Wednesday, June 29, 2016

காசு மேல காசு வந்து ... 7வது ஊதிய குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Read more at: http://tamil.oneindia.com/news/india/the-meeting-union-cabinet-on-today-257027.html

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவில் ஊதி யத்தை உயர்த்த 7வது ஊதிய குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படை யில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதிய குழுவின் பரிந் துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியுள்ளது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி 1ம் தேதியை கணக்கிட்டு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரைகளால் ஊழியர்களுக்கு ​மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். அதாவது, அடிப்படை ஊதியத்தில் 14.27 சதவீதம் உயர்வு மற்றும் இதர படிகளை சேர்த்து மொத்தமாக 23.6 சதவீத ஊதிய உயர்வு கிடைக்கும். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு முன் 6வது ஊதியக் கமிஷன் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்த இந்தாண்டு பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனால் ரூ.70 ஆயிரம் கோடி இடைக்கால ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/the-meeting-union-cabinet-on-today-257027.html

எத்தனை காலமும் ஏமாற்றலாம்!

எத்தனை காலமும் ஏமாற்றலாம்! Read more at: http://tamil.oneindia.com/columnists/subha-veerapandian/jayalalithaa-s-double-standard-rajiv-murder-convicts-257055.html



சுப வீரபாண்டியன்


"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார், 

அன்றும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை கோரி நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே ஜெயலலிதாதான். பிறகு ஏன் இந்த மாற்றம்? மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? 

இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்? இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன. விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த கால கட்டம். தமிழ்த் தேசியவாதிகள் அந்த அறிவிப்பில் மகிழ்ந்து அறிக்கை விட்டனர். 25 ஆண்டுகளாகத் தான் பிள்ளையைப் பிரிந்து வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். அந்த நிழற்படம் ஊடகங்களுக்குச் சென்றது. சுவரொட்டியாகவும் மாறி, அ.தி.மு.க.விற்கு ஆதரவைப் பெருக்கியது. ஆனால் விடுதலை மட்டும் வரவே இல்லை. என்ன காரணம்? மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Cr.P.C) 435(1) ஆம் பிரிவின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சட்டப் பிரிவில், "மத்திய அரசுடன் கலந்துரையாடி (in consultation with...)என்று ஒரு தொடர் உள்ளது. கலந்துரையாடல் என்றால் மத்திய அரசுக்கு அறிவித்தல்தான் என்றனர் 

வழக்கறிஞர்கள் சிலர். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, எங்களைக் கேட்காமல் விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று மனு அளித்தது. அந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச நீதி மன்றம், 2015 டிசம்பர் 2 அன்று, கலந்துரையாடல் என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதுதான் (in consultation means getting concurrence) என்று தீர்ப்பளித்தனர். அதனையொட்டி ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில், நளினியின் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், தோழர் தியாகு போன்றவர்கள், சட்டப் பிரிவு 435 குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை

. இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி தமிழக அரசு தானே அவர்களை விடுதலை செய்ய முடியும். அதனை மத்திய அரசோ, நீதி மன்றங்களோ தடுக்க முடியாது என்றனர். அந்தப் பிரிவு மாநில ஆளுநரின் அதிகாரம் (Governor's power) பற்றி பேசுகிறது. "பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது....(The Government of State shall have the power to grant pardons....)" என்றுதான் அந்த விதி தொடங்குகிறது. யாரும் தடுக்க முடியும் என்பது போன்ற குறிப்புகள் ஏதும் அதில் காணப்படவில்லை. அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கும் ஒருபடி மேலே போய், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "அந்த அம்மாவுக்கு அந்தத் துணிச்சல் உண்டு. பாருங்கள் இன்னும் இரண்டு நாள்களில் அவர்களை அவர் விடுதலை செய்து விடுவார்" என்று பாராட்டுப் பத்திரம் படித்தார். அற்புதம் அம்மாவும், அந்த அம்மா தன் பிள்ளையை விடுதலை செய்து விடுவார் என்று நம்பினார். இந்தப் பாராட்டு, நம்பிக்கை எல்லாம் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஜெயலலிதாவுக்குப் பயன்பட்டதே அன்றி, பாதிக்கப் பட்டவர்களின் விடுதலைக்கு உதவவில்லை.

 அண்மையில் கூட, அவர்களை விடுதலை செய்யக் கோரி, ஒரு கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. வேலூரிலிருந்து தொடங்குவதாக இருந்த அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு, சென்னையில் மட்டும் நடத்த அனுமதித்தது. பேரணி நடத்தக் கூட அனுமதியில்லையா என்று யாரும் பொங்கி எழவில்லை. "அம்மா" சொன்னதை அப்படியே கேட்டு நடந்தார்கள். சரி, வீரியத்தை விடக் காரியம்தான் முக்கியம், நல்லது நடக்கட்டும் என்று நாடு காத்திருந்தது. ஆனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. இப்போது நளினியின் மனுவையும் தள்ளுபடி செய்யக் கோருகிறது தமிழக அரசு.

 இந்தச் சூழலிலும் அந்தத் "துணிச்சல்கார அம்மாவின்" பிம்பத்தை யாரும் குலைக்க விரும்பவில்லை. அவருடைய இரட்டை வேடத்தை கண்டித்து எந்த அறிக்கையும், எந்தத் தமிழ்த் தேசியத் தலைவரிடமிருந்தும் வரவில்லை. இதுவே தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றிருந்தால், நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்! மூன்று செய்திகளை உள்வாங்கி இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்யலாம்.

 1. உண்மையாகவே அவர்களின் விடுதலையில் ஜெயலலிதாவிற்கு விருப்பம் இருந்திருந்தால் அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவைத்தான் பயன்படுத்தி இருப்பார். அப்படி அவர் செய்யவில்லை

. 2. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 435(1) பிரிவின் கீழ் விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதாகக் கூறியது, மத்திய அரசின் மேல் பழி போட்டுத் தான் தப்பித்துக் கொள்ள மட்டுமே!

 3. கோரிக்கைப் பேரணி நடத்துவதற்கும், நீதிமன்றத்தில் மனு அளிப்பதற்கும் கூட ஒப்புதல் தர மறுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை வழங்குவார் என்று இன்னும் சிலர் நம்புகின்றனர். சரி, இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர் நம்மை ஏமாற்றலாம்! http://subavee-blog.blogspot.com

சில நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு


சென்னை : தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதன் காரணமாக அதிகாலை முதலே ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ஆனால் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக் ஆகி விட்டதால், அதிகாலை முதலே டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் மிக விரைவாக ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் முன்பதிவாகி முடிந்தன.

இதனால் அக்டோபர் 29ம் தேதி தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு எப்படி செல்வது என பலரும் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர். இத்தகைய டிக்கெட் தட்டுப்பாடு மற்றும் ரயில்களில் பண்டிகை கால கூட்ட நெரிசலை தடுக்க கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Time matters, so we prefer BE: Students

DECCAN CHRONICLE.
CHENNAI: Candidates who surrendered government quota MBBS seats on the first day of engineering counselling cited the long duration of medical course as one of the main reasons for their decision. Currently, MBBS duration is five-and-a-half years which includes four-and-a-half years of curriculum and one year of internship. In engineering, students have a bright chance of getting campus placement after four years if they get admission into top colleges.

S.I. Tamizhi of Erode got an MBBS seat in Government medical college at Omandurar Government Estate in Chennai. She was interested in engineering and management from the beginning. “In medical stream, it will take eight to 10 years to get settled. Some medical graduates I know are still studying at the age of 25 or 26,” she said. “My cut-off mark for engineering (197.75) is lower than I expected and I had doubt about getting admission in top colleges like Anna University. So, I participated in medical counselling,” she said.

After surrendering her MBBS seat, she selected computer science engineering in PSG College of Technology in Coimbatore. Another candidate P. Muraliprasath of Coimbatore also surrendered his MBBS seat and joined PSG College of Technology. He got MBBS seat in ESIC medical college in Coimbatore. His mother M. Radha said they were confused before taking the decision. Finally, she agreed to her son’s wish which is to become a software engineer.

M. Sowmia of Chennai surrendered her MBBS seat from ESIC medical college in Chennai. She selected Chemical Engineering in Alagappa College of Technology. Though her father Mukundan is a paediatrician at Korattur, she said her parents left it to her choice. Tamil Nadu Engineering Admission committee officials said that on the second day of counselling no student surrendered MBBS seat.

Tuesday, June 28, 2016

விஸ்வரூபம் எடுக்கும் சுவாதி படுகொலை.. அதிகாரிகளுடன் ஜெ. அவசர ஆலோசனை


சென்னை: தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உள்துறை செயலர் அபூர்வா வர்மா, டிஜிபி அசோக்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று இளம்பெண் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. சென்னையில் மட்டும் ஜூன் மாதத்தில் 9 படுகொலைகள் நடந்துள்ளன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சேலத்தில் இளம்பெண் வினுப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆபாச புகைப்படம் வெளியானதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திராவை போல் பொது மக்களின் பாதுகாப்புக்கு ஏன் தனிச் சட்டம் இயற்றக் கூடாது?.குற்றச் செயல்களை தடுக்க காவல்துறை அவசியம் என்று தெரிந்தும், காவலர் பணியிடங்களை ஏன் நிரப்பவில்லை என்பன உள்ளிட்ட 10 அம்சங்கள் நிறைந்த கடிதத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எழுதியிருந்தார்.

இதனையடுத்து, இக்கடிதத்தில் உள்ள விவரங்களை தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றார். உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் டிஜிபி அசோக்குமார், காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பு ரவுடிகளை சுட்டுத்தள்ள உத்தரவு என்கவுன்டர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்


நெல்லை: தமிழகத்தில் கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருவதைத்தொடர்ந்து ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர சென்னையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 3 வக்கீல்கள் உள்ளிட்ட 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலைகளில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபோல் தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பழைய குற்றவாளிகள், ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். சென்னையில் மட்டும் கடந்த 4 நாளில் 491 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் 53 ரவுடிகளும், சிவகங்கையில் 12, ராமநாதபுரத்தில் 35, திண்டுக்கல் 80, விருதுநகர் 31 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள்.

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் டிஐஜி தினகரன் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் விக்ரமன், அஸ்வின்கோட்னீஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி சுமார் 180 ரவுடிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் தவிர பழைய குற்றவாளிகள், கொடூரச் செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வந்தவர்கள் ஆகியோரை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கொலைகள் கூலிப்படையினர் மூலமே நடக்கின்றன.

மேலும் தென் மாவட்டங்களில் இருந்து தான் சென்னை, கோவை, சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு கூலிப்படையினர் சென்று கொலைகளை கச்சிதமாக முடிக்கின்றனர். சமீபத்தில் சுவாதி கொலையில் கொலையாளி தண்டவாளத்தில் வீசிச்சென்ற கத்தி கூட தென் மாவட்டத்தினர் பயன்படுத்தும் கத்தியாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சுவாதி கொலை சம்பவத்திலும் ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை சுட்டுத்தள்ள போலீசுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பட்டியலையும் அவர்கள் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.



இதனால் ரவுடிகள், வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்..

சுவாதி கொலையும், போலீசின் ‘’எல்லை பிரச்சனையும்’’


ஆர். மணி

சென்னையைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கு விசாரணை ரயில்வே போலீசிடமிருந்து ஒரு வழியாக சென்னை போலீசுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி அசோக் குமார் திங்கட்கிழமை பிறப்பித்து விட்டார். இது வழக்கமானதோர் நடைமுறைதான் என்று கூறுகின்றன காவல்துறை வட்டாரங்கள்.

அதற்குள் இது ரயில்வே போலீசின் திறமையின்மையை காட்டுகிறது என்ற அளவில் செய்திகள் ஊடகங்களில் வந்தது தவறானது என்று கூறுகின்றனர் ரயில்வே போலீசில் பணிபுரிபவர்கள். இரண்டு விதமான ரயில்வே போலீஸ் அமைப்புகள் இருக்கின்றன.

ஒன்று மத்திய அரசின் ரயில்வே பாதுகாப்பு படை அதாவது ரயில்வே புரடொக்ஷன் ஃபோர்ஸ் (ஆர்பிஎஃப்). இதனது வேலை ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பது. மற்றொன்று கவர்ன்மெண்ட் ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி).

இது முழுக்கவும், தமிழக போலீசின் ஒரு அங்கம் .. அதாவது சிபிசிஐடி, சிலை கடத்தல் தடுப்பு போன்றதோர் ஒரு அங்கம். ஜிஆர்பி யின் வேலை, ரயில்வே ஸ்டேஷன் காம்பவுண்டுக்கள் நடக்கும் குற்றங்களை விசாரிப்பது, பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது போன்றது. வழக்கமாக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் கொலை நடந்தால் அது சாதாரணமான கொலை வழக்காக இருந்தால் ஜிஆர்பி யே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்தும். சமீபத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரவுடி வெட்டிக் கொல்லப் பட்ட வழக்கில் ஜிஆர்பி தான் வழக்கை விசாரித்து, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து, சம்மந்தப் பட்டவர்களுக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது.

ஆனால் அதிகப்படியான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் விசாரணையை ஜிஆர்பி சம்மந்தப்பட்ட உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்து விடுகிறது. இது போலத்தான் ஆணவக் கொலைக்கு ஆளான கோகுல்ராஜ் விசாரணையை திருச்செங்கோடு போலீசிடம் ஜிஆர்பி ஒப்படைத்தது. அதுவேதான் ஸ்வாதி கொலை வழக்கிலும் விசாரணை ஜிஆர்பியிடம் இருந்து நுங்கம்பாக்கம் போலீசிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

இதற்கு காரணம், ஜிஆர்பி யிடம் சொற்ப அளவிலான அதிகாரிகளும், போலீசாருமே பணியில் இருக்கின்றனர். ஒரு டிஜிபி, ஒரு டிஐஜி, இரண்டு எஸ்.பி க்கள் தான் இருக்கின்றனர். இதுதவிர ஓரளவுக்கு டிஎஸ்பிக்கள் உள்ளனர். இதற்கடுத்த நிலையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையும் குறைவு. ஆகவே இது முக்கியமான கொலைகளில், ஜிஆர்பி விசாரணைக்கு குந்தகமானதாக இருக்கிறது.

ஒரு கொலையில் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் சிலர் வேறு வேறு ஊர்களில் இருந்தால் அவர்களை கண்டறிவதும், விசாரிப்பதும் ஜிஆர்பி யால் சுலபத்தில் முடியாத காரியம். அதனாலேயே விசாரணை சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு மாற்றப் படுகிறது. இது வழக்கமான நடைமுறைதான்.

ஆனால் ஸ்வாதி விஷயத்தில் நடந்த கொடுமை அவர் கொல்லப் பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரையில் அவரது உடலில் ஒரு துணியைக் கூட போர்த்தாமல் இருந்த விவகாரம். காரணம் யார் இதனை செய்வது என்பதுதான். ‘' சம்பவ இடத்திற்கு சில நிமிடங்களில் வந்த சென்னை போலீசார் இதனை செய்திருக்க வேண்டும். அல்லது ஜிஆர்பி போலீசார் இதனை செய்திருக்க வேண்டும். யாருடையை கட்டுப்பாட்டில் இந்த இடம் வருகிறது, யார் இந்த கொலையை விசாரிக்க போகிறார்கள் என்ற குழப்பம் அல்லது குடுமி பிடி சண்டையின் காரணத்தால் இரண்டு தரப்பும் இதனைச் செய்யவில்லை. இதனைத் தான் திங்கட்கிழமை சென்னை உயர்நீதி மன்றம் கேட்டிருக்கிறது'' என்று கூறுகிறார் தமிழக அரசு வழக்கறிஞர் ஒருவர்.

தானாக முன் வந்து இந்த விசாரணையை மேற்கொண்ட உயர்நீதி மன்ற அமர்வு, இது சம்மந்தமாக வந்த ஒரு ஆங்கில நாளிதழின் கட்டுரையை மேற்கோள் காட்டி இதனை கேட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் விசாரணை சென்னை போலீஸூக்கு மாற்றப் பட்டிருக்கிறது. ‘'இரண்டு மணி நேரம் கொலையுண்ட பெண்ணின் உடல் துணி கூட போர்த்தப் படாமல் இருந்திருக்கிறது. இறந்து போனவர்களுக்கும் கண்ணியம் இருக்கிறது'' என்று அப்போது நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த கண்ணியத்தை ஸ்வாதிக்கு இரண்டு மணி நேரத்திற்கு கொடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு யார் பதில் சொல்ல வேண்டும், யார் இதற்கு பொறுப்பு என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் கேள்வி. தற்போது இந்த கேள்வியை மற்ற அமைப்புகளும் கேட்கத் துவங்கியிருக்கின்றனர். செவ்வாய் கிழமை மதியம் தேசீய மகளீர் ஆணையம் இந்த கேள்வியை சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் ரயில்வே துறையிடம் கேட்டிருக்கிறது. கொலை யாருடையை எல்லையில் நடந்த து என்ற குடுமிடிப் பிடி சண்டையில், அந்த சண்டை கொடுத்த மெத்தனத்தில் இரண்டு மணி நேரம் தங்களது கடமையிலிருந்து இரண்டு தரப்பு போலீசாரும் தவறியிருப்பது கண் கூடாகவே தெரிகிறது. இதனால்தான் இந்தக் கேள்வியை சென்னை உயர்நீதி மன்றத்தை அடுத்து, தேசீய மகளிர் ஆணையமும் கேட்கத் துவங்கியிருக்கிறது.

போலீஸ் சீர்திருத்தங்கள், போலீஸ் இலாகாவை நவீனமயமாக்குவது என்பதெல்லாம் நீண்ட கால விவகாரங்கள். அவையெல்லாம் படிப்படியாகத் தான் நடக்கும், ஒரு வேளை அவை நடந்தால் ... ஆனால் அதற்கு முன்பாக, தற்போதைக்கு இருக்கக் கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் போலீசின் திறமையை வைத்து சென்னை போலீசால் அற்புதங்களை சாதிக்க முடியும் தான். மிகப் பெரிய அளவில் இந்த விஷயம், மீடியாக்களில் விவாதிக்கப் பட்டும், எதிர்க் கட்சிகள் குரல் எழுப்பியும் கூட அசையாத அரசு, சென்னை உயர்நீதி மன்றம் தலையிட்ட மூன்று மணி நேரத்திலேயே விசாரணையை சிட்டி போலீஸூக்கு மாற்றியிருக்கிறது. இதனை வெள்ளிக் கிழமை கொலை நடந்த சில மணி நேரத்திலேயே செய்திருக்க வேண்டும். ‘'எல்லைப் பிரச்சனையில்'' தமிழக போலீசின் இரண்டு பிரிவுகள் அடித்துக் கொண்ட போது மெளனம் காத்த மாநில அரசு சென்னை உயர்நீதி மன்றம் சாட்டையை சுழற்றிய பின்னர்தான் செயற்படத் துவங்கியது.

உச்ச நீதி மன்றத்தின் 2006 ம் ஆண்டு பிரகாஷ் சிங் தீர்ப்பின் ஏழு கட்டளைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதனால் 2013 ல் தமிழக அரசு மீது உச்ச நீதி மன்றம் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசின் தலைமை செயலளார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியது. ‘'வழக்கமாக இது போன்ற உத்திரவுகளை நாங்கள் பிறப்பிப்பது இல்லை ... இது எங்களுக்கு வலியைத் தருகிறது .. எல்லா தருணங்களிலும் நாங்கள் இதுபோன்ற உத்திரவுகளை பிறப்பிப்பதை தவிர்க்கிறோம். ஆனால் தற்போது நாங்கள் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம். நீதி மன்ற உத்திரவுகளை நிறைவேற்றாததற்காக, சில அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவர்கள் தண்டிக்கப் பட்டால்தான் நிலைமை முன்னேற்றம் அடையும் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்று நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான அமர்வு தனது உத்திரவில் தெரிவித்தது.

http://www.firstpost.com/india/sc-calls-chief-secretaries-of-four-states-for-failure-to-implement-police-reforms-960525.html

அதற்கு பிறகு பிரகாஷ் சிங் தீர்ப்பின் ஒரு சில கட்டளைகளை மட்டும் தமிழக அரசு அமல் படுத்தியிருக்கிறது. ஆனால் முக்கியமானதும், முதல் கட்டளையுமான ஸ்டேட் ஸெகியூரிட்டி கமிஷன் என்பதும் அக்கவுண்டபிளிட்டி கமிஷன் என்பதும் அதாவது, போலீசுக்கு அவர்களது செயற்பாடுகளுக்கு பொறுப்பை ஏற்கச் செய்யும் அமைப்பு இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் கட்டளைகள் ஒரு பக்கம் இருக்கட்டும் ... முதலமைச்சர் ஜெயலலிதா, டில்லி நிர்பயா படுகொலைக்குப் பின்னர், ஜனவரி, 2013 ல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 13 அம்ச திட்டம் ஒன்றினை அறிவித்தார். இதில் பெரும்பாலானவை அமல்படுத்தப் படவில்லை என்பதுதான் கூடுதல் கேலிக் கூத்து. இதில் முக்கியமானது அனைத்து பொது கட்டிடங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தப் படும் என்பது. இன்று சென்னையின் முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் ஒன்றான நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலேயே சிசிடிவி இல்லை. ஜெயலலிதா வின் 13 அம்ச செயற்திட்டம் அறிவிக்கப் பட்டு மூன்றரை ஆண்டுகள் கழித்து காணப்படும் நிலைமைதான் இது.

ஆகவே தாங்கள் அறிவித்த செயற்திட்டத்தையே கூட மூன்றரை ஆண்டுகள் கழித்தும் செயற்படுத்த தவறிய ஆட்சியாளர்கள்தான் மீண்டும் தற்போது அரியணை ஏறியிருக்கிறார்கள். பெண்கள் தமிழகத்தில் அச்சமின்றி நடமாட எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் படும் என்றார்கள், அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் படும் என்றார்கள் ... இவை எல்லாமே இன்றளவும் ஏட்டளவில் தான் இருக்கின்றன. இதில் ஸ்வாதி விவாகரத்தில் வந்த ‘'எல்லை பிரச்சனை'' யால் விளைந்த கால தாமதமும் தமிழக போலீசுக்கு தீராத அவமானத்தை தேடித் தந்திருக்கிறது. குற்றவாளி கண்டறியப் படும் வரையில் இந்த அவப் பெயர் தொடரத் தான் செய்யும்.

ஆட் பற்றாக்குறையும் பெருங் குறையாக இருக்கின்றது. ‘'தமிழக போலீசின் எண்ணிக்கை 1.27 லட்சம். தற்போது இருப்பது 99,000. நவீன பயிற்சிக்கு மொத்த எண்ணிக்கையில் ஒரு சத விகித போலீசார் எப்போதும் அனுப்ப பட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆண்டுதோறும் இது நடைபெற வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுதான் நடைமுறை.'' என்கிறார் ஓய்வு பெற்ற போலீஸ் கல்லூரியின் துணைத் தலைவரும், எஸ்.பி யுமான சித்தண்ணன். ஸ்வாதி கொலைக்குப் பின்னராவது தமிழக அரசு இதற்கெல்லாம் செவி மடுத்தால் அது போலீசுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்லது.


மூலக்கதை

NEWS TODAY 18.12.2025