Friday, July 15, 2016

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம்: ராம்குமார் அளித்துள்ள வாக்குமூலம் பதிவு


ரயில் நிலையத்துக்கு சென்று நடித்துக் காட்டுகிறார்

‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து வீடியோவில் பதிவு செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி (24) கடந்த மாதம் 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அடுத்த டி.மீனாட் சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் (24) கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். போலீஸார் பிடிக்க முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற் கொலைக்கு முயன்ற தாக கூறப்படு கிறது. போலீஸார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

அவரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13-ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா சென்றது ஏன்?

சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்ய வேறு யாராவது உதவி செய்தார்களா? என்பது போன்ற பல கேள்வி களை ராம்குமாரி டம் போலீ ஸார் கேட்டுள்ளனர். சுவாதி கொலைக்கு முன்பு, 20, 21-ம் தேதி களில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்துள் ளார். அங்கு சென்று வந்தது ஏன்? கொலை செய் யச் சொல்லி வேறு யாரும் தூண்டி னார்களா? என்றும் ராம்குமாரிடம் போலீஸார் கேட்டுள்ளனர்.

‘நான்தான் கொன்றேன்’

விசாரணைக்குப் பிறகு, ‘கொலையை நான்தான் செய்தேன்’ என்று ராம்குமார் ஒப்புக்கொண்ட தாகவும், அவரது வாக்குமூலத்தில் அது தெளிவாக இருப்பதாகவும் போலீஸார் தெரி வித்துள்ளனர். ராம்குமார் வாக்கு மூலம் கொடுக் கும்போது அதை ரிக்கார்டு செய்து வைத்திருக்கி றோம். யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவரே கொடுத்த வாக்குமூலம் அது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

ரகசிய இடத்தில்தான் ராம்குமா ரிடம் விசாரணை நடந்தது. நேரில் நடித் துக் காட்டுவதற்காக நுங்கம்பாக்கம் காவல் நிலை யத்துக்கு அவரை போலீஸார் நேற்று காலை அழைத்து வந்தனர். மேஜை முன்பாக இருந்த சேரில் அவரை உட்கார வைத்து, உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சுவாதி கொலை நடந்த நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம் குமாரை நேரில் அழைத்துச் சென்று, கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டுவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்தன. ஆனால் செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால், அந்த திட் டத்தை போலீஸார் ஒத்திப்போட் டனர்.

நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடித்துக் காட்டச்சொல்லி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய் துள்ளனர். அதை போலீஸார் வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அவர் தங்கி யிருந்த மேன்ஷனுக்கும் அழைத் துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையில், சுவாதி பற்றிய பல தகவல்கள் அவரது நண்பர் பிலால் மாலிக்குக்கு தெரிவதால், அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி அவரிடம் ஏதாவது கூறி யிருக்கிறாரா என்று போலீஸார் விசாரிக் கின்றனர். போலீஸாருக்கு உதவும் வகையில் பிலால் மாலிக் கும் நேற்று காலை முதல் மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலேயே இருந்தார்.

போலீஸ் காவல் முடிகிறது

ராம்குமாருக்கு வழங்கப்பட்ட 3 நாள் போலீஸ் காவல் இன்று டன் முடிகிறது. இன்று மாலை 5 மணி அல் லது அதற்கு முன்பாக எழும்பூர் நீதி மன்றத்தில் ராம்கு மாரை போலீஸார் ஆஜர்படுத்து வர். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்படுவார்.

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் செயல்படும்: தமிழக அரசு தகவல்

THE HINDU

புதுக்கோட்டையில் 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங் கப்பட உள்ள புதிய அரசு மருத் துவக் கல்லூரி அடுத்த கல்வி யாண்டு முதல் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அனைத்து மக்க ளும், குறிப்பாக ஏழை எளிய மக்கள், தரமான மருத்துவ சேவை பெற வேண்டும் என்ற அடிப்ப டையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு முன்னோடி சுகாதாரத் திட்டங்க ளை செயல்படுத்தி வருகிறது.

மக்கள் உடல் நலன் காக்கும் வகையிலான நல்வாழ்வுத் திட்டங்களை திறம்பட செயல்ப டுத்தத் தேவையான மருத்துவர் கள் இருப்பது அவசியமாகும். எனவேதான், அரசு ஆண்டுதோ றும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சிவகங் கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங் களில் 3 மருத்துவக் கல்லூரி கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கப்ப டுகின்றனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் 7 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத் துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலில் அனுமதி பெறப்பட்டு மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்க்கப்படு கின்றனர்.

இந்த ஆண்டு, கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மாணவர் கள் சேர்க்கையுடன் மருத்துவப் படிப்பை தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மாண வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 810 மருத் துவ பட்டப்படிப்பு இடங் கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கரூர் மற்றும் புதுக்கோட்டை யில் தலா 150 மருத்துவ மாணவர் கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங் கப்பட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. இந்த 2 இடங்களி லும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக் கவும் தலா ரூ.229 கோடியே 46 லட்சம் நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப் பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017 - 2018-ம் கல்வியாண்டு முதல் 150 மாண வர்கள் சேர்க்கை யுடன் தொடங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற் கான ஆயத் தப் பணிகளை மேற் கொள்ள ஒரு சிறப்பு அலுவலர் மற்றும் முதல்வர் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.

கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத் துவக் கல்லூரி மருத்துவமனை யில் தேவையான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர் கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என 808 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவ தால் அரசுக்கு தொடர் செலவின மாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.39 கோடியே 68 லட்சம் செலவாகும்.

புதுக்கோட்டையில் தொடங் கப் பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதற்கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசி ரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர் கள் என 161 புதிய பணியி டங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் காரணமாக, அர சுக்கு தொடர் செலவினமாக ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8 கோடியே 87 லட்சம் செலவாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தலைவர்

காமராஜர்: மக்கள் தலைவர்

    சாரி
    கே.கே.மகேஷ்
    சிவசு
    வெ.சந்திரமோகன்
    நீதிராஜன்
    வடிவமைப்பு: ம.ரீகன்



ஞானத் தந்தைக்கு மரியாதை!

பெருந்தலைவர் காமராஜர் மறைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் அவருடைய கீர்த்தி உயருகிறதே அன்றி குறையவில்லை. தமிழகம் இன்றைக்கு எவற்றையெல்லாம் பெருமையாகக் கொண்டாடுகிறதோ அவற்றில் பெரும்பாலானவற்றுக்குத் தன்னுடைய வெறும் 9 ஆண்டுகள் (1954-1963) ஆட்சிக் காலகட்டத்தில் விதை போட்டவர்.
காமராஜரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், அவருடைய எளிமையை, நேர்மையை, தொலைநோக்குப் பார்வை கொண்ட செயல்பாடுகளைக் கொண்டாடிப் பேசுவதும், அவரை இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டு, ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்துவதும் நம்முடைய இயல்பு. அரசியலில் மட்டும் அல்ல; ஒவ்வொரு துறையிலும் காமராஜர்கள் இன்றைக்குத் தேவைப்படுகிறார்கள். காந்தியம் உருவாக்கிய தமிழகத்தின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான காமராஜரிடம் நாம் வியந்து பேசும் பண்புகள் நாடு மட்டும் கோரும் பண்புகள் அல்ல; ஒவ்வொரு வீடும் கோருபவை.
காமராஜர் ஆட்சிக்குப் பிந்தைய இந்த அரை நூற்றாண்டில், ஏன் இன்னொரு காமராஜரை நம்மால் உருவாக்க முடியவில்லை என்ற கேள்விக்கான பதில் நம்முடைய மதிப்பீடுகளின், விழுமியங்களின் வீழ்ச்சியில் இருக்கிறது. வரலாற்றை மறக்கும் சமூகம் வரலாற்றைத் தனதாக்க முடியாது. இதை 'தி இந்து' உணர்ந்திருக்கிறது. கூடவே, இளைய தலைமுறையினரிடம் நம் வரலாற்றையும் வரலாற்று நாயகர்களின் சாதனைகளையும் தொடர்ந்து பேச வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறது. தொடர்ந்து வரலாறு பேசுவோம்! புதிய வரலாறுகளை உருவாக்குவோம்!

காமாட்சி ராஜா!

இன்றைய விருதுநகருக்கு அன்றைய பெயர் விருதுபட்டி. 1903 ஜூலை 15-ல் பிறந்தார் காமராஜர். அப்பா குமாரசாமி, தேங்காய் வியாபாரி. அம்மா சிவகாமி. இவர்களுடைய குலதெய்வத்தின் பெயர் காமாட்சியம்மன். அதனால், பிள்ளைக்குக் காமாட்சி என்று பெயர் வைத்தார்கள். சிவகாமியோ பிள்ளையை எப்போதும் செல்லமாக 'ராஜா' என்றே அழைத்தார். காமாட்சியும் ராஜாவும் கலக்க 'காமராஜர்' ஆகிவிட்டார். காமராஜருக்கு ஒரு தங்கை உண்டு. நாகம்மாள். காமராஜருக்குத் தன் தங்கை மீது கொள்ளைப் பாசம்!

அழைத்தது தேசம்!

விருதுபட்டியில் திண்ணைப் பள்ளி நடத்தியவர் வேலாயுதம் வாத்தியார். அவரிடம்தான் காமராஜர் முதலில் படித்தார். பிறகு, ஏனாதி நாயனார் வித்யாசாலை. பிறகு சத்திரிய வித்யாசாலை. படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார் காமராஜர். விளைவாக, படிப்பை ஆறாம் வகுப்போடு நிறுத்திவிட்டு, மாமன் துணிக்கடைக்கு வேலைக்கு அனுப்பினார்கள். அங்கும் காமராஜரின் கவனம் அரசியலை நோக்கியே போனது. பக்கத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும் போய் விடுவார். காமராஜரின் இன்னொரு மாமன் திருவனந்தபுரத்தில் மரக் கடை வைத்திருந்தார். அங்கே அனுப்பினார்கள். ஆனால், அங்கேயும் காந்தியின் காங்கிரஸ் காமராஜரைத் துரத்தியது.

சுயம்பு!

காமராஜரைப் 'படிக்காதவர்' என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். கேரளத்தில் இருந்த கொஞ்ச காலத்தில் மலையாளத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார். தெலுங்கும் தெரியும். இந்தியும் பேசுவார். நாடாளுமன்றத்தில் அவர் ஒரு முறை ஆங்கிலத்தில் உரையாற்றியதை 'மாசற்ற ஆங்கிலம்' என்று புகழ்ந்து எழுதியது 'தி இந்து' ஆங்கில நாளிதழ். ஆனாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மாநாடுகளில் பேசும்போது தலைவர் பேசுவது என்னவோ தமிழில்தான். கையெழுத்தும் தமிழில்தான்!

காந்தி தரிசனம்!

காந்தி 1921-ல் மதுரைக்கு வந்தபோது அவரைப் பார்த்தார் காமராஜர். காந்தியே தனது வழிகாட்டி என்று முடிவெடுத்தார். காமராஜரிடம் வெளிப்பட்ட சுயமரியாதை, எளிமை, நேர்மை இப்படிக் கொண்டாடத் தக்க பல பண்புகளுக்கு உந்துசக்தி காந்தி. பின்னாளில் நேருவையும் தனது மனதில் உயர்ந்த பீடத்தில் வைத்திருந்தார் காமராஜர். இளம் வயதிலேயே அவருக்குள் இருந்த ஊக்கம் மிக்க தலைவனை அடையாளம் கண்டவர் சத்தியமூர்த்தி. தன்னுடைய தலைவராக சத்தியமூர்த்தியையே வரித்துக்கொண்டார் காமராஜர்.

படைக்கு முந்து!

போராட்டங்களுக்கு அஞ்சாத மனிதர் காமராஜர். கேரளத்தின் வைக்கத்தில் 1923-ல் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, பிற்காலத் தமிழகத்தைச் செதுக்கிய இரு தலைகள் அதில் பங்கேற்றன. ஒருவர் பெரியார்; இன்னொருவர் காமராஜர்! சிறைக்கும் அஞ்சியதில்லை. தன் வாழ்வில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் காமராஜர். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் காமராஜரின் பூர்விகச் சொத்துகளைச் செல்லரித்தன. தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை திருமணம் செய்துகொள்ளவதில்லை என்று நண்பர்களுடன் சபதம் எடுத்துக்கொண்டவர், கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. காமராஜர் அகராதியில் தியாகம் இல்லாத பொது வாழ்வுக்கு எந்த அர்த்தமும் இல்லை!

பூசல்களிடையே பூத்த பூ!

ஆங்கிலேயர் கால இந்தியாவில் நடத்தப்பட்ட தேர்தல்களை ஆரம்பத்தில் காங்கிரஸ் புறக்கணித்தது. பிறகு, தேர்தலில் பங்கேற்பது என்று முடிவெடுத்தது. 1934-ல் நடந்த தேர்தலில் வெற்றிகளைக் குவித்தது தமிழ்நாடு காங்கிரஸ். 1936-ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சத்தியமூர்த்தி தலைவர் ஆனார். காமராஜர் பொதுச்செயலர் ஆனார். 1937-ல் சென்னை மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் ஏற்பட்ட அதிகாரச் சண்டை தீவிரமானது. ராஜாஜியை எதிர்கொள்ள காமராஜர்தான் பொருத்தம் என்று முடிவு செய்தார் சத்தியமூர்த்தி. 1940-ல் காங்கிரஸ் இயக்கத்தின் தமிழகத் தலைவர் ஆனார் காமராஜர்.

மக்களின் முதல்வர்!

தமிழக காங்கிரஸில் சத்தியமூர்த்தி, ராஜாஜி என்று இரு மையங்கள் இருந்தன. முதல்வராக ஆட்சியை ராஜாஜி வைத்திருந்தாலும், கட்சியைத் தன் வசம் வைத்திருந்தார் சத்தியமூர்த்தியின் சீடரான காமராஜர். ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிவித்தபோது கடும் எதிர்ப்பு உருவானது. காலையில் பள்ளியில் படிப்பு: மாலையில் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்வது எனும் முறை இது. எதிர்ப்பை எதிர்கொள்ள பதவி விலகும் முடிவெடுத்தார் ராஜாஜி. இக்கட்டான இந்தச் சூழல்தான் காமராஜரை முதல்வர் இருக்கையை நோக்கி நகர்த்தியது. முதல்வரான உடனேயே குலக்கல்வி முறையை ஒழித்தார்.

சீர்திருத்த முதல்வன்!

சமூக நீதி இல்லாமல் இந்தியாவில் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்பதை முழுமையாக உணர்ந்தவர் காமராஜர். அரசியல் சாசனத்தில் அவர் முன்முயற்சியால் செய்யப்பட்ட முதல் திருத்தம் இதற்குச் சிறந்த உதாரணம். "கல்லூரியில் எங்களுக்கு இடம் கிடைக்காததற்குக் காரணம் இடஒதுக்கீடு முறை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது" என்று ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சீனிவாசன், செண்பகம் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி ஐயரே அவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். சென்னை உயர் நீதிமன்றமும் இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் போனது தமிழக அரசு. அங்கும் கதவு அடைக்கப்பட்டது. இதையடுத்து, அரசியல் சாசனத்தைத் திருத்த வேண்டும் என்று முழங்கினார் பெரியார். பிரதமர் நேருவிடம் பேசினார் காமராஜர். முதல் முறையாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. இன்றும் இடஒதுக்கீட்டு முறையைக் காக்கும் அரணாக அது நீடிக்கிறது.

கல்விப் புரட்சி!

காமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்தவர் அவர் என்பது. அனைவருக்குமான இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். 1957-1962 இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்தச் சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

முடியாது.. அது அகராதியில் கிடையாது!

அரசு அதிகாரிகளை காமராஜர் கையாளும் விதம் சுவாரஸ்யமானது. விவசாயம், வளர்ச்சித் திட்டம் என்று எதுவாகயிருந்தாலும் "இதைச் செய்ய முடியாது" என்று எந்த அதிகாரியும் அவரிடம் சொல்ல முடியாது. "முடியாதுன்னு சொல்ல நீ எதுக்குன்னேன்?'' என்பார். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், சாதிக்க வேண்டும்; சாக்குபோக்கு சொல்லக் கூடாது!

கல்விப் பசியாற்றியவர்!

காமராஜர் கொண்டுவந்த புரட்சித் திட்டமான மதிய உணவுத் திட்டம்கூட இப்படியான தடைகளைத் தாண்டியே வந்தது. பள்ளிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும் திட்டமிட்டு 1956-57-ல் இத்திட்டத்தைக் கொண்டுவந்தார். அன்றைக்கெல்லாம் இப்படியான திட்டத்தைக் கொண்டுவரும் அளவுக்கு அரசாங்க கஜானாவில் பணம் கிடையாது. ஆனாலும் மக்களின் ஆதரவோடு இந்த மகத்தான திட்டத்தைத் தொடங்கினார். விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பங்கை இத்திட்டத்துக்குத் தந்தனர். ஊர் கூடி தேர் இழுத்த திட்டம் இது.

ஆவடி சோஷலிஸம்!

சென்னை, ஆவடிக்கு அழியாப் புகழைத் தந்தவர் காமராஜர். அவர் முதல்வராக இருந்தபோது காங்கிரஸ் தேசிய மாநாட்டை அங்கே 1955-ல் நடத்தினார். சோஷலிஸம்தான் காங்கிரஸின் சமூகக் கொள்கை என்பதை உரக்கச் சொல்லிய மாநாடு அது. மாநாட்டை நடத்தியதோடு மட்டும் அல்லாமல், சோஷலிஸத்துக்கான முன்னுதாரண மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தை வளர்த்தெடுத்தார். தமிழகத்திலுள்ள பெரும்பாலான தொழிற்பேட்டைகள், பொதுத்துறை நிறுவனங்கள் காமராஜர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவையே. இன்றைக்குத் தெற்காசிய அளவில் பிரம்மாண்டமானதாகக் கருதப்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கான விதை ஆவடி மாநாட்டின் தொடர்ச்சி.

மின்னிய பொற்காலம்!

தமிழகத்தின் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காமராஜர், தொழில் சூழலுக்கு மின் உற்பத்தி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியவர். பெரியார் நீர் மின்னுற்பத்தித் திட்டம், குந்தா நீர் மின்னுற்பத்தித் திட்டம் எல்லாம் அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. இன்றைக்கு தேசிய அளவில் கொண்டாடப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டமும் காமராஜரின் பொற்கால ஆட்சியின் விளைவேயாகும். மின்னுற்பத்தியில் சென்னை மாகாணத்துக்கு மூன்றாவது இடம் பெற்றுத் தந்ததும் அவரது சாதனைகளுள் ஒன்று!

விவசாயிகளின் ஒளிவிளக்கு!

ஒரு நல்ல ஆட்சியாளர் முதலில் விவசாயிகளைத்தானே கொண்டாடுவார்? காமராஜர் ஆட்சிக்கு வந்த உடனே நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1962-ல்
நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்தார். 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலத்துக்கும் மேல் வைத்திருந்தால் அவற்றை அரசுடமையாக்க வழிவகுக்கப்பட்டது. நீர்வளத்தைப் பெருக்க மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், காவிரி கழிமுக வடிகால் திட்டம், புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்தார். தமிழகத்தின் பெரும்பாலான நதிநீர்த் திட்டங்கள் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.

தமிழ்த் தொண்டர்!

தமிழில் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தவர் காமராஜர். அவரது ஆட்சிக்காலத்தில்தான் கலைச்சொல் அகராதி வெளியிடப்பட்டது. தமிழ் ஆட்சி மொழிச் சட்டம், தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், 'தமிழ்ப் பாடநூல் வெளியீட்டுக் கழகம்' என்று தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். 'மெட்ராஸ் ஸ்டேட்'டைத் தமிழில் தமிழ்நாடு என்று மாற்றி எழுத 1962-ல் அவரது ஆட்சியில் மசோதா கொண்டுவரப்பட்டது. அது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், 1969-ல் அண்ணா ஆட்சியில் பெயர் மாற்றம் நிறைவேற அதுவும் ஒரு முக்கியக் காரணி எனலாம்.

பஞ்சாயத்து ஆட்சி!

கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நேரு தொடங்கியதையொட்டி தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ல் காமராஜர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. உள்ளாட்சி நிறுவனங்களுக்கு அதிகாரங்களும் நிதி ஆதாரமும் உட்கட்டுமான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

மக்களில் ஒருவர்!

காமராஜர் ஒன்பது ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் எப்போதும் அவருக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியே இருந்ததில்லை. மக்களால் எளிதில் அணுகக் கூடிய தலைவராகவே இறுதிவரை இருந்தார். முக்கியமாக, அரசு அதிகாரத்தின் பல்வேறு மட்டங்கள் தனக்கும் மக்களுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது என்று உறுதியுடன் இருந்தார்.

கே.பிளான்!

'மூத்த தலைவர்கள் அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி கட்சிப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைய தலைவர்களை அரசுப் பதவிகளில் அமர்த்த வேண்டும்' என்பது காமராஜர் முன்வைத்த திட்டம். காங்கிரஸ் இயக்கத்தை மேலும் பலமடங்கு பலப்படுத்துவதற்காக இதைக் கொண்டுவந்தார். அவரது பெயரிலேயே 'கே.பிளான்' என்று நாடு முழுவதும் இத்திட்டம் பேசப்பட்டது.
தானே ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதால் முதல்வர் பதவியை துறப்பதற்கு காமராஜர் தயாரானார். ஆனால், அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்த பெரியார் இதைக் கடுமையாக எதிர்த்தார். இது ஒரு அரசியல் தற்கொலையாக அமையும் என்று எச்சரித்தார். எனினும், தனது முடிவில் உறுதியாக இருந்த காமராஜர் பதவி விலகியதுடன், பக்தவத்சலத்தைப் பதவியில் அமர்த்தினார். இறுதியில் பெரியார் சொன்னதுபோலவே நடந்தது. காமராஜரோடு சேர்ந்து தமிழகத்தில் காங்கிரஸும் அதோடு சரிந்தது.

கிங் மேக்கர்!

நேருவின் மறைவுக்குப் பின்னர் பிரதமர் பதவிக்கான போட்டி எழுந்தது. லால் பகதூர் சாஸ்திரி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்ன ணியில் காமராஜரின் பங்கு அளப்பரியது. அடுத்த 20 மாதங்க
ளில் சாஸ்திரி மரணம் நிகழ மீண்டும் பிரதமருக்கான போட்டி தொடங்கியது. கடந்த முறை போலவே மொரார்ஜி தேசாய் இம்முறையும் நேரடியாகக் களத்தில் நின்றார். பிரதமர் பதவியில் காமராஜரே அமர வேண்டும் என்ற குரல்களும் ஒலித்த காலகட்டத்தில் இந்த முடிவுகளை எடுத்தார் காமராஜர். இந்திய அரசியலில் 'கிங் மேக்கர்' எனும் வார்த்தைக்கு அழுத்தமான அர்த்தம் கொடுத்தவர் காமராஜர்தான்!

எதிரிக்கட்சி அல்ல!

காங்கிரஸைத் தமிழ்நாட்டை விட்டு ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் போட்டவர் பெரியார். அவரே பின்னாளில், "இன்றைய காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்துள்ள முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்திராதது" என்று தள்ளாத வயதிலும் ஊர் ஊராக காமராஜர் ஆட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார். அரசியல்ரீதியாக காமராஜருக்குக் கடும் சவாலாக இருந்த திமுக நிறுவனர் அண்ணா தனிப்பட்ட வகையில் காமராஜரைக் கொண்டாடினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தத்துடனும் நெருங்கிய நட்பு காமராஜருக்கு இருந்தது. எதிர் தரப்பாக இருந்தாலும், எதிரி மனப்பான்மை காட்டாத காமராஜரின் அரசியல் பண்பு அது.

ஏன் காமராஜர் நமக்குத் தேவை?

மனிதன் என்பவன் பணம் காய்ச்சி மரம் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் தன்னாலான பங்களிப்பை நிறைவேற்ற எத்தனிக்கும் ஒரு சமூக ஊழியன். இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் ஒவ்வொரு சந்தோஷத்துக்கும் பின்னும் காமராஜரைப் போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் தியாகம் இருக்கிறது. ஒரு சமூகத்தை உயிரோட்டத்தோடு அடுத்த தளத்தை நோக்கி நகர்த்துவது இந்தத் தியாகம்தான். இந்தத் தியாகத்தைப் போற்றுவதன் மூலம் உண்மையில் நமக்கு நாமே எரிபொருள் ஊற்றிக்கொள்கிறோம். உந்துசக்தி பெறுகிறோம்.

காமராஜரைத் தரிசிக்க!

காமராஜரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புபவர்கள் சென்னையிலுள்ள அவரது நினைவில்லத்துக்குச் செல்லலாம். விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த வீடும், கன்னியா
குமரியில் உள்ள காமராஜர் நினைவு மண்டபமும் பார்க்க வேண்டிய இடங்கள். இங்கெல்லாம் காமராஜர் பயன்படுத்திய பொருட்களும், ஏராளமான புகைப்படங்களும் அவரது உன்னத வாழ்வின் சாட்சியங்களாக இருக்கின்றன. ஆ.கோபண்ணா எழுதிய 'காமராஜ் ஒரு சகாப்தம்' புத்தகம் காமராஜர் வாழ்க்கை தொடர்பான அரிய ஆவணம்!

Thursday, July 14, 2016

'காமராஜர் உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டை!' -மலைக்க வைத்த 'இட்லி' இனியவன்



vikatan.com

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தில் முழுக் கொழுக்கட்டையை தயார் செய்து வருகிறார் சமையல் கலை வல்லுநர் இனியவன். " நாளை காலை காமராஜர் வாழ்ந்த வீட்டில், அவரது உருவத்திலான இனிப்புக் கொழுக்கட்டையை பொதுமக்கள் பார்க்கலாம்" என்கிறார் நெகிழ்ச்சியோடு.

கோவையைப் பூர்வீகமாகக் கொண்டவர் 'மல்லிப் பூ' இட்லி இனியவன். மிகுந்த வறுமைக்கு இடையில் சென்னை வந்தவருக்கு இட்லி வியாபாரமே கை தூக்கிவிட்டது. பிரபலமானவர்களின் திருமணக் கூடங்களில் இனியவனின் இட்லிக்கு என தனி இடம் உண்டு. காலத்திற்கேற்றார் போல, சாக்லெட் இட்லி, பீட்ரூட் இட்லி, புதினா இட்லி, இளநீர் இட்லி,சிறுதானிய இட்லிகள் என விதவிதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினார்.

100 கிலோ எடையிலான இட்லி, அப்துல் கலாம் உருவத்தில் இட்லி, அன்னை தெரசா உருவத்தில் இட்லி என இட்லியை வைத்தே ஏராளமான கண்காட்சிகளை நடத்தியவர். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், காமராஜரின் 114-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவத்தில் இனிப்புக் கொழுக்கட்டையைத் தயார் செய்யும் வேலையில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார் இனியவன். நாளை காலை 9 மணியளவில் திருமலைப் பிள்ளை தெருவில் உள்ள காமராஜர் வாழ்ந்த வீட்டில், பொதுமக்கள் பார்வைக்கு கொழுக்கட்டையை வைக்க இருக்கிறார்.

.இனியவனிடம் பேசினோம்.  " காமராஜரின் பிறந்தநாளை, கல்வி வளர்ச்சி நாளாக அரசு கொண்டாடுகிறது. நமது வாழ்வில் ஏதோ ஒருநாள் என்று கடந்த போகக் கூடியதல்ல அவரது பிறந்தநாள்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த நேர்மையான ஆட்சியாளர் அவர். நான் எட்டாம் வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அதற்குக் காரணமே, காமராஜர் போட்ட சத்துணவுதான். இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறேன். கடந்த சில மாதங்களாகவே, அவரது பிறந்தநாளையொட்டி ஏதாவது செய்ய வேண்டும் என மனதிற்குள் எண்ண ஓட்டம் இருந்து கொண்டே இருந்தது. இட்லி வடிவத்தில் அவரைக் கொண்டு வருவதைவிடவும், கொழுக்கட்டை உருவில் கொண்டு வருவது என முடிவு செய்தோம். சுமார் 60 கிலோ எடையில் அவரது உருவத்தை இனிப்பு கொழுக்கட்டையில் கொண்டு வருவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த பத்து நாட்களாக அவரது உருவத்தை எப்படிக் கொண்டு வருவது என பலவிதமான முயற்சிகளில் இறங்கினோம். நேற்றுதான் முழுமையான வடிவத்தை எட்டினோம். இன்று இரவுக்குள் முழு கொழுக்கட்டையும் தயாராகிவிடும். தவிர, பொதுமக்கள் உண்பதற்காக 114 கிலோ எடையில் ராட்சத இனிப்புக் கொழுக்கட்டை ஒன்றையும் தயார் செய்து வருகிறோம். இந்த கொழுக்கட்டை நாளை காலை 9 மணியளவில், காமராஜர் வாழ்ந்த வீட்டில் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு உணவாக வழங்கப்படும்.
அவரது உருவத்தினால் ஆன கொழுக்கட்டையை, கலங்கரை விளக்கம் அருகில் உள்ள கடலில் மீன்களுக்கு உணவாகப் படைக்க இருக்கிறோம். கல்விக் கண் திறந்த காமராஜருக்கு எங்களால் முடிந்த சிறிய அளவிலான முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம்" என்றார் மகிழ்ச்சியோடு.

காமராஜருக்கு சிறப்புச் செய்யும் 'இட்லி' இனியவனின் இனிப்புக் கொழுக்கட்டை தித்திப்பாய் பரவட்டும்!

-ஆ.விஜயானந்த்

ஒரு பெண்ணுக்கு கால் டாக்ஸி பயணம் கொடுத்த வேதனை!



அடிப்படை வசதி முதல் நவீன வாழ்வின் ஆடம்பரங்கள் வரை குவிந்திருக்கும் நகரங்கள், இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சம்பவங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. விலாசனி ரமணி , எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். அவர் கடந்த ஞாயிறு இரவு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் செல்ல, ஓலா கால் டாக்சியை புக் செய்துள்ளார். அது 15 கி.மீ தூர பயணம்தான். வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் கூட ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். அனால், அந்த பயணம் அவருக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. காரணம்...? ஓட்டுநரின் மோசமான நடவடிக்கை.

அன்று என்ன நடந்தது?


திருவான்மியூரிலிருந்து புறப்பட்ட அந்த ஓலா வாகனம், வேகமாக சென்று இருக்கிறது. விலாசனி ஓட்டுநரிடம், “அவசரம் ஏதுமில்லை... மெதுவாகவே செல்லவும்...” என்றுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த ஓட்டுநர், வாகனத்தை வேகமாக செலுத்தி உள்ளார். மீண்டும் விலாசனி, “உங்கள் வேகம் எனக்கு அச்சமூட்டுவதாக உள்ளது... தயவு செய்து மெதுவாக செல்லுங்கள்...” என்று சொல்ல, அந்த ஓட்டுநர் கோபமாக, “மெதுவாகவெல்லாம் செல்ல முடியாது. குறிப்பிட்ட நேரத்திற்குள், நாங்கள் கணிசமான எண்ணிக்கையிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு அசெளகரியமாக இருந்தால், இறங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லியுள்ளார் கோபத்துடன்.




அச்சமடைந்த விலாசனி அண்ணா பல்கலைகழகம் அருகே வாகனத்திலிருந்து இறங்கி, ஆட்டோவில் செல்ல முயற்சித்துள்ளார்.

அதன்பின் நடந்தவற்றை விவரிக்கிறார் விலாசனி, “நான் வாகனத்திலிருந்து இறங்கிய பின்பும், அங்கேயேதான் ஓலா ஓட்டுநர் நின்று என்னை முறைத்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல், நான் மேற்கொண்ட பயணத்திற்காக, நான் பணம் தர வேண்டுமென்றும் நிர்பந்தித்தார். ஆனால், நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். அவர்தான் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் விடாமல், வாகனத்திலிருந்து இறங்க சொன்னார். நான் ஏன் பணம் தர வேண்டும்...? ஆனால், அதற்கு அந்த ஓட்டுநர் என் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினார்." என திகிலுடன் அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

காவல் துறையினரின் மெத்தனம்:

பின் இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் விலாசனி. அவர்கள் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்க சொல்லி உள்ளார்கள். ஆனால், அங்கும் அவரின் புகார் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அங்கு இருந்த காவலர்கள், “இந்த சம்பவம் நடந்தது கிண்டியில், அது எங்கள் அதிகார வரம்பிற்குள் வராது. நீங்கள் கிண்டி காவல் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள்...” என்று அலைக்கழித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது இரவு பத்து மணி.

ஏற்கெனவே, அச்சத்தில் இருந்த விலாசனியை இந்த சம்பவம் மேலும் மன உளைச்சலில் ஆழ்த்தி உள்ளது. தனியாக கிண்டி செல்ல மறுத்த அவர், குறைந்தபட்சம் தன்னை வளசரவாக்கத்திற்கு செல்வதற்காக பாதுகாப்பாக வாருங்கள் என்று காவலர்களிடம் கேட்டுள்ளார். அதன் பின், ஒரு காவலர் துணையாக அனுப்பப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விலாசனி, “சம்பவம் நடந்தது கிண்டி பகுதியில். அந்த ஓலா வாகன ஓட்டுநர் அந்தப் பகுதியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். நான் ஏற்கெனவே, அச்சமடைந்த சூழ்நிலையில் இரவு பத்து மணிக்கு மேல், என்னைத் தனியாக நந்தம்பாக்கத்திலிருந்து கிண்டி சென்று புகார் அளியுங்கள் என்று சொல்வது, எத்தகைய அறிவுடைய செயல் என்று எனக்கு தெரியவில்லை...” என்றார் வருத்தமாக.

சமூக ஊடகம் பணிய வைத்தது:

அந்த இரவில் நடந்த சம்பவங்களை சமூக ஊடகத்தில் எழுதினார் விலாசினி. அந்தப் பதிவை பல்லாயிரம் பேர் பகிர்ந்துள்ளார்கள். அதன்பின்னர்தான் இந்த பிரச்னை பொது வெளிக்கு வந்தது. விலாசனி தன் வருங்கால கணவரின் கைபேசியிலிருந்து ஓலா டேக்சியை புக் செய்ததால், அவர் மின்னஞ்சலில் இருந்தே ஓலா நிறுவனத்திற்கு புகார் அளித்துள்ளார். அதன் பின், ஓலா நிறுவனம் விலாசனியை தொடர்பு கொண்டு, நிச்சயம் அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளது. காவல் துறையும், புகாரைப் பெற மறுத்த காவலர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா நிறுவனம் என்ன சொல்கிறது?:

இது குறித்து ஓலா நிறுவனத்திடம் விளக்கம் பெற முயற்சி செய்தோம். நம்மிடம் பேசிய வாடிக்கையாளர் சேவை ஊழியர், “இந்த பிரச்னையை அதற்கான துறையிடம் எடுத்துச் செல்வதாக” கூறினார். நம்மிடம் இது குறித்து ஒரு மின்னஞ்சலும் அனுப்பச் சொன்னார். அனுப்பிவிட்டு, பதிலுக்காக காத்திருக்கிறோம்.

2010 ம் ஆண்டு துவங்கப்பட்டது ஓலா நிறுவனம். இப்போது நூறு நகரங்களில் தன் சேவையை வழங்கி வருகிறது. அதனிடம் 2,50,000 வாகனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்தனை திறன்மிகு ஓட்டுநர்கள் அவர்களிடம் இருக்கிறார்களா...? சமீபத்தில் ஓலா நிறுவனம் 700 மில்லியன் ரூபாயும், உபேர் நிறுவனம் 1,000 மில்லியன் ரூபாயும் முதலீடாக திரட்டியது.

'கல்விக் கடனுக்கு ரிலையன்ஸ்... ரிலையன்ஸ் கடனுக்கு?!' -நாடாளுமன்றத்தை உலுக்கப் போகும் ஜூலை 18

vikatan

இந்திய வங்கிகளில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாய் விவகாரம் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ' வருகிற 18-ம் தேதியில் இருந்து தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பா.ஜ.க அரசுக்குப் பெரும் தலைவலியாக இந்த விவகாரம் அமையும்' என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், " இந்திய வங்கிகளில் இருந்து பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 8.5 லட்சம் கோடி ரூபாயில், 5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன் பட்டியலில் சேர்ந்துவிட்டன. இந்தப் பணத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதால், அவற்றை இந்தியாவுக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லை என சி.ஏ.ஜி சசிகாந்த் சர்மா கூறியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய தொகையையும் வசூலிப்பது மிகக் கடினம். இதனால் இந்தியப் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தளவுக்குப் பணம் வழங்கியது எதற்காக?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

யெச்சூரியின் கேள்விகள், நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், " 'கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் சேர்ப்பேன்' என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார் மோடி. அதற்கான முயற்சிகளில் இறங்காமல், காங்கிரஸ் அரசைப் போலவே, பெரு நிறுவனங்களுக்கு இந்திய மக்களின் பணத்தில் இருந்து கணக்கு வழக்கில்லாமல் வாரியிறைக்கப்பட்டது சரிதானா" எனக் கேள்வி எழுப்புகின்றன இடதுசாரிக் கட்சிகள்.

மேலும் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன் விவரங்களும் வெளியுலகின் பார்வைக்கு வந்தன. அதில், ' கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, அதானி குழுமம் ரூ. 96,031 கோடி, எஸ்ஸார் குழுமம் 1.01 ட்ரில்லியன் ரூபாய், ஜி.எம்.ஆர் குழுமம் ரூ.47,976 கோடி, ஜி.வி.கே. குழுமம் 33,933 கோடி, ஜே.பி குழுமம் ரூ.75,163 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ ரூ. 58,171 கோடி, லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி, ரிலையன்ஸ் 1.25 ட்ரில்லியன் ரூபாய், வேதாந்தா குழுமம் 1.03 ட்ரில்லியன் ரூபாய், வீடியோகான் குழுமம் 45,405 கோடி ரூபாய் என மொத்தம் ரூ.7 லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுள்ளன. மொத்தத் தொகையில் 5.60 லட்சம் கோடி ரூபாய் பணம் வாராக்கடன் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டன' என்கின்றனர் வங்கி அதிகாரிகள். இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து இதுவரையில் எந்தப் பதிலும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மிடம், " இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது குறித்து, மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். அதானிக்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும், வங்கிப் பணத்தை வாரியிறைப்பதன் மூலம், அரசுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. இந்த நிறுவனங்களின் சொத்துக்களுக்கு இணையாக, வங்கிகளில் இருந்து கடன் பெற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து வசூலிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அத்தனையும் நம் மக்களின் வரிப்பணம்.

தற்போது மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளன வங்கி நிர்வாகங்கள். மாணவர்களை மிரட்டி கல்விக் கடன் வசூலிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். மாணவர்களிடம் கடனை வசூலிக்கிறார்கள் சரி. ரிலையன்ஸ் வாங்கிய கடனை யார் வந்து வசூலிக்கப் போகிறார்கள்? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலராக குறைந்தாலும், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைக்கு மேல் சலுகை வழங்குவது எதற்காக?.
இந்திய வங்கிகளில் இருந்து வாரியிறைக்கப்பட்ட பணத்திற்கு, நாடாளுமன்றத்தில் மோடி அரசு பதில் சொல்லும் வரையில் எதிர்க்கட்சிகள் ஓயப் போவதில்லை" என்றார் கொந்தளிப்போடு.

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை


VIKATAN 

ரயிலில் கூவிக் கூவி குழந்தையை விற்க முயன்ற கொடுமை! -போலீஸ் விசாரணையில் 2 பெண்கள்

கோவை: ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலில், இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் பயணித்துள்ளனர். அப்போது, சக பயணிகளிடம் யாருக்காவது குழந்தை வேண்டுமா என அவர்கள் கேட்டு குழந்தையை விற்க முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பயணிகள், குழந்தை உதவி மையத்துக்கு இது பற்றி புகார் அளித்திருக்கின்றனர்.

பயணிகளின் புகாரின் அடிப்படையில், கோவை ரயில் நிலையத்தில் வைத்து, குழந்தையை விற்க முயன்ற இரண்டு பெண்களையும் குழந்தையுடன் கோவை ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து இருக்கின்றனர். ரயில்வே போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர்கள் ஈரோடு, வாடிப்பட்டியைச் சேர்ந்த ராணி என்பதும், சேலத்தைச் சேர்ந்த சாந்தி என்பதும் தெரியவந்திருக்கிறது.

ராணி திருச்சூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சாந்தியின் மகள் ஷாலினிக்கு குழந்தை இல்லாததால், ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுக்கவோ, விலைக்கு வாங்கவோ அவர் முயற்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சம்சீலா என்பவருக்கு கடந்த 8-ம் தேதி பிறந்த பெண் குழந்தையை விலைக்கு அவர்கள் வாங்கியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படாததால், சிக்கல் வரும் என கருதி மீண்டும் அந்த குழந்தையை சம்ஷீலாவிடம் ஒப்படைக்க முடிவு செய்து அவர்கள் திருச்சூருக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும், அப்போது ரயிலில் செல்லும்போது குழந்தையை யாருக்காவது விற்றுவிடலாம் என முயன்றபோது சிக்கிக் கொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சம்சீலாவிடம் இருந்து இடைத்தரகர் மம்மூட்டிகாகா என்பவர் மூலம் குழந்தை வாங்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்ட குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், குழந்தையின் பெற்றோரான திருச்சூரைச் சேர்ந்த சம்ஷீலாவை வரவழைத்து அவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் குழந்தையை கூவிக் கூவி பெண்களே விற்க முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-ச.ஜெ.ரவி

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...