Sunday, December 27, 2015

Etihad Airways statement on Indian Students

Etihad Airways statement on Indian Students

“In recent days a number of Indian nationals have been refused entry to the USA due to visa irregularities identified during checks Jet Etihad Etihad Airways statement on Indian Studentscarried out by the US Customs and Border Protection (CBP). This involves students of Indian nationality travelling on F-1 visas specifically to two universities in the US.
Etihad Airways understands current concerns of those students who have booked travel on Etihad Airways’ flights to the United States. Any student that does not meet the requirements of the US authorities, will be assisted by Etihad Airways with travel arrangements back to their point of origin.
Affected students booked on Etihad Airways who choose not to travel from India to the US can get refunds on cancelled tickets as per their ticketed fare guidelines and policies. Alternatively, they can rebook once at no extra charge in the original class of travel and same fare type subject to availability on flights up to January 31 to enable them to resolve their visa issues with the relevant authorities. Etihad also recommends that any affected students should contact the US consulate at their point of origin to confirm that their documentation is in order.”

மைனர் குழந்தை பாதுகாவலர்: மறுமணம் செய்த தாய்க்கு உரிமை உண்டு'

சென்னை: 'மறுமணம் செய்து கொண்ட தாய், தன் முதல் கணவர் மூலம் பெற்ற குழந்தையின் பாதுகாவலராக இருக்க உரிமை இல்லை எனக் கூறுவது, முறையற்றது; சமூக நீதிக்கு எதிரானது' என, சென்னை உயர்நீதிமன்றம், கருத்து தெரிவித்துள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த, மேனன்பாபு -- சுபா தம்பதியருக்கு, மூன்றரை வயதில், காவியா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. மதுவுக்கு அடிமையான மேனன்பாபு, 2013ல், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின், தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்த சுபா, சுசீந்திரன் என்பவரை மறுமணம் செய்தார்.இந்நிலையில், மேனன் பாபுவின் தாய் காளியம்மாள், பள்ளி சென்று வீடு திரும்பிய குழந்தை காவியா ஸ்ரீயை கடத்திச் சென்றார். இது சம்பந்தமாக, சுபா அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த மணல்மேடு போலீசார், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, தன் மகளை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, சுபா உயர்நீதி மன்றத்தில், ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், நீதிபதி செல்வம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
'கணவன் இறப்புக்குப் பின், மறுமணம் செய்து கொண்ட சுபாவிடம் குழந்தையை ஒப்படைப்பது, அக்குழந் தையின் நலனுக்கு விரோதமானது' என, காளியம்மாள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. கணவன் மரணத்துக்குப் பின், சட்டப்படி மறுமணம் செய்து கொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. விதவை மறு மணத்தை ஊக்குவிக்க, தமிழக அரசு கொள்கை முடிவை
எடுத்துள்ளது.மறுமணம் செய்து கொண்டார் என்பதற்காக, அவர், தன் குழந்தையின் பாதுகாவலராக இருக்க தகுதியற்றவராகி விட்டார்; அவருக்கு உரிமையில்லை எனக் கூறுவது சமூக நீதிக்கு விரோதமானது. மேலும், சுபா, குழந்தையின் தாய்; இயற்கை பாதுகாவலர். ஆனால், காளியம்மாள், தந்தை வழி பாட்டி தான்.
எனவே குழந்தையை, காளியம்மாள் உடனடியாக அதன் தாயிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை, நாகப் பட்டினம் போலீசார் வழங்க வேண்டும்.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.

கத்தார் விமானத்தில் பயணி கலாட்டா தட்டிக் கேட்டவர்களுக்கு அடி

சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'கத்தார் ஏர்வேஸ்' விமானம் சென்னை வந்து கொண்டிருந்தது.அதில் பயணித்த, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாதவன், 24, என்ற நபர் திடீரென்று, விமானத்திற்குள் சத்தம் போட்டபடி ஓடத் துவங்கினார்; தட்டிக் கேட்ட பயணிகளை
தாக்கினார். இதனால், விமானத்தில் பதற்றம் ஏற்பட்டது.பின், விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன், மத்திய தொழிலக பாதுகாப்பு படை - சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகளிடம், கேப்டன் புகார் அளித்தார். அதன்படி, மாதவன் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்ட அவர், வேலை செய்யும் இடத்திலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஆதார் எண் அட்டைஅவகாசம் நீட்டிப்பு

சென்னை :மழை பாதிப்பு காரணமாக, 'ஆதார்' எண் பணிக்கான அவகாசம், 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஆதார் எண் உருவாக்க, 31ம் தேதி இறுதி நாள். மொத்தம், 6.23 கோடி பேரில், 5.63 கோடி பேருக்கு, விரல் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது.டிசம்பர் வரை, 86.42 சதவீதம் ரேகைகள் சேகரிக்கப்பட்டு, 78.13 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கன மழையால், தொடர்ந்து ஆதார் மையங்கள் செயல்பட முடியவில்லை. போதிய கணக்கெடுப்பு ஆட்களும் இல்லை. இதனால், மத்திய அரசு நிர்ணயித்த, டிச., 31க்குள், ஆதார் எண் உருவாக்கும் பணியை, முடிக்க முடியவில்லை. கணக்கெடுப்பு பணியில் உள்ள, 'பெல்' நிறுவனம், போதிய பணியாளர்களை வழங்கி உள்ளது. எனவே, ஆதார் பணி தீவிரம் பெற்றுள்ளது. இந்நிலையில், இறுதி தேதி, 2016 மார்ச் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவில்களில் 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்'அணிய ஜன., 1 முதல் தடை

தமிழக அறநிலையத்துறை யால் நிர்வகிக்கப்படும் அனைத்து கோவில்களிலும், ஜன., 1 முதல், 'லெக்கிங்ஸ், ஜீன்ஸ்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என்ற உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, மதுரை உயர் 
நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பை தொடர்ந்து, அறநிலையத்துறை, அனைத்து கோவில்களுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், 'கோவிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும். 'ஆண்கள் வேட்டி, சட்டை, பைஜாமா குர்தா; பெண்கள் புடவை, ரவிக்கை, சுடிதார், ஷால், தாவணி போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும். 'ஷார்ட்ஸ், மிடி, குட்டை பாவாடை, ஜீன்ஸ், லெக்கிங்ஸ்'போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. 'போலீஸ், தீயணைப்பு படையினர் போன்ற சீருடைப் பணியில் ஈடுபடுவோருக்கு இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை' என கூறப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நடைமுறை, ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமலாகிறது. இதை மீறுபவர்கள் மீது, நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
- நமது நிருபர் -

மத்திய அரசு துறை பணியாளர்களில் 50 வயதுக்கு மேல் 9.47 லட்சம் பேர்

மத்திய அரசு துறைகளில் உள்ள, 33 லட்சம் பணியாளர்களில், 9.47 லட்சம் பேர், 50க்கு மேல் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துஉள்ளது. மத்திய அரசில், 56 துறைகள், ஐந்து யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில், 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில், 33 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். மொத்தம் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 50 வயதிற்கு மேற்பட்டோர்மேலும், 20- - 30 வயதிற்குள், 7.32 லட்சம் பேர், 30- - 40 வயதிற்குள், 7.34 லட்சம் பேர், 40- - 50 வயதிற்குள், 8.60 லட்சம், 50 - -60 வயதிற்குள், 9.47 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், 50 வயதிற்கு மேற்பட்டோரே அதிகபட்சமாக உள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறையில், 1.95 லட்சம் பணியாளர்களில், 80,933 பேர், அதன்கீழ் இயங்கும் தபால்துறையில், 1.89 லட்சம் பணியாளர்களில், 79,295 பேர், 50 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல் பாதுகாப்புத்துறையில், 3.98 பணியாளர்களில், 1.51 லட்சம் பேர், ரயில்வேயில், 13.15 லட்சம் பணியாளர்களில் 4.93 லட்சம் பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதேபோல் பெரும்பாலான துறைகளில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர்.
இளைஞர்கள்போலீஸ் துறையில் மட்டும், 9.80 லட்சம் பணியாளர்களில், 3.94 லட்சம் பேர், 30 வயதிற்குட்பட்டோர், 2.59 லட்சம் பேர், 40 வயதிற்குட்பட்டோர் உள்ளனர். இது அதிக இளைஞர்களை கொண்ட துறையாக உள்ளது. இந்த விவரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. ஐம்பது வயதிற்கு மேற்பட்டோரில் பெரும்பாலானோர், ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவர். ஏற்கனவே, 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரிக்கரிப்பதோடு, தொய்வும் ஏற்படும். விரைவில் காலியிடங்களை
நிரப்ப வேண்டும் என, மத்திய அரசு ஊழியர்கள் கேட்டு கொண்டனர்.

2–வது திருமணம் செய்துகொண்டாலும் முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்தான் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஐகோர்ட்டு உத்தரவு

logo

சென்னை,


இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும், முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் தாய்தான் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இரண்டாவது திருமணம்

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபா. இவருக்கும், மேனன்பாபு என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு காவியாஸ்ரீ என்ற மூன்றரை வயது மகள் உள்ளார். மேனன்பாபு மதுவுக்கு அடிமையாகி, கடந்த 2013–ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் மகளுடன், சுபா வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு சுசீந்திரன் என்பவருடன் 2–வது திருமணம் நடந்தது. இந்த திருமணம் நடந்து 3–வது நாளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த குழந்தை காவியாஸ்ரீயை, முதல் கணவர் மேனன்பாபுவின் தாயார் காளியம்மாள் மற்றும் சிலர் வேனில் கடத்தி சென்றுவிட்டனர்.

ஆட்கொணர்வு மனு

இதுகுறித்து மணல்மேடு போலீசில் சுபா புகார் செய்தார். போலீசார் குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு செய்தாலும், மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தன் குழந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சுபா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காளியம்மாள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

உரிமை உள்ளது

முதல் கணவர் இறந்தபிறகு, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள சுபாவுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற திருமணம் சட்டவிரோதம் கிடையாது. தமிழக அரசு கூட விதவை மறுமணத்தை ஊக்குவிக்கிறது.

சுபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தான் பெற்ற குழந்தைக்கு இயற்கையான பாதுகாவலர் என்ற உரிமை கொண்டாட முடியாது என்று காளியம்மாள் தரப்பில் கூறுவதை ஏற்கமுடியாது. மேலும், சுபாவை திருமணம் செய்துள்ள சுசீந்திரனும், குழந்தையை பொறுப்புள்ள தந்தையாக பார்த்துக் கொள்வதாகவும், அவளுக்கு தேவையான கல்வி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுப்பதாக இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒப்படைக்கவேண்டும்

எனவே, மறு திருமணம் செய்துகொண்ட மனுதாரருக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தை மீது உரிமை கொண்டாட உரிமை உள்ளது. அவர்தான் முழு உரிமை படைத்த இயற்கையான பாதுகாவலர்.

எனவே, குழந்தையை காளியம்மாள் உடனடியாக சுபாவிடம் ஒப்படைக்கவேண்டும். இதற்கு அனைத்து உதவிகளையும் மணல்மேடு போலீசார் செய்து கொடுக்கவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளனர்.

NEWS TODAY 21.12.2025