Tuesday, May 12, 2015

எதிர்நீச்சல் இவருக்கு வாடிக்கை

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி, அவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து 919 பக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். ஜெயலலிதா மட்டுமல்லாமல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர். 19 ஆண்டுகளாக நடந்த நீண்டநெடிய நீதி பயணம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. 1991–1996–ல் முதல்–அமைச்சராக பதவி வகித்தபிறகு அடுத்து நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்ற நிலையில், ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுப்பிரமணியசாமி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், 1996–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18–ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தி.மு.க. அரசில் டிசம்பர் மாதம் 7–ந்தேதி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997 ஜனவரி மாதம் 3–ந்தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அன்று முதல் நீதிமன்றங்களில் இங்கும் அங்குமாக பந்துபோல சென்றது பயணம். கடந்த செப்டம்பர் மாதம் 27–ந்தேதி பெங்களூரில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவுக்கும் மற்ற மூவருக்கும் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதன்காரணமாக அவர் 20 நாட்கள் ஜெயிலுக்கு போகவும், பதவியை இழக்கவும் நேரிட்டது.

மீண்டும் நீதிமன்ற பயணம் விசுவரூபம் எடுத்தது. கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 41 நாட்கள் அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. இந்த நிலையில், ஜெயலலிதா விடுதலை பெறவேண்டும் என்று அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் விசேஷ பிரார்த்தனைகள், யாகங்களை நடத்தினர். 233 தொண்டர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டதால், உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சி பிரவாகம் எடுத்துள்ளது. ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தீர்ப்பளிக்கப்பட்ட விடுதலை, தமிழக அரசில் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலேயே பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவை பொருத்தமட்டில், வாழ்க்கையில் அவர் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் பல சோதனைகளை, தடைகளை சந்தித்து எதிர்நீச்சல்கண்டு வெற்றி பெற்றவர். இந்தமுறை சுனாமியை எதிர்த்து நீந்தி வெற்றி பெற்று இருக்கிறார். வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து, ஒரு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்தவர். சர்ச்பார்க் கான்வெண்ட்டில் முதல் மாணவியாக விளங்கியும், தொடர்ந்து படிக்கமுடியாமல் விருப்பத்துக்கு மாறாக சினிமாவில் நடிக்க நேர்ந்தாலும் அதிலும் ஜொலித்தார். 1982–ல் அரசியலில் நுழைந்து, அ.தி.மு.க.வில் சேர்ந்தபிறகும் கட்சியிலும், அரசியலிலும் பல சோதனைகளை சந்தித்தவர். தடைதாண்டி ஓடும் ஓட்டபோட்டிபோல, பல தடைகளை சந்தித்து தோல்வி என்பது எனது அகராதியில் இல்லை என்ற அளவில், இறுதியில் எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அவர் விளையாட்டு போட்டியில் பைனல்போல இப்போது நடந்த போட்டியிலும் வெற்றிபெற்று உள்ளார்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இல்லாத நிலையில், தமிழக அரசில் ஒரு மந்தமான நிலையையும், அரசியலில் ஒரு துடிப்பில்லாத நிலையையும் தமிழக மக்கள் பார்த்துவிட்டனர். அடுத்த சில நாட்களில் மீண்டும் முதல்–அமைச்சராக பொறுப்பேற்கப்போகிறார். சாட்டையை எடுத்து சுழட்டப்போகிறார். மீண்டும் ஒரு வேகமான அரசையும், துடிப்புள்ள அரசியலையும் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது. அடுத்தவாரம் மீண்டும் கூடப்போகும் தமிழக சட்டசபையில் புதுப்புது திட்டங்களை, அறிவிப்புகளை அடுக்கடுக்காக மக்கள் எதிர்பார்க்கலாம்.

Monday, May 11, 2015

ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்'

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.

919 பக்க தீர்ப்பில், ஜெ. விடுதலைக்கு முக்கியக் காரணங்களைச் சொல்லும் அம்சங்கள்:

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு கூறியது போல் ரூ.66.65 கோடி வருவாய்க்கு மீறிய சொத்துக்களோ அல்லது சிறப்பு நீதிமன்றம் கணக்கின் படி வருவாய்க்கு மீறிய ரூ.53.6 கோடி சொத்துக்களோ அவரிடம் இல்லை, மாறாக, ஜெயலலிதா பெயரில் ரூ.2,82,36,812 மதிப்பளவே சொத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.

இன்று நீதிபதி குமாரசாமி அளித்த 919 பக்க தீர்ப்பில் “குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்களுடன், நிறுவனங்கள் மற்றும் பிற சொத்துக்களை சேர்த்து கட்டுமான மதிப்பான ரூ.27,79,88,945 என்ற தொகையுடன் திருமண செலவு தொகையான ரூ.6,45,04,222-ஐயும் சேர்த்து அவரது சொத்து ரூ.66,44,73,573 என்று அரசு தரப்பு சேர்த்துக் கூட்டி சொத்து மதிப்பை நிர்ணயித்துள்ளது.

எனவே கூடுதலாக சேர்க்கப்பட்ட கட்டுமான மதிப்புத் தொகையையும், திருமண செலவு தொகையையும் நீக்கிவிட்டால், சொத்துக்கள் மதிப்பு ரூ.37,59,02,466 ஆக உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்கள், நிறுவனங்கள் மற்றும் பிற வருவாயோ ரூ.34,76,65,654 ஆக உள்ளது. எனவே வருவாய்க்கு அதிகமாக ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகையே” என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, வருவாய்க்கு மீறி 10% வரை அதிக சொத்துகள் வைத்திருக்கும் நபர்கள் விடுதலை செய்ய உரிமையுடையவர்களே என்று அறிவுறுத்தியிருந்ததை கர்நாடக உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் போது சுட்டிக் காட்டியது.

மேலும், ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்று தெரிவித்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

“இந்த வழக்கில் வருவாய்க்கு அதிகமான சொத்து 10%-க்கும் குறைவாக உள்ளதோடு அனுமதிக்கப்பட்ட வரையறைக்குட்பட்டுதான் இருக்கிறது. எனவே குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலைக்கு உரியவரே. எனவே குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றவர் (ஜெயலலிதா) குற்றமற்றவர் எனும் போது சிறிய பங்கையாற்றிய குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களும் விடுவிப்புக்குரியவர்களே” என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் இந்தியன் வங்கியிடமிருந்து கடன் பெற்றார் என்றும், இதனை வருவாயாக நாம் சேர்க்க முடியாது என்றும் சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே, கடனை வருவாயாகக் கணக்கிடாமல் சிறப்பு நீதிமன்றம் தவறிழைத்தது” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழு எழுத்து வடிவம் - ஆங்கிலத்தில் - Text of Karnataka High Court's verdict on Jayalalithaa DA case |

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன்!

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.7 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கடந்த 2009ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு, அவரின் சகோதரர்கள் ராமா ராஜூ, சூர்ய நாராயண ராஜு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரி வத்லாமணி ஸ்ரீநிவாஸ், பி.டபிள்யூ.சி. ஆடிட்டர்கள் சுப்ரமணி கோபாலகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், ஊழியர்கள் ஜி.ராமகிருஷ்ணா, வெங்கட்பதி ராஜு, ஸ்ரீசைலம், இண்டர்னல் ஆடிட்டர் பிரபாகர் குப்தா ஆகிய 10 பேருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, செர்லாபல்லி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை நீக்குமாறும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரியும், 10 பேர் சார்பிலும் ஹைதராபாத் மாநகர செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, ராமலிங்க ராஜூ உள்பட 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ராமலிங்க ராஜூ மற்றும் அவரது சகோதரருக்கு ரூ.1 லட்சத்திற்கான தனிப்பட்ட பத்திரம் சமர்பிப்பதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான பத்திரம் சமர்பிப்பதன் நிபந்தனையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்!

எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலவிதம். எம்.ஜி.ஆர். இறந்து இவ்வளவு வருடங்கள் ஆனாலும் இப்போதும் அவர் படம் ரிலீஸ் ஆனால் கூட்டம் கூடுகிறது. இந்தப் பாசக்கார ரசிகர்களில் மதுரை ரசிகர்கள் ‘அடடே’ ரகம். மதுரை யானைக்கல் பாலத்தின் கீழ் மன்றம் வைத்திருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எம்.ஜி.ஆர். நடித்த அத்தனை படங்களின் போஸ்டர்களையும் பாலத்தின் அடியில் வரிசையாக ஒட்டி, அதை காவல் காப்பதையே கடமையாக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி போஸ்டர் கிடைக்கிறது?
யானைக்கல் பாலத்துக்குக் கீழே சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர். ரசிகரான 7௦ வயது ஜின்னாவிடம் பேசினேன். ‘‘இந்தப் பாலத்துக்குக் கீழேதான் அந்தக் காலத்துலேர்ந்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் இருக்கு. கூலித்தொழிலாளிங்க இங்கே எப்பவும் கூடுவாங்க. அவங்க எல்லோருக்கும் எம்.ஜி.ஆருன்னா உசுரு. நான் ஆரம்பத்துல கம்யூனிஸ்ட். ஆனா, அவங்களைப் பார்த்து, எம்.ஜி.ஆர். ரசிகனா ஆயிட்டேன். அவர் படங்களைப் பார்ப்போம். எங்களை இங்கே உள்ள அ.தி.மு.க கட்சிக்காரங்க யாருக்கும் தெரியாது, ஏன்னா, நாங்க யார்கிட்டேயும் போய் நின்னது கிடையாது. அவர் நடிச்ச படங்கள் மதுரையிலோ, சுத்தியுள்ள ஊர்களிலோ வந்துட்டா, அந்த தியேட்டர்காரங்க கிட்டே கேட்டு  போஸ்டரை வாங்கி இங்கே ஒட்டிடுவோம். எப்பவுமே போஸ்டர் புதுசா இருக்கும்.  போஸ்டர் பழசாகிடுச்சுனா, உடனே எங்கிருந்தாவது அடுத்த போஸ்டரை வாங்கி வந்து ஓட்டிடுவோம். இந்த போஸ்டர் வாங்குறதுக்காகவே பல ஊர்களுக்குப் போய் வருவாங்க’’ என்றார்.
சின்னையா என்ற ரசிகர், ‘‘நான் டிரை சைக்கிள் ஓட்டிப் பிழைக்கிறேன். எம்.ஜி.ஆர்னா சின்ன வயசுலேர்ந்து பிரியம். இன்னைக்கு அவரைத் தெரியாதவனெல்லாம் அரசியல்ல பெரிய ஆளா இருக்கான். ஆனா, நாங்க அவரை மட்டும்தான் மதிப்போம். அதுக்காகத்தான் அவர் நடிச்ச அத்தனை படங்களுடைய போஸ்டர்களைப் புதுசா ஒட்டி அவரை வணங்குறோம். உணமையான எம்.ஜி.ஆர் பக்தனுக்கு அ.தி.மு.க-வில் மரியாதை இல்லை. பல வருஷமா இந்த இடத்தை எம்.ஜி.ஆர். மன்றமா வெச்சு அவருக்கு விழா எடுத்து வர்றோம். இன்னைக்கு மதுரையில் அ.தி.மு.க-வில் பதவியில் இருக்கிற ஓர் ஆளுகூட இங்கே வந்ததில்லை. ஆனா, நாங்க இந்த இடத்தை புனிதமா காத்து வர்றோம். வாத்தியாரோட சில பட போஸ்டர்கள் கிடைக்க மாட்டேங்குது, அதான் கஷ்டமா இருக்கு’’ என்றார்.
வண்டியில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் மைமூன் ‘‘நாங்க பர்மாவிலேர்ந்து வந்தவங்க. இந்த யானைக்கல்லுல எம்.ஜி.ஆர் ரசிகருங்க அதிகம். இங்கே உள்ளவங்க எம்.ஜி.ஆர். போஸ்டரைக் கொண்டு வந்து ஒட்டிக் கும்பிட்டு போவாங்க. வருஷந்தோறும் விழா எடுப்போம். நாங்க இருக்கிற வரைக்கும் இங்கே எம்.ஜி.ஆர். போஸ்டர் ஓட்டுவோம். அவரைக் கொண்டாடுவோம்’’ என்றார்.
 ஆச்சர்யமான ரசிகர்கள்தான்!

Jayalalithaa case verdict: Less traffic on Chennai roads

CHENNAI: While Monday mornings are synonymous with traffic snarls in Chennai, today appeared to be an exception. With former Tamil Nadu chief minister J jayalalithaa's verdict is expected to be delivered after 11am, even arterial roads wore comparatively an empty look.

"Unlike on any other Monday morning, there was no traffic on Anna Salai. Never thought this could happen," said K Sudhakar, resident of Alwarpet.

There was no traffic snarls on the Poonamallee High Road and the OMR.

"Our entire force is on the roads today to ensure there is no road blocks after the verdict is out. But for now, there traffic is very smooth," said a police officer.

Representatives from National Association of Software and Services Companies (NASSCOM) said they would take a decision at around 2pm on holding the evening shift at IT companies.

"We are monitoring the situation. Once the verdict is out, we will decide if work can happen during the evening shift," said senior director at NASSCOM Purushothaman K.

CBSE Board results by May end

NEW DELHI: The Class X and XII board results of Central Board of Secondary Education will be declared on the third and fourth week of May respectively.

According to sources in the CBSE, the Class X results are likely to be declared on either May 19 or May 20, 2015. "The Class XII results are likely to be ready by May 25 and the board will declare it by May 27 or May 28, 2015," said an official in the exam branch.

The board officials said that the Class XII results could be declared in two or three phase - Chennai region could be the first region to get the results and then the Patna and Bhubaneshwar region in the third phase. The All India results are likely to be declared on May 27, 2015.

In Class X, a total of 13,73,853 students registered for the exam this year, which is around 3.3% increase from that of 2014. In Class XII, a total of 10,40,368 students registered for the exams this year, of which 6,07,383 are boys and 4,32,985 are girls.

This year Class XII exams have been dubbed as among the toughest in the history of the board. Students and even a section of schools sent their representation to the board regarding the difficulty level of exams like mathematics and physics.

Doctors-pharma firms’ nexus runs deep

HYDERABAD: An ongoing probe by the Andhra Pradesh Medical Council into the nexus between an Ahmedabad-based pharma company and 40 doctors from Telangana and Andhra Pradesh revealed more murky details about doctors pushing sale of drugs of half a dozen other companies in exchange of gifts.

The ethics committee of the medical council said doctors struck 'deals' with half a dozen pharmaceutical companies with a monthly pay ranging from Rs 2 lakh to Rs 4 lakh for providing monthly statistics on number of people they treated, patients with blood pressure ( BP) or diabetics they checked, etc.

In fact, the committee members were astounded when the passports of most of those who turned up during the two-day hearing revealed their extensive foreign trips to US, Australia, UAE, South Africa and Russia, sponsored by different pharma companies.

"Our premise that these doctors had links with only one Ahmedabad-based company was proved wrong when we checked the copies of agreements produced by them. They had taken bribes ranging from Rs 2 lakh to Rs 4 lakh a month from several pharma companies in the name of conducting silly studies and furnishing information," said a ethics committee member.

The member, on condition of anonymity, told TOI that many doctors, who had turned up to attend the hearing, had gone on foreign trips 4-5 times a year.

Their junkets were sponsored by different pharmaceutical companies involved in manufacture and sale of drugs related to cardiology, diabetes, pediatrics, hypertension and hormonal problems.

It is significant to note that the Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulations, 2002 in section 6.8.1 (d) clearly prohibits a medical practitioner from receiving benefits, in cash or kind, from any pharmaceutical company.

It reads: A medical practitioner shall not receive any cash or monetary grants from any pharmaceutical and allied healthcare industry for individual purpose in individual capacity under any pretext.

"The nefarious activities of pharmaceutical companies run so deep that it is time for the department of pharmaceuticals, Union ministry of chemical and fertilisers to come up with strict laws to control them from resorting to unethical practice of luring doctors to promote their drugs," said Dr K Ramesh Reddy, a member of MCI.

Incidentally, the ongoing probe was transferred to the State Medical Council's Ethics Committee by Medical Council of India after it received a complaint from department of pharmaceuticals, union ministry of chemical and fertilisers.

NEWS TODAY 25.07.2026