Wednesday, April 15, 2015

ஏ.ஐ.சி.டி.இ., விதிகள் மீறலா? 593 கல்லூரிகளில் ஆய்வு!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் இணைப்பை நிறுத்தி வைக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில், 596 தனியார் சுயநிதி மற்றும் சிறுபான்மைப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு, ஆண்டுதோறும், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின் படி, அண்ணா பல்கலையின் இணைப்பு புதுப்பிக்கப்படும்.

நிரந்தர இணைப்பு:

சில கல்லூரிகளுக்கு நிரந்தர இணைப்பு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இணைப்பை புதுப்பிக்க, ஆண்தோறும் டிசம்பர் இறுதியில் கல்லூரிகள் விண்ணப்பம் அளிக்கும். நிரந்தர இணைப்பு இல்லாத கல்லூரிகள் தவிர, மற்ற கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை அதிகாரிகள் சென்று, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நேரடியாக சோதனை செய்வர். இந்த ஆண்டுக்கான ஆய்வை, அண்ணா பல்கலை அதிகாரிகள் சமீபத்தில் முடித்துள்ளனர். ஒவ்வொரு கல்லூரிக்கும், தனித்தனியாக ஆய்வறிக்கை தயாராகும் பணி நடக்கிறது. இப்பணி முடிந்ததும், விதிகளை பின்பற்றாத கல்லூரிகளின் பட்டியல், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பப்படும். பின், ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரையின்படி, விதிகளை பின்பற்றாத கல்லூரிகளுக்கு இணைப்பு மற்றும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீக்கம்:

இணைப்பு புதுப்பிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல், அண்ணா பல்கலை இணையதளத்தில், மே 15ம் தேதிக்குள் வெளியிடப்படும். இணைப்பு ரத்தாகும் கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த முடியாதபடி, அந்த கல்லூரிகள், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த ஆண்டு, மூன்று பொறியியல் கல்லூரிகளை மூட, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. இக்கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை மிக மோசமாக உள்ளதால் அவற்றை மூட, ஏ.ஐ.சி.டி.இ.,யும், அண்ணா பல்கலையும் ஒப்புதல் அளித்துள்ளன. இக்கல்லூரிகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்தாமல், தற்போது படிக்கும் மாணவர்களின் படிப்பு முடியும் வரை, அதற்கான வகுப்புகளை நடத்த, அண்ணா பல்கலை உத்தரவிட்டு உள்ளது. இதேபோல், 31 கல்லூரிகளில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, தனியார் பொறியியல் கல்லூரிகள் முன்வந்துள்ளன. இவற்றுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அனுமதி அளித்து உள்ளன.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...