Friday, April 24, 2015

தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மே 11 முதல் விண்ணப்பம்



எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை போன்று இந்தாண்டும் 500-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 48,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் மருத்துக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் மே 29. விண்ணப்பங்களைwww.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் ஜூன் 12-ம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடந்தன. 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள், 42 ஆயிரம் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8.85 லட்சம் பேர் தேர்வை எழுதினர்.

இந்த தேர்வு 2,377 மையங்களில் நடந்தது. எழுத்துத் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பே பிப்ரவரி 5 முதல் 24-ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்தப் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி வெளியாகிறது.

இதனையொட்டி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மே 11 முதல் மே 28 வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...