Saturday, June 11, 2016

UGC sets up panel for pay revision of academic staff



UGC sets up panel for pay revision of academic staff

CHENNAI: The apex higher education body, University Grants Commission (UGC), constituted the pay review commission for pay revision of academic staff of universities and colleges on Thursday.

The recommendations submitted by this committee will have an impact on seven lakh teachers across the country in various State-run and deemed universities and colleges.

This committee will review the implementation of previous decisions of the government under the revision of pay scale scheme approved for academic staff and evaluate the extent to which the earlier recommendations in relation to qualifications, service conditions and pay-scales were implemented.

The five-member committee, headed by UGC member V S Chauhan, has also been assigned the task of examining the present emolument structures and suggest revision taking minimum advancement, career advancement opportunities and total packets of benefits available to them into account.

The members have been instructed to submit recommendations over attracting and retaining talented persons in teaching profession and methods to improve the quality of research along with the above mentioned tasks before December 9.

The committee has been constituted in the backdrop of increased protests by the teaching fraternity to scrap use of Academic Performance Index (API) for career progression. Supporting this, academic staff from Tamil Nadu have demanded revival of the earlier scheme of self-appraisal system.

Former principal of AM Jain College, Chennai C R Ravi said that the recent amendment to UGC Regulation 2010 has virtually disqualified PhD-holders prior to July 2009 as ineligible for appointment as Assistant Professors. Expecting retrospective fulfilment by having two research journals besides participation in two conferences in area of research is impossible. “So the committee shall recommend that all those who acquired or enrolled for PhD prior to the date of the Regulations of 2009 are deemed to have met the norms”, he added.

Though the fifth UGC pay revision was implemented from January 1, 1996, the benefit of promotion was given effect to only from July 27, 1998 by the Education Ministry. Further, the Ministry gave a higher start of pay only for selection grade lecturers who reached that stage by January 1, 1996 and not later.

By ரமாமணி சுந்தர்

மூப்படைந்து கொண்டிருக்கும் மக்கள்தொகை


நமது நாடு உலகிலேயே மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதும், நமது மக்கள்தொகையில் பாதி பேர் இருபத்தைந்து வயதைக்கூட எட்டாத இளம் பருவத்தினர் என்பதும் அனைவரும் அறிந்த விவரங்கள்.

ஆனால், இப்படி இளமையான மக்கள் தொகையைக் கொண்ட நமது நாட்டில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதும், உலகிலுள்ள பத்து முதியோர்களில் ஒருவர் நமது நாட்டில் உள்ளனர் என்பதும் பலருக்குத் தெரியாத விவரங்கள்.

1991-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின் பொழுது மொத்த மக்கள்தொகையில் 6.8 விழுக்காடாக இருந்த அறுபது வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 2001-ஆம் ஆண்டு 7.4 விழுக்காடாக அதிகரித்து, 2011-ஆம் ஆண்டில் 8.6 விழுக்காடு என்ற இலக்கை எட்டியுள்ளது.

முதியோர்களின் நலனுக்காகப் பாடுபடும் ஹெல்ப்பேஜ் இந்தியா (ஏங்ப்ல்ஹஞ்ங் ஐய்க்ண்ஹ) எனும் தொண்டு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2050-ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டு மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு, 20 விழுக்காடாக ஆகிவிடும் என்றும், தற்பொழுது 10 கோடியாக இருக்கும் முதியோர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்து 32.4 கோடியாக ஆகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் நமது மக்கள் தொகை மூப்படைந்த மக்கள்தொகை (ஹஞ்ண்ய்ஞ் ல்ர்ல்ன்ப்ஹற்ண்ர்ய்) என்று கருதப்படும் நிலையை அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கெனவே அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைந்து விட்டன.

நாட்டில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டு வருவதும், மருத்துவத் துறையின் முன்னேற்றத்தின் காரணமாக மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துக் கொண்டு வருவதுமே வயதானவர்களின் எண்ணிக்கை விழுக்காடு கூடிக்கொண்டு போவதற்கான காரணங்கள். கடந்த பத்தாண்டுகளில், 62 ஆண்டுகளாகயிருந்த ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 67-ஆகவும், 64-ஆக இருந்த பெண்களின் ஆயுள்காலம் கிட்டத்தட்ட 70 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக காலம் உயிர் வாழ்கிறார்கள் என்பதனால், முதியோர்களில், பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. அதனால், முதியோர்களின் பிரச்னை மகளிர் சம்பந்தப்பட்டப் பிரச்னை என்ற கோணத்திலும் அணுகப்படுகிறது. பெரும்பாலும் பிறரைச் சார்ந்தே வாழும் மகளிர் ஒரு விதவையாக, வயதான காலத்தில் எப்படிப்பட்ட கஷ்டங்களைச் சந்திப்பார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இப்படி அதிகரித்துக்கொண்டு போகும் முதியோர்களின் எண்ணிக்கையின் காரணமாக நமது நாடும், நமது குடும்பங்களும் பல சமூக மற்றும் பொருளாதார சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 15-லிருந்து 59 வயது வரையில் உள்ளவர்கள் உழைக்கும் மக்கள் என்றும், 0-14 வயது வரையில் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியோர்களும் உழைக்கும் மக்களைச் சார்ந்து, அதாவது அவர்கள் ஈட்டும் வருவாயைச் சார்ந்து வாழும் மக்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.

தற்பொழுது நமது நாட்டில் அறுபது வயதிற்கு மேலுள்ளவர்களின் சதவீதம் அதிகரித்துக் கொண்டு போகிறது என்பதனால் பொருளாதார ரீதியாக நாட்டின் உழைக்கும் சமுதாயத்தின் மேலுள்ள சுமை கூடிக்கொண்டு போகிறது. உடல்நல பாதிப்பு, பணத் தட்டுப்பாடு மற்றும் இவற்றின் காரணமாக ஏற்படும் பாதுகாப்பின்மை ஆகியன வயது காலத்தில் முதியோர்கள் சந்திக்கும் தலையாயப் பிரச்னைகள்.

அல்சீமர் எனப்படும் மறதி நோய், பார்கின்சன், பார்வை கோளாறு, மூட்டுவலி, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, புற்று நோய் போன்ற நோய்களின் பாதிப்புகளுக்கு முதியோர்கள் ஆளாகிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்துள்ள மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையிலிருந்து, நமது நாட்டு முதியோர்களில் பலர் தீராத வியாதியினால் அவதிப்படுகிறார்கள் என்றும், அறுபது வயதைத் தாண்டியவர்களில் எட்டு விழுக்காடு பேர்களும், எண்பது வயதைத் தாண்டியவர்களில் முப்பது விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்ளும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அல்லது படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.

முதியோர்களின் உடல்நலனைக் கவனிப்பதற்காக நமது அரசு ஒவ்வொரு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் எங்ழ்ண்ஹற்ழ்ண்ஸ்ரீள் எனப்படும் முதியோர் மருத்துவப் பிரிவு ஒன்று இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.

ஆனால், எல்லா அரசு மருத்துவமனைகளிலும் முதியோர் மருத்துவப் பிரிவுகள் உள்ளனவா, அவை சரியானபடி இயங்குகின்றனவா, எந்த அளவிற்கு அவை முதியோர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று தெரியவில்லை.

பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்து வாழும் முதியோர்களில் எத்தனை பேர் தனியார் மருத்துவ வசதிகளை நாட முடியும்? தேசிய மாதிரி கணக்கெடுப்பின் அறிக்கையின்படி, பெரும்பாலான முதியோர் பொருளாதார ரீதியாக முழுமையாக அல்லது பெருமளவிற்குப் பிறரைச் சார்ந்தே, குறிப்பாக தங்களது பிள்ளைகளைச் சார்ந்தே வாழவேண்டிய நிலைமையில் உள்ளார்கள்.

அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு சிலர் மட்டுமே ஓய்வூதியம், வைப்பு நிதி போன்ற பயன்களைப் பெறுகிறார்கள்.

அமைப்புச் சாராப் பணிகளில் வேலை செய்து ஒருவிதமான ஓய்வுப் பயன்களையும் பெறாத முதியோர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதே. ஒரு காலத்தில் பெற்றோர்களைப் பிள்ளைகள் குடும்பத் தலைவர்களாகப் பாவித்து அவர்களுக்கு உரிய மரியாதையையும் அந்தஸ்தையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். வீட்டுப் பெரியவர்களைக் கலந்தாலோசித்து குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆனால், கூட்டுக் குடும்பங்கள் குலைந்து போன பிறகு, பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர்களை பாரமாகத்தான் நினைக்கிறார்கள். அதுவும் குறைந்த வருமானம் உள்ள பிள்ளைகள் தங்கள் குடும்பச் செலவைச் சமாளிப்பதற்கே திணறிக் கொண்டிருக்கும் நிலையில் பெற்றோர்களுக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டாலே அதிகம்.

வயதான காலத்தில் பொருளாதார ரீதியாகப் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் பெற்றோருக்கு, பெரும்பாலும் சரியான உணவு, மருத்துவ உதவி போன்றவை கிடைப்பதில்லை.

பணம், காசு இல்லாத முதியோர்களின் நிலைமை இப்படி என்றால், ஓரளவு சொத்து உள்ள முதியோர்களை, அவர்களின் பிள்ளைகள் தங்களுக்குச் சொத்தை எழுதிக் கொடுக்குமாறு துன்புறுத்திக் கொண்டிருப்பது சகஜம்.

ஒன்றிற்கு அதிகமானப் பிள்ளைகள் இருந்தால் அதில் யார் பெற்றோர்களை கவனித்துக் கொள்வது என்பதில் சண்டை சச்சரவிற்கும் குறைவில்லை. ஹெல்ப்பேஜ் இந்தியா நடத்திய முதியோர்களின் நிலைமை பற்றிய ஆய்வின்படி, எண்பது வயதைத் தாண்டிய முதியோர்களில் பலரும் மகன்-மருமகள்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும், ஏன் அடிக்குக் கூட ஆளாகிறார்கள் என்று தெரிய வருகிறது.

ஓரளவு வசதியுள்ள குடும்பங்களில் கூட முதியோர்கள் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற உள ரீதியானப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். முதியோர்களை மதித்து அவர்களிடம் பேசுவதற்கோ அவர்கள் சொல்வதைக் கேட்பதற்கோ யாருக்கும் நேரமில்லை. வீட்டிற்குள்ளேயே அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

வெளிநாட்டில் குடியேறிவிட்ட பிள்ளைகளின் பெற்றோர்களின் பாடு அதை விடக் கொடுமையானது. ஒரு காலத்தில் தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்கிறார்கள் என்று பெருமிதம் கொண்ட பெற்றோர்கள், வயது ஆக ஆக, தாங்களும் வெளிநாட்டில் குடியேற முடியாத நிலையில், பிள்ளைகள் அருகில் இல்லாத கஷ்டத்தை உணர்கிறார்கள்.

இன்று தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்கள் ஒரு நல்ல வணிகமாகத் தழைத்தோங்குகிறது என்றால், அதற்கு உறுதுணையாக இருப்பது வெளிநாட்டில் குடியேறிவிட்ட இந்தியர்கள் தான்.

வேண்டாத தனது தாயையோ தந்தையையோ பிள்ளைகள் வேண்டுமென்றே கும்ப மேளாக்களில் தொலைத்து விட்டு வருவதைக் கேள்வியுறும் பொழுதும், பூரி ஜெகன்நாத் போன்ற கோவில்களில், கிடைக்கும் பிரசாதத்தை மதிய உணவாக உட்கொண்டு நாதியற்றுக் கிடக்கும் தள்ளாத வயதினரைக் காணும் பொழுதும், நம் நெஞ்சம் துடிக்கிறது.

முதியோர்கள் தங்கள் கடைசி காலத்தில் மதிப்புடனும், தன்மானத்துடனும், ஓரளவு வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. என்னதான் முதியோர் இல்லங்கள் தோன்றினாலும், முதியோர்களுக்கு தங்கள் கடைசி நாள்களை தங்கள் குடும்பத்துடன் கழிப்பதில் உள்ள நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது.

நமது நாட்டில் தொன்று தொட்டு குடும்பம் என்ற அமைப்பே முதியோர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கப்படும் குறைபாடுகள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆதரவளித்து அவர்களை அரவணைத்துச் சென்று கரையேற்றிக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட குடும்பம் என்ற அமைப்பை எப்பாடுபட்டாவது வலுப்படுத்த நமது சமூகமும், அரசும் ஆவன செய்ய வேண்டும்.


கட்டுரையாளர்: எழுத்தாளர்.








பாஸ்போர்ட் உரிமையாளர்கள் 48 பேர் நேரில் விளக்கம் அளிக்க போலீஸ் சம்மன்

ஆலந்தூர்,

நங்கநல்லூர் தபால் பெட்டியில் இருந்த பாஸ்போர்ட்டுகளின் உரிமையாளர்கள் 48 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பழவந்தாங்கல் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதி அருகே 48-வது தெருவில் உள்ள தபால் பெட்டியில் கடந்த 2-ந்தேதி தபால் ஊழியர் கடிதங்களை எடுக்க முயன்றார். அப்போது தபால் பெட்டியில் 23 பாஸ்போர்ட்டுகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தபால் துறை உயர் அதிகாரிகள் அந்த பாஸ்போர்ட்டுகளை பழவந்தாங்கல் போலீசில் ஓப்படைத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பாஸ்போர்ட்டுகளை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மீண்டும் அதே தபால்பெட்டியில் 6-ந்தேதி 13 பாஸ்போர்ட்டுகளும், 8-ந்தேதி 15 பாஸ்போர்ட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. 3 நாட்களில் அந்த தபால் பெட்டியில் இருந்து மொத்தம் 51 பாஸ்போர்ட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

மாயமானவை

அந்த பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றிய போலீசார், அவற்றை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பாஸ்போர்ட்டில் உள்ள முகவரியை வைத்து மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதிகளை சேர்ந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாகவும், இதுபற்றி போலீசில் புகார் செய்து மாற்று பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

48 பேருக்கு சம்மன்

ஆனால் மீட்கப்பட்ட அனைத்து பாஸ்போர்ட்டுகளும் காலாவதியாகாதவை என தெரிகிறது. எனவே அவை கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்ததா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தபால் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் இருந்த முகவரியை வைத்து கொல்கத்தா, டெல்லி, மதுரை, திருவனந்தபுரம், திருச்சி, ராமநாதபுரம், ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் உள்ள 48 பேருக்கு இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அந்த முகவரிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த சம்மன் கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்துக்குள், சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும்படி கோரப்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. விசாரணையா?

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “எங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

பாஸ்போர்ட்டுகள் கிடந்த தபால் பெட்டியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அதில் பாஸ்போர்ட்டை போட்டுச்சென்றது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அந்த தபால் பெட்டி அருகே உள்ள தனியார் வங்கியின் நுழைவுவாயில் முன் கண்காணிப்பு கேமராவை பொருத்த பழவந்தாங்கல் போலீசார் அறிவுறுத்தினார்கள். அதன்படி அங்கு கேமரா பொருத்தப்பட்டது.

அந்த பகுதிகளில் மாறுவேடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் நங்கநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday, June 10, 2016

அனைத்து செல்போன்களிலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதி: நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத்துறை உத்தரவு

THE HINDU

செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் செல்போன்கள் அனைத்திலும் அவசரகால அழைப்பு பொத்தான் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தொலைத் தொடர்புத் துறை (டிஓடி) வலியுறுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு (2017) ஜனவரி முதல் தேதியிலிருந்து புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து மொபைல் போன்களிலும் இத்தகைய வசதி கட்டாயமாக இருக்க வேண்டும் என முன்னர் வலியுறுத்தியிருந்தது.

தற்போது புதிதாக அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையின்படி ஏற் கெனவே உள்ள பழைய போன் களிலும் இதற்கான சாஃப்ட்வேரை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள் ளது. அவ்விதம் நிறுவித் தரு வதற்கு எவ்வித காலக் கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

அவசர கால பொத்தானாக 9 அல்லது 5-ஐ அழுத்தினால் அவசர கால அழைப்பாக 112 எண்ணுக்குத் (காவல்துறை) தொடர்பு கொள்ளும் வகையில் இதை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள போன் களில் அவசர கால பொத்தானை தீர்மானித்துவிட்டு, அதற்குரிய சாஃப்ட்வேரை அளிக்க வேண் டும். பிறகு எதிர்காலத்தில் வரும் போன்களில் அதே எண் அவசர கால பொத்தானாக பயன்படுத்தும் வகையில் தயாரிக்க வேண்டும் என்று டிஓடி குறிப்பிட்டுள்ளது.

2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து செல்போன் களையும் சேட்டிலைட்டுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் வசதி கொண்டதாக தயாரிக்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தி யுள்ளது.

Medicos who flunked PG exams demand revaluation



CHENNAI: The Doctors' Association for Social Equality (DASE) on Thursday demanded that the exam papers of more than 100 government doctors, who pursued PG courses and failed in their university exams, be revaluated.

Failed candidates claimed their studies were affected due to their involvement in flood relief work after last December's deluge, and wanted grace marks to be granted.

During a press meet at the Chennai press club, DASE general secretary G Ravindranath said none of the students had failed in individual subjects but their total marks fell below the required aggregate. As per MCI norms, a candidate should obtain a minimum 40% in each theory paper and not less than 50% cumulatively in all four papers for PG degree examination and three papers for diploma examination.

"The teachers have awarded the marks for individual papers without thinking of the overall aggregate. There are students who have got one mark less than the required aggregate of 200 due to which they have to re-attempt both their theory and practical exams," complained students.

A final year student of Madras Medical College said students were usually called for 24-hour duties every week and are not able to devote time completely to studies until six months before the exam. "Of the six months time, three months were taken up by flood relief work and this impacted our studies. Unlike dental students whose exams were postponed, our exams weren't, even though we requested for its postponement," said Sugandh, president of the association, adding that grace marks could be considered given the circumstances. According to the Tamil Nadu Dr MGR Medical University , 1397 PG degree diploma candidates appeared for the exam conducted in April 2016 and 1286 passed.The University pointed out that the same pass percentage range of 90-95% has been consistently maintained for the past three years.

Meanwhile, a statement issued by the registrar of Dr MGR University , Dr S Pushkala, says that apart from following MCI norms in evaluation, a second valuation was carried out for the failed theory papers for the benefit of students. "The representation of the failed candidates can be taken for consideration and will be placed in the Governing Council (GC) of this University . The decision of the council will later be sent to the MCI for further action. The University will always stand for the students' welfare and career," the statement said. University sources noted that the decision can only be taken by the council at this point.

DASE members said they are planning to stage a demonstration on June 13 along with the failed candidates if the university doesn't comply with their demand.

30% PG medical seats unrecognised


MCI gave nod to admit students on the assurance that the government will rectify the problems.

Nearly 30 per cent of the postgraduate medical seats in government medical colleges are remaining unrecognised since 2013.

The Medical Council of India (MCI) had let the government admit students in most of the seats, which it marked as irregular, on an assurance from the government that it will rectify the problems. But three years on, the problems remain unattended.

List of deficiencies

The MCI had pointed out a list of nearly 40 deficiencies in government institutions, which included lack of teaching faculty, inadequate senior residents, lack of original publications by professors, and various inadequacies in support systems for the departments.

The government had been dragging its feet on many issues facing undergraduate and post-graduate medical courses, and filling of vacancies is among the major ones. There are 2,125 posts in five medical colleges, of which 450-odd posts are vacant.

K. Mohanan, president, Kerala Government Medical College Teachers Association, said nearly 80 per cent of the vacancies were at the entry and middle level.

The MCI had brought in the stipulation of publishing original papers in 2014 for promotions.

But those who were drawing salaries in the professor scale before the new rule should not be penalised, said Dr. Mohanan.

“There are departments where professors are even without a chair and table, less to talk of publications or other facilities,” he added.










While Director of Medical Education Ramla Beevi claimed that no PG seat had been lost, the fact remains that 208 doctors completing postgraduate courses in a year cannot register their additional qualification as the course remains unrecognised. For instance, P.S. Jinesh, who completed post graduation in forensic medicine from Kottayam Medical College in 2013, had not been able to register till date since the department had not been recognised yet.

Wednesday, June 8, 2016

ரகளை அமைச்சர்... ராஜினாமா செய்த பெண் டிஎஸ்பி... கையைப் பிசையும் கர்நாடக அரசு!

vikatan news
ர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயின் ராஜினாமா விவகாரம். கூடவே இன்று அனுபமா ஷெனாய் தன் முகநூல் பக்கத்தில்,  " நான் ராஜினாமா செய்து விட்டேன். நீ எப்ப ராஜினாமா செய்ய போகிறாய்?"  என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கிற்கு பகிரங்க சவால் விட்டிருப்பதால்,  பரபரப்பு இன்னும் அதிகமாக பற்றிக்கொண்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பதவியேற்றார். இப்பகுதியில் போலி மதுபான  கடைகளும், அங்கீகாரம் இல்லாத பார்களும் ஏராளமாக இருந்தன. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்  கடைகளை அதிரடியாக இழுத்து மூடி பரபரப்பை உண்டாக்கினார்.

இதுவிர  பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நேர்மையாகவும், திறம்படவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சமூக விரோதக் கும்பல்களின் அடாவடிகளை ஒழித்துக் கட்டி, நிழல் உலகத்தினருக்கு கிலியை ஏற்படுத்தினார். 

அமைச்சர் தலையீடு
இந்நிலையில் கடந்த ஜனவரியில், பொதுமக்கள் திரண்டு வந்து டி.எஸ்.பி. அனுபமாவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவில் , ‘‘ஹடல்கி நகர் பகுதியில், பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகே லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்தரருக்கு சொந்தமான பார் இருக்கிறது. இந்த பாரில் தினந்தோறும் குடித்து விட்டு குடிமகன்கள் பெரும் சத்தம் போடுகிறார்கள். இதனால் குழந்தைகள் படிக்க முடியவில்லை. அத்தோடு திடீர் திடீரென,எங்களின் வீடுகள் மீது கற்களால் தாக்குகிறார்கள். அதனால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், எங்களின் வீட்டில் இருக்கும் பெண்களின் கையைப்  பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். இதனால் நாங்கள் அச்சத்தின் பிடியில் தத்தளிக்கிறோம். குடிமகன்களின்  தொடரும் இந்தத் தொல்லைகளால் சமூக அமைதி சீரழிந்துவிட்டது. எனவே மதுபான பார் கடையை  அகற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கண்ணீர் கோரிக்கையைடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கினார் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய். பிரச்னைக்குரிய பார் இயங்கும் ஹடல்கி நகர் சென்று, அதிரடியாக பாரை இழுத்து மூடினார். அதற்கு லோக்கல் காங்கிரஸ் பிரமுகரான ரவீந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கை சந்தித்து முறையிட்டார். விசயத்தை கேள்விப்பட்டு கொதித்த அமைச்சர்,  ரவீந்தர் முன்பே, டி.எஸ்.பி. அனுபமா ஷெனாய்க்கு  போன் செய்திருக்கிறார். 

அனுபமா போனில் அமைச்சரின் அழைப்பு ரிங் வந்து கொண்டிருக்கும் போதே, தன் துறையை சார்ந்த உயர் அதிகாரியின் போன் அழைப்பும் வர, 10 நிமிடங்களுக்கு அமைச்சரின் அழைப்பை  வெயிட்டிங்கில் போட்டு விட்டு தன் துறை அதிகாரியிடம் பேசி இருக்கிறார்.  துறை அதிகாரியிடம் பேசி முடித்த பிறகு அமைச்சரின் அழைப்பை 'அட்டன்' செய்திருக்கிறார். இதனால் வெய்ட்டிங்கில் இருந்த அமைச்சர் பரமேஷ்வர் நாயக், கோபத்தில் சினிமா வில்லன் பாணியில் கடுமையாக மிரட்டியிருக்கிறார். 

ஆனால், அதற்கு அனுபமா சற்றும் பணிந்து போகாமல், " நான் செய்தது சரிதான். மக்கள் பணி செய்வதற்காகத்தான் இந்த துறைக்கு வந்தேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பார்க்கலாம்" என்று  சொல்லி,போன் இணைப்பைத் துண்டித்து இருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் பரமேஷ்வர் நாயக், அனுபமாவை 'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவிட்டார். கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது இந்த விவகாரம்.

அமைச்சரின் அடாவடித் தனத்திற்கு பொதுமக்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. உடனே அதில் மாநில அரசு தலையிட்டு, அனுபமாவின் இடமாற்றத்தை ரத்து செய்தது.  அதையடுத்து தொடர்ந்து ஆளும் அரசியல் கட்சியினரால் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய்க்கு டார்ச்சர் வந்து கொண்டே இருந்தது. 

ராஜினாமா

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் பவன் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு, ரவீந்தர் தன் பாரை விரிவாக்கம் செய்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்கல் தலித் அமைப்புகள் அனுபமாவை சந்தித்து புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதையடுத்து பார் உரிமையார் ரவீந்தரை அழைத்து, பாரை விரிவாக்கம் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் அனுபமா. ஆனார் ரவீந்தர் அந்த உத்தரவு நகலை கிழித்துப் போட்டு விட்டு, "விரிவாக்கம் செய்வேன். நீ செய்வதை செய்" என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுபமா, கடந்த சனிக்கிழமை (4.6.2016) பாரின் உரிமையாளர் ரவீந்தர் மற்றும் இருவரை கைது செய்து பெல்லாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது அங்கு வந்த சிலர் அனுபமாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரை அசிங்கமாகவும் ஆபாசமாகவும்  பேசியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த நிலையில், அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

இதுப்பற்றி மாவட்ட எஸ்.பி., சேத்தன், ‘‘அனுபமா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். ஹடல்கியில் உள்ள அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை, உரிமையாளர் ரவி விரிவுப்படுத்தி இருக்கிறார். அந்த பணி நடந்தால் அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையின் அகலம் குறையும் என்று சில தலித் தலைவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாரின் உரிமையாளர் ரவியை அழைத்து, பாரின் விரிவாக்கத்தை நிறுத்துமாறு டி.எஸ்.பி., உத்தரவிட்டார். ஆனால் பார் உரிமையாளர் ரவி அதைக் கேட்கவில்லை. இதையடுத்து ரவி மற்றும் 2 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்’’ என்றார். 

காவல்துறை அதிகாரிகளை மாற்ற அமைச்சர்களுக்கு  அதிகாரம் இல்லை...

‘‘இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது பல புகார்கள் குவிந்து வருகின்றன. போலீஸார் இடமாற்றத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் 45 பரிந்துரைகளை காவல்துறைக்கு கொடுத்து கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளார். டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடமாற்ற உத்தரவுக்கும் இவர்தான் காரணம். பிறகு பல தரப்பினரும் எதிர்ப்பு  தெரிவித்ததால் ரத்து செய்யப்பட்டது. 2013 ஜூன் முதல் 2015 ஜனவரி வரை தனக்கு தேவைப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பெல்லாரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். 

உதாரணமாக பெல்லாரி சிட்டி டி.எஸ்.பி., முருகநன்னவார் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளை  அங்கேயே பதவியில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 2014 ஜூன், 10ம் தேதி  பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலக டி.ஜி.பி., ஐ.ஜி.,க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு சி.ஐ.டி., டி.எஸ்.பி.,ரவிசங்கர் நாயக்கை பெல்லாரி மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை செய்து, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை காவல்துறை நிர்வாக வாரியம்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட அதிகாரமில்லை.’’ என்கிறார் ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் வினோத்.  

முதல்வர் ரியாக்‌ஷன்


முதல்வர் சித்தராமையா, ‘‘அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று கூறி உள்ளார். 

'நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை'

இதுபற்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட பெண் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினால் மட்டுமே மாநிலத்தில் அனுபமா ஷெனாய் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்படும். 

ஆனால் முதல்வர் சித்தராமையா நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத்  தெரியவில்லை. அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 'சட்டம் தனது கடமையை செய்யும்' என முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருப்பது பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக உள்ளது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது’’ என்று காட்டமாக கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கில் சவால் விட்ட அனுபமா

இந்நிலையில் ராஜினாமா செய்த டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,' நான் ராஜினாமா செய்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் நீ எப்பொழுது ராஜினாமா செய்யப் போகிறாய்?' என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளது கர்நாடகம்  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்றும், " முதல்வர் சித்தராமையா 'ரம் ராஜ்ஜியம்' நடத்திக்கொண்டிருப்பதாக அனுபமா தனது ஃபேஸ்புக் பதவில் குற்றம் சாட்டி இருந்தார்.
 அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக தாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக தமக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனுபமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் அது இன்னும் கூடுதலான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என தயங்கிக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.  

என்று தீரும் காவல்துறையில் அரசியல் தலையீடு? 

-வீ.கே.ரமேஷ்

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...