Sunday, May 10, 2015

Honour for city ophthalmologist

City-based Ophthalmologist, Chairman & Medical Director, Rajan Eye Care Hospital, Dr. Mohan Rajan, has been conferred the prestigious Fellowship of the Royal College of Surgeons (FRCS) in recognition for his extraordinary contribution to Academics, Research, Community Service, Clinical and advanced Surgical Expertise in the field of Ophthalmology. Dr. Rajan has performed more than 85,000 Cataract & IOL implant surgeries and Vitreo Retinal surgeries. The FRCS will be conferred on Dr. Rajan on Nov 25 at Glasgow, Scotland.

Russian varsities offer economical options for students

With a large number of students aspiring to pursue courses in medicine, most colleges in the country have tough entrance examinations along with high eligibility criteria. Adding to that is the financial aspect of this programme, which is a burden to most parents.

Presenting a possible alternative are universities participating in the Russian Education Fair being held at the Russian Centre of Science and Culture. Most of them expect a minimum of 50% marks in relevant subjects.

The two-day education fair showcases a range of Russian government institutions, specialising in medicine and engineering. Some of the participating universities include People’s Friendship University, Kazan Federal University and Volgograd State Medical University. The fair provides direct counselling, spot admissions, visa and safety information along with a 30-day preparation course on language and culture.

“Students get international exposure to practical learning methods with individual attention,” says Krishna Raj, alumnus of People’s Friendship University.

Students from the Tamil medium are also eligible to apply. “The cost of higher education in Russia is relatively less because it is subsidised by the Russian government. Also, there are a wide range of courses in English, which makes it easy for the students from India,” said Sviatoslav A. Timashev from The Ural Federal University.

The education fair will be on from 10 a.m. to 5 p.m. on Sunday.



Higher education in Russia is subsidised and students need to have only 50% in core subjects to be eligible to apply

When even high scorers opt for revaluation

V. Nikhil was sure that he would get a centum in mathematics in the Class XII examinations. So he was disappointed to see that he had received only 197. While he was content with his overall total, he decided to apply for revaluation for the mathematics paper.

Along with Nikhil, many students across the State who have scored more than 195 in papers have started to apply for revaluation to try and push up their totals so they can get in to better colleges.

“I have applied for the scanned copy of my exam paper, but I am sure that I should have gotten a centum in mathematics. If I can manage to get three extra marks, my physics, chemistry and mathematics total will be 480,” Nikhil explained, adding that the three additional marks could mean a better course, or a better college through counselling.

This is not a trend only for science, though. K. Anusuya, who was one of the Tiruvallur district toppers scored 190 in English. According to the principal of Sri Venkateshwara Matriculation Higher Secondary School, where she studied, she was expecting at least three marks more. “The entire school is glad she got a State rank, and we have been training her for a year. We are sure she will get an additional three marks when we give the paper for revaluation,” he said.

Over the past couple of years, the trend of toppers and students who have scored over 190 marks giving their papers for revaluation has increased, a senior official said.

“Around 10 per cent of the students give their answer scripts for revaluation. Last year, over 89,000 students applied,” he said.

While many of them continue to be students who have scored just below the pass mark in certain subjects, since the pass percentage in the State is so high, an increasing number of students have been applying for revaluation to get centums, or push their score up by a few marks to increase their total. Around 5 per cent of the papers we get for revaluation have scores of over 90 per cent, he added.

The Directorate of Government Examinations has set up an information booth on the DPI campus for students who would like to obtain a scanned copy of their exam papers, or apply for revaluation.









With the competition for entry into Tier I colleges being extremely high, more students like Nikhil and Anusuya will be forced to apply for revaluation.

Saturday, May 9, 2015

நீதி மன்றத் தீர்ப்பும்... நிம்மதி இழந்திருக்கும் தமிழனும்!

cinema.vikatan.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வருகின்ற 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பலரும் வீட்டுச் சிறையில் முடங்க வேண்டுமா எனப் புலம்பும் நிலையில் இருக்கிறர்கள்.
நீதிமன்றத் தீர்ப்பு என்றால் பிரச்னைக்கு முடிவு என்ற அர்த்தம் மாறி, தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால் தமிழனை முடங்க வைக்க வேண்டும், தீராத சோகமாக வன்முறை செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்ட அரசியலுக்கு எடுத்துக் காட்டாக   உள்ளது.

வன்முறையால் அரசுப் பேருந்தை எரிப்பதும், பொதுமக்களை கஷ்டப்படுதுவதும் யாருக்கு கொடுக்கும் தண்டனை இது? அதிக அளவு வாக்கு சதவீதம் கொண்ட பெரும்பான்மை உள்ள  கட்சி, தனக்காக ஓட்டு போட்ட மக்களையே கஷ்டப்படுத்துவது எப்படி சரியாக இருக்கும்? நடுநிலையாக உள்ள பொதுமக்கள், தீர்ப்பு பாதகமாக வர வேண்டும் எனச் சொல்லாத நிலையில், அவர்களை கஷ்டப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? பல்வேறு கட்சிகள் பல ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்கும் நிலையில், தீர்ப்புகள் வரும் போதெல்லாம் வன்முறை என்றால் ஆண்டு முழுவதும் வன்முறை மிகுந்த ஆண்டாகத்தான் இருக்கும். ஊழல் வழக்குகள் இல்லாத கட்சிகளை விரல் விட்டு என்னும் நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினாலும், விடுதலை தீர்ப்பு வந்தாலும் பொதுமக்களுக்கு ஒன்றுதான். யாரையும் கஷ்டப்படுத்தி சிறையில் அடைத்துப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு பொதுமக்களுக்கு கிடையாது. எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் தெய்வம் சும்மா விடாது என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர்கள் பொதுமக்கள். அன்றாடம் கஷ்டப்படும் மக்களுக்கு யார் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான். ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிப்பதாலோ, விடுதலை அளிப்பதாலோ ஏழைகளின் வாழ்வில் மாற்றம் வரப்போகிறதா? எந்த அரசியல்வாதிகளையும் சிறையில் தள்ளி பழி வாங்கும் எண்ணம் தமிழனுக்கு கிடையாது.

அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் அறிக்கை போரால் வெட்டிச் சாய்த்துக் கொள்வதால், அப்பாவி தமிழனுக்கே நஷ்டம். எந்த முன்னேற்றமும் இல்லாமல், மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழகம் பின்னோக்கிச் செல்லும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ள ஒரே திறமை ஊழல் செய்வதுதான் என்பது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் நன்றாக தெரியும். இந்தியாவில் கொசுக்களைவிட வேகமாக வளர்ந்து நம்மை கொல்வது லஞ்சமும், ஊழலும்தான். மக்கள் தொகையைவிட ஊழல் வழக்குகள் எண்ணிக்கை அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மக்களுக்காக தெருவில் இறங்கி போராட வேண்டிய அமைச்சர் பெருமக்கள், கோவில் கோவிலாகச் சென்று நீதிபதியின் தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்று வேண்டி பல்வேறு வகையில், கடவுளே கோவிலைவிட்டு வெளியேறி ஓடும் அளவிற்கு “கடவுளை கஷ்டப்படுத்தும்” பெருமை நம் அமைச்சர்களையே சேரும். அமைச்சர் பெருமக்கள் இனி நீதிமன்றம் நோக்கி படை எடுப்பார்கள். ஏதோ இவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள் என்ற பயத்தில் நீதிபதி தீர்ப்பை மாற்றிச் சொல்லுவார் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களா? இல்லை, ஏற்கனவே முடங்கியுள்ள தமிழக அரசு திட்டங்கள் மேலும் முடங்கட்டும் என்ற  நல்எண்ணத்தில் செல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வழக்கம் போல காவல் துறை எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் வன்முறையை பாதுகாக்கும் துறையாக மாறி மக்களின் சாபத்திற்கு ஆளாகுமா என்பது தெரியவில்லை. சென்ற முறை நடந்த வன்முறை போல இம்முறையும் வன்முறை நிகழ்ந்தால் அது அ.தி.மு.க.வுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் உருட்டு கட்டை தூக்கும் கும்பலை காவல் துறை வேடிக்கை பார்க்காமல், தங்களுக்காக போராடிய கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை எப்படி ஊருக்கு ஒதுக்குபுறமாக, சுடுகாட்டில் கொண்டு இறக்கி விட்டார்களோ அதே வீரத்தை இம்முறை அரசியல் கட்சிகளிடம் காவல் துறை காண்பிக்க வேண்டும்.
வன்முறையில் இறங்கி கட்சியில் பெரிய ஆளாக மாறிவிடலாம் என தவறான எண்ணத்தில் மக்களை கஷ்டப்படுத்தினால், இன்று உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல் துறை நாளை ஆட்சி மாறியதும் வீடு தேடி வந்து உங்களை அழைத்துச் சென்று சிறையில் அடைக்கும். கட்சிப் பதவியைவிட குடும்பமே முக்கியம். வன்முறையால் நிம்மதியும், குடும்ப உறவு முறைகளும் அழியும். வன்முறையால் ஒருவரை அழித்து ஒருவர் வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

ஊழல் குற்றசாட்டில் சிக்கிய முன்னாள் முதல்வருக்கு எதிராக அனைத்து கட்சிகளும் அறிக்கைப் போர் நடத்துவது, ஏதோ தங்கள் கட்சி நேர்மையான, ஒழுக்கமான, லஞ்சம், சொத்து குவிக்காத கட்சி என்பது போலவும், நாங்கள்தான் உத்தமர்கள் என சொல்வது போல் நடப்பதும், மக்களிடம் வெறுப்பையே உண்டாக்கி வருகிறது. நேற்று ஆரம்பித்த கட்சிக்கு கூட கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்த உண்மை. நீதி வென்றது எனச் சொல்லும் அரசியல் கட்சிகள், நேர்மையாக சொத்துக் கணக்கை கொடுக்க முடியுமா? நீதியும், நேர்மையும் கட்சிகளில் இருந்தால் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை?

நாளை மே 10 ''அன்னையர் தினம்" அம்மா என்று அன்போடு அழைத்த தமிழர்களுக்கு அம்மா அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டியது ஒன்றுதான்... மீண்டும் ஒருமுறை கட்சியினரிடமும், பொது மக்களிடமும் கட்சியினரின் மனநிலையை சமன் படுத்தவும், தீர்ப்பு சாதகமாகவோ, பாதகமாகவோ வந்தால் கட்சியினர் அனைவரும் அமைதி காக்க வலியுறுத்த வேண்டும். பாதகமான தீர்ப்பு என்றால் பேருந்தை எரிக்கவும், கடையை அடைக்கவும், மறியல் செய்து வீட்டில் அனைவரையும் முடக்கவும் கட்சியினர் முயற்சித்தால் அது கட்சியை மட்டுமல்ல உங்களது மீதான அன்பையும், மதிப்பையும் அழித்துவிடும். அம்மா என்றால் அன்புதான் நினைவுக்கு வர வேண்டுமே தவிர கட்சியினரின் தற்கொலைகள், அராஜக வன்முறை நினைவுக்கு வரக்கூடாது.

நீதிமன்றத்தின் தீர்ப்பைவிட மக்களின் தீர்ப்புதான் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற உண்மையை புரிந்து கொண்டு, "அம்மா" என்று அன்போடு அழைக்க வைப்பார்களா? அல்லது “ஐயோ! அம்மா வன்முறையில் இருந்து காப்பாற்றுங்க” என கதறி அழ விடுவார்களா?

எதுவாக இருந்தாலும் எந்த ஒரு  செயலுக்கும் எதிர்வினை உண்டு. இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள் என்பது காலம் காலமாய் அரசியல்வாதிகள் படித்து வரும் பாடம்!

எஸ்.அசோக்

பைக்கை மறித்த காவலர்...கீழே விழுந்த வாலிபர் குடல் சரிந்து பலி...சென்னையில் பயங்கரம்!

சென்னை: சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது நிலைதடுமாறி சாலையோர தரப்பு சுவரில் விழுந்ததில் வாலிபர் ஒருவர் குடல் சரிந்து பலியானார். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சாலிகிராமத்தில் இன்று நண்பகலில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவர்கள் நிற்காமல் செல்லவே,  லத்தியால் அவர்களை அடித்துள்ளார் காவலர்.

இதில் நிலை தடுமாறி, சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், ஒருவர் தூக்கி வீசப்பட்டு சாலையோர கம்பியில் விழுந்துள்ளார். வயிற்றில் கம்பி குத்தியதில் அவரது குடல் சரிந்தது. அதிலும், அந்த வாலிபர் வயிற்றில் இருந்து வெளியே சரிந்த குடலை பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் உயிருக்கு போராடியுள்ளார்.
ஒரு மணி நேரம் வராத 108 ஆம்புலன்ஸ்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால், அந்த வாலிபர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் செல்வம் (18). விருகம்பாக்கத்தை சேர்ந்தவர். பிளம்பர் ஆக இருந்தார். காயம் அடைந்து தப்பி ஓடிய மற்ற 2 பேரின் பெயர் விவரங்கள் தெரிய வில்லை.
 
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையோரத்தில் இருந்த காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தென் சென்னை கூடுதல் காவல்துறை ஆணையர் அருண் தலைமையில் காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலிகிராமத்தில் பதற்றம் நிலவி வருவதால் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில், "50 ரூபாய்க்கு ஆசைப்பட்டு காவலர் அந்த இருசக்கர வாகனத்தை மறித்துள்ளார். அவர்கள் நிலைமாறி கீழே விழுந்தனர். அவர்கள் தவறு செய்திருந்து ஓடியிருந்தாலும் வாகனத்தின் நம்பரை வைத்து காவலர் வழக்குப் பதிவு செய்திருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் காவலர் அவர்களை லத்தியால் அடித்தது தவறு. தவறு செய்த காவலர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர், காவலர் இடமாற்றம்!

இதனிடையே, வாலிபர் பலியான விவகாரம் தொடர்பாக கே.கே.நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சற்குணம் மற்றும் காவலர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதோடு, இரண்டு பேரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ள சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் நாகராஜன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். 
 

சென்னை மாநகரின் மக்கள்தொகை 67 லட்சம்: வரைவு பட்டியல் வெளியீடு

சென்னையின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 97 ஆயிரத்து 153 என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள வரைவு கணக்கெடுப்பு பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல்முறையாக நடத்தப்படும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்து பல மாநிலங்களில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கான சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்து, அதன் வரைவு பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள்:

சென்னையின் மொத்த மக்கள் தொகை 66,97,153.

மண்டலவாரியாக..

திருவொற்றியூர் 3,22,600. மணலி 92,795. மாதவரம் 1,94,939. தண்டையார்பேட்டை 4,24,277. ராயபுரம் 4,17,835. திருவிக நகர் 11,09,287. அம்பத்தூர் 4,83,357. அண்ணா நகர் 5,75,016. தேனாம்பேட்டை 5,85,899. கோடம்பாக்கம் 6,04,888. வளசரவாக்கம் 3,67,465. ஆலந்தூர் 2,32,974. அடையாறு 8,60,084. பெருங்குடி 2,32,482. சோழிங்கநல்லூர் 1,93,255.

வீடுகள் எண்ணிக்கை

சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், மணலி மண்டலத்தில் குறைந்தபட்சமாக 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளன.

இது தவிர தொழில், கல்வி, சாதி, வருமானம், மின் இணைப்பு, குடிநீர் வசதிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்ட சமூக பொருளாதார தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. வார்டு அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் இந்த வரைவு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 26-ம் தேதி இறுதிசெய்யப்படும். அதை பொதுமக்கள் பார்வையிட்டு திருத்தங்கள் இருந்தால், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வார்டு, மண்டல அலுவலகங்களில் மேற்கண்ட தேதிக்கு முன்பு வழங்கவேண்டும்.

தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்' கலக்கத்தில் மாணவர்கள்

மதுரை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தாண்டு 65 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் மே 20 முதல் 25க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சேர்க்கை துவங்கி விட்டது. இதனால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இந்த நெருக்கடி ஏற்படுகிறது. சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் இல்லை. தமிழகத்தில் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால் இப்பிரிவு மாணவர்களுக்கு முக்கிய கலை, அறிவியில் கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கடிதம் எழுதியுள்ளோம். இப்பிரிவு மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை தேதி மே 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை உட்பட சில நகரங்களில் சி.பி.எஸ்.இ., முடிவு வெளியாவதற்குள் கல்லூரிகளில் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். இது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.

NEWS TODAY 25.07.2026