Wednesday, April 13, 2016

எம்ஜிஆர் 100 | 41 - அமுதசுரபி!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.நடித்த பல படங்கள் நீண்டகாலத் தயாரிப்பில் இருந்திருக்கின்றன. கதைகளிலும் காட்சி அமைப்புகளிலும் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வார். அதுமட்டுமின்றி, அரசியலிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வந்ததால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். இதெல்லாம் தெரிந்துதான் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படங்கள் எடுத்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த மற்ற தயாரிப் பாளர்களின் படங்கள் இருக்கட் டும். அவரது சொந்த தயாரிப்பு களான ‘நாடோடி மன்னன்', ‘அடிமைப் பெண்', ‘உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களேகூட, நீண்டகால தயாரிப்பில் இருந்தவைதான். ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் ‘நல்ல வேளை நான் பிழைத்துக் கொண் டேன்…’ பாடலின் இடையில், ‘வரு கிறது அடிமைப்பெண்’ என்று விளம் பரம் காட்டப்படும். அதன் பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ‘அடிமைப்பெண்’ படம் வெளியானது.

முதலில் ‘அடிமைப்பெண்’ படத்தில் சில காட்சிகளை எம்.ஜி.ஆர். எடுத்தார். அதில் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. அட்ட காசமான உடை அலங்காரத்தோடு எம்.ஜி.ஆர். ஒருகாலைத் தூக்கி நாற்காலி மீது வைத்தபடி ஸ்டைலாக நிற்கும் ‘ஸ்டில்’ வெளியானது. பின்னர், படத்தின் கதை அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தார்.

இதேபோல, ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்துக்காக 1970-ல் ஜப்பானுக்கு எம்.ஜி.ஆர். சென்று எக்ஸ்போ-70 கண் காட்சியில் காட்சிகளை படமாக்கினார். ஆனால், படம் 1973-ம் ஆண்டுதான் வெளியானது. இதுபோன்று பார்த்து, பார்த்து படங்களை எடுத்த தால்தான் எம்.ஜி.ஆரின் படங்கள் இந்த தலைமுறையும் ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கு உதாரணம், 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி சென்னையில் வெள்ளி விழா கொண் டாடி, மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் என்ற சாதனை படைத்த ‘ஆயிரத்தில் ஒருவன்’.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டா ராக விளங்கிய எம்.ஜி.ஆருக்கு இருந்த மார்க்கெட்டுக்கு அவர் நினைத்திருந் தால் நிறைய படங்களில் நடித்து இன் னும் அதிகம் சம்பாதித்திருக்கலாம். படத்தின் எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தியதோடு, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டதால்தான் அவர் நடித்த படங்களின் எண் ணிக்கை 136 என்ற அளவோடு நின்றது. சில காட்சிகளில் மட்டும் அவர் ஏற்கெனவே நடித்திருந்த ‘அண்ணா நீ என் தெய் வம்’ படம் ‘அவசர போலீஸ் 100’ என் றும், ‘நல்லதை நாடு கேட்கும்’ படமும் அவர் மறைந்தபின் வெளியாயின.

எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் இருந்தால் அவரது வீட்டில் இருந்தே பெரிய, பெரிய டிபன் கேரியர்களில் பல வகையான உணவுகள் படப்பிடிப்பு நடக்கும் இடத் துக்கு வரும். எம்.ஜி.ஆர். தனியே சாப்பிட்ட தருணங்கள் குறைவு. தன் வீட்டில் இருந்து வரும் உணவை படப்பிடிப்பு குழுவினரோடு சேர்ந்து சாப்பிடுவார்.

நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் செய்யப்பட்டபோது ‘இதயவீணை’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந் தார். 14-ம் தேதி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம்

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை.
Keywords: எம்ஜிஆர். தொடர், எம்.ஜி.ஆர் தொடர், எம்.ஜி.ஆர் வாழ்க்கை, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் கதை, மனிதநேயம்

No comments:

Post a Comment

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards

UGC Chairman Jagadesh Kumar says new foreign degree norms will align Indian education with global standards  The University Grants Commissio...