Monday, August 8, 2016

MCI de-recognises 51 medical colleges for academic year 2016-17 July 29, 2016 19:13 IST



The Medical Council of India (MCI) has de-recognised 51 medical colleges for academic year 2016-17, the highest over the previous three years.

Kerala and Uttar Pradesh have the highest number of medical colleges de-recognised, as per the latest data released by the health ministry. Eight medical colleges each in Kerala and UP have been denied permission to start admission process for the academic year 2016-17 for failing to meet the conditions of minimum standard stated under the MCI Regulations,1999.

Government Medical College in Painav, Idukki district in Kerala, is the sole government-run institution that was barred among seven other self-financing private colleges.

The two states are followed by Tamil Nadu (8 colleges) and Karnataka (5 colleges) for failing to get the central government's nod for the current academic year.

However, irregularities in fee and admission have not been taken into account to decide the eligibility for running institutions, the statement said.

Currently, medical colleges get government's permission for one year and has to be renewed every year. This renewal depends on MCI's assessment of colleges against the guidelines set under MCI Regulations.

According to the regulations, a medical college with an intake of 100 students annually will be granted permission only if the college has all the fourteen departments declared mandatory under the rules. These departments include psychology, forensics, community medicine and surgery, among others.

Medical institutions are mandated to provide accommodation for teaching and technical staff, have a campus area of at least 20 acres, except metros and 'A' class cities, a College Council comprising head of the departments, library and six laboratories, among other basic amenities such as water supply and electricity.


The NITI Aayog recommended replacing MCI with a National Medical Commission on July 26 in an attempt to make recruitment norms simpler while linking the process with the institutions' overall performance.

Read more at http://www.ibtimes.co.in/mci-de-recognises-51-medical-colleges-academic-year-2016-17-688357#OcamWhRmpbELStdd.99

Relief for 60 medical students

THE HINDU

Sixty students, who had been allotted MBBS seats under government quota in Shridevi Institute of Medical Sciences and Research Centre in Tumakuru last year but denied admission following non-recognition of the college by Medical Council of India (MCI), have been allotted seats in other colleges this year. However, the students have lost one year.

The SC had kept in abeyance admissions following a legal battle between the college and MCI last year, Medical Education Minister Sharan Prakash Patil said.

Aadhaar exemption for Assam students

Aadhaar exemption for Assam students

A staff reporter

Guwahati, Aug. 4: The Centre has exempted students of Assam from compulsory requirement of Aadhaar number for availing of UGC scholarships for higher education, Union human resource development minister Prakash Javadekar said today.

Javadekar informed Assam chief minister Sarbananda Sonowal and education minister Himanta Biswa Sarma of the exemption during a meeting in New Delhi after Sonowal drew the Union minister's attention towards the problems faced by the students of the state in getting UGC scholarship because of the compulsory requirement of Aadhaar number.

Enrolment for Aadhaar cards has started only in a few districts of the state.


It will be taken up in the rest of the state after completion of the NRC update.

Sonowal and Javadekar also discussed issues related to appointment of teachers in government schools in Assam. The chief minister requested him to expedite setting up a campus of Tezpur University at Jonai in Dhemaji district.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா?


தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்கள் சமூகநீதியின் விளைநிலமான தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் லதா* (20) என்ற தலித் பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நவீனாவும் (17) கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சாதியப் படுகொலை

தஞ்சாவூரின் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லதா, கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் திறந்த வெளிக் கழிப்பிடத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா, குமார் என்ற இரண்டு ஆதிக்கச் சாதி ஆண்கள் லதாவைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து விவரிக்க இயலாத கொடூரத்தைக் கையாண்டு கொலைசெய்து, அருகிலிருக்கும் முட்புதரில் வீசிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

லதாவின் இந்தக் கொடூரமான கொலைக்குப் பின்னால் அவர் பெண் என்பதோடு, அவரது சாதியும் காரணம் என்றே கருத வேண்டியுள்ளது. சாலியமங்கலத்தில் தலித் பெண்களில் ஆண்டுக்குப் பதினைந்து பேர் அங்கிருக்கும் ஆதிக்கச் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது மனித உரிமை அமைப்பான எவிடென்ஸ். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு எதிராகக் காவல் துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுத்ததில்லை என்று தெரிவித்திருக்கின்றனர் அப்பகுதி தலித் சமூகத்தினர். அந்த மக்கள் காவல் துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்திருக்கின் றனர் என்று தெரிவிக்கிறது எவிடென்ஸ் அமைப்பு.

சிறுமியை எரித்த சைக்கோ காதல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனாவின் கொலை, செந்தில் குமார் (32) என்பவரின் ‘காதல்’ வெறியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி செந்தில்குமார், நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து, வீட்டுக்குள் சென்று நவீனாவை உயிரோடு எரிக்க முயன்றிருக்கிறார். நவீனா அதிலிருந்து தப்பிக்க முயன்றதால் தன்மீது நெருப்பு வைத்துக்கொண்டு, அருகிலிருந்த நவீனாவையும் சேர்த்து எரித்திருக்கிறார். இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எழுபது சதவீதத் தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவீனா அங்கு சிகிச்சை பலனின்றிக் கடந்த புதன்கிழமை இறந்துவிட்டார்.

ஓராண்டுக்கு மேலாக, நவீனாவைப் பின்தொடர்ந்து பிரச்சினை கொடுத்துவந்திருக்கிறார் செந்தில். நவீனா விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறார். தன்னுடைய ஒரு கை மற்றும் காலை விபத்தில் இழந்துவிட்டு, நவீனாவின் அப்பாதான் வெட்டினார் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியான புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். காவல் துறையினர் விசாரித்தபோது, செந்தில் கூறியவை அனைத்தும் பொய் என்பதும், அவர் ரயில் விபத்து ஒன்றில் காலை இழந்ததும் உறுதியாகி யிருக்கிறது. அதற்குப் பிறகு, காவல் துறையினர் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த செந்தில் மீண்டும் நவீனாவைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். பள்ளிச் சிறுமியான நவீனாவுக்குச் செவிலியர் படிப்பு படித்து நோயுற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியக் கனவு இருந்துள்ளது. அந்தக் கனவைத் தன் ஒருதலையான காதலின் கொடுந்தீயால் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார் செந்தில்.

தீர்வு என்ன?

கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளில் ஒரு விஷயம் புலனாகிறது. இந்தக் கொலைகள் உயிரைப் பறிக்கும் நிகழ்வுகளாக மட்டும் நடந்துவிடவில்லை. வன்மமும் ஆண் திமிரின் மூர்க்கமும் வெளிப்பட்டுள்ள கொடூரக் கொலைகள் அவை. கொலையுண்ட பெண்கள் எல்லோருமே கொடூரமாகச் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்களைச் சக உயிராக நினைக்காமல் தன் உடல் இச்சைக்கும் வக்கிரங்களுக்கும் தீனியாகக் கொள்ளத்தக்க ஒரு நுகர்வுப் பண்டமாக மட்டுமே நினைக்கும் நோய்க்கூறு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. வினோதினி, ஸ்வாதி, வினுப்பிரியா, லதா, நவீனா போன்றவர்களின் கொடூர மரணங்கள் நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாமல் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிர்ச்சி தரும் வகையில் அதிகமாகவே இருக்கும்.

யாருக்கோ நடக்கிறது, எங்கோ நடக்கிறது என்று இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் விளைவு மோசமானதாகவே இருக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘பாலின சமத்துவ’த்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுத்துவிட்டால் மட்டுமே நிலைமை மாறிவிடப்போகிறதா? வெகுஜன ஊடகங்கள் அன்றாடம் போதிக்கும் பாலியல் அசமத்துவத்தை முறியடிக்க என்ன வழி? தலித்துகள்,பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்துவருவதற்கும் அதிகாரத்தில் உள்ள சித்தாந்தத்துக்கும் தொடர்பு உள்ளது. இதையும் நாம் கணக்கில் கொண்டே பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

சாதியற்ற, பால் சமத்துவம் கொண்ட ஒரு சமூகம் மட்டுமே பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரும். அது ஒரு தொலைதூரப் பெருங்கனவு. அதற்கு முன்பாக, பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளை எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டியது உடனடித் தேவை. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ்ச் சமூகம் சாதி ரீதியான இத்தகைய கொலைகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

(லதா* - பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Saturday, August 6, 2016

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம்

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.


ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது.

இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசு முடிவு



மக்களவையில் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று, மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்க 17 மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன. மத்திய அரசு படிப்படியாக இந்த மாநிலங்களில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதில் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்), கல்யானி (மேற்கு வங்கம்), நாக்பூர் (மகாராஷ்டிரா), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), பதின்டா (பஞ்சாப்) ஆகிய 5 இடங் களில் புதிய எய்ம்ஸ் மருத்துவ மனைகள் தொடங்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், அசாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவனைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் அமையவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

மும்பையில் விடிய, விடிய கொட்டிய கனமழை: சாலை, ரயில், விமான போக்குவரத்து முடங்கியது


மும்பையில் பெய்த கனமழையால் வெள்ள நீரில் மெல்ல மிதந்து செல்லும் மாநகரப் பேருந்து | படம்: பிடிஐ
மும்பையில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக புறநகர் ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக கிழக்கு எக்ஸ்பிரஸ், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கள் மற்றும் முக்கியமான வடக்கு தெற்கு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. இத னால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

சியோன்-குர்லா இடையே ரயில் தண்டவாளங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால், புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து மத்திய ரயில்வே செய்திதொடர்பாளர் கூறும்போது, ‘‘சியோன், மஸ்ஜித் மற்றும் சந்த்ரஸ்ட் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இருப்புப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மும்பை சிஎஸ்டி மற்றும் தானே இடையிலான புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பகல் 12.00 மணிக்குப் பின் இயக்கப்பட்டது’’ என்றார்.

எனினும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலோர கொங்கன் பகுதியிலும், மகாராஷ்டிராவின் மத்திய பகுதியில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீஸார் உட்பட அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையை அடுத்த தானே, பால்கர், ராய்கட் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் மும்பையில் இருந்து அகமதாபாத், புனே, நாசிக் மற்றும் கோவாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகா பலேஷ்வர் (159.6 மி.மீ) ராதாநகரி (128.0 மி.மீ), ராய்கட் (84 மி.மீ), மதேரன் (72 மி.மீ) மற்றும் ரத்னகிரி யில் (71.8 மி.மீ) மழை பதிவான தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 07.06.2026