Sunday, July 5, 2015

Annual increments come 14 years after retirement

Almost 14 years after he retired, a 73-year-old man is all set to receive the annual increments which he was supposed to have been paid during his 39-year service in the Highways Department. An order to this effect has been passed by the Madras High Court.

Justice D. Hariparanthaman directed the Chief Engineer of the Highways Department and the Director of Rural Development Department to take appropriate action for getting annual increments for petitioner K. Velappan for his entire service within 12 weeks and he shall be paid the arrears accordingly.

The petitioner joined the Department as Road Inspector on November 15, 1961 and his service was regularised from January 14, 1965. However, he was not sanctioned annual increments from the day he joined service to December 21, 1988 in view of the delay in the orders of regularisation issued to him.

Till the day he retired from service as Junior Engineer on August 31, 2000, he was not sanctioned even a single increment except the minimum scale of pay in the respective posts.

Even after 14 years of retirement, the petitioner was being paid a sum of Rs. 2,750 as provision pension.

இனி ரேஷன் உணவு பொருட்களுக்கும் நேரடி மானியம்

புதுடில்லி : மத்திய அரசு, சமையல் 'காஸ்' சிலிண்டரை தொடர்ந்து, நியாய விலை கடைகளில் விற்கப்படும், உணவுப் பொருட்களையும், நேரடி மானிய திட்டத்தின் கீழ், கொண்டு வர முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அறிமுகமாகிறது. புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களில், நுகர்வோரின், 'ஆதார்' எண்ணுடன் கூடிய வங்கிக் கணக்கில், ரேஷன் பொருட்களுக்கான மானியத் தொகை சேர்க்கப்படும்.
துவக்கத்தில், ஒரு குடும்பத்திற்கு, 500 - 700 ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கில் மானியம் பெறுவோர், நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது.அதே சமயம், குடும்ப அட்டையில் அதுவரை வாங்கிய பொருட்களின் அடிப்படையில் அல்லாமல், குறிப்பிட்ட தொகை மானியமாக நிர்ணயிக்கப்படும். இத்தொகை, நுகர்வோரின் வங்கிக் கணக்கில், மாதந்தோறும் சேர்க்கப்படும்.

உதாரணமாக, ஒருவர் அரிசி, கோதுமை போன்றவற்றை பல காலம் வாங்காமல் விட்டிருந்தாலும், அனைத்து பொருட்களையும் வாங்கியோர் பெறும் அதே மானியத் தொகையை, இந்த நபரும் பெற முடியும்.யூனியன் பிரதேச எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதே சமயம், இத்திட்டத்தை செயல்படுத்துவது, அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வரும் டிசம்பருக்குள், நுகர்வோரின் ஆதார் ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவிற்கு மாற்றி, பொது வினியோக திட்ட தகவல் தொகுப்புடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வாறு இணைக்காத பட்சத்தில், பொது வினியோக திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் சப்ளை நிறுத்தப்படும்.இத்திட்டத்தை, வரும் டிசம்பருக்குள், ஏதேனும் ஒரு மாவட்டத்தில், சோதனை முறையில் அறிமுகப்படுத்தி, நியாய விலை கடைகளில், 'பயோமெட்ரிக்' சாதனங்களை நிறுவ, மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, எதிர்கொள்ளும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து, மாநில அரசுகள் அறிக்கை அளிக்குமாறும், கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.அரசுக்கு சேமிப்பு: தற்போது, 89 சதவீத ஆதார் ஆவணங்கள், டிஜிட்டல் வடிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. டில்லியில், 25 ஆயிரம் நியாய விலை கடைகள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஆந்திராவின், கோதாவரி மாவட்டத்தில், 100 சதவீத பொது வினியோக திட்டம், கடந்த மே முதல் டிஜிட்டல் மயமாகியுள்ளது.இதன் மூலம், போலி ரேஷன் கார்டுகள் பிரச்னை ஒழிந்து, அரசுக்கு முதல் மாதத்திலேயே, 8 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. இந்த வகையில், ஓராண்டில், இம்மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் மிச்சமாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.



அதிகரிப்பு:



* கடந்த, 2004 - 05ல், பொது வினியோக திட்டத்தின் கீழ், மானிய விலையில் அரிசி வாங்குவோரில், கிராமப்புற குடும்பங்களின் பங்கு, 24.4 சதவீதமாக இருந்தது. இது, 2011 - 12ல், 46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
* மண்ணெண்ணெய்க்கான மானியத்தையும், வங்கி கணக்கில் சேர்ப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

எம்.ஆர்.ராதா - கலகக்காரனின் கதை! (21)

Image result for mr radha images


கடந்த, 1964ல் வெளிவந்த பெரும்பாலான படங்களில் ராதா நடித்திருந்தார். புதிய பறவை படத்தில், சி.ஐ.டி., வேடத்தில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், அருணகிரிநாதர் என்ற பக்திப் படத்திலும் நடித்தார்.
அதுகுறித்து, ஆச்சரியப்பட்டுக் கேட்டவர்களுக்கு, 'காசு கொடுக்கறான் நடிக்கிறேன்; இது என் தொழில். அவ்வளவு தான்...' என்று பதில் கூறினார்.
மகளே உன் சமத்து என்ற படத்தில், அறிமுகமாயிருந்த நடிகையிடம், 'உன் பேரு என்னம்மா?' என்று கேட்டார் ராதா.
'தெய்வநாயகி...' என்றார் அந்தப் பெண்.
'தெய்வநாயகியா... அய்யய்ய... இதெல்லாம் பழைய மாடல்; சினிமாவுக்கு எடுபடாது. விஜயா, கிஜயான்னு எதாவது வச்சுக்கோ...' என்றார்.
அப்பெண், விஜயா என்று வைத்துக் கொண்டார். அவரே கே.ஆர்.விஜயா!

நடிகை சரோஜாதேவியின் பிறந்த நாள் அன்று, அவர்கள் வீட்டில் சத்ய நாராயணா பூஜை நடைபெறும். முன்னணி நட்சத்திரங்கள், சரோஜாதேவியின் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தி, பூஜையில் கலந்து, விருந்து சாப்பிட்டு வருவர்.
சரோஜாதேவி மேல் பாசம் கொண்ட ராதாவும், ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வார். ஷூட்டிங்கை முடித்து, இரவில் சரோஜாதேவியின் வீட்டுக்குச் செல்வார். வாசலில் நுழையும் போதே, 'சரோஜா...' என்று வாய் நிறையக் கூப்பிட்டபடி தான் செல்வார். சரோஜாதேவியும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்.
அதேபோன்று, ஷூட்டிங் முடிந்து, இரவு ஒவ்வொரு நட்சத்திரங்களாக வர ஆரம்பிப்பர். எம்.ஜி.ஆரும் வருவார். 'வாப்பா ராமச்சந்திரா...' என்று சிரித்தபடி வரவேற்பார் ராதா. அப்போது எம்.ஜி.ஆரைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையும், துணிச்சலும் ராதாவிடம் மட்டுமே இருந்தது.
சரோஜாதேவி குறித்து, அவர் அம்மாவிடம், 'உன் பொண்ண நல்லா வளர்த்து வச்சிருக்க... உடம்பு நிறைய துணி போட்டு வர்ற நடிகை யாருன்னா, அது சரோஜா தான். என்னா அழகு! ரொம்ப சந்தோஷமா இருக்கு; ரொம்ப நல்ல பொண்ணு...' என்பார் ராதா.

தயாரிப்பாளர், ஜி.என்.வேலுமணி மகன் சரவணன் திருமணத்திற்கு சென்றிருந்தார் ராதா. ஈ.வெ.ரா., வருவதாக இருந்ததால், அவருக்கு கொடுப்பதற்காக வெள்ளித்தடி ஒன்றை வைத்திருந்தார் வேலுமணி.
'வேலுமணி... தடி குடுக்கப் போறியா... குடு குடு... நம்ம ஆளு, அதைத் தட்டித் தட்டிப் பாப்பாரு பாரு...' என, கமென்ட் அடித்தார் ராதா.
ஈ.வெ.ரா., வந்ததும், வெள்ளித்தடியை அவருக்கு வழங்கினார் வேலுமணி. ராதா சொன்னது போன்றே, தடியை வாங்கியதும் அதை திருப்பித் திருப்பி தட்டிப் பார்த்தபடி இருந்தார்
ஈ.வெ.ரா.,
வேலுமணியைப் பார்த்து கிண்டலாக புன்னகை செய்தார் ராதா.

ஒரு முறை படப்பிடிப்பின் போது, ராதாவுக்கு வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வருவதற்கு வாகனம் எதுவும் இல்லை. அப்போது தான் புதிதாக இம்பாலா கார் வாங்கியிருந்தார் சிவாஜி. சாப்பாடு எடுத்து வருவதற்காக அக் காரை சிவாஜியிடம் கேட்டார் ராதா.
'அண்ணே... அது இம்பாலாண்ணே...' என்றார் சிவாஜி.
அடுத்த மூன்றே நாட்களில், புதிய இம்பாலா கார் ஒன்றை வாங்கினார் ராதா.
மதிய உணவு நேரத்தில், சிவாஜி இருக்கும் நேரம் பார்த்து, ராதாவின் இம்பாலா கார் அங்கு வந்து நின்றது. அதில், நிறைய வைக்கோல் கட்டுகள் ஏற்றப்பட்டிருந்தன.
'கணேசா... பாத்தியா இம்பாலா காரை....' என்றார் ராதா.
'என்னண்ணே... வைக்கோல் கட்டெல்லாம் ஏத்திக்கிட்டு...' என்றார் சிவாஜி.
'அது என்ன வெறும் தகரம் தானே... தோட்டத்துக்கு வைக்கோல் ஏத்திட்டுப் போக, வண்டி கிடைக்கலன்னு சொன்னான் வேலையாள். சரி... இம்பாலால ஏத்திக்கோன்னு சொல்லிட்டேன். வைக்கோலை நாம வேற எதுல போட முடியும்... இம்பாலால தான் போட முடியும்...' என்றார்.
ஒருநாள், ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து, கையில் பணத்தைக் கொடுத்து, 'இளங்கோவனைத் தெரியுமா?' என்று கேட்டார் ராதா.
'நல்லா தெரியும்ண்ணே...' என்றார் கஜபதி.
'அப்படியா... சரி அந்தப் பணத்தைக் குடு...' என்று கஜபதியிடம் இருந்து பணத்தை வாங்கி, தன் டிரைவரிடம் கொடுத்து, இளங்கோவனிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.
கஜபதிக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அவரின் முகம் மாறுவதைக் கண்ட ராதா, 'என்னய்யா ஒரு மாதிரி இருக்க?' என்றார்.
'இல்லண்ணே... நான் கொடுத்துட மாட்டேனா... அவ்வளவு நம்பிக்கை இல்லையா...' என்றார் கஜபதி.
'இளங்கோவன் எவ்வளவு பெரிய வசனகர்த்தா. கொடி கட்டிப் பறந்தவரு. செட்டுல வசனத்துல ஒரு வார்த்தை மாத்துறதுன்னாக் கூட, அவரைத் தேடிப் போய் அனுமதி வாங்கித் தான் மாத்துவாங்க.
'அவரு ஒஹோன்னு இருக்கறப்போ நீ பாத்துருக்க; அவரை நல்லாத் தெரியும்ன்னு வேற சொல்லுற. இப்ப அவரு நிலைம சரியில்ல; அவர் வீட்டை ஜப்தி செய்யப் போறாங்களாம். நீ போய் பணம் கொடுக்குறப்போ என்ன நினைப்பாரு... 'நம்ம நிலைம இப்படி ஆயிருச்சே'ன்னு வருத்தப்படு வாருல்ல... அதான் தெரியாதவங்க மூலம் கொடுத்தேன். அவரு அவமரியாதையா நினைக்கக் கூடாதுல்ல...' என்று தெளிவுபடுத்தினார்.
பொதுவாகவே ராதா ஏராளமான தர்ம காரியங்கள் செய்வார்; கேட்டவர்களுக்கு எல்லாம் இயன்ற அளவு உதவுவார். எந்த உதவியையுமே வெளியில் தெரியாமல் செய்ய வேண்டுமென்று நினைப்பார்.
'மாசத்துல ரெண்டு நாள் மட்டும் ப்ரீயா விட்டுரு; மத்தபடி சினிமாவுக்கு கால்ஷீட் கொடுத்துரு...' என்று கஜபதியிடம் சொல்வார்.
ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட் கொடுத்து, இரவு, பகலாக நடித்து வந்த நேரத்திலும், மாதத்தில் இரண்டு நாட்களாவது, நாடக மேடையில் நடித்தால் தான், ராதாவுக்கு நிம்மதியாக இருக்கும்.
'அந்த தேதியில நாடகம் இருக்கே... அன்னிக்கு வேண்டாமே...' என்பார். நாடகத்துக்காக ஒதுக்கிய நேரத்தில், எக்காரணம் கொண்டும், சினிமாவுக்கு கால்ஷீட் தர மாட்டார்.
தன்னை நம்பியிருந்த தன் நாடகக் குழுவினருக்கு செய்யும் சிறு உதவியாக அதை நினைத்தார் ராதா. அவ்வப்போது அவரைத் தேடி, நாடகக் குழு ஆட்கள் உதவி கேட்டு வருவர்.
அப்போது, ராதா கேட்கும் முதல் கேள்வி,'சாப்பிட்டியா...' என்பதாகத் தான் இருக்கும். 'முதல்ல போய் சாப்பிட்டு வா...' என்று தன் வீட்டுக்குள் அனுப்புவார்.
தினமும், அவரது வீட்டில் குறைந்தது, 10 நாடகக் கலைஞர்களாவது சாப்பிடுவர். சாப்பிட்டு வந்த பின், 'என்னடா...' என்று விசாரிப்பார்.
'ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணே... கொஞ்சம் பண உதவி...'
'என்னடா நீ... இதெல்லாம் கேட்டேனா... சினிமாக் கம்பெனியில எங்கடா ஒழுங்கா பணம் தர்றாங்க! இப்ப என்னத்த தர்றது... சாப்டேல்ல, அப்புறமா வா; பாத்துச் செய்யறேன்...' என்று சொல்லியபடி உள்ளே சென்று, பணத்தை எடுத்து, தன் பனியனுக்குள் வைத்தபடி வருவார்.
அந்த நபரின் அருகில் வந்து, பணத்தை வெளியே எடுத்து, கையில் திணித்து, 'போடா போடா... இப்ப எங்கடா பணம்... அப்புறம் பாக்கலாம்...' என்று சொல்லி, அந்த நபரை அனுப்பி விடுவார்.
ஒருவருக்கு தான் செய்யும் உதவி, மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தவர் ராதா.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

- முகில்

பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது


சென்னை,

பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இடங்கள் விவரம்

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன. பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. மேற்கண்ட படிப்புகள் தவிர சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.

பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 5 ஆயிரத்து 296 இடங்களும், பி.பார்மஸி படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 1,172 இடங்களும், பிஸியோதெரபி படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 630 இடங்களும் இருக்கின்றன. இந்த படிப்புகள் அனைத்தும் 4 வருட பட்டப்படிப்பாகும்.

நாளை முதல் விண்ணப்பம்

இவற்றுக்கான விண்ணப்ப படிவம் விலை ரூ.350. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ–மாணவிகள் தங்களது சாதிச்சான்று நகல் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப படிவம் இலவசம். அனைத்து படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. விண்ணப்ப படிவம் நாளை(திங்கட்கிழமை) முதல் 17–ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் கொடுக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 18–ந்தேதிக்குள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகம், கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்கவேண்டும்.

கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2–வது வாரத்தில் நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.

2 ஆண்டு பி.எஸ்.சி. செவிலியர் படிப்பு

2 ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு (செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மட்டும் ) மற்றும் 2 ஆண்டு மருந்தியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் ( www.tnhealth.org) இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேர்வுக்குழுவுக்கு ஜூலை 9–ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

இந்த தகவலை மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம், துணை இயக்குனர் டாக்டர் அறிவொளி ஆகியோர் இருந்தனர்.

Saturday, July 4, 2015

9 ways to embarrass yourself in Singapore

Singapore is one of the wealthiest countries in the world and is an island nation packed with expats. It's a country that seems to have perfectly blended cosmopolitan living with rich cultural heritage.
But, as with anywhere in the world, there are local customs people must be aware of and rookie mistakes visitors can make. These mistakes can not only be highly embarrassing but also costly.
Singapore has strict fines that ensure society functions the way authorities want it to. For example, if you "illegally" cross the road - within 50 metres of a crossing zone - you will be fined up to S$1,000 (£472, $744) or get 3 months in jail.
Here are some official and unofficial faux pas you don't want to make when you go to Singapore.
9. Taking a picture on the Metro
Singapore's Metro, which is the equivalent of Britain's DLR service and an overground version of New York's subway, bans pretty much everything other than entering and travelling.
Taking pictures and eating or drinking is banned and carries a S$500 (£267, $372) fine.
8. Breaking the hawker stall seating code
If you get to a food court that has lots of hawker stalls, beware of breaking the unofficial seating rule of "vacant" seats.
If you see an empty seat with a pack of tissues next to it, do not pick it up and sit down - this is how people save their seats while they go and get food.
Think of it as the equivalent of putting your towel on a sun lounger.
7. Wearing very little
Singapore is very near the equator and temperatures can rise to as high as 36 degrees Celsius (96.8 Fahrenheit) but you'll look utterly ridiculous walking around like you're going to the beach.
Singapore is a cosmopolitan city/country and 90% of region is heavy on the air conditioning - so you'll also be freezing if you're not actually covered up.
6. Not flushing the toilet
Well, it goes without saying that you should flush the toilet after you use it.
But if you forget or can't, for whatever reason, you could be seriously embarrassed when an official calls you out. And they will do that - not flushing the toilet in Singapore in a public place carries a S$150 (£71, $112) fine.
5. Not carrying tissues and hand wipes
A lot of Asia now has western toilets but in some of the more "local" areas the "drop and squat" is still prevalent.
These toilets are effectively holes in the ground that you have to squat over and many have hoses instead of toilet paper. While Singapore has mostly moved to using Western toilets, there will be some times when you're stuck using these "alternative" ones. 
It's always good to be prepared with tissues and anti-bacterial gel for these occasions.
4. Chewing gum
Singapore is incredibly sleek, clean, and cosmopolitan but this is mainly down to the strict rules it has governing its environment.
Chewing gum is banned in Singapore so being caught with it in your possession can lead to major embarrassment and possibly poverty - it carries a huge S$100,000 (£49,000, $74,517) fine.
Don't insult the food, even if it's chicken feet.
3. Playing with chopsticks
Ask any local what really irks them when it comes to dining etiquette and playing with chopsticks will come near the top.
It's seen as disrespectful and embarrassing to fellow diners.
2. Spitting
Spitting on the street may happen a lot in mainland China but don't think you can do the same in Singapore.
Not only will you be openly berated by locals but you'll be fined S$500 (£267, $372).
1. Insulting or making fun of the food
One of the great things about travelling is tasting and experiencing new cuisines. But whether it's trying chicken feet for the first time or the infamously pungent durian fruit, don't outwardly complain if you encounter food in Singapore that you think is odd.
Insulting the food and making fun of local delicacies will just show you up as an embarrassing, disrespectful tourist.
http://www.businessinsider.in/9-ways-to-embarrass-yourself-in-Singapore/articleshow/47818914.cms

DCI wants faculty report every 3 mths

To put an end to the fly-by-night faculty system, the Dental Council of India (DCI) has shot off a circular asking colleges to submit a report on its teaching staff once every three months. Till now, the colleges would send a report annually, just before the DCI inspection. Officials felt that many colleges were 'arranging' the faculty members during inspection and once the colleges got the requisite approvals, the faculty went absconding.

In the latest circular, the DCI officials say, "It has come to the notice of the council that dental colleges, after their recognition of BDS/MDS degrees, are removing their teaching staff abruptly leading to vacant staff positions for considerable time, thereby depriving the students and lowering the teaching standards.

The colleges are hereby directed to maintain full permanent staff strength and infrastructural facility throughout the academic session. All colleges are directed to forward the entire staff position every three months to the council failing which strict action will be initiated as per Dentist Act and regulation."

Mirror had earlier reported how the Medical Council of India (MCI) and DCI inspection teams were duped by many private medical and dental colleges with fictitious staff. MCI is now going in for radio frequency identification cards (RFIDs) for all staff.

துடுப்பில்லாப் படகில் தத்தளித்த தேவிகா!

‘வாழ்க்கைப் படகு’ தேவிகா

வாழ்க்கைப் படகு: 50 ஆண்டுகள் நிறைவு!

தமிழ்த் திரைப்படங்களில் ஜெமினி கணேசனுக்கு வாய்த்த சில நல்ல திரைப்படங்களில் ஜெமினி ஸ்டூடியோ தயாரித்த ‘வாழ்க்கைப் படகு’ முக்கியமானது. 1965-ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், ரங்காராவ், டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோகர், பாலாஜி போன்ற நட்சத்திரப் பட்டாளத்துடன், அனைவருக்கும் ஈடுகொடுக்க வேண்டிய நிலையில் தேவிகா சவாலான கதாபாத்திரம் ஏற்று நடித்த படம். வேப்பத்தூர் கிட்டு இப்படத்தின் கருவை ஒரு ஃபிரெஞ்ச் நாவலிலிருந்து பெற்றார். இப்படம் 1962-ம் ஆண்டு ‘ஜிந்தகி’ என்ற பெயரில் இந்தியில் இதே ஜெமினி ஸ்டூடியோவால் தயாரிக்கப்பட்டது. இதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ‘வாழ்க்கைப் படகு’ ஆனது.

கற்பே கருப்பொருள்

இந்திய மனங்களில் உறைந்துபோன ‘கற்பு’ என்னும் கருத்தாடல் முக்கியமான சிக்கல். இந்திய மனம் ‘காதல்’ என்பதை ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமே உரித்தானதாகப் பார்க்கிறது. ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது இன்னொரு ஆண்மகனுடன் உள்ள எல்லாத் தொடர்புகளிலிருந்தும் துண்டித்துக்கொண்டு நிற்பதாகும். குடும்ப அமைதியின் ரகசியம் இங்குதான் அடங்கியுள்ளது. இதைப் பேணி நடக்கும் பெண் கற்புக்கரசியாகிறாள். இங்கு சிறிதளவு ஐயம் ஏற்பட்டாலும் அது குடும்ப வாழ்க்கையைச் சீரழித்துவிடுகிறது. இந்தப் பிடிமானத்தை அடிப்படையாக வைத்துத் திரைக்கதையாக்கப்பட்ட படம்தான் ‘வாழ்க்கைப் படகு’.

நடிகை எனும் அடையாளம்

வேலை தேடி அலைகிற சீதா (தேவிகா), தனக்கு வேலை கிடைத்திருப்பதாக அம்மாவிடம் சொல்லும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. சீதா அந்த வேலை குறித்து அம்மாவிடம் சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியுடனும் திருப்தியடைந்தவளாகவுமே சொல்கிறாள்; ஆனால் அம்மாவோ திகைக்கிறார். காரணம், கிடைக்கிற வேலை நாடக நிறுவனத்தில்; அதுவும் நடிகையாக!

இந்த ஆரம்ப முரண் மிகவும் கவனிக்கத் தக்கது. அது மாறிவரும் இந்தியப் பெண் மனத்தின் சிந்தனை முறை. இளம் பெண்ணான சீதா தான் நடிகையாவதில் பழைய கோட்பாடுகளை மனதில் கொள்ளவில்லை; அவளைப் பொறுத்த அளவில் அதுவும் ஒரு வேலைதான் அரசுப் பணி போல அல்லது ஒரு நிறுவன ஊழியர்போல.ஆனால் பழமை மனம் கொண்ட அம்மா நாடக வேலை என்றதுமே துணுக்குற்றுவிடுகிறாள்.

சீதாவைக் காதலிக்கும் ராஜன் (ஜெமினி கணேசன்) ஜமீன்தார் ராவ் பகதூரின் (ரங்காராவ்) மகன். அவனுடைய காதலைத் தன் அதிகார அந்தஸ்தின் பொருட்டாக மட்டுமல்லாமல், அவள் ஒரு நடிகை என்ற நிலையிலும் ராவ் பகதூரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சீதாவின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பின் ராவ் பகதூர் ஒரு நிபந்தனையின் கீழ் தன் மருமகளாகச் சீதாவை ஏற்கிறார்.

திருமணத்தின் பின் நாடக இயக்குநர் கோபாலை எந்தக் காரணம் கொண்டும் சந்திக்கவோ பேசவோ கூடாது. சீதாவுக்கு ஏற்கெனவே அது ஒரு பிரச்சினையாக இல்லாததாலும், கோபால் ஒரு சிறந்த மனிதன் என்பதாலும் அவள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறாள். எது நிபந்தனையாகிறதோ, அதுதான் பல துயரங்களையும் சோதனைகளையும் குடும்பத்துக்குள் கொண்டுவருகிறது.

ஏற்கெனவே ஒரு நடிகையின் மீது சமூகத்துக்கு (ஜமீன்தாருக்கும்) இருக்கும் வற்றாத அந்த உள்ளுறைந்த ஐயம் தன்னை மறுபடியும் ஆங்காரமாக நிலைநிறுத்தப் பார்க்கிறது. இதனால் சீதாவின் வாழ்க்கை, கடலில் சிக்கிய துடுப்பில்லாத படகாக ஆகிறது. இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவதில் உள்ள சுழற்சிகள் நம் மனநிலைக்கு ஒத்தடம் கொடுத்து சமன்செய்கின்றன.

கண்ணதாசனின் பங்களிப்பு

இந்தப் படத்தின் பாடலாசிரியரான கண்ணதாசன் கிட்டத்தட்ட ஒரு வசனகர்த்தாவுக்கான பங்கையும் எடுத்துக்கொள்கிறார். கதையை நேர்க்கோட்டிலிருந்து பிறழ்ந்துவிடாமல் கொண்டுசெல்லும் பணி அவருக்கு உரித்தானதாகும். கதாநாயகிக்குச் சாதகமான மனநிலையை ரசிகர்களுக்கு உருவாக்குவதில் அவரின் கைவண்ணம் மிளிர்ந்திருக்கிறது.

கண்ணதாசன் தனிப்பட்ட முறையில் இந்திய ஆன்மிகப் பக்குவத்தைப் பெற்றவர்; கற்பு நிலை அவருக்கு உயிரானது. மனங்களின் தூய்மையையும் விரும்புகிறவர். ஆனால் ஒரு பெண்ணின் கற்புக்கு எப்போதும் சவால் விடுகின்ற நாடகக் கலையையும், அதில் நடிக்கும் பெண்ணையும் சமூகம் எந்த விதமாகப் பார்க்கும் என நன்றாகப் புரிந்துகொண்டு, பழமை மனங்களுக்கு நியாய உணர்வைப் போதிப்பதைப் போல பாடல்களை எழுதியிருக்கிறார். ஒரு பாடலில்..

“காதலித்தல் பாவமென்றால் கண்களே பாவமன்றோ

கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ, பெண்மையே பாவமென்றால் மன்னவனின் தாய் யாரோ?”

என்று நாயகி உருகும்போது அந்த மனநிலைக்கு ஏற்ற உணர்வுகள் ரசிகர்களுக்குள் ஆழமாய் உட்புகுந்து கதையை மேலும் வலுப்படுத்த உதவியிருக்கின்றன.

பொதுவாக, ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பு என்றால் பிரம்மாண்டமும் கதையம்சமும் கூடிய படங்கள் என்கிற எண்ணம் நமக்கு வரும். ஆனால் ‘வாழ்க்கைப் படகு’ பிரம்மாண்டமான படம் அல்ல; கதையம்சத்தில் கூடுதல் கவனம் செலுத்தி எடுக்கப்பட்டதை உணரலாம். எனினும் பிரம்மாண்டம் என்பதைக் காட்டாமல் போய்விடக் கூடாது என்பதாலோ என்னவோ ஒரு நிலநடுக்கக் காட்சியில் சற்றே சிரத்தை எடுத்துத் தங்களின் முத்திரையையும் பதித்திருப்பார்கள். இதை அந்தக் காலத்தில் வியந்து எழுதிய பத்திரிகைகளும் உண்டு. அந்த நிலநடுக்கம்தான் ராஜனுக்கும் சீதாவுக்கும் ராவ் பகதூருக்கும் நேரிடவிருந்த கவுரவப் பங்கத்தைச் சரிசெய்து காப்பாற்றுகிறது.

படத்தின் இயக்குநர் சீனிவாசன் என்று டைட்டில் கார்டு வருகிறது. ஒரு கணம் அதிர்ச்சி. யார் இந்த சீனிவாசன்? அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்று குழப்பம் வந்தது. யோசித்துப் பார்த்ததும் படத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்தான் அந்த சீனிவாசன் என்று தெளிந்தது. மக்களின் மனநிலையிலுள்ள ‘கற்பு’க்குப் பங்கம் வந்துவிடாமல் கதை சொல்ல வேண்டும்; இல்லையென்றால் ரசிகர்களின் கோப அலைகளில் சிக்கிக் கவிழ்ந்துவிட நேரும் என்பதால்தான் படத்துக்கு ‘வாழ்க்கைப் படகு’ என்று தலைப்பு வைத்தாரோ?

- களந்தை பீர்முகமது; சிறுகதை ஆசிரியர்

தொடர்புக்கு kalanthaipeermohamed@gmail.com

படங்கள் உதவி: ஞானம்

NEWS TODAY 25.08.2026