Sunday, July 17, 2016

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!

சவ்கார்பேட் ஆவோஜி... பாவ் பாஜி... வாவ் ஜி!


சென்னையின் சவுகார்பேட்டைக்குப் பல சிறப்புகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை அங்கேயிருக்கும் தெருவோர உணவுச் சந்தைகள். இவற்றை சென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கும், நம்ம ஊர் உணவுப் பிரியர்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு முயற்சி எடுத்திருக்கிறது ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ (Story Trails) நிறுவனம். அதன் விளைவுதான் இரண்டு மாதங்களாக அந்நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் ‘ஃபுட் டிரெயில்’ (Food Trail). அப்படியொரு சனிக்கிழமை மாலை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ‘ஃபுட் டிரெயி’லில் கலந்துகொண்ட அனுபவம் சுவையானது மட்டுமல்ல; சுவாரஸ்யமானதும்கூட.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மின்ட் தெருவில் உள்ள சின்னக்கடை மாரியம்மன் கோயிலிலிருந்து ஏழு பேர் அடங்கிய குழுவுடன் தொடங்கியது அந்த உணவு உலா. இந்த உலாவின் ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மி ஒரு கதைசொல்லி. அதனால், எங்கள் அனைவருக்கும் முதலில் உணவின் வரலாற்றைச் சுவையாகச் சொன்னார். பின்னர்தான், உணவுகளைச் சுவைக்க அழைத்துச் சென்றார். சவுகார்பேட்டையின் தெருக்களில் எப்போதுமே மக்கள் சுறுசுறுப்பாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சத்தத்தில் உணவுக் கதைகளை நாம் ‘மிஸ்’ பண்ணிவிடக் கூடாது என்பதற்காக அவர் பேசுவதைக் கேட்பதற்கு ஆரம்பத்திலே நமக்கு ஒரு ‘இயர்பீஸ்’ கொடுத்துவிடுகிறார் லக்ஷ்மி.

ஜார்ஜ் டவுனின் வரலாறு, ராஜஸ்தான், குஜராத்திலிருந்து எப்படி மக்கள் இங்கே வந்து குடியேறினார்கள், சவுகார்பேட்டையின் பெயர்க் காரணம், அந்த மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றையும் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை லக்ஷ்மி கொடுத்த பின் தொடங்குகிறது உணவு உலா.

# மன்சூக்லால் மிட்டாய்வாலா

உணவு உலாவில் நாங்கள் சென்ற முதல் இடம் ‘மன்சூக்லால் மிட்டாய்வாலா’ கடை. அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார் லக்ஷ்மி. “1946-லிருந்து செயல்படும் இந்தக் கடையின் இனிப்புகள் இங்கே ரொம்பப் பிரபலம். அதுவும் இந்தக் கடையில் தயாரிக்கும் ‘துதி அல்வா’வுக்கு (சுரைக்காய் அல்வா) நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்துடன், ‘மேதி பூரி’ (வெந்தயக்கீரை தட்டை), ஷக்கர் பாரா (சர்க்கரையும் மைதாவும் கலந்து செய்யப்படும் பதார்த்தம்) போன்ற இனிப்பு வகைகளும் இந்தக் கடையின் சிறப்பு” என்று சொல்லி நமக்கு அவற்றை வாங்கித் தருகிறார் அவர்.

# நோவல்டி டீ ஹவுஸ்

அங்கிருந்து நாம் சென்ற அடுத்த கடை ‘நோவல்டி டீ ஹவுஸ்’. இந்தக் கடையின் தேநீர் சிறப்பானது. ஆனால், இந்தக் கடையில் நமக்கு ‘பாவ் பாஜி’யைப் பரிந்துரைக்கிறார் லக்ஷ்மி. உண்மையிலேயே சுவையான ‘பாவ் பாஜி’தான். நம்ம ஊருக்கு ‘பாவ் பாஜி’யும், ‘வடா பாவ்’வும் எப்படி வந்தன என்று லக்ஷ்மி சொன்ன கதையைக் கேட்டுக்கொண்டே ‘பாவ் பாஜி’யை அனைவரும் சாப்பிட்டோம். அதற்குள் குழுவிலிருந்த ஒருவர் தேநீரைச் சுவைக்க ஆசைப்பட, அதை ஆர்டர் செய்தார் லக்ஷ்மி. தேநீர் வருவதற்குள் அதன் வரலாற்றைச் சொல்லிமுடித்தார்.



# ஜெய் ஸ்ரீ வைஸ்னவாஸ்

என்னதான் குஜராத்தி, ராஜஸ்தானி உணவு என்றாலும் நம்ம ஊர் இட்லியில்லாமல் ஓர் உணவு உலா இருக்க முடியுமா? அதுவும் சாதாரண இட்லி அல்ல. ‘தட்டு இட்லி!’ ஜெய்  வைஸ்னவாஸ் கடையிலிருந்து லக்ஷ்மி அதை வாங்கிவந்தவுடன் குழுவினர் அனைவரும் உற்சாகமாகிவிட்டனர். இட்லி பொடி தூவி, நெய்யில் மிதந்த அந்தத் தட்டு இட்லியை சாம்பார், சட்னியுடன் சுவைத்த எல்லோருக்கும் அப்படியொரு திருப்தி. நாங்கள் அனைவரும் இட்லியைச் சுவைப்பதில் பிஸியாக இருந்தாலும், விடாமல் எங்களுக்கு இந்தோனேஷியாவிலிருந்து இட்லி இங்கே பயணமாகிவந்த கதையையும், மராட்டிய மன்னர் சாம்பாஜியின் பெயரை சாம்பாருக்கு வைத்ததன் பின்னணியையும் சொல்லி முடித்தார் லக்ஷ்மி.

# ஜக்துஷா

தட்டு இட்லியைச் சுவைத்தபின் நாங்கள் அடுத்துச் சென்ற இடம் ஜக்துஷா. அங்கே நாங்கள் சுவை பார்ப்பதற்காகக் காத்திருந்தன ‘முறுக்கு சாண்ட்விச்’சும் குலாப் ஜாமூனும். “இப்போது அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சாட் உணவு வகைகளில் ‘முறுக்கு சாண்ட்விச்’சுக்கு முக்கிய இடமுண்டு. ஒரு தென்னிந்தியாவின் தின்பண்டத்தை வைத்து உருவாக்கியதால் நம்ம உள்ளூர் மக்களுக்கு இது பிடித்துவிட்டது. அத்துடன், கைமுறுக்கு என்பது நம்ம மக்களின் பாரம்பரியத் தின்பண்டங்களில் ஒன்று. திருமணமாகிச் செல்லும் பெண்ணுக்குச் சீதனமாகக் கொடுக்கப்படுபவை முறுக்குகள். அவற்றின் சுற்றுகளைப் பெருமையாகக் கருதிய காலமும் உண்டு. கிட்டத்தட்டப் பதினொரு சுற்றுகள் உள்ள கைமுறுக்குகள் இருக்கின்றன” என்று அவர் முறுக்குக் கதையைச் சொல்லி முடிக்கவும், நாங்கள் முறுக்கு சாண்ட்விச்சை சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.

# காக்கடா ராம்பிரசாத்

சவுகார்பேட்டைக்குச் சாப்பிடச் சென்றவர்கள் யாரும் காக்கடா ராம்பிரசாத்தில் சாப்பிடாமல் வர மாட்டார்கள். இந்தக் கடையின் சிறப்பாகச் சூடான ஜிலேபிகளும், பாதாம் பாலும் இருக்கின்றன. லக்ஷ்மி எங்களுக்கு வாங்கிவந்த பாதாம் பாலைச் சுவைப்பதற்கு வயிற்றில் இடமில்லையென்றாலும் அதை வேண்டாம் என்று யாராலும் மறுக்க முடியவில்லை. பாதாம் பாலைக் குடித்து முடித்தவுடன் உணவு உலா நிறைவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தோம்.

ஆனால், ‘பான்’ இல்லாமல் உணவு உலா முழுமையாக நிறைவுபெறாது என்று சொல்லி, பாண்டே பான் ஹவுஸ்ஸில் எங்கள் அனைவருக்கும் பான் வாங்கிக் கொடுத்தார் லக்ஷ்மி. இந்த உணவு உலாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுவையான உணவைச் சாப்பிட்ட திருப்தியுடன் மட்டுமல்லாமல் உணவு வரலாற்றைத் தெரிந்துகொண்ட திருப்தியுடன் விடைபெற்றுச்சென்றனர்.

இந்தச் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.1,300 வசூலிக்கப்படுகிறது. அத்துடன் ‘ஸ்டோரி டிரெயில்ஸ்’ சார்பாகச் சென்னை, மதுரை, புதுச்சேரி போன்ற நகரங்களில் பல்வேறு உலாக்கள் (‘டிரெயில்ஸ்’) நடத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: http://www.storytrails.in/india/


யூடியூப் பகிர்வு: சுவையான முறையில் தயாராகும் காஞ்சிபுரம் டம்ளர் இட்லி


கோயில் நகரமான காஞ்சிபுரம், அதன் நெடிதுயர்ந்த கோபுரங்களுக்காகவும், பிரமிடுகளைப் போன்ற வாயில்களைக் கொண்ட வளைவுகளுக்காகவும் அதிகமாக அறியப்படுகிறது. நல்ல விஷயம். அதே நேரத்தில் சூடான கோபுரங்களை ஸ்டீல் டம்ளர்களில் அடைத்திருப்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

புரியவில்லையா, காஞ்சிபுரத்தில் சிறப்பாகத் தயாராகும் டம்ளர் இட்லிகள்தான் அவை. கோபுரத்தின் வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் கோயில் இட்லிக்கும், நிஜ கோபுரத்தின் வடிவத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை.

இந்த இட்லியைத் தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 4 - 5 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் அருகில் இருக்கும் தனியார் உணவு விடுதியில் இது அன்றாட மெனுவில் இடம்பெறுகிறது. இந்த கோவில் இட்லி வேறு வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டாலும், இட்லி பொடி மற்றும் புதினா சட்னியோடுதான் அதிகம் பரிமாறப்படுகிறது.

செய்முறை

கெட்டியாக அரைக்கப்பட்ட இட்லி மாவை, ஸ்டீல் பக்கெட்டில் ஊற்றுகின்றனர். புளிப்பதற்காக அதை இரவு முழுக்கவோ அல்லது குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்கோ அப்படியே வைக்கின்றனர். வழக்கமாக அரைக்கப் பயன்படுத்தும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றோடு தயிர், சோடா உப்பு, கறிவேப்பிலை, நெய், முந்திரி ஆகியவற்றையும் சேர்க்கின்றனர்.

கவிழ்த்தி வைக்கப்பட்டுள்ள டம்ளர்களை எடுத்து அவற்றில் நெய் பூசுகின்றனர். பின்னர் தயார் நிலையிலுள்ள மாவை டம்ளர்களில் ஊற்றுகின்றனர். பின்னர் அவற்றை எடுத்து நீராவியில் வேக வைக்கின்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, மூடியைத் திறந்தால் சூடு பறக்க இட்லிகள் வெந்திருக்கின்றன. சூடான, பஞ்சு போன்ற கோபுரங்கள் தங்களைச் சாப்பிடச் சொல்லிக் காத்திருக்கின்றன. அந்த உணவு விடுதியில் தினந்தோறும் சுமார் 100 ப்ளேட் இட்லிகள் விற்பனையாகின்றன.

செய்வதைப் பார்த்தால் கடினமாகத் தோன்றுகிறதா? இருக்கலாம், ஆனால் இந்தக் காஞ்சிபுரம் இட்லியைத்தான் சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டவர்களும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். செய்வதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கண்ணுக்கும் வயிற்றுக்கும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கிறது இந்த காஞ்சிபுரம் டம்ளர் இட்லி.

கண்ணுக்கு விருந்தாகும் காஞ்சிபுரம் இட்லியைக் காண

போலீஸிடம் ராம்குமார் வாக்குமூலம்: 'சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன்; வேறு யாருக்கும் தொடர்பில்லை' - 3 நாள் போலீஸ் காவல் முடிந்து புழல் சிறையில் அடைப்பு


Return to frontpage

சுவாதியை நான் மட்டுமே கொலை செய்தேன். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று ராம்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீஸார் கூறினர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி ஐடி பெண் ஊழியர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட் டம் செங்கோட்டையை சேர்ந்த ராம் குமார்(24) கைது செய்யப்பட்டார்.

ராம்குமாரிடம் போலீஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. 13-ம் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை ராம்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 3 நாட்களும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து ராம்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. துணை ஆணையர் பெருமாள், ரயில்வே போலீஸ் எஸ்.பி. விஜயகுமார், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் மற்றும் தனிப்படையினர் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினர். நேற்று மாலையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்த மருத்துவக் குழுவினர், அவரது கழுத்தில் உள்ள காயத்தை பரிசோதனை செய்தனர்.

நீதிபதி விசாரணை

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணியளவில் மூர் மார்க்கெட் அல்லிக்குளத்தில் செயல்படும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு ராம்குமாரை போலீஸார் அழைத்து வந்தனர். நீதிபதி கோபிநாத் முன்பு அவரை ஆஜர்படுத்தினர். அப்போது போலீஸ் காவலில் ராம்குமார் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி யிடம் போலீஸார் சமர்ப் பித்தனர். வாக்குமூலத்தை போலீ ஸார் வீடியோ எடுத்துள்ளனர். அதன் சிடியையும் சமர்ப்பித்தனர். பின்னர் ராம்குமாரிடம் சுமார் அரை மணி நேரம் நீதிபதி கோபிநாத் தனியாக விசாரணை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறை யில் ராம்குமார் அடைக்கப்பட்டார். ராம்குமாரை வருகிற 18-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க ஏற்கெனவே நீதிபதி உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் வாக்குமூலம்

போலீஸ் காவலில் ராம்குமாரிடம் சுவாதியுடன் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அவரை கொலை செய்வதற்கு வேறு யாராவது உதவி செய்தார்களா? போன்ற பல கேள்விகளை போலீஸார் கேட்டுள்ளனர். “எனது காதலை நிராகரித்ததாலும், என்னையும் எனது குடும்பத்தையும் சுவாதி தவறாக பேசியதாலும்தான் அவரை வெட்டினேன். நான் மட்டுமே தனியாக முடிவு செய்து இந்த கொலையை செய்தேன். இந்த கொலைக்கும் வேறு யாருக்கும் தொடர்பில்லை” என்று ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் போலீஸார் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். சுவாதியை பற்றிய நிறைய தகவல்கள் பிலாலுக்கு தெரிவதால் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ராம்குமார் கூறும் தகவல்களை பிலால் மாலிக்கிடம் கேட்டு, அதுபற்றி சுவாதி ஏதாவது கூறியிருக்கிறாரா என்று போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

சுவாதி அலுவலகம் மற்றும் வீட்டில் பயன்படுத்திய லேப்டாப், பிரின்டர், செல்போன் ஆகியவற்றில் உள்ள தகவல்களை பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத் துக்கு போலீஸார் அனுப்பியுள்ள னர். அதில் என்னென்ன தகவல்கள் கிடைத்தன என்பதை போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. “சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து அவரது செல் போனையும் கொலையாளி எடுத்து சென்றார். எனவே, யாருக்கோ தேவையான ஒரு தகவல் சுவாதிக்கு தெரிந்துள்ளது. அதை அவர் தனது லேப்டாப்பில் வைத்து இருந்திருக்கலாம். அந்த தகவல் வெளியே தெரியாமல் இருக்க சுவாதியை கொலை செய்ய முடிவு செய்து, அதற்கு ராம்குமாரை பயன்படுத்தி இருக்கலாம்.

சுவாதியை கொலை செய்வதற்கு முன்பு 20, 21-ம் தேதிகளில் ராம்குமார் ஆந்திர மாநிலம் சென்று வந்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தில் ராம்குமார் ஒரு அம்பாக மட்டுமே செயல்பட்டு இருக்கிறார். அவரை எய்த வில் வேறு எங்கோ உள்ளது” என்று சிலர் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். இந்த தகவல் சமூக வலை தளங்களில் இப்போது அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

வாங்க, 100 வருஷம் வாழலாம்... வாழ்நாளில் டாக்டரை 'சந்தித்திராத' முதியவர்!


வாங்க, 100 வருஷம் வாழலாம்... வாழ்நாளில் டாக்டரை 'சந்தித்திராத' முதியவர்!

DINAMALAR

நோய் நோடியின்றி ஆரோக்கியமாக நுாறாண்டு வாழ எல்லோருக்கும் ஆசைதான். ஆனால், அந்த பாக்கியம் அவ்வளவு எளிதாக வாய்த்துவிடுவதில்லை. தவறான உணவுப் பழக்க
வழக்கம், வாழ்வியல் சூழல், புகையிலை வஸ்து மற்றும் போதை பழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அறுபதைத் தொடாமலே ஆயுசு முடிந்து விடுகிறது பலருக்கு.
சாப்பாட்டு தட்டில் பரிமாறப்படும், 'பொரியல் குவியல்' அளவுக்கு இணையாக, மருந்து மாத்திரை உட்கொண்டால்தான் உயிர்வாழவே முடியும்
என்கிற அபாய நிலை சிலருக்கு.'எப்படி இருக்கீங்க...' எனக்கேட்டால், 'ஏதோ, இருக்கிேறனே...' என, இளமைக் காலத்திலேயே புலம்புவோர் அதிகம். ஐம்பதை, அறுபது வயதைக் கடந்தோரை கேட்டால், சிலர், ''இனி இங்கு என்ன கிடக்கு... சாவுதான்
வரமாட்டேங்குது...' என, 'சங்கு ஊத' ஆட்களை அழைக்காத குறையாக
சலித்துக்கொள்வதும் உண்டு.இவர்களுக்கு மத்தியில் ஒரு வித்தியாசமான மனிதர். 'எப்படி இருக்கீங்க...' எனக்கேட்டால், 97 வயதிலும், 'எனக்கு என்னய்யா... ராஜாவாட்டம் ஜம்முன்னு இருக்கேன்'னு, முஷ்டி
யை உயர்த்துகிறார் சிதம்பரம். யாருடைய துணையுமின்றி தனி ஆளாக நாடு கடந்தும்
விமானத்தில் பறக்கிறார்.
அதுமட்டுமின்றி, 'மருத்துவமனைக்கே செல்லாமல் ஆயுசுக்கும் வாழ முடியும்' என, நம்பிக்கையூட்டுகிறார். இவர், நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகேயுள்ள உப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
கடந்த, 1919, ஏப்., 19ல், இலங்கையிலுள்ள தொட்லாக்கல்ல தோட்டத்தில், கதிர்வேல் - ஆராயிக்கு பிறந்தார். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட வறுமையிலும் தாயார் குடும்பத்தை பராமரித்தார்.
பள்ளி செல்ல வாய்ப்பு கிடைக்காத போதும், அங்கிருந்த ஆங்கிலேயர்களுடன் பழகினார். தமிழ், ஆங்கிலம் பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டார். மனக்கணக்கும் சர்வ சாதாரணமாக வந்ததால், அதே பகுதியில் உள்ள எஸ்டேட்டில், 'கணக்கு' பிள்ளை' ஆனார்.
வேலாயி என்பவரை மணமுடித்து, குழந்தையும் பிறந்தது. தாயகம் திரும்பும் ஆசை துளிர்த்தது. தனது தாயின் இறப்புக்குபின், கனத்த இதயத்துடன் பணிக்கு விடை கொடுத்து விட்டு தமிழகம் திரும்பினார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் தேவாலாவில், தேயிலைத் தோட்டம், உப்பட்டியில் வீட்டை வாங்கி குடியேறி, தேயிலைத் தோட்ட பணியில் ஈடுபட்டார்.
இன்று, 97 வயதை எட்டியும், அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குமுன், இலங்கைக்கு தனியாக சென்று வந்துள்ளார்.
அங்கு, இவரை வரவேற்ற தோட்ட நிர்வாகத்தினர், நினைவுப் பரிசு வழங்கி, கதிர்காமம் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர். இவரது மகன், ராஜமாணிக்கம், தனியார் எஸ்டேட்டியில் பணிபுரிந்து ஓய்வு
பெற்றுள்ளார். தற்போது, கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் வசித்து வருகிறார்.ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து சிதம்பரம் கூறியதாவது:
என் காலை உணவு பெரும்பாலும் பழைய சாதம், வெங்காயம்தான். அது, உடலுக்கு தெம்பு தருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, மாமிசம் எடுத்துக் கொள்வேன்.
தினசரி கடைக்கு சென்று பொருள் வாங்கி, வீட்டு வேலை செய்கிறேன். மனைவியின் மறைவு, எனக்கு பேரிழப்பு. மது, புகையிலை என, எவ்வித பழக்கமும் எனக்கில்லை. நான் ஆரோக்கியமாக இருக்க, இதுவும் ஒரு காரணம்.
எப்போதாவது காய்ச்சல் வந்தால், 'முடக்கத்தான் இலை' ரசம் உண்டு, சரி செய்துகொள்வேன்; இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை. எனது தாத்தா, 114 வயது வரை வாழ்ந்தார். அவரது வாழ்க்கை முறையை நானும் பின்பற்றுகிறேன். போதை பழக்கமின்றி வாழ்ந்தால், யாரும் நுாறாண்டு என்ன, அதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழலாம், என சிதம்பரம் கூறினார்.
நல்லதொரு வாழ்க்கை நமக்கும் வாய்க்க... மருத்துவமனை நாடாத ஆரோக்கியம் கிடைக்க... தவறான பழக்கவழக்கம், வாழ்க்கை முறை
களுக்கு விடைகொடுத்தால், இவரைப்போன்று நமக்கும் வாய்க்கும், 100ஐ தொடும் வாய்ப்பு!

எம்.பி.ஏ. முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி சாதித்த இளைஞர்

THE HINDU

எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு ஆடு வளர்ப்பில் களம் இறங்கி திட்டமிட்டு செயலாற்றி ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் சாதித்துக் காட்டியுள்ளார்.

கோவை கொடிசியாவில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2016’ கண்காட்சி நேற்று தொடங்கியது. வேளாண் தொழில், ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில், ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில் தோப்புக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் எஸ்.அருண்குமார் அமைத்துள்ள ஆடு வளர்ப்பு குறித்த அரங்கு கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதே இடத்தில் திடகாத்திரமாக நிற்கும் ஆட்டில் இருந்து பாலை கறந்து தேநீர் தயாரித்து ரூ.20-க்கு ஒரு கோப்பையில் வழங்குகிறார். அரங்கில் அவர் நிறுத்தி வைத்துள்ள தலச்சேரி இனத்தைச் சேர்ந்த ஆடுகளும், குட்டிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. கண்காட்சி நடைபெறும் இடத்தை சுற்றி வருபவர்கள், அவரது தொழில்முறை குறித்து விசாரித்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கூடவே, சூடாக தேநீர் அருந்திச் செல்கின்றனர்.

வளர்ப்பதற்கு ஆட்டுக்குட்டிகளை விற்பனை செய்கிறார். ஒரு கிலோ ரூ.350 என விலை நிர்ணயித்து ஆடுகள் விற்கப்படுகின்றன.

அருண்குமார் வசம் தற்போது 200 தலச்சேரி ஆடுகள் இருக்கின்றன. தனது சொந்த ஊரிலேயே ஆட்டுப் பால் விற்பனையிலும், ஆடு விற்பனையிலும் நல்ல வருமானம் ஈட்டி வருவதாக தெரிவிக்கும் அவர், எம்.பி.ஏ. படிப்பை முடித்துவிட்டு களத்தில் இறங்கியது என்பது கூடுதல் தகவல்.

தொழில்முறை குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை கே.சுப்ரமணியம், கூலித்தொழிலாளி. தாயார் சிவகாமி. கடந்த 2009-ம் ஆண்டு எம்.பி.ஏ. படிப்பு முடித்தேன். படிப்பை முடித்ததும் அடுத்தவரிடம் சென்று வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. வேளாண்துறையில் தொழில் நடத்த வேண்டும் என்பது லட்சியம். தொடர்ந்து, பல்வேறுகட்ட யோசனைக்கு பின்னர் ஆடு வளர்ப்பில் இறங்கினேன். தொடக்கத்தில் கடன் வாங்கி ரூ.3 லட்சத்தில் கேரளம் சென்று 40 ஆடுகளை வாங்கி வந்தேன்.

ஆடு வளர்ப்பு குறித்து கேட்டும், படித்தும் தெரிந்து வைத்திருந்தாலும் ஆடுகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தன. அவற்றை நேர்த்தியாக பராமரித்து வருமானம் ஈட்டுவது என்பது, தொழில் தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்தும் முடியவில்லை. 2012-ம் ஆண்டு வரை இடர்பாடுகளை சந்தித்து வந்தேன்.

தற்போது, நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஆட்டு பால் வயிற்றுப்புண், தைராய்டு நோய், உடல்சோர்வு, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளைப் போக்கும் என்பதால் பால் விற்பனை நன்றாக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.150-க்கு விற்பனை செய்கிறோம்.

தலச்சேரி ஆடுகள் மாமிச வகைக்கு உகந்தது. இரண்டு ஆண்டு கடந்த ஆட்டின் எடை மட்டும் 80 கிலோவை தாண்டி இருக்கும். இதில், நேர்த்தியுடன் இயங்குவதால் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. தற்போது, 5 பணியாட்களை வைத்து தொழில் நடத்தி வருகிறேன்.

எனது தாயாரும் உறுதுணையாக இருக்கிறார். இதைத்தவிர காங்கேயம் வகை நாட்டு மாடுகள் பராமரிப்பும் செய்து வருகிறேன். அதிலும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்றார்.

ஆடு வளர்ப்பில் சாதித்துள்ள அருண்குமார், ஆடு வளர்ப்பு ஓர் அனுபவக் கையேடு என்ற புத்தகத்தை ரூ.30-க்கு விற்பனை செய்து வருகிறார். அரங்குக்கு வரும் பெரும்பாலான பார்வையாளர்கள் அந்த புத்தகத்தை தவறாமல் வாங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

Friday, July 15, 2016

கழகத்தை மையம் கொண்ட காமராஜர் புயல்... மாற்று முகாமிலிருந்தும் மாலையிடப்பட்ட கர்மவீரர்!

vikatan.com

தமிழக வரலாற்றில், காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆண்ட 10 ஆண்டுகள் ஒரு பொற்காலம்...தமிழக வரலாறு, புவியியல் ரீதியாக வலுப்பெற்ற காலகட்டம் அவர் ஆட்சியில்தான்.

அவர் சென்னை மாகாண முதல்வராக பொறுப்பேற்ற சில வருடங்களில் அந்த சம்பவம் நிகழ்ந்தது. செய்தித்தாள்களை நாள்தவறாமல் படிக்கும் பழக்கமுள்ள முதல்வர் காமராஜின் பார்வையில், அன்றைய தினமணி நாளிதழில் இடம்பெற்ற ஒரு செய்தி தென்பட்டது. அன்றைய கல்வித்துறை ஆலோசகர் நெ.து சுந்தரவடிவேலு, தென்மாவட்டத்தின் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றபோது, ஒரு மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். அவனுக்கு முதலுதவி அளித்து தெளிவித்தபின், மயக்கத்திற்கான காரணம் கேட்டபோது அதிர்ச்சியானாராம் நெ.து சு. ஆம், அவன் அன்று காலை உணவு எடுக்காமல் வகுப்புக்கு வந்திருந்தான். 'இம்மாதிரி ஏழை மாணவர்களுக்கு பள்ளியிலேயே உணவு வழங்கினால் நன்றாக இருக்கும்' என ஆய்வின் முடிவில் அவர் பேசியதாக அந்த சிறிய செய்தி சொன்னது.

செய்தியை காமராஜ் படித்து முடித்த சில நொடிகளில், நெ.து சுந்தரவடிவேலுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் பறந்தது. அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. அடுத்த சில நாட்களில் சத்துணவுத் திட்டம் என்ற மகத்தான திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது. சிறிய செய்தி ஒன்றுக்கு காமராஜ் அளித்த முக்கியத்துவத்தால், சத்துணவுத் திட்டம் என்ற ஏழைக் குழந்தைகளின் பசி போக்கும் திட்டம் பிறந்தது. அந்த மனிதநேயர் காமராஜரின் பிறந்தநாள் இன்று.



ஆரம்பத்தில் அந்த திட்டத்தில் பெற்றோர் பங்களிப்பாக மிகக் குறைந்த தொகை வசூலிக்கப்பட்டது. அதிகாரிகள் சிலர், 'அரசு இவ்வளவு தொகை செலவு செய்கிறபோது எதற்காக மிக அற்பத்தொகையை பெற்றோரிடம் பெறவேண்டும். அரசுக்கு ஒன்றும் இது இழப்பில்லையே...' என்றனர். “நான் திட்டத்தின் செலவை குறைக்க இப்படி செய்யவில்லை. எந்த ஒன்றும் இலவசமாக அளிக்கப்பட்டால் அதன்மீது ஒரு பொறுப்பு வராது. இப்போது சிறிய தொகையானாலும் தங்களது பணமும் இதில் இருக்கிறது என அவர்களுக்கு தோன்றுமானால், இலவச உணவை வீணாக்கமாட்டார்கள்.” என்றார் காமராஜர். 3 வது படித்த காமராஜரின் நுண்ணிய அறிவை எண்ணி வியந்து போயினர் அதிகாரிகள். அதுதான் காமராஜர். அவரை மாற்றுக்கட்சியினரும் நேசிக்க அதுவே காரணமானது.

காங்கிரஸின் பரம வைரியான திராவிட இயக்கங்கள், அரசியல் மேடைகளில் அவரை வரிந்துகட்டி தாக்கினாலும், தனிப்பட்ட முறையில் அவர் மீது நன்மதிப்பு கொண்டிருந்தனர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இந்த வரிசைத் தலைவர்கள் காமராஜரை நேசித்தவிதம் அரசியல் கண்ணியத்திற்கு என்றும் அழியாத சாட்சிகள்.

காங்கிரசும், அண்ணா தலைமையிலான திமுகவும் அரசியல் களத்தில் அனல் கிளப்பிவந்த 60 களில், எம்.ஜி.ஆரை மையமாகக் கொண்டு திமுகவில் ஒரு புயல் கிளம்பியது. அண்ணாவின் தலைமையிலான திமுகவில் முக்கிய தலைவர்கள் வரிசையில் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர், எதிர் கூடாரத்திலிருந்த காமராஜர் மீது கொண்ட காதலுக்கு அந்த சம்பவம் சாட்சியானது.

கருத்தியல் ரீதியாக எம்.ஜி.ஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய அந்த சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வும்கூட. திமுகவில் ஒரு பெரிய புயலை கிளப்பிய அந்த சம்பவம் நிகழ்ந்தது 1965 ம் ஆண்டு காமராஜரின் 62 வது பிறந்தநாள் விழாவின்போது.



சென்னை, எழும்பூர் பெரியார் திடலில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், மேடையில் சற்று உணர்ச்சிவயப்பட, பின்னாளில் அது பெரும் சலசலப்பை திமுகவில் உருவாக்கியது.

எம்.ஜி.ஆரின் சர்ச்சைக்குரிய உரை இதுதான்...

“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.

கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.



காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.

தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?

இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்.



பண்புள்ளவன், பகுத்தறிவுள்ளவன் அண்ணா வழியில் நடப்பவன் மாலை இடுகிறான். காமராஜர் நேரில் இருந்திருந்தால் மாலைகளைக் குவித்திருப்பேன். ஏழைகளின் நல்வாழ்வுக்காக காமராஜர் தன்னையே தியாகம் செய்து கொண்டவர், அவருடைய லட்சியத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. அவர் மேற்கொண்டுள்ள லட்சியம்தான் நம்முடைய வழி. நான் ‘நாடோடி மன்னன்’ படத்தில் சொன்ன கருத்துக்கள், போட்ட சட்டங்கள் அனைத்தையும் காமராஜர் அமல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் இலவச கல்வி என்றேன். அது நடந்து வருகிறது. உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் எல்லா வசதியும் என்று இருந்த நிலைமையை மாற்றி தாழ்ந்த வகுப்பினருக்கும் எல்லாவற்றிலும் எங்கும் முதலிடம் என்று அமைத்தவர் காமராஜர்.

இங்கு காமராஜரை சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசினார்கள். நான் இதை ஏற்க விரும்பவில்லை. ஏனென்றால், சந்தனக் கட்டையை அரைக்க அரைக்க மணம் வீசுவது உண்மை. ஆனால் அது தேய்ந்து மறைந்து விடுகிறது. ஆகவே சந்தனக் கட்டைக்கு ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல சரியல்ல.
என்னைப் பொருத்தவரை காமராஜரை நான் உதயசூரியனுக்கு ஒப்பிடுகிறேன். சூரியன் கிழக்கிலிருந்து உதிர்த்து மேற்கில் மறைவதுபோல் தோன்றுகிறது. உண்மையில் அது மறையவில்லை. இருந்த இடத்தில்தான் இருக்கிறது. அதுபோல காமராஜரின் புகழ், தொண்டு உதயசூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது. நான் இதுவரை எந்தவித தியாகமும் செய்யவில்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால் தியாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு தியாகிகளால் பாராட்டுவதை கேட்கும்போது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.

காமராஜர் அவர்கள் நூறு ஆண்டுகள் வாழ்ந்து நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும். மக்களின் கவலைகளைப் போக்கி நல்வாழ்வைக் கொடுக்கவேண்டும். கல்யாண வீடு போல நாம் இங்கே சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதோடு நாம் சிந்திக்கவேண்டும். அதற்கு நாம் காமராஜரை வணங்கித்தான் ஆகவேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தும் காமராஜர் நீடூழி வாழவேண்டும்.



ஜனநாயக சோஷலிசம் என்று காமராஜர் சொல்கிறார். இது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். சர்வாதிகார ஆட்சி வேறு, பரம்பரையாக நாட்டை ஆள்வது வேறு, ஜனநாயகத்தில் மக்கள் விருப்பத்துடன் அமல்படுத்தப்படுவது சோஷலிசம், பேதமற்ற சமுதாயம் காண்பதுதான் அதன் அடிப்படை. ராஜாஜி இங்கே முதல் அமைச்சராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனை தி.மு.க.கழகம் எதிர்த்தது. காமராஜர் முதல் அமைச்சராக வந்தவுடனேயே மாற்றப்பட்டது. காங்கிரசின் திட்டத்தை அதே காங்கிரஸ்காரர் மாற்றினார். எப்படி மாறியது? ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் கட்சிக் கொள்கையும் மாறுகிறது. அதற்கு எடுத்துக் காட்டு காமராஜர்.

இப்படிப்பட்டவரைப் போற்றாமல் தி.மு.க.கழகத்தில் எனக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தி.மு.க.வின் லட்சியங்களைக் காமராஜர் நிறைவேற்ற விரும்புகிறார். அதற்குக் காலதாமதம் ஆகலாம். காமராஜர் என் தலைவர். அண்ணா என் வழிகாட்டி. என்னைவிடச் சிறந்தவர்களை என் தலைவர்களாக ஏற்கிறேன். இங்கே பேசிய என்.வி. நடராஜன், ‘காமராஜர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வேண்டும்‘ என்று குறிப்பிட்டார். நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவைதான். காங்கிரசை தி.மு.க.கழகம் எதிர்க்கிறது. தி.மு.கவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இரண்டும் எதிர்க்கட்சிகள்தான். அதில் எது உயர்ந்த கட்சி என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் மனமாற்றத்திற்கேற்ப மாறும் ஆட்சிதான் தேவை.

ஒருசமயம் காமராஜரை நேரில் சந்தித்து எங்கள் குறைகளை அவரிடம் ஒரு மணி நேரம் விளக்கிப் பேசினேன். அப்போது அவரது நல்ல எண்ணத்தைத்தான் கண்டேன். எண்ணி எண்ணிப் பூரித்தேன். என்னை அவர் தன்பக்கம் இழுக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. மாநகராட்சித் தேர்தலின்போது அவர் ‘வேட்டைக்காரன்’ வருகிறான் ஏமாந்து விடாதீர்கள் என்று ஏதேதோ பேசினார். நானும் பதிலுக்கு ஏதேதோ பேசினேன். அது அரசியல், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், பெரிய முதலமைச்சர் பதவியையே தூக்கி எறிந்தவர். தொண்டராய், தோழனாய் இருந்து மக்கள் சேவை செய்யமுடியும் என்று கருதி பதவியைத் துறந்தார்.



சாதாரண கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். சிகப்பு, நான் கறுப்பு என்று (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) முகவை ராஜமாணிக்கம் குறிப்பிட்டார். மனிதனுக்கு இந்த இரண்டு ரத்தமும் தேவை. ஏதாவது ஒன்று அதிகமாகி விட்டால் வியாதிதான். கறுப்பு என்றால் களங்கம் அல்ல. இரண்டும் சேர்ந்தால்தான் ஜனநாயக சோஷலிசம் மலரும்." என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் இந்தப் பேச்சு திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம்' என கட்சியில் கலகக்குரல் எழுந்தது. குறிப்பாக, 'காமராஜரை தலைவர் எனக் குறிப்பிட்டது அண்ணாவை அவமதிக்கும் செயல்' என பரபரப்பு கிளப்பினர் எம்.ஜி.ஆருக்கு எதிரான கோஷ்டியினர்.

இருப்பினும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். அண்ணாவிடம் தன் நிலைப்பாட்டை அவர் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தார். எம்.ஜி.ஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு, பொதுவான அண்ணா பற்றாளர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டது உண்மை. பின்னாள் நடந்தவை தமிழக அரசியல் வரலாற்றில் பதிவானவை.

1967 தேர்தல் நிலவரம் வெளியாகிக்கொண்டிருந்தது. விருதுநகர் தொகுதியில் கல்லூரி மாணவரான பெ.சீனிவாசனிடம் காமராஜர் தோல்வியுற்ற தகவலைக் கேட்டு எம்.ஜி.ஆர் கண்ணீர் வடித்ததாக சொல்வார்கள். திமுக வெற்றியை மற்றவர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அண்ணா நுங்கம்பாக்கம் வீட்டில் சோகமாகி இருந்தார். “காமராஜர் தோற்றிருக்கக்கூடாது. எத்தனை அதிருப்தி இருந்திருந்தாலும் மக்கள் காமராஜரை தோற்கடித்திருக்கக்கூடாது' என திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.



“சட்டமன்றத்தில் நாம் ஒரு வலுவான தலைவரின் அனுபவத்தை இழந்துவிட்டோம்”என வேதனைப்பட்டார் அண்ணா. காமராஜரின் வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அந்த தொகுதியில் முன்பின் அறிமுகமாயிராத ஒருகல்லுாரி மாணவனை நிறுத்தியிருந்தார் அண்ணா என்பார்கள். ஆனால் அதிருப்தி அலையில் காமராஜரும் தப்பவில்லை.

திமுக அரியணைக்கு வந்த சில மாதங்கள் கடந்த நிலையில், திமுக ஆட்சி பற்றி அதுவரை காமராஜர் எந்த விமர்சனமும் வைக்காதது பற்றி சிலர் காமராஜரிடம் குறைபட்டுக்கொண்டனர். " அவங்க வந்தே 4 மாதங்கள்தான் ஆகிறது. கட்சி நிர்வாகம் வேற...ஆட்சி வேற...இப்போதான் புதுசா வந்திருக்காங்க. ஆட்சியின் நிர்வாக விஷயங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும்...அதுக்குள்ள விமர்சிக்கறதுதான் ஜனநாயகமா... ?" என குறைபட்டவரை கடிந்துகொண்டார் காமராஜர். அதுதான் காமராஜர்.

அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கருணாநிதியும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கருணாநிதியின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.



கொதித்துவிட்டார் அவர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகார் ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிதராயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கருணாநிதி, " நான் சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" என கறாராக கூறினார்.

காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் துாணாக விளங்கிய கர்மவீரர், இப்படி மாற்றுக்கட்சியினராலும் போற்றக்கூடிய வகையில் தன் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நேர்மையான முறையில் கையாண்டார் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.?

- எஸ்.கிருபாகரன்

நன்றி அரசியல்வாதிகளே...! - ஒரே ரயில் சேவையை 4 முறை தொடங்கி வைத்து சாதனை!

vikatan.com

உத்தரபிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேதி மட்டும்தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உத்தரபிரதேச அரசியல்தான் இந்திய அரசியலின் மையம் என்பதால், இப்போதே அங்கு தேர்தல் களைக் கட்டத் தொடங்கி விட்டது. 'நான்தான் அதைத் தொடங்கினேன், இதைத் தொடங்கினேன்' என்று இப்பவே உ.பி அரசியல்வாதிகள் அடிக்கும் சுயதம்பட்டங்களை தாங்க முடியாமல் மக்கள் அல்லலோப்படுகின்றனர்.



அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த போட்டியால், ஒரே ரயில் சேவையை 4 அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் தொடங்கி வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அப்படி 4 முறைத் தொடங்கி வைக்கப்பட்ட ரயில் என்ற பெருமையை, பிரயாக் நகரில் இருந்து கான்பூர் செல்லும் பிரயாக் எக்ஸ்பிரஸ் ரயில் பெற்றுள்ளது. இந்த ரயிலை 4 அரசியல்வாதிகளுமே பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளனர்.

பிரயாக் ஸ்டேசனில் மாலை 4.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு 9.50 மணிக்கு கான்பூர் செல்லும். மொத்தம் 208 கி.மீ தொலைவு பயணிக்கும் இந்த ரயில், 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அந்த ரயில் செல்லும் பகுதியில் உள்ள எம்.பிக்கள் எல்லோரும், அந்த ரயிலை தொடங்கி வைத்த பெருமையை பெற்றுள்ளனர்.

இந்த ரயிலை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும் கான்பூர் எம்.பியுமான முரளி மனோகர் ஜோஷி. கடந்த ஜுலை 4 ம் தேதி, இந்த ரயிலுக்கு முரளி மனோகர் ஜோஷி பச்சைக்கொடிக் காட்ட, பிரயாக்கில் இருந்து கான்பூர் நோக்கி புறப்பட்டது. 'முரளி மனோகர் ஜோஷி பிரயாக் - கான்பூர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்' என பத்திரிகைகளில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன உன்னாவ் தொகுதி எம்.பி சாக்ஷி மகராஜ், தன் பங்குக்கு அந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்க களத்தில் இறங்கினார். அந்தப் பெருமையை தனது நண்பருக்கு கொடுக்க விரும்பி, ஜுலை 5 ம் தேதி தனது நண்பர் பிரியங் ஆர்யாவை ரயிலுக்கு பச்சைக் கொடி காட்ட வைத்து பெருமைப்பட்டுக் கொண்டார். .

இந்த பட்டியலில் அடுத்து வருபவர் கவுசாம்பி தொகுதி பரதிய ஜனதா கட்சியின் எம்.பி வினோத் சோனகர். இவர் லெலோபால்குஞ்ச் ரயில் நிலையத்தில், மணப்பெண் போல ரயிலை அலங்கரித்து பச்சைக் கொடி காட்டி பெருமைப்பட்டார். நான்காவதாக உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சேசல் பிரசாத் மவுரியா, இந்த ரயிலுக்கு பச்சைக் கொடி காட்டினார்.

இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைத்த 4 பேருமே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்தான். ஒரே கட்சிக்குள் இவ்வளவு உள்குத்தா என மாயாவதி கட்சியினர் சிரிக்கின்றனர்.

NEWS TODAY 21.12.2025