Saturday, April 4, 2015

செல்லிடப்பேசி - பெருகும் தொல்லைகள்

Dinamani

தகவல் தொழில்நுட்பத்தின் உன்னத கண்டுபிடிப்பான செல்லிடப்பேசிகள் இப்போது தொல்லைபேசிகளாக மாறிவருகின்றன.

1990-களில் தரைவழித் தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்து நீண்ட காலம் காத்திருக்கும் நிலை இருந்தது. அதன்பின் செல்லிடப்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது செல்லிடப்பேசியில் இருந்து அழைக்கப்படும் அழைப்புகளுக்கும் உள்வரும் அழைப்புகளுக்கும் அதிகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதன்பின் போட்டி அதிகமானதால், இப்போது சமுதாயத்தின் கடைசி நிலையில் உள்ளவர்களிடம் கூட செல்லிடப்பேசிகள், அதுவும் அதிநவீன செல்லிடப்பேசிகள் இருக்கும் சூழ்நிலை உள்ளது.

செல்லிடப்பேசியில் இப்போது பல்வேறு வகையான வசதிகளை செல்லிடப்பேசி நிறுவனங்கள் வழங்குகின்றன.

முகம் பார்த்துப் பேசுதல், விடியோ படங்கள் பதிவிறக்கம், குறுந்தகவல்கள் பரிமாற்றம், இணையதள சேவை, திரைப்படம், வர்த்தகம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வசதிகளால் செல்லிடப்பேசியால் உலகம் கை அளவு சுருங்கி விட்டதை இதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால், வசதிகள் உள்ளதற்கேற்ப அதே அளவுக்கு ஆபத்துகளும் செல்லிடப்பேசிகள் மூலம் நமக்கு அழைப்பு விடுப்பதை மறுப்பதற்கில்லை.

தனக்குப் பிடிக்காத பெண்கள்/ஆண்களின் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டுத் தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் மனநோயாளிக் கயவர்கள் செய்யும் செயலால் எத்தனை குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மன அமைதியைக் குலைத்தவர்களுக்கு என்ன தண்டனை தரப்பட்டுள்ளது?

பெண்ணுடன் இருக்கும் காட்சியை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அவர்களில் பலர், சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டவும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

பலர் பழுதுநீக்குவதற்காகக் கடைக்குக் கொண்டு செல்லும்போது குறிப்பிட்ட செல்லிடப்பேசியில் பதிவாகியுள்ள விடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் பார்த்து விலைபேசி விற்கும் அவலச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

இவ்வாறு வெளிவரும் தகவல்களால் தற்கொலைச் சம்பவங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

இப்போதைய சூழ்நிலையில், செல்லிடப்பேசியைப் பயன்படுத்தாத பள்ளி மாணவ, மாணவியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சேவை தரும் செல்லிடப்பேசி நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு விதமான விளம்பரச் செய்திகளை செல்லிடப்பேசிகளுக்கு அனுப்புகின்றன.

டேட்டிங், பேசக் காத்திருக்கும் பெண்கள் என பல்வேறு விதமான தலைப்புகளுடன் கவரும் வார்த்தைகளுடன் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் பள்ளி மாணவ, மாணவியர் வைத்திருக்கும் செல்லிடப்பேசிகளுக்கும் வருகின்றன.

இதில் தெரியாத்தனமாக ஒரு மாணவர் அல்லது மாணவி ஒருமுறை பேசிவிட்டால் மீண்டும் மீண்டும் பேசத் தூண்டும் வகையில்தான் எதிர் முனையில் இருப்பவர் பேசுகிறாராம். இதைத் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தடை செய்யக் கூடாது?

குறுந்தகவல்களை அனுப்ப வேண்டாம் என்றாலும், விடாப்பிடியாகத் தொடர்ந்து அனுப்பி அனைவரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும் செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கு மேலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அனுப்புவதில் நாட்டின் ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். உள்பட தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களும் விதிவிலக்கல்ல.

செல்லிடப்பேசி இணைப்புப் பெறுவதற்கு போலி முகவரியைக் கொடுத்துள்ளவர்கள் மீதும் பெரும்பாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

முகவரியைச் சோதனையிடாமல் இணைப்புத் தந்த சம்பந்தப்பட்ட முகவர்கள் மீதும், சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி நிறுவனத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கு யார் பொறுப்பேற்பது?

இப்போதைய சூழ்நிலையில் செல்லிடப்பேசி இல்லாவிட்டால் ஒருவருக்கும் ஒரு வேலையும் ஓடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தகவல் தொடர்புக்காக மட்டுமே என்பதைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும்.

இப்போதைய இளைஞர்கள் தங்கள் செல்லிடப்பேசியில் உள்ள கேமராக்களில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் மீது காட்டுவதில்லை என்பது வேதனை தரும் உண்மை.

செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே சென்ற பலர் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது, மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பது போன்ற சம்பவங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

வாகனங்களில் செல்லும்போதும், நடந்துசெல்லும்போதும் பேச்சு மும்முரத்தில் நம்மைச் சுற்றிலும் நடப்பதை மறந்து தங்கள் உயிரை இனி மேலும் இழப்பதைத் தடுக்க வேண்டும்.

செல்லிடப்பேசி மூலம் குற்றங்கள் புரிந்தது நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனைகளை வழங்க வேண்டும். இதேபோல, செல்லிடப்பேசி நிறுவனங்கள் அனுப்பும் விளம்பரக் குறுஞ்செய்திகளையும் தணிக்கை செய்து அனுப்ப வேண்டும்.

அந்தச் செய்திகள் சிறுவர்களுக்கோ, சிறுமியருக்கோ செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் மீறிச் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

Friday, April 3, 2015

Revised Rates effective from 01.01.2015 – Fake Order/ Instructions – Clarification issued by Finance Ministry

Payment of Dearness Allowance to Central Government Employees – Revised Rates effective from 01.01.2015 – Fake Order/ Instructions – Clarification issued by Finance Ministry

No.1/2/2014-E.II(B)
Government of India
Ministry of Finance
Department of Expenditure

North Block, New Delhi,
Dated the 1st April 2015.

OFFICE MEMORANDUM

Subject:- Payment of Dearness Allowance to Central Government Employees – Revised Rates effective from 01.01.2015 – Fake Order/Instructions – Clarification regarding.

It has come to the notice of the Department of Expenditure, Ministry of Finance that Office Memorandum bearing F. No. 1/2/2015-E.II(B) dated 30th March, 2015 under the signature of Shri A. Bhattacharya, Under Secretary, Department of Expenditure, regarding Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 01.01.2015, is being circulated amongst Government Departments/Offices.

2. It is clarified that the O.M. dated 30.03.2015, purportedly issued by the Ministry of Finance, is a fake and that no such instructions have been issued by the Department of Expenditure, Ministry of Finance. Accordingly, all Ministries/Departments and Central Government offices are hereby advised not to take cognisance of these fake instructions being circulated in Government offices.


sd/-
(Subhash Chand)
Director
Source: www.finmin.gov.in


இண்டர்நெட்டில் தேடுபவர் அறிவாளியா?


இணையத்தில் தேடலில் ஈடுபடுவதால் தகவல் கள் கிடைக்கலாம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் இணைய தேடல் கொஞ்சம் தலைக் கனத்தையும் உண்டாக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இணைய தேடல் தொடர்பான சமீபத்திய ஆய்வு இந்த தகவலைத்தான் சொல் கிறது.

இணையத்தில் தேடும் பழக்கம் கொண்டவர்கள் தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொள் வதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் ஒன் றும் தவறில்லைதான். ஆனால் இணையவாசிகள் தங்கள் அறிவுத் தகுதியை விட கூடுதலான அறி வை கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்ள வைக்கிறது என்பதுதான் ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயம்.

அதாவது இணையவாசிகள் தங்களது இயல்பான அறிவை விட கூடுதலான அறிவு தங்களுக்கு இருப்பதாக கற்பிதம் செய்துகொள்வதாக இந்த ஆய்வை முன்னின்று நடத்திய யேல் பலகலைக்கழக ஆய்வாளர் மேத்யூ பிஷர் சொல்கிறார்.

இணையத்தில் ஒரு விஷயத்தை தேடும்போது உலகின் ஒட்டுமொத்த அறிவாற்றலும் விரல் நுனியில் கிடைக்கிறது. இது தகவல்கள் எல்லாம் இணையத்தில் இருக்கிறது என்று நினைக்க வைப்பதற்கு மாறாக தங்கள் தலைக்குள்தான் இருப்பதாக இணையவாசிகளை நினைக்க வைப்பதாக பிஷர் சொல்கிறார். நம் முடைய சொந்த அறிவை, வெளியே இருக்கும் அறிவுடன் குழப்பிக்கொண்டு ஒருவர் தன்னை தானே மிகுந்த அறிவாளியாக நினைத்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது என்கிறார் பிஷர்.



பிஷர் இதை சும்மா சொல்லவில்லை. இணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் மத்தியில் சோதனை நடத்தி அந்த ஆய்வின் அடிப்படையில் இதை உறுதியாக சொல்கிறார். இந்த ஆய்வின் முடிவு அமெரிக்க உளவியல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வின்போது பயனாளிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்து குறிப்பிட்ட கேள்வியை கேட்டுள்ளனர். ஒரு பிரிவு இணைய தேடலில் ஈடுபடுபவர்களை கொண்டது. இணைய பிரிவு சாதாரணமானவர்களை கொண் டது. இந்த கேள்விக்கான இணைய இணைப்பையும் முதல் பிரிவிடம் கொடுத்துவிட்டு அதன் பிறகு தொடர் பே இல்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். அப்போதும் தேடலில் ஈடுபடும் பிரிவினர் தங்களுக்கு அதிக விஷயம் தெரியும் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் இணைய தேடலில் ஈடுபடுபவர்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் தகவல்களை தங்களது மூளையில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவலாக நினைத்துக்கொண்டு ஓவர் அறிவாளிகளாக நினைத் துக்கொண்டு விடுகின்றனர். இதுதான் ஆய்வின் மூலம் தெரிய வரும் செய்தி.



ஆனால் இப்படி ஒரு சோதனையை மட்டும் வைத்துக்கொண்டு இணையவாசிகள் பற்றி முடிவுக்கு வரமுடி யுமா? என்ன? அதுதான் பிஷர் குழு மேலும் 8 விதமான சோதனைகளை நடத்தியிருக்கிறது. மூளையின் செயல்பாடு பற்றிய புகைப்படத்தை தேர்வு செய்ய சொல்வது உள்ளிட்ட சோதனைகளை நடத்தியுள்ளனர். ஒரு சோதனையில் சரியான முடிவுகளே இல்லாத வகையில் தேடலை அமைத்து கேள்வி கேட்டபோதும் தேடல் பிரிவு தாங்கள் அறிவாளிகள் என கூறியுள்ளது.



மாறாக சுயசரிதை சார்ந்த கேள்விகள் கேட்டபோது இரு தரப்பினருமே ஒரே மாதிரி பதில் அளித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் வைத்து ஆய்வு செய்துதான், பிஷர் இணைய தேடல் ஒருவரை அவருக்கு இருப் பதைவிட மேலும் அறிவாளியாக நினைத்துக்கொள்ள வைப்பதாக பிஷர் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு தெரிந்தது மற்றும் உங்களுக்கு தெரிந்ததாக நினைப்பது, இரண்டுக்குமான இடைவெளி இணை யம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என்கிறார் அவர். பிஷர் சொல்வது சரியா? உங்கள் அனுபவத்தின் படி கேட்டுப்பாருங்கள்!

- சைபர்சிம்மன்

அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில், மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கீழ்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 390 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஊர் கூடி குழந்தைத் திருவிழா நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் அவரவர் சக்திக்கு தகுந்தார் போல், பள்ளிக்கு உதவிகளை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதாவது, சாக்பீஸ் பெட்டி, கரும்பலகை அளிப்பான், பேப்பர், விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட 25 வகையான பொருள்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்ற பெற்றோர், பொதுமக்கள் தங்களது வருமானத்துக்குத் தக்கவாறு பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுக்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஊர் கூடி குழந்தைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பெற்றோர், பொதுமக்கள் சார்பில் கல்வி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டு முசரவாக்கம் திரெüபதி அம்மன் கோயிலில் இருந்து தாம்பலத் தட்டுகளில் பள்ளிக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியா சென்ற இந்த ஊர்வலம் பள்ளியில் முடிவடைந்தது. அங்கு, பெற்றோர்கள் வழங்கிய பொருள்களை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் கூறியதாவது:

மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறது. இருந்த போதிலும் சில தேவைகளை நிறைவேற்ற பெற்றோர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். மேலும், பள்ளி மீது கிராம பொதுமக்களுக்கு தனி ஈடுபாடு ஏற்படும்.

இதைத் தொடர்ந்து, ஊர்கூடி குழந்தைத் திருவிழா நடத்த திட்டமிட்டோம். பெற்றோர், பொதுமக்கள் அவரவர் வசதிக்கு ஏற்ற பொருள்களை வாங்கித் தருமாறு ஒரு பட்டியலை வழங்கினோம். கட்டாயம் வழங்க வேண்டும் என்பது கிடையாது. விழாவில் கலந்து கொண்டால் போதும் என்றோம். ஆனால், பெற்றோர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சாதாரண ஏழை கூலித் தொழிலாளர்கள் முதல் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பள்ளிக்கு பொருள்களை வாங்கிக் கொடுத்தனர். இவற்றை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் பாடுபடுவார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சிவக்குமார், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Can’t make doctors work over 12 hrs, hospitals told...INDIAN EXPRESS

The Delhi government has issued a circular restricting duty hours of resident doctors in all hospitals in the city to not more than 12 hours per shift per day. While in theory and in the rulebook of foreign accreditation agencies this is the norm, in practice it was never followed with resident doctors often forced to do back-to-back shifts, sometimes clocking up to 36 hours without a break.

In the circular issued on March 16, Director (hospital services) Dr Sanjay Agrawal wrote: “All director/medical superintendents and heads of clinical departments of hospitals/institutions/departments are advised that in case resident doctors are assigned continuous duties across multiple shifts in their hospitals/institutions/departments, then this practice must stop forthwith and duty rosters for resident doctors are prepared in a way that they are out on clinical duties not exceeding 12 hours in a shift in a day.”

Longer durations of clinical duties can only be sanctioned by the director or medical superintendent of the hospital but even in such exceptional cases, the total duration of the shift cannot exceed 17 hours, the circular specifies. In all such cases, the concerned authority would have to inform the secretary (health and family welfare) in the government of Delhi through email.

While hospitals in both the private and public sectors are still working out schedules to follow the new guidelines, there are some though who feel that not mentioning the maximum number of work hours per week was the government’s sleight of hand, so as not to provoke a debate on the ticklish issue of manpower shortage in hospitals.“Doctors routinely work 36-hour shifts twice, sometimes even thrice a week. As a postgraduate student, we often clock up to 100-120 hours in the hospital. This is insane in a high-precision vocation like medicine because fatigue would inevitably take a toll on your clinical judgement, your ability to concentrate and in case of surgeons especially, mere physical ability. It is a violation that has gone on for too long,” a senior doctor at Maulana Azad Medical College said, on condition of anonymity.

“While specifying shifts is certainly an improvement, a better way to do this would have been to lay down that like every other worker in the country, a doctor will not work more than 40 hours. They did not do that because the moment that is specified, there would be questions about the number of staff members in the hospital. There, the government may find itself in a spot even worse than in private.

What this may essentially do for doctors is to force them to work without a weekly off,” another doctor at a Delhi government hospital said.

10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: மதுரையில் கணக்கீடு அட்டவணை விநியோகம்



மின் பயன்பாட்டில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு 10 யூனிட்டை சேமித்தால் ரூ.866 மிச்சப்படுத்தலாம் எனக்கூறி மின்கட்டண கணக்கீட்டு அட்டவணையை ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் வீடு,வீடாக விநியோகித்து வருகின்றனர். | முழு அட்டவணை - கீழே |

தமிழ்நாடு மின்சார வாரியம் 2014 டிச. 12-ம் தேதி மின்கட்டணத்தை திருத்தியமைத்தது. இதன்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. 100 யூனிட்வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1,200 யூனிட்வரை ரூ1.50, 500 யூனிட்வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்களுக்கு ரூ.2, மீதியுள்ள 300 யூனிட்களுக்கு ரூ.3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தினால் 200 யூனிட்வரை ரூ.3.50, அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ.4.60, இதற்குமேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிலைக்கட்டணமாக 500 யூனிட்வரை ரூ.20, இதற்கும் மேல் எனில் ரூ.50 வசூலிக்கப்படுகிறது. அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.1 முதல் 3 வரை பயன்பாட்டுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. 500 யூனிட்களுக்கும் மேல் பயன்படுத்து வோருக்கு மொத்தமாக ரூ.1,170 மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டல தலைவர் ச.சசாங்கன் கூறியதாவது: மின்பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் 10 யூனிட் கூடுதலாகிவிட்டாலும் ரூ.866 வரை கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.

எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என முழுமையாகத் தெரியாததால் கூடுதலாக செலவிடும் கட்டாயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மின் கணக்கீட்டு அட்டவணையை வெளியிட்டு, இதை வீடு,வீடாக விநியோகித்து வருகிறோம். இதுவரை 10 ஆயிரம் பிரதிகளை விநியோகித்துள்ளோம். 100 யூனிட்டுக்கு ரூ.120, 110 யூனிட் எனில் ரூ.185 கட்டணமாக செலுத்த வேண்டும்.

10 யூனிட்டுக்காக ரூ.85 கூடுதலாக செலவாகிறது. இதேபோல் 200 யூனிட்டுக்கு ரூ.320 கட்டணம் செலுத்தும் நிலையில், 210 யூனிட்டுக்கு ரூ.460 செலுத்த வேண்டும். 10 யூனிட்டுக்கு ரூ.250 கூடுதலாக செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதேபோல் 500 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.1,330 செலுத்தும் நிலையில் 510 யூனிட்டுக்கு ரூ.2,196 செலுத்த வேண்டும். இந்த பிரிவில் வருவோர் 10 யூனிட்டுக்காக ரூ.866 கூடுதலாக செலுத்த வேண்டும்.


10 யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தும்போது, அடுத்த கட்டண கணக்கீட்டு பிரிவுக்கு மாறிவிடுவதால் இந்தளவுக்கு கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது. எப்போதும் 500 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்துவோருக்கு பிரச்சினை இல்லை. அதே நேரம், 100, 200, 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோர் அடுத்த கட்டண கணக்கீட்டு முறைக்கு மாறிவிடாத அளவுக்கு மின்சாரம் பயன்படுத்துகிறோமா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

கணக்கீட்டுக்கு ஓரிரு நாளுக்கு முன்னதாகவே, எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம் என்பதை கண்காணிக்க வேண்டும். மின்கணக்கீட்டாளர் யூனிட்டுக்கு ஏற்ப சரியாக கணக்கிட்டுள்ளாரா என, கடந்தமுறை கணக்கீட்டை ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கூடுதல் செலவை தவிர்க்கலாம் என்றார். ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் உட்பட பலர் அட்டவணை விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எளிமையாக கணக்கிடும்விதம்

500 யூனிட்டுக்குமேல் வரும் மொத்த யூனிட்டுக்கும் X 6.60 (-) 1170

( எடுத்துக்காட்டு: 550 யூனிட் x 6.60 = 3630-1170 = 2460 )

13 entry points to Central station to be shut at night

Following the increase in platform ticket prices, the next step in decongesting Chennai Central station and beefing up security will be the closing of certain exit and entry points at night.

The Railway Protection Force (RPF), Government Railway Police (GRP) and Railways officials will form a three-tier security structure to prevent people from loitering inside the station.

“Armed policemen will monitor people walking into the station and railway officials will check the travel or platform tickets of those walking out. Vehicles will not be allowed to halt after dropping passengers. We are evolving a plan for car parking,” said an RPF officer.

“We will take measures to rehabilitate mentally ill persons and beggars who rest on the station premises,” said a GRP officer.

Certain entry and exit points will be closed between 11 p.m. and 4 a.m. “There are over 13 such spots at Central alone,” added the RPF officer.

Once the gates are closed, the entire station will be combed. “Those without valid tickets will be sent out,” said a railway official.

K.S. Gopalakrishnan, former zonal railway users’ consultative committee member, lauded the move. “Especially during summer, many platform dwellers sleep inside the suburban and Chennai Central railway stations. They should be directed to the Corporation’s night shelters,” he said.

“Incidents such as the train ‘hijack’ from the Moore Market Complex in 2009 and the recent bomb blast at Central can be avoided if stringent checking is at place,” said a former police officer.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...