Tuesday, May 12, 2015

அரசு டாக்டர்கள் மேற்படிப்புக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசுப் பணியை ராஜினாமா செய்த மூன்று டாக்டர்களை மேற்படிப்பிற்கு அனுமதிக்க, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி தேவி சங்கீதா, சுப்பையா ஸ்ரீராம், ஜானகி. இவர்கள் அரசு உதவி மருத்துவர்களாக பணிபுரிந்தனர். பணியை ராஜினாமா செய்து 2015-16ல் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்தனர். 'ராஜினாமாவை ஏற்று மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்விற்கு 'ஹால்டிக்கெட்' வழங்க உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர். நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் எம்.சரவணக்குமார் ஆஜரானார். அரசு வழக்கறிஞர், 'மருத்துவப் பணி தேர்வு வாரிய விதிகள்படி பணியில் சேர்ந்து ? ஆண்டுகள் முழுமை அடைந்தால் தான் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியும்' என்றார்.

நீதிபதி உத்தரவு:

'மனுதாரர்களுக்கு 'ஹால்டிக்கெட்' வழங்க வேண்டும். தேர்வு முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என ஏற்கனவே உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. பின், தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் அனுமதித்தது. மனுதாரர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்றுள்ளனர். எந்த கல்வி நிறுவனத்திலும் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனுதாரர்கள் மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தங்கள் லட்சியத்தை அடையும் நோக்கில் அரசுப் பணியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா ஏற்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நியாயமற்ற காரணங்களைக்கூறி மனுதாரர்களின் கனவை நசுக்குவது சரியான நடைமுறை அல்ல. தகுதியான டாக்டர்கள் நாட்டிற்கு அவசியம். அவர்களால் நோயற்ற சமுதாயம் உருவாகி, நாடு வளர்ச்சி அடையும். மனுதாரர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி!

கடந்த ஆறு மாதங்களாக நிலவிய இறுக்கமும், எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் முற்றிலுமாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சி.ஆர். குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது.
நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், அரசியல்சாரா சாமானியத் தமிழ் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் அளித்திருக்கிறது. கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றி பெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும், அவரது விடுதலைக்காக வேண்டாத தெய்வமில்லை என்று பிரார்த்தித்த தொண்டர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது! கடந்த ஆறு மாதங்களாக முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க. அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பதுதான். அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததைத் தவறு காண முடியாது.
"சட்டத்தின் போர்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுக்கப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது. சட்ட நெறிமுறைகள், அரசமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைகளுக்கு உள்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் கணக்குகளை ஆராயக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும்' என்கிற நீதிபதி குமாரசாமியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும், உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919 பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறு ஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட, விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.
வழக்குப் பதிவு செய்த அன்றைய தி.மு.க. ஆட்சியில், கட்டுமானம் தொடர்பான பொதுப் பணித் துறைப் பொறியாளர்களின் மதிப்பீடுகள் அதிகப்படியாக இருந்தன என்பதாலும், திருமணச் செலவினங்கள் சரியாக மதிப்பிடப்படவில்லை என்பதாலும் அந்தச் செலவினங்களை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி மறு மதிப்பீடு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு கணக்கிடும்போது வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12%தான். இதன் அடிப்படையில்தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் உச்சநீதிமன்றமும், ஏனைய உயர்நீதிமன்றங்களும் காட்டியிருக்கும் முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறார். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் 10% வரை கணக்கில் காட்டப்படாத அல்லது கணக்குக் காட்ட முடியாத சொத்துகளை அனுமதிக்கலாம் என்கிற தீர்ப்பு முன்னுதாரணம் ஏற்கெனவே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ஆந்திர அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்ட, அரசு ஊழியர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில், கணக்கில் வராத சொத்தாக 20% வரை அனுமதிக்கலாம் என்பதை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், "மிகையான சொத்து மதிப்பு வெறும் 8.12%தான் என்பதால், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் நிரபராதிகள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது' என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைச் சரியான முறையில் கணிக்க கீழமை சிறப்பு நீதிமன்றம் தவறிவிட்டது என்றும், அதனால் கீழமை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றும் நீதிபதி குமாரசாமி தெரிவித்து, கீழமை சிறப்பு நீதிமன்றம் நான்கு பேருக்கும் விதித்த தண்டனை, அபராதத் தொகை ஆகியவற்றை ரத்து செய்ததுடன் நான்கு பேரின் பிணையப் பத்திரங்களையும் விடுவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவைக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 29.09.2014-இல் வெளியான "தினமணி' தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததை இங்கே மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறோம்.
"ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒரு ராசியுண்டு. மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை' என்பதுதான் அது.
இப்போது அதில் இன்னொரு வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆறாவது முறையாகவும் முதல்வர் பதவி ஏற்று அவர் சரித்திரம் படைக்கக் கூடும்!

MBBS, BDS merit list on June 12

The issue of application forms for MBBS and BDS courses offered in government medical colleges began on Monday.

The last date for issue of forms is May 28 and the last date for submission of filled-in forms is May 29.

The forms and the prospectus can be downloaded from tnhealth.org.

Forms will be sold at all the 19 government medical colleges and the dental college. The form costs Rs. 500 and is free for SC/STstudents who must produce a copy of the caste certificate at the time of purchase to avail themselves of the facility.

“The merit list of candidates will be released on June 12 and the first session of counselling will be held from June 19 to 25,” said Director of Medical Education S. Geetalakshmi.

Counselling will be held for 2,172 seats as of the 2,555 seats currently available, 383 seats will be set aside for All India Quota (AIQ).

To questions about whether admission to the ESIC Medical College would be conducted, medical education officials said that they were awaiting information from the Centre.

“All efforts are being made to ensure that the Medical Council of India gives the approval to admit students to the new college coming up at Omandurar Estate,” she said.

According to selection committee secretary R.G. Sukumar, at present 803 seats were available in 13 self-financing medical colleges and 1,020 seats in self-financing dental colleges.

Of the 100 seats in dental colleges, 15 would be allotted under AIQ.



First session of counselling will be held from June 19 to 25, says Director of Medical Education

Man held for creating FB page with paedophilic content

CHENNAI: A 27-year-old man from Tirupati was arrested by the cyber cell of the CB-CID for creating a page containing paedophilic content on social networking site Facebook. The page had more than 3,000 members.

Yadava Manikanta, a diploma holder in house-keeping, was arrested from his house after police tracked down his IP address. A complaint was filed by Chennai-based NGOs working for prevention of child abuse.

He used to upload pictures of children for a year. The page, which had comments of a sexual nature along with photos of children, was later blocked after a few people wrote to Facebook.

A senior police officer said investigations revealed Manikanta tried to create at least four pages in a year but failed after an error in the verification code. But he managed to create one four months ago and uploaded pictures, he added. "Inputs from telecom service provider helped us nab the offender," said an official.

Manikanta used to clandestinely shoot photographs of children on his mobile phone at public places in and around Tirupati. He usually shot tourists who visited the temple town and also sourced photos from the internet. He also circulated these photographs with members of a closed online group who in turn posted them on other pages of similar nature created by them.

CB-CID police registered a case under the Information Act and the Protection of Children from Sexual Offences Act (POCSO). He was brought to Chennai and remanded in judicial custody. Further interrogations are on to track the network.

Enoch Moses, a resident of Porur, filed a complaint with the police commissionerate demanding action against the creator of the page and the members who have posted comments. The city police said offenders could get seven years rigorous imprisonment for the non-bailable offence. They have also sent a request to Facebook to share details of the creator of the page.

Jaya verdict: How Karnataka HC arrived at the acquitting figures

CHENNAI: Some fine accounting, number crunching and statistics: At the end, these alone helped AIADMK chief J Jayalalithaa and her three associates wriggle out of the 19-year-old disproportionate assets case.

On Monday, Justice CR Kumaraswamy of the Karnataka high court matched figures against figures and then arrived at just 8.12% deviation from the declared assets and incomes of the four accused, and the value disproportionate to the declared sums.

READ ALSO: Staying together doesn't mean Jayalalithaa conspired with other accused, Karnataka HC says

Like an expert accountant, the judge, said that the total assets of the accused, after deductions, was Rs 37.59 crore, and that their total income during the period was Rs 34.76 crore.

Noting that the differential sum was a mere Rs 2.82 crore, the judge said the percentage disproportionate assets was just 8.12%.

READ ALSO: The Karnataka high court verdict on Jayalalithaa case (PDF file)

He went on to say: "It is well settled law that according to Krishnanand Agnihotri's case, when there is disproportionate asset to the extent of 10%, the accused are entitled for acquittal. A circular has been issued by the government of Andhra Pradesh that disproportionate asset to the extent of 20% can also be considered as a permissible limit. The margin of 10% to 20% of the disproportionate assets has been taken as a permissible limit, taking into consideration the inflationary measures."

It is relatively small, he said, adding, "The disproportionate asset is less than 10% and it is within permissible limit. Therefore, accused are entitled for acquittal. When the principal accused (Jayalalihtaa) has been acquitted, the other accused, who have played a lesser role, are also entitled for acquittal."

READ ALSO: Trial court failed to appreciate evidence in proper perspective, Karnataka HC says

Justice Kumaraswamy was also of the view that the prosecution had "mixed up" assets of the accused, firms and companies and also added the cost of construction (Rs 27.8 crore) and marriage expenses (Rs 6.45 crore) and valued the assets at Rs 66.45 crore.

He said, "If we remove the exaggerated value of cost of construction and marriage expenses, the assets will work out at Rs 37.59 crore. The total income of the accused, firms and companies is Rs 34,76,65,654. Lack of proportion amount is Rs 2,82,36,812. The percentage of disproportionate assets is 8.12%."

ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன? நீதிபதி தீர்ப்பு முழு விவரம்

பெங்களூரு,

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார்.

919 பக்க தீர்ப்பு

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.

விடுதலை செய்வதற்கான காரணங்களை அவர் தனது 919 பக்க தீர்ப்பில் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-

* மேல்முறையீட்டு வழக்குகளில், அரசு தரப்பின் வாதம் உண்மையானது என்றும், மேல்முறையீட்டு மனுதாரர்களின் குற்ற நிரூபணம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும் விசாரணை கோர்ட்டுகளை போலவே, மேல்முறையீட்டு கோர்ட்டையும் திருப்திப்படுத்த வேண்டும்.

*விசாரணை கோர்ட்டின் தீர்ப்பு தவறானது என்று மேல்முறையீட்டு மனுதாரர்கள் இந்த கோர்ட்டை திருப்திப்படுத்த வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்ய வேண்டியது மேல்முறையீட்டு கோர்ட்டின் வேலை. அந்த வகையில், விசாரணை கோர்ட்டுக்கு உள்ள அதே அதிகாரங்கள், மேல்முறையீட்டு கோர்ட்டுக்கும் உள்ளன.

தவறு

*அதன்படி, ஆதாரங்களை ஆராய்ந்தால், விசாரணை கோர்ட்டின் முடிவுகள் தவறானவை, ஆதாரங்களுக்கு முரணானவை என்றே சொல்லத் தோன்றுகிறது.

*இந்த வழக்கில், வருமான வரித்துறையின் மதிப்பீட்டை விசாரணை கோர்ட்டு பெரிய ஆதாரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்கவில்லை.

கடன்

*குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்தியன் வங்கியில் கடன் பெற்றதை விசாரணை கோர்ட்டு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த கடனை ஒரு வருமானமாக கருதவில்லை. இதன்மூலம், கடனை வருமானமாக கருதாத தவறை விசாரணை கோர்ட்டு செய்துள்ளது.

மேலும், கட்டுமான செலவு தொடர்பான ஆதாரங்களை முறையாக ஆராய தவறி விட்டது. கட்டுமான செலவாக, 20 சதவீத செலவை கழித்துக் கொள்ளலாம் என்று சர்வசாதாரணமாக முடிவு செய்து விட்டது. இந்த 20 சதவீத கழிவு என்பது சந்தேகத்துக்கு உரிய வகையிலும், யூகத்தின் பேரிலும் கணக்கிடப்பட்டுள்ளது.

திருமண செலவு

*மேலும், (சுதாகரன்) திருமண செலவை ரூ.3 கோடி என்று விசாரணை கோர்ட்டு மதிப்பிட்டுள்ளது. அந்த ரூ.3 கோடியை முக்கிய குற்றவாளிதான் (ஜெயலலிதா) செலவழித்தார் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. அதையும் மீறி, திருமண செலவு ரூ.3 கோடி என்ற முடிவுக்கு வந்துள்ளது.

*திருமண செலவு ரூ.3 கோடி என்றும், அந்த தொகையை முக்கிய குற்றவாளியின் செலவு கணக்கில் சேர்த்ததும் முறையல்ல.

*குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்வைத்த பெரும்பாலான வாதங்களை விசாரணை கோர்ட்டு நிராகரித்துள்ளது. சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக கருதாமல், அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்கள் கூறுகிறார்கள். அந்த சாட்சிகளிடம் தங்களுக்கு சாதகமான முறையில் அரசுத்தரப்பு கேள்விகள் கேட்டுள்ளது.

*குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான அம்சங்களில் ஒன்றாக இதை கருத வேண்டும். சாட்சிகள், வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு விதமாக சாட்சி அளித்தால், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பது நல்லதல்ல.

குற்றச்சதியா?

*மேலும், முறைகேடாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்துகள் வாங்கப்பட்டதாக யூகிப்பது கடினம். எனவே, அந்த சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு விசாரணை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.

*ஆதாரங்களை உரிய கண்ணோட்டத்தில் விசாரணை கோர்ட்டு ஆராயவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவு கடன் வாங்கித்தான், அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

*4 குற்றவாளிகளும் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை பொறுத்தவரை, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் முக்கிய குற்றவாளியுடன் ஒரே வீட்டில் வசித்தார்கள் என்பதை மட்டும் வைத்து அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக கூறிவிட முடியாது.

*ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் இடையே ஒப்பந்தம் உருவானால்தான், அதை சதியாக கருத வேண்டும். சதி நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சதியில் பங்கேற்றனர் என்பதையும் நம்புவதற்கு காரணம் இருக்க வேண்டும்.

சட்டப்பூர்வ வருமானம்

*ஆனால், இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள், ஜெயலலிதாவை தவிர மற்ற 3 பேரும், பெருமளவு கடன் வாங்கி, விவசாய நிலங்கள், நிறுவனங்கள் போன்ற அசையா சொத்துகளை வாங்கியதாக தெரிவிக்கின்றன.

*எனவே, வருமானம் வந்த வழி, சட்டப்பூர்வமானது. நோக்கம், சட்டப்பூர்வமானது. 4 பேரும் ஒரே வீட்டில் இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக, 4 பேரும் சதி செய்தனர், முறைகேடான வழிகளில் சொத்துகள் வாங்கினர் என்ற முடிவுக்கு வர முடியாது.

*ஒட்டுமொத்த சூழ்நிலைகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்து பார்க்கும்போது, விசாரணை கோர்ட்டின் தீர்ப்பும், முடிவும் பலவீனமாக உள்ளது. சட்டப்படி ஏற்க முடியாததாக இருக்கிறது.

சொத்து குவிப்பு எவ்வளவு?

*குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகளையும், நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் சொத்துகளையும் அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது. கட்டுமான செலவாக ரூ.27 கோடியே 79 லட்சத்து 88 ஆயிரத்து 945-ஐயும், திருமண செலவாக ரூ.6 கோடியே 45 லட்சத்து 4 ஆயிரத்து 222-ஐயும் சேர்த்துக் கொண்டு, மொத்த சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரத்து 573 என்று மதிப்பிட்டுள்ளது.

*மிகைப்படுத்தப்பட்ட கட்டுமான செலவையும், திருமண செலவையும் கழித்து விட்டோம் என்றால், மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடியே 59 லட்சத்து 2 ஆயிரத்து 466 ஆகும். ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்பு குறைவாகவே இருப்பதால், அந்த செலவை நான் கழிக்கவில்லை.

*குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65 ஆயிரத்து 654 ஆகும்.

*சொத்து மதிப்பில் இருந்து மொத்த வருமானத்தை கழித்து விட்டால் வரும் தொகை ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இதுவே, வருமானத்துக்கு மீறிய சொத்து ஆகும். இந்த தொகை மொத்த வருமானத்தில் 8.12 சதவீதமே ஆகும்.

அனுமதிக்கத்தக்க சொத்து குவிப்பு

*கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி என்பவரின் வழக்கில், சொத்து குவிப்பு வருமானத்தை விட 10 சதவீதம்வரை இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

*சொத்து குவிப்பு வருமானத்தை விட 20 சதவீதம்வரை இருந்தால், அதை அனுமதிக்கத்தக்க அளவாக கருதலாம் என்று ஆந்திர அரசு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, 10 முதல் 20 சதவீதம் வரையிலான சொத்து குவிப்பை அனுமதிக்கத்தக்க அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

விடுதலை

*இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து குவிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே இருப்பதால், அது அனுமதிக்கத்தக்க அளவுக்குள்தான் இருக்கிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியானவர்கள்.

*முக்கிய குற்றவாளியே விடுதலை செய்யப்படும்போது, சிறிய பங்கு வகித்த மற்ற 3 பேரும் விடுதலை பெற தகுதியானவர்கள்தான்.

*ஆகவே, அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்ற நிரூபணமும், ஜெயில் தண்டனையும் ரத்து செய்யப்படுகிறது.

*அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா விடுதலை தேர்தலில் நிற்க தடை நீங்கியது மீண்டும் முதல்-அமைச்சர் ஆகிறார்

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி குமாரசாமி விசாரித்தார்.

ஜெயலலிதா விடுதலை

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி குமாரசாமி சரியாக காலை 11 மணிக்கு கோர்ட்டு அறைக்கு வந்து இருக்கையில் அமர்ந்தார். அதைத் தொடர்ந்து தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்க தொடங்கினார்.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட்டு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவுக்கு தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

இதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதை ரத்து செய்து அவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

சொத்துகளை ஒப்படைக்க வேண்டும்

அத்துடன் இந்த வழக்கில், நிறுவனங்களின் மேல்முறையீட்டில் ஒரு பகுதியை கோர்ட்டு அனுமதிப்பதாகவும், அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி கீழ்க்கோர்ட்டு (தனிக்கோர்ட்டு) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் கூறினார். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-

தவறான முடிவு

இந்த வழக்கில் ஆதாரங்களை ஆய்வு செய்யும் போது கீழ்க்கோர்ட்டு ஒரு தவறான முடிவுக்கு வந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதில் சட்ட தடைகள் இல்லாதது மட்டுமல்ல, நீதியின் நலன் கருதி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. இந்த வழக்கில் வருமான வரி விவகாரங்களை ஒரு குறைந்தபட்ச மதிப்பாக கூட எடுத்துக்கொள்ள கீழ்க்கோர்ட்டு மறுத்துவிட்டது. குற்றவாளிகள் தரப்பு ஆவணங்களை கீழ்க்கோர்ட்டு சரியான முறையில் கவனத்தில் கொள்ளவில்லை.

கீழ்க்கோர்ட்டு தனது தீர்ப்பில், குற்றவாளிகள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கினார்கள் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதை அவர்களின் வருமானமாக கருதவில்லை. அதனால் கடனை வருமானமாக கருதாமல் கீழ்க்கோர்ட்டு தவறு செய்து உள்ளது. சொத்து மதிப்பீட்டில் பிரச்சினைகள் உள்ளதாக எதிர்தரப்பு எடுத்துக் கூறியும், அது சம்பந்தமான ஆவணங்களை சம்பந்தப்பட்ட காலத்தில் கட்டுமான செலவுடன் ஒப்பிட்டு பார்க்காமல் ஒரு முடிவுக்கு கீழ்க்கோர்ட்டு வந்து இருக்கிறது.

திருமண செலவு

இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமலும், ஆவணங்களை பரிசீலிக்காமலும் ஒரு தோராயமாக மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைத்து உள்ளது. இது சந்தேகத்தை எழுப்புகிறது. போதுமான சான்றுகள் இல்லாமலும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சுதாகரன் திருமண செலவு ரூ.3 கோடி என்று கீழ்க்கோர்ட்டு மதிப்பிட்டு இருக்கிறது. இந்த செலவை ஜெயலலிதா செய்ததாக எந்த ஆதாரமும் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த செலவு தொகை முழுவதையும் ஜெயலலிதா மீது சுமத்தியது தவறு.

குற்றவாளிகள் சார்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை கீழ்க்கோர்ட்டு நிராகரித்துவிட்டது. சாட்சிகளை மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களிடம் கேள்வி கேட்கும்போது, தலைமை விசாரணை அதிகாரியிடம் சொன்னது சரியா? அல்லது குறுக்கு விசாரணையின்போது அவர்கள் கூறியது சரியா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற முறையை தேர்ந்து எடுக்கும்போது அவர்கள் முன்பு சொன்ன பதிலை அழிக்க முடியாது. இந்த முறை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையும். இந்த வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக போனதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

ஆதாரங்கள் இல்லை

சாட்சிகள் பல்வேறு கட்டங்களில் பலவிதமான சாட்சியங்களை அளித்ததால் அது நம்ப தகுந்தது அல்ல. ஒட்டுமொத்த விஷயங்களையும், ஆவணங்களையும் கவனத்தில் கொள்ளும் போது, கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பும், அதற்கான ஆதாரமும் பலம் குறைந்து காணப்படுகிறது என்பது எனது கருத்து. கீழ்க்கோர்ட்டு கூறிய ஆதாரங்கள் சட்டப்படி வலிமையாக இல்லை.

இவ்வாறு நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

919 பக்கங்களில் தீர்ப்பு

3 நிமிடங்களில் தீர்ப்பின் இந்த முக்கிய பகுதியை அவர் வாசித்து முடித்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். நீதிபதியின் தீர்ப்பு 919 பக்கங்களை கொண்டதாக இருந்தது. அவர் புறப்படும் முன் எதிர்தரப்பு வக்கீல்கள் நீதிபதியை பார்த்து இருகை கூப்பி வணங்கி நன்றி தெரிவித்தனர்.

‘ஜெயலலிதா விடுதலை’ என்ற வார்த்தையை நீதிபதி கூறியபோது, அவருடைய வக்கீல்கள் மகிழ்ச்சி பொங்க ‘அம்மா வாழ்க’ என்று கோஷமிட்டனர். அதை பொருட்படுத்தாமல், நீதிபதி தொடர்ந்து தீர்ப்பை வாசித்தார். கோர்ட்டு அறையில் குவிந்து இருந்த வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களின் செல்போன் மூலம் ஜெயலலிதா விடுதலை செய்தியை மின்னல் வேகத்தில் அனுப்பிவைத்தனர்.

பரபரப்பான சூழல்

வக்கீல் குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்களை பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களின் கருத்தை கேட்டு அறிந்தனர். இதனால் ஐகோர்ட்டு வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ஐகோர்ட்டுக்கு வெளியே அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் அங்கு கூடி இருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

மீண்டும் முதல்-அமைச்சர்

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் முதல்-அமைச்சர் பதவியை இழந்ததோடு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு இப்போது அவரை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடை நீங்கியது.

எனவே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரைவில் கூடி முதல்-அமைச்சராக ஜெயலலிதாவை தேர்ந்து எடுக்க உள்ளனர். எனவே அவர் மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் அவர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆவார்.

NEWS TODAY 25.07.2026