Thursday, April 28, 2016

Treat AIPMT as phase 1 of NEET, health ministry likely to tell SC

TOI 


NEW DELHI: Students aspiring for admission into medical colleges are likely to face a common medical entrance test this year itself but in a phased manner.

In its tentative schedule to be presented to the Supreme Court on Thursday, the health ministry is likely to suggest that the All India Pre-Medical Entrance Test, 2016 (AIPMT) slated for May 1 be treated as Phase I of National Eligibility Entrance Test (NEET).

The Phase II of NEET can be conducted in mid-July for the rest of the candidates, who have not applied for AIPMT this year, official sources told TOI. However, apart from AIPMT, a slew of medical entrance tests slated to happen over the next couple of months are expected to be scrapped in the light of the SC directive.

"We have worked out a tentative schedule which will be submitted to the SC. Since it is too late to conduct a fresh test, we will suggest that All India PMT be treated as Phase 1 of NEET and a second phase can be conducted separately for those who have not applied for AIPMT," said an official.

he move comes in the wake of the apex court insisting on Wednesday that multiple entrance tests must be done away with and NEET must be conducted for 2016-17 session. It directed the Centre, Medical Council of India (MCI) and CBSE to sit together and frame a time-schedule for conducting NEET. It directed them to place before it by Thursday a dateline for the common entrance test.

Following the apex court's directive, senior officials from the health ministry, MCI and CBSE brainstormed on the issue for more than two hours to finally arrive at the tentative schedule, the official said.

நிதீஷ் குமாருக்குப் பெரிய சவால்!

By ஜா. ஜாக்சன் சிங்


மது இல்லாத மாநிலமாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறது பிகார். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இனி பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்ற தீர்க்க தரிசனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அந்த மாநில முதல்வர் நிதீஷ்குமார்.
 பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருப்பதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது மட்டுமன்றி, மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட ஒரு முதல்வராகவும் நிதீஷுக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது.
 இதற்காக ஊடகங்களும், பிகார் மட்டுமன்றி பல்வேறு மாநில அரசியல் தலைவர்களும் நிதீஷ் குமாரைப் பாராட்டி வருகின்றனர். ஆனால், இனி நிதீஷ்குமார் சந்திக்கப் போகும் சவால்களை அவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
 இப்போது பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்றதில்லை பிகார். மது விற்பனையால் பெறப்படும் வருவாயை பிரதானமாக நம்பியிருக்கும் கருவூலத்தைக் கொண்ட மாநிலங்களில் பிகாரும் ஒன்று.
 பிகாரில் கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் மட்டும் அரசு மதுபான விற்பனையால் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ.4,501 கோடி. அதாவது அரசின் மொத்த வருவாயான ரூ.31 ஆயிரம் கோடியில் இது 15.95 சதவீதம்.
 பிகார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி - சீருடைத் திட்டம், முதியோருக்கான ஓய்வூதியத் திட்டம், விவசாயிகள் நல உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதீஷ்குமார் நிறைவேற்றுவதற்கு இந்த மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயே அடிப்படை.
 இப்போது, இந்தத் திட்டங்களை "குடிமகன்'களின் உதவியின்றி நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் நிதீஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இந்த நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5,071 கோடி கூடுதலாக செலவாகும்.
 மற்ற மாநிலங்களைப் போன்ற இயற்கை வளங்களும், தொழில் நிறுவனங்களும் பிகாரில் கிடையாது. விவசாயமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. 
 எனவேதான், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பகுதிகளில் சொற்ப ஊதியங்களுக்கு பிகார் இளைஞர்கள் பணிபுரிகின்றனர். அதனால், உள்ளூர் மக்களிடமிருந்து மாநில அரசு பெறும் வரி வருவாய் மிகச் சொற்பமே.
 ஒருவேளை, அரசு நிதியுதவியோ அல்லது இலவசத் திட்டங்களோ எதிர்காலத்தில் நிறுத்தப்படுமானால் அதுவே அடுத்த தேர்தலில் நிதீஷ்குமாரின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகிவிடும். வறுமையின் பிடியிலும், ஜாதிய பின்னல்களிலும் கட்டுண்டுள்ள பிகார் மக்கள், மது ஒழிப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக நிதீஷுக்கு வாக்களிப்பார்கள் எனக் கூற முடியாது.
 இரண்டாவது பெரிய சவால், பூரண மது விலக்கை முறையாக அமல்படுத்துவதில்தான் இருக்கிறது. ஏனெனில், மது விலக்கு அமலில் இல்லாத, சொல்லப்போனால் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநில எல்லைகளையொட்டி பிகாரின் 22 மாவட்டங்கள் அமைந்துள்ளன. 
 அதேபோல், கள்ள நோட்டுகள், சட்டவிரோத ஆயுதங்களின் ஊடுருவல்களை அதிகம் காணும் நேபாள நாட்டின் எல்லையையொட்டியும் பிகாரின் சில மாவட்டங்கள் உள்ளன.
 இந்த எல்லைகளிலிருந்து மதுபானங்களும், கள்ளச்சாராயமும் பிகாருக்குள் நுழைவதைத் தடுப்பதும் மிகக் கடினம். எல்லைகளில் காவல் இருக்கும் போலீஸாருக்கு கையூட்டு கொடுத்துவிட்டு மதுபானங்களைக் கொண்டு வருவது என்பது அவ்வளவு கடினமான செயலாக இருக்காது. 
 அண்மையில், நேபாள எல்லையிலிருந்து பிகாருக்கு 2 ஆயிரம் லிட்டர் மதுபானங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும் பட்சத்தில், நிர்வாகத் திறனற்ற அரசு என்ற கெட்டப் பெயரையும், மக்களின் அவநம்பிக்கையையும் நிதீஷ்குமார் ஒருசேர சம்பாதிக்க வேண்டி வரும். எனவே, இந்த விஷயத்திலும் அரசு அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.
 மூன்றாவது சவால், பிகாரில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுப்பதில் உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, பிகாரில் 85 லட்சம் பேர் மது அருந்துகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையானவர்கள். 
 அப்படியிருக்க, இந்த பூரண மதுவிலக்கால் இத்தகையோரின் உடல்நிலையும், மனநிலையும் மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை குணப்படுத்துவதிலும் அரசு தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். இதுவும் நிதீஷ்குமாருக்குப் பெரிய சவால்தான்.
 பிகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. 1977-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கற்பூரி தாக்குரால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மேற்கூறிய பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
 இப்போது அங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் மதுவிலக்கு நீடிப்பது என்பது முழுக்க முழுக்க முதல்வர் நிதீஷ்குமாரின் நிர்வாகத் திறனில்தான் உள்ளது. எது எப்படியோ, மதுவிலக்கு என்ற வார்த்தையையே மறந்தும் உச்சரிக்காத நம் நாட்டு அரசியல்வாதிகள் மத்தியில் மக்கள் நலத்தை முக்கியமாகக் கருதிய நிதீஷ்குமார் துணிச்சல்காரர்தான்.

ஆயூஸ்' டாக்டர்களை மிரட்டி ஓடுக்கியது அரசு


தமிழக சுகாதாரத் துறையில், அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறுகிறோம். ஆனால்,
உண்மையில் அத்தகைய வளர்ச்சி கிடைத்துள்ளதா, டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்க
முடிகிறதா என்றால் இல்லை.

இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில், மத்திய அரசின், தேசிய ஊரக சுகாதார திட்டமான, என்.ஆர்.எச்.எம்., நிதி உதவியில், தமிழகம் முழுவதும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், 2009ல், சிறப்பு பிரிவு துவக்கப்பட்டது. 
இதற்காக, சித்தா, ஆயுர்வேதம், யோகா உள்ளிட்ட, 475, 'ஆயுஷ்' டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். உதவியாக மருந்தாளுனர், உதவியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டனர். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தனிப் பிரிவு துவக்கப்பட்டது. 'வாரத்தில், மூன்று நாள் வேலை, தினக் கூலி, 1,000 ரூபாய்' என்ற நிபந்தனையுடன் வேலை செய்கின்றனர். இது வாரத்தில், மூன்று நாட்கள் என்பது, ஆறு நாட்களாக மாற்றப்பட்டது.

இத்திட்டத்தில், ஆயுஷ் டாக்டர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; அலோபதி டாக்டர்களுக்கு, 45 ஆயிரம் ரூபாய் என, சம்பள விகிதத்திலும் குளறுபடி உள்ளது. சம்பளம் குறைவு என, பல டாக்டர்கள் ஓடி விட்டனர். மீதம், 200 பெண்கள் உட்பட, 375 பேர் வேலை செய்கின்றனர். காலி இடங்களுக்கு ஏற்ப, இந்த திட்டத்தில் பணியாற்றிய, மருந்தாளுனர்கள், யோகா டாக்டர்கள், சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டு, நிரந்தரம் செய்யப்பட்டனர்.

ஆனால், சித்தா, ஆயுர்வேதம் பிரிவு காலியிடங்களை, அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பினர்; என்.ஆர்.எச்.எம்., என்ற, தேசிய ஊரக சுகாதாரத் திட்ட டாக்டர்களை, அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது.தற்போது, மருத்துவமனை திறப்பது, சுத்தம் செய்வது, சிகிச்சை அளிப்பது, மருந்து வழங்குவது என, அனைத்து வேலைகளையும், டாக்டர்களே செய்கின்றனர். போதிய வசதிகளை செய்து கொடுங்கள் என்றால், அரசு காதில் வாங்கவில்லை. ஆனால், நிலவேம்பு கஷாயம் கொடுக்க மட்டும், நேரம், காலம் இன்றி வேலை வாங்கினர். விடுமுறை நாட்களிலும், ஆர்வத்துடன் வேலை செய்தும், சம்பளம் தரவில்லை.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பணியில் சேர்க்கப்பட்டதால், அ.தி.மு.க., அரசு, இந்த டாக்டர்களை புறக்கணித்து வருகிறது. ஏழு ஆண்டுகளாக, தினக்கூலிகளாக உள்ளனர். அரசு ஊழியர்கள், ஐந்து ஆண்டுகளாக போராடியும் கண்டுகொள்ளாதது போல், ஆயுஷ் டாக்டர்கள் பிரச்னையையும், அரசு கண்டு கொள்ளவில்லை. பெண் டாக்டர்களுக்கு, மகப்பேறு விடுப்பு கூட கிடையாது.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் அறிவித்த டாக்டர்களை, ஆட்சியாளர்கள் நெருக்கடியால், இயக்குனரக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் போனிலும், நேரிலும் மிரட்டினர். சங்க மாநில தலைவரான எனக்கே, மிரட்டல் விடுக்கப்பட்டது. நெருக்கடியை சமாளிக்க முடியாமல், போராட்டத்தை தள்ளி வைத்தோம்.

மருத்துவ மையங்களுக்கு நீராவி குளியல் இயந்திரம், ஆயில் மசாஜ் இயந்திரம், பயிற்சி இயந்திரங்களை வாங்கி குவித்துள்ளனர். இவற்றை இயக்க ஆட்கள் இல்லை. இன்னும் வெட்கக்கேடு என்னவென்றால், இந்த திட்டத்தின் கீழ் செயல்படும், ஓமியோபதி மருத்துவமனைகளுக்கு, இரண்டு ஆண்டுகளாக மாத்திரைகளை கூட அரசு தரவில்லை; அப்புறம் எப்படி, சிகிச்சை அளிக்க முடியும்?மாவட்ட சுகாதார மருத்துவமனைகளில், கெஞ்சாத குறையாக கடன் வாங்கி, சிகிச்சைக்கு வந்தோருக்கு மருந்து கொடுத்து, டாக்டர்கள் சமாளித்தனர். கடைசி நேரத்தில், அரசு கொடுத்த மருந்துகள் கூட, கடன் வாங்கியதைத் திருப்பிக் கொடுக்கும் அளவில் கூட இல்லை. இந்த லட்சணத்தில் தான், பாரம்பரிய மருத்துவமனைகள் செயல்பட்டன. இனி வரும் புதிய அரசாவது, இதுபோன்ற பல சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும்.

டாக்டர் எஸ்.செல்லையா
மாநில தலைவர், ஆயுஷ் டாக்டர்கள் சங்கம் - என்.ஆர்.எச்.எம்., தமிழ்நாடு.
ஆந்திர அரசு ஊழியர்களுக்குஅடிக்குது 'லக்கி பிரைஸ்'

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் நிர்மாணிக்கப்பட்டு வரும் அமராவதியில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, வாரத்தில், ஐந்து நாள் வேலை, 30 சதவீத கூடுதல் வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 
ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, ஆந்திராவின் புதிய தலைநகர், அமராவதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தற்போதே அங்கு, தற்காலிக தலைமைச் செயலக அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது. 
தலைமைச் செயலக ஊழியர்களுக்காக, 5,000 வீடுகள் கட்டப்படுவதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 
மேலும், தற்காலிக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வாரத்தில் ஐந்து நாள் வேலை, 30 சதவீதம் கூடுதலாக, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை அளிக்கவும், முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சொன்னால் போதாது

லகம் முழுவதும் ஒரு பெரிய அழிவு சக்தியாக, அணுகுண்டுக்கும் மேலான ஆபத்தாக இருப்பது பிளாஸ்டிக் பொருட்கள்தான். இதை உச்சநீதிமன்றமே தெளிவாக கூறியிருக்கிறது. 2012-ம் ஆண்டு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்ச், பிளாஸ்டிக் தீமைகள் பற்றி தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அபரிமிதமான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடும், அவற்றை சரியாக ஒழுங்குபடுத்தாத தன்மையும், நமது ஏரிகள், குளங்கள், கழிவுநீர் கால்வாய்களை அடைத்துக்கொள்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஒரு அணுகுண்டைவிட அதிக பாதிப்பை விளைவிப்பது பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக்கை முழுமையாக தடைசெய்வதை நாம் பரிசீலிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். நாட்டில் மட்டுமல்லாமல், கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளின் ஆதிக்கம் இப்போது அதிகமாகி, கடலில் சுற்றுச்சூழலை பாதிப்பது மட்டுமல்லாமல், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைத்துவிட்டது. அதனால்தான் Òஆழ்கடலில் உள்ள பிசாசுகள்Ó என்று பிளாஸ்டிக் பொருட்களை கூறுகிறார்கள். 

இந்தியாவில், எல்லோருக்கும் வழிகாட்டும் வகையில், கர்நாடக அரசாங்கம் கடந்த மாதம் பிறப்பித்த ஒரு ஆணையின்படி, எவ்வளவு தடிமன் என்று கணக்கில்லாமல், பிளாஸ்டிக் பைகள், பேனர்கள், கொடிகள், அலங்கார தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள், தட்டுகள், கப்புகள், விரிப்புகள் என்று எல்லாவற்றையும் தடைசெய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் பிரிவு 5-ன்படி இந்த சட்டத்தை பிறப்பிப்பதாகவும், இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள குப்பைகளை பிளாஸ்டிக் பையில் போட்டு, குப்பை தொட்டியில் போடுபவர்களுக்கும் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது. 

கர்நாடக அரசு தடை செய்துவிட்டது. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? என்பதுதான் இப்போது எல்லோரது பார்வையாக உள்ளது. அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் என்று எல்லா ஊர்களும் திருவிழா கோலம் காணுமே, இதுவும் கூடுதல் அழிவை ஏற்படுத்தும் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்சில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தேர்தலின்போது 40 மைக்ரானுக்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் மீதும், அவற்றை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. 

2011-ம் ஆண்டே பிறப்பிக்கப்பட்ட சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். இந்த தேர்தலுக்காக நிறுவனங்கள் தயாரிக்கும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்களில், அந்த நிறுவனத்தின் பதிவு எண் அச்சிடப்படவேண்டும் என்று, யார் தயாரித்தார்கள்? என்று அடையாளம் காட்டுவதற்காக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் முடிந்தவுடன் இந்த கொடிகள், பேனர்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து, அவற்றை அறிவியல் பூர்வமாக மறுசுழற்சியோ, அழிக்கவோ உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்களிலும் அறிவுறுத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷனும் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த முடிவு, பிறமாநிலங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையவுள்ளது. 

அதே நேரம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஏராளமான அதிகாரம் உள்ளது. உயர்நீதிமன்றத்திலேயே ஒப்புதல் அளித்துள்ள இந்த நடவடிக்கைகளை சொன்னால் போதாது, செயலில் காட்டவேண்டும். இந்த தேர்தலில் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான எந்த பொருளும் பயன்படுத்தப்படவில்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். இந்த பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டம் என்ற ஆயுதம் அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கையில் இருக்கிறது. அதை பயன்படுத்துவது அவர்கள் 

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உத்தரவாதம்:

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உத்தரவாதம்: மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு கால அட்டவணையை இன்று தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, 
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு மத்திய அரசும், மருத்துவ கல்வி கவுன்சிலும் சம்மதம் தெரிவித்துள்ளன. தேர்வுக்கான கால அட்டவணையை இன்று தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மனு விவரம்
நாடு முழுவதும் 2016–17–ம் கல்வி ஆண்டு மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–
2016–17 கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த முடியாத வகையில் மருத்துவ கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்கள் முடிவை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன. கடந்த 11–ந் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு, இதுதொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான தீர்ப்பில் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த ஆண்டிலேயே மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல சி.பி.எஸ்.இ. நிறுவனம் வரும் மே 1–ந் தேதி நடத்தும் 15 சதவீத இடங்களுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சம்மதம்
இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவ கீர்த்திசிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சங்கல்ப் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனம் தரப்பில் வக்கீல் அமித் குமார் ஆஜராகி இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த ஆண்டே மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.
அப்போது, மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், சி.பி.எஸ்.இ. ஆகியவற்றின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் மூவரும், மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்துவதற்கு விரும்புவதாகவும், தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தனர்.
சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல் மட்டும், சி.பி.எஸ்.இ.யுடன் தான் ஆலோசனை நடத்தி, தேவையான உத்தரவுகளை பெற வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டே நடத்த வேண்டும்
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்தி வைத்தனர். இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை இன்று பகல் 12 மணிக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
மேலும் சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் உடனடியாக முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவரும் விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதன்மூலம், இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான முட்டுக்கட்டைகள் அனைத்தும் நீங்கி விட்டதாக மனுதாரரின் வக்கீல் அமித் குமார் தெரிவித்தார்.

Wednesday, April 27, 2016

எம்ஜிஆர் 100 | 52 - புரட்சித் தலைவர் வாழ்க!

திருமண விழா ஒன்றில் தனது காலில் விழ முயற்சிக்கும் மணமகனை எம்.ஜி.ஆர். தடுத்து ஆசி கூறுகிறார். அருகே படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலு.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது ரசிகர்கள், தொண்டர்களின் சந்தோஷத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர். நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.

புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.

ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.

இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.

சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங் கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.

கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.

வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.

எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.

பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.

கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!

பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.

மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...

‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...