Friday, April 24, 2015

சென்னையில் இடி-மின்னலுடன் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் இன்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று இரவு சுமார் 7.30 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இதில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, கிண்டி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது. அதேபோல், சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, பட்டினபாக்கம், முகப்பேரிலும் மிதமான மழை பெய்தது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்குளத்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், படப்பை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் கனமழை பெய்தது.

பல்லாவரம் குடியிருப்பில் மின்னல் தாக்கி தென்னை மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாழ் பொதுமக்கள், திடீர் மழை காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...