Wednesday, May 18, 2016

ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனம் சரிதானா?- ஓர் அலசல் பார்வை

Return to frontpage

'ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்' என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சமீபகாலமாக விமர்சனம் வைத்து வருகிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் ஒன்று, 'வட்டி விகிதத்தை அதிகரிக்கிறார் அல்லது குறைக்க மறுக்கிறார். இதனால் பொருளாதாரம் பின்னடைவு கண்டு வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது'. இரண்டாவது, 'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை குறைக்க மறுக்கிறார்' என்பது.

மேலும், நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக அடிப்படையிலான மொத்த விற்பனை விலை குறியீடிலிருந்து மக்கள் நுகர்வுத்திறன் சார்ந்த நுகர்வோர் விலை குறியீடுக்கு அவரது இலக்கு தாவியுள்ளது; மொத்த விற்பனை விலை குறியீடில் அவர் கவனம் குவிந்திருந்தால் பொருளாதாரம் முன்னேறியிருக்கும் - சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நசிவடைந்திருக்காது' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இவையெல்லாம் அவர் கூறும் பொருளாதார காரணங்கள்.

ஆனால், 'அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவர் மனதளவில் இந்தியராக இல்லை, அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருக்கிறார்' என்றெல்லாம் கூறுவது பாஜகவின் மைய அரசியல் பார்வை என்பதைத் தவிர வேறில்லை.

அதேவேளையில், சுப்பிரமணியன் சுவாமி கூறும் அரசியல் ரீதியான பார்வையை விடுத்து, நாம் அவரது பொருளாதார காரணங்களில் ஏதாவது சாராம்சம் உள்ளதா என்பதை மட்டும் ஒரு முதற்கட்ட அலசலுக்கு உட்படுத்துவோம்.

செப்டம்பர் 2013-ல் ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.70-ல் இருந்தது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டின் இறுதி காலாண்டிலிருந்து பணவீக்க விகிதம் இரட்டை இலக்கமாக அதிகரித்திருந்தது.

இதனையடுத்து பணவீக்க விகிதத்தை குறைப்பதும், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு செல்லாமலும் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக கைவசம் இருந்த உடனடி வழி வட்டி விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுக்குள் அதிக முதலீட்டைக் கொண்டு வருவது. இந்தத் திட்டம் வெற்றி கண்டதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறாமல் தடுக்கப்பட்டதோடு, சில மாதங்களில் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு வரத்து ஏற்பட்டது.

இதனைச் செய்யாதிருந்தால் பணவீக்க விகிதம் உச்சத்திற்குச் சென்று உலகப் பொருளாதாரம் சந்தித்த நெருக்கடியை இந்தியாவும் சந்தித்திருக்கும். ரகுராம் ராஜன் இந்த இடத்தில்தான் இந்திய பொருளாதாரத்தைக் காத்தார். வட்டி விகிதத்துக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பது உலக பொருளாதார நிபுணர்களின் கருத்து. இது ஆளுங்கட்சியின் பிரச்சார எந்திரங்கள் செய்யும் வேலை. வட்டி விகித குறைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் வரலாற்றுச் சான்றுகளுடனான கருத்தாகும்.

மேலும், நிதிநிலைமைகள் ஓரளவுக்கு உறுதித்தன்மை அடைந்து வட்டி விகிதத்தையும் சீராக வைத்திருந்ததன் விளைவாக ஜனவரி 2015-க்குப் பிறகு வட்டி விகிதத்தை 150 அடிப்படை புள்ளிகள் (1.5%) குறைத்தார், அதாவது அவர் அதிகரித்ததை விட அதிகமாகக் குறைத்தார். பொறுப்பேற்கும் போது வட்டி விகிதம் 7.25% ஆக இருந்தது, அதனை 8% ஆக அதிகரித்தார். 2014-ல் அதனை அப்படியே வைத்திருந்தார். இதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி சாடுகிறார். ஆனால் ஜனவரி 2015-க்குப் பிறகு 6.5% ஆகக் குறைத்தார். அவர் இதனை ஏன் செய்தார் என்றால் இரட்டை இலக்க பணவீக்க விகிதம் 6%-க்கும் குறைவாக இறங்கியதாலேயே.

இந்த வட்டி விகிதக் குறைப்பு 2 ஆண்டுகால வறட்சி நிலைமைகளுக்கிடையே செய்யப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மாறாக, பொருளாதாரம் மந்தமடைவதற்குக் காரணம் நிதியமைச்சர் அரசு செலவீடுகளைக் குறைத்ததே என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

வட்டிக்குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்ற மாயை:

பணவீக்கம் என்பது பொருளாதார வீழ்ச்சியின் எதிர்ப்பதம் அல்ல. பணவீக்கம் என்பது பணவாட்டம் என்பதன் எதிர்ப்பதமே. பணவீக்கம் என்பது பொத்தாம் பொதுவாகக் கூற வேண்டுமென்றால் ‘விலைவாசி உயர்வு’ என்பதே. பொருட்களின் சராசரி மதிப்பை ஒப்பிடும்போது பணத்தின் மதிப்பு குறைவது பணவீக்கத்தின் ஒரு விளக்கம் என்று வைத்துக் கொள்வோம். ரூபாய் மதிப்பிழக்கிறது என்று கூறினால் நமக்கு உடனே எதனுடன் ஒப்பிடும்போது என்ற கேள்வி எழும். உதாரணத்திற்கு பால் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்தால் ஒன்று ரூபாய் தன் மதிப்பை சற்றே இழந்துள்ளது என்றோ, பாலின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றோ கொள்வோம். அதாவது, நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் ரூபாயின் சராசரி அதிகரிப்பே பணவீக்கம்.

இதற்கும் பொருளாதார மந்த நிலை, வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பில்லை. விலைவாசி குறைகிறது என்றாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. விலைவாசி அதிகரித்தாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. அதாவது இதற்கும் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை. எனவே பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்ற அவசியமான நடவடிக்கையினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்பது பிரச்சார உத்திதானே தவிர பொருளாதார கோட்பாடு அடிப்படைகள் இல்லாதது.

வட்டி விகிதத்தை குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது அமெரிக்காவில் தப்பும் தவறுமாக கையாளப்பட்ட ஒரு கொள்கை. பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஏகப்பட்ட முறை வட்டி விகிதங்களை குறைத்ததற்கான வரலாறு உண்டு. பெடரல் ரிசர்வ் சேர்மன் கிரீன்ஸ்பான் எண்ணற்ற வட்டிவிகிதக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அதனால் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. மாறாக, அதிபர் புஷ் வரிவிதிப்பை கடுமையாகக் குறைத்தே அதற்குத் தீர்வு கண்டார்.

ஆனாலும் அமெரிக்கா வட்டி விகிதக் குறைப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேயில்லை. பெடரல் ரிசர்வ் சேர்மன் பெனாங்கேயும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் நடந்தது 2008-ம் ஆண்டு பொருளாதார நசிவு.

அதாவது, வட்டி விகித குறைப்பின் மூலம் அமெரிக்கர்கள் கிரெடிட் கார்டுகளில் அதிக அளவில் செலவு செய்து கடனாளி ஆனதுதான் மிச்சம் என்று எஸ்.குருமூர்த்தி போன்றவர்கள் எச்சரித்து கட்டுரை மேல் கட்டுரையாக எழுதியுள்ளனர். அதாவது சேமிப்பேயில்லாமல் செலவு செய்வது, பொருட்களை வாங்கிக் குவிப்பது. காரணம் வட்டி விகிதம் குறைவானது. இது ஒரு மாயையான பொருளாதார வளர்ச்சியே. ஒரு விதமான மாயையான செல்வச் செழிப்புக்கும் ஊக செல்வச்செழிப்புக்கும் அமெரிக்கர்களை இட்டுச் சென்றது. இது உண்மையான செல்வச் செழிப்பல்ல.

அதாவது கோட்பாட்டு அடிப்படையில் ஒரு வர்த்தகத்திற்கு 100 கோடி தேவைப்படுகிறது என்றால் வட்டி குறைவாக இருந்தால் அவர்கள் கடன் வாங்குவார்கள். அதேபோல் கடன் நுகர்வோரும் கடன் வாங்கி செலவழிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே இதுதான் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறையில் இதன் இன்னொரு பக்கத்தை கவனிக்கத் தவறுகிறோம். பணம் கொடுப்பவர்கள் பகுதிக்கு ஏற்படும் இழப்பை கவனிக்கத் தவறுகிறோம். அளிக்கும் பணத்திற்கு ஏற்ப ரிடர்ன் கிடைக்கவில்லையெனில் பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழும், இதனால் பொருளாதார மந்த நிலையே ஏற்படும்.

எனவே வளரும் பொருளாதாரத்துக்குத் தேவை அதிக பணப்புழக்கம். வட்டி விகிதங்களைக் குறைப்பது பொருளாதாரத்தில் கூடுதல் பணத்தை அளிப்பதாகாது. இது கோட்பாட்டு அடிப்படையிலும் செயல்பாட்டு தளத்திலும் பொய்த்துப்போனதை அமெரிக்க வட்டிக் குறைப்பு வரலாற்றை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் தெரியவரும்.

இன்னும் சொல்லப்போனால் அதிக வட்டி விகித காலங்களில் கூட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் தருணங்கள் இருந்திருக்கின்றன. மாறாக, குறைந்த வட்டி விகிதங்களினால் ஜிடிபி ஊக்குவிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் இல்லை.

ஒரு பொருளாதரத்தை ஊக்குவிப்பது என்றால் என்ன? அதனை மேலும் பரவலாக்குவது. ஒரு பரவலான பொருளாதாரத்துக்கு அதிக பணம் தேவை. எனவே பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அதிக பணம்.

எனவே, வட்டி விகிதத்தை ரகுராம் ராஜன் அதிகரித்தது தவறு என்ற பார்வையும் தவறு. வட்டி விகிதத்தைக் குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியுறும் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. பொருளாதார தோல்விகளுக்கு ஆட்சி செய்யும் தலைமைகளின் கொள்கைகளே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, அரசு செலவினத்தை குறைக்காமல் அதிகரிக்க வேண்டும்; வேலைவாய்ப்பை நேரடியாக அதிகரிக்க அரசு செலவிட வேண்டும். நுகர்வோரிடத்தில் தடையில்லா பணப்புழக்கம் ஏற்படவும் அரசு செலவினத்தை கஞ்சத்தனம் செய்தவதாகாது. வரிவிதிப்பை குறைக்க வேண்டும். விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இந்தப் பிரிவில் அரசின் செலவினங்களைக் குறைத்து கஞ்சப்பொருளாதாரம் செய்யக்கூடாது. மக்களின் கல்வி, மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும். பொருளாதாரத்தை பரவலாக்க வேண்டும் இவற்றுக்கான கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே பால் குருக்மேன் போன்ற பொருளாதார நிபுணர்கள் ஆய்வு ரீதியாக கண்டடைந்த முடிவு.

எனவே. தொடர்புபடுத்த முடியாத வட்டி விகித - பொருளாதார வளர்ச்சி / பின்னடைவு பார்முலாவை தொடர்புபடுத்தி, அதற்கு ரகுராம் ராஜனைக் குறைகாண்பதில் எந்தவிதமான ஆய்வுபூர்வமான பொருளாதார அடிப்படைகள் இல்லை என்பதே பல பொருளாதார ஆய்வுகள் நமக்கு எடுத்துரைப்பதாகும்.

ஆர்.முத்துக்குமார் - தொடர்புக்கு muthukumar.r@thehindutamil.co.in

'108' ஆன அரசு பஸ்: சென்னையில் 'மனிதத்துக்கு' ஒருநாள்!

Return to frontpage

சென்னையில் மனிதம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உணர்த்துவது உண்டு. கடந்தாண்டு டிசம்பர் மழை மனிதம் மிக்க மனிதர்கள் எவ்வளவு பேர் கொண்டது சென்னை என்பதை உலகுக்கு உணர்த்தியது.

'சென்னையில் ஒரு நாள்' படத்தைப் போல ஒரு பிரசவ வலியால் துடித்த பெண்ணை, அரசு பஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அதிவேகத்தில் ஓட்டிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அந்த பேருந்தில் பயணித்த இளவரசன் சுகுமாரிடம் பேசிய போது அவர் சொல்லிய வார்த்தைகள் அனைத்துமே ஆச்சர்யமூட்டுபவை. அரசு பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் அப்பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

அன்று நடந்த சம்பவத்தை பகிர்கிறார் இளவரசன் சுகுமார்:

எனக்கு காஞ்சிபுரம் சொந்த ஊர். தாம்பரம் சானிட்டோரியத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்தில் ஏறினேன். அடுத்த நாள் தேர்தல் என்பதால் கடுமையான கூட்டம் இருந்தது. தாம்பரம் தாண்டி படப்பைக்கு கொஞ்சம் முன்பு ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அலறல் சத்தம் கேட்டது.

கடுமையான கூட்டத்தில் நான் பின்னால் இருந்தேன். அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது என தெரிந்தது. அங்கிருந்து பிரசவம் பார்க்கும் மருத்துவமனையை நோக்கி காஞ்சிபுரத்துக்கு செல்ல 1 மணி நேரமாகும் என்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவருமே சீக்கிரமாக செல்ல திட்டமிட்டார்கள்.

பயணிகள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இருந்து 200 அடி தாண்டி தான் பேருந்தை நிறுத்தினார்கள். உடனடியாக இறங்க வேண்டும், வேறு எங்குமே பேருந்து நிற்கவில்லை. இந்த சூழலில் இன்னொரு நடத்துனர் அப்பெண்மணிக்கு பக்கத்தில் இருந்துகொண்டு தண்ணீர் கொடுத்து கவனமுடன் பார்த்துக்கொண்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் பேருந்தை மிக வேகமாக இயக்கினார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் 200 அடியைத் தாண்டி நிறுத்திவிட்டு, இறங்க வேண்டியவர்கள் இறங்கியவுடன் பேருந்தும் வேகமாக கிளம்பியது. ஒரு நிறுத்தத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் பேருந்தை நிறுத்த கைகாட்டினார். அப்போது கூட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.

காஞ்சிபுரம் நெருங்கும் முன்பு நடத்துனர் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்தார். ஆம்புலன்ஸ் ரங்கசாமி குளம் என்ற இடத்தில் தயாராக இருந்தது. இதற்கு முன்பே பிரசவ வலியால் துடித்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் போன் செய்து விட்டதால் அவர்களும் காத்திருந்தனர். அப்பெண்ணை ரங்கசாமி குளத்தில் இறங்கிவிடும் போது கூட "அம்மா.. போயிருவீங்களா. கூட யாரையும் அனுப்பட்டுமா?" என்று கேட்டார் ஒட்டுநர். என் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என நன்றி கூறிவிட்டு இறங்கி சென்றார்.

அந்த ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பெயரை எல்லாம் நான் பார்க்கவில்லை. அவர்களுடைய மனிதம் மட்டும் என்னுடைய கண்ணிலும், நெஞ்சிலும் தெரிந்தது என்று கூறிய இளவரசன் சுகுமாரன் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவுக்கு 84,482 விருப்பம் தெரிவித்தனர். 18 ஆயிரம் பேர் பகிர்ந்திருந்தனர். அவை எல்லாம் எனக்கு எண்களாகத் தெரியவில்லை. நான் கண்டுகொண்டது மனிதர்களையும், மனிதத்தையும் மட்டுமே.

Tuesday, May 17, 2016

இனோவா’ போய் ‘கிறிஸ்டா’ வந்தது

Return to frontpage




பன்முக பயன்பாட்டு வாகன பிரிவில் தனி முத்திரையை பதித்த வாகனம் இனோவோ. ஆனால் இனி இனோவா நம் கைகளுக்கு கிடைக்கப்போவதில்லை. பயப் பட வேண்டாம் இனோவாக்கு பதிலாக புதிய இனோவா கிரிஸ்டாவை கொண்டு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் புதிய இனோவா கிறிஸ்டாவை காட்சிப்படுத்தியது டொயோடா நிறுவனம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தாலும் கிறிஸ்டாவுக்கான முதல் கட்ட அறிமுகம் சென்னை, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 10 நாட்களுக்குள்ளேயே 15,000 கார்களை முன்பதிவு செய்துள்ளனர். அதுவும் டாப் எண்ட் கார்களையே அதிகம் முன்பதிவு செய்துள்ளனர். அந்த அளவுக்கு இனோவா கிறிஸ்டா வாகன பிரியர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.

ஏனெனில் பன்முக பயன்பாட்டு வாகனத்தின் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்தது இனோவா. அதுமட்டுமல்லாமல் தோற்றத்திலும் பயன்பாட்டிலும் அனைவரையும் ஈர்த்த வாகனம். பழைய இனோவாவை அப்படியே தொழில்நுட்ப ரீதியாகவும் தோற்றத்திலும் அப்டேட் செய்து புதிய வெர்ஷனாக கிறிஸ்டாவை தயாரித்துள்ளனர். பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் இந்த வாகனம் வெளிவந்துள்ளது.

ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட், ஜி என நான்கு மாடல்களில் தற்போது இனோவா கிறிஸ்டா வெளிவந்துள்ளது. இனோவா கிறிஸ்டாவுக்கு சிறப்பம்சமே புதிய இன்ஜின்தான் என்கிறார்கள். 2.8லிட்டர் தானியங்கி டீசல் இன்ஜின் மற்றும் 2.4லிட்டர் டீசல் இன்ஜின் என இரு வகைகளில் வந்துள்ளது.

புதிய இனோவா கிறிஸ்டாவின் நீளம் 4735 மிமீ, அகலம் 1830 மிமீ, உயரம் 1795 மிமீ. பழைய இனோவாவை விட பெரியதாக இருக்கும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெளிப்புறத் தோற்றத்திலும் தானியங்கி எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் என மாற்றங்களை செய்திருக்கிறது.

7 அங்குல தொடுதிரை, பின்புற சீட்டில் லேப்டாப் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கேபின் வசதி, பின்பக்க சீட்டை எளிதாக நகர்த்திக் கொள்ளும் வசதி, சூழலுக்கு ஏற்ப குளிர்நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் நகர்த்திக் கொள்ளும் வசதி என உட்புறத் தோற்றத்தில் கவரக்கூடிய அளவிற்கு மாற்றங்களைச் செய்துள்ளது. பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள இனோவா கிறிஸ்டாவின் விலை ரூ. 14 லட்சத்திலிருந்து ரூ. 21 லட்சம் வரை இருகிறது. பழைய இனோவாவை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் பயன்பாட்டு வசதிகள் கிறிஸ்டாவில் அதிகம் என்கின்றனர்.

சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்ற டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை குழுமத்தின் துணைத்தலைவர் பி. பத்மநாபன், ‘பன்முக பயன்பாட்டு வாகனம் என்பதை மாற்றி பன்முக செயல்திறன் என்ற வகையில் இனோவாவின் இரண்டாம் தலைமுறையான கிறிஸ்டாவை வடிவமைத்துள்ளோம். எங்க ளுக்கு 6 லட்சம் வாடிக்கை யாளர்கள் இருக்கின்றனர். இது இன்னும் அதிகமாகும். வாடிக்கையாளர் திருப்தி சுற்றுச்சூழல் என இரண்டையும் கருத்தில் கொண்டே நாங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுகிறோம்' என்று தெரிவித்தார்.

ஆடம்பரம், செயல்திறன், அழகான வடிவமைப்பு என கிறிஸ்டா இதே பிரிவில் உள்ள மற்ற வாகனங் களை விட கிறிஸ்டா வாடிக்கை யாளர்களுக்கு முழு திருப்தியை தரும் என்பதில் ஐயமில்லை. முந்தைய இனோவாவை விட விற்பனையில் சாதனை படைக்குமா என்பதை பொ றுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தனது காரில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 66: கேட்காதவர்களுக்கும் உதவியவர்!

M.G.R. தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்த மான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி அலுவல கத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் கார் வந்து கொண் டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்கார ருக்கு சொந்தமான குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும் பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில நாட் கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக் காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்கார ரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என் றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி. நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து வணங்கி னார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை அடக் கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற் குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளி களில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

‘‘இந்த உலகத்துலே ஏழைங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சவங்க உன்னை மாதிரி வேற யாரும் இல்லப்பா!’’

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்



எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை.

Monday, May 16, 2016

This Kerala man casts his vote with feet


This Kerala man casts his vote with feet

TOI

KOZHIKODE: Those who've been looking for excuses to not cast your vote should learn a lesson from 25-year-old Abdu Samad P N C of Muzhangaloor near Pallikkal in Malappuram district.

While voting is just a simple press of a button for the around 2.6 crore electorate of the state, Samad has to summon his gymnastic skills at the booth to vote with his feet.

Samad has not missed any election in seven years. The student of MA Sociology had his hands amputated after he was nearly electrocuted at age 11.Nevertheless, he has been at the forefront of the campaign and has visited almost all houses in his ward seeking votes for the candidate he supports."Every polling day has presented me with a memorable experience. It is a day when I feel that my voice too counts," he said. Recounting his poll day experiences, Samad says often there is a flutter and confusion among officials when he turns up to vote. "Last time an official even checked the residual stump on my shoulder by lifting my shirt. As I don't have fingers, they put the indelible ink on the second toe of my left leg and I sign the register with my leg."

Samad said he would balance himself on one leg and would lift his right leg to access the electronic voting machine and press the voting button with his second toe. "Selecting the name of the candidate on the EVM is no big deal as I skim through over 460 contacts in my mobile with my toes," he added. Samad has a few words for those who make excuses for not voting."I think you have no excuse to skip voting. Those who say that they would not vote are either busy or disillusioned with politics, or the candidates fail to excite them. What they don't understand is that vote is the only way to change it all," Samad said.

He welcomed the initiatives by the election commission to make polling booths more accessible to the disabled.

Pulikkal panchayat member K M Ali said that Samad's enthusiasm has been contagious. "Whether rain or shine, he is one of the first to queue up at the polling booth," Ali said.

ஆங்கிலம் அறிவோமே - 109: பேட்டை ராப்பா இல்லை ஹிப் ஹாப்பா?


மீண்டும் சில rebusகளை அளிக்கலாமே என்று பல வாசகர்கள் விருப்பப்பட்டதால் இதோ அவ்வகைப் புதிர்கள் இரண்டு. உங்கள் விடைகளை உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயருடன் உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

1. STANDS

0 2 3 4 5 6

2. L1IFE1TIM1E

------------------------------------

என் உறவினர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘This house is bigger than Ramanan’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடலில் தெளிவு இருக்க வேண்டும்.

ஒரு வீட்டைப் பார்க்கிறீர்கள். ரமணனின் வீட்டைவிட இது பெரியது என்றால் This house is bigger than Ramanan என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் இந்த வீடு ரமணனைவிட (அவர் வீட்டைவிட அல்ல) பெரியது என்றாகிவிடும். எனவே This house is bigger than the house of Ramanan என்றோ This house is bigger than that of Ramanan என்றோ கூற வேண்டும்.

The speed of the new car is higher than the old car என்பதுபோல் குறிப்பிடுபவர்கள் உண்டு. ‘பழைய காரைவிட’ புதிய காரின் வேகம் அதிகம் என்பது தவறு. பழைய காரின் வேகத்தைவிட புதிய காரின் வேகம் அதிகம் என்பதுதானே சரி? எனவே The speed of the new car is higher than that of the old car. இங்கே speed என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை ‘that’ என்ற வார்த்தையின் மூலம் குறிக்கிறோம்.

------------------------------------

“ட்ரூப் என்றால் குழு என்றுதானே அர்த்தம்?’’. இந்தக் கேள்விக்கு இப்படி விளக்கமளிக்கலாம்.

Troupe என்ற வார்த்தையை பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை மகிழ்விக்கும் நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சர்க்கஸ் கலைஞர்கள் ஆகியோரின் குழுவைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

Troop என்பது பொதுவாக போர்ப் படையைக் குறிக்கிறது. U.N. peace keeping Troops. குறிப்பிட்ட மக்களையோ, மிருகங்களையோ குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுகிறது. A troop of secret Agents, A troop of mischievous monkeys.

------------------------------------

Silicon, Silicone இரண்டும் ஒன்றா?

Silicon என்பது ஒரு தனிமம். ஆக்ஸிஜன், கார்பன் போல. இது மணலின் முக்கியப் பகுதி.

டிரான்ஸிஸ்டர் மற்றும் கணினி சிப்களில் உள்ள முக்கியப் பொருள் சிலிகான். இதனால்தான் அமெரிக்காவில் மின்னணுத் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள இடத்தை சிலிகான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்கிறார்கள்.

Silicone என்பது ஒரு கூட்டுப் பொருள். கார்பன், சிலிகான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் கலந்தது. செயற்கைக் கால்களில் இது ஒரு முக்கியப் பொருள். இதை சிலிகோன் என்று உச்சரிக்கிறார்கள்.

------------------------------------

Neither என்ற வார்த்தைக்குப் பிறகு nor என்பதும், either என்ற வார்த்தைக்குப் பிறகு or என்பதும் அந்த வாக்கியத்தில் இடம்பெறும் என்பது தெரிந்ததுதான். ஆனால் பலரும் தெளிவாகத் தெரிந்து வைத்திராத இதுபோன்ற ஜோடி வார்த்தைகள் (correlatives) உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

No sooner என்ற வார்த்தைகள் இடம் பெற்றால் than என்ற வார்த்தையும் அந்த வாக்கியத்தில் கட்டாயம் இடம் பெறவேண்டும்.

Scarcely என்ற வார்த்தை இடம் பெறும்போது before என்ற வார்த்தை இடம் பெறும்.

Hardly என்ற வார்த்தை இடம் பெற்றால் when என்ற வார்த்தை தொடரும்.

இந்த மூன்றின் பயன்பாடுகளையும் விளக்கும் வாக்கியங்கள் இவை.

1. No sooner had we reached the station, than the train started.

2. We scarcely reached the station before the train started.

3. We had hardly gone to the station when the train started.

------------------------------------

இசை, நடனம் போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு வாசகர் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான ஆங்கில விமர்சனங்களில் காணப்படும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தும், புரியாமலும் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த வார்த்தைகளோடு மேலும் சில (இதே துறையைச் சேர்ந்த) வார்த்தைகளின் பொருளை யும் புரிந்து கொள்வோமே.

Maestro என்றால் மிகவும் மதிக்கத்தக்க இசையை உருவாக்குபவர் என்று அர்த்தம்.

Bass அல்லது Alto என்றால் அது (ஆண்) பாடகரின் குரல் கீழிருந்து மேலே செல்வதை உணர்த்துகிறது (ஆரோகணம்).

பாலே நடனம் என்று நாம் கூறுவதை ஆங்கிலத்தில் Ballate என்பார்கள். ரஷ்யாவில் பிரபலமான இந்த நடனத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் Ballad என்பது கதையை விவரிக்கும் ஒரு பாடல்.

Concert என்றால் கச்சேரி. அதாவது மக்களை நேரடிப் பார்வையாளர்களாகக் கொண்ட மேடை இசை நிகழ்ச்சி.

Fusion என்றால் அது இரண்டு வெவ்வேறு இசை வடிவங்கள் இணைவதைக் குறிக்கிறது. என்றாலும் Jazz மற்றும் Electric Rock இருவகைகளின் இணைப்பைத்தான் Fusion என்று குறிப்பிட்டனர். நம் கச்சேரிகளில் இடம் பெறும் ஜூகல்பந்தி என்பதும் இதுபோன்ற இருவேறு இசை வடிவங்களின் இணைப்புதானே.

ஆப்ரா எனப்படும் Opera என்பது இசை வடிவ நாடகம். பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருக்க மேடையில் தோன்றுபவர்கள் சொந்தக் குரலில் பாடுவார்கள். Diva என்பவர் இதுபோன்ற பிரம்மாண்டமான ஆப்ராவில் பங்குகொள்ளும் முக்கிய பின்னணிப் பாடகி.

Rap என்பது பாப் இசையை அடிப்படையாகக் கொண்ட இசை மற்றும் நடன வடிவம். Hip hop இசையை rap இசை என்பார்கள். மற்றபடி பேட்டை ராப் பற்றி நீங்கள் அறிவீர்கள்!

காபரே நடனம் என்றால் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு ஆடும் ஆட்டம் என்ற பிம்பம் நம் மனதில் பதிந்திருக்கிறது. எனினும் Cabaret என்பது மதுவகம் அல்லது ஹோட்டல்களில் ஆடப்படும் நடனம், அவ்வளவே. எனினும் நடைமுறையில் நம் பிம்பம்தான் சரியானது.

காயர் (Choir) என்பது பாடகர்களின் குழுவைக் குறிக்கிறது. முக்கியமாக மாதா கோவில்களில் இடம்பெறும் இசைப் பாடல்களை கூட்டாகப் பாடுபவர்களைக் குறிக்கிறது. .

------------------------------------

“Fun என்றாலே சிரிப்பும் கும்மாளமும்தானே” என்று தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் நண்பரிடம் ஒரு சில விளக்கங்களைக் கூறுவது அவசியமாகிறது.

Fun என்றால் அதில் நகைச்சுவையோ, வெடிச் சிரிப்போ இருந்தாக வேண்டும் என்பதில்லை. Fun என்றால் உற்சாகம். அதாவது enjoyment. கீழே உள்ள வாக்கியங்களைப் படித்தால் மேலும் தெளிவாகும்.

It was fun seating on the wall near the sea.

It is more fun to go with friends than to go out alone.

Just for fun, we painted our faces.

ஆனால் funny என்ற வார்த்தைக்குப் பொருள் ‘சிரிப்பை வரவழைக்கக்கூடிய’ என்பதாகும். You do look funny in that red dress.

சிப்ஸ்

ஒருவரை Portly என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? அவர் பருமனாக இருக்கிறார் என்று அர்த்தம். Plump.

நெற்றிக்கு இருபுறமும் உள்ள பகுதிகளை எப்படிக் குறிப்பிடுவது? Temples.

Your victory is momentary whereas our victory will be momentous” என்று ஒரு கதையில் படித்தேன். இரண்டு விக்டரிக்களுக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்

Momentary victory என்பது தாற்காலிகமான வெற்றி. Momentous victory என்பது திருப்புமுனையான, மிக முக்கியமான வெற்றி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com


என்னதான் புதிய புதிய துறைகளும் வேலைகளும் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றும் பலர் மனதில் ஐஏஎஸ் ஆகும் கனவு சிறகடித்துப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு வேலைகளில் உச்சபட்ச பதவி அடைய சிவில் சர்வீஸஸ் என்றழைக்கப்படும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதுவது சிறந்த வழி எனலாம். வரும் ஆகஸ்ட் 7-ல் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸஸ் பிரிலிம்ஸ் எனப்படும் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு இதோ வந்துவிட்டது. இந்தத் தேர்வு தொடர்பான தகுதி, பாடத் திட்டம், தேர்வு விவரங்கள், தேர்வு நடத்தப்படும் முறை ஆகியவை குறித்த அத்தனை தகவல்களையும் ஆண்டுதோறும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடுகிறது. அதே போல இந்தாண்டும் வந்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் முதன்மை தேர்வில் இடம்பெறும் விறுப்ப தேர்வு தாளில் தற்போது அமல்படுத்தவில்லை. சென்ற ஆண்டு நடத்தப்பட்ட அதே முறையில்தான் இம்முறையும் நடக்கவிருக்கிறது.

பிரிலிம்ஸ் எழுவது எப்படி?

யுபிஎஸ்சி தேர்வில் உள்ள மூன்று அடுக்கு தேர்வுகளில் முதலாவது பிரிலிம்ஸ். முதல் கட்டத் தேர்வான பிரிலிம்ஸ்-ஐ எதிர்கொள்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் ஆன்லைன் விண்ணப்பத்தை யூபிஎஸ்சி இணையதளமான www.upsconline.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 27 மே 2016. 1076 காலி இடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிலிம்ஸ் தேர்வில் வெல்லத் தொடர்ந்து சொல்லப்படும் மந்திரம், கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜிஎஸ் (General Studies) பொது ஆய்வுகள் தேர்வுத் தாள்களை வைத்துத் தயாராவதுதான். யுபிஎஸ்சி அமைப்பானது சிவில் சர்வீஸ் மட்டுமல்லாமல் எஸ்எஸ்சி, சிஏபிஎஃப் போன்ற பல தேர்வுகளை நடத்துகிறது. அவற்றிலும் பொது ஆய்வுகள் கேள்வித்தாள் உண்டு. சொல்லப்போனால் யுபிஎஸ்சி இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மீண்டும் மீண்டும் கேள்வித் தாளை வடிவமைக்கிறது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகையால் இந்தத் தேர்வுகளின் ஜிஎஸ்- களை வைத்துப் பயிற்சி மேற்கொள்வது உச்சிதம். இந்தக் கேள்வித் தாள்கள் அனைத்தும் யுபிஎஸ்சி இணையதளத்தில் உள்ளன. இதைவிட்டுவிட்டு வியாபார நோக்கத்துக்காகப் பயிற்சி மையங்கள் சொல்லும் அத்தனையும் படித்துக்கொண்டே இருப்பதில் பிரயோஜனம் இல்லை.

மனதில் நிறுத்த வேண்டியவை

தற்போது ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் (இந்திய வனப் பணி) ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் பொதுவான பிரிலிம்ஸ் தேர்வுதான். ஆகையால் சுற்றுச்சூழல், சூழலியல், அடிப்படை அறிவியல் தொடர்பாகப் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்து, அறிவியல் பின்புலத்திலிருந்து வந்து பரீட்சை எழுதுபவர்களுக்கு வரலாறு, அரசியல், பொருளாதாரம் குறித்துக் கடினமான நுணுக்கமான கேள்விகளை எதிர்கொள்வது சவாலாக இருப்பதால் அவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பொது நிகழ்வுகள், சமகாலச் செய்திகள் தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.

எப்படித் தயாராகலாம்?

பொது அறிவு குறித்துக் கேட்கப்படுபவை பெரும்பாலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த தேச, சர்வதேசச் சம்பவங்கள்தான். அதே நேரத்தில் வெறும் புள்ளிவிவரங்களாகவும் தகவல்களாவும் மட்டும் படித்தால் போதாது. ஒரு செய்தியின் வெவ்வேறு கோணங்களைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொண்டு படிப்பது நல்லது.

சரியாக திட்டமிட்டால் ஐஏஎஸ் ஆகலாம்!


பண்டைய, மத்தியக் கால இந்திய வரலாற்றைச் சமூக, கலாசார, சமய அடிப்படையில் ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

நவீன இந்திய வரலாற்றில் விடுதலைப் போராட்டம், அரசியலமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும், சமூக மத இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு ஆகியவை குறித்த தெளிவான புரிதல் தேவை.

புவியியலில் அத்துப்படியாக பொதுத் தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) 6-ம் வகுப்பு முதல் +2 வரையிலான புவியியல் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மை, தொழிற்துறை, சேவைத் துறைகளின் அத்தனை செயல்பாடுகளையும் ஊன்றிக் கவனிப்பது முக்கியம். இதைக் காட்டிலும் பட்ஜெட், பொருளாதாரக் கணக்கெடுப்பு குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

பொது அறிவியலில் என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்து தூய அறிவியல் (Pure Science) குறித்துக் கேள்விகள் கேட்கப்படும். அதேபோல உயிரித்தொழில்நுட்பம், மரபணு பொறியியல், மருத்துவத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட செயல்முறை அறிவியலிலிருந்தும் (Applied Science) கேள்விகள் கேட்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கஷ்டப்பட்டு படிப்பதைவிடவும் திட்டமிட்டுப் படிப்பதுதான் வெற்றிக்கானத் தாரக மந்திரமாகச் சொல்லப்படுகிறது.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...