Saturday, March 26, 2016

Madras HC judge directed to reconsider woman’s plea dispassionately


Madras HC judge directed to reconsider woman’s plea dispassionately

DECCAN CHRONICLE

Chennai: Coming to the rescue of a woman denied compassionate appointment on the ground that her deceased husband was only an ad hoc/temporary employee, the Madras high court has directed the Principal District and Sessions Judge (PDSJ), Erode, to consider her representation afresh in a dispassionate manner by taking into account the present social, financial status and other relevant requirements.


Disposing of a petition from M, Fathima, a Division Bench comprising Justices Satish K. Agnihotri and M. Venugopal also set aside the order of PDSJ dated November 24, 2015, rejecting her application for compassionate appointment.
According to petitioner, she belonged to Islam and her husband S. Thangadurai was a Hindu scheduled caste and they were married on December 4, 2001. They have two children.

Her husband joined the judicial department on May 26, 2010, and died on November 1, 2013, due to jaundice while in service. Her aged father was a
tailor and he was getting only a meagre income. She had no other source. She had studied up to class 12 and also has a diploma in co-operative management and diploma in computer application.

Writing the judgment for the Bench, Justice Venugopal said the term ‘compassionate’ means a deep feeling of pity for the suffering of another and an inclination to render assistance either to shower mercy or to support. The object of compassionate appointment was to render social justice.

The bench said taking note of a primordial fact that the petitioner’s husband entered into service on May 31, 2010, and expired on November 1, 2013, and also notwithstanding the fact that he was reportedly unauthorisedly absent (for 14 times) for more than one year, yet, the court was of the considered view that his appointment as temporary night watchman was against a regular post of night watchman in a clear vacancy (his name being sponsored by the district employment exchange, Erode). It cannot be termed ad hoc or temporary one in the strict sense of the term notwithstanding the fact that the petitioner husband’s services were not regularised on account of pending disciplinary proceedings.

மறைகின்ற நடைபாதைகள்


மறைகின்ற நடைபாதைகள்


By மலையமான்

First Published : 26 March 2016 01:24 AM IST


சென்னையில் ஏறத்தாழ 2,500 கி.மீ. அளவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளை ஒட்டி மக்கள் நடந்து போவதற்காக, ஏறக்குறைய 830 கி.மீ. அளவில் நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளில் 60 விழுக்காட்டுக்கு மேல் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கியுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், நடைபாதை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கென்றே நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நடைபாதைகளில் இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் நிறுத்தப்படுகின்றன. நடைபாதைகளில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்று கூறுவதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை.
அப்படிப்பட்ட இடங்களில், நடைபாதையைத் தவிர்த்து சாலை ஓரத்தில் நடந்து செல்கின்றனர்; இதனால், முதியவர்களும், சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நடைபாதைகளின் சில பகுதிகள் விற்பனைக்களமாக மாறி விடுகின்றன. அங்கே கரும்புச் சாறு பிழியும் இயந்திரம் நிற்கின்றது; பக்கத்தில் கரும்புக் கட்டுகள் கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும். கொஞ்ச தூரம் சென்றால் ஆயத்த ஆடைகள் அணிவகுத்து அமர்ந்திருக்கும். அவற்றின் அணிவகுப்பு மரியாதையை அருகில் நடந்து செல்வோரின் பார்வை ஏற்றுக் கொள்ளும்.
மற்றுமோர் இடத்தில் சிறிய பெட்டிக் கடை; மற்றோர் இடத்தில் தேநீரின் மணம்; அது அப்பக்கம் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும். அந்தத் தேநீர்க் கடையைச் சுற்றி இருப்பவர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும்.
சில இடங்களில் நடைபாதைப் பகுதி, குப்பை மேடாக மாற்றப்படுகிறது. நகராட்சி மன்றத்தின் குப்பைத் தொட்டி கொஞ்சம் தள்ளியிருந்தால், ஏமாளியின் வீட்டுப் பின்புற நடைபாதை குப்பை மேடாகிறது.
வீடு கட்ட முனைவோருக்கு நடைபாதை கை கொடுத்து உதவும். நடைபாதை செங்கல் அடுக்கு மிடுக்குடன் நிற்கும். அதன் தனிமையைப் போக்குவதற்கு அருகில் மணல் குவியல் துணை புரியும். சில இடங்களில் நடைபாதைப் பகுதி அறிவுப் பரப்பலுக்குப் பெரிதும் வழி அமைக்கும். புதிய புத்தகங்கள் மட்டுமன்றி பழைய நூல்களும் வழிப் போக்கரை அழைக்கும்.
நடைபாதை குறுக்கு வழிப் பாதையாகவும் மாற்றப்படுவதுண்டு. பெரு நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் நடைபெறும் செயலாகும். பேருந்துகள் நிலைத்து நிற்கும் யானைகள் போல் தோன்றும். பின் தொடர்ந்த யானைக் குட்டிகள் போல் சிற்றுந்துகளும் நின்று கொண்டிருக்கும். இவற்றுக்குப் பின்னால், இருசக்கர வாகனங்கள் நிற்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் நடைபாதை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குக் குறுக்குவழிப் பாதையாக மாறும். அந்த வண்டி நடைபாதை மேலே ஓடும். அதைக் கண்டு பாதசாரிகள் அஞ்சி ஓடுவர்; கீழே விழுவர்.
நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர் என்று இந்தியச் சாலைக் குழுமம் வரையறுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை சில இடங்களில் மேற்கொள்ளப்படுவதில்லை. சாலைகள் விரிவுபடுத்தும் முறையில் நடைபாதைகளுக்குரிய நிலப்பரப்பு விழுங்கப்பட்டு விடுகிறது. பின்பு நடைபாதை குறுகி விடுகிறது. அதன் மேல் நடந்து செல்வதற்குக் கால்கள் மறுத்துவிடுகின்றன. நடைபாதையின் நோக்கம் அடிபட்டுப் போகிறது.
நடைபாதை பற்றி ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது. வெளிப்படையான சென்னை (டிரான்ஸ்பெரண்ட் சென்னை) என்பது ஒரு தன்னார்வ நிறுவனம். இது சென்னையில் உள்ள நடைபாதைகளைப் பற்றி ஆய்வு செய்தது. அது அறிவித்த முடிவுகள் சிந்தனைக்கு உரியவை.
அவையாவன: சென்னை மாநகராட்சி 830 கி.மீ. நீளமுள்ள நடைபாதைகளைக் கவனித்து வருகிறது. இந்த நடைபாதை சில இடங்களில் 3.5 மீட்டர் அளவு விரிவாக உள்ளது (இந்த இடப்பரப்பு இரவில் மக்கள் படுத்துறங்கப் பயன்படுகிறது. இங்கு குடிசை தோன்றுவதற்கும் இடமளிக்கிறது). சில இடங்களில் நடைபாதையின் பரப்பளவு 0.6 மீட்டர் அளவாகக் குறுகியுள்ளது. 52% நடைபாதைகள் இந்தியச் சாலைக் குழுமத்தின் விதிப்படி அமையவில்லை.
சென்னையில் நடைபெறும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவது 33 சதவீதம் நடந்து செல்பவரும், மிதிவண்டி ஓட்டுநருமே ஆவார். சென்னையின் நடைபாதைகளில் 30 கி.மீ. அளவு வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் போடப்பட்ட நடைபாதைகளில் 40% பயன்படுத்தப்படவில்லை.
நடைபாதையைப் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் குறைவாக உள்ளது. இதனால் விபத்துக்கு ஆளாகின்றனர். ஓர் ஆண்டில் ஏறத்தாழ 230 பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர்.
நடைபாதைகள் பற்றி ஓர் அறிஞர் சிந்தனை செய்தார். அவர் மும்பைய் ஐ.ஐ.டி. நிறுவனத்தின் போக்குவரத்துத் திட்டப் பொறியியல் துறைப் பேராசிரியர். அவருடைய பெயர் டாக்டர் பி. வேதகிரி. நடைபாதையைப் பயன்படுத்துபவர்களின் நலனுக்காக - அவர்களின் பாதுகாப்புக்காகச் சில திட்டங்களைச் சொன்னார்.
"நடைபாதை - சாலை - என்ற இவற்றுக்கு இடையில் தடுப்புக் கம்பி வேலி அமைக்கப்பட வேண்டும்; நடைபாதையில் இருசக்கர வண்டிகள் நிறுத்துவதைத் தடுக்கும் முறையில், குட்டையான, செங்குத்துச் சிறு தூண்கள் நடப்பட வேண்டும்; போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் பகுதியில் பாதசாரிகள் தடையில்லாமல் செல்வதற்கு ஏற்றபடி சிறு பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்; இதன் காரணமாக பாதசாரிகளுக்கு ஏற்படும் விபத்துகள் குறையும். சாலை அமைக்கும் திட்டத்தில் நடைபாதை அமைப்பது பற்றிய கருத்துக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும். நடைபாதைகளைத் தவறாகப் பயன்படுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறுகிறார் அவர்.
இதைத் தவிர, சாலை விதிகளை இயல்பாக பின்பற்றும் வழக்கம் மக்களுக்கு அமைய வேண்டும். இது இளமையிலிருந்தே உருவாக வேண்டும். அதுதான் முக்கியம்.

AICTE to take lawyers on board


AICTE to take lawyers on board

The All India Council for Technical Education (AICTE) has roped in advocates for the approval process for new and existing institutions. According to officials, the move is aimed at ensuring that the institutions do not resort to any shortcuts as the approval process is online and institutions may submit false or exaggerated details.

Accordingto an official from AICTE, ever since the online submission of details for approval was started two years ago, AICTE had received numerous complaints of institutions not sharing accurate details or providing misleading information, as it was not being physically verified.

“Complaints ranged from multiple institutions operating from the same premises while each institution has to have an independent structure. Apart from this, classrooms and laboratory details as well as faculty details were being manipulated, based on which the institutions were getting annual approval. Hence, it was decided to not only rope in academic experts but also have advocates on board to initiate penal action against institutions that provide false information,” said the official.

Towards this end, AICTE has issued a public advertisement inviting experts and the legal fraternity to join them so that the online approval process can be strengthened. Institutions coming under the purview of AICTE have to take annual approval for continuation, courses as well as in-take capacity.

Based on the information provided through the online submission process, AICTE gives its consent for continuation or permission to increase the in-take or offer newer courses. “AICTE has laid down norms from academic to infrastructure compliances that institutions have to adhere to, failing which their approval is cancelled. While older institutions tend to comply on all parameters, it is the newer ones that try to go around the norms. To curb such practices and send out a strong message AICTE will not tolerate such misdemeanors, experts and advocates will be taken on board,” said the official, adding that AICTE would be including the new persons in the academic monitoring committee too from the next academic year.

Beijing extends leave for new parents as China hopes for more children


Beijing extends leave for new parents as China hopes for more children

TIMES OF INDIA

BEIJING: Authorities in China's capital will extend leave from work for new mothers and fathers, state media reported on Friday, in what appeared to be the latest incentive to encourage families to have more children.

The world's largest economy faces a shrinking labour force and aging population, meaning it could be the first country in the world to age before it first gets rich.

Last year, the ruling Chinese Communist Party announced it would relax its long-standing and controversial "one-child policy", allowing all couples to have two children.

The government, keen to address the looming aging crisis, is concerned many people will choose not to exercise that right, worried about the cost of raising two children in an increasingly expensive country.

The state-run China News Agency, in reporting the new rules for leave for new parents, did not link them to hopes people would have more children.

Fathers in Beijing will now be entitled to 15 days of paternity leave under the new regulation, the news agency said. New fathers in China now get three to 10 days paternity leave depending on where they live, according to state media.

Mothers in Beijing can extend their leave to a maximum of seven months if their employers agree, the news agency said, which is 30 days longer than now.

Under the new regulations for Beijing, couples who already have a child each from a previous marriage can have another baby, the news agency said.

Several provinces and major municipalities have similarly amended their maternity and paternity leave policies, state media has reported.

China's population is set to peak at about 1.45 billion by 2050 when one in every three people is expected to be more than 60 years old, with a shrinking proportion of working adults to support them.

The one-child policy was introduced in the late 1970s to prevent population growth spiraling out of control.

But it is now regarded as outdated and responsible for a shrinking the labor pool and an aging society, with a smaller number of productive young people, a phenomenon usually seen in industrialized countries.

Critics say the relaxation of the one-child policy and related reforms have come too late to avert a dangerous population imbalance as many couples are now not keen on having more children.

போராட்ட களம் போராட்ட களமாக மாறி வரும் பல்கலை: சர்வதேச அளவில் மதிப்பு குறையும் அபாயம்

போராட்ட களம் போராட்ட களமாக மாறி வரும் பல்கலை: சர்வதேச அளவில் மதிப்பு குறையும் அபாயம்
தினமலர்

சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நுாற்றாண்டு கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல்கலையின் சான்றிதழுக்கு, வெளி நாடுகளில் உள்ள மதிப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 1857ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலையை பின்பற்றி, சென்னை பல்கலை உருவாக்கப்பட்டது. தென் மாநிலங்களில் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும் தாயாக, சென்னை பல்கலை மதிக்கப்படுகிறது. 159 ஆண்டு கால பாரம்பரியத்தில், சென்னை பல்கலையின் சான்றிதழ்கள், சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்பட கூடியவை.

பேராசிரியர் படுகாயம்:அதனால் தான், 'மெட்ராஸ்' என்ற நகரத்தின் பெயர்,'சென்னை' என, மாற்றப்பட்ட பின்பும், பல்கலையின் பெயர் மட்டும், 'யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்' என்றே பயன்படுத்தப்படுகிறது.ஆனால், இந்த பல்கலையில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் வன்முறை சம்பவங்களால், பதற்ற பூமியாக மாறியுள்ளது. அதனால், சர்வதேச மாணவர்களிடம் பல்கலை குறித்த மரியாதை குறைந்து வருகிறது.


வன்முறையின் உச்ச கட்டமாக, நேற்று முன்தினம், சட்ட படிப்பு பேராசிரியரை, அவரது அறைக்குள்ளே புகுந்து, இரு மாணவர்கள் தாக்கியதுடன், அலுவலக அறையையும் சூறையாடினர். படுகாயம் அடைந்த பேராசிரியர், அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார். பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் வந்த போது, அவர் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர், நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்லவே இயலாத நிலை ஏற்பட்டது

சில வாரங்களுக்கு முன், சில மாணவர் கள் சென்னை பல்கலை வளாகத்தில் எந்த அனுமதியும் பெறாமல், டில்லி ஜே.என்.யூ., பல்கலை பிரச்னை குறித்து உண்ணாவிரதம் இருந்தனர் ஒரு மாணவர், கையில் கெரசின் கேனுடன், பல்கலையின் நுாற்றாண்டு கட்டட உச்சிக்கு சென்று, தற்கொலை செய்வதாக போராட்டம் நடத்தினார். அன்று முழுவதும், பல்கலையில் வகுப்பு நடக்கவே இல்லை

அரசியல் அறிவியல் பிரிவில் காரணமே இல்லாமல், துறை தலைவரை எதிர்த்து, சில மாணவர்கள் மட்டும் போராட்டம் நடத்தினர்ஊடகவியல் துறையில், ஜப்பான் மாணவர்களுடன் இணைந்து கலாசார நிகழ்ச்சிநடத்திய போது, மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்திற்குள் புகுந்து, ஒரு மாணவரை முன்னாள் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர்.

நிர்வாகம் திணறல்: இப்படி, பல்கலையில், ஒவ்வொரு மாதமும் வன்முறை சம்பவம் நடக்காத, போராட்டம் இல்லாத நாட்களே இல்லை என்ற அளவுக்கு, பதற்றம் நிலவுகிறது.இதையெல்லாம் சமாளிக்க, சரியான நிர்வாகம் இல்லாமல், பல்கலை அதிகாரிகள் திணறி
வருகின்றனர். துணைவேந்தர் இல்லாததால், பல அதிகார மையங்களின் நெருக்கடியில் சிக்கி, பல்கலையை நடத்த முடியாமல், பேராசிரியர்களும், நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.

விதி மீறல்களுக்குசெயலர் உடந்தை?

சென்னை பல்கலையை கட்டுப்படுத்த வேண்டிய, தமிழக உயர் கல்வித்துறையின் செயல்களே பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

தற்காலிக ஒருங்கிணைப்பு குழு தலைவரான உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா, பல்கலை விவகாரங்களில் பல விதங்களில் தலையிடுவதா கவும், விதி மீறல்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும், கவர்னரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கையால், மாணவர் களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என, அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

- நமது நிருபர் -

7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு

7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு

வேலுார்:தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

செய்யாறு சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலரும், சப் - கலெக்டருமான பிரபுசங்கர் தலைமை வகித்தார். தேர்தல் குறித்த தகவல்கள் வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. கல்லுாரியில் பயிலும், 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவ, மாணவியரையும் வாக்காளர்

பட்டியலில் பெயர் சேர்த்தமைக்காக, கல்லுாரி முதல்வர் நிர்மலாதேவிக்கு பாராட்டு தெரிவித்து,

சான்றிதழ் வழங்கப்பட்டது.செய்யாறு தொகுதியில், 90 வயதுக்கு அதிகமான, 7 மூத்த வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, கல்லுாரி மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கினர்.

வந்தவாசி அடுத்த விளாநல்லுார் கிராமத்திலுள்ள, அரசு நடுநிலைப் பள்ளியின், 2ம் வகுப்பு மாணவி கே.பிரீத்தி, தமிழகத்திலுள்ள, 234 தொகுதிகளின் பெயர்களையும், மாவட்டம் வாரியாக சரளமாக ஒப்பித்து, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். மாணவி பிரீத்தியை பாராட்டிய, தேர்தல் அலுவலர் பிரபுசங்கர், ஊக்கத்தொகையாக, 2,100 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி, பிரீத்தியை தேர்தல் துாதுவராக நியமித்தார்.

அனுமனிஸம் தெரியுமா?

சொல் வேந்தர்  சுகி சிவம்

அனுமனிஸம் தெரியுமா?

சின்னஞ் சிறுசுகள் இருக்கிற இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். "குபீர் குபீர்' என்று சிரிப்பொலி, "ஓ... ஆ...' என்கிற ஒலி அலைகள் இவையெல்லாம் இளசுகளின் முரசுகள். காரணம் இன்றியே கலகலப்பாக இருத்தல் இளமையின் இயல்பு. அதனால்தான் திருவெம்பாவையில் இளம்பெண்களை எழுப்பும் பாடல்களில், "முத்தன்ன வெண்நகையாய்', "ஒள் நித்தில நகையாய்' என்று நகையை, சிரிப்பைக் குறித்து விளிப்பதாக மணிவாசகர் பாடுகிறார். காசு கொடுத்தாலும் கலகலப்பு வராத காலம் முதுமை. சாப்பிடும்போது கூட, "அந்தப் பாயசத்தைப் போட்டுத் தொலை', "அந்தச் சனியனை எடு' என்று அலுத்தும் சலித்தும் உண்ணுவதே கிழத்தனம். வாழ்க்கை வறண்டுவிட்டது.

உற்சாகம் செத்துவிட்டது. மனம் மரணித்துவிட்டது. "டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வு முதுமையில் ஆட்டிப் படைக்கிறது. இளமையில் உற்சாகமும் முதுமையில் சோர்வும் வாழ்வின் அமைப்பு. ஆனால் இளமையிலேயே சோர்வு இருந்தால் வாழ்க்கை என்னாவது? ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல் என்று இளைஞர்கள் சோர்ந்து வழிகிறார்கள். இத்தகைய உடற்குறைபாடுகள் காரணத்தால் வந்த சோர்வு எளிதாகக் களையத் தக்கது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, அரைக் கீரை, உளுத்தங்கஞ்சி, பேரீச்சம் பழம், முட்டை, பால், தயிர் என்கிற உயிர்ச்சத்தும் இரும்பு, கால்சியம் நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டுச் சேர்த்தால் உடற்சோர்வை விரட்டலாம். விசையுறு பந்தினைப் போல் விண்ணில் குதிக்கலாம்.

மனச்சோர்வு (டிப்ரஷன்) வந்தால் என்ன செய்வது? பூலோக சுவர்க்கமான அமெரிக்காவில் சின்னஞ்சிறிசுகள், பள்ளிப் பிள்ளைகள், கை நிறையக் காசு கொழிக்கும் இளைய தொழிலதிபர்கள், வாலிப வணிகர்கள்கூட இன்று டிப்ரஷனில் சோர்ந்து போகிறார்கள். சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை. சம்சாரிப்பதில் அக்கறை இல்லை. எதிலும் அலட்சியம், ஈர்ப்பில்லை. மானுட மண்புழுக்களாக வட்டமடித்துப் புதைந்து கொள்ளும் மனச் சோர்வில் தவிக்கிறார்கள். என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? இரண்டாயிரத்து இருபதில் உலகம் ஒரு கொள்ளை நோயால் கொண்டு போகப்படும். அது எய்ட்ஸ் அல்ல. டிப்ரஷன் என்பது அமெரிக்க உளவியல் ஆய்வு! அதற்கு என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? வாழ்வின் எதார்த்தமான உண்மைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணங்களின் அலை வீச்சே மனம்... மனத்தின் இயக்கம். ஒரு அலை எவ்வளவு உயரமாக எழுந்து ஆடுகிறதோ அவ்வளவு மூர்க்கமாகத் தரையில் எறியப்படும். ஓங்கி அடி விழும். எழுச்சியைத் தொடர்வது வீழ்ச்சி.

ஒவ்வொரு எழுச்சியும் வீழ்ச்சியில்தான் முடிவடையும். இந்த வீழ்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் சோர்வடைகிறார்கள். ஒவ்வொரு வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாமல் மறுபடியும் எழுவதே உயிர்ப்பு இயற்கை, வாழ்முறை. வீழ்ச்சியின் வேகத்தை மீண்டும் எழுவதற்கான வேகமாக மாற்றிக்கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் இந்தக் கடல் அலைகளின் எழுச்சி, வீழ்ச்சியைப் பூமி தாங்கிக் கொள்ள முடியாத மாதிரி, மனசின் எழுச்சி, வீழ்ச்சியை உடம்பு தாங்க முடிவதில்லை.

எனவே உடம்பைப் பலப்படுத்தினால் பாதி வெற்றி. வாழ்வின் இயக்கத்தை விளங்ள்கிக்கொண்டால் மீதி வெற்றி. இதற்கு மேலும் சோர்வு தாக்காமல் இருக்க அருமையான யோசனை சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள். ராமாயணத்தில் அனுமனுக்கு "மகா உத்சாகாய' என்று ஒரு நாமம் உண்டு. மிகவும் உற்சாகம் - சுறுசுறுப்பு உள்ளவன் என்று பொருள். அவன் சோர்ந்த இடங்கள் இல்லையா? உண்டு. சீதையைத் தேடிப் போகும்போது கடல் கடக்க வேண்டிய இடம். எல்லோரும் நம்மால் முடியாது என்று சோர்ந்து சுருண்டபோது அனுமனும் சுருண்டு சோர்ந்தான். எவ்வளவு பெரிய மனிதனுக்கும் டிப்ரஷன் வரும் என்பதற்கு இதுவே அடையாளம். அப்போது ஜாம்பவன்தான் அனுமனைத் தட்டி எழுப்பினார். ""அடேய்... இந்தக் கடலைக் கடப்பது உனக்கு சிறிய வேலை'' என்று சொல்லிச் சோர்வை விரட்டினார்.

அனுமனது நம்பிக்கைத் தீயை ஊதி ஊதி உலை வைத்தார். விஸ்வரூபம் எடுத்து விண்ணில் பாய்ந்தான் ஆஞ்சநேயன். என்ன பொருள்? நாம் சோர்வடையும்போது நமது பலத்தை நினைவூட்டும் நல்ல நண்பர்கள் நம்கூட இருந்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை தூண்டப்பட்டால் வெற்றி நிச்சயம். அதையும் தாண்டிக் கடலில் பறக்கும்போது அனுமனுக்கு மீண்டும் சோதனை. சோர்வு. எப்படி? மைந்நாக மலை. அங்கார தாரை, சுரசை என்ற மூவரால் தொடர்ந்து தொல்லைகள் வந்தன.

தன்னம்பிக்கை தள்ளாடியதும் கடவுள் நம்பிக்கைக்குத் தாவுகிறான் அனுமன். ராம நாமத்தை ஜபித்தால் துன்பம் நீங்கும் என்று "ராம என எல்லாம் மாறும்' என்று ராம நாமம் சொல்லுகிறான். கவலையைக் கடந்து இலங்கையை மிதிக்கிறான். தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. அரிசியும் கோதுமையும் மாதிரி. ஒன்று இல்லாதபோது மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காரில் மலைப்பாதையில் போகிறபோது ஒரே கியரில் வண்டி போகுமா? போகாது. கியர் மாற்றி கியர் போட்டுக் காரை மலைமீது ஓட்டவில்லையா? அப்படித்தான்.

வாழ்க்கைப் பாதையும் மலைப் பயணம் மாதிரிதான். கியர் மாற்றி கியர் போடுகிற மாதிரி தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திப் பயணத்தை நிகழ்த்தலாம். "தன்னம்பிக்கை உடையவன் கடவுளைக் கும்பிடக் கூடாது... கடவுள் நம்பிக்கை உள்ளவன் சுயமுயற்சி செய்யமாட்டான்...' என்கிற வெட்டி விஷயங்களை வெளியே வீசிவிட்டு முன்னேறுகிற வழியைப் பாருங்கள். தன்னம்பிகையோடு இரு... அது தளரும்போது தட்டிக் கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு... அதற்கும் வழியில்லையா? இறை நம்பிக்கையைப் பயன்படுத்து. தயக்கம் இன்றி மாறி மாறி இவற்றைப் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்கப் பார். இதுவே அனுமனிஸம்... நண்பனே... இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

NEWS TODAY 21.12.2025