Monday, May 18, 2015

Huge Government Cavity in TN Dental Colleges

CHENNAI:There is a pressing need to set up dental colleges in the government sector in Tamil Nadu, as there is only one government dental college as opposed to 29 private institutions that charge lakhs of rupees for every seat, according to senior members of the Indian Dental Council.



The lone Government Dental College in Chennai has only 100 seats for UG and 40 for masters, of which 15 per cent seats are reserved for all-India quota candidates. This shortage of seats is forcing many students, who narrowly miss MBBS, to enrol in private institutions. For many who can’t afford that as well, their dream of a career in the medical field gets shattered.

“There are several private institutions that do not follow the fee structure fixed by the fees fixation committee constituted by the government,” said Major V Murali, Legal Convenor, Indian Dental Association, Tamil Nadu Branch.

“They charge tuition fees even for students who get through government quota,” Major Murali added.

There are 29 private dental colleges in Tamil Nadu, of which 18 are affiliated to the Tamil Nadu Dr MGR Medical University, while the rest are deemed universities.

According to Murali, the dental sector has not been given equal prominence as medicine. The authorities should take

measures to appoint dentists at the Public Health Centre level for quality service in rural regions, where people are dependent on private doctors who charge a substantial fee.

Instead of plainly stating that there was no scope for dentists, the health department should take initiatives to enhance the field, he said.

Echoing his view, KSGA Nasser, former principal of the Government Dental College said that setting up of new dental colleges had been a long-pending demand.

“When there are 20 medical college in the State, why not at least two dental colleges?” Nasser asked.

There are eight speciality departments in the only government college, which could be enhanced so that quality dental care can be provided to people who cannot afford private clinics, he added.

An official with the State Health Department claimed that there was less job opportunities for dentists.

“It is a policy decision of the government, which has to analyse the scope and demand before deciding to set up more dental colleges,” the official added.

May 18 2015 : The Times of India (Chennai) CBSE wants court order for change in name, date of birth

Prime Minister Narendra Modi might be insisting on minimum government, maximum governance but the Central Board of Secondary Education (CBSE) believes in just the opposite.

In a decision that has put thousands of students and parents in a spot, CBSE has issued an order that change of name surname of candidates will be done only if the change has been granted by a court of law and notified in the government gazette before the publication of the results of the candidate.

The order issued on February 16 also said no correction in date of birth shall be made after one year of the date of issue of the qualifying certificates. Also, all applications for correction in date of birth will have to be submitted to the CBSE chairman.

Earlier, changes in name surname or date of birth could be done by affidavit followed by advertisement in newspapers.

The CBSE order also said that “as a matter of due diligence and administrative propriety , all such decisions on the file since October 1, 2014 should be suspended on `as is where is' basis and reviewed“. This has caused a backlog that threatens to become big after Class 10 and 12 results. In Delhi alone, some 400 applications have been pending.

Many parents outside Delhi are unaware of the new order and have made applications in regional offices. “My child has to go abroad later this year for higher education. In courts it is not easy to get quick hearing and early resolution,“ a parent said.

A senior CBSE official said, “There are atleast 400 cases pending since February . Previously , affidavits and newspaper advertisements used to suffice.The new order, instead of simplifying the process, has made it complex. Now, students and parents are running from pillar to post as they have to get name changed for higher studies.“







வட மாநிலங்கள், ஆந்திரத்துக்கு சுற்றுலா செல்ல பாரத தரிசன ரயில்

பாரத தரிசன ரயில் மூலம் மதுரையிலிருந்து வட மாநிலங்கள், ஆந்திரத்துக்கு சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய ரயில்வே, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஆகியவை இணைந்து பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை மே 13 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு ரயில் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு ஆன்மிக தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்பட 200-க்கும் அதிகமான சுற்றுலாக்களில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுடன் இப்பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வட மாநிலங்கள்: இந்தப் பயண திட்டத்தின் படி, மதுரையிலிருந்து பாரத தரிசன ரயில் ஜூன் 15 அன்று புறப்பட்டு கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக ஜெய்பூர், தில்லி, மதுரா, ஆக்ரா, காசி, கயா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் நபர் ஒருவருக்கு ரூ 9 ஆயிரத்து 940 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரம்: மதுரையிலிருந்து ஜூன் 30 ஆம் தேதி புறப்பட்டு கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக நந்தியாலில் உள்ள மகாநந்தி, யாதகிரிகுட்டாவிலுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி, புஞ்சுகுட்டாவில் உள்ள சாய்பாபா, பத்ராசலத்திலுள்ள ஸ்ரீ ராமர், விஜயவாடாவிலுள்ள கனக துர்கா, அன்னாவரத்திலுள்ள சத்ய நாராயண சுவாமி, சிம்மாச்சலத்திலுள்ள நாராயண சுவாமி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூ 5 ஆயிரத்து 800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வசதிகள்: இந்த சுற்றுலாவுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் அரங்கம், சுற்றி பார்ப்பதற்கான வாகனம் ஆகிய வசதிகள் அடங்கும். மேலும், உடைமைகள் பாதுகாப்பு வசதி, இசை, அறிவிப்புகளுக்கேற்க ஒலி பெருக்கி வசதி, ஒவ்வொரு ரயில்பெட்டிகளுக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி, எல்எஃப்சி உள்ளிட்ட வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
முன்பதிவுக்கு!
இந்தச் சுற்றுலாவுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
சென்னை சென்ட்ரல் : 044-64594959,
ரயில் நிலையம் 9003140681,9003140718
காட்பாடி ரயில் நிலையம் : 9840948484
மதுரை ரயில் நிலையம் : 0452-2345757, 9003140714
கோவை ரயில் நிலையம் : 9003140680
இணையதள முகவரி :www.irctctourism.com

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களால் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.
இது தவிர தனித் தேர்வர்களும் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தேவைப்படும்போது மாணவர்களே தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் வரும் மே 18-ஆம் தேதி முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

பி.இ. சேர்க்கை: வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகள், வெளிநாட்டினர் ஆகியோரிடமிருந்து பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் துறைகளில் குறிப்பிட்ட சதவீதம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வெளிநாட்டு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கும், வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்குமான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த ஒதுக்கீடுகளில் சேர விரும்புபவர்கள் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆன்-லைனிலேயே பூர்த்தி செய்து, பதிவிறக்கம் செய்து விண்ணப்பக் கட்டணத்துக்கான வரைவோலையுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 12,700 ஆகும். கட்டணத்தை "இயக்குநர், சர்வதேச விவகாரங்களுக்கான மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 25' என்ற பெயரில் நியூயார்க்கில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "இயக்குநர், சேர்க்கை மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவர்களுக்கான படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 4.75 லட்சமாகும்.
தொழில் நிறுவன கூட்டமைப்பு ஒதுக்கீடு: இதுபோல் தொழில் நிறுவன கூட்டமைப்பு ஒதுக்கீட்டின் கீழான பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும் பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது. மொத்த சேர்க்கை இடங்களில் 5 சதவீதம் இதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் ரூ. 500-க்கான வரைவோலையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 10 கடைசித் தேதியாகும்.

Sunday, May 17, 2015

சொல்லத் தோணுது 34 - எதைப் பார்த்து சிரிக்கிறார்கள்?



அரசியல் என்பது என்ன? புதிது புதிதாக எதற்காக கட்சிகள் தொடங்கப்படுகின்றன? அந்தக் கட்சிக்குள் இருப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? தொடங்குபவர்களின் தகுதியும், அற்குள் இணைந்து கொள் பவர்களின் தகுதியும் என்ன? மக்கள் முன்னேற்றத்துக்காக எனத் தொடங் கப்பட்ட கட்சிகளும் யாரையெல்லாம் முன்னேற்றின? தலைமுறை தலைமுறை யாகத் தொடர்ந்து செய்துவந்த தொழில் கள் எல்லாம் அழிக்கப்பட்டு, எல்லாத் தொழில்களையும் தனது காலடியில் போட்டுக்கொண்ட அரசியல்... இன்று பெரும் தொழிலாக மாறிப் போனதன் காரணங்கள் என்ன?

காலையில் கண்விழித்து நாளேடு களைப் பார்த்தாலோ மற்றும் தெருக்கள், சாலைகளுக்கு சென்றாலோ அங்கெல்லாம் அரசியல் கட்சிகளின் பெயர்களும், தலைவர்கள், குட்டித் தலைவர்களின் பெயர்களும் படங்களும் நிரம்பி வழிகின்றன. அந்தப் படங்களில் எல்லாம் அவர்கள் மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிற்றூர்கள், சிறு நகரங்கள், நகரங் கள், பெருநகரங்கள், தலைநகர் என ஒவ்வோர் இடத்திலும் அரசியல்வாதி யாக இருப்பவரின் தோற்றம், வளர்ச்சி, அவர்களின் செயல்பாடு என எல்லா வற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தங்களுடனேயே சுற்றித் திரிந்தவர் கள் வளர்த்துக் கொண்ட வசதிகளும், செல்வாக்கும், சொத்துக்களும் எங்கி ருந்து வந்தன என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். அரசியலில் நுழைந்து காலடி எடுத்து வைக்கும்போது அவர்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களின் குடும் பம் என்ன தொழிலைச் செய்து, எவ்வளவு வருமானத்தைப் பெற்றது? எவ்வளவு சொத்து இருந்தது என்பதெல்லாமும் தெரியும். குடும்பத்தில் உள்ள ஒருவர் கூட எந்தத் தொழிலையும் செய்யாமல் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன என்பதும் மக்களுக்குத் தெரியும்.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி, முதலமைச் சர் பதவி, பிரதமர் பதவி என எல்லாவற்றுக்கும் சம்பளம் எவ்வளவு கிடைத்தது? செலவுகள் போக மீதி எவ்வளவு இருக்கும் என கணக்குப் பார்த்தால், இந்நாட்டில் எத்தனை பேர் நேர்மை யாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். ஆனால், தங்கள் பதவிக்காக தரப்பட்ட ஊதியத்தில் மட்டுமே நேர்மையோடு அரசியல் வாழ்வை மேற்கொண்டவர்களும் இருக் கின்றனர். ஏனெனில், அவர்கள் அரசியலை தொண்டாக மதித்தவர்கள்.

யார் யார் பெயரிலோ, எந்தெந்த நாட்டிலோ அரசியல்வாதிகள் மறைத்து வைத்திருக்கும் சொத்துக்களை எல் லாம் பிடுங்கினால் உலகத்திலேயே இந்தியாவே பணக்கார நாடு. ஒரு ரூபாய் கூட மக்களிடத்தில் வரி விதிக்காமல் 50 ஆண்டுகள் சிறந்த ஆட்சியை நடத்தலாம். அரசியலில் வெற்றிபெற்றவர்கள் மட்டு மில்லை; தோற்றவர்களும் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு நம் நாடுதான். ஆனால், மக்களாட்சி மலர்ந்து மக்களுக்குக் கிடைத்ததெல்லாம் நோய் களும் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமைகளும்தான்.

எவ்வாறு கட்சித் தொடங்குவது? எவ் வாறு மக்களைத் திரட்டுவது? எவ்வாறு தலைவனாக உருவெடுப்பது? எவ்வாறு மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது? அதன் மூலம் காவல்துறை, சட்டத் துறை, நீதித் துறையை வளைப்பது? பின், இந்த பணத்தைக் கொண்டு எவ்வாறு மக்களை விலைக்கு வாங்குவது என்பதெல்லாம் அறிந்த அரசியல்வாதிகள், நம் நாட்டைத் தவிர வேறெங்கிலும் இல்லை.

மக்களை மேம்படுத்த உருவான ஜனநாயகம் எனும் மக்களாட்சி, இந்த 67 ஆண்டுகளில் கண்டதெல்லாம் மக்களின் அடிப்படை வசதியான கழிப்பிடம் கூடம் 63 கோடி மக்களுக்கு இல்லாமல் வைத்திருப்பதுதான்!

தன்னலவாதிகள் அரசியலுக்குள் நுழைந்ததால், அரசியல் என்பது ஒரு தொண்டாக இருந்ததுபோய், வெறும் தொழிலாக மாறிப் போனது. பிழைப்பு வாதிகள் செய்யும் அரசியல் தொழிலுக்கு, தொண்டர்கள் எனும் பெயரில் அதே போன்ற பிழைப்புவாதிகளே தேவைப்படு கிறார்கள். அரசியல்வாதிகள் எப்படியெப் படியோ பணம் சம்பாதிப்பதையும், அப்படி சம்பாதிப்பது தண்டனைக்கு உள்ளாவது இல்லையென்பதையும் பார்க்கும் தொண்டனும், தானும் அதே வழியில் சம்பாதிக்க, அதே அரசியலை பயன்படுத்துகிறான்.

எந்தத் தொழிலில் இன்று இழப்பு வந்தாலும் அரசியல் தொழில் மட்டும் வருமானம் தரும் தொழிலாக பரிணாமம் பெற்றிருக்கிறது.

தங்களின் குழப்ப நிலையால் முடிவெ டுக்கத் தெரியாமல், ஒவ்வொரு முறை யும் எதிர்காலத்தில் எந்த முன்னேற்றத் தையும் காணாத கட்சிகளில் மாறி மாறி சேர்ந்து, குடும்பத்தை கவனிக்காமல் சொத்துக்களை இழந்து, குடிகாரர்களாக மாறி கடைநிலைத் தொண்டனாக செத் துப் போகிறவர்களின் பட்டியலும் இதில் ஏராளம்.

கட்சித் தலைவர்களின் பகை உணர்ச்சி களுக்குள் சிக்கிக் கொண்டு அவர்கள் அடிக்கடி எடுக்கும் தவறான முடிவுகளால் வாழ்க்கை திசைமாறி எதிர்காலத்தை இழந்து நிற்பவர்களும் ஏராளம். இப்படிப் பட்ட பிழைப்புவாதிகள் மற்றவர்களிடம் தாவிவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வப்போது சுறுசுறுப்பை ஏற்றி ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் பொதுக்குழுக் கூட்டங்களும், கட்சி மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.

இதுமட்டுமின்றி யாராவது இறந் தாலோ, குற்றம் உறுதி செய்யப்பட்டு பத வியை இழந்தாலோ, இடைத் தேர்தல் வந்தாலோ… அது பெரும் கொண் டாட்டமாகிவிடுகிறது. தேர்தலுக் குத் தயாராகும் காலங்களில் இருந்தே பிரியாணிப் பொட்டலங்களுக் கும், மதுவுக்கும், செலவுக்குப் பணத்துக் கும் குறைவிருக்காது. போதை ஊசி ஏற்றப்பட்டதுபோல் தலைவரின் புகழ் பாடி வளர்பவர்கள் அவர்களை கடவு ளுக்கு இணையாகப் பார்க்கிறார்கள். ஊழல்வாதிகளாகவும், குற்றவாளி களாகவும் சொல்லப்படுவதை அவர் களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் நாக்கை அறுத்து, மொட்டையடித்து, சிலவேளைகளில் பலர் உயிரையும் மாய்த்துக் கொண்டுவிடுகிறார்கள்.

அரசியல் நமக்கான இடமில்லை என படித்தவர்களெல்லாம் விலகிப் போய் விடுகிறார்கள். நேர்மையானவர்கள் பழி வாங்கப்படுவதையும், கொலை செய்யப் படுவதையும் கண்டு, வாக்களிப்பது மட்டுமே தங்களின் கடமை என மக்களும் இருந்துவிடுகிறார்கள்.

‘நேர்மையான என் தலைவன் பின் னால்தான் என் வாழ்க்கை’ என தன் கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட என் அண்ணன், இரவு பகலாக அந்தக் கட்சிக்காகவே உழைத்தார். குறுக்கு வழியில் போகப் பிடிக்காமல் தன் சொத்துக்களை எல்லாம் இழந்து, குடும்பத்தைக்கூட கவனிக்காமல் ஏழை யாகவே மாண்டு போனார். அவரின் மகன் ஒருவன் அரசு மதுபானக் கடையில் பணியாளனாக மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் வரப் போகும் தேர்தலுக்காக அதே கட்சிக்காக ஊர்ப் பகுதியில் எல்லா சுவர்களிலும் பெயரெழுதி இடம்பிடித்துக் கொண்டிருக்கிறான். நாட்டின் எந்த மூலைக்கு பயணித்தாலும் இவ்வாறான தொண்டர்களால் வரையப்பட்ட கட்சித் தலைவர்கள் மக்களைப் பார்த்து சிரித் துக் கொண்டேயிருக்கிறார்கள். எதற் காக இப்படி சிரிக்கிறார்கள் என எனக் குத் தெரியவில்லை. உங்களையெல் லாம் நோயாளிகளாக, தன்மானம் இழந்த வர்களாக, குடிகாரர்களாக, சிந்தித்து வாக்களிக்கத் தெரியாதவர்களாக, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்களாக தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறோமே என்பதற்கான சிரிப்பாக இருக் குமோ? நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

- இன்னும் சொல்லத் தோணுது!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
thankartamil@gmail.com

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.70 ஆயிரம் வரை உயர்வு - பிடிஎஸ் படிப்புக்கு ரூ.15 ஆயிரம் அதிகரிப்பு

Return to frontpage

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான கல்வி கட்டணம் ரூ.15 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 383 இடங்கள் (15%), அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 2,172 இடங்கள் (85%) மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ளன.

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. இவை தவிர, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) அனுமதியைப் பொறுத்து தனியார் (சுயநிதி) மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

2015-16ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை விண்ணப்ப விற்பனை நடக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 12-ல் வெளியிடப்பட உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19 முதல் 25-ம் தேதி வரை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) திட்டமிட்டுள்ளது.

ரூ.3 லட்சம் வரை

இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் வசூலிக்கவேண்டிய கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்துள்ளது. அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் குறைந்த பட்சம் ரூ.2.50 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ரூ.1.30 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான கட்டணம் ரூ.15 ஆயிரமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுக் கல்லூரியைவிட 20 மடங்கு அதிகம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு கட்டணம் ரூ.13,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் இதைவிட 20 மடங்கு அதிகம். சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்புக்கு ரூ.11,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MBBS/BDS application portal to reopen

MBBS/BDS application portal to reopen  TIMES NEWS NETWORK 26.07.2026 Chennai : The Tamil Nadu Selection Committee will reopen the online app...