Sunday, February 14, 2016

UGC lets deemed private universities have 6 off-centre campuses..toi

NEW  DELHI: Barely three months after the University Grants Commission (UGC) issued notice to 10 deemed universities, including prestigious ones like the Tata Institute of Fundamental Research, for having off-centre campuses without clearance, it has amended its regulation allowing private deemed universities to have six off-campuses.

In case of government-established and managed deemed universities, the UGC's ceiling of six off-campuses will not apply.
However, HRD ministry sources said allowing six offcampuses does not change the nature of the UGC notice to the 10 deemed universities. "Having off-campuses does not mean UGC and HRD ministry clearance is not needed. Fact remains that these 10 violated the existing UGC regulations," said an official. BITS, Pilani that received notice for having off-campus in Goa and Hyderabad has moved Delhi HC against UGC.


UGC's case against these universities has further diluted after it approved the existence of Bhubaneshwar-based National Institute of Science Education & Research, off-campus centre of Homi Bhabha National Institute, Mumbai.

u


"This has weakened UGC's case against 10 deemed universities. Eventually all will get clearance," said a senior UGC official, who admitted that the HRD ministry was taken by surprise when the notices were sent.


In November, notices were sent to Narsee Monjee Institute of Management Studies University; Birla Institute of Technology & Science (BITS) Pilani; Birla Institute of Technology, Mesra; Indian School of Mines, Dhanbad; Banasthali University, Rajasthan; Ponnaiyah Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu; Indian Veterinary Research Institute (IVRI) Uttar Pradesh; Lakshmibai National University of Physical Education (LNIPE), Gwalior; Tata Institute of Fundamental Research and Homi Bhabha National Institute.

UoM flouts UGC rules, sanctions hefty salary for guest lecturers

DECCAN HERALD

UoM flouts UGC rules, sanctions hefty salary for guest lecturers
Ashwini Y S, Feb 11, 2016, Bengaluru: DHNS:

Syndicate Council gave its approval for hike, says registrar

Violating University Grants Commission (UGC) regulations, the University of Mysore has announced a huge hike in salaries of temporary/guest lecturers.

The university has fixed a monthly salary of Rs 50,000 per guest lecturer, according to a notification issued on January 19 (dated January 18). Applications were invited for two posts of ‘assistant professors’ for five new departments proposed on a ‘temporary basis’.

The revised UGC guidelines of 2010 state that guest lecturers must be paid Rs 1,000 per lecture to a maximum of Rs 25,000 per month. This means that the 10 new guest lecturers will be taking home huge pay packets, while the existing temporary lecturers will draw only up to Rs 25,000 a month.

UoM has also flouted the Karnataka State Universities Act, 2000. According to Section 15 of the Act, the vice-chancellor or the university has no powers to fix salaries of temporary lecturers. Further, the High Court on July 14, 2015 had ruled against Kuvempu University for issuing a similar notification. The Court has ordered that varsities should “strictly follow existing guidelines and rules of Government of Karnataka and UGC, while recruiting guest lecturers”.

The departments proposed are, ‘Genetics and Genomics’, ‘Molecular Biology’, ‘Organic Chemistry’, ‘Public Administration’, and ‘School of Law’ (in place of existing School of Justice).

Setting up of a new law department, even by an autonomous body like UoM without obtaining permission from the Karnataka State Law Universities, is in violation of the KSLU Act, 2009.

The university has also violated the election code of conduct by issuing the notification after the Assembly and ZP/TP elections were announced. The Mysuru district commissioner has ordered for the process to be withheld.

No violation: Registrar

UoM Registrar C Basavaraj maintained that the salary enhancement was not in violation of UGC guidelines. “It is a consolidated amount and the university has obtained the syndicate’s approval. The salary component will be met by our own resources.” He also said the proposed School of Law would not be a “new department”. “We just wanted to change the nomenclature from School of Justice to School of Law. There is no need to take KSLU’s permission,” he added.

‘KSLU Act flouted’

B S Reddy, Registrar of KSLU said that UoM had not sought any permission for the setting up of a new law department. “It is not clear how the UoM syndicate approved the proposal. The KSLU Act, 2009 clearly stipulates that all new law departments (excepting in private and deemed varsities) have to be affiliated to KSLU. It is not clear how the Law department is allowing this. This will set a wrong precedent,” he said.

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு


DINAMALAR

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன.
இன்ஜி., கல்லுாரிகளில், மே முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. ஜூலை, 30க்குள், அரசு ஒதுக்கீடுக்கான இடங்களும்; ஆக., 14க்குள், நிர்வாக ஒதுக்கீடுக்கான இடங்களும் நிரப்பப்படும்.
அதற்கு முன், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. வரும், 28ம் தேதிக்குள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., கெடு விதித்துள்ளது.
அதனால், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகள், அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து வருகின்றன. சில கல்லுாரிகள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை படிப்புக்கான மையத்தை மூடவும், சில பாடப்பிரிவுகளை ரத்து செய்யவும் கோரியுள்ளன.
தற்போதைய நிலையில், 60 இன்ஜி., கல்லுாரிகள், பல்வேறு பாடப்பிரிவுகளை ரத்து செய்ய கோரிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., - எம்.பி.ஏ., பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் முன்வராததால், அப்படிப்புகளை தொடர்ந்து நடத்த முடியாது என கல்லுாரிகள் தெரிவித்துள்ளன.
அதேபோல், இன்ஜி., கல்லுாரி வளாகங்களில் தனியாக செயல்படும் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மேலாண்மை கல்லுாரிகளை மூடவும், சில கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. அதற்கு, மாணவர் சேர்க்கை குறைவு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமை போன்ற காரணங்களை தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், பி.இ., - பி.டெக்.,கில் புதிதாக தொழில் சார்ந்த பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கேட்டுள்ளன. தொழிற்சாலைகளுடன் இணைந்து நடத்தப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி வழங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

பரிசோதனை ரகசியங்கள் - 18: ‘எண்டாஸ்கோப்பி’ என்றால் என்ன?

டாக்டர். கு. கணேசன்

அலோபதி மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளில் ‘எண்டாஸ்கோப்பி'யின் (Endoscopy) வரவு மிக முக்கியமானது. அறுவை சிகிச்சை செய்யப்படாமல் உடலின் உள் நோய்களை மிக எளிதாகக் கண்டறிய உதவும் 'உள்நோக்கும் கருவி' இது. அதாவது, நம் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள துவாரங்கள் வழியாக (வாய், காது, மூக்கு, தொண்டை, ஆசனவாய், சிறுநீர்க்குழாய்) வயிறு மற்றும் உடலின் உள்உறுப்புகளைக் காண உதவும் கருவிக்குப் பொதுவான பெயர் எண்டாஸ்கோப்பி. 'எண்டோ' என்றால் ‘உள்ளே' என்று அர்த்தம். ‘ஸ்கோப்பி' என்றால் ‘நோக்குதல்' என்று அர்த்தம்.

இதில் பல வகை உண்டு:

# கேஸ்ட்ரோஸ்கோப்பி (Gastroscopy): தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, சிறு குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# லெரிங்கோஸ்கோப்பி (Laryngoscopy): தொண்டை மற்றும் குரல்வளைப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# பிராங்கோஸ்கோப்பி (Bronchoscopy): சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல்களைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# கொலனோஸ்கோப்பி (Colonoscopy): ஆசனவாய் மற்றும் பெருங்குடல் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# சிஸ்டாஸ்கோப்பி (Cystoscopy) : சிறுநீர்த் துளை வழியாகச் சிறுநீர்ப்பை, சிறுநீர் இறக்குக்குழாய், புராஸ்டேட் போன்ற பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# பிராக்டோஸ்கோப்பி (Proctoscopy): மலக்குடலைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# தொரக்கோஸ்கோப்பி (Thoracoscopy) : புளூரா எனும் நுரையீரல் உரை, பெரிகார்டியம் எனும் இதய உரை மற்றும் நெஞ்சுப் பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# கால்போஸ்கோப்பி (Colposcopy): பெண் பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை பகுதிகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

# லேப்ராஸ்கோப்பி (Laparoscopy): கல்லீரல், கணையம், பித்தப்பை, கரு வெளியேறும் குழாய், வயிற்றின் உள்ளுறுப்புகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி .

# ஆர்த்தோஸ்கோப்பி (Arthoscopy) : எலும்பு மூட்டுகளைப் பரிசோதிக்கப் பயன்படும் எண்டாஸ்கோப்பி.

இரைப்பை எண்டாஸ்கோப்பி

‘இரைப்பை எண்டாஸ்கோப்பி’(Gastro endoscopy) என்பது தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றைப் பரிசோதிக்க உதவும் கருவி. இதில் ஒரு மீட்டர் நீளத்தில் ஒரு ஃபைபர் குழாய் உள்ளது. இது வளைந்து நெளிந்து குறுகிச் செல்லக்கூடியது. இதைப் பயனாளியின் வாய் வழியாக இரைப்பைக்குள் செலுத்துகிறார்கள். உள்ளே சென்ற குழாயின் முனையில் வெளிச்சம் தரக்கூடிய பல்ப் இருக்கும். இதை வெளியிலிருந்தே இயக்கலாம். இக்குழாயின் வெளிமுனையில் லென்ஸ் இருக்கும். பல்பை எரியவிட்டு, வெளிமுனையில் உள்ள லென்ஸ் வழியாக மருத்துவர் பார்ப்பார்.

லென்ஸ் இரைப்பையின் பாகங்களைப் பன்மடங்காகப் பெரிதாக்கிக் காண்பிக்கும். அத்துடன் சுருங்கி இருக்கும் இரைப்பையை விரிவடையச் செய்யக் காற்றைச் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. உணவுக்குழாய் வால்வுப் பிரச்சினை, இரைப்பைப் புண், கட்டி, ரத்தக்கசிவு, புற்றுநோய் போன்றவற்றை இதன் மூலம் நேரில் காணமுடியும். பரிசோதனைக்கு உள்ளாகும் பகுதியில் புற்றுநோய் உள்ளது எனச் சந்தேகம் வந்தால், அந்தத் திசுவை ‘பயாப்சி’பரிசோதனைக்கு அனுப்ப, சிறிதளவு திசுவைக் கிள்ளி எடுக்கவும் இதில் வசதி உள்ளது. இரைப்பைச் சுரப்புகளை உறிஞ்சி எடுத்துப் பரிசோதிக்கவும் இது உதவுகிறது.

இந்தப் பரிசோதனையைச் செய்ய மயக்க மருந்து தேவையில்லை. குழாயை உள்ளே செலுத்தும்போது ஏற்படுகிற சிரமத்தைக் குறைக்க மதமதப்பை உண்டாக்கக்கூடிய ஜெல்லி மருந்தை வாயில் தடவுவார்கள்.

சிகிச்சையும் தரலாம்

இது பரிசோதனை கருவி மட்டுமல்ல. இதைப் பயன்படுத்திச் சில நோய்களுக்குச் சிகிச்சையும் தர முடியும். முக்கியமாக, கல்லீரல் சுருக்கநோய் மற்றும் குடல்புண் வந்தவர்களுக்கு ரத்தவாந்தியும் ரத்தக்கசிவும் ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு எண்டாஸ்கோப்பி மூலம் பேண்டிங், ஸ்கிலிரோதெரபி போன்ற சிகிச்சைகளை அளித்துக் குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் புற்றுநோய் வந்தவர்களுக்கு ERCP எண்டாஸ்கோப்பி மூலம் செயற்கை உணவுக்குழாயைப் பொருத்த முடியும். குழந்தைகள் தவறுதலாக நாணயம், ஊக்கு, குண்டூசி, கோலிக்குண்டு, கம்மல், ஹேர்பின் போன்றவற்றை விழுங்கிவிடுவார்கள். இவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டாஸ்கோப்பி மூலம் எளிதாக எடுத்துவிட முடியும்.



(அடுத்த வாரம்: எலும்பு வலுவிழப்பு நோய்க்கு என்ன பரிசோதனை?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? 19: ஹிஸ்டீரியா - தேவை கையாள்வதில் கவனம்

டாக்டர் ஆ. காட்சன்

ஹிஸ்டீரியாவில் பிரச்சினையே இந்த மனநோயானது, நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவதுதான். இதனால் பாதிக்கப்படும் வளர்இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால், தேவையான எல்லாப் பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்கிற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம்.

இல்லையென்றால் ‘பழி ஓர் இடம், பாவம் ஓர் இடம்’ என்பதுபோல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன், தேவையற்ற மாத்திரை மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறலாம்.

வலிப்பில்லாத வலிப்பு

சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவருடைய அம்மா திடீர் மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் உட்கொண்டபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறி அழைத்து வந்திருந்தார். அந்தப் பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றைக் கேட்டபோது, நான்கு வருடங்களுக்கு முன்பு அவருடைய அப்பா இறந்த பிறகு அந்தப் பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதாகவும், அதற்குப் பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் வலிப்பு அறிகுறிகளின் தன்மை, நரம்பு பாதிப்பால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துப்போகவில்லை.

மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய் பிடித்திருப்பதாகவும் கூறிச் சூடு போட்டுச் சிகிச்சை (?) கொடுத்திருக்கிறார்கள். இது ஒரேயொரு உதாரணம்தான்.

உண்மையில் இதுபோலப் பலர், தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தைக் கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிவரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 25 சதவீதத்துக்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால், பெற்றோர்களுக்கு இது மனநலப் பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாக வாய்ப்பில்லைதான். ஆனால், சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

#

இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகச் சில நாட்களுக்குள் மனதைக் காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் நடந்திருக்கும்.

#

உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லாப் பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது.

#

சில வேளைகளில் அதிகக் கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால், அதற்காக அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல.

#

இந்த நோய் அறிகுறிகள் மூலம், அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருந்திருக்கலாம். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்தத் தொந்தரவு திரும்ப ஏற்படலாம்.

# அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்குத் தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை, கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி வெட்டி இழுக்கும். ஆனால், இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவதுபோலக்கூட இருக்கலாம்.

# இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாததுபோலச் சாதாரணமாகவும் இருப்பார்கள்.

# முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு நோய் கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகளை உட்கொண்டு வரும்போதே, மீண்டும் தீவிரப் பாதிப்புகள் ஏற்படலாம்.

என்ன சிகிச்சை?

ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாகக் குணப்படுத்தக்கூடியவையே. மனதைப் பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னாசிஸ், நார்கோ பரிசோதனைகள் உட்படப் பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்த நோயின் அறிகுறியாக இருக்குமானால், மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களைத் திட்டுவதாலோ வேண்டு மென்றே செய்கிறார்கள் என்று குறை கூறுவதாலோ, பிரச்சினை கூடுமே தவிரக் குறையாது. அதேநேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாகப் பகிர்ந்தளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.

(அடுத்த முறை: தலைகீழாகும் வாழ்க்கை)கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

ஏ.மருதகாசி 10


Return to frontpage


திரைப்பட பாடலாசிரியர்

தமிழ் திரையுலகின் பிரபலமான பாடலாசிரியரும், திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவருமான ஏ.மருதகாசி (A. Marudakasi) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

l திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் (1920) பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றார். அருணாச்சல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.

l கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் தேவி நாடக சபா நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதிவந்தார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார். அங்கு இசையமைத்து வந்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்குப் பாட்டு எழுதி வந்தார். பாடலாசிரியர் ராஜகோபால ஐயரிடம் உதவியாளராகவும் பணியாற்றினார்.

l திருச்சி லோகநாதன் மூலமாக 1949-ல் இவரது திரையுலகப் பயணம் தொடங்கியது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாயாவதி’ படத்துக்காக ‘பெண் எனும் மாயப் பேயாம்’ என்ற பாடலுடன் தன் திரையிசைப் பயணத்தை தொடங்கினார்.

l 1950-ல் வந்த ‘பொன்முடி’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதினார். அனைத்தும் சூப்பர் ஹிட். பிறகு ‘மந்திரிகுமாரி’ படத்துக்கு பாடல்கள் எழுதினார். இவையும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல்கள் மறக்க முடியாதவை.

l ‘அமரகவி’, ‘தூக்குத் தூக்கி’ திரைப்படப் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன. பல்வேறு திரைப்பட நிறுவனங்களிடம் இருந்து இவருக்கு அழைப்புகள் குவிந்தன. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவர். எனவே அனைத்து இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடலாசிரியராகத் திகழ்ந்தார்.

l ‘எந்நாளும் வானிலே’, ‘மணப்பாறை மாடு கட்டி’, ‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சத்தியமே லட்சியமாய்’, ‘சமரசம் உலாவும்’, ‘ஏர்முனைக்கு நேர் இங்கே’, ‘கடவுள் எனும் முதலாளி’, ‘வருவேன் நான் உனது’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘இன்று போய் நாளை வாராய்’, ‘மனுஷனை மனுஷன்’ என்பது உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாகாவரம் பெற்ற திரைப்பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.

l தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்கள் எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழ்பெற்றவர். 250 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

l சக கலைஞர்களை மதித்துப் போற்றியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை தன் தம்பி போல கருதி பாசம் கொண்டிருந்தார். உடுமலை நாராயண கவியை தன் அண்ணன் போலவும், குருவுக்கு சமமாகவும் மதித்தவர். ‘என் 2 ஆயிரம் பாடல்கள் கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது’ என்று தன்னடக்கத்தோடு கூறுவார்.

l எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் அவரவருக்குப் பொருத்தமாகப் பாடல்களை எழுதினார். டி.எம்.சவுந்தரராஜனை சினிமாவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. தன்னை தாய்போல ஆதரித்தவர் மருதகாசி என்று குறிப்பிட்டுள்ளார் வாலி.

l தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி பாடலாசிரியராகத் திகழ்ந்த ‘திரைக்கவித் திலகம்’ மருதகாசி, 69-வது வயதில் (1989) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Thursday, February 11, 2016

மாணவி மோனிஷாவுக்கு என்ன நடந்தது? பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்

vikatan.com
விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மோனிஷா தந்தையின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்த சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மூன்று மாணவிகளின் மரணத்தில் இன்னும் மர்மங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்குப்பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதோடு பலதிடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட மூன்று மாணவிகளின் உடல்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவிகள் பிரியங்கா, சரண்யா ஆகியோரின் உடல்கள் அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோனிஷாவின் உடலை வாங்க மறுத்து விட்டார் அவரது தந்தை தமிழரசன்.

தொடர்ந்து மோனிஷாவின் உடலை மீண்டும் மறுபரிசோதனை சென்னையில் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தமிழரசன். இதற்கு நீதிமன்றமும் சம்மதித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 28-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மோனிஷாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதம் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து மோனிஷாவின் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில், "மோனிஷாவின் உடல் பரிசோதனையில் விழுப்புரத்துக்கும், சென்னைக்கும் உள்ள முடிவில் வித்தியாசங்கள் உள்ளன. அவர், தண்ணீரில் மூழ்கி சாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இது கொலை என்றே கருதுகிறோம். அடுத்து, விழுப்புரத்தில் நடந்த பிரேத பரிசோதனையில் மோனிஷாவின் சிறுநீரகம், நுரையீரல், இதயம், கர்ப்பபை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை அவரது பெற்றோரிடம் பெறவில்லை. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
விழுப்புரம் பிரேத பரிசோதனையில் 4 இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் 15 இடங்களில் ரத்தக்காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக நீரில் மூழ்கி இறப்பவர்களின் வாயில் நுரை தள்ளும். ஆனால் கிணற்றிலிருந்து மோனிஷாவின் உடல் வெளியே எடுத்தவுடன் எடுத்த புகைப்படத்தில் அவரது வாயில் நுரையில்லை. எனவே அவர் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மரணத்துக்கு முன்பு மோனிஷா தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடி இருக்கிறார். அவரது மூக்கு மற்றும் வாயை பொத்தியதற்கான அறிகுறிகள் முகத்தில் காணப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது எதற்காக போராடினார் என்பது தெரியவில்லை. இன்னும் வரவுள்ள முடிவில் அதற்கான விடை தெரிந்து விடும். மேலும் இரண்டு மாணவிகளின் செல்போன் குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை" என்றார்.

மோனிஷாவின் தந்தை தமிழரசன், "போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காகவே என்னுடைய மகள் உள்பட மூன்று மாணவிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பள்ளி தாளாளர் வாசுகி பேசிய உரையாடலில் மூன்று மாணவிகளையும் கடுமையாக மிரட்டுவது தெரிகிறது. என்னிடம் 5 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி மோனிஷாவின் தமிழ், ஆங்கில கையெழுத்து, கல்வி சான்றிதழ்கள், சிடி உரையாடல் உள்ளிட்ட 25 ஆவணங்களை பெற்று சென்று இருக்கின்றனர். அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகையை இந்த வழக்கு முடிந்து தீர்ப்புக்கு பிறகே வாங்குவேன். அதுவரை வாங்குவதில்லை" என்றார்.

சரண்யாவின் தந்தை ஏழுமலை, "என்னுடைய மகளின் உடலையும் மீண்டும் பிரேத பரிசோதனை செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளியே தெரியவரும். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மோனிஷாவின் உடலில் சில பாகங்கள் இல்லாததால் அவருடைய சாவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஆனால் சரண்யாவின் உடலில் எந்த பாகத்தையும் எடுக்கவில்லை. அதன் மூலம் இந்த வழக்கில் மறைந்துள்ள மர்மமுடிச்சுக்கள் அவிழ வாய்ப்புள்ளது. இதற்காகவே அவரது உடலை செய்யாறில் புதைத்தோம். மூன்று மாணவிகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன். அநியாயமாக என்னுடைய மகளை கொன்று விட்டார்களே" என்றார்.

-எஸ்.மகேஷ்

படங்கள்: 
சொ. பாலசுப்ரமணியன்

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...