Monday, July 4, 2016

ராம்குமார் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும்?

நெல்லையில் இருந்து பலத்த காவலுடன் சென்னை கொண்டுவரப்பட்ட ராம்குமாருக்கு வரும் 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றத்திற்கான காரணங்கள், தன்மை போன்றவை அடிப்படையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.
 
ராம்குமார் ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம்   முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்.
 
இவர்தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால், மரண தண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை. அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம்.
 
காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது  இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளது என சட்டநிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
 
 

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...