Friday, April 24, 2015

சென்னையில் இடி-மின்னலுடன் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் இன்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று இரவு சுமார் 7.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இதில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, கிண்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல், சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, பட்டினபாக்கம், முகப்பேரிலும் மிதமான மழை பெய்தது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்குளத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், படப்பை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது.

பல்லாவரம் குடியிருப்பில் மின்னல் தாக்கி தென்னை மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாழ் பொதுமக்கள், திடீர் மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாஸ்வேர்டால் என்ன பயன்?


மு
தலில் ஒரு கேள்வி! உங்கள் பாஸ்வேர்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் பாஸ்வேர்டு மதிப்பானது என்பது உங்கள் கருத்தா? இல்லை, என்ன பெரிய பாஸ்வேர்டு புடலங்காய் பாஸ்வேர்டு, அதனால் பத்து பைசா பயன் இல்லை என்று நினைக்கிறீர்களா?

உங்கள் பாஸ்வேர்டு பற்றி யோசித்து ஒரு பதிலை முடிவு செய்யுங்கள். ஒருவேளை பாஸ்வேர்டால் என்ன பயன் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால் நீங்கள் ஐந்தில் ஒருவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இதற்காக நீங்கள் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ள முடியாது. மாறாக கவலைப்பட்டாக வேண்டும். ஏனெனில் சமீபத்தில் பாஸ்வேர்டு பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு இணையப் பயனாளிகள் தங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்று கருதுவதாக தெரிய வந்துள்ளது.
இணையப் பாதுகாப்பில் முன்னிலை வகிக்கும் காஸ்பெர்ஸ்கி லேப் நிறுவனம் பி2பி இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதி பேர் தான் தங்கள் பாஸ்வேர்டை முக்கியமாக கருதுவதாகவும் அது தப்பித்தவறி சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். மாறாக 21 சதவீதம் பேர், சைபர் குற்றவாளிகளுக்குத் தங்கள் பாஸ்வேர்டால் எந்தப் பயனும் இல்லை என்று கூறியுள்ளனர்.
அதாவது நாங்கள் என்ன இணையப் பிரபலங்களா இல்லை கோடீஸ்வரர்களா? எங்கள் பாஸ்வேர்டை எல்லாம் களவாடி என்ன செய்யப்போகிறார்கள் என்பது போல கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அப்பாவித்தனம் ஆபத்தில் முடியலாம் என்கின்றனர் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள். பிரபலமோ இல்லையோ இணையத்தில் இருக்கும் எல்லோருக்கும் பாஸ்வேர்டு முக்கியமானது, மதிப்பு மிக்கது என்று சொல்கின்றனர். பாஸ்வேர்டால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். இணையத்தில் வைக்கப்படும் தனிப்பட்ட விவரங்கள், அந்தரங்கத் தகவல்கள் மற்றும் பணம் (ஆன்லைன் வங்கிச் சேவை) ஆகியவற்றுக்கான பூட்டுச் சாவி போன்றது பாஸ்வேர்டுகள். அவை களவாடப்பட்டால் வில்லங்கம் தான் என்கின்றனர்.
நீங்கள் பிரபலமானவராகவோ அல்லது கோடீஸ்வரராகவோ இலலாவிட்டாலும் கூட உங்கள் பாஸ்வேர்டால் சைபர் குற்றவாளிகள் பலனடைய முடியும் என்கிறார் காஸ்பெர்ஸ்கி லேபின் அதிகாரி எலேனா கார்சென்கோவா. பாஸ்வேர்டு திருடப்படும்போது பயனாளி மட்டும் பாதிக்கப்படவில்லை, அவரது தொடர்புகளும் தான் என்றும் எச்சரிக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு, ஒருவரது இமெயில் பாஸ்வேர்டு, சைபர் குற்றவாளி கையில் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் மூலம் அவரது முகவரி பெட்டியில் உள்ள அனைத்து தொடர்புகளின் மெயிலுக்குள்ளும் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதற்கான கதவு திறக்கப்படுவதாக வைத்துக்கொள்ளலாம். பேஸ்புக் போன்ற தளங்களுக்கும் இது பொருந்தும்.
இப்போது பாஸ்வேர்டின் முக்கியத்துவம் புரிகிறதா?
எனவே இனி பாஸ்வேர்ட் விஷயத்தில் விழிப்புடன் இருங்கள். தொடர்ந்து பாஸ்வேர்டு பாதுகாப்புக் குறிப்புகளை பார்க்கலாம்.
முதல் குறிப்பு, முதலில் தனித்தனி பாஸ்வேர்ட் தேவை என்பது. இமெயில், பேஸ்புக், இன்னும் பிற என எத்தனை இணையச் சேவைகளை பயன்படுத்தினாலும் சரி அவை ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு அவசியம். இதன் பொருள் ஒருபோதும் எல்லாச் சேவைகளுக்கும் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்தக்கூடாது . ஏன் என எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு சேவையின் பாஸ்வேர்டு திருடு போனது என்றால் உங்கள் எல்லாச் சேவைகளுக்குமான கள்ளச்சாவி குற்றவாளி கையில் கிடைத்தாயிற்று என்று பொருள்!
ஆக , நீங்கள் பல இணையச் சேவைப் பயனாளி என்றால் முதலில் ஒவ்வொன்றுக்கும் தனி பாஸ்வேர்டு இருப்பதை உறுதி செய்யுங்கள்.

மாருதி 800-ம் மாறாத மனதும்!

ஹர்பால் சிங் | (கோப்புப்படம்)

பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருக்க முடியும் என்ற நிலை இருந்த காலகட்டத்தில் குடும்பத்துக்கு அடக்கமான மருமகள் போன்ற எளிமையுடன், கைக்கு அடக்கமான விலையில் இந்தியச் சாலைகளுக்கு வந்தவை மாருதி கார்கள். அதாவது மாருதி 800 கார்கள்.

புதுப் பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை பலரின் அபிமானத்தை மிக விரைவிலேயே பெற்று, பல வீடுகளின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே ஆகிவிட்ட வசந்த வாகனம் அது.

மொத்தம் 28 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாருதி 800 கார்கள் தயாரிக்கப் பட்டன. இவற்றில் 26 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் இந்தியாவிலேயே விற்பனை செய்யப்பட்டன. நேபாளம், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இந்தக் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏன் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நடுத்தர வர்க்கத்து வீடுகளின் முன்னால், இந்திய நண்பனாக நின்றுகொண்டிருந்தது இந்தக் கார்.

1930-கள், 1940-களில் தங்கள் பணக்காரத் தாத்தாக்கள் வாங்கிய பழைய மாடல் கார்களைப் பார்வைக்கு வைத்துப் பரவசப் படும் நபர்கள் இன்றும் உண்டு. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிமுகமாகி இந்தியச் சாலைகளிலிருந்து நம் கண்முன்னே விடைபெற்றுவிட்ட கார் இது.

அடுத்தடுத்து சந்தைக்கு வந்த ‘சொகுசு’ கார்கள், நகரத்துச் சாலைகளில் உற்சாகமாக உலவத் தொடங்கியதும் ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கின மாருதி 800 கார்கள். இக்கார்களின் தயாரிப்பு, கடந்த ஆண்டுடன் நிறுத்தப்பட்டும் விட்டது.

இன்று பல மாருதி கார்கள் எங்கோ புதர் மண்டிய பழைய காரேஜ்களில் மீளாத் துருவில் ஆழ்ந்திருக்கலாம். பல கார்களின் பாகங்கள் இரும்பாலைகளில் உருக்கப்பட்டு வெவ்வேறு வடிவங் களைப் பெற்றிருக்கலாம். ஆனால், நடுத்தர வர்க்க வாகனமாகத் திகழ்ந்த இந்தக் கார் பற்றிய நினைவு கள் பலருக்கும் பசுமையாக இருக்கும்.

அப்படி தனது வாழ்நாள் முழுதும் மாருதி 800-ஐ நேசித்தவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்பால் சிங். இந்தியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர்தான் இந்தியாவில் முதன்முதலாக மாருதி 800-ஐ வாங்கிய அதிர்ஷ்டசாலி!

இந்திரா காந்தி கொடுத்த சாவி!

இப்போதெல்லாம் விருப்பமான வாகனத்தை ஷோரூமில் பார்த்து தேர்ந்தெடுத்தவுடன் எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வாகனம் நம் கைக்கு வந்துவிடும். ஆனால், அப்போது நிலைமை அத்தனை எளிதாக இல்லை. அம்பாசிடர் கார், மோட்டார் சைக்கிள்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். மாருதி 800 கார் சந்தைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் அதை வாங்க ஏராளமானவர்கள் ஆர்டர் செய்திருந்தார்கள்.

எனவே, குலுக்கல் முறையில் தேர்வு செய் யப்படுபவருக்கு முதல் காரை வழங்க முடிவுசெய்யப்பட்டிருந் தது. அதிர்ஷ்டம் ஹர்பால் சிங்கின் பக்கம் இருந்தது. குலுக்கல் முறையில் அவர் தேர்வுசெய்யப்பட்ட பின்னர், 1983 டிசம்பர் 14-ல் இந்தியாவின் முதல் மாருதி 800 காரின் சாவியை அவருக்கு வழங்கினார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

பால் போன்ற வெண்மை நிற கார் அது. இந்தியன் ஏர்லைன்ஸில் ஹர்பால் சிங்குடன் பணிபுரிந்த ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹர்பால் சிங்கை வாழ்த்தினார். அவர் ராஜீவ் காந்தி!

‘பாதுகாக்க வேண்டும்’

கார் என்பதையும் தாண்டி தனது குடும்ப உறுப்பினராகவே அதைக் கருதிவந்தார் ஹர்பால் சிங். கடைசி வரை இந்தக் காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்கவில்லை. 2010-ல் அவர் காலமானார். 2 ஆண்டுகளில் அவரது மனைவியும் காலமானார். அதன் பிறகு டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே, எஜமானரைத் தொலைத்துவிட்ட வளர்ப்பு நாய் போல் இயக்கமற்று கிடக்கிறது அந்தக் கார். சிங் தம்பதியினரின் இரு மகள்களால் காரைப் பராமரிக்க முடியவில்லை.

“எங்களுக்குப் பணமே வேண்டாம். மாருதி நிறுவனம் இந்தக் காரைப் பெற்றுக்கொண்டு நல்ல முறையில் பராமரித்துப் பாதுகாத்தாலே போதும். மாருதி 800-ன் முதல் வாடிக்கையாளரான எனது மாமனாரின் பெயர் இதன் மூலம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்கிறார் ஹர்பால் சிங்கின் மருமகன்களில் ஒருவரான தேஜிந்தர் அலுவாலியா.


மாருதி நிறுவனத்தின் 25-வது ஆண்டு விழாவின்போது இந்தக் காரைப் பார்வைக்கு வைத்து பெருமிதப்பட்டுக்கொண்டது அந்நிறுவனம். எனினும் அதன் பின்னர், அதைக் கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார்கள் ஹர்பால் சிங் குடும்பத்தினர். ஊடகங்களில் இதுதொடர்பாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காரை வாங்கிக்கொள்ளப் பலரும் முன்வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, “மாருதி 800-ன் முதல் வாடிக்கையாளர் எனும் முறையில் ஹர்பால் சிங் எங்கள் மரியாதைக்குரியவர். காரை மிகுந்த அக்கறையுடன் பராமரித்தவர் அவர். அவரது குடும்பம் விரும்பினால் அதை நாங்கள் பெற்றுக்கொள்ளத் தயார்” என்று மாருதி சுஸுகியின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

அந்தத் தகவலுக்காக, மேலுலகத்திலிருந்து மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பார் ஹர்பால் சிங்!

chandramohan.v@thehindutamil.co.in

Flight From Chicago Makes Emergency Landing After 3 Passengers Lose Consciousness

CHICAGO (CBS) — It was a flight they’ll never forget. Terrified passengers on a flight from Chicago to Connecticut took 28,000-foot nosedive on Wednesday, as their plane made an emergency landing after three people on the plane passed out.

SkyWest Flight 5622, operating as United Express, took off from O’Hare International airport at 9:20 a.m. Wednesday, bound for Hartford, Connecticut, but was diverted to Buffalo, New York, when a passenger lost consciousness. Although initial reports indicated only one passenger passed out, the airline later confirmed three passengers lost consciousness.

To make its emergency landing, the plane made a dramatic drop. In just three minutes, the jet carrying 84 passengers and crew descended from 38,000 feet to 10,000 feet.

“The scariest thing was really just the nosedive that happened. I mean, it was very obvious that we were descending as rapidly as we could at that point,” passenger Vanessa Bergmann said. “I can’t even remember if I was flying forward, or being pushed back.”

The plane landed safely at Buffalo Niagara International Airport at about 11:40 a.m., and passengers were evaluated by medical teams on the ground, and were released. No one was taken to a hospital.

SkyWest officials said the pilot feared passengers had lost consciousness due to pressurization problems, but that turned out not to be the case.

The standard response to a loss of cabin pressure is to descend to a lower altitude, to find more oxygen as quickly as possible.

“That is far greater than the rate of descent for this plane. Obviously the plane could withstand it. It’s beyond the envelope of what you need to do, so you know that these pilots knew they were in a very grave and very serious situation,” said aviation attorney Mary Schiavo.

It was unclear why the passengers lost consciousness, but the airline said it is investigating.

source document:http://chicago.cbslocal.com/2015/04/23/flight-from-chicago-makes-emergency-landing-after-3-passengers-lose-consciousness/

அரசு மருத்துவமனைகளில் 1,500 புது டாக்டர்கள் ஒரு வாரத்தில் மேலும் 1,000 பேர் சேர வாய்ப்பு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டோரில், 1,500 டாக்டர்கள் புதிதாக அரசு மருத்துவமனைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 1,000 பேர் ஒரு வாரத்தில் இணைகின்றனர்.குற்றச்சாட்டு :தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லை; தேவைக்கேற்ப நியமிக்கப்படவில்லை என, குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில், 2,167 உதவி டாக்டர்கள், 700 எம்.எஸ்., - எம்.டி., படித்த சிறப்பு பிரிவு டாக்டர்களும், அரசுப்பணியில் சேர்க்கப்படுவர் என, தமிழக அரசு அறிவித்தது.


உதவி டாக்டர்கள் பணியிடங்களுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, 2,167 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 'வாக் இன் இன்டர்வியூ' அடிப்படையில், 447 சிறப்பு பிரிவு டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நேர்காணல் :இவர்களுக்கான, நேர்காணல், சென்ற மாதம் நடந்தது. இவர்களில், 98 சதவீதம் பேர், இடங்களை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 'ஒரு மாதத்திற்குள், பணியில் சேர வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியது.


இந்த நிலையில், மருத்துவ கல்வி, பொது சுகாதாரத்துறை, மருத்துவ சேவை இயக்கங்களின் கீழ் செயல்படும், மருத்துவமனைகளில், 1,500க்கும் மேலான டாக்டர்கள்,

தங்களுக்கு ஒதுக்கிய பிரிவுகளில் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், 1,000 பேர் வரை, இம்மாதம், 30ம் தேதிக்குள் இணைவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், தொகுப்பூதிய அடிப்படையில், புதிதாக, 7,000 நர்ஸ்களை சேர்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் -

எம்.பார்ம்., நுழைவு தேர்வு:மே 10க்கு ஒத்தி வைப்பு

சென்னை:அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மே 10க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பார்ம்., படிப்புக்கு, 64 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஏப்., 20ல் முடிந்தது; 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதற்கான நுழைவுத் தேர்வு, மே 3ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த தேர்வு, மே 10 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.'நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Will the hunt for AIIMS site end with Thanjavur?

  • Finding manpower will be easy as Thanjavur has a reputed medical college

  • When the team deputed by the Union Health Ministry scouting for a suitable location for establishing an All India Institute of Medical Sciences (AIIMS) in Tamil Nadu comes calling here on Friday, the district administration, backed by public interest groups, is eager to press the case of Thanjavur.

    With the city already on the medical tourist map of the region for several decades now, establishment of an AIIMS at Sengipatti could serve not just Thanjavur but also Tiruchi, Pudukkottai and a clutch of eastern and southern districts of the State.

    Sources in the administration indicate that the officials are just banking on the excellent logistics and land availability of the suggested 200-odd acres of centrally located land at Sengipatti accessible equally from Thanjavur, Tiruchi, and Pudukkottai but pressing the case of Thanjavur as the best bet what with the city already having the basic foundation for any grand super speciality medical research and outreach institution in the Thanjavur Medical College Hospital which has turned out hundreds of medical professionals to serve the public in the past 50 years.

    “Two important factors bolster the case of Thanjavur — it’s strategic location and abundance of medical facilities and support institutions for outreach and academic research activities essential for the growth of AIIMS-like institutions.

    Institutional support from several Union Government-sponsored entities such as BHEL, Oil and Natural Gas Corporation, OFT, and the NIT could be counted upon in Thanjavur,” said a couple of doctors in the city discussing the project.

    More importantly, qualified and experienced medical professionals might find it easier to base themselves in Thanjavur, where professional experience sharing could add to their advantage. Continuing medical education and virtual medical facilities have taken deep roots here and that would help in the vertical take off for a new AIIMS rather than a place where sub-zero spade work was essential, they point out.

    There is the upcoming SIDCO industrial estate near the Sengipatti site and the State government could easily create a pharma manufacturing cluster there adding to the advantage, the professionals say.

    New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

    New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...