Thursday, September 24, 2015

கல்விக் கடன் செலுத்தாதவரை பணியிலிருந்து நீக்க முடியுமா? - பயனாளி - வங்கிக்கிளை மோதல்

Return to frontpage

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் ஊழியரான குப்புசாமி, தன் மகளுக்கு வாங்கிய கல்விக் கடனை செலுத்தாததால், மகளை வேலையைவிட்டு நீக்க வங்கி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

புகார் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர், “என் மகள் மீராவின் பல் மருத்துவப் படிப்புக்காக மன்னார்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் 2006-ல் கல்விக் கடன் பெற்றேன். 2 தவணைகளில் ரூ.1.98 லட்சம் வழங்கினர். என் பெயரில் தனிச் செலவுக் கடன் (Personal Loan) இருப்பதாகச் சொல்லி 3-வது தவணையை தர மறுத்துவிட்டனர். அந்த பாக்கியைச் செலுத்தியதும், 26.05.2010-ல் ரூ.2.47 லட்சத்தை ஒரே தவணையாக வழங்கினர்.

இந்நிலையில், 09.10.2014-ல் ரூ.9,98,850 கல்விக் கடன் பாக்கி இருப்பதாக தகவல் வந்தது. ரூ.4.45 லட்சம் வாங்கியதற்கு இவ்வளவு பெரிய தொகையை சொல்கிறீர்களே? என்று கேட்டதும் முரண்பட்ட கணக்குகளைச் சொல்லி, பின்னர் ரூ.7,59,467 பாக்கி இருப்பதாக 24.08.2015-ல் ஒரு கடிதம் அனுப்பினர்.

இதற்கிடையில், அதே வங்கி யில் எனக்கிருந்த நகைக் கடன் பாக்கியைச் செலுத்திவிட்டு நகையைத் திருப்ப முயன்றபோது, கல்விக் கடன் நிலுவையில் இருப்பதால், தவணையை வரவு வைக்க உள்ளதாகக் கூறி நகையை ஏலம் விட்டனர்.

இதுவரை, 4-5 தவணைகளாக ரூ.39,000 வரை கட்டியுள்ளேன். ஆனால், மாதம் ரூ.30,000, ரூ.40,000 கட்டுங்கள் என்கின்றனர். மின்வாரியத்தில் காசாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றதாலும், என் மகள் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராகப் பணிபுரிவதாலும், வங்கி கூறும் தொகையைக் கட்ட இயலவில்லை. எனினும், இருதய நோயாளியான எனக்கு வங்கி அதிகாரிகள் தொடர்ந்து மன உளைச்சல் கொடுத்ததால் நியாயம் கேட்டு, ரிசர்வ் வங்கி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் அனுப்பி னேன். அதற்கும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இப்போது முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியில் இருக்கும் என் மகளை வேலையை விட்டு நீக்கும்படி மருத்துவத் துறையினரை வங்கி அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்” என்றார்.

கொடுத்தது ரூ.5,49,600

இதுகுறித்து மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை மேலாளர் ஆர்.தியாகராஜனிடம் கேட்டபோது, “நான், 2013-ல் இங்கு மேலாளராகப் பொறுப்பேற்றேன். வங்கியில் உள்ள பதிவேடுகளின்படி மீராவுக்காக, அவர் படித்த கல்லூரி பெயருக்கு, குப்புசாமியிடம் மொத் தம் ரூ.5,49,600 கல்விக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெற்று, 10 ஆண்டுகளாகியும், அவர் மாதத் தவணையை கட்டாததால், வட்டி சேர்ந்து விட்டது. முறையாக கடன் தவணை செலுத்தியிருந்தால் இந்த அளவுக்கு வட்டி உயர்ந்திருக்காது.

அரசு அளித்த வட்டி தள்ளு படியும் கிடைத்திருக்கும். அதனால் தான், கூடுதலாக கட்டும்படி கூறினோம். மாதாந்திர கடன் தொகை, அதற்கான பட்டியல் அனைத்தையும் குப்புசாமி பெற்றுக் கொண்டு, கையெழுத்திட்ட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எங்கள் தரப்பில், அவருக்கு எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் கடன் தொகையை கட்டக் கூடாது என்பதற்காக, பல் வேறு குறுக்கு வழிகளை கையாள் கிறார்.

தனிச் செலவுக் கடனுக்காக, கல்விக் கடன் தவணை 6 மாதங் கள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அடமானம் வைத்து மூன்றாண்டு களுக்கு மேலாகிவிட்டால் நகை களை ஏலம் விடுவதுதான் வங்கி நடைமுறை. கல்விக் கடன் தொடர் பாக மக்கள் நீதிமன்றத்துக்கு குப்புசாமியை அழைத்து, ‘அசலை மட்டுமாவது ஒரே தவணையில் செலுத்துங்கள்’என்றோம். ஆனால், அவர் அசலையும் குறைக்க வேண்டும் என்கிறார். இதெப்படி முடியும்? அவருடைய மகள் கல்விக் கடன் பெற்றிருப்பது குறித்து மருத்துவத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். வேலையை விட்டு நீக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கவில்லை” என்றார்.

வங்கிகள் செய்யும் 26 தவறுகள்

இப்பிரச்சினை தொடர்பாக பேசிய கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.ராஜ்குமார், “தனிச் செலவு கடன் பாக்கிக்காக கல்விக் கடன் தவணையை நிறுத்தி வைக்கவோ, கடன் வாங்கியவரின் மகளை வேலையைவிட்டு நீக்கச் சொல்லவோ வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்விக் கடன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வங்கிகள் செய்யும் 26 வகையான தவறுகளைச் சரிசெய்யுங்கள் என்று மனிதவள மேம் பாட்டு அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கத்துக்கு சில வங்கி களைக் குறிப்பிட்டு 27.05.2015-ல் கடிதம் எழுதியுள்ளது” என்றார்.

தவணை விவரத்தை தெரிவிக்கவில்லை

பல் மருத்துவர் கு.மீரா கூறியபோது, “கல்விக் கடன் வாங்கும்போது, படித்து முடித்த பின்னர், மாதம் ரூ.8,000 கட்ட வேண்டும் என்றனர். எத்தனை மாதம் கடன் கட்ட வேண்டும், அதற்கான மாதாந்திர கடன் நிலுவைப் பட்டியல், மாதத் தவணைத் தொகை எவ்வளவு என்பது போன்ற எந்த விவரத்தையும் வங்கி தெரிவிக்கவில்லை” என்றார்.

சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்! எஸ்பி.முத்துராமன்

Return to frontpage

கடந்த வார கட்டு ரையை ‘எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் படம் இயக்கவில்லை’ என்று கேட்டு முடித்திருந்தேன். நடிப்பு துறையில் இருந்து அரசியல் துறைக்கு வந்து முதலமைச்சராக ஆனதும் அவர் நடிக்கவில்லை. அதனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லோருக்கும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவது இல்லை. அதைப் போல எனக்கு எம்.ஜி.ஆரை வைத்து படம் இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. அது நிறைவேறாத ஆசையாகவே ஆகிவிட்டது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனதும் ஒருமுறை படம் பார்க்க ஏவி.எம் ஸ்டுடி யோவுக்கு வந்தார். இந்தத் தகவல் ஸ்டுடி யோவில் இருந்த எல்லோருக்கும் தெரிய வர, எல்லோரும் தியேட்டர் வாசலுக்குப் போய் நின்றுவிட்டோம். படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர் எங்களை எல்லாம் பார்த்ததும் ரொம்பவும் சந் தோஷப்பட்டார். என்னைப் பார்த்தார். அவரை நான் இரு கைக் கூப்பி வணங்கி னேன். என் அருகில் வந்து, ‘‘உனக்கு என்ன வேணும்?’’னு கேட்டார். எதுவும் புரியாத வனாக நின்றேன். மீண்டும் ஒருமுறை, ‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றார். ‘‘உங்க வீட்டுல செய்ற சிக்கன் நெய் ரோஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். அது வேணும்’’னு கேட்டேன்.

ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ‘‘யாரெல்லாமோ, என் னென்னமோ கேட்குறாங்க… நீ போயி!’’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அடுத்த நாள் மதிய சாப்பாட்டு நேரம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து வந்த ஓர் ஆள், ‘‘உங்களுக்கு எம்.ஜி.ஆர் சிக்கன் நெய் ரோஸ்ட் கொடுக்க சொன்னார்’’ என்று சொல்லி ஒரு கேரிய ரைக் கொடுத்தார். வியந்து போனேன். எம்.ஜி.ஆர் இருக் கும் பிஸியில் ஓர் உதவி இயக்குநர் கேட்டதை எல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமா? முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சாட்சி. எம்.ஜி.ஆர் எனக்கு ‘கலைமாமணி’ விருது கொடுத்து கவுரவித்தார் என்பதை நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதை திரை யுலகம் ஒன்றுசேர்ந்து கொண்டாடியது. கலைக் கல்லூரி எதிரில் ஒரு பெரிய மேடை அமைத்து, அதில் எம்.ஜி.ஆர் நிற்க, திரையுலகினர் அனைவரும் ஊர்வலமாக வந்து அவரை வாழ்த் தினர். பெரிய விழாவாக அது கொண் டாடப்பட்டது. அந்த விழாவில் ஏவி.எம். சரவணன் சார் எல்லோருடைய சார்பிலும் வெள்ளி கோப்பை ஒன்றை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகமே பாராட்டுகிற காட்சியாக அந்த விழா அமைந்தது.

எம்.ஜி.ஆர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சைப் பெற்றுக்கொண்டிருந்தபோது உல கமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். எம்.ஜி.ஆருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் எம்.ஜி.ஆர் அவர்கள் குணமாகி சென்னை வந்தார்கள். இங்கு வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் டாக்டர் எலி ப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளிலும் சரவணன் சார் அவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று சரவணன் சார் கேட்டார். அப்போது அவர், ‘‘ ‘அன்பே வா' படத்தில் எம்.ஜி.ஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றார். வெளி நாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்.ஜி.ஆர் பெயர் பெற்றிருந் தார். அவரது விருப்பத்தை சரவணன் சார் நிறைவேற்றினார். மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!

எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் தலையீடு அதிகமாக இருக்கும் என்று அப்போது பரவலாக ஒரு பேச்சு இருந்தது. ‘அன்பே வா’ படத்தில் இரண்டு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பிறகு எந்தவிதத்திலும் அவர் தலையிடவில்லை. இந்த சந்தேகத்தை அவரிடமே கேட்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ராஜேந்திரன் நாடக கம்பெனியில் இருந்து வந்தவர். நகைச்சுவையாக பேசக் கூடியவர். சாதரணமாக எம்.ஜி.ஆரிடம் பேசுவார். அவர் கேட்டால்தான் சரியா இருக்கும் என்று எம்.ஜி.ஆரிடம் அவரை அனுப்பினோம். அவர், எம்.ஜி.ஆரிடம் ‘‘நீங்க படப்பிடிப்பில் எல்லா விஷயத் திலும் தலையிடுவீங்கனு கேள்விப்பட் டோம். இங்கே எதிலுமே தலையிடவில் லையே?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அப்படி ஒரு பேச்சு இருக்கா?’’ என்று கேட்டவர், அங்கே இருந்த எங்கள் எல்லோரையும் அருகே அழைத்தார்.

‘‘நான் நடிகன் மட்டுமல்ல. டெக்னீஷியனும்கூட. ஒரு வேலையைத் தப்பா செய்யும்போது அதைப் பார்த்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியாதே. முகத்தில் குத்து விழுவதுபோல காட்சி எடுக்கும்போது கேமராவை சரியான கோணத்தில் வைத்து எடுத்தால்தான் ரியலாக முகத் தில் குத்து விழுவதுபோல இருக் கும். கேமரா கோணத்தைத் தவறாக வைத்தால் காட்சி சரியாக அமையாது. அதனால் கேமராவை சரியான கோணத் தில் வைக்குமாறு கூறுவேன். எப்போதும் தவறைத்தான் சுட்டிக் காட்டுவேனே தவிர, மற்றபடி தேவையில்லாமல் தலையிடு வதில்லை. ‘அன்பே வா’ படத்தை பொறுத்தவரை திறமையான இயக்கு நர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட குழு வினர் எல்லாவற்றையும் சரியாக செய்கிறார்கள். அதனால் நான் தவறை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

மெய்யப்ப செட்டியாரின் கடைசி மகன் பாலசுப்ரமணியன் அவர்களுக் குத் திருமணம் நடந்தது. அப்போது செட்டியாரும், ராஜேஸ்வரி அம்மை யாரும் 21 தொழிலாளர்களுக்கு திருமணங்களை செய்து வைத்தார்கள். அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் திருமணம் நடந்த 21 தொழிலாளர்களுக்கும் பணமும், பரிசும் கொடுத்தார். அந்த அளவுக்கு தொழிலாளர்களின் மீது அன்பு வைத்திருந்தார் அவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் வெள்ளி விழா. அந்தப் படம் வெளியாகும் வரை ‘பட்ஜெட்’ இயக்குநர் என்ற பெயரை நான் பெற்றிருந்தேன். அந்த நேரத்தில் விசு அவர்கள் குறைவான நாட்களில், குறைந்த செலவில் பட்ஜெட் போட்டு அந்தப் படத்தை எடுத்து எனக்கு சவால்விட்டார். இதனை இன் றைய இயக்குநர்கள் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் துண்டு விழாது. தயாரிப் பாளர்களுக்கு நஷ்டம் வராது. ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம் இந்திய அரசின் தங்க பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப் படம். அந்தப் படத்தின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர், நடிகைகளைப் பாராட்டி கேடயம் வழங்கினார்.

அந்தக் கேடயம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட நினைவுக் கேடயம். ‘‘முக்கியமானவர்களுக்கு நீங்கள் கொடுங்கள். மற்றவர்களுக்கு நாகி ரெட்டியாரைக் கொடுக்கச் சொல்கிறேன்’’ என்று சரவணன் சார் கூறினார். எம்.ஜி.ஆர், ‘‘எல்லா கலைஞர்களுக்கும் நானே வழங்குகிறேன். பெரிய டெக்னீஷி யனுக்கு மட்டும் நான் கொடுத்தால், மற்றவர்கள் என் கையால் வாங்கவில் லையே என்று வருத்தப்படுவார்கள்’’ என்று களைப்பையும் பொருட்படுத்தாது எல்லோருக்கும் கேடயம் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வளவு பேரும், புகழும் பெற்ற எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இணையாக புகழ் பெற்றவரைப் பற்றி அடுத்த வாரம் எழுத இருக்கிறேன். யார் அவர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

Monday, September 21, 2015

இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

Return to frontpage

இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள் ளது. இந்த புதியமுறை, இன்று முதல் அமலாகிறது.

“கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகாலை 12.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்யும் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகாலை, 12.30 மணி முதல் இரவு 11.45 மணி வரை இனி முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய முறை 20-ம் தேதி முதல் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

பெண் எனும் பகடைக்காய்: குழந்தைப் பராமரிப்பில் ஆண்களுக்குப் பங்கில்லையா?



‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி. ஊர்வசி அவசரம் அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருப்பார். குழந்தை அழுதுகொண்டிருக்கும். அதைச் சமாதானப்படுத்திவிட்டு, டிபன் பாக்ஸில் மதிய சாப்பாட்டை அடைத்துக்கொண்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கணவரிடம்(!?) ஒப்படைத்துவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க ஓடுவார். ஆனாலும் குழந்தையின் நினைவு மனசுக்குள் வந்து வந்து போகும்.

பெண் வேலைக்குப் போக, கணவன் என்ற ஆண் வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்வது எந்தளவு சாத்தியம்? படத்தில் சம்பந்தப்பட்ட அந்தக் கணவன் கதாபாத்திரம், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், குடும்பப் பொருளாதாரச் சுமையை மனைவி ஏற்றுக்கொள்ள, அவர் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.

இனிதான் நம் கேள்வி எழுகிறது. கணவன் வேலைக்குப் போகிறவராக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்பவர் யார்? வீட்டில் பெரியவர்கள் யாராவது இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குழந்தையை ஏதாவது காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு மனைவி வேலைக்குப் போய் வர வேண்டும். அதுவும் முடியாத நிலை என்றால்? பெண் பேசாமல் வேலையைப் புறக்கணித்து விட்டு வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். குழந்தை வளர்ப்பு பெண்ணுக்கானது என்பது இங்கு எழுதப்படாத சட்டம்.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்து சிதறிய பின், பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் பெரும் சுமையாகத்தான் இருக்கின்றன. ‘கொடிக்குக் காய் பாரமா?’ என்ற கேள்வியெல்லாம் இங்கு கதைக்கு உதவாது. கருவுற்றதிலிருந்தே அதற்கான முன் தயாரிப்புகளைப் பெண் எதிர்கொள்ளும் சூழ்நிலைதான் இங்கே நிலவுகிறது.

அரசுப் பணியாளரின் அருமருந்து

மகப்பேறு விடுப்பு என்பது பெண்ணைப் பொறுத்தவரை மிகப் பெரும் வரப்பிரசாதம். 1961-ல் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மூன்று மாத விடுப்பை அனுமதித்தது. அதன் பின் அதையே ஆறு மாதங்களுக்கு நீட்டித்தது. இப்போது வரையிலும் அதுவே நடைமுறையில் உள்ளது. பெரும்பாலும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். மத்திய அரசுப் பணியில் மேலும் சில சலுகைகள் சமீப ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்வரை எப்போது வேண்டுமானாலும், தொடர்ச்சியாக என்றில்லை, தேவைப்படும்போதெல்லாம் இரண்டு ஆண்டு காலத்துக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் என்றால் மூன்று மாதங்கள் முடிந்ததும் கைப்பையும் உணவு டப்பாவும் மட்டுமல்லாமல் குழந்தையின் நினைவையும் சுமந்துகொண்டு பஸ்ஸோ, ரயிலோ பிடித்து அலுவலகத்துக்கு ஓட வேண்டும்.

வலியும் வாதையும்

விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் காலம் என்பது ஒரு தாய்க்கு மிகவும் வலியைத் தரும் அனுபவம். மனதளவில் மட்டுமல்ல, உடல் ரீதியாகவும்தான். பால் கட்டிக்கொண்டு வலியால் துடிக்கும் பெண்கள், அதை வெளியே சொல்ல முடியாமல் கண்ணீரை மறைத்துக்கொண்டு நம் கண் முன் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் குழந்தையின் ஒரு வயதுவரை பாலூட்ட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்களே, அதெல்லாம் தனியார் நிறுவனங்களின் காதில் விழுவதில்லை. நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொண்டல்லவா அதை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறது? பாலைப் பீய்ச்சிப் பத்திரப்படுத்த எல்லோருக்கும் வசதியிருப்பதில்லை. அப்படியே பத்திரப்படுத்தினாலும் அதை எடுத்துக் குழந்தைக்குப் புகட்டக் கண்டிப்பாக ஒரு ஆதரவும் துணையும் மிக மிக அவசியம் இல்லையா? அதனால்தான் நிறைய குழந்தைகள், பாட்டிமார்களின் கைகளில் அடைக்கலமாகிறார்கள்.

இரவு நேரப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழல் பற்றிச் சில தோழிகளுடன் விவாதித்தபோது, இரவுப் பணி என்பதே நிர்பந்திக்கப்பட்டவர்களான பி.பி.ஓ. பணியாளர்கள்கூட அதிலிருந்து விலக்கு பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண் மருத்துவர்கள், செவிலியர், டெலிபோன் ஆபரேட்டர்கள் இந்தப் பிரச்சினையை இப்போதும் எதிர்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரசவ கால விடுப்பு அளிப்பதிலேயே இப்போது பல சிக்கல்கள் எழுகின்றன. அரசு நிறுவனங்களில் விடுப்பில் செல்பவர்களின் பணியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக ஆண்கள், பேறு கால விடுப்பில் செல்லும் பெண்ணை ஒரு விரோதி போலவே பார்க்கும் பார்வையும் உண்டு. தனியார் நிறுவனங்களில் கொஞ்சம் பெரிய நிறுவனங்கள் கருணை காட்டினாலும் சிறிய நிறுவனங்கள் சுணக்கம் காட்டுவதுதான் இப்போது நடைமுறை.

கருவுற்றதாலேயே வேலையை விட்டு விலகச் சொன்ன ‘மாபெரும்’ வரலாறுகளும், சம்பந்தப்பட்ட பெண் அதை எதிர்கொண்டு நீதிமன்றத்தின் உதவியுடன் முறியடித்த கதைகளும் இந்த நவீன காலத்தில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கின்றன. விடுமுறை அளித்தாலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பதவி உயர்வு போன்றவை பெரும் கேள்விக்குறி. தகவல் தொழில்நுட்பத்தின் மாபெரும் வளர்ச்சி கண்ட நிறுவனங்களே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கின்றன. படித்த பல பெண்கள் தங்கள் தொழில்வாழ்வைப் பணயம் வைத்துத்தான் பிள்ளைகளைப் பெற்று, வளர்க்க வேண்டிய நிலை. குழந்தைக்கு ஐந்து வயது ஆகும்வரை இவை ஒரு பெண்ணுக்கு நிர்பந்திக்கப்பட்டவை. விதிவிலக்குகள் எல்லா இடங்களிலும் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால் பெரும்பான்மை என்பது மேற்சொன்னவாறுதான்.

எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமல் தங்கள் குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் ஒரு பிரிவாக ஒருங்கிணைக்கப்படாத, முறைப் படுத்தப்படாத வேலைகளில் பல பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் அரசின் உதவிகளும் சலுகைகளும் கிடைப்பது எப்போது?

தந்தைக்கும் பங்குண்டு

மீண்டும் ‘மகளிர் மட்டும்’ படத்துக்கு வருவோம். மாலையில் வேலை முடிந்து வீடு வந்து சேரும் ஊர்வசி, ‘ஆய்’ போன குழந்தையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும் கணவனைப் பார்த்துப் பதறிப் போவார். இதுதான் அச்சு அசலாகப் பெண்களின் குணம். இயல்பிலேயே அது ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. தான் கவனிக்க வேண்டிய பணிகளைக் கணவர் செய்கிறாரே என்ற பதைப்பு, ஒரு வித குற்ற உணர்வு. இது தேவையற்றது. தந்தையரும் குழந்தைகள் மீது உரிமை கொண்டவர்கள் இல்லையா? பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டியதற்கும் பாலூட்ட வேண்டியதற்குமான உடற்கூறு பெண்ணுக்கானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆணும் குழந்தையைப் பராமரிப்பது சாத்தியமே. அன்புடன் அரவணைக்கும் இரு கைகளால் சோறு அள்ளி ஊட்டவும் ‘ஆய்’ போன குழந்தைக்கு அலம்பிவிடவும் அவர்களாலும் முடியும்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

கொசுறு

மகப்பேறு தேதிக்கு ஒரு மாதம் முன்பு தொடங்கி எட்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நல அமைச்சருக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதை அளிக்க வேண்டும் என்பதும் அவர் கோரிக்கை. சீக்கிரமா முடிவெடுங்க அமைச்சரே!

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிய புதிய இணையதள வசதி: உச்ச நீதிமன்றம் ஏற்பாடு

Return to frontpage

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, வழக்குகளின் தற்போதைய நிலை, தீர்ப்பு விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ள புதிய வசதியை உச்ச நீதிமன்றம் அறிமுகம் செய்துள்ளது.

நீதிமன்ற வழக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் நவீனமயமாக்கும் முயற்சி 1990-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ecourts.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று தேசிய நீதிமன்ற தகவல் தொகுப்பு (என்ஜேடிஜி) பகுதியில் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியை உச்ச நீதிமன்ற நவீனமயமாக்கல் திட்ட தலைவர் நீதிபதி மதன் லோக்கூர் தொடங்கிவைத்துள்ளார். இதில், நாடு முழுவதும் மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்கள் வரை தாக்கலான வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட வழக்கு கள் உள்ளிட்ட அனைத்து விவரங் களையும் தெரிந்து கொள்ள முடியும். இந்த விவரம் அன்றாடம் புதுப்பிக்கப்படுகிறது.

2.7 கோடி வழக்குகள்

நாடு முழுவதும் மொத்தம் 2.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், நேற்றைய நிலவரப்படி, ஒரு கோடியே 96 லட்சத்து 62 ஆயிரத்து 938 வழக்குகள் குறித்த விவரங்களை ‘என்ஜேடிஜி’ வெளியிட்டுள்ளது. இதில், 66 லட்சத்து 36 ஆயிரத்து 620 சிவில் வழக்குகள், ஒரு கோடியே 30 லட்சத்து 26 ஆயிரத்து 225 கிரிமினல் வழக்குகள் அடங்கும்.

நிலுவையில் உள்ள ஆண்டின் அடிப்படையிலும் வழக்குகள் விவரம் பிரித்து வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 20 லட்சம் (10.23 சதவீதம்). ஐந்து முதல் 10 ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 35 லட்சம் (17.95 சதவீதம்). இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நிலுவையில் உள்ளவை 59 லட்சம் (30 சதவீதம்). இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ளவை 82 லட்சம் (41 சதவீதம்). மூத்த குடிமக்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 273 (2.97 சதவீதம்). பெண்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 90 ஆயிரத்து 763 (9.62 சதவீதம்). மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநில நீதிமன்றங்கள் குறித்த விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்கு மாற்றப்பட்டு வருவதால் அந்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

மரபு மருத்துவம்: தூக்கம் எங்கே போனது? மருத்துவர் வி. விக்ரம்குமார்



அசைந்தாடும் சோளக் கதிர்களின் ஆட்டம், அவ்வப்போதுக் களைப்பைப் போக்கப் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு, மதிய வெயிலில் புங்கை மரப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மலர் படுக்கையில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மாலையில் வீசும் தூய்மையான தென்றல் காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் கோரைப் பாயில் மனிதன் நிம்மதியாகத் தூங்கிய காலம் ஒன்று இருந்தது!

கட்டுப்பாடின்றி விரைந்துகொண் டிருக்கும் வாகனங்களின் இரைச்சல் காதைத் துளைக்க, பகல் முழுதும் மூளை உழைப்பைச் செலுத்திவிட்டு, மதிய நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற, ‘புஷ்-பேக்' இருக்கையிலேயே சாய்ந்து விட்டு, உடலும் மனமும் புழுங்க மாலை வேளையிலே மாசுபட்ட காற்றுடன் உறவாடிவிட்டு, இரவில் மெதுமெதுவென்று இருக்கும் மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை தேட வேண்டிய நிலையே இன்றைக்குப் பலருக்கும் வாய்த்திருக்கிறது.

என்ன தீர்வு?

நிம்மதியான தூக்கத்தைத் தொலைப் பதால் ஏற்படும் விபரீதங்களும், தூக்கத்தை மீட்பதற்கான வழிமுறை களும்தான் என்ன?

கடுமையான மன அழுத்தம், நெருக்கடியான வாழ்க்கைச் சூழல், அடிக்கடி ஏற்படும் உடல் உபாதைகள், எண்ணிலடங்கா மருந்து-மாத்திரைகள் போன்றவைதான் தூக்கம் பாதிக்கப் படுவதற்கு அடிப்படைக் காரணம். இரவு நேரங்களில் தூங்காமல் நைட் டியூட்டி பார்க்கும் பணியாளர்களுக்கும் வெகு விரைவில் தூக்கமின்மை பிரச்சினை வருவது உறுதி.

இரவின் கொடை ‘மெலடோனின்'

உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைத் தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாகச் சுரக்கும் ‘மெலடோனின்’ ஹார்மோன், நம்முடைய தூக்கம், விழிப்பு நிலைகளை (Sleep-Wake cycle) கட்டுப்படுத்தவும், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதேநேரம் தூக்கமின்மையால் ஏற்படும் உடலியல் மாறுபாடு காரணமாகத் தலைபாரம், உடல் வலி, சோம்பல், உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், மயக்கம், உடல் பருமன், தெளிவற்ற மனநிலை ஆகியவை உண்டாகின்றன.

நோய்களுக்கு வரவேற்பு

தூக்கம் பாதிக்கப்படும்போது, நமது உடலில் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் அளவு குறைந்தும், பசியை அதிகமாகத் தூண்டும் ‘கெர்லின்’ (Ghrelin) எனும் ஹார்மோனின் அளவு அதிகரித்தும் உடல் பருமனை உண்டாக்குகிறது. மேலும் ‘குளுகோஸ்’ வளர்சிதை சக்கரம் பாதிக்கப்பட்டு, நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

தூக்கம் சார்ந்து இன்றைக்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள செய்திகளை, பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் எழுதிய ‘சித்திமய கஞ்செறியும் ஐம்புலத் தயக்கம்' எனும் வரிகள் நித்திரை பங்கத்தால் மயக்கமும் உடல் சோர்வும் ஏற்படும் என்று சொல்கின்றன.

வேண்டாம் பகல் உறக்கம்

பகலில் அதிக நேரம் உறங்குவதால், பல வகை வாத நோய்கள் வரலாம் என ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்னும் நூல் தெரிவிக்கிறது. பகல் உறக்கம் காரணமாக, மரபணுக்களில் மாற்றம் நிகழ்வதாகச் சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குவதால், இதய நோய்கள் வர வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் தேக அசதி, பசி மந்தம், மலக்கட்டு ஆகிய நோய்களும் உண்டாகலாம்.

சிகிச்சை

l அமுக்கரா கிழங்கு பொடி, ஜாதிக்காய் தூள் ஆகியவற்றைத் தனித்தனியே பாலு டன் கலந்து இரவு நேரத்தில் அருந்தலாம்.

l சிறிது கசகசாவைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

l பாலும் தேனும் அதிகமாக உட்கொள்ள லாம்.

l திராட்சை, தக்காளிப் பழங்களில் ஓரளவு ‘மெலடோனின்’ இருப்பதாலும், அன்னாசி, வாழைப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவை ‘மெலடோனின்’ உற்பத்தியைத் தூண்டுவதாலும், நல்ல தூக்கம் வர அதிகளவில் பழங்கள், காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

l அசைவ உணவு வகைகளில் முட்டை, மீன் வகைகளைச் சாப்பிடலாம்.

l மருதாணிப் பூவைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கலாம்.

l எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.

l மனதை அமைதிப்படுத்தத் தியானப் பயிற்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில யோகா சனங்கள், நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

l மனதுக்கு இதமான இசையை ரசிக்கலாம்.

l தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே லேப்-டாப் மற்றும் தொலைக் காட்சியில் மூழ்குவதைத் தவிர்க்கலாம்.

அதி நித்திரையைத் தவிர்த்து, பகல் தூக்கத்தைத் தொலைத்து, குறை உறக்கத்தை வெறுத்து, வயதுக்குத் தகுந்த நேரம் மனஅமைதியுடன் மென்மையாக இமைகளை மூடுவோம். மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் பத்து முதல் பதினைந்து மணி நேரமும், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ளவர்கள் எட்டு முதல் பத்து மணி நேரமும், பதினாறு முதல் முப்பது வயதுவரை உள்ளவர்கள் ஏழு மணி நேரமும், முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் ஆறு மணி நேரமும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் எட்டு மணி நேரமும் அவசியம் தூங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சித்த மருத்துவம்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்,

எல்லாம் ஞாபகம் இருக்கா?

Return to frontpage


டாக்டர் எம்.ஏ.அலீம்


உலக அல்செய்மர் நோய் நாள் செப். 21

மனக் கணக்கு போடுவதில் குழப்பம், சமையலில் உப்பு போட்டோமா - இல்லையா என்ற சந்தேகம், வீட்டைப் பூட்டிவிட்டு வந்தோமா என்ற குழப்பத்துடன் கூடிய சந்தேகம் போன்றவை எல்லாம் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை, பிரச்சினையும் இல்லை. இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஒருவருக்கு அடிக்கடி வந்தால், அதை சாதாரண விஷயமாக நினைத்து அலட்சியப்படுத்தக்கூடாது. அது அல்செய்மர் நோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

l டிமென்சியா எனப்படும் மூப்புமறதி நோய் 60 வயதுக்கு மேல் வரக்கூடிய நோய். இவர்களில் 60 -70 சதவீதம் பேர், அதன் வகைகளில் ஒன்றான அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

l வயதானவர்களுக்குத்தான் அல்செய்மர் நோய் ஏற்படுகிறது. மனித வாழ்நாள் அதிகரிப்பால், வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அல்செய்மர் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

l உலக அளவில் அல்செய்மர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் 50 லட்சம் அல்செய்மர் நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ல் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது.

l சின்ன சின்ன விஷயங்களில் ஞாபகம் தப்பிப்போவதுதான் இந்த நோய்க்கு ஆரம்ப அறிகுறி. ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு மறந்துவிடுவார்கள். இந்த நோய்க்கான அறிகுறிகள் 60-க்கு வயதுக்கு மேல் தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

l அல்செய்மர் நோய் தீவிரமடையும் போது, பாதிக்கப்பட்டவர் ஓர் இடத்துக்குத் தனியாகப் போய்விட்டுத் திரும்பி வரமுடியாது. துணிகளைப் பீரோவில் வைப்பதற்குப் பதிலாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவார்கள். குளியலறைக்குச் செல்வதாக நினைத்துக்கொண்டு சமையலறைக்குப் போவார்கள். காலை, மாலை நேரம் குறித்த குழப்பம் ஏற்படும். திடீரென எந்த ஊரில் இருக்கிறோம், யாருடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடுவார்கள். காலையில் என்ன சாப்பிட்டோம் என்று ஞாபகம் இருக்காது. உறவினர்களின் முகத்துக்குப் பதிலாகக் குரலை வைத்து அடையாளம் காண்பார்கள். பாதிப்புகளை இப்படிப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நோய் முற்றும்போது நெருங்கிய சொந்தங்களைக்கூட மறந்துவிடுவார்கள்.

l அல்செய்மர் நோய் யாருக்கு யாருக்கு வரும்? வயதானவர்களுக்கு வயது மூப்பால் வரும். ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் வரும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொழுப்புச்சத்து அதிகமுள்ளவர்கள், வாத நோய் ஏற்பட்டவர்கள், இதய நோய் உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், தலையில் காயம் ஏற்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

l ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, கொழுப்புச்சத்துள்ள உணவைத் தவிர்ப்பது, மதுப்பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் இருக்கத் தலைக்கவசம் அணிந்துகொள்வது போன்றவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

l உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், அறிவைத் தூண்டக்கூடிய சுடோகு, புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவை மூலம் அல்செய்மர் நோய் வராமல் தடுக்கலாம்.

l சமூகத்தில் முதியவர்களுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. முதியவர் களுக்கு ஏற்படும் அல்செய்மர் நோய் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. நோய் பற்றி விழிப்புணர்வைப் பரவலாக்கும் வகையில் செப்டம்பர் 21 உலக ஞாபகமறதி நோய் நாள் (World Alzheimer's Day) கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து ‘எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்’.

கட்டுரையாளர், மூளை நரம்பியல் நிபுணர்



தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra Published On 4 Apr...