Monday, May 2, 2016

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் கட்ட நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை


தமிழகத்தில் நடந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடுமுழுவதும் 52 நகரங் களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர் கள் எழுதினர். தமிழகத்தில் சென்னை யில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை யில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப் பட உள்ளது. இதுபற்றி தமிழகத்தில் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடு முழுவதும் எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டும் தேர்வுக்கு விண்ணப்பித்த சுமார் 26 ஆயிரம் மாணவர்களில் 8 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை” என்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “நாடுமுழுவதும் பல்வேறு விதமான கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நேரத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சிபிஎஸ்இ கல்வி முறையில் நுழைவுத் தேர்வு நடத்தப் படுவதால், கிராமப்புற மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாகிவிடும்.

இந்த நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை வடமாநில மாணவர்கள் பிடித்துவிடுவார்கள். அதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரி யான கல்வி முறையை கொண்டு வந்த பிறகு, நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும். தற்போது உள்ள முறையில் பிளஸ் 2 கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. புதிய நுழைவுத் தேர்வால் பிளஸ்2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.

கேரளாவில் பாழடைந்து வரும் எம்ஜிஆர் வீடு

எம்ஜிஆரின் புகழ்பாடி, அவரின் பிரபலத்தை அதிமுக இன்றும் பயன்படுத்தி வருகிறது. கேரள மாநிலத்தில் எம்ஜிஆர் சிறு வயதில் வசித்த வீடு, போதிய பராமரிப்பு இன்றி பாழடைந்து வருகிறது.
இலங்கையின் கண்டியி லிருந்து எம்ஜிஆர் குடும்பத்தினர் கேரளத்துக்கு வந்தபோது, அவரது தாயின் பரம்பரை வீடான இங்குதான் குடிபுகுந்தனர். இந்த சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்ஜிஆர் தனது சிறு வயதைக் கழித்தார். பிற்காலத்தில் தமிழக முதல்வராக இருந்தபோதும் அவ்வப்போது தனது பழைய வீட்டை அடிக்கடி பார்க்க வருவார் எம்ஜிஆர்.
பாலக்காட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த வடவன்னூர் கிராமம்.
இந்த வீடு எம்ஜிஆரின் தாய் சத்தியபாமாவின் உறவினர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள்தான் வசித்து வந்தனர். பின்னர் அக்குடும்பத் தினர் பாலக்காடு சென்றுவிட்டனர்.
இந்த வீட்டை அங்கன்வாடிக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எம்ஜிஆரின் 
Inline image 1
பழைய புகைப்படம் தவிர, தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டி ருக்கின்றன. தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அளித்த அதிமுக காலண்டரும் மாட்டப் பட்டுள்ளது.
“இந்த வீடு பராமரிப்பில்லாத தால் பாழடைந்து வருகிறது. தமிழகத்திலிருந்து அதிமுக பிரமுகர்கள் அவ்வப்போது இங்கு வந்து பார்த்தாலும், இது புறக் கணிக்கப்படும் நிலையில்தான் உள்ளது. இது தனியாருக்குச் சொந்தமானது என்பதால், கேரள அரசும் எம்ஜிஆரின் நினைவிடமாக மாற்றுவதில் தயக்கம் காட்டு கிறது” என அங்கவான்வாடி மையத்தின் பகுதி நேர ஆசிரியை எம்.புஷ்பலதா கூறுகிறார்.
“எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன், இங்கு அருகி லுள்ள நல்லெப்பிளி கிராமத்தைச் சேர்ந்தவர். கண்டியில் பணி ஓய்வு பெற்ற பிறகு, இங்கு வடவன்னூ ருக்கு வந்துவிட்டார். இங்குதான் சில காலம் வாழ்ந்தனர். அவரின் இறப்புக்குப் பிறகு, எம்ஜிஆரை யும், அவரது அண்ணன் சக்கர பாணியையும் அவர்களின் தாய் கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். கும்பகோணத் தில் வாழ்ந்தபோதுதான், இரு சகோதரர்களும் திரைத்துறையில் நுழைந்தனர்” என சித்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.மயில்சாமி தெரிவித்துள்ளார்.

Sunday, May 1, 2016

18 மாதங்களில் 108 கிலோ அதிரடி எடை குறைப்பு: குண்டு அம்பானி ஸ்லிம் ஆன கதை


சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக இருந்தது அம்பானியைப் பற்றித்தான். அதுதான் அம்பானியைப் பத்தி, அடிக்கொருதரம் பேசிக்கொண்டிருக்கிறார்களே, இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பதினெட்டு மாதங்களுக்கு முன்பு இரட்டைநாடியைவிடவும் பெரிதாக மகாகுண்டாகக் காட்சியளித்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, திடீரென ஸ்லிம்மாக நடந்துவந்தால், எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

21 வயது அனந்த், 40 வயதுக்கார குண்டு ஆள்போல உடல் பருமன் பிரச்சினையுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் வலம்வந்து கொண்டிருந்தபோது இதே சமூக வலைதளம் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெறும் 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைத்து ‘சிக்‘ ஆகிவிட்டார். உடல் பருமனை எப்படிக் குறைப்பது என்று தீவிர யோசனையில் இருப்பவர்கள், அஞ்சுபவர்களுக்கு மத்தியில் அனந்த் அம்பானியின் எடைக் குறைப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் என்ன?

எப்படி நிகழ்ந்தது இந்த மாயா ஜாலம்? துரித உணவு, சமச்சீரற்ற உணவு, நொறுக்கு தீனி, உடற்பயிற்சியின்மை போன்ற பல அம்சங்கள் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏதோ ஒரு நோய்க்குத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்கூட உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. சிறு வயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அனந்த், அதற்காக நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டார். அவரது உடல் பருமனுக்கு மருந்துகள் ஏற்படுத்திய பக்கவிளைவுதான் காரணம் என்று கூறுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க எடைக் குறைப்பு நிபுணர்கள் பலரைப் பார்த்தும் அனந்த் அம்பானியிடம் எந்த மாற்றமும் இல்லை. இறுதியில் செயற்கை, அதிரடி எடைக் குறைப்பு முறைகளின் பின்னால் ஓடுவதை விட்டு இயற்கை வழியில் உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார் அனந்த். இப்போது அவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார். அனந்த் அம்பானி உடல் எடையைக் குறைத்தது எப்படி?, என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார்?:

நடையோ நடை

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்ததும் அனந்த் அம்பானி செய்த முதல் காரியம் நடைப்பயிற்சி. தினமும் 21 கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார். பொதுவாக இந்தத் தூரத்தை மெதுவாக நடந்து கடந்தாலே மூன்றரை மணி நேரம் ஆகும். ஆனால், குண்டான உடலை வைத்துக்கொண்டு இந்தத் தூரத்துக்கு அவர் நடந்திருக்கிறார். 21 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி என்பது அரை மாரத்தானுக்கு சமம்.

யோகா

உடலைச் சீராகப் பராமரிக்க உலகெங்கும் யோகா பின்பற்றப்படுகிறது. உடல் எடைக் குறைப்புக்கு அனந்த் அம்பானி, இதைப் பயன்படுத்திக் கொண்டார். டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், யோகா மூலம் மனம் ஒருநிலைப்படுத்தப்படும். அவருடைய கவனமும் குறிக்கோளும் ஒன்றை நோக்கி இருக்க உதவும். அதை உணர்ந்து, உடற்பயிற்சியுடன் தினமும் யோகா பயிற்சி யையும் மேற்கொண்டுவந்தார் அனந்த்.

டயட்

உடல் எடைக் குறைப்புக்குக் கார்போஹைட்ரேட் குறைவான உணவை உட்கொண்டதோடு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவை அனந்த் முற்றிலும் தவிர்த்தார். துரித உணவு, அரிசி உணவு, சர்க்கரை அதிகமாகக் கலந்த உணவு, குளிர்பானங்களுக்கு விடை கொடுத்துள்ளார். அதேசமயம் புரதச்சத்து நிறைந்த உணவையும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்டுள்ளார். நார்ச்சத்துமிக்க பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொண்டுள்ளார்.

வெயிட் டிரெய்னிங்

வெயிட் டிரெய்னிங் உலக அளவில் தற்போது பிரபலமாகிவருகிறது. குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பவர்கள் இதையும் பின்பற்றுகிறார்கள். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

ஃபங்ஷனல் டிரெய்னிங்

ஃபங்ஷனல் பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தித் தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி. முறையான பயிற்சியாளர் ஒருவருடைய மேற்பார்வையில் இதைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியையும் அனந்த் செய்திருக்கிறார்.

இப்படியாகத் தீவிர முயற்சியுடன் மாதத்துக்கு ஆறு கிலோ வீதம் உடல் எடையைக் குறைத்துவந்துள்ளார் அனந்த் அம்பானி. உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைத்தால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, அனந்த் அம்பானி சரியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வழியைப் பின்பற்றியதால் உடல் எடையைப் பிரச்சினையில்லாமல் குறைக்க முடிந்திருக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

கொஞ்சம் அசந்தால் பார்வை பறிபோகும்









உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

‘உங்களுக்கு சுகர் இருக்கா?’ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவரிடம் சென்றால், மருத்துவர் முதலில் கேட்கும் கேள்வி பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு நீரிழிவு நோய் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதனுடனேயே மகிழ்ச்சியாக வாழலாம்.

அப்படி இல்லாமல், கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது நீரிழிவு நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும். அதன் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. மூளை, நரம்பு மண்டலம், கால்கள், இதயம், சிறுநீரகம், கண்கள் போன்றவை பாதிக்கப்படலாம். அதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.

ஏன் பக்க விளைவு?

நீரிழிவு நோய் இருப்பது தெரியாமல், அதனால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தே பாதிப்புக்கு உள்ளாகுபவர்களை என்ன செய்வது? இவர்கள் நீரிழிவு நோய்க்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரையைச் சாப்பிட்டு இருப்பார்கள். பிறகு வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லை, வயிற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை, நேரத்துக்கு மாத்திரையை ஒழுங்காகச் சாப்பிட முடியவில்லை, என் வேலை சூழ்நிலை அப்படி என்று மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, பின்னர்ப் பக்கவிளைவுகளால் துன்பப்படுவார்கள்.

சிலர், ‘உணவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன், வாக்கிங் போகிறேன். இதுவே போதும்’ என்று அவர்களாகவே முடிவு செய்து மாத்திரையை நிறுத்திவிடுவார்கள். இன்னும் சிலர் ‘அந்த மருந்தைச் சாப்பிட்டால் சரியாகும் - இதைச் சாப்பிட்டால் உடனே சர்க்கரை குறையும்’என்று யார்யாரோ சொல்வதைக் கேட்டு, கண்ட கண்ட மருந்தை இவர்கள் போக்குக்குச் சாப்பிடுவார்கள். இப்படி முறையான சிகிச்சையைத் தவிர்ப்பவர்கள் அனைவரும், சில காலம் கழித்துப் பக்கவிளைவுகளால் துன்பப்படுவார்கள். இது பலருக்கும் பார்வைப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளாக நீள்கிறது.

விழித்திரை பாதிப்பு

நீரிழிவு நோயால் கண்புரை, கண் நீர்அழுத்த உயர்வு, நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு முதலியன ஏற்படலாம். பார்வை நரம்புகளும் பாதிக்கப்படலாம். இதில் நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ள அனைவருக்குமே ‘நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட வாய்ப்புண்டு. நீரிழிவு நோயின் கால அளவை பொறுத்துக் கண்ணில் பாதிப்பு ஏற்படுகிறது. கண்ணின் விழித்திரை நல்ல நிலையில் இருந்தால்தான், அதில் விழும் உருவங்கள் தெளிவாகத் தெரியும். ஆனால் விழித்திரைப் பாதிப்பில், விழித்திரைக்கான ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு விழித்திரை பாதிக்கப்படுவதால் பார்வை குறைவு ஏற்படுகிறது. இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், இவ்வாறு ஏற்பட்ட பார்வையிழப்பை மீட்கவே முடியாது. சில நேரம் விழித்திரை மற்றும் பின் கண்ரசத்தில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகலாம். இந்தப் புதிய ரத்தக் குழாய்களில் சில நேரம் ஏற்படும் சுருக்கத்தால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிந்தும் (Retinal Detachment) பார்வையிழப்பு ஏற்படலாம்.

லேசர் மருத்துவம்

நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. லேசர் மருத்துவத்தின் மூலம் விழித்திரை ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவைச் சரிசெய்து, கூடுதல் பாதிப்பு ஏற்படாமல் பார்வையைப் பாதுகாக்கலாம். ஆனால், ஏற்கெனவே இழந்த பார்வையை மீட்க முடியாது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்துச் சிலருக்கு விட்ரெக்டமி என்ற அறுவைசிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, கண்களையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்துவருவதன் மூலம் பாதிப்பு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

வருமுன் காப்பது

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது நீரிழிவு நோய் இருக்கிறதா என்று ஆய்வு செய்துகொள்வது நல்லது. இந்த வயதில் கண்ணில் அரிப்பு, கண்ணில் தொற்று, கண்கட்டி, கண்ணில் நீர் கசிவு, பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டாலும், நீரிழிவு நோய் இருக்கிறதா என்று ஆய்வு செய்துகொள்வது நல்லது.

நீரிழிவு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவம் செய்துகொள்வது சற்றுக் கடினமான ஒன்றுதான். அன்றாட பணிகளுக்கு இடையில் அடிக்கடி சலிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதன்மூலம் பக்கவிளைவுகள் இன்றி நலமாய் வாழலாம் - பார்வையையும் பாதுகாக்கலாம் எனும்போது ஏன் அலட்சியமாய் இருக்க வேண்டும்?

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

மோர் இன்றி அமையாது உலகு


கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்...

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு - குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும் மோர்

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

திரிதோஷ சமனி

“மோருண வளிமுதன் மூன்றையுமடக்கி” எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், மோரானது வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் என்று குறிப்பிடுகிறது. உடலில் உண்டாகும் வீக்கம், ரத்தக் குறைவு, பேதி, பசியின்மை, தாகம், உடல் வெப்பம் போன்றவற்றுக்குப் பசுவின் மோர் சிறந்தது. கறிவேப்பிலைப் பொடியை மோரில் கலந்து பருக, பசி அதிகரிப்பதோடு ரத்தச் சிவப்பணுக் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நீர் சுருக்கி, மோர் பெருக்கி

கிருமிகளை அழிக்க, நீரை நன்றாகக் காய்ச்சிச் சுண்ட வைத்தும், மோரின் குணங்களை முழுமையாகப் பெற, மோருடன் அதிக நீர் சேர்த்து, நீர் மோராகவும் அருந்த வேண்டும் எனும் அறிவியலை `நீர்சுருக்கி மோர்பெருக்கி’ என்று அன்றே ஓலையில் செதுக்கினார் தேரையர். மோரின் புளிப்புத் தன்மை நீங்கும் அளவுக்கு நீர் சேர்த்துப் பருகுவதால், புளிப்பு சுவை அதிகரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் ஏற்படாது என்பதே சித்தர்களின் சிந்தனை.

அனுபானம்

மோரின் சிறப்பை அறிந்தே, பல சித்த மருந்துகளைத் தயாரிக்க மோர் பயன்படுத்தப்படுகிறது. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளின் அனுபானமாகவும் (Vehicle) மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின்போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது.

வெயில் காலங்களில்

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம். மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

நஞ்சகற்றி

மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடலில் சேர்ந்த கழிவைச் சிறுநீரின் மூலம் வெளியேற்றும் குணம் மோருக்கு உண்டு. சில வகை உணவுப் பொருட் களுக்கு, மோரானது நஞ்சு முறிவுப் பொருளாகவும் பயன்படுகிறது.

மோருடன் வரவேற்போம்

ஆங்காங்கே `மோர்ப் பந்தல்கள்’ அமைத்து மக்களின் நலம் காத்த வரலாற்று குறிப்புகள் நம்மிடம் ஏராளம் உண்டு. பல ஆயிரம் வருடங்களாக வெயில் காலத்தை எதிர்கொள்ள ஏற்படுத்தப்பட்ட விருந்தோம்பல் முறை மோர்ப் பந்தல்கள். ஆனால் இன்றைக்கு மோர்ப் பந்தல்கள் குறைந்து, செயற்கை குளிர்பானங்களின் விற்பனை அதிகமாகிவிட்டது. இனிமேலும் விழித்துக்கொள்ளாவிட்டால், நம் ஆரோக்கியமும் பாரம்பரியமும் முற்றிலும் தொலைந்து போகலாம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

SC refuses to budge, NEET-1 today

NEW DELHI: The first phase of the single entrance test NEET for admissions to MBBS and BDS courses across the country will be held on Sunday as the Supreme Court on Saturday refused to accord an urgent hearing of a plea seeking modification of its earlier order.



A three-judge bench headed by Chief Justice T S Thakurdid not allow the plea seeking urgent hearing for modification of the April 28 order passed by another bench with regard to the National Eligibility Entrance Test (NEET).

"Nothing will happen in the meantime. Matter had been heard by the bench and it is over for now. Please allow the examination to be conducted," the bench, also comprising Justices A K Sikri and R Banumathi said.

The observation came when lawyers, representing some students, said that the order on NEET needed to be modified as students who had prepared for the state-level entrance exams will find it difficult to prepare for the NEET in such a short span of time. 
The apex court, for the time being, refused to entertain the plea and asked the lawyers concerned to file an application which would be heard by the regular bench, hearing the case. The SC had yesterday said that the entrance test for admission to MBBS and BDS courses for the academic year 2016-17 will be held as per the schedule through the twophased common entrance test NEET on May 1 and July 24.


Centre had yesterday approached the apex court for modification of its April 28 order and had sought that state governments and private colleges be allowed to hold separate entrance examinations for MBBS and BDS courses for 2016-17 saying there was a lot of confusion arising out of it.
The SC had in its order cleared the decks for the holding of NEET in two phases for the academic year 2016-17 in which around 6.5 lakh candidates are likely to appear.


It had approved the schedule put beforefor treating All India Pre-Medical Test fixed for May 1 as NEET-1. It had said those who had not applied for AIPMT will be given the opportunity to appear in NEET-II on July 24 and the combined result would be declared on August 17.

அதிரடி யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்க அரசு திட்டம் நிகர்நிலை பல்கலைகளுக்கு கட்டுப்பாடு தளர வா ய்ப்பு

புதுடில்லி: நிகர்நிலை பல்கலைகள் தொடர்பான சில விவகாரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு சரியாகக் கையாளவில்லை என, மத்திய அரசு கருதுகிறது; எனவே,
அதன் அதிகாரங்களை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் உள்ள, 'பிட்ஸ்' எனப்படும், பிர்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையம், மும்பை, நார்ஸி மாஞ்சி மேலாண்மை கல்வி மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வி மையம் உள்ளிட்ட புகழ்பெற்ற சில கல்வி நிறுவனங்களுடன், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு எதிராக, யு.ஜி.சி., உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இவற்றை எதிர்த்து, இக்கல்வி நிறுவனங்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

யு.ஜி.சி., கடிதம்

கடந்த ஆண்டு, நவம்பரில், கல்வி மைய வளாகத்துக்கு வெளியே செயல்படும், மையங்களை மூடிவிடுமாறு, 10 கல்வி நிறுவனங்களுக்கு, யு.ஜி.சி., கடிதம் எழுதியது. இந்த நிறுவனங்கள், விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை எனக் கூறி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு கடிதங்கள் எழுதியுள்ளன. யு.ஜி.சி.,யின் உத்தரவுக்கு எதிராக, பிட்ஸ் கல்வி மையம், கோர்ட்டில், இடைக்கால தடையுத்தரவு பெற்றுள்ளது.மத்திய அரசின் நிர்வாக உத்தரவு மூலம், நிகர்நிலை பல்கலையை உருவாக்குவதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும், 123 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. நிகர்நிலை பல்கலைகள் விஷயத்தில், யு.ஜி.சி., அத்துமீறி நடப்பதாக,
மத்திய அரசு கருதுகிறது. இது பற்றி, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'யு.ஜி.சி., பிறப்பித்த உத்தரவுகளால், அதிகளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த குழப்பங்களை சரிசெய்ய வேண்டிய தருணம் வந்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நம்புகிறது' என, தெரிவித்தார். மற்றொரு மூத்த அதிகாரி கூறியதாவது:நிகர்நிலை பல்கலைகள் மீதான புகார்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. 2014ல், 268 புகார்கள் கூறப்பட்டன. 2015ல், புகார்களின் எண்ணிக்கை, 112 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்தில், உயர்கல்வித்
துறை செயலர், யு.ஜி.சி., நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில்,
விவாதிக்கப்பட்ட பிரச்னை குறித்து ஆராய, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது. அக்குழு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும். நிகர்நிலை பல்கலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆராயப்பட வேண்டும். கல்வித் துறையில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும்,
சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சிறப்பான கல்வி அளிக்கும் நிறுவனங்களை பாராட்டி, ஊக்கப்படுத்த வேண்டும். யு.ஜி.சி.,க்குள்ள அதிகாரங்களை, என்.ஏ.ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் தர அங்கீகார கவுன்சில், மறுபரிசீலனை செய்யலாம். கல்வி
நிறுவனங்களின் தரத்தை, வெகு காலமாக ஆராய்ந்து, அவற்றுக்கு தரச்சான்றுகளை, என்.ஏ.ஏ.சி., வழங்கி வருகிறது.

பரிசீலனை


யு.ஜி.சி., ஆய்வுக்கான நிபுணர்களை தேர்வு செய்யும் நடைமுறை பற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, யு.ஜி.சி.,யின் நடவடிக்கைகளில் தவறு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அது, தவறான தகவல்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, யு.ஜி.சி.,யின் அதிகாரங்களை குறைக்கும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு மூத்த அரசு அதிகாரி கூறினார்.


அரசு நடவடிக்கை


நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிகர்நிலை பல்கலைகளின் நிதிக் குழுக்களில், யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவோரின் பெயர்களை அளிக்குமாறு, ஏற்கனவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கேட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைகளின் மேலாண்மை குழுக்களுக்கு, யு.ஜி.சி.,யின் பிரதிநிதிகளை அனுப்பும்போதும், அதேபோன்ற முறையை

Advertisement

பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானி உறுதி

நாடு முழுவதும் உள்ள, 300க்கும் மேற்பட்ட பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்,
யு.ஜி.சி.,யின் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், கடந்த மார்ச்சில் புகார் தெரிவித்துள்ளன. அவற்றிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் ஸ்மிருதி இரானி
உறுதியளித்துள்ளார்.இது குறித்து, இந்திய கல்வி மேம்பாட்டு சமூகம் என்ற அமைப்பின் தலைவர், ஹரிவன்ஷ் சதுர்வேதி கூறுகையில், ''யு.ஜி.சி., போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சிறப்பான வகையில் செயலாற்ற
உதவுபவையாக இருக்க வேண்டும். பல்கலையுடன் இணைப்பு பெற்ற கல்லுாரிகள் சிறப்பான வகையில் செயல்பட்டால், அவற்றிற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்,'' என, தெரிவித்தார்.

விதிமுறை என்ன?


கடந்த, 2010ல் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிகர்நிலை பல்கலைகளின் செயல்பாட்டை, யு.ஜி.சி., எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம்; பல்கலைகளில் அளிக்கப்
படும் வசதி வாய்ப்புகளை, மதிப்பீடு செய்யலாம். நிபுணர் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை, நிகர்நிலை பல்கலைகள் பின்பற்றுகின்றனவா என்பதை, யு.ஜி.சி., உறுதி செய்யலாம்.

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...