Wednesday, April 13, 2016

NEET will give priority to merit, says Ketan Desai

Ahamedabad: After the apex court on Monday revived National Eligibility Entrance Examination (NEET), president elect (2016) of the World Medical Association and former president of Medical Council of India (MCI), Dr Ketan Desai, said NEET is a certainty for medical admissions from 2017.

It was Dr Desai who had first proposed NEET in 2009. Interestingly, Dr Desai said that after NEET, next on the agenda is an 'exit test'. "We will now lobby for a common exit test for all MBBS graduates to qualify them for practising medicine. This will ensure uniform, good quality doctors." "Implementing NEET this year will require immense effort and will on the part of the central government as the entrance exam for PG courses is slated for April 25," he said.

"The PMT exam for MBBS admissions is scheduled for May 5. If the government wishes, NEET can be implemented this year but it will entail cancelling the PMT exam and setting a fresh schedule. This may not be feasible this year. But NEET is a certainty from 2017," said Dr Desai.




Dr Desai said that NEET as a common entrance exam for admission in medical colleges across India was conceived to give students a level playing field and a merit-based chance of getting a seat in any of the country's 418 medical colleges.







He further said that since merit will decide admissions even in private medical colleges, NEET will change the quality of doctors who will serve society in future. Of the total medical colleges in the country, 50% are private institutions which are said to offer seats to less meritorious candidates for a capitation fee.







"Our research had revealed that 90-odd medical entrance exams were being conducted," said Dr Desa. "Parents and students had to pay through their noses for these exams and travelling expenses because the tests were held at multiple locations. Once NEET is implemented, students will have to give one exam and qualify for admission in the state and against all-India quota," he said.







Dr Desai clarified that since the MCI does not have the necessary infrastructure, NEET for undergraduate courses will be conducted by CBSE while PG NEET will be conducted by AIIMS.


Holding NEET this year not possible: Maharashtra government tells MCI
A day after the apex court paved way for "one India one test" for medical and dental aspirants reverting to its own ruling in 2013 which had discontinued it, the Maharashtra government informed the Central government that holding the National Entrance and Eligibility Test (NEET) from this year is "not possible".
Citing shortage of time for such a big change in the entrance exam, the Medical Education department on Tuesday apprised the Centre and Medical Council of India (MCI) that holding the NEET would not be possible this year as state level entrance exam (CET) is scheduled only three weeks from now (May5). Over 1.5 lakh candidates are expected to take the exam for admission in medical and dental colleges across the state.
"While we understand that state has to follow SC decision dated April 11 and join the NEET, but conducting the exam from this year is not possible. We are holding CET on May 5 across the state for which preparations have already been done. However, depending upon Centre's decision, state is ready to join NEET from next year," state informed the centre and the MCI, as per a communique from education minister Vinod Tawde.
The state made its stand clear to MCI and Centre via telephone. The MCI has convened a meeting with all states on Wednesday to take a final call on the issue.
The MCI is apex medical education regulator and had supervised the NEET in 2012 and 2013 before it was scrapped by the SC. The interim decision of the SC doesn't talk about the year from which NEET should be conducted. Most states are in the process of conducting state level exams. Lakhs of candidates across India have prepared for their state exam as per the state syllabi.
The state has also argued that it was anyway not part of NEET in 2012 as it had sought relief from the court during the maiden year of the test. 2013 was the only year when Maharashtra candidates were admitted through NEET. After that, CET was conducted in 2014 and 2015.
The SC ruling has increased the stress level of medical aspirants due to looming uncertainty ahead of one the most crucial exam which will decide their career. Many candidates approached authorities and called up newspaper offices to find a clear answer.
Several candidates expressed their concern over frequent changes in the entrance exam for medical and dental courses. "This is painful as we spend two years preparing for the exam and the changes are brought at the last minute. Why can't there be a fixed education policy in India," ask an aspirant.
The directorate of medical eduction Maharashtra is conducting the CET this year which is common for engineering and health science courses both. More than five lakh candidates are set to take the exam.
Both sets of candidates would take a common paper of physics and chemistry. Health science aspirants have to take biology and engineering aspirants would take additional maths paper. A significant number of aspirants have applied for both the courses and would take all four papers.

எம்ஜிஆர் 100 | 41 - அமுதசுரபி!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.நடித்த பல படங்கள் நீண்டகாலத் தயாரிப்பில் இருந்திருக்கின்றன. கதைகளிலும் காட்சி அமைப்புகளிலும் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வார். அதுமட்டுமின்றி, அரசியலிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வந்ததால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். இதெல்லாம் தெரிந்துதான் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படங்கள் எடுத்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த மற்ற தயாரிப் பாளர்களின் படங்கள் இருக்கட் டும். அவரது சொந்த தயாரிப்பு களான ‘நாடோடி மன்னன்', ‘அடிமைப் பெண்', ‘உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களேகூட, நீண்டகால தயாரிப்பில் இருந்தவைதான். ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் ‘நல்ல வேளை நான் பிழைத்துக் கொண் டேன்…’ பாடலின் இடையில், ‘வரு கிறது அடிமைப்பெண்’ என்று விளம் பரம் காட்டப்படும். அதன் பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ‘அடிமைப்பெண்’ படம் வெளியானது.

முதலில் ‘அடிமைப்பெண்’ படத்தில் சில காட்சிகளை எம்.ஜி.ஆர். எடுத்தார். அதில் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. அட்ட காசமான உடை அலங்காரத்தோடு எம்.ஜி.ஆர். ஒருகாலைத் தூக்கி நாற்காலி மீது வைத்தபடி ஸ்டைலாக நிற்கும் ‘ஸ்டில்’ வெளியானது. பின்னர், படத்தின் கதை அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தார்.

இதேபோல, ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்துக்காக 1970-ல் ஜப்பானுக்கு எம்.ஜி.ஆர். சென்று எக்ஸ்போ-70 கண் காட்சியில் காட்சிகளை படமாக்கினார். ஆனால், படம் 1973-ம் ஆண்டுதான் வெளியானது. இதுபோன்று பார்த்து, பார்த்து படங்களை எடுத்த தால்தான் எம்.ஜி.ஆரின் படங்கள் இந்த தலைமுறையும் ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கு உதாரணம், 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி சென்னையில் வெள்ளி விழா கொண் டாடி, மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் என்ற சாதனை படைத்த ‘ஆயிரத்தில் ஒருவன்’.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டா ராக விளங்கிய எம்.ஜி.ஆருக்கு இருந்த மார்க்கெட்டுக்கு அவர் நினைத்திருந் தால் நிறைய படங்களில் நடித்து இன் னும் அதிகம் சம்பாதித்திருக்கலாம். படத்தின் எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தியதோடு, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டதால்தான் அவர் நடித்த படங்களின் எண் ணிக்கை 136 என்ற அளவோடு நின்றது. சில காட்சிகளில் மட்டும் அவர் ஏற்கெனவே நடித்திருந்த ‘அண்ணா நீ என் தெய் வம்’ படம் ‘அவசர போலீஸ் 100’ என் றும், ‘நல்லதை நாடு கேட்கும்’ படமும் அவர் மறைந்தபின் வெளியாயின.

எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் இருந்தால் அவரது வீட்டில் இருந்தே பெரிய, பெரிய டிபன் கேரியர்களில் பல வகையான உணவுகள் படப்பிடிப்பு நடக்கும் இடத் துக்கு வரும். எம்.ஜி.ஆர். தனியே சாப்பிட்ட தருணங்கள் குறைவு. தன் வீட்டில் இருந்து வரும் உணவை படப்பிடிப்பு குழுவினரோடு சேர்ந்து சாப்பிடுவார்.

நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் செய்யப்பட்டபோது ‘இதயவீணை’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந் தார். 14-ம் தேதி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம்

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை.
Keywords: எம்ஜிஆர். தொடர், எம்.ஜி.ஆர் தொடர், எம்.ஜி.ஆர் வாழ்க்கை, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் கதை, மனிதநேயம்

Tuesday, April 12, 2016

: வரலாறு காணாத வெயில்: புவனேஸ்வரில் 47.5 டிகிரி செல்சியஸ் கொளுத்தியது

சத்யசுந்தர் பாரிக்

ஒரு வாரத்திற்கும் மேலாக ஒடிசா மாநில கடற்கரை மாவட்டங்கள் குறிப்பாக புவனேஸ்வரில் தணியாத வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

30 ஆண்டுகால வெயில் வரலாற்றை முறியடிக்கும் விதமாக புவனேஸ்வர் நகரில் திங்களன்று 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியது. ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் அதிகபட்ச வெயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காலையிலிருந்தே சூரியன் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. காலை 11.30 மணியளவில் 44 டிகிரி செல்சியஸைத் தொட்டது வெப்ப நிலை. நண்பகலுக்குள் மேலும் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. ஒரு மணிநேரம் கழித்து 45.2 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது ஏப்ரல் 23, 1985 அன்று அடித்த வெயிலைக் காட்டிலும் சற்று கூடுதலானது.

மதியம் 2 மணியளவில் வெயில் 45.7 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்து உச்சம் பெற்றது. இது இயல்பான வெப்ப நிலையைக் காட்டிலும் 7-8 டிகிரி கூடுதலாகும். இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிறைய மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதினால் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள் காலையில் தொடங்கி மதியத்துக்குள் முடிக்கப்படவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் கடும் உழைப்பு தொடர்பான பணிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் சரத் சந்திர சாஹூ கூறுவதாவது: "வானிலையில் மாற்றம் எதுவும் இல்லை. காற்று மேல்நோக்கி நகரவில்லை, இதனால் மேகங்கள் உருவாவதற்கான நிலைமைகள் சுத்தமாக இல்லை. கடந்த அக்டோபர் மாதம் முதலே மாநிலத்தில் மழை இல்லை. மண்ணும் வறண்ட மண் என்பதால் உஷ்ணம் பிரதிபலிக்க உதவுகிறது.

மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியிலிருந்து வரும் உஷ்ணக் காற்று மத்திய இந்தியாவைக் கடந்து செல்கிறது. இதனாலேயே இப்பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. திங்களான இன்று மதியம் 2 மணியளவில் உச்சமடைந்த வெப்ப அளவு ஏப்ரல் மாதத்தில் 1952-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச பதிவாகியுள்ளது.

இடிமழைக்கு வாய்ப்பில்லாததால் அடுத்த வாரமும் இதே நிலையே நீடிக்கும். கடற்காற்றும் மந்தமடைந்திருப்பதால் ஒடிசாவில் நிலைமைகள் மோசமாக உள்ளன” என்றார்.

இன்று மதியம் 2 மணியளவில் புவனேஷ்வரில் 17 இடங்களில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------: குறள் இனிது: வேலைக்கேற்ற ஆளா, ஆளுக்கேற்ற வேலையா..?

சோம.வீரப்பன்

ஏப்ரல் வந்தாச்சு! புதிய நிதியாண்டு தொடங்கி யாச்சு! இனி பணி உயர்வுக்கான போட்டிகள், நேர்முகத் தேர்வுகள் ஆரம்பித்து விடும்! ஆனால், பலகாலம் தங்கள் நிறுவனத்திலேயே பணிசெய்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மேலதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு இந்த மாதிரி நேரில் கூப்பிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்' என்று சிலர் நினைப்பதுண்டு.

கொஞ்சம் யோசித்தால் இதன் காரணம் புரியும். பதவி உயர்வு என்பதும் அந்த உயர் பதவியைப் பொறுத்தவரை புதிதாய் ஆள் எடுப்பது போலத்தானே? என்ன, அந்த நிறுவனத்திற்குள்ளாகவே பொருத்தமானவரைத் தேடுவார்கள்!

ஒருவர் படித்தவரா, நம்பிக்கைக்குகந்தவரா, ஆரோக்கிய மானவரா என்பதையெல்லாம் பார்த்து நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதா இல்லையாவென முடிவெடுக்கலாம்.

ஆனால், அவரை எந்தப் பணியிலமர்த்துவது என்பது அவர் என்ன படித்திருக்கிறார், அவரது முன் அனுபவம் என்ன, அவரது தனித்திறமை என்ன என்பனவற்றை வைத்துத்தானே முடிவெடுக்க முடியும்?அதனால் தானே ஆள் எடுக்கும் பொழுது இரண்டு மூன்று சுற்றுகள் வைத்து தகுதியற்றவர்களைப் படிப்படியாகக் கழற்றி விடுகிறார்கள்!

எனது நண்பர் ஒருவர் வங்கியில் 75 கிளைகள் உள்ள கோட்டத்தின் துணைப் பொது மேலாளர். மிக நன்றாய் வர்த்தகம் செய்து வருடாந்திர இலக்குகளை கடந்திருந்தார். எனவே பொதுமேலாளர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு வந்த பொழுது மிக உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் சென்றார். தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆனால் அங்கோ கேள்விகள் வேறு விதமாக இருந்தன.

வங்கி எதிர்காலத்தில் எவ்வித போட்டிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும், அவற்றை எப்படி சமாளிப்பது, வங்கிகளை இணைக்கும் பொழுது ஒரே பகுதியிலிருக்கும் வங்கிகளை இணைப்பது நன்மை பயக்குமா, வட்டி விகிதங்கள் எப்படி மாறலாம் என்கிற ரீதியில் பல கேள்விகள். அக்கேள்விகள் எல்லாம் கற்பனையானவை என்றும், இப்பொழுது தேவையற்றவை என்றும் பதில் கூறிவிட்டார் நண்பர். கொடுத்த வேலையை நான் ஒழுங்காய் செய்து முடித்துவிட்டேன், மேன்மேலும் கொடுத்துப் பாருங்கள் முடித்துக் காட்டுவேன், அவ்வளவுதான், இதைவிட வேறென்ன வேண்டும் என்று கிட்டத்தட்ட வாக்குவாதத்திலேயே இறங்கி விட்டார்!

வங்கிக்கு அப்பொழுது தேவைப்பட்டது எதிர்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய, சிந்திக்கக்கூடிய, வியூகங்களை வகுக்கக்கூடிய ஒரு பொதுமேலாளர். எனவே நமது நண்பரை விட்டுவிட்டு வேறு ஒருவருக்குத்தான் அப்பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.

பலரும் பதவி உயர்வை முன் செய்த நல்ல பணிக்குப் பரிசாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை அதுவா? ஏற்கெனவே நல்ல பணியாற்றியவர் வருங்காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று வேண்டுமானால் நம்பிக்கை கொண்டு முன்னுரிமை கொடுக்கலாம்.ஆனால் அவரிடம் அடுத்த பதவிக்குத் தேவையான சிறப்புத் தகுதிகளும் இருக்கிறதா என்றும் பார்க்கத்தானே வேண்டும்? பதவி உயர்வை மேல்பதவியில் செயலாற்றி மிளிர்வதற்கான ஒரு வாய்ப்பாய்க் கருதினால் பிரச்சினை இருக்காது!

சரியாக ஆராயாமல் பணியமர்த்தாதீர்கள்; அத்துடன் பணியமர்த்தப் படுபவரின் திறன்களை ஆராய்ந்தே வேலை கொடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள் (குறள்: 509)

- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை..DAILY THANTHI

புதுடெல்லி,

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோராடு மருத்துவ கல்லூரியில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பிரணவ் ஷைன்தில்யா, காசியாபாத்தைச் சேர்ந்த அன்குர் சிங் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த இந்திரஜித்சிங் சவுகான் ஆகியோர் படித்து வருகிறார்கள்.

இவர்களில் பிரணவ் சைன்தில்யா 3–ம் ஆண்டு படித்து வந்தார். அன்குர் சிங் 4–ம் ஆண்டு படித்து வந்தார்.

2 மாணவர்கள் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு இந்திய மாணவர்கள் 3 பேரையும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், அந்த மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பிரணவ் சைன்தில்யாவும், அன்குர் சிங்கும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திரஜித்சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய மாணவர்கள் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

3 பேர் கைது
இந்த நிலையில் மாணவர்களை கத்தியால் குத்திய 3 பேரும் உக்ரைன் நாட்டு எல்லையை தாண்டி தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மாணவர்களின் பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுவரப் கூறுகையில், ‘மாணவர்கள் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார், பல்கலைக்கழக பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். உடல்களை இந்தியா எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பேஸ்புக் லைவ்.

பேஸ்புக் லைவ்..DAILY THANTHI

பேஸ்புக்கில் மெஸேஞ்சர் வசதி, சாட்டிங் செய்ய உதவுகிறது. தற்போது இதில் 'லைவ்' எனும் வசதி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இது வீடியோ சாட்டிங்போல முகம் பார்த்து பேச உதவுகிறது. உரையாட விரும்புபவர்கள் 'லைவ்' வீடியோ பொத்தானை 'ஆன்' செய்து வைத்துக் கொண்டால், நண்பர் குழுவினர் முகம் பார்த்து உரையாட முடியும். முக்கியமான இந்த வசதி பேஸ்புக் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான வாணவேடிக்கை..

பாதுகாப்பான வாணவேடிக்கை...DAILY THANTHI
THALAYANGAM

பழையகாலங்களில் கடைபிடித்துவரும் பல மரபுகள், வழக்கங்கள், காலப்போக்கில் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப மாறினாலும், இறைவழிபாட்டு தலங்களில் உள்ள சில மரபுகள் மட்டும் மாற்றம் காணாமலேயே இருக்கிறது. பழையகாலங்களில் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் பக்தர்களை அதிகம் ஈர்க்கும்வகையில், சிறப்பு வழிபாட்டுமுறைகள் கடைபிடிக்கப்படுவதோடு, தீபங்களால் அலங்கரிக்கப்படுவதும், வழிபாட்டுதலங்களுக்கு முன்புறம் நாதஸ்வரம், மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைகள் இடம்பெறுவதும், அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவிழாவின் இறுதிநிகழ்ச்சியாக வாணவேடிக்கைகள் நடத்துவது எல்லா ஊர்களிலும் ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதுபோல, கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தின் மிக அருகில் இருக்கும் பரவூரில் உள்ள புற்றிங்கல் தேவி திருக்கோவிலில் நடந்த வாணவேடிக்கை, பல உயிர்சேதங்களையும், ஏராளமானவர்களுக்கு காயமும் ஏற்படுத்தி, இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த திருக்கோவிலில் மீனா–பரணி திருவிழா முடியும் அன்று நடந்த வாணவேடிக்கை இதுவரையில் 110 பேர்களுக்குமேல் பலிவாங்கிவிட்டது. 400 பேர்களுக்குமேல் பலத்தகாயத்தோடு பல்வேறு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி என்பதோடு, இருகோஷ்டிகளுக்கு இடையே வாணவேடிக்கை போட்டியே நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாணவேடிக்கையை பார்க்க இரவு முழுவதும் காத்திருந்திருக்கிறார்கள். அதிகாலை 3.30 மணிக்கு வானத்தில் போய் வெடிக்கவேண்டிய ஒரு வாணவெடி கீழேவிழுந்து அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி அருகிலே வெடிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த அறைக்குள் விழுந்து, அங்கிருந்த வெடிகள் எல்லாம் மொத்தமாக வெடித்ததால் இவ்வளவு உயிர்கள் இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், 1.5 கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் எல்லாம் பெரியசேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். நரேந்திரமோடி அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கிறார்.

‘ஆபத்து காலத்தில் உதவுபவர்தான், உண்மையான நண்பர்’ என்ற வகையில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெறும் ஆறுதல் வார்த்தைகளை மட்டும் கூறாமல், உடனடியாக தமிழகத்திலிருந்து மருத்துவ நிபுணர்களையும், தேவையான மருந்துகளையும் அனுப்பியது, தமிழர்களின் தயாளகுணத்தை பறைசாற்றியுள்ளது. இந்த வாணவேடிக்கை இவ்வளவு சோகமயமானது என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்களில், வாணவேடிக்கை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது. பழையகாலங்களில் கோவில்களுக்கு அருகில் திறந்தவெளி மைதானங்களில் வாணவேடிக்கைகளை நடத்துவார்கள். ஆனால், இப்போதோ கோவில்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் வந்துவிட்டன. வெடிமருந்து விதிகள்படி, எந்த ஒரு வாணவேடிக்கைகள் என்றாலும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நடத்தப்படவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டாசுவெடிக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை கண்டிப்பாக நடத்தக்கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதுபோல, 15 கிலோ எடை அளவுக்குத்தான் பட்டாசுகள் வெடிக்கப்படவேண்டும். ஆனால், பரவூரில் நடந்த வாணவேடிக்கையில் இந்தவிதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

கோவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்பது நமது பாரம்பரிய நடைமுறையில் ஒன்றாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் சப்பரம் தூக்கிக்கொண்டு வரும்போதும், தேர் இழுத்துக்கொண்டு வரும்போதும் அதற்கு முன்பு வாணவேடிக்கைகள் நடத்தப்படுவது மரபு. அதற்கு தடைவிதிப்பது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, வாணவேடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு கோவில் நிர்வாகம், கிராம நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, ஆபத்தில்லாத வாணவேடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

NEWS TODAY 25.12.2025