Sunday, June 7, 2015

SSLC supplementary exam: candidates must register on June 9, 10

Candidates taking the SSLC supplementary examinations this year must register with the School Education Department on June 9 or 10.According to an official release, the examinations would be held in June-July for candidates who appeared for the March-2015 SSLC public examinations either as school or private candidate.

They can register at the office of Chief Education Officer on Raja Street. The examination fee was Rs. 675. It must be paid in cash.

PG medical counselling stalled, students allege irregularities

The revised third phase of counselling for postgraduate courses offered by the Tamil Nadu Dr. MGR Medical University was stalled for two hours on Saturday as candidates refused to participate.

At the Kilpauk Medical College, candidates allotted seats in the third phase held between June 2 and 4 said they would lose the seats if fresh counselling was held.

Around 30 candidates had been allotted seats earlier this week. But the Directorate of Medical Education received a fax from the Medical Council of India late on June 2, permitting Annamalai University to add four PG seats.

According to officials the decision to nullify the earlier counselling was taken following a representation by some students.

“We took the decision as we wanted all students to get a fair chance. Last year, we had a similar situation and seats remained vacant as we had completed the process by then,” said an official.

Some parents and students, however, alleged that the decision was taken to accommodate the daughter of a politician. But officials denied the charge.

The decision to declare null the earlier session of counselling upset some students as they had to give up seats in coveted colleges. Medical education officials said there were around 55 seats and candidates would in all probability get the colleges they desired. The changed seat matrix following the addition of new seats had raised the hope of garnering a seat under community quota.

The parent of a candidate from BC (Muslim) community said his daughter was denied seat under the quota as she was told it was already filled.

Community quota

Selection committee officials said community quota seats would be allotted as per reservation policy. During the first two phases of counselling too, the process had been followed, an official said.

Some students alleged that though seats we available in MMC, they were not exhibited during counselling. However, selection committee secretary Uma Sadasivan said the seats are allotted based on the colleges’ declaration. The seat matrix is then drawn up. “Each seat is precious to us,” she said.

Counselling for PG courses will be completed by Sunday.

Saturday, June 6, 2015

கடலூர் சிப்காட், இன்னொரு போபால்?



இந்திய வரைபடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் தென்படுகிறது. ஆனால், அந்த வரைபடத்தில் தென்படாத இன்னொரு போபால் தமிழகத்தில் இருக்கிறது. அது கடலூர் சிப்காட்!

‘கெமிக்கல் தீபகற்பம்' - இப்படித்தான் சிப்காட் பகுதியை இந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள் என்கிறார் விவசாயி அமிர்தலிங்கம். சிப்காட் பகுதியில் இருக்கும் சுமார் 20 கிராமங்களில் ஒன்றான ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தக் கிராமத்தில் விவசாயம் நிர்மூலமானதில் பெரும்பங்கு நிலத்தடி நீருக்கு உண்டு.

"மூன்று பக்கமும் தொழிற்சாலைகள், ஒரு பக்கம் உப்பனாறு. அந்த ஆற்றையொட்டிப் பல காலம் ஆற்றுப் பாசனம் நடந்திருக்கிறது. ஆனால், தொழிற்சாலைக் கழிவுகள் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆற்றில் விடப்பட்டதால் இப்போது அது சீர்கெட்டுக் கிடக்கிறது. அது நிலத்தடி நீரையும் பாதித்துள்ளது" என்று விவசாயம் பொய்த்ததற்குக் காரணத்தை விளக்குகிறார் அமிர்தலிங்கம்.

மிகப் பெரிய சாதனை

இந்த ஆற்றையொட்டி ஈச்சங்காடு வாய்க்கால் என்ற ஓடை ஓடுகிறது. இதன் மூலம் ஓடைப் பாசனமும் நிகழ்ந்துள்ளது. ஆனால், சிப்காட் தொழிற்சாலைகள் இந்த ஓடையையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஓடையைக் கழிவு நீர் எடுத்துச் செல்லும் பாதையாகப் பயன்படுத்திவந்திருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அந்த ஓடையை மீட்டெடுக்கப் போராடிவருகிறார் ஈச்சங்காடு கிராமத் தலைவர் செந்தாமரைக்கண்ணன்.

"நெல், கடலை, வெள்ளரி போன்ற பயிர்கள்தான் இங்கே பயிரிடப்பட்டுவந்தன. ஆனால், நிலத்தடி நீர் கெட்டுப் போனதற்குப் பிறகு இங்கு எல்லோரும் கம்பெனிகளுக்கு வெறும் ரூ.120-க்கு செக்யூரிட்டி வேலைக்குப் போகிறார்கள். எங்களை நிலத்தில் இருந்து வெளியேற்றியதுதான் சிப்காட்டின் மிகப் பெரிய சாதனை" என்றார் செந்தாமரைக் கண்ணன்.

மீனும் போனது

விவசாயிகளின் நிலை இப்படி என்றால், மீனவர்களின் நிலையோ இன்னும் மோசம். "உப்பனாற்றில் முன்பெல்லாம் கெளுத்தி உட்பட 50 வகையான மீன் இனங்கள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 5 இனங்கள்தான் இருக்கின்றன" என்கிறார் பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளரான புகழேந்தி.

"தைக்கால் முகத்துவாரத்தில் இருந்து ஆலப்பாக்கம்வரை நீண்டிருக்கிறது இந்த உப்பனாறு. இடைப்பட்ட தொலைவில் 10 மீனவக் கிராமங்கள் இருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் குச்சி வலை என்கிற பாரம்பரிய முறையில்தான் மீன்பிடித்துவருகிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னால் 4 மணி முதல் 5 மணி நேரம் ஆற்றில் இருந்தால் 300 முதல் 400 மீன்கள் வரை கிடைக்கும். இப்போது அதே அளவு நேரம் மீன்பிடித்தால் 100 முதல் 150 மீன்கள் வரை கிடைத்தால் பெரிய விஷயம்" என்கிறார் புகழேந்தி.

முதிர்கன்னிகள்

கடலூர் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய பாதிப்பு விவசாயிகள், மீனவர்களுடன் நின்றுவிடவில்லை. போபால் விஷ வாயுக் கசிவுக்குப் பிறகு அந்த ஊரில் திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துவருகிறது. அதற்குக் காரணம், ஒரு வேளை அந்தப் பெண்களும் விபத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறவிக் குறைபாடுகள், மற்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்று பலரும் நம்புவதுதான்! அவர்களில் பலர் இன்றைக்கு முதிர்கன்னிகளாக தங்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் கடலூர் சிப்காட் பகுதியிலும் ஏற்படலாம். என்ன ஒரே வித்தியாசம்... முதிர்கன்னிகளோடு சேர்த்து முதிர்கண்ணன்களும் இங்கே இருப்பார்கள் என்பதுதான்!

"கடலூரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் யாரும் முன்வருவதில்லை. மூச்சு திணறல், கண், தோல் எரிச்சல், குழந்தையின்மை, கருக்கலைதல், புற்றுநோய் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இங்கே பலருக்கு இருக்கின்றன. அதை அடிப்படையாக வைத்துத்தான் இங்குப் பலருக்கும் திருமணம் தடை பட்டிருக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவர்களும்கூட இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கும்கூட வரன் கிடைப்பதில்லை" என்கிறார் அமிர்தலிங்கம்.

என்ன காரணம்?

இந்த நிலையை மாற்றுவதற் காகத்தான் இங்கே நோய் தொற்று காரணவியல் ஆய்வு (epidemiology study) வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கைவிடுத்துவருகின்றனர்.

அப்படி ஆய்வு நடத்தப்பட்டால் எத்தனை பேர் எந்தெந்த விதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அது தெரிந்துவிட்டால், அந்த நோய்கள் ஏற்படக் காரணம் என்ன என்பதும் தெரிந்துவிடும். அதன் மூலம், அந்தக் காரணங்களைக் கட்டுப்படுத்த வழி பிறக்கும்.

கடலூர் சிப்காட் பகுதியில் வசித்துவரும் மக்கள் மீது இப்படிச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பல்முனைத் தாக்குதல் தொடுப்பதற்கு என்ன காரணம்? அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களை நோக்கிக் கைகள் நீள்கின்றன. இதற்குச் சாட்சியமாக ‘தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம்' (Neeri) மேற்கொண்ட ஆய்வு சுட்டிக்காட்டப்படுகிறது.

கரிம மாசு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2007-ம் ஆண்டு கடலூர் சிப்காட் பகுதியில் நீரி ஆய்வு மேற்கொண்டது. அதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் (volatile organic compounds) குறித்து ஆராயப்பட்டது.

ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் என்பது இயல்புநிலையிலேயே அதிக ஆவி அழுத்தம் கொண்டவை. அதனால், சில வேதி பொருட்கள் குறிப்பிடத்தக்க அளவு ஆவியாகி வளி மண்டலத்தில் கலந்துவிடும் வேதியியல் சேர்மங்களாகும். இப்படி வளிமண்டலத்தில் கலக்கும் வேதி சேர்மங்களால் காற்று மாசுபடுகிறது. அந்தக் காற்றைச் சுவாசிக்கும் மக்களும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆய்வில் சிப்காட் பகுதியில் 14 வகையான ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது (பார்க்க: பெட்டிச் செய்தி).

நடைப்பிணம்

இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்ட காலத்தில் சிப்காட் பகுதியில் மொத்தம் இருந்த 51 தொழிற்சாலைகளில் 25 தொழிற் சாலைகள் மூடப்பட்டிருந்தன. மீதி 26 தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கின. மூடப்பட்ட அந்தத் தொழிற்சாலைகளும் முழு அளவில் இயங்க ஆரம்பித்தால், மேற்கண்ட வேதி பொருட்களின் அளவு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கலாம். அப்படியென்றால் ஏற்கெனவே பாதிப்புகளால் திணறிக்கொண்டிருக்கும் மக்கள், இன்னும் மோசமான பாதிப்புகளால் அவதிப்பட நேரிடலாம் என்பதுதான் நிதர்சனம்.

ஆகவே, எந்தெந்தத் தொழிற்சாலைகள் எந்தெந்த விதமான வேதி பொருட்களை வெளியேற்றுகின்றன என்பதை அடையாளம் கண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு நோய் தொற்று காரணவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால், தீர்வு கண்ணில் தெரியும் நாள் மட்டும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

அதுவரையில், வேதனையோடு உடலில் நச்சு வேதி பொருட்களையும் சுமந்துகொண்டு நடைப்பிணம் போல வாழ்ந்துவருகிறார்கள் கடலூர் மக்கள்.

(கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19-வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE - 19th Media Fellowship) பெற்றவர்.)

‘மேகி' மட்டும்தான் குற்றவாளியா? - மருத்துவர் கு. சிவராமன்


மருத்துவர் கு.சிவராமன்


மேகி தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணமாகக் கூறப்படும் மோனோ சோடியம் குளூட்டமேட் பற்றி பிரபல எழுத்தாளரும் மருத்துவருமான கு. சிவராமன் என்ன சொல்கிறார்?:

ஓர் உணவுப் பொருளில் சுவை என்பது இயல்பாக வரவேண்டும். இயற்கையாகச் சில உணவுப் பொருட் களைச் சேர்க்கும்போது உருவாகும் சுவையைத் தாண்டி கூடுதலாகச் சுவையூட்டுவதற்கு, மருத்துவ, உணவியல் அடிப்படையில் நமது பாரம்பரியத்தில் சுவைகள் கூட்டப்பட்டன. ஏலக்காய், வெல்லம், எலுமிச்சை போன்ற சுவையூட்டிகளின் குணமறிந்து சேர்க்கப்பட்டன.

அடிப்படையே தவறு

இந்தப் புரிதலும் அக்கறையும் தூக்கியெறியப்பட்ட உணவுப் பொருள் பெருவணிகத்தில், வலிந்து சுவையைக் கூட்டும்போது, எந்தப் பொருட்களின் அடிப்படையில் அந்தச் சுவை கூட்டப்பட்டது என்பதை அறிய முடிவதில்லை. இப்படி வலிந்து சுவையூட்டுவது அடிப்படையிலேயே தவறு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். எம்.எஸ்.ஜி. என்று சுருக்கமாகவும், அஜினோமோட்டோ என்ற வணிகப் பெயரிலும் விற்பனையாகும் மோனோ சோடியம் குளூட்டமேட் என்ற செயற்கை சுவையூட்டியின் தயாரிப்பு முறை தெளிவற்றதாக இருக்கிறது. தாவரப் பொருட்களில் இருந்து குளூட்டமிக் அமிலம் கிடைப்பதாகக் கூறப்பட்டாலும், காப்புரிமை சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் தயாரிப்பு முறை ரகசியம் காக்கப்படுகிறது. அதில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியாது.

அடிமைப்படுத்தும்

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் உள்ளிட்ட உடனடி உணவுப் பொருட்களில் அமிலத்தன்மை வாய்ந்த இந்த உப்பு சேர்க்கப்படுகிறது. அதனால் வயிற்றுப் புண், அல்சர் போன்ற இரைப்பை சார்ந்த பிரச்சினைகளைச் சாதாரணமாக இது ஏற்படுத்தலாம். இந்த உப்பு ஒருவித அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடியது. இந்த உப்புச்சுவையை உணர்ந்தவர்களுக்கு, மற்ற உணவு வகைகளின் மீதான நாட்டம் குறையும். டாக்டர் பிளேலாக் எழுதி 1970-களில் வெளியான ‘தி டேஸ்ட் தட் கில்’ என்ற புத்தகத்தில், மோனோ சோடியம் குளூட்டமேட் மூளையின் ஹைப்போ தலாமஸ்வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும், வயிற்றுவலியில் தொடங்கி அறிவாற்றலைச் சிதைப்பதுவரை பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேகி மட்டுமல்ல

அதேநேரம் தடை செய்யப்பட்டுள்ள மேகி நூடுல்ஸில் மட்டுமல்ல, வேறு பல உடனடி நூடுல்ஸ் வகைகள், ஹோட்டல்-ரோட்டு கடைகளில் விற்கப்படும் சீன, தந்தூரி உணவு வகைகள், சிக்கன், பனீர், கடாய் உணவு வகைகளில் மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்படுகிறது.

திருமண வீடுகள், விசேஷங்களுக்குச் சமைக்கும்போதும் சாம்பார், ரசத்தில்கூட இதைக் கலந்துவிடுகிறார்கள். பர்கர், ரொட்டி, கோழி வறுவல் உள்ளிட்ட பிரபலப் பன்னாட்டு ஹோட்டல் சங்கிலித்தொடர் கடைகளில் பரிமாறப்படும் உணவு வகைகளிலும் இது சேர்க்கப்படுகிறது. அதனால்தான் ஒருவித தனிச்சுவை கிடைக்கிறது.

மேகி நூடுல்ஸை தடை செய்வதில் காட்டும் அக்கறையை, மோனோ சோடியம் குளூட்டமேட் சேர்க்கப்பட்ட அனைத்து உணவு வகைகளைத் தடை செய்வதிலும் அரசு காட்டுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

- ஆதி

தொழில் ரகசியம்: தவறை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது பெரிய தவறு



சுடச்சுட நாம் சாப்பிட்ட உடனடி உணவு இன்று சூடான விவகாரத்தில் சிக்கியிருக்கிறது. ‘மேகி’யில் அளவிற்கு அதிகமாக மோனோசோடியம் குளூடமேட் மற்றும் லெட் (காரீயம்) இருப்பதாக உத்திரப் பிரதேச ‘எஃப்டிஏ’ பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த காற்றழத்த தாழ்வு மண்டலம் நாடெங்கும் சூறாவளியாக உருவெடுத்து கடைகளில் கரையேறி மக்கள் மனங்களில் மேகி பற்றிய பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறது.

பல மாநிலங்கள் மேகி விற்பனைக்குத் தடை விதித்திருக்கிறது. பல கடைகள் மேகியை போகி பண்டிகைக்கு குப்பையில் போட்டு எரிப்பதைப் போல் தூக்கி எறிந்துவிட்டன. இச்செய்தி காலை டிபன் மாதிரி தினமும் மீடியாவில் பரிமாறப்படுகிறது. ‘டூ மினிட்ஸ்’ என்று கூறிய பிராண்டிற்கு ‘டூ மினிட்ஸ்’ அஞ்சலி செலுத்தவேண்டிய நிலை வராமலிருக்கட்டும்!

ஏதோ இந்த மட்டும் மேகியாக இருப்பதால் ஓரளவேனும் தாக்குப் பிடிக்க முடிகிறது. மேகிக்கு ஏற்பட்ட நிலை சாதாரண பிராண்டிற்கு ஏற்பட்டால் கதை கந்தலாகி, பெயர் பொத்தலாகி, கந்தர்வகோலமடைந்து டங்குவார் கிழிந்திருக்கும். இது போன்ற நெருக்கடியில் பிராண்ட் என்ன செய்வது? பிராண்ட் சிக்கலை எப்படி சமாளிப்பது? எப்படி மீள்வது? நெருக்கடியில் சிக்கி மாண்ட, மீண்ட பிராண்டுகளிடமிருந்து பாடம் பயில்வோம் வாருங்கள். ஆறு ‘A’க்கள் கொண்ட பாடம். ஜஸ்ட் டூ மினிட்ஸ் தான்!

அலர்ட்டாக இருங்கள் (Alert)

வருமுன் காப்பது மட்டுமல்ல, உஷாராய் இருப்பதும் விவேகம். நெருக்கடி தாக்கும் முன்பு அதை சமாளிக்கும் செயல்களை துவங்கவேண்டும். நெருக்கடி சுழற்றியடிக்கும் போது என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிவிடும்.

அதனால் நெருக்கடி எந்த ரூபத்தில் எல்லாம் வரலாம் என்று சிந்தித்து அச்சமயத்தில் என்ன செய்வது, எப்படி சமாளிப்பது போன்ற திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். சிக்கல்களை திறம்பட சமாளிக்கும் (கிரைசிஸ் மேனேஜ்மெண்ட்) நிர்வாகக் குழு உருவாக்கப்படவேண்டும். ஒவ்வொருவரும் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்காமல் யார், எப்படி, என்ன பேசுவது என்பது முன்னமேயே தீர்மானிக்கப்படவேண்டும்

ஆராயுங்கள் (Analyze)

நம்மை விட நம் பிராண்டைப் பற்றி யாருக்கு தெரியும். அதை சதாசர்வ காலமும் கண்காணிப்பது முக்கியம். மார்க்கெட்டில் என்ன பேச்சு அடிபடுகிறது, மக்கள் மனதில் நம் பிராண்ட் எவ்வாறு இருக்கிறது, மீடியா நம் பிராண்டைப் பற்றி என்ன நினைக்கிறது போன்ற விஷயங்களை 24x7 கண்காணிக்கவேண்டும். ‘ஃபேஸ்புக்’, ‘ட்விட்டர்’ போன்றவற்றில் நம் பிராண்டைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று ஆராய அலுவலகத்தில் ஒரு தனியாக ஒருவரை நியமித்தாலும் தப்பில்லை.

பிரச்சினை பிராண்டின் ஆதார பொசிஷனிங்கையே அசைக்கும் போதுதான் பிராண்ட் ஆட்டம் காணத் துவங்குகிறது. சில மாதங்கள் முன் ‘மெக்டானல்ட்ஸ்’சிலிருந்து ஒரு தெருச் சிறுவன் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது. ஆனால் அது சில நாட்களிலேயே மறைந்தும் விட்டது. காரணம், மெக்டானல்ட்ஸ் என்பது சாப்பிடும் இடம். அதன் ஆதார பொசிஷனிங் வேகமான, சுவையான சாப்பாடு. அந்த அடிவயிற்றில் கை வைக்காத நெருக்கடி பிராண்டை ஆட்டம் காண வைக்காது.

ஒப்புக்கொள்ளுங்கள் (Acknowledge)

நெருக்கடியில் இருக்கும் பிராண்டுகள் செய்யும் பெரிய தவறு தன் தவறை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது. தவறு இருப்பின் முதல் காரியமாய் ஒப்புக்கொள்ளுங்கள். இல்லை என்று சமாளிக்காதீர்கள். நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ‘குறைக்கான காரணங்களை ஆராய்கிறோம், நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்’ என்று உறுதிபட கூறுங்கள். நீங்களே கூறும்போது செய்தி உங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும். இல்லையென்றால் வருவோர் போவோ ரெல்லாம் செய்திக்கு கண் மூக்கு வைத்து சின்ன நெருக்கடி வளர்ந்து பிராண்டையே சின்னாபின்னமாக்கிவிடும்.

‘ஏர் ஏசியா’ விமானம் நடுவானில் காணாமல் போன போது கம்பெனியின் தலைமைச் செயல் அதிகாரியே (சிஇஓ) அதை உலகிற்கு தன் ட்விட்டர் மெசேஜ் மூலம் தெரியப்படுத்தி உடனுக்குடன் விஷயங்களை மீடியாவிற்கு தந்து வந்தார். இதனால் பிராண்டிற்கு எந்த பெரிய பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

தெளிவாக பதிலளியுங்கள் (Answer)

நெருக்கடி ஏற்பட்டால் ஆயிரம் சோதனை வரும். ஆளுக்கொரு கேள்வி கேட்பார்கள். பொறுமையாக பதிலளிக்கவேண்டும். எழும் ஒவ்வொரு கேள்விக்கில்லை என்றாலும் முடிந்தவரை பதிலளிக்கவேண்டும். அப்பொழுது தான் கம்பெனி உண்மையிலேயே கவலைப்படுகிறது, தேவையான செயல்களை செய்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.

நெருக்கடியில் சிக்கியிருக்கும்போது நாமே நம் பிராண்டைப் பற்றி நல்ல விஷயங்கள் பேசுவதை விட மற்றவர்களை விட்டு நம் பிராண்டைப் பற்றி கூற வைப்பது பலன் தரும். கோவாவில் டிரையல் ரூமில் கேமிரா வைக்கப்பட்டது என்று மத்திய அமைச்சரே குற்றம் சாட்டி பெரும் பரபரப்பிற்குண்டான ‘ஃபேப்மார்ட்’டிற்கு ஆதரவாக அந்த மாநில முதல் அமைச்சரே சர்டிஃபிகேட் கொடுத்தது அந்த பிராண்டிற்கு பெரிய உதவியாய் அமைந்தது.

வேகமாய் செயல்படுங்கள் (Alacrity)

கொசுக்கடி என்றால் பட்டென்று கடித்த இடத்தை அடிக்கிறோம். நெருக்கடி என்றால் நம் பதில் நடவடிக்கைகளில் போர்கால வேகம் தேவை. ஆடி அசைந்து ஆற அமர அசமஞ்சமாய் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுறுசுறுப்போடு செயல்படவேண்டும். ‘தாஜ் மஹால்’ ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கிய போது தாஜ் நிறுவனம் உடனுக்குடன் ஹோட்டலிலிருந்த விருந்தாளிகளை காப்பாற்றி வெளியேற்றியது. அதோடு தாக்குதல் நடைபெற்ற எழுபது மணி நேரமும் தங்கள் வெப்சைட்டில் உடனுக்குடன் நிலவரத்தை அப்டேட் செய்துகொண்டே இருந்தது. அதனாலேயே அந்த இமாலய நெருக்கடியிலிருந்து தாஜ் மஹால் ஹோட்டல் மீண்டு இன்று புதுப்பொலிவுடன் பட்டொளி வீசி பட்டையை கிளப்ப முடிகிறது!

ெநருக்கடிக்குப் பின்னும் செயல்படுங்கள் (Aftermath)

நெருக்கடிப் புயல் ஓய்ந்து செய்தி மழை விட்டுவிட்டது என்பதற்காக குடையை மடக்கி வைத்து விட்டு காது குடைய உட்காராதீர்கள். நெருக்கடியால் பிராண்டிற்கு ஏற்பட்ட இழப்பு எத்தகையது என்று ஆராயுங்கள். விற்பனை குறைந்ததா என்று மட்டும் பார்க்காமல் பிராண்டின் நற்பெயருக்கு எத்தகைய குந்தகம் விளைந்திருக்கிறது என்று வாடிக்கையாளரிடம் ஆய்வு செய்யுங்கள்.

செய்தி சேகரிப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி நெருக்கடி எதனால் ஏற்பட்டது, எவ்வாறு வளர்ந்தது, மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்வது போன்ற விஷயங்களை சேகரியுங்கள். இக்குழுவில் கம்பெனி ஆட்களை மட்டும் சேர்க்காமல் தேர்ந்த நிபுணர்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வது மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களையும் உங்கள் பிராண்டையும் மன்னிக்கக்கூட மக்கள் தயாராய் இருப்பார்கள்.

கெட்ட செய்தியைச் சொல்வதா என்று மீடியாவும் அமங்கல செய்தியை படிப்பதா என்று மக்களும் வருதப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று கெட்ட நியூஸ் கிடைக்காதா என்று இருவருமே காத்திருக்கின்றனர். நாம் தான் உஷாராய் இருக்கவேண்டும். பிராண்ட் ரெண்டுபட்டால் ஊர் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். கொஞ்சம் அசந்தால் பிராண்டை மென்று தீர்த்து விடுவார்கள். ஊர்காரர் போதைக்கு ஊறுகாய் ஆகாமல் பார்த்து கொள்வது அவசியம்!

நெருக்கடி ஒவ்வொரு தெருக்கோடியிலும் காத்திருக்கிறது. போட்டி பெருக்கெடுத்து ஓடும், மீடியா நெருக்கித் தள்ளும் இன்றைய மார்க்கெட்டிங் உலகில் அசால்ட்டாய் இருந்தால் அல்பாயுசு. ஆறு ‘A’ கொண்டு உஷாராய் இருப்பதே ஆயுள் காப்பீடு!

satheeshkrishnamurthy@gmail.com

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.

தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

நேர்மையின் இன்றைய நிலை


மது நாட்டில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளைப் பற்றி வெளிவரும் உண்மைகள் கடலில் உள்ள சிறு நீர்த்துளி போலத்தான். கடலளவு உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட அரசுத்துறைகளில் பணியில் சேர்ந்து நேர்மையாக இருப்பது என்பது சுனாமியில் எதிர்நீச்சல் அடிப்பதைவிட சிரமமான ஆபத்தான காரியம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சிறுவயது முதல்,  தான் கற்ற கல்வி, புத்தகங்கள் மற்றும் பெரும் தலைவர்களின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசுப் பணிக்கு வருபவர்கள் சந்திக்கும் சோதனைகள் ஏராளம். இது போன்ற ஊழல்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பிறர் முன்னிலையில் அவர்களை மிகவும் ஏளனமாக நடத்துவார்கள். இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டுதான் நேர்மையாக செயல்பட வேண்டும்.

அப்படிப்பட்ட சோதனைகளையும் மீறி நேர்மையாக இருக்கும் அதிகாரிகளை, உடன் வேலை பார்ப்பவர்களும் அரசியல் செல்வாக்கு பெற்ற வெளி நபர்களும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. சமீபத்தில் அரசுத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி,  தனது துறையில் பணியாற்றும் சக ஊழியர்களின் பிரிவுபசார விழாவில் பங்கேற்றுபேசும்போது, தனது பணிக்காலத்தில் மேலதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் முறைகேடான செயல்களுக்கு ஒப்புதல் கொடுக்கச சொல்லி நெருக்கடிகளைச் சந்தித்ததாக கூறுகிறார்.

இதுபோன்ற உள்ளக் குமுறல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரிகள் இது போன்ற விஷயங்களை பணி ஓய்வு பெற்ற பிறகு ஏன் சொல்ல வேண்டும்? ஏன் இது குறித்து அப்போதே தங்களின் துறையில் உள்ள மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கக் கூடாது என்று பலரும் நினைக்கலாம். ஊழல் என்பது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் கிருமி போல பரவி இருப்பதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாதிக்கப்படுவது நேர்மையாளர்கள்தான். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

இது போன்ற நேர்மையாளர்களை ஓரம்கட்ட ஊழல்வாதிகள் பல குறுக்கு வழிகளை கையாள்வதுண்டு. நேர்மையாளர்களின் நேர்மைக்கு களங்கம் கற்பிக்கும் பொய்ப் புகார்களை உருவாக்கி பிற ஊழல் அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளால் அவர்களின் வாழ்க்கை முழுவதும் வருந்தும்படியான தண்டனையைக்கூட பெற்றுத் தந்துவிடுவார்கள். இன்று பல இடங்களில் நிர்வாகம் அப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது.
அதிகாரிகளுக்கு முதலில் முறைகேடுகளுக்கு உடன்படும்படி நெருக்கடி வரும். தங்களின் உயிருக்கு பயந்து பல அதிகாரிகள் மனசாட்சிக்கு விரோதமாக முறைகேடுகளுக்கு துணை போகிறார்கள். அதற்கு சம்மதிக்காத அதிகாரிகளுக்கு முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும்படி நெருக்கடி வரும்.

அப்படி இல்லையென்றால் அந்த அதிகாரிகளின்மீதே வீண்பழி சுமத்தி நெருக்கடி கொடுப்பார்கள். அதைப் பொய் என நிரூபிக்க அதிகாரிகள் ஆயுள் முழுவதும் போராட வேண்டி இருக்கும். அப்படியும் தங்கள் மீதான புகாரை அவர்கள் பொய் என்று நிரூபிக்க முடியாமல் போனால் தங்களின் இறப்பிற்கு பின்பும் தீராப்பழியாக அது இருக்கும் என்ற அச்சம் பல அதிகாரிகளுக்கு உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி தன் அதிகாரத்திற்கு கவனத்திற்கு உட்பட்டு எந்த முறைகேடுகளும் நடக்காத வண்ணம் தடுத்து, தன்மேலும் வீண்பழி விழாமல் பார்த்துக்கொண்டு சமாளிக்கும் திறமையுள்ள சில அதிகாரிகள்,  பணி ஓய்வு பெற்ற பின் தங்களின் உயிரைவிட நேர்மையே பெரிது என்று தங்களின் உள்ளக்குமுறலை மனசாட்சியை உறுத்திக்கொண்டு இருக்கும் விஷயங்களை பொது வெளியில் சொல்கிறார்கள்.

மத்திய அரசில் பணிபுரியும் சிபிஐ அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று அரசின் எல்லா மட்டத்திலும் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் முடிந்த பின்னர்,  தங்களின் அனுபவங்களை பேட்டிகள் மூலமாகவும் தாங்கள் எழுதும் புத்தங்கள் மூலமாகவும் பொது வெளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். இவற்றில் சில நமது அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இன்று அரசுத்துறையில் வேலை பார்க்கும் பல அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்து,  மற்றவர்களும் அப்படி வாழ ஆசைப்பட்டு அரசு வேலைக்கு விரும்பி வருகிறார்கள். நேர்மையாக இருக்கும் சில அதிகாரிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே மதிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

மனித உடலில் உயிரை அழிக்கும் கிருமி புகுந்ததைப்பொல லஞ்சமும், ஊழலும் நமது அரசு நிர்வாகத்தில் புகுந்து ஆட்டிப்படைக்கிறது. திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது முன்னோர்களின் சொலவடை. இங்கு திருடன் திருடுவதை அங்கீகரிக்கும் பெருமையாக நினைக்கும் மனப்பாங்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது நம் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் நன்மையைத் தராது.

இது பற்றிய விழிப்புணர்வு நம்மில் இருந்து நம் வீடுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தலைமுறைகளேனும் நேர்மையுடன் நடக்க ஆரம்பிக்கும்.

- ருத்ரன்

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...