Thursday, April 9, 2015

விண்ணப்பங்கள் குவிந்ததால் குலுக்கல் முறையில் ‘எச் 1 பி’ விசா அமெரிக்கா முடிவு

logo

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 3–வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது.

மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.

தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசா வழங்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு பணிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

சிவப்பு ரத்தம் குடித்த செம்மரக்கட்டை

கடலில் மட்டுமல்ல, காடுகளில் எல்லைத்தாண்டி போனாலும், உயிருக்கு ஆபத்து என்பதை நிரூபிக்கும் ஒரு கொடூர சம்பவம் ஆந்திரா வனப்பகுதிகளில் அரங்கேறியிருக்கிறது. செம்மரக்கட்டைகளை வெட்டிக்கொள்ளையடித்ததாக தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்கள், ஆந்திர மாநில போலீசைச் சேர்ந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 20 பேர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள சிலருக்கு மரம் வெட்டுவதில் உள்ள லாவகம் வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பார்கள். சாதாரண ரம்பத்தை பயன்படுத்தியே மரங்களை வெட்டி, பட்டையை உரித்து, லாரிகளில் ஏற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதால், ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் செம்மரத்தை வெட்டி கடத்தும் தொழிலுக்கு இவர்களைத் தேடிப்பிடித்து கடத்தல்காரர்கள் இந்த வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது உயிருக்கு ஆபத்தான வேலை என்றாலும், ஒருநாள் காட்டுக்குள் சென்று செம்மரத்தை வெட்டிக் கொடுத்தால் பலமுள்ளவன் ரூ.20 ஆயிரத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நப்பாசையில், உயிரை பணயம் வைத்து இந்த தொழிலுக்கு செல்கிறார்கள்.

இதுவரையில் பலர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் மே மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும், ஜூலை மாதத்தில் 2 பேர்களும், ஆகஸ்டு மாதத்தில் 2 பேர்களும் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் ஆந்திர போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், இப்போதும் ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் கைது செய்யப்பட்ட 1,121 தமிழக மக்கள் கடப்பா, கர்னூல், நெல்லூர், சித்தூர் மாவட்ட சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் காட்டுக்குள் போய் செம்மரம் வெட்டப் போனால் பிடித்து ஜெயிலில் போடுவார்கள், துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயமில்லாமல் இப்படி போய் மாட்டிக் கொண்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஆந்திர அரசாங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் போட்டே கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து இவ்வாறு செம்மரம் வெட்டப்பட்டுக் கொண்டே இருந்தால், தமிழக காடுகளில் சந்தன மரங்களை வெட்டிச் சாய்த்த நிலை செம்மரங்களுக்கும் வந்துவிடும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் களவாடப்படுவது மட்டுமல்லாமல், காடுகளும் அழிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுபவர்களை சுட்டுத் தள்ள போலீசுக்கு, ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அப்படி இருந்தும் சட்ட விரோதமாக மரம் வெட்டச் சென்று உயிரை இழந்துவிட்டனர். இனி மேலும் இப்படி யாரும் செம்மரம் வெட்டவரக் கூடாது, வந்தால் இதுதான் நிலை என்று காட்டுவதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது போல தெரிகிறது. இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி உயிரை பறித்தற்கு பதிலாக கைது செய்து இருக்கலாம், முட்டுக்குகீழ் சுட்டு இருக்கலாம், அதைத்தவிர்த்து இப்படி செய்தது மனித உரிமை மீறிய செயல், இது போலி என்கவுண்டர், சி.பி.ஐ. விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இனியும் ஜவ்வாது மலையில் இருந்து யாரும் இந்த செம்மர கடத்தல் தொழிலுக்கு செல்லாத வகையில், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய அரசாங்கமும், மாநில அரசும் நிறைவேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

Wednesday, April 8, 2015

NRI couple barred from taking a flight from China to Chennai

CHENNAI: Lack of communication about the lifting of a travel ban led to officials of an airline barring a woman from the city and her husband, both US nationals, from taking a flight from Kunming, China, to Chennai, where they intended to visit the woman's mother.

The woman and her husband had to return directly to the US from China.

The Bureau of Immigration was apparently the villain of the piece, having failed to convey to airlines that the country had lifted a rule barring foreign nationals from travelling to India on a tourist visa more than once within a two-month period.

Amiya Kesavan, the woman's mother, told TOI that her daughter Kamala Kesavan Witowsky and her husband James Witowsky, both US nationals, arrived in Chennai from the US on February 25. After spending a few days in her mother's house in Chennai, Kamala and her husband took a flight to Kunming, in southwest China's Yunnan Province, where they planned to visit friends.

Trouble was waiting for the couple in Kunming airport, from where they had tickets to fly to Chennai via Kolkata on March 11, with airline staff informing them that they could not allow them to board the aircraft because of the ban on foreign nationals visiting India a second time within two months.

After missing their flight, the Wittowskys contacted officials at the Indian mission in China, who informed them that the Centre had enforced the ban in view of the Mumbai terror attack. They said the government had lifted the ban and, anyway, it had only been applicable only to citizens of Afghanistan, Iran, Pakistan, Iraq, Sudan, Bangladesh and China, and stateless persons.

Immigration officials failed to communicate to airlines that the government had revoked the ban, so officials did not allow her daughter and son-in-law to return to India, Kesavan said.

"They were stuck in China for three days before they decided to return to the US directly from China," she said. "Kamala and her husband attempted in vain to contact immigration officials in both New Delhi and Chennai. Nobody answered their calls."

As a result, she said, they could not use or cancel the tickets they booked for the flight from Kunming to Chennai via Kolkata, causing them both distress and unnecessary financial loss.

Immigration officials were not available for comment.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல், 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 7 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

இந்த உயர்வு 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி சதவீதம் 107 ஆக உயர்ந்தது.

6 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 6 சதவீத அளவிற்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதன் காரணமாக தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்ந்தது.

இந்த உயர்வு 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

50 லட்சம் பேர் பயனடைவார்கள்

இந்த உயர்வின் காரணமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 20 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் எனவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிவாரண சலுகையின் கீழ் அடிப்படை சம்பளத்தில் இது 113 சதவீதமாக உயரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவகழகம் அங்கீகாரம் கல்லூரி முதல்வர் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

மருத்துவகழகத்தின் அங்கீகாரம்

மருத்துவகல்லூரிகளை நடத்துவதற்கு இந்திய மருத்துவகழகத்தின் அங்கீகாரம் அவசியம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவகல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகள் இந்திய மருத்துவகழகம் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. திருவாரூர் மருத்துவகல்லூரியிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மருத்துவ கழகம் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கியது. இந்த ஆண்டு தொடர்ந்து 5–வது முறையாக அங்கீகாரம் வழங்குவது குறித்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தியது.

மருத்துவகழகத்தின் சார்பில் மேற்குவங்காளம், அரியானா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர்கள் தத்தா, ஷாம்சிங்க்லா, பிரிசில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மருத்துவ கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி, 17–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு பணி முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவகல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல் ஆய்வு

திருவாரூர் மருத்துவகல்லூரியில் தொடர்ந்து 5–வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவகழகம் ஆய்வு நடத்தியது. ஆய்வு குழுவினருக்கு எனது தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவகல்லூரி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி விவரித்தோம். உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவகழகம் திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின்போது மருத்துவகழகம் சில வசதிகளை செய்ய வேண்டும் என சுட்டி காட்டியது. அந்த வசதிகளை செய்த பின்னர் 2–வது கட்டமாக ஆய்வு நடத்தி அதன் பின்னர் தான் மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு முதல் கட்ட ஆய்வின் முடிவிலேயே மருத்துவ கழகம் திருப்தி அடைந்து திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அடுத்ததாக 2020–ம் ஆண்டு தான் மருத்துவகழகம் ஆய்வு நடத்தும்.

நன்றி

இந்த சாதனையை எட்டுவதற்கு உதவி புரிந்த உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலை குறி வைத்திருக்கலாமே?

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள சேஷாசலம் வனப் பகுதியில் சட்ட விரோதமாகச் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கொண்டிருந்த இருபது தொழிலாளர்கள், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பவர்கள் அனைவருமே தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்குப் பஞ்சம் பிழைக்கப் போன அப்பாவி ஆதிவாசி மரம் வெட்டிகள்.

செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்புக்கான சிறப்புக் காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் என்று பரவலாக அறியப்படும் சிவப்பு சந்தன மரங்களை சட்ட விரோதமாக வெட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. அதற்காக அவர்கள் ஈவிரக்கமோ, மனிதாபிமானமோ இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமா என்று கேட்டால், சிறப்புக் காவல் படையினரின் மனசாட்சியேகூட அதை ஏற்றுக் கொள்ளாது!

செம்மரங்களை வெட்டுபவர்கள் கூலித் தொழிலாளர்கள். அவர்கள் கடத்தல்காரர்கள் அல்லர். வெளிநாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருள்களைக் கடத்துபவர்களையும், இந்தியாவிலிருந்து நட்சத்திர ஆமைகள், தந்தங்கள், கடவுள் சிலைகள், சந்தனக் கட்டைகள் போன்றவற்றைக் கடத்துபவர்களையும் போன்றவர்கள் அல்ல இவர்கள். இவர்கள் கைது செய்யப்படலாம், தடுப்புக் காவல் படையினரால் தாக்கப்படலாம், ஆனால், நாயைச் சுட்டுக் கொல்வதுபோலச் சுட்டுக் கொல்லப்படுவது என்பது நினைத்துப் பார்க்கவே கொடூரமானதாக இருக்கிறது.

சேஷாசலம் வனப் பகுதியில் திருட்டுத்தனமாக செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தபோது அவர்களைச் சுற்றிவளைத்து சரணடையச் சொன்ன காவல் படையினரை, அரிவாளாலும், கோடாரியாலும் அந்தக் கும்பல் தாக்க முற்பட்டதாகவும், அதற்காகத் தற்காப்புத் தாக்குதல் நடத்தியதாகவும் காவல் துறையினர் கூறுவது உண்மையாகவே இருக்கலாம். கூலிக்கு மரம் வெட்டிக் கொண்டிருந்த அப்பாவிகளை ஏவி, காவல் படையினரைத் தாக்கச் சொல்லிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிப் போயிருக்கக் கூடும். காவல் துறையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் தவறில்லை. ஆனால், அந்தத் துப்பாக்கிகள் காலுக்குக் குறி வைக்காமல் உயிருக்கு உலை வைத்திருக்கிறதே அதுதான் கொடூரம்!

ஆந்திர மாநிலத்தில் கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் பரவலாக சிவப்பு சந்தன மரங்கள் வளர்கின்றன. ஏறத்தாழ 4.67 லட்சம் ஹெக்டேர் பரப்பில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சர்வதேச ஒப்பந்தப்புள்ளி மூலம் ஆண்டுதோறும் நடைபெறும் ஏலத்தில் ஆந்திர அரசுக்கு இந்த செம்மரக் கட்டைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் ரூ.1,000 கோடிக்கும் அதிகம்.

கடந்த ஆண்டு மே மாதம் இதே சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தல்காரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதுவரை மூவாயிரத்துக்கும் அதிகமான செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013-இல் மட்டும் 2,025 டன் செம்மரக் கட்டைகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. கடந்த சில வருடங்களாக செம்மரக் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக் கட்டைகள் கடந்த டிசம்பர் மாதம் ஏலம் விடப்பட்டன.

செம்மரக் கட்டைக் கடத்தல்காரர்களுக்கும், தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே மோதல் நடப்பதும், காவல் துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதும் புதிதொன்றுமல்ல. அப்பாவி மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களை கடத்தல்காரர்கள் சமயோசிதமாகப் பயன்படுத்தித் தங்களைப் பிடிக்க முற்படும் காவல் துறையினரைத் தாக்குவதும் புதிதல்ல.

2013 டிசம்பர் 15-ஆம் தேதி கடத்தல்காரர்களுக்கும் தடுப்புக் காவல் படையினருக்கும் இடையே நடந்த கடும் சண்டையின்போது, காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. இரண்டு மூத்த வனத் துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களால் கல்லால் தாக்கப்பட்டு இறந்தனர். காவல் படையினர் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். இன்னும் மூன்று பேர் தப்பி ஓடினர். அதுமுதலே, கடத்தல்காரர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி தடுப்புக் காவல் படைக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

செம்மரக் கடத்தல் தடுக்கப்பட வேண்டும் என்பதிலும், கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியாக வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து யாருக்குமே இருக்க முடியாது. அதற்காக, கடத்தல்காரர்களின் கூலிகளாக மரம் வெட்டிப் பிழைப்பு நடத்தும் ஏழை ஆதிவாசிகள் சுட்டுக் கொல்லப்படுவதா என்கிற கேள்விக்கு, இருதயத்தின் ஓரத்தில் ஈரம் ஒட்டிக் கொண்டிருக்கும் நபர்கூட ஆமோதித்து பதிலளிக்க இயலாது.

சட்டப்படி, தற்காப்புக்காக நடத்தப்படும் என்கவுன்ட்டராகவே இருந்தாலும், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 302-இன் கீழ் சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, அவர்கள் தற்காப்புக்காகத்தான் அதிரடித் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். இந்தச் சட்டப்படியான நடவடிக்கையை, இந்தியா முழுவதுமே காவல் துறையினர் கடைப்பிடிப்பதில்லை. இந்த முறையாவது, சட்டம் முறையாகத் தனது கடமையைச் செய்யட்டும்!

பண பலமும், அரசியல் பின்புலமும் உள்ள செம்மரக் கடத்தல்காரர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்காகக் கோடாரியைக் கையிலெடுத்து மரம் வெட்டிய ஏழை ஆதிவாசிகள் கொல்லப்படுகிறார்கள். வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?

Tuesday, April 7, 2015

குறள் இனிது: யாமிருக்க பயமேன்?...by சோம.வீரப்பன்



அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தீர்களா? தி.நகர் உஸ்மான் சாலையில் ஓர் பெரிய கடையில் மகேசும், அஞ்சலியும் வேலை பார்ப்பார்கள். அவர்களது மேற்பார்வையாளர் அவர்களை நேரத்திற்கு சாப்பிட விடமாட்டார், தூங்க விடமாட்டார், ஏன் பேசக்கூட விடாமல் பாடாய் படுத்துவார்.

தங்குமிடமெங்கும் குப்பை, வேர்வை, நெருக்கடி. கீழ்நிலைப் பணியாளர்களின் அவல நிலையை அப்படம் தெளிவாகப் பிரதிபலித்தது.

அடுத்து இதையும் செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். சண்டீகரில் பெரிய வங்கியின் முதன்மை மேலாளர் அவரது உயரதிகாரிகள் தகுதி இல்லாத ஒருவருக்குக் கடன் கொடுக்கச் சொல்லி செய்த சித்ரவதை காரணமாக ரயில் முன் விழுந்து தற்கொலையே செய்து கொண்டு விட்டார்!

அட, போங்கப்பா! கடைநிலை, இடைநிலை என்றில்லை. மேல்நிலை அதிகாரிகளுக்கும் அலுவலகத்தில் ஏகப் பிரச்சனைகள் உண்டு. இன்போஸிஸ் நிறுவனத்தின் ஓர் உயர்பதவியில் இருந்த பல்கேரிய-அமெரிக்கப் பெண் அதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை தரப்படுவதாகப் புகார் செய்தார்.

இன்போஸிஸ் நிறுவனத்தின் இன்னுமொரு மூர்த்தி என்று புகழப்பட்ட பனீஷ்மூர்த்தி மீது தான் அந்தக் குற்றச்சாட்டு! அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருப்பது இந்த மாதிரியான தொல்லைகள்தான்!

அரசாங்கம் சட்டம் தான் இயற்ற முடியும். ஒவ்வொரு அலுவலகத்திற்குள்ளும் காவல் நிலையமா வைக்க முடியும்? பணியிடத்தில் இத்தவறுகள் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத் தலைவருடையது தானே?

முறைமையோடு ஆட்சிசெய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன் அம்மக்களுக்கு இறைவனைப்போல போற்றப்படுவான் என்கிறது குறள்! இன்றைய சூழலில் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளை பண்டைய அரசர்களுடன் ஒப்பிட்டு குறளின் பலன் பெறலாம்.

தற்காலத்தில் நிறுவனத்தில் சீரிய கொள்கை கோட்பாடுகளை வகுத்தல், அவற்றை நிறுவனமெங்கும் கொண்டு செலுத்துதல், அவை குறித்த புகார்கள் வந்தால் நெறி படுத்துதல் ஆகிய மூன்று அதிகாரங்களும் கடமைகளும் அதன் தலைவர்களுக்கே உள்ளன!

தப்பு நடக்காத, நடக்க முடியாத அமைப்பை ஏற்படுத்துவது முதல் கடமை! அமெரிக்காவில் மிராண்டா விதியின்படி ஓர் கைதியிடம் கூட “உங்களுக்கு மௌனம் சாதிக்கும் உரிமை உண்டு” என்று சொல்லிவிட்டுத்தான் விசாரிக்க வேண்டும்! அனாவசியமாகத் தொல்லை கொடுக்கும் அதிகாரிகளையும், சும்மா எரிச்சல் மூட்டி பணியாளர்களின் ஊக்கத்தைக் குறைக்கும் மேலாளர்களையும், அதிகார வரம்பை மீறும் உயரதிகாரிகளையும் கட்டுபடுத்தாவிட்டால் தினம்தினம் பிரச்சினைதான்.

வேலை வாங்குவதிலும் ஒரு தரம், தராதரம் வேண்டுமில்லையா? பணியாளர்கள் தம் குறைகள் கீழ்நிலையில் தீர்க்கப்படாவிட்டால் மேலதிகாரிகளைத் தயங்காமல் அணுகும் முறை வேண்டுமில்லையா? தப்பு செய்தவனை தப்பிக்கவிடுவது பெரும் தப்பாயிற்றே! இன்றைய உலகில் ஓர் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலமாக உடனுக்குடன் எல்லோரையும் அடைந்து விடலாமே!

இங்கு தவறு நடக்காது, தலைவர் நடக்கவிட மாட்டார். மீறி நடந்து விட்டால் நீதி செய்வார் என்று பணியாளர் எண்ணும்படி நடந்து கொள்ள வேண்டியது தலைவரின் தலையாய கடமை! நல்முறை சொல்லும் திருமறை இதோ.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...