Friday, July 15, 2016

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படும்: தமிழக அரசு தகவல்

THE HINDU

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங் கப்பட உள்ள புதிய அரசு மருத் துவக் கல்லூரி அடுத்த கல்வி யாண்டு முதல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து மக்க ளும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், தரமான மருத்துவ சேவை பெற வேண்டும் என்ற அடிப்ப டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி சுகாதாரத் திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.

மக்கள் உடல் நலன் காக்கும் வகையிலான நல்வாழ்வுத் திட்டங்களை திறம்பட செயல்ப டுத்தத் தேவையான மருத்துவர் கள் இருப்பது அவசியமாகும். எனவேதான், அரசு ஆண்டுதோ றும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சிவகங் கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங் களில் 3 மருத்துவக் கல்லூரி கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கப்ப டுகின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத் துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலில் அனுமதி பெறப்பட்டு மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்க்கப்படு கின்றனர்.

இந்த ஆண்டு, கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவர் கள் சேர்க்கையுடன் மருத்துவப் படிப்பை தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மாண வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 810 மருத் துவ பட்டப்படிப்பு இடங் கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கரூர் மற்றும் புதுக்கோட்டை யில் தலா 150 மருத்துவ மாணவர் கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங் கப்பட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்த 2 இடங்களி லும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக் கவும் தலா ரூ.229 கோடியே 46 லட்சம் நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017 - 2018-ம் கல்வியாண்டு முதல் 150 மாண வர்கள் சேர்க்கை யுடன் தொடங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற் கான ஆயத் தப் பணிகளை மேற் கொள்ள ஒரு சிறப்பு அலுவலர் மற்றும் முதல்வர் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.

கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யில் தேவையான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர் கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என 808 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவ தால் அரசுக்கு தொடர் செலவின மாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.39 கோடியே 68 லட்சம் செலவாகும்.

புதுக்கோட்டையில் தொடங் கப் பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதற்கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசி ரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர் கள் என 161 புதிய பணியி டங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் காரணமாக, அர சுக்கு தொடர் செலவினமாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8 கோடியே 87 லட்சம் செலவாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...