Monday, July 4, 2016

மகளை கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்: சுவாதி பெற்றோர் கோரிக்கை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-s-parents-seek-death-penalty-their-daughter-killer-257324.html

சென்னை: மகளை கொடூரமாக கொலை செய்த கொலையாளிக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சுவாதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த கொலை வழக்கில் , குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராம்குமாரின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு என்னமாதிரியான தண்டனை கிடைக்கும் என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. சுவாதியின் பெற்றோர், மகளை கொன்ற குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரணதண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் செங்கோட்டையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், இந்த வழக்கில் அவருக்கு என்ன என்ன தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில், இந்த வழக்கில், குற்றவாளியாக கருதப்படும் நபர் கிடைத்துள்ளார். அவருக்கே ஏற்பட்ட ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம் முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும். அதற்கு பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் இப்போது மாவட்டந்தோறும் மகிளா நீதிமன்றங்கள் உள்ளன. சென்னையிலும் மகிளா நீதிமன்றம் உள்ளது. மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விரைவாகவும் துரிதமாகவும் வழக்கை நடத்த வாய்ப்புள்ளது. ஒரு மாதத்திற்குள்ளோ இரு மாதத்திற்குள்ளோ தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ள ஒரு வழக்குதான் இது. பொதுமக்களை மிகவும் பாதிக்க வைத்த கொலை சம்பவம் அனைவர் கவனமும் இந்த வழக்கின் மீது இருக்கிறது. இவர்தான் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டால், மரணதண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர் அஜீதா கூறினார். இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம். காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளதது என்றும் கூறியுள்ளார் அஜீதா.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swathi-s-parents-seek-death-penalty-their-daughter-killer-257324.html

பேட்டி! சுவாதி கொலை: சூளைமேடு மக்கள் பேட்டி

DINAMALAR

கடன் சொல்லி சாப்பிட்டான்

சூளைமேடு, சவுராஷ்ட்ரா நகர், 8வது தெருவில் உள்ள, 'மதர்ஸ் கிச்சன்' உணவகத்தில், இரண்டரை ஆண்டாக பணியாற்றி வருகிறேன். எதிரே இருக்கும் விடுதியில் இருந்து, பலர் உணவு அருந்த வருவர். சுவாதி கொலை சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன், இரவு, 8:00 மணியளவில் ராம்குமார் சாப்பிட வந்தான்.

நுாறு ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் சென்றுவிட்டான். அதனால், அவன் முகம் எனக்கு ஞாபகத்தில் இருந்தது. கொலை நடந்த பின், போலீசார் ஒரு புகைப்படத்தை காண்பித்து என்னிடம் விசாரித்தனர். அந்த புகைப்படத்தில் முகம் தெளிவாக இல்லாததால் அடையாளம் காட்ட முடியவில்லை.

தற்போது, வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து தான், அடையாளம் தெரிந்து கொண்டேன். அரபு நாடுகளில் தண்டனை கொடுப்பது போல் ராம்குமாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மகேஷ், 24, உணவக ஊழியர்.

* நாங்கள் பார்த்தது இல்லை

நான் மூன்று ஆண்டாக இந்த விடுதியில் தங்கி இருக்கிறேன். செக்ரியூட்டி முதல் ஐ.டி., துறையில் வேலை பார்ப்பவர்கள் வரை இங்கு தங்கியுள்ளனர். விடுமுறை நாட்களில் பலரை சந்தித்து பேசி பழக்கம் ஏற்படுவது உண்டு.

ஆனால், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், இந்த விடுதியில் தான் தங்கியிருந்தான் என்பது, இன்று காலை தான் எனக்கு தெரிந்தது. மூன்று மாதங்கள் இந்த விடுதியில் அவன் தங்கியுள்ளான். ஆனால், இதுவரை அவனை, நானும் என் நண்பர்களும் பார்த்தது இல்லை.மோகன், 26, தனியார் நிறுவன ஊழியர்


* உடன் தங்கிய முதியவர்

நான் நான்கு ஆண்டாக இந்த விடுதியில் தங்கி இருக்கிறேன். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமாரும் இந்த விடுதியில் தான் தங்கியுள்ளான்; அவனை நாங்கள் யாரும் பார்த்தது இல்லை. அவனுடன், செக்ரியூட்டி வேலை பார்க்கும், முதியவர் ஒருவர் தங்கியுள்ளார். அவர், எங்கே என்றும் தெரியவில்லை.

இந்த கொலையில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை, போலீசார் தான் விசாரிக்க வேண்டும். விடுதியில் தங்கியிருந்த ஒருவன் கொலைக்காரன் என்பது அதிர்ச்சியாக உள்ளது.
சதீஷ் ராஜா, 27,ஓட்டுனர்.


* தக்க தண்டனை தர வேண்டும்

சவுராஷ்ட்ரா நகர், எப்போதும் பரப்பாக இருக்கும். தற்போது, மழைநீர் கால்வாய் பணி நடைபெறுவதால், சற்று நிசப்தமாக உள்ளது. விடுதியில் தங்கியிருக்கு பலரை எனக்கு தெரியும். எனினும், ராம்குமாரை நான் பார்த்தது இல்லை. கொலைகாரனுக்கு

தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.சரவணன், 32, எலக்ட்ரீசியன்.

* போலீசாருக்கு நன்றி

கொலைக்காரன் சூளைமேடு பகுதியில் தங்கியிருந்தான் என, போலீசார் விசாரணையில் தெரிய வந்ததால், எங்களிடம் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். துரிதமாக செயல்பட்டு கொலைக்காரனை கைது செய்த, போலீசாருக்கு நன்றி.தீன தயாளன்,70, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.

* ரோந்து பணி முக்கியம்

விடுதியில் தங்கியிருந்த ஒருவன், கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, ரோந்து பணியை போலீசார்தீவிரப்படுத்த வேண்டும்.அன்பு, 28, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.

* பயமாக இருக்கிறது

ஒரு ஆண்டுக்கு முன், இந்த விடுதியில் பணியாற்றினேன். இதுபோன்றசம்பவத்தை இந்த விடுதியில் தங்கியிருந்தவர்கள் செய்ததில்லை. இந்த சம்பவத்தால், விடுதியின் அருகில் வசிப்பதற்கே பயமாக உள்ளது. ஒருதலை காதல் அல்லது காதலாக இருந்தாலும், ஒரு உயிரை எடுப்பது தவறு. அந்த கொலைகாரணுக்கு துாக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும்.
அமுல், 44, விடுதிக்கு பக்கத்தில் வசிப்பவர்.

* கடும் தண்டனை வேண்டும்

கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால், மூன்று மாதங்களில் ஜாமினில் வந்து விடுகின்றனர். சிறைக்கு சென்றதால், தங்களை பார்த்து அனைவரும் பயப்பட வேண்டும் என, ரவுடியாக மாறி விடுகின்றனர். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக வழங்க வேண்டும். தண்டனையில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாத அளவுக்கு சட்டத்தை மாற்ற வேண்டும்.முரளி, 45, ஆட்டோ ஓட்டுனர்.

* தவறான நட்பு வட்டாரம்

'மீடியா'க்களில் வெளியிடப்படும் செய்திகள், சினிமா காட்சிகள் இன்றைய இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளன. அவை பெரும்பாலான நேரங்களில், தவறான மனநிலையை உருவாக்குகின்றன. சென்னையை பொறுத்த வரையில், பலர் விடுதியில் தங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது.

அங்கு தவறான நட்பு வட்டாரத்தில் சிக்கும் இளைஞர்களின் மனநிலை மாறி விடுகிறது. ராம் குமார் படித்துள்ளான், அவனை கொலை செய்ய துாண்டியது என்ன; மனதளவில் அவன் பாதிக்கப்பட்டுள்ளனா என்பதை கண்டறிய வேண்டும். மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
பள்ளியில் பெண்களுக்கு, தற்காப்பு கலைகளை அரசு கற்று தர வேண்டும். பெண்கள் போதை பொருள் அல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
ஒரு சம்பவம் நடைபெற்ற பின், கண்காணிப்பு கேமரா மற்றும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு மாதம்

Advertisement

கடந்த பின், அனைத்து பயனற்று போய் விடுகிறது. ரோந்து பணியில் கூட போலீசார் ஈடுபடுவதில்லை. இந்த முறைகள் மாற்றப்பட்டால் இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படலாம்.மணி அற்புத ராஜ், 29; தனியார் நிறுவன ஊழியர்.

* படம் இல்லை

* 'பேக்' மாட்டிய ஆண்களால் பயம்

நான்கு பேரும் கல்லுாரியில் படிக்கிறோம். தினமும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தான், கல்லுாரிக்கு செல்வோம். சுவாதி அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, எங்கள் பெற்றோர், இரண்டு நாட்கள் கல்லுாரிக்கு அனுப்பவில்லை.

இப்போதல்லாம் தனியாக செல்ல பயமாக உள்ளது. 'பேக்' மாட்டிக்கொண்டு அருகில் வரும் ஆண்களை பார்த்தாலே பயமாக உள்ளது. பொது இடங்களில் கண்காணிப்பு கேமராவை அரசு பொருத்த வேண்டும். ஆண் போலீசாருடன் மகளிர் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். வீட்டை விட்டு, நாங்கள் தனியாக வெளியே வருவது, இந்த சமுதாயத்தில் எங்களுக்கு பிரச்னை எழும்போது, காப்பாற்ற தந்தைகளும், அண்ணன்களும் இருப்பார்கள் என்ற தைரியத்தால் தான்.

இந்த சம்பவத்தை அடுத்து அந்த தைரியம் எங்களுக்கு இல்லை. யாரையும் நம்ப கூடாது என்ற மனநிலைக்கு வந்து விட்டோம். எங்களை நாங்களே காத்து கொள்ளும் தற்காப்பு கலைகளை வளர்த்து கொள்ள வேண்டும்.கல்லுாரி மாணவியர்.

* இரு தரப்பிலும் தவறு

பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நண்பர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். நம்பகத்தன்மை இல்லாத நபர்களுடன், 'சாட்டிங்' செய்யக்கூடாது. வளரும் பருவத்தில் இருக்கும், இரு பாலினத்தவரையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். சுவாதி கொலையில், இரு தரப்பிலும் தவறு இருக்க வாய்ப்பு உண்டு.
சாந்தி, அரசு ஊழியர்.

* நீர்த்து போக கூடாது

இரு தரப்பிலும் தவறு இருக்கலாம். நண்பர்களாக பேசும் அளவுக்கு பெற்றோர் பிள்ளைகளிடம் பழக வேண்டும். டில்லி நிர்பயா வழக்கு போல் பரப்பரபாக பேசப்பட்டு நீர்த்து போக கூடாது. சுவாதியை கொலை செய்தவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை, இதுபோல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். எத்தனை பேர் சேர்ந்து கொலை செய்தாலும், கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும்.சுவாதியின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
* காதல் ரயில் நிலையம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் மக்கள், காதலர்கள் நிறைந்து காணப்படும். காதலில் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளின் போது, வாய் சண்டை போட்டு கொள்வர்; மறுநாள் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருப்பர். காதலர்களுக்கே பெயர் போன ரயில் நிலையத்தில் கொலை நடந்தது, இன்றுவரை அதிர்ச்சியாக உள்ளது.சின்னய்யா, 70, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள எஸ்.டி.டி., பூத் ஊழியர்.

ராம்குமார் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?

நெல்லையில் இருந்து பலத்த காவலுடன் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமாருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றத்திற்கான காரணங்கள், தன்மை போன்றவை அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
 
ராம்குமார் ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம்   முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்.
 
இவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், மரண தண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம்.
 
காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது  இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளது என சட்டநிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
 
 

கொலை செய்ய துணிந்தவர்; ஆனால், தற்கொலை செய்ய அஞ்சிய ராம்குமார்

DINAMANI

சென்னை: சுவாதியை கொலை செய்த பின்பு தற்கொலை செய்துகொள்ள அச்சம் ஏற்பட்டதால் ராம்குமார் சொந்த ஊருக்குத் திரும்பி பதுங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிகிச்சையில் இருந்ததால் அவரிடம் தொடர் விசாரணை நடத்த முடியவில்லை. சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை நேரம் கிடைத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக கேள்விகள் கேட்கப்பட்டன. இருப்பினும் அவர் சில கேள்விகளுக்கு மட்டுமே லேசான பதில் கூறினார். பிறகு சைகைகளைக் காட்டினார்.

"சென்னைக்கு வேலை தேடிச் சென்றபோது சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுவாதியைப் பார்த்தேன். அப்போது அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனைக் கூற அவரை அடிக்கடி பின்தொடர்ந்தேன். ஒருநாள் நான் பின்தொடர்வதை அறிந்த அவர், பெற்றோர் மற்றும் போலீஸாரிடம் தெரிவித்து விடுவதாக எச்சரித்தார்.

மேலும், எனது முக அழகு குறித்து குறை கூறினார். அதனால் எனக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. எனது அழகை குறை கூறியதால் தாக்க முயன்றபோது கொலை நிகழ்ந்துவிட்டது. அதன்பின்பு நானும் தற்கொலை செய்யவே முடிவு செய்தேன்.

ஆனால், எனக்கு தற்கொலை செய்ய அச்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து சொந்த ஊருக்குத் தப்பிவந்து பதுங்கினேன். அங்கு என்னை போலீஸார் கைது செய்ய வந்தபோது வேறு வழியில்லாமல் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தினேன் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சுவாதியை கொலை செய்ய காரணம் என்ன?- பிடிபட்ட ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்


ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பழக்கம்; கடந்த ஆண்டே சென்னைக்கு வந்ததாக தகவல்

சுவாதியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து தனிப்படை போலீஸாரிடம் ராம்குமார் பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போது ஃபேஸ் புக் மூலம் சுவாதியுடன் நட்பு ஏற்பட் டுள்ளது. ஒருதலைக் காதலால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு வந்ததாக வாக்கு மூலத்தில் அவர் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத் தில், ராம்குமார் என்பவரை திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரம் கிராமத்தில் போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை போலீஸார் மீட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனை கண்காணிப் பாளர் இளங்கோவன் செல்லப்பா தலைமையிலான மருத்துவர் குழு வினர் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் உடனடியாக அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் போலீஸாரால் பெற முடியவில்லை.

இதற்கிடையே ராம்குமாரிடம் விசாரணை நடத்த சென்னையில் இருந்து தனிப்படையினர், நுங்கம் பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் நேற்று முன்தினம் திருநெல்வேலிக்கு வந்தனர். அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விக்ரமன் மற்றும் ராம்குமாரை பிடித்த தனிப்படையினரிடம் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவில் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டு மெதுவாக பேசும் நிலைக்கு வந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து கிராம நிர் வாக அலுவலர்களான ஜெயராமன் (பாளையஞ்செட்டிகுளம்), மயி லேறும்பெருமாள் (வி.எம்.சத்திரம்) ஆகியோர் முன்னிலையில் தனிப் படை போலீஸார் ராம்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

ஃபேஸ்புக் மூலம் அறிமுகம்

ராம்குமார் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:

நான் ஆலங்குளம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே ஃபேஸ்புக் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அவ்வாறுதான் சுவாதி எனக்கு அறிமுகம் ஆனார். பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவருடன் தொடர்புகொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். இதைத் தொடர்ந்து அவரை பார்க்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு சென்றேன். ஆனால், வேலைக்குச் செல்வதாக எனது வீட்டில் கூறியிருந்தேன்.

சென்னை சூளைமேடு பகுதியில் சுவாதியின் வீடு அருகே மேன்ஷனில் தங்கினேன். சில மாதமாக சுவாதியை பின்தொடர்ந்தேன். அங்கு உள்ள பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட சுவாதி வருவார். நானும் அங்கு செல்வேன். சுவாதி வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.

திட்டியதால் ஆத்திரம்

ஃபேஸ்புக் நண்பர் என்பதால் சுவாதியும் என்னிடம் நட்பாக பழகினார். கடந்த நவம்பர் மாதம் நான் அவரை காதலிப்பதாக தெரிவித்தேன். அப்போது அவர் கோபமடைந்து திட்டினார். தொடர்ந்து நான் அவரை காதலிக்குமாறு தொடர்ந்து கூறியதால், தனியாக செல்லாமல் தன் தந்தையை துணைக்கு அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு சென்று வந்தார்.

நான் பலமுறை ரயில் நிலையத்தில் காத்திருந்து அவரிடம் பேசினேன். அப்போது ஒருமுறை, நான் தேவாங்குபோல் இருப்பதாகக் கூறி, என்னிடம் இனி பேசாதே என்று கூறிவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

காதலிக்கும்படி கெஞ்சினேன்

ஊருக்கு வந்து தோட்டத்தில் வாழைக் குலைகளை வெட்ட வைத்திருந்த அரிவாளை ஒரு விவசாயியிடம் இருந்து திருடிக்கொண்டு சென்னைக்கு சென்றேன். மீண்டும் கடந்த 24-ம் தேதி ரயில் நிலையத்தில் சுவாதியிடம் காதலிக்கும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்தார். எனவே அவரை அரிவாளால் வெட்டினேன்.

எதுவும் தெரியாதது போல சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத தால் ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறினேன்.

இவ்வாறு போலீஸாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

வீட்டில் சோதனை

ராம்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உதவி ஆணையர் தேவராஜ் தலை மையிலான தனிப்படை போலீஸார் மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ராம்குமாரின் லுங்கி, செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.

சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு: ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதியை கொன்ற கொலையாளி ராம்குமார் நெல்லை மருத்துவமனையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 
 
இந்நிலையில் அவர் நெல்லை மருத்துவமனையில் இருந்த போது அவரிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது வாக்குமூலத்தில் சுவாதியை வாயில் வெட்டுவதே எனது இலக்கு. அதற்காக சொந்த ஊருக்கு வந்து வாழைத்தார் வெட்டும் அரிவாளை எடுத்துவந்ததாக கூறப்பட்டுள்ளது.
 
சுவாதியிடம் நான் பலமுறை எனது காதலை வெளிப்படுத்தினேன். ஆனல் அவர் அதனை நிராகரித்துவிட்டார். எனது நடை, உடை, பொருளாதாரம் போன்றவற்றை குறிப்பிட்டு என்னை மிகவும் இழிவுபடுத்தி பேசினார் சுவாதி.
 
இதனால் ஆத்திரமடைந்த நான் என்னை இழிவுபடுத்தி பேசிய சுவாதியின் வாயை வெட்ட வேண்டும் என முடிவெடுத்து திட்டமிட்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று சுவாதியின் பின்புறமாக நின்று அவரது வாயை வெட்ட அரிவாளை வீசினேன் அது தவறி அவரது கழுத்தில் பட்டது.
 
நான் சுவாதியை வெட்டியதும் அங்கிருந்த ரயில் பயணிகள் அலறினர். நான் அரிவாளுடன் இருந்ததால் யாரும் என் அருகில் வரவில்லை. இதனை பயன்படுத்தி சுவாதியை சரமாரியக வெட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

எனது வீட்டிலும் சுவாதி கொலையை பற்றி பேசினார்கள்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராம்குமார் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவர் மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.


 
 
அதில், சுவாதி இறந்த செய்தியை தொலைக்காட்சி மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றதாக கூறினார்.
 
மேலும், திடீரென நான் வீட்டுக்கு சென்றதும் வீட்டில் உள்ளவர்கள் ஏன் வந்தாய் என கேட்டார்கள். உடம்பு சரியில்லை என கூறியதால் எதுவும் சொல்லவில்லை. சுவாதியை கொலை செய்துவிட்டு வீடுக்கு சென்றதும் முதலில் பதற்றமாக இருந்தது.
 
எனது வீட்டில் உள்ளவர்களும் சுவாதி கொலை பற்றி பேசினார்கள், நானும் அவர்களுடன் சகஜமாக பேசினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் வருகிறது.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...