Thursday, August 11, 2016

ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'

ஆக.9-ல் அன்றும் இன்றும்: ரயில் கொள்ளையில் ககோரிக்கும் சென்னைக்கும் 91 ஆண்டுகால 'பந்தம்'


தலைப்புச் செய்தியாகி இருக்கிறது கடந்த 9-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயில் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5 கோடியே 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.

இதுபோல் ஒரு ரயில் கொள்ளை 91 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்துள்ளது. அதுவும் ஆகஸ்ட் 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. இந்திய வரலாற்று நிகழ்வுகளில் முக்கியமானது அது. 'ககோரி சதி' அப்படித்தான் அந்த நிகழ்வு இந்திய வரலாற்றுப் பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ககோரி எனும் இடத்தில் அந்தக் கொள்ளைச் சம்பவம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது. பின்னாளில் ககோரி புரட்சி என பெயர் வழங்கப்பட்டது.

கொள்ளை அரங்கேற்றப்பட்டது எப்படி?

1925 ஆகஸ்ட் 9 உத்தரப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் இருந்து லக்னோ நகருக்கு ஒரு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் பிரிட்டிஷ் கருவூலத்தின் பணம் அடங்கிய பெட்டியும் இருந்தது. அந்தப் பெட்டியில் ரூ.8000 இருந்தது. அதை எப்படியாவது கொள்ளையடித்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். இந்துஸ்தான் புரட்சிகர கூட்டமைப்பின் (Hindustan Republican Association) உறுப்பினர்களில் சிலரே அந்தத் திட்டத்தை தீட்டினர். அஸ்பக்குல்லா கான், ராம்பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத் ஆகிய மூன்று இளைஞர்களும் அந்த சதித் திட்டத்தை தீட்டினர்.

அதன்படி பணப் பெட்டியுடன் சென்ற அந்த ரயிலில் ஏறிய புரட்சிப் படையினர் துப்பாக்கி முனையில் ரயில் ஓட்டுநரையும் கார்டையும் சிறைப்பிடித்தனர். ரயிலில் இருந்து ரூ.8000-த்துடனான பணப் பெட்டியையும் மிக நேர்த்தியாக கொள்ளையடித்துச் சென்றனர்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சேலம் - சென்னை ரயில் கொள்ளை சம்பவத்தை ககோரி கொள்ளை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி நிலைத்தகவல்கள் பதியப்படுவதால் ககோரி புரட்சியை நினைவுகூர்வது அவசியமாகிறது.

ஆனால் இரண்டு கொள்ளை சம்பவங்களின் நோக்கமும் நிச்சயமாக வெவ்வேறு.

தமிழில்: பாரதி ஆனந்த்

புதுக்கோட்டை அருகே காரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர்



புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 26 ஆண்டுகளாக பணிபுரியும் மருத்துவர் இம்மாதம் ஓய்வு பெறுகிறார்.

கிராமப்புற அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிவோரின் உயர் கல்விக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுமென மத்திய சுகாதாரத் துறை அறிவித் திருந்தும்கூட பலர் கிராமப் புறங் களில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதில்லை. இதனால் கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்து வர்களின் காலிப் பணியிடங்கள் அதிகமாகவே உள்ளன.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டி.நவரத்தினசாமி கூறியது:

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான் தஞ்சாவூர் அரசு மருத் துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு கடந்த 1990-ல் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தது முதல் அங்கேயே பணிபுரிந்து வருகிறேன். வேறெந்த மருத்துவமனைக்கும் செல்வில்லை.

பள்ளியில் படிக்கும்போதே மருத்துவராக வேண்டும். ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்பதால் நகர் பகுதிக்கு செல்லவில்லை.

இந்தப் பகுதியில் தொடர்ந்து சேவை செய்துவருவதால் அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

தொடக்கத்தில் இங்கு, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் 2 மட்டுமே இருந்தன. அதேபோல, பரிசோதனை கருவிகள் அவ்வளவாக இல்லை. ஆனால், தற்போது 250-க்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் கிடைக்கின்றன.

அதே போல, ஏராளமான பரிசோதனை கருவிகளும் வந்து விட்டன. மருத்துவத் துறையில் வசதிகள் குறைந்த காலத்தி லும், வசதிகள் பெருகிய காலத்திலும் பணியாற்றியதால் ஏராளமான மாற்றங்களை உணர முடிந்துள்ளது.

தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றியதால் தொடர் சிகிச்சையின் மூலம் பலர் குணமடைந்துள்ளனர். மருத்துவருக்கும், மக்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

நோயாளிகள் மருத்துவர் களையும், மருத்துவர்கள் நோயா ளிகளையும் அனுசரித்துச் சென்றால் மட்டுமே மருத்துவ சேவை திருப்திகரமாக இருக்கும். இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்காகச் சேவையாற்ற வேண்டும் என்றார்.

இம்மாத இறுதியில் இம் மருத்துவர் ஓய்வு பெற்றுச் செல்வது இப்பகுதியினருக்கு இழப்புதான் என்கின்றனர் காரையூர் பகுதி மக்கள்.

ஆங்கிலம் அறிவோமே - 122: சிகரத்துக்கு நேரெதிர்...

Return to frontpage

ஒரு திரைப்பட விமர்சனத்தில் Nadir of mediocrity என்று கூறப்பட்டிருந்ததாகக் கூறி இதை விளக்குங்களேன் என்கிறார் ஒரு நண்பர்.

சிகரம் நமக்குத் தெரியும். Peak, zenith. அதற்கு நேரெதிர் nadir. ஒரு சூழலைக் குறித்துக்கூட இப்படிப் பயன்படுத்துவார்கள். “Asking that question was the nadir of my career” என்றால் “அந்தக் கேள்வியால் எனது வேலை அம்பேல்” என்று அர்த்தம்.

அரபு மொழியில் nasir என்றால் நேரெதிர் என்று அர்த்தம். அதாவது உச்சத்துக்கு நேரெதிர். அதிலிருந்து வந்தது nadir.

அடுத்ததாக mediocrity-க்கு வருவோம். (இதை மிடியாக்ரிட்டி என்று உச்சரிப்போம்).

Mediocre ஆக இருக்கும் நிலைதான் mediocrity என்று சொன்னால் உங்களுக்கு வரக்கூடிய கோபம் நியாயம்தான். பின் என்ன, mediocre என்பதை விளக்க வேண்டாமா? சராசரியாக இருப்பது. அதாவது சிறப்பாக இல்லாதது என்று இதற்கு அர்த்தம்.

படம் சுமார் என்பதை இரண்டு அர்த்தத்தில் கொள்ளலாம். பரவாயில்லை என்பது ஒரு ரகம். மோசம் என்பதைவிடக் கொஞ்சூண்டு அதிகம் என்பது இன்னொரு ரகம். இந்த இரண்டாவது ரகம்தான் Nadir of mediocrity.

Dynamic verb என்கிறார்களே அப்படியென்றால் என்ன?

Dynamic என்றால் உற்சாகமான, இயங்குகிற என்று பொருள். ஒரு verb செயல்பாட்டைக் குறித்தால் அது dynamic verb. He ran five miles. They walked eight kilometers. He killed them with arrows. இவற்றிலுள்ள ran, walked, killed ஆகியவை dynamic verbs.

இப்போது இன்னொரு வாக்கியத்தைப் பார்க்கலாம். We believe that you are the best என்பதில் believe என்பது verbதான். ஆனால் இது ஒரு நிலையைக் குறிக்கிறதே தவிர செயலை அல்ல. இதுபோன்ற verbகளை stative verbs என்பார்கள்.

வண்ணங்கள் தொடர்பான சில வார்த்தைகளை சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தோம். இதைக் கவனித்த ஒரு நண்பருக்கு Black humour பற்றி அறிந்துகொள்ள ஆவல்.

Black humour என்பதை Black comedy என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். மிகவும் அதிர்வுகளை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வை வேறு கோணத்தில் அணுகி மனதை லேசாக்க முயற்சி செய்யும் விஷயம் இது. ஆனால் இந்தக் காரணத்தினாலேயே இந்த வகை நகைச்சுவைக்கு எதிர்ப்புகளும் எழுவதுண்டு. (அதெப்படி அவ்வளவு சீரியஸான விஷயத்தை நகைச்சுவையாக்கலாம்?). சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

“I said glass of juice. Not gas the jews” என்று ஹிட்லர் கூறுவதாக ஒரு நகைச்சுவை!

மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில் அமர்ந்தவாறு, அந்தக் கல்லறையை விசிறியால் வீசிக்கொண்டிருந்தார் அவரது கணவர். நெகிழ்ச்சியுடன் ஒருவர் காரணம் கேட்க, “தன் கல்லறையின் ஈரம் காய்ந்த பிறகுதான் நான் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென என்னுடைய மனைவி என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு இறந்தார்” என்றாராம்.

ஜான், டேவிட் ஆகிய இருவரும் மனநல மருத்துவ நோயாளிகள். ஒரு நாள் நீச்சல் குளத்தில் குதித்துவிட்டார் ஜான். டேவிடும் உடனே அந்தக் குளத்தில் குதித்து ஜானைக் காப்பாற்றினார். இவ்வளவு வீரதீரச் செயல் புரிந்தவர் எப்படி மனநோயாளியாக இருக்க முடியும்? டேவிடை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்தார் டாக்டர். “டேவிட் உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. நீ முழுவதும் குணமாகிவிட்டதால் உன்னை டிஸ்சார்ஜ் செய்யப்போகிறேன் என்பது நல்ல செய்தி. நீ கஷ்டப்பட்டுக் காப்பாற்றிய ஜான் குளியல் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார் என்பது கெட்ட செய்தி” என்றார். அதற்கு டேவிட் இப்படிக் கூறினார். “அவன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை. நான்தான் முழுவதும் நனைந்த அவன் உலர வேண்டும் என்பதற்காகத் தொங்க விட்டிருக்கிறேன்”.



Black humour!

The car purred down the street என்பதில் purred என்பதன் அர்த்தம் என்ன?

பூனை எழுப்பும் மிருதுவான ஒலியை purr என்பார்கள். ஒரு இயக்கதினால் உருவாகும் இதமான ஒலியையும் purr என்பார்கள்.

The car purred down the street என்பது மறைமுகமாக அந்த கார் புதியது, விலை உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது.

ஒலியை உணர்த்தும் verb அந்த nounனின் தன்மையையும் வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு.

The car rattled down the street என்றால் அந்த கார் மிகப் பழையது என்பதைக் குறிக்கிறது (லொட லொட என்ற சப்தம்).

The car whispered down the street என்றால் அந்த கார் விலை உயர்ந்தது என்று அர்த்தம். ஒருவேளை சீருடை அணிந்த ஓட்டுநர்கூட அதற்கு இருக்கலாம்.

நாவல்களில் காரின் ஒலியையும் அது உயிர் பெறுவதையும் குறிக்கப் பலவித வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் சில

Cranked, Coughed, Hummed, Stuttered, Whined, Buzzed, Rumbled, Grumbled, Growled, Snarled, Zoomed, Vroomed, Screamed, Roared, Thundered, Exploded

OF - OFF

Of off இரண்டும் சந்தேகமில்லாமல் வெவ்வேறு அர்த்தம் கொண்டவைதான்.

Of என்பது preposition. இதற்குப் பொருள் இதிலிருந்து வந்த, இதற்குச் சொந்தமான என்று சொல்லலாம்.

He is the father of Adarsh.

Come out of your sorrow.

Off என்பது adverb. On என்பதற்கான எதிர்ப்பதம். Switch-களை நினைத்தால் அர்த்தம் விளங்கிவிடும். கொஞ்சம் அழுத்தத்தைக் கொடுக்கும் வார்த்தையாகவும் off பயன்படுத்தப்படுகிறது. Push off, clear off, move off.

# சிப்ஸ்

Captain என்பதன் பெண்பால் என்ன?

Captainதான். Friend, Lawyer, Lecturer போன்ற சில வார்த்தைகள் இருபாலருக்கும் பொதுவானவை.

# I ain’t bothered என்றால்?

I am not bothered.

# Britain என்பதற்கும் Briton என்பதற்கும் என்ன வேறுபாடு?

Britain என்பது நாடு. Briton என்பது அந்த நாட்டில் வசிப்பவர்.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

ஆ'வலை' வீசுவோம் 25 - வியத்தகு வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம்!



தேடல் முடிவுகளை பட்டியலிடாமல் தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அலசி ஆராய்ந்து புதுமையான முறையில் முன்வைத்து வியப்பில் ஆழ்த்தும் தேடியந்திரம் இது. |

உங்கள் தேடல் அனுபவத்தை மாற்றிக்கொள்ள விருப்பமா? எனில், மாறுபட்ட தேடியந்திரமான வோல்பிராம் ஆல்பாவை பயன்படுத்திப் பாருங்கள்.

வோல்பிராம் ஆல்பா புதிய தேடியந்திரம் அல்ல; ஆனால், புதுமையான தேடியந்திரம். கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகமான வேல்பிராம் ஆல்பா தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து தன்னை மேலும் ஆழமாக்கி கொண்டுள்ளது. வெகுஜன தேடியந்திர அந்தஸ்து பெறாவிட்டாலும் மற்ற தேடியந்திரங்களால் முடியாத எண்ணற்ற விஷயங்களை செய்யக்கூடிய சிறப்பு தேடியந்திரமாக இருக்கிறது. ஆனால் ஒன்று... இந்த தேடியந்திரத்திற்கு நீங்கள் முதலில் பழக வேண்டும். ஏனெனில், வோல்பிராம் ஆல்பா வழக்கமான தேடியந்திரம் அல்ல; இது முற்றிலும் மாறுபட்ட தேடியந்திரம்.

கணக்கிடும் அறிவு இயந்திரம் (கம்ப்யூடஷேனல் நாலெட்ஜ் இஞ்சின்) என்றே வோல்பிராம் ஆல்பா அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது. இந்த அறிமுகமே பலரை மிரட்சியில் ஆழ்த்தக்கூடும். இந்த தேடியந்திரத்தை முதன் முதலில் பயன்படுத்தும் போதும் மிரட்சியே ஏற்படலாம்.

இதன் முகப்பு பக்கம் எளிமையாகவே இருக்கிறது. அதில் வழக்கமான தேடல் கட்டத்தையும் பார்க்கலாம். ஆனால் மற்ற தேடியந்திரங்களுக்கும், வோல்பிராம் ஆல்பாவிற்குமான பொதுத்தன்மை தேடல் கட்டத்தின் தோற்றத்துடன் முடிந்து விடுகிறது.

உங்கள் குறிச்சொற்களை எல்லாம் கொண்ட வராதீர்கள் என்று சொல்வது போல, வோல்பிராம் ஆல்பா, நீங்கள் எதைக் கணக்கிட அல்லது அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என முகப்புப் பக்கத்தில் கேட்கிறது. அதாவது, குறிச்சொல்லை தட்டச்சு தேடுவதற்கு பதில் எதைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அதைக் கேள்வியாக கேட்கலாம். அல்லது, எதையேனும் கணக்கிடுவதற்கான கேள்வியை கேட்கலாம்.

ஆம், வோல்பிராம் ஆல்பா கேடக்கப்படும் கேள்வியின் தன்மையை புரிந்துகொண்டு அதற்கேற்ற பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், வோல்பிராம் ஆல்பா கேள்வி - பதில் தேடியந்திரம் மட்டும் அல்ல; கேள்விகளுக்கு அது பதில் அளிக்க முற்படுகிறது. ஆனால் அதற்கு மேல் எண்ணற்ற விஷயங்களையும் செய்கிறது.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தேடியந்திரம் இணையத்திற்கு புதிதல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆஸ்க் (ஜீவ்ஸ்) தேடியந்திரம் இதைச் செய்ய முயன்றது. அதன்பிறகு வேறு தேடியந்திரங்களும் இந்த நோக்கத்துடன் அறிமுகமாயின. ஆனால் கேள்விகளுக்கு பதில் அளிக்க கம்ப்யூட்டர் சார்ந்த நிரல்களை நம்புவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. மனித மனம் எளிதாக புரிந்துகொள்ளும் சாதாரண கேள்வியை கம்ப்யூட்டர் புரிந்துகொண்டு சரியான பதில் சொல்ல வைப்பது பெரும் சவாலானது. சில நேரங்களின் கேள்வியின் தன்மையை கிரகித்துக்கொண்டு பொருத்தமான பதிலை அளித்தாலும் பல நேரங்களில் கேட்கப்படும் கேள்விக்கு பொருந்தாத பதிலை அளித்து வெறுப்பேற்றப்படும் அனுபவத்தை ஆஸ்க் உள்ளிட்ட கேள்வி பதில் இயந்திரங்கள் அளித்தன.

வரிகளையும் வாசகங்களையும் மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலேயே கம்ப்யூட்டர் நிரல்கள் புரிந்துகொள்வது என்பது தொழில்நுட்ப உலகின் பெருங்கனவாக நீடிக்கிறது. எனவே, கேள்விக்கு பதில் அளிப்பதாக எந்தத் தேடியந்திரமும் மார்தட்டிக்கொள்வதில்லை.

இந்தப் பின்னணியில்தான், வோல்பிராம் ஆல்பாவின் செயல்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன் வோல்பிராம் ஆல்பாவின் அடிப்படையான வேறுபாட்டை தெரிந்துகொள்ள வேண்டும்.

கூகுள் உள்ளிட்ட மற்ற தேடியந்திரங்கள் போல குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடல் முடிவுகளை பட்டியலிட்டு தருவதில்லை. ஏனெனில் இது இணையத்தில் தேடுவதில்லை. எனவே, இது இணையதளங்கள், இணையப் பக்கங்களை கொண்ட பட்டியலை முன்வைப்பதில்லை. மாறாக, தான் திரட்டி வைத்திருக்கும் தகவலை அலசி ஆராய்ந்து கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் விஷயங்களை புரிந்து கொள்வதற்கான புதிய வழியை முன்வைக்கிறது.

கூகுள் போன்ற தேடியந்திரங்களின் செயல்பாட்டை எளிதாக விளக்கி விடலாம். அவை இணையத்தில் வலைவீசி அதில் உள்ள இணையதளங்களை எல்லாம் அட்டவனையாக்கி வைத்திருக்கின்றன. இணையவாசிகள் குறிச்சொல் கொண்டு தேடும்போது அந்த குறிச்சொற்களை கொண்ட இணைய பக்கங்களை எல்லாம் கொண்டுவந்து கொட்டுகின்றன. குறிச்சொற்களை எடை போட்டு அதன் பொருத்தமான தன்மையை புத்திசாலித்தனமாக அளவிடுவதற்கான பிரத்யேக வழியை கூகுள் உருவாக்கி வைத்திருப்பதால் அதன் தேடல் பட்டியல் சிறந்ததாக கருதப்படுகிறது.

வோல்பிராம் ஆல்பா இதைவிட சிக்கலான செயல்முறையை கொண்டிருக்கிறது. எல்லா வகையான தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை புரிந்துகொள்ள பயன்படும் எல்லா வகையான மாதிரிகளையும், முறைகளையும், நிரல்களையும் துணையாக கொண்டு எதைப் பற்றியும் என்ன எல்லாம் சாத்தியமோ அதை எல்லாம் கணக்கிட்டு புரிந்துகொள்ளும் வகையில் அளிப்பதே வோல்பிராம் ஆல்பாவின் நோக்கமாக இருக்கிறது.

இதன் பின்னே சிக்கலான கணிதவியல் சமன்பாடுகளும், சிக்கலான நிரல்களும் இருக்கின்றன. இவற்றைக்கொண்டு டன் கணக்கிலான தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை அலசி பதில்களாக அளிக்கிறது.

சாமானியர்கள் வோல்பிராம் ஆல்பா பின்னே இருக்கும் தேடல் நுட்பத்தை புரிந்துகொள்வது சிக்கலானது. ஆனால் அதில் தேடிப்பார்க்கும் போது, இந்த நுட்பத்தின் பரிமாணத்தை பார்த்து வியக்கலாம். உதாரணத்திற்கு, இதில் ஐசஜ் நியூட்டன் பெயரை தட்டச்சு செய்து பார்த்தால் முன்வைக்கப்படும் தேடல் பக்கம் நியூட்டன் சார்ந்த முக்கிய அமசங்களை திரட்டி தொகுத்து அளிக்கிறது. முதலில் நியூட்டன் என்பதை பெளதீக விஞ்ஞானியாக புரிந்துகொள்வதாக தெரிவிக்கிறது. (நீங்கள் எதிர்பார்ப்பது வேறு நியூட்டன் என்றால் அதனடைப்படையிலும் தேடலாம்).

இந்த அறிமுகத்தின் கீழ் நியூட்டன் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட அடிப்படையான தகவல்கள் இடம்பெறுகிறது. அதன் கீழ் நியூட்டன் வாழ்க்கையின் கால வரிசை வரைபடம் மற்றும் அவரைப்பற்றிய முக்கிய விவரங்கள் இடம்பெறுகின்றன. நியூட்டனின் உடல் வாகு தொடர்பான தகவல்கள், பூர்வீகம், உறவினர்கள் ஆகிய விவரங்களுடன் கணிதம் ,பெளதீகம் உள்ளிட்ட துறைகளில் அவரது சாதனைகளும் பட்டியலிடப்படுகின்றன. நியூட்டன் பற்றிய விக்கிபீடியா விவரம் கடையில் வருகிறது. இந்த விவரங்கள் ஒவ்வொன்றையும் மேற்கொண்டு விரிவாக்கி அணுகும் வசதியும் இருக்கிறது. வழக்கமாக பார்க்க கூடிய நியூட்டன் பெயரிலான இணைதளங்கள், இணைய பக்கங்கள், கட்டுரைகள் போன்ற எதுவுமே கிடையாது. ஆனால் நியூட்டன் பற்றி கச்சிதமாக அறிந்துகொள்ள இந்த பக்கம் வழி செய்கிறது.

இது ஒரு உதாரணம்தான். நம்மூர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ரஜினி காந்த் துவங்கி பலரைப் பற்றிய தகவல்களை இப்படி மாறுபட்ட வகையில் தருகிறது. அதே போல இந்தியா என்று தேடினால் நம் தேசம் பற்றி அடிப்படையான தகவல்களை பல பிரிவுகளில் தொகுத்து அளிக்கிறது. தமிழ் மொழி என தேடினாலும் இதே போல நம் மொழி குறித்த விரிவான புரிதலை ஏற்படுத்த முயல்கிறது. வரைபடங்கள் போன்றவை பொருந்தக்கூடிய தேடல்களில் தான் இதன் உண்மையான பரிமாணத்தை பார்க்க முடியும். கணிதம், பெளதீகம் சார்ந்த தேடல்களில் இதை உணரலாம். குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை தேடும் போது இது அளிக்கும் விரிவான தகவல் சித்திரம் மூலமான பதில் மலைக்க வைக்கும்.

கூகுளின் எளிமைக்கு பழகிய இணைய மனதிற்கு இந்த தேடியந்திரம் முதலில் குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் இதை பயன்படுத்த துவங்கும் போது பிரம்மிப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக வழக்கமான தேடலில் இருந்து விலகிய தேடலுக்கு பயன்படுத்தும் போது இதன் செழுமையான தேடல் அனுபவம் லயிக்க வைக்கும்.

மற்ற தேடியந்திரங்களில் செய்ய முடியாதது, ஆனால் வோல்பிராம் ஆல்பாவில் சாத்தியமாகக் கூடிய விஷயங்கள் என்பதற்கும் நீளமான பட்டியலும் இருக்கிறது. இரண்டு இடங்களுக்கு இடையிலான தொலைவை கடக்க ஆகும் நேரத்தை கணக்கிடலாம், உறவு முறையை பரம்பரை வரைபடமாக்கி புரிந்து கொள்ளலாம், எந்த இணையதளம் பிரபலமாக இருக்கிறது என ஒப்பிட்டுப்பார்க்கலாம் என பலவகையான பிரத்யேக வசதிகளை இது அளிக்கிறது. கணிதவியல் சமன்பாடுகளுக்கான விடை காணும் வசதியும் இருக்கிறது.

தேடல் கட்டத்தின் கீழே இந்த வசதிகள் எல்லாம் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டீபன் வோல்பிராம் உருவாக்கிய வோல்பிராம் ரிசர்ச் நிறுவனத்தின் ஆய்வின் அடிப்படையில் இந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனுக்கான செயலி வடிவம் என பல விதங்களில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

தேடியந்திர முகவரி > https://www.wolframalpha.com/

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

Wednesday, August 10, 2016

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ எடுக்க தடை கோரி மனு: தேதி குறிப்பிடாமல் உத்தரவு தள்ளி வைப்பு


சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ராம்குமாரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான உத்தரவை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைதான இளைஞர் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். ஏற்கெனவே 3 நாள் போலீ்ஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட ராம்குமாரை, சம்பவம் நடந்தபோது கைப்பற்றப்பட்ட முந்தைய வீடியோ ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக மீண்டும் அதேபோன்று வீடியோ பதிவு செய்ய அனுமதி கோரி போலீஸ் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் ஆகஸ்டு 8-ம் தேதி (நேற்று) வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது.

அப்போது ராம்குமார் தரப்பு வழக்கறிஞர், ‘‘ராம்குமாரிடம் ஏற்கெனவே 3 நாட்கள் போலீஸார் போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டனர். தற்போது அந்த 3 நாளில் போலீஸார் ஜோடித்த ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே, மீண்டும் அவரை கொலையாளி போல நடிக்க வைத்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என போலீஸார் அனுமதி கோருகின்றனர். அதற்கு எழும்பூர் நீதிமன்றமும் அனுமதித்துள்ளது. இது சட்டவிரோதமானது. அதுவும் தற்போது சிறைக்குள் வைத்தே வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனக் கோருவதால் சுவாதி கொலையில் எல்லா பழியையும் ராம்குமார் மீது சுமத்த திட்டமிட்டுள்ளனர்’’ என்றார். அரசு தரப்பில், இந்த வீடியோ பதிவு, வழக்குக்கு தேவை யான ஒன்றுதான் என வாதிடப் பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இறந்து போன பெண்ணின் கல்விச்சான்றிதழ்களை கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு

இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி வழக்கை போர்க்கால அடிப்படையில் விரைவாக விசாரிக்கவேண்டும் என்றும் குரோம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாமனார் புகார்

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் அர்ச்சனா என்ற தமிழரசி. இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து தொடர்பான வழக்கும் தாம்பரம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், அர்ச்சனாவின் மாமனார் குரோம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘தன் மருமகள், தமிழரசி என்ற எஸ்.சி. சமுதாயத்தை சேர்ந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ்களை கொடுத்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றுள்ளதாக‘ கூறியிருந்தார்.

இதையடுத்து அர்ச்சனா மீது குரோம்பேட்டை போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அர்ச்சனா மனு தாக்கல் செய்தார்.

கிராம நிர்வாக அதிகாரி

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, தன் மருமகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று மனுதாரரின் மாமனார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, அர்ச்சனாவின் தந்தை ராமசந்திரன் கிராம நிர்வாக அதிகாரியாக பணி செய்கிறார். இவரிடம் துலுக்கானம் என்பவர் இறந்துபோன தன் மகள் தமிழரசியின் பெயரில் இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இறப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்த ராமசந்திரன், இறந்துபோன தமிழரசியின் உண்மை கல்விச்சான்றிதழ் கேட்டுள்ளார். அந்த சான்றிதழை துலுக்கானம் கொடுத்ததும், அந்த உண்மை சான்றிதழ்களை கொண்டு, ஆள்மாறாட்டம் செய்து, தன் மகளை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளார். அதனால், இந்த வழக்கில் அர்ச்சனாவின் தந்தையை போலீசார் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர் என்ற விவரம் தெரிய வருகின்றன.

இடைநீக்கம்

ஆனால், மனுதாரர் தரப்பு வக்கீல், ‘மருத்துவ படிப்பில் சேரும்போது மனுதாரர் மைனர் பெண். அவர் தந்தைதான் தவறு செய்துள்ளார். அதற்கு மனுதாரர் பொறுப்பாக மாட்டார். வேண்டுமானால் மனுதாரரின் தந்தையை இந்த வழக்கில் போலீசார் கைது செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று வாதிட்டார்.

ஆனால், அர்ச்சனா என்ற பெயரிலும், தமிழரசி என்ற பெயரிலும் இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமங்களை மனுதாரர் பெற்றுள்ளார். தற்போது ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதுசம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில், மனுதாரரை டாக்டர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

விரைவான விசாரணை

தற்போது, மனுதாரர் அர்ச்சனா, தமிழரசி என்ற பெயரில் போட்ட முகத்திரை துண்டு துண்டாக கிழிந்துவிட்டது. இந்த மோசடி வழக்கில், மனுதாரரை காவலில் வைத்து போலீசார் விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுக்க முடியாது. மனுதாரர் மீதான குற்றச்சாட்டு சமூகத்தில் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த வழக்கை போர்க்கால அடிப்படையில் குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் விரைவாக விசாரிக்கவேண்டும். இவ்வாறு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவில் கூறியுள்ளார்.

15k graduates, post-graduates vie for sweepers’ jobs in Agra civic body

TIMES OF INDIA
Agra: As many as 15,000, including graduates, post-graduates and BEd degree holders have applied for posts of 'safai karmachari' (sweeper) on contractual basis in Agra Municipal Corporation.
On August 1, the civic authority issued a notification for filling up 1,778 posts in class IV category. AMC specified that only a literate candidate could apply for the post, but officials have received an overwhelming response from candidates who are very highly qualified, considering the job.

Manoj Prabhat, executive engineer, who is coordinating the hiring process said, "Nearly 30% of applicants applied for posts of contractual sweepers are graduates, post-graduates and BEd degress holders. Wednesday is the last day for the submission of forms. We expect that the percentage of very highly qualified applicants will rise."

Ram Singh Gautam, deputy commissioner of AMC said, "Till now we have received nearly 50,000 applications for the post of sweepers. We expect to receive 30,000 more. When it comes to government jobs, we understand that the youth look for what they consider a safe career, but it is astonishing to see graduates and post-graduates applying for class IV category posts at salaries of nearly Rs 17,000 per month each."
On Monday, a report stated that Kanpur Municipal Corporation received nearly 5 lakh applications for 3,275 posts of 'safai karmachari'. A similar case was reported in January when around 17,000 youths applied for 114 posts of sweepers in Uttar Pradesh's Amroha district. In Bhatinda district of Punjab, as many as 8,500 applications were received for 19 class IV posts. The applicants included MBAs and MCAs.

NEWS TODAY 31.01.2026