மூன்றுவகையாக மக்களை வடிவமைத்தார். நல்ல தலைவர்கள் மேலே இருப்பார்கள்,சிறந்த அதிகார வட்டம் அடுத்து இருக்கும்,மீதமிருக்கும் மக்கள் சுய மற்றும் சமூகக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளவேண்டும். தேசம் உருப்படும் என்பது அவரின் பார்வையாக இருந்தது. கூடவே எப்பொழுதும் தன்னைச் சீனா சாப்பிடலாம் என்கிற அச்சம்துளிர்க்கவே வலுவான ராணுவத்தை இஸ்ரேலின் உதவியோடு அமைத்துக்கொண்டார்கள். அரசு செய்கிற செலவில் கால்வாசி ராணுவம்
சார்ந்தே அமைந்திருந்தது,
சான் பிரான்சிஸ்கோ பங்குச்சந்தை மூடுவதற்கும், ஜெர்மனியின் ஜூரிச் பங்குச்சந்தை திறப்பதற்கும் இடையே அரைநாள் அளவுக்கு இடைவெளி இருப்பதை நெதர்லாந்தில் இருந்து பொருளாதார ஆலோசனை சொல்ல வந்த ஆல்பர்ட் வின்செமியஸ் கவனித்துச் சொன்னார். இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் பங்குச்சந்தை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய தொல்லைகள் தராமல் தொழில் தொடங்க கதவுகள் திறந்து விடப்பட்டன. வரி விதிப்பு அளவுகள் குறைவாக இருந்து, முதலீட்டாளர்களின் சொர்க்கமானது சிங்கப்பூர்
பல பில்லியன் டாலர்களை இருக்கிற பத்துக்கும் குறைவான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கினார். பள்ளிகளில் கல்வி அரசு கவனித்து வழங்குவதாக மாறியது. வெளிநாட்டில் இருப்பவர்கள் படிக்க வந்தால் கிட்டத்தட்ட இலவசம் என்று கூவிக்கூவி அழைத்தார்கள். படித்த பின்பு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் மூன்று ஆண்டுகள் கட்டாய வேலை ஒப்பந்தம் காத்திருக்கும். இப்படி உலகம்முழுக்கவும் இருந்து சிறந்த திறமைகள் வந்து சேர்ந்தன. சேரிகள் புதிய கட்டடத்திட்டங்களின் மூலம் காலி செய்யப்பட்டன. வசதியான வீடுகள்கட்டித்தரப்பட்டன. இலவசம் இல்லையென்றாலும் படிப்படியாக மக்களிடம் இருந்து அவர்களின் வருமானத்தில் இருந்துபோட்ட பணம் மீட்டெடுக்கப்பட்டது.
சின்னத் தேசம் என்பதும், ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தியும் நகர்ந்ததால் ரோட்டில் கார்கள் ஓடத் தடைகள் சுற்றி வளைத்து விதிக்கப்பட்டன. பத்து சதவிகித நிலப்பரப்பு இயற்கைப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டது. உலகம் முழுக்க இருந்து நாட்டுக்குள் நடைபெற்றபெரும்பாலான தொழில்களை அரசாங்கம் கவனித்துக்கொண்டாலும், அவற்றின் மேலாண்மையைச் செயல்படுத்த எண்ணற்ற சுதந்திரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். கட்டாயப் PF திட்டத்தின் கீழ் எல்லாச் சம்பளக்காரர்களின் சேமிப்பில் ஐம்பது சதவிகிதம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் நோக்கி செலுத்தப்பட்டது.

கேள்விகள் கேட்கிற எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை என்று குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்விகள் கேட்காமல் சிறை வரவேற்கும். நீதி என்றெல்லாம் பேச முடியாது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சீனப்பாரம்பரியம் கொண்டவர்கள்தான் எண்பது சதவிகிதத்துக்கும் மேலே கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் பெரும்பாலான உதவித்தொகைகள் அவர்களுக்கே சென்று சேர்கிறது. பாதி ஜனநாயகம் கொண்டிருக்கும் இந்தத் தேசத்தில் ஆளுங்கட்சியான லீயின் கட்சியை எதிர்த்து பெரும்பாலும் வேட்பாளர்கள் நிற்க மாட்டார்கள்.
இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.
இப்பொழுது லீயின் மகன் கோலோச்சுகிறார். நாட்டின் பரப்பளவு லீ குவான் யூ போட்ட பாதையில் விரிந்து கொண்டே செல்கிறது. உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.
"ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சிறிய சந்தை !" எனப்பட்ட சிங்கப்பூர், 'பொருளாதாரப்புலி' என்கிற பெயரை அவரின் பணிகளால் பெற்றது. எதுவுமே இல்லை என்பதிலிருந்து எதுவும் சாத்தியம் என்பதைச் சாதித்த சிங்கப்பூரின் நிஜ நாயகன் அவர்.
- பூ.கொ.சரவணன்
- பூ.கொ.சரவணன்
ஸ்டார் டைரி 2 - கமல்ஹாசன் | 'ஸ்மார்ட்' ரஜினி

எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் வாசிப்பை நேசிப்பவர்களில் கமல் சார் முக்கியமானவர். அவரது அன்றாட வாழ்க்கையில் புத்தகங்களின் பங்கு மிக அதிகம்" என்று அவர் பர்சனல் பக்கங்களை அடுக்குகிறார் நிகில். இனி அவர் சொன்ன தகவல்கள், நம் மொழி நடையில்...
காலையில் அலுவலகம் வந்தவுடன், மீட்டிங் இருந்தால் அனைத்தையும் முடித்துவிட்டு எழுத உட்கார்ந்து விடுவார். படத்துக்கான கதை, திரைக்கதை அல்லது கவிதைகள் என எழுத ஆரம்பித்துவிடுவார். அவரைச் சந்திக்க வருபவர்களில் பலரும் புத்தகங்கள் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். தான் படிக்காத புதிய புத்தகத்தை யாராவது கொடுத்தால், அதை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவது கமலின் பழக்கம்.
அதேபோல், தன்னைச் சந்திக்க வருபவர்கள் "இந்தப் புத்தகம் படித்தேன். நன்றாக இருந்தது" என்று போகிற போக்கில் சொன்னால்கூட அதை கவனித்து, தனது உதவியாளர்கள் யாரிடமாவது அந்தப் புத்தகத்தை வாங்கி வரச் சொல்லி படித்துவிடுவார்.
ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, அந்த எழுத்து பிடித்துவிட்டால், தவறாமல் எழுத்தாளரை போனில் அழைத்து நீண்ட நேரம் பேசுவார். அந்தப் புத்தகத்தில் தன்னை ஈர்த்த அம்சங்களையும் வரிகளையும் சுவையுடன் பகிர்வார். சமீபத்தில் அப்படித்தான் 'கொற்றவை' புத்தகத்தைப் படித்துவிட்டு, எழுத்தாளர் ஜெயமோகனிடம் நீண்ட நேரம் பேசினார்.
அத்துடன், அவரை அலுவலகத்துக்கு அழைத்து நீண்ட நேரம் பேசியவர், 'பாபநாசம்' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்துவிட்டார் கமல். 'இவரால் முடியும்' என்று முடிவு செய்துவிட்டால், உடனே அவர்களைத் தன்னுடன் இணைத்துக்கொள்ள தயங்குவதில்லை. அதுதான் கமல்ஹாசன்.
கமலும் ரஜினியும்
"நண்பர், நல்ல மனிதர், உண்மையிலேயே சகலகலா வல்லவர். அவர் நடிப்பது, பாடுவது, பாடல் எழுதுவது என கை வைக்காத கலையே கிடையாது" என்று 'கமல் 50' விழாவில் பேசினார் ரஜினிகாந்த். அதற்கு, "எங்குளுக்கு முந்தைய காலகட்டத்தில், எங்கள் இருவரையும் போல யாரும் நட்பு பாராட்டியதில்லை. சூப்பர் ஸ்டார், உலக நாயகன் பட்டங்கள் எல்லாம் நீங்கள் கொடுத்ததுதான். எங்களுக்கு தெரியும் நாங்கள் யார் என்று. நாங்கள் திரையுலகுக்கு வந்த வேலை மட்டும் இன்னும் முடியவில்லை என்று எங்களுக்கு தெரியும்" என்று அவ்விழாவில் கமல் கூறினார்.
உண்மையில், இருவருக்கும் இடையேயான நட்பு என்பது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியேதான் இன்னும் நீடிக்கிறது. அவ்வப்போது இருவரும் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொள்வார்கள்.
'தசாவதாரம்' படத்துக்காக பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக அமெரிக்க அதிபர் அலுவலகம் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. அப்போது, கமலைப் பார்க்க வேண்டும் என்று திடீரென படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விட்டார் ரஜினி. அங்கு கமலோ ஜார்ஜ் புஷ் மாதிரியான வேடத்தில் இருந்ததைப் பார்த்து, ரொம்ப குஷியாகி பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
"சூப்பர் கமல். அற்புதம். இந்த மாதிரி எல்லாம் உங்களால் மட்டுமே பண்ண முடியும்" என்று கூறிவிட்டு, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், கமல் ஆகியோருடன் ஒரு மணி நேரம் இருந்து பேசிவிட்டு படப்பிடிப்பைப் பார்த்து ரசித்த பிறகே கிளம்பினார்.
'மன்மதன் அம்பு' படத்துகாக சிறப்புத் திரையிடல் காட்சிக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் கமல். ரஜினியும் வந்திருந்தார். அப்போது ரஜினி வழக்கம்போல அல்லாமல் வித்தியாசமாக உடை அணிந்து வந்திருந்தார். ஏன் இந்த மாற்றம் என்று ரஜினியின் உதவியாளிடம் நிகில் விசாரித்திருக்கிறார். அப்போது "நீங்க வேற... ரஜினி சார் காலையில இருந்து நிறைய டிரெஸ்ஸை மாத்தி மாத்தி போட்டுப் பார்த்தார். இந்த டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு 'நல்லாயிருக்க இல்லையா?'ன்னு கேட்டு கன்பார்ம் பண்ணிட்டுதான் கிளம்பினார்" என்றாராம் ரஜினியின் உதவியாளர்.
அப்போது, கமல்ஹாசனைப் பார்க்கச் செல்லும்போது உடையில் ஏன் இந்த மெனக்கெடல் என்பதற்கான காரணத்தையும் காரில் செல்லும்போது ரஜினி சொல்லியிருக்கிறார்.
"கமலைப் பார்க்க போகிறோம் இல்லையா... ஸ்மார்ட்டாக போக வேண்டுமே!"
கமல் எந்த அளவுக்கு தனக்கு ஸ்பெஷல் என்பது ரஜினியின் இந்த ஸ்டேட்மென்ட் ஒன்றே சான்று.
*

ரஜினி, கமல் உடன் நிகில்
நான் வியந்த தருணம்:
"நான் படித்தது 8-ம் வகுப்பு வரைக்கும்தான். நான் கற்றுக்கொண்ட அனைத்துமே என்னுடைய அனுபவ அறிவில் இருந்துதான்" என்று சமீபத்தில் நடைபெற்ற 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டில் கமல் சார் பேசினார். திரையுலக அனுபவம், இலக்கிய அனுபவம், இசை அனுபவம் முதலான கலை சார்ந்த விஷயங்களைத்தான் அவர் குறிப்பிட்டார் என்று நாம் நினைத்தால் அது தவறு.
என் மூத்த மகன் அகில் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். அகில் 12-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதியபோது, அவருக்கு போன் செய்து கமல் சார் வாழ்த்தினார். அப்போது "பிளஸ் டூ முடிச்சுட்டு என்ன படிக்க ஆர்வம்?" என்று கேட்டிருக்கிறார். "நான் மெடிக்கல் படிக்கலாம்னு இருக்கிறேன்" என்றான் அகில்.
"மெடிக்கல்ல...?" - இது கமல் சார்.
"நியூரோலாஜி அங்கிள்."
அதைக் கேட்டதும், நியூரோலாஜியில் உள்ள ஒரு பிரிவு ஒன்றைக் குறிப்பிட்டு, "இதைப் படி.. நல்ல எதிர்காலம் இருக்கு" என்று சொன்னார் கமல் சார்.
இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரிவு எந்தக் கல்லூரியில் இருக்கிறது? எவ்வளவு செலவாகும்? என்ற விவரங்களை எனக்குத் தெரிந்த நியூரோ மருத்துவரிடம் விசாரித்தேன்.
குறிப்பிட்ட நியூரோ படிப்பு பிரிவைப் பற்றி கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த நியூரோ மருத்துவர், "இந்தப் படிப்பு அமெரிக்காவில் புதிதாக அறிமுகப்படுத்தி வெறும் ரெண்டு மாசம்தான் ஆகுது. இந்தியாவுக்கே இந்தப் படிப்பு இன்னும் அறிமுகம் இல்லை. இந்தப் படிப்பைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார்?" என்றார்.
"கமல் சார்" என்று பதில் சொன்னதும் வியந்தது அந்த நியூரோ மருத்துவர் மட்டுமல்ல... நானும்தான்" - நிகில்
*
கமலின் ஃபிட்னஸ் ரகசியங்கள்... அடுத்த அத்தியாயத்தில்!
கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in
'சிங்கப்பூர் தந்தை' லீ க்வான் யூ: அரிய முத்துகள் 10


லீ க்வான் யூ இன்று (திங்கள்கிழமை) காலமானார். அவருக்கு வயது 91. அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...
* சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ', பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.
* சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.
* உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். 'கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்' என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.
* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.
* 'அடியாத மாடு படியாது' என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ''பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசுவார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான், தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்'' என்பார்.
* விளையாட்டு, பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப், நடனம், நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட், பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.
* லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.
* இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. 'அரசியல், பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்'' என்பார் லீ.
* அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல், வறுமை, உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.
* தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள், படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.
100% தேர்ச்சிக்காக மாணவர்களின் வாழ்க்கைக்கு உலை வைத்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!
நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்ட, 6 மாணவர்களை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதிக்காத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழபெரும்பள்ளத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 42 மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தனர். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய அரசு பொது தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர். அப்போது சாந்தி, கனிதா, காயத்ரி, ரேணுகா, தமிழ்ச்செல்வி மற்றும் மாணவர் சுபாஷ் ஆகிய 6 பேரை பள்ளி தலைமை ஆசிரியை பட்டு ஷீலா அற்புதராணி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு திரண்டு வந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் தலைமை ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பெற்றோர்கள் கூறும்போது, "இப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி காண்பிக்க வேண்டுமென்றே 6 மாணவர்களை தேர்வு எழுதி அனுமதிக்கவில்லை. இம்மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். தேர்வு அன்று வழங்குவார்கள் என்று மாணவர்கள் பரீட்சை எழுத சென்றனர். ஆனால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் வேண்டும் என்று அனுப்பி விட்டனர்" என்றனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறும்போது, மாணவர்களின் வருகை பதிவு 75 சதவீதத்திற்கும் கீழ் இருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றனர்.
அதற்கு பெற்றோர் தரப்பில் தெரிவிக்கும் போது, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் வீடுகளும் பள்ளிக்கு மிக அருகில்தான் உள்ளது. மாணவர்களும் அடிக்கடி விடுமுறை எடுப்பதில்லை. எனவே வருகை பதிவு குறைவாக உள்ளது என்பது காரணம் இல்லை என மறுத்தனர்.
இச்சம்பவம் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமியிடம் கேட்ட போது, இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், அப்பள்ளியில் படிக்கும் 2 பேர் தொடக்கம் முதல் பள்ளிக்கு வரவில்லை என்பதும், மீதி உள்ள மாணவர்கள் டிசம்பர் மாதத்திற்கு பின் வரவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு படிப்பு வரவில்லை என எழுதி கொடுத்துள்ளதும் தெரியவந்தது. ஆனாலும் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, இது தொடர்பாக மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்தநிலையில், தலைமை ஆசிரியர் பட்டு சீலா ராணி, ஆசிரியர்கள் ஆனந்த், பரமநாதன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நாகை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26
PCI announces special provisions for B.Pharm students admitted up to AY 2025-26 Gireesh Babu, New Delhi Saturday, July 25, 2026, 08:00 Hrs ...
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...