Friday, May 8, 2015

ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!

சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒன்றரை கோடி ரூபாய் வரை தருவதாக சொன்னபோதிலும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

அதற்கு அவர் கூறியுள்ள காரணம்தான் நெகிழ வைக்கிறது.

இந்த வாரம் ஆனந்த விகடனில் அவர் அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக கேட்கப்பட்டுள்ள கேள்வியும், பதிலும் வருமாறு:
விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?

''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

Return to frontpage

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 (திங்கள்கிழமை) வெளியாகிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பெங்களூர் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை:

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ல் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, பெங்களூருவில் ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. அதுபோல் இம்முறை எந்தச் சம்பவமும் நடைபெறாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவது என பெங்களூர் காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பெங்களூர் கமிஷனர் அலுலகத்தில், மாநகர ஆணையர் எம்.என்.ரெட்டி, இணை ஆணையர் ஹரிசேகரன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் அலோகுமார் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பெங்களூரைச் சுற்றி உரிய பாதுகாப்பு போடுவது உள்ளிட்ட சிறப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

நிரம்பும் ஹோட்டல் அறைகள்...

இதனிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, தீர்ப்பு தேதி உறுதி செய்யப்பட்டதால், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களின் அறைகள் மிகத் தீவிரமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வழக்கின் பின்னணியும் நிறைவடைந்த தீர்ப்பு எழுதும் பணிகளும்

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12-ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், “பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்” என அதிரடி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமார சாமி ஏப்ரல் 29-ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம் பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.

சொத்து விவரங்களை கணக்கிட‌ ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர் கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார்.

தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய்வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டார். தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங்களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கிருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது.

மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவு:

முன்னதாக, நீதிபதிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, "கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கினாலும் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை எழுத வேண்டி இருப்பதால் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. அதேபோல் நீதிமன்ற ஊழியர்களும் அவருடன் காலநேரம் பார்க்காமல் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளித்தனர். இதனால் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தது" என்றனர்.

திருப்பதி பெருமாளுக்கு வடிகிறது வியர்வை - திருப்பதி சில அரிய தகவல்கள்


cinema.vikatan.com

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

இங்குள்ள மடப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.



ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

0 மாணவிகள் தற்கொலை - இது பகிரங்க போர் அல்லவா?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகி முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களின் படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, தேர்வு முடிவுகளைப் போல தற்கொலை முடிவுகள் வரிசையாக வெளிவரத் துவங்கின.



ஈரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்ற நெசவுத் தொழிலாளியின் மகள் மஞ்சுளா, தேர்வில் வெற்றி பெற்றிருந்தும் மதிப்பெண் குறைந்து விட்டதே என தீக்குளித்து இறந்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரகு, தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம் நாகராஜ் மகன் குணசேகரன், சென்னை செம்மஞ்சேரியில் வசிக்கும் கரிகாலன் மகள் இலக்கியா, மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை. தேனி, கண்டமனூர் அன்னக்கொடி மகன் அஜய்யோ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோபிசெட்டிப்பாளையம் மாரிமுத்து என்பவரின் மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதி மாணவி கலா தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம், தோகைப்பாடி காலனி முருகன் மகள் தேவதர்ஷினி, கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை. இப்படி விரிந்து வேதனையாக நினைவுகளாகச் செல்கிறது இளம் பள்ளிச் சிறுவர்களின் தற்கொலைகள்.

'தேர்வில் வென்றால் மட்டும் போதாது உயர் கல்விக்கு தகுதி பெறும் உயர்ந்த மதிப்பெண் பெற்றாக வேண்டும்...!' என்ற அழுத்தம் மாணவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சென்ற தலைமுறை வரை தேர்வில் வெற்றி என்பதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது கூட இந்த அளவு தற்கொலை நிகழ்ந்ததில்லை. பள்ளி வாழ்க்கை, மதிப்பெண்களுக்கு அப்பால் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட தலைமுறை அது. ஆனால், இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்து விட்டது நமது சமூக அமைப்பு.

'வெற்றி பெறுவதல்ல. அதிகம் மதிப்பெண் பெற வேண்டும்., போட்டியில் நீ இருக்க வேண்டும் என்றால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்!' என போதிக்கிறது நமது புதிய கல்வி மரபு. உண்மையில் பள்ளிக்கூடங்களின் நோக்கம்தான் என்ன?

மதிப்பெண் பெறுவது. 100% சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டி, மேலும் மேலும் கல்விப் போட்டியில் தங்கள் பள்ளியை முதன்மைப் பள்ளியாக மாற்றுவது என்ற பிராய்லர் பள்ளி தேர்வு முறைகளே இந்தக் தற்கொலைகளுக்கு காரணம். நமது கல்வி முறை கடுமையாக பிளவுபட்டு நிற்கிறது. ஏழைகளுக்கு சேரிப் பள்ளிகளும், செல்வந்தவர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளுமாக கல்வித் திட்டங்களே வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ப மாணவர் பருவத்தை பிளவுபடுத்தி விட்டது.

நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளிலும், தமிழகம் முழுக்க கடை விரித்திருக்கும் தனியார் பள்ளிகளும் குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்களுக்காக மாணவர்களை துன்புறுத்துகின்றன. பிளஸ் டூ பாடத்தை 11-ம் வகுப்பிலே தொடங்கி நடத்துகின்றன. டியூஷன் செல்லவோ, பணம் செல்வழித்து படிக்கவோ வசதியற்ற மாணவர்கள் ஓராண்டு மட்டுமே படிக்கும் பாடத்தை, வசதியுள்ள மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். டியூஷன் செல்கிறார்கள். இது போக உள்ளூர் ஆசிரியர்களின் உதவியோடு நடக்கும் தேர்வுகளில் கேள்வித்தாள்களும் லீக் ஆகி, மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு கல்விமுறையை நடத்தி முதல்மதிப்பெண் கொண்டாட்டங்களை பெருமையாக கொண்டாட பள்ளிகள் தேவையில்லை. டியூட்டோரியல்களே போதுமானவை.

இதற்கிடையில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட்டு, 8-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு. இன்னொரு பக்கம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட மத்திய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.) வழங்கியுள்ள உரிமையை இது இல்லாதொழிக்கிறது.

பள்ளிக்கூடங்களின் நோக்கம்

ஒரு குழந்தை பிறப்பதன் அடிப்படை, அது குழந்தை பிராயத்தில் இருந்து வளரும் போது சமூக விலங்காக மாற வேண்டும். ஆமாம், சமூக மயமாதல் என்பது வெறுமனே பெற்றோரிடம் மட்டும் நடப்பதல்ல. பள்ளிக்கூடம் அதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இன்றைய கல்வி முறை நமது இளம் தலைமுறையை சமூக மயமாக்குவதற்கு பதிலாக, சமூகத்தில் இருந்து மிக மோசமாக விலக்கி வைக்கிறது. பாரபட்சமாக அடித்துத் துரத்துகிறது. அதன் விளைவுகள்தான் இந்த தற்கொலைகள். ஒரு வகையில் இது தனியார் கல்விமுறை நடத்தும் கொலைகளே.

இந்த கல்வியாண்டில் 100 சதவிகிதத் தேர்ச்சி விகிதத்தை அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இலக்காக நிர்ணயித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை. ஆனால் தனியார் பள்ளிகளை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது அரசுப் பள்ளிகள். இது அரசும், பல விதமான பாரபட்சமான கல்விமுறையும் நமது ஏழைக் குழந்தைகள் மீது நடத்தும் பகிரங்கமான போர் அல்லவா?

-டி.அருள் எழிலன்

PHYSICS MARKS WILL DECIDE MEDICAL SEAT...DECCAN CHRONICLE


US-Indians raise hundreds of thousands of dollars for Nepal

WASHINGTON: Indian-Americans, along with the small Nepali community, are raising hundreds of thousands of dollars to help the victims in the quake-hit Nepal.

Grocery stores, gas stations owned by Indian-Americans and temples have kept donation boxes outside for the people to donate generously.

Several temples in California and Maryland have been making special effort to collect funds for the quake victims.

"We are making several fund raising efforts in various cities in the US for Nepal," said Chandrakant Patel, president of the Overseas Friends of BJP-USA.

"We are committed to provide support for the immediate relief and rehabilitation effort in the worst affected areas of Nepal," he said.

Last week in Los Angeles more than $160,000 were raised for the Nepal earthquake victims.

More than $360,000 were raised by not for profit Sewa International USA.

The American India Foundation (AIF), set up in the aftermathe Gujarat earthquake, said it had established a Nepal Rehabilitation Fund whose entire donation will directly go to the rehabilitation process.

"Given that one of our core strengths is in livelihoods and skill building, this fund will support the rehabilitation of lost livelihoods for communities across Nepal, to rebuild and provide a new life filled with dignity, opportunity, and hope," AIF said in a statement.

Meanwhile, the US Agency for International Development (USAID) Acting Administrator Alfonso Lenhardt yesterday announced an additional $11 million in assistance for Nepal earthquake response and recovery efforts, bringing the total US humanitarian assistance for the disaster to nearly $26 million.

Lenhardt made the announcement during a trip to Nepal, where he surveyed the damage caused by the powerful April 25 earthquake.

Married daughter can get dad's job: Madras high court



CHENNAI: Married daughter of a government employee is eligible for a job on compassionate grounds after the death of her father while in service, the Madras high court has ruled. But, she should fulfil two requirements, the court said. One, she must obtain no-objection certificate from other siblings; two, she and her husband must give an undertaking that she will take care of other members of her parents' family from her salary.

An order to this effect was passed by a division bench of Justice Satish K Agnihotri and Justice M Venugopal recently, while dealing with a case of I Kayalvizhi whose father V Indarjith died while in service in the education department.

"A married daughter is eligible for consideration, subject to submission of no-objection certificate of other members of the deceased's family and also with an undertaking from her and her husband that she will take care of other members of the parents' family," the bench said.

Kayalvizhi was the only daughter of Indarjith and she was married by the time he died in harness. She then applied for appointment under compassionate grounds. When she was denied appointment, she moved the high court. Citing a government order governing the issue, a single judge said she was entitled to be considered for the job. Her marriage alone need not necessarily disentitle her from claiming the job, as marriage is not a disqualification, the judge said.

Assailing the order, the assistant primary education officer in Anthiyur in Erode district filed the present appeal before the bench.

The judges upheld Kayalvizhi's rights in this regard, and directed the authorities to consider her case for appointment within a period of four weeks. The only modification made in the single judge order was the NOC from members in her paternal family and an undertaking from her husband.

In this regard, the bench cited an earlier order of the court in the Kamatchi vs state of Tamil Nadu, wherein it had been said that even if there are other members in the family, the beneficiary could take a no-objection from them and stake her/his claim for appointment under compassionate grounds.

The GO, on its part, clearly said an NOC from the remaining members of the family, an undertaking from the beneficiary that he/she shall be helpful to her/his parents' family and an assurance from the spouse of the beneficiary that he/she shall not cause hindrance to her/him in helping members of his/her parents' family in future, should be fulfilled to become eligible for appointment.

NEWS TODAY 25.07.2026