Wednesday, September 21, 2016

Admission based on varsity rank list may defeat NEET's purpose
Sep 21 2016 : The Times of India (Chennai)

Adarsh Jain

The national eligibility cum entrance test (NEET) was expected to introduce transparency into MBBS admission in deemed universities.But CBSE, which conducts the exam, hasn't released a rank list that would have helped to ensure merit in the admission process. On top of that, a recent UGC order that allows deemed universities to create their own merit list from the pool of applications provides room for unscrupulous managements to favour capitation fee paying studen over others, say par ents.

V Ramasubbu, private bank employ ee, has applied a three private institu tions for his son “Without a merit lis framed by the stat government or th CBSE, it is tough t believe the admis sion process that pri vate universities wil follow,“ he says. “How will I know if my so is being given admis sion in the order of the score secured by candidates in NEET?“ he asks.

On September 15, the UGC asked 123 deemed universities to come out with an intra-merit list to carry out the admissions. “If for any reason common counselling is not being held by the state government or the deemed universities are not covered under the state government's common counselling, the latter should employ a transparent system of admission under which no meritorious student is denied admission in their campus. The admission should be purely done based on inter-se-merit applicants based on marks obtained in NEET,“ says deputy secretary of UGC Sunita Siwach.

It's not like the CBSE does not or has not followed the system of releasing a rank list to keep the admission process transparent. The joint entrance examination (JEE) that is the gateway for admission into the IITs, NITs, IITs and ISM Dhanbad, has a rank list that is available in the public domain after the results are published. The state's engineering admission system coordinated by Anna University, Chennai too follows a transparent admission system where the rank list is published in the public domain after scrutinising the applications. The health department too follows a similar system for admission in medical and dental courses.

CBSE officials however say that they do not have the orders to release a rank list like in the case of JEE.There is also the argument on the system that is followed in the graduate aptitude test for engineering (GATE) where again a rank list is not published in the public domain.

Private medical institutions have started issuing applications. Some are following the system of online application, while some are calling for applications through newspaper advertisements. “I do not know how many candidates have applied for admission. And, in the absence of the rank list, I also do not know if my son stands a chance to get admission in any of the universities we have applied to,“ said Ramasubbu.

The UGC, in its circular has asked deemed universities to submit a report after completing the admission process. “All admissions in MBBS BDS courses shall be in compliance with the rules mentioned in the September 15 circular. And a compliance report shall be submitted to the UGC after the completion of the admission process,“ said Siwach.Siwach.

Email your feedback with name and address to southpole.

toi@timesgroup.com

விவாதக் களங்கள்


மனித வாழ்க்கையில் விவாதங்கள் முதன்மையானவை. தனிமனிதன் தன்மனத்தோடும், ஒரு மனிதன் பிற மனிதனோடும், ஒரு குழு இன்னொரு குழுவோடும் நேரிய விவாதங்களை மேற்கொள்ளல் இயற்கையானது மட்டுமில்லை இன்றியமையாததும்கூட.
ஊரிலிருந்து வந்த உறவினர் ஒருவரிடம் "ஓய்வெடுத்துக் கொண்டிருங்கள் வங்கி வரை போய்வருகிறேன்' என்றேன். அவர் தனக்கும் அங்கு வேலையிருப்பதாகக்கூறி என்னுடன் வந்தார். வங்கிக்குள் நுழைந்தோம். இணைய இணைப்பின்மை காரணமாகப் (Non-connectivity of Net) பணம் செலுத்தவும் பணம் பெறவுமான அமைப்பிடங்கள் மூடப்பட்டிருந்தன.
என்னுடன் வந்தவர் உள்ளே இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தார். சொந்தஊர், இவ்வூருக்கு வரும் முன் வேலைபார்த்த இடம், படிப்பு என ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்தார். கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடி விடை சொல்லிக் கொண்டே வந்தவர் தான் வேளாண்மையியல் பட்டதாரி (Agricultural degree holder) என்றார்.
என் உறவினர் வங்கிப்பணி முடிந்து இல்லம் திரும்பியதும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
"வேளாண்மை படித்தவர் வயலுக்கு வேலைக்குப் போகாமல் வங்கிப் பணிக்கு வரலாமா' என்பது அவரின் முதல் வினாக்கணை. "வங்கிக்கு ஆளெடுக்கும்போது விண்ணப்பதாரர் ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் விதியே தவிரக் குறிப்பிட்ட பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள் எனக் கேட்க முடியாதே' என்பது என் விடை.
அவர் அடுத்த எய்த அம்பு கூர்மையானது. அது "இவர் வேளாண்மைப் படிப்பைத் தேர்வு செய்யாதிருந்தால் ஒரு விவசாயக் குடும்பத்து இளைஞன் அந்தப் படிப்பைப் பெற்றிருக்க முடியும். அதன்வழி படித்த படிப்பையொட்டி விளைச்சல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வழி பிறந்திருக்குமே' என்பதாம்.
சிறிது சிந்தித்துவிட்டு அவரிடம் "அப்படிப் பார்க்க வேண்டுமென்பதில்லை. மருத்துவர் ஒருவரோ பொறியாளர் ஒருவரோ இந்திய ஆட்சிப் பணித் (IAS) தேர்வெழுதி ஆட்சியராக வருவதில் என்ன தவறு' என்றேன்.
"வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொள்வோம். நல்ல ஆட்சியர் ஒருவர் கிடைக்கும்போது ஒரு நல்ல மருத்துவரை இந்தச் சமூகம் இழக்கிறதே மருத்துவர்களில் சிலர் ஆட்சிப்பணி செய்ய முடியும் ஆட்சியர்கள் ஒரு நாளும் மருத்துவராக முடியாதே' என்ற அவரின் வினாவால் சற்றே தடுமாறத்தான் இயன்றது.
அரைமணி நேரத்துக்கும் மேலாக வாதாடியபின் நிறைவில் "உங்களது கருத்தைச் சொல்லுங்கள்' என்று கூறி அமர்ந்தேன். அவரின் சொல்லாடல்கள் வருமாறு: "வேளாண்மைப் படிப்பு அவருக்கு மரியாதையான வேலை வாங்கித் தந்துள்ளது. ஆனால், படித்த படிப்புக்கு அவர் என்ன மரியாதை செய்துள்ளார்?
இரண்டாவதாக, வங்கி நுட்பப் படிப்பு (Banking Technology Course) படித்த ஒருவரின் வேலையைத் தட்டிப் பறிப்பதாகத்தானே வேளாண்மைப் படிப்பாளியின் வங்கிப் பணி அமையும்!' ஒருவர் வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்கும்போது அவர் எந்தத் துறைப் பட்டதாரி என்று பார்ப்பதில்லை. பார்க்க வேண்டியதுமில்லை. ஆனால் எல்லா இடத்துக்கும் இது பொருந்துமா என்பதையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
இக்கருத்துகளை எடைபோட்டுப் பார்த்தால் அவருடைய கருத்தில் அழுத்தம் சற்று அடர்த்தியாகவே தென்பட்டது. ஆனாலும், பிற துறைப் பட்டதாரிகள் வங்கிப் பணிக்கு உரியவரில்லை எனவும் கூறஇயலாது. மேலை நாடுகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு பொறியாளர்கள் தேவைப்படுவர் எனக் கணக்கிட்டு அத்தனை இடங்களை மட்டும் கல்லூரிகளில் அனுமதித்துக் கற்க வைப்பார்களாம்.
ஆனால் நம் நாட்டில் புற்றீசல்கள் போல எல்லாப் படிப்புகளுக்குமான கல்லூரிகள். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம். எந்த வேலையானானலும் பரவாயில்லை என்னும் மனநிலை மறுபுறம்.
அதனால்தான் கடைநிலை ஊழியருக்கான பதவிக்கு முதுகலை படித்தவர்களும் விண்ணப்பம் போடும் துயரச்சூழல். இவை போன்றவற்றால் "படிப்பும் வேலையும்' என்ற தலைப்பில் விவாதிக்க வேண்டிய சூழல் இயல்பாகவே இவண் கருக்கொள்கிறது.
வடமாநிலத்திற்குச் சுற்றுலா. குழுவாகப் பயணித்தோம். சென்னையிலிருந்து தொடர்வண்டிப் பயணம். எங்களுடன் பயணித்த ஒரு குடும்பம் எல்லோருக்குமாக இட்லி, துவையல், மிளகாய்ப்பொடி போன்றவற்றை எடுத்து வந்தது. இரவு உணவுக்கான நேரம் வந்தது.
ஒவ்வொருவர் கையிலும் காகித அட்டையிலான தட்டுகள். இட்லி வைத்திருந்த பெரிய பாத்திரத்திலிருந்து எல்லோருடைய தட்டுகளிலும் மூன்றுமூன்று இட்லிகள் வைக்கப்பெற்றன. துவையல் வைக்கப்பட்டது. சிலர் மட்டும் எண்ணெய் கலந்த மிளகாய்ப்பொடியையும் உடன் சேர்த்துக் கொண்டனர்.
மூன்று இட்லிகளையும் உண்ட ஒரு சிறுவனுக்கு அடுத்தாற்போல இட்லி தேவைப்பட்டது. பெரிய கலத்தில் உள்ள இட்லியை எடுக்கப் போனபோது அவனுடைய அம்மா அவனைத் தடுத்தார். இருங்க இதோ வந்துடறேன் என்றபடி அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த இட்லித்தட்டை இருக்கையில் வைத்துவிட்டார். விடுவிடென்று அந்தப் பெட்டியின் இறுதிப் பகுதியையும் கடந்தார். வெளிப்பகுதியிலிருந்த குழாயில் கையைக் கழுவிவிட்டுத் திரும்பினார்.
தான் கொண்டுவந்திருந்த பெட்டி ஒன்றைக் குடைந்து, பொருட்களைத் துழாவி, அடிப்பகுதியிலிருந்து ஒரு மர இடுக்கி ஒன்றை எடுத்தார். அதனையும் குழாய் நீரில் கழுவிக் கொணர்ந்தார். அந்த இடுக்கியின் மூலம் பெரிய கலத்திலிருந்து இட்லியை எடுத்துப் பையனின் தட்டில் வைத்தார்.
இந்தப் பணிகளை அவர் மேற்கொள்வதற்குள் பலரின் தட்டுகளில் இட்லிகள் தீர்ந்துவிட்டன. அந்தப் பையன் கேட்டான் இட்லியைக் கையாலெடுத்துக் கொண்டால் என்னவாம்? ஓர் இனந்தெரியாத சினம் இச்சொற்களில் இழைந்தது.
"அப்படியில்லே தம்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிற எச்சில் கையினாலே இட்லியை எடுத்தா மத்தவங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கும். சிலர் அருவருப்பாகக் கூட நெனப்பாங்க அதுனாலதான் கரண்டி, இல்லாட்டா இடுக்கி வச்சு எடுத்துக்கறோம்' என்றார்.
அந்தப் பையனைவிட இரண்டு மூன்று வயது மூத்த ஒரு சிறுமி சட்டென்று "எச்சில் கையினாலே எடுக்க வேண்டாம் இடது கையினாலே எடுத்துக்கலாமே' என்றார். பொதுவாக அப்படிச் செய்வதில்லை. இடது கையால் உணவினை நேரடியாகத் தொட்டு எடுப்பதில் பலருக்கு இசைவில்லை.
இதைப் பெரியவர்கள் புரியவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பையன் உதிர்த்த சொற்களில் இன்னமும் விவாதம் உறங்கிக் கொண்டுள்ளது அவன் கூறியவை வருமாறு:
"எல்லாம் சரிதான். நான் என் எச்சில் கையால் இட்டலிப் பாத்திரத்தில் கை வைக்கக்கூடாது என்கிறீர்களே, நான் தொட்ட இட்லியைத்தான் வெளியே எடுத்துக் கொள்கின்றேனே மற்ற இட்லிகள் எல்லாம் புனிதம் கெடவில்லையே, எல்லா உணவுகளிலும் என் எச்சிற்கை படவில்லையே, அப்புறம் என்ன தவறு?
ரெண்டாவதா நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையாலே எடுத்து மத்தவங்களுக்குக் கொடுத்தாத்தானே தப்பு? நான் எனக்குத்தானே எடுத்துக்கறேன்'. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்க்கு உடனடியாகப் பதில் கூறத் தெரியவில்லை. உண்டு பல நாட்களாகிவிட்டன. அந்த விவாதத்தை மட்டும் இன்னமும் அசைபோட்டுக் கொண்டே இருக்கிறோம்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஒரு மேடையில் பேசும்போது பின்வரும் செய்தியை முன்வைத்தார். "மக்களை ஏழை என்றும் பணக்காரன் என்றும் இறைவன் படைத்தான் என்று பலரும் நினைக்கிறோம். அது பொய். இறைவனைத்தான் நாம் அப்படி வேறுபடுத்தி வைக்கிறோம்.
பிள்ளையார்பட்டி என்னும் திருத்தலத்தில் கற்பகவிநாயகர் எழுந்தருளியிருக்கிறார். அவரை வணங்குகிறோம் அருள் பெறுகிறோம். கோவிலின் வருவாயும் கணிசமானது. அவ்வூரின் மையச் சாலையிலிருந்து உள்ளே வரும்போது ஒரு மரத்தடியில் ஒரு விநாயகர் இருக்கிறார். நித்தியபூசை என்பதாகக்கூட வழிபாடு அந்த விநாயகருக்குக் கிடையாது. ஒரு சின்னக் கர்ப்பூரம் கூட ஏற்றப்படுவதில்லை. மலர் வழிபாடு, அருச்சனை என எதுவுமே மரத்தடி விநாயகருக்கு இல்லை.
ஒரே ஊரில் இரண்டு விநாயகர்கள்மேல் இரண்டுவிதப் பார்வைகள். இப்போது சொல்லுங்கள் கடவுள் மனிதனை ஏழை, செல்வந்தர் எனப் படைத்தாரென்பது மெய்யா அல்லது மனிதர்கள் கடவுளை ஏழை, பணக்காரர் எனப் பிரித்து வைத்துள்ளனர் என்பது மெய்யா?'
ஆன்மிகத்துக்கு எதிரானதன்று இக்கேள்வி. அதிகார வர்க்கம் - அடிமை வர்க்கம் எனப்பேசும் போக்கினதாகவும் இக்கூற்று இல்லை. இவ்வாறு அமைந்தமைக்கான காரணங்கள் இருக்கக்கூடும். இக்கேள்விக்குச் சட்டென்று பதில் தர இயலாது. ஆனாலும், விவாதத்திற்குரியது.
புதுவையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஊரின் நடுவே பெரிய கோவில் இருக்கும். அதற்குப் பெயர் ஏழை மாரியம்மன் கோவில். அதே ஊரில் அக்கோவிலைவிடச் சிறிய ஆலயங்கள் உண்டு. அங்கு எழுந்தருளியுள்ள அம்மனை ஏழையம்மன் என்று அழைப்பதில்லை.
ஏராளமான செல்வங்களைக் கொட்டி வெகு நேர்த்தியான ஆலயம் ஒன்றை அரசன் எழுப்பிட, இறையன்பர் ஒருவர் தம் மனத்துக்குள்ளே ஆலயம் கட்டியபோது ஆண்டவன் மனக்கோவிலில் எழுந்தருளினானே தவிர, மன்னன் கோவிலுக்கு வரவில்லை என்ற புராணம் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தது.
கூர்ந்து நோக்கினால், புகழ்பெற்ற சிலருடைய வருகைக்குப் பிறகு சில ஆலயங்கள் பத்தர்களை ஈர்த்தன என்பது தெரியவரும். சில நம்பிக்கைகளும் இச்செயல்பாடுகளின் பின்னணியில் அமைந்திருக்கலாம்.
கற்பக விநாயகருக்கு உரிய முறையில் வழிபாடு இயற்றுவோர் பத்தில் ஒரு பங்காவது பக்கத்து விநாயகருக்கும் தங்களின் பங்களிப்பை செய்யலாமே செய்ய வேண்டுமென்பதுதான் இவ்விவாதத்தின் மையமாகிறது. இறையன்பர்களுக்கு இப்படிப் பாடம் நடத்த முடியாதுதான். ஆனால் கேள்வியின் பின்னால் உள்ள கனமான சிக்கலினை அழித்துவிடவும் முடியாதே.
வாழ்க்கைப் பாதையில் இப்படி விவாதங்கள் பல தோன்றும். சரியான விடைகளை நோக்கி அவை நகர்ந்தால் நலம் கூடும்; வளம் சேரும்.
விவாதங்களுக்கான களங்களும் மிகுதி. விவாதங்களும் நிறைய. சில களங்கள் மட்டும் ஓரளவே பொருத்தமான விடைகளைத் தந்திருக்கின்றன. எஞ்சியுள்ள தொடர் சிக்கல்களையும் விரிவாக விவாதிக்க முன்வரலாமே?


மீனம்பாக்கம் டூ சின்னமலை..! தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை


மீனம்பாக்கம் டூ சின்னமலை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்..! கட்டணம் எவ்வளவு?

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாககோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலம் பணிகள் முடிந்த நிலையில், கடந்தாண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சின்னமலை - விமான நிலையம் மற்றும் செனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணி கடந்த ஜூலையில் முடிவடைந்த நிலையில், அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து விமான நிலையம்- சின்னமலை இடையே மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.



இந்த நிலையில், விமான நிலையம்- சின்னமலை இடையே முதல் மெட்ரோ ரயில் சேவையை தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இருமார்க்கத்தில் தொடங்கப்பட்ட ரயிலை அம்சவேணி மற்றும் நளினி ஆகியோர் இயக்கினர்.

நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுவதால் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். தற்போது கோயம்பேடு - ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி பயணிகள் எண்ணிக்கை தினமும் 15 ஆயிரமாக உய ரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவை தொடங்கும் சின்னமலை - விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ்ட்டருக்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீட்டருக்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீட்டருக்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீட்டருக்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீட்டருக்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையத்தில் சின்னமலை வரை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் அதிக மாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்ட்ரல், எழும்பூரில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் போது கட்டணம் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.
சேகர் மற்றும் மனைவி கலாவதி


சேகரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! - பட்டாக்கத்தி கொள்ளையருடன் போராடி இளம்பெண்ணை காப்பாற்றிய வீரர்


டெல்லியில் நேற்று ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இளம் பெண் ஒருவர் சுமார் 30 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலையானபோது யாரும் உதவிக்கு வராதது போலவே டெல்லி சம்பவத்திலும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துவிட்டு சாதாரணமாக கலைந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையில் இளம் பெண்ணை கொடூரமான முறையில் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களிடம் தன்னந்தனி ஆளாக போராடி அந்தப் பெண்ணை காப்பாற்றியிருக்கிறார் சேகர்(42).

சென்னை துரைப்பாக்கம் அருகில் குமரன்குடில் பகுதியில் மளிகைக் கடை வைத்திருப்பவர் சேகர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு தனது கடையில் அமர்ந்திருந்தார். அப்போது சற்று தூரத்தில் இளம் பெண்ணின் அபயக்குரல் கேட்டது. அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தபோது சற்று தொலையில் ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றுகொண்டிருந்தனர். அவரோ பையை விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை ஓட்டியதால் கீழே விழுந்த அவர் நடுரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். ஆங்காங்கே பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.

ஆனால், சேகர் ஓடோடிச் சென்று காயமடைந்திருந்த அந்தப் பெண்ணை தூக்கி மீட்டார். இதற்குள் அந்தப் பெண் மயக்கமடைந்துவிட்டார். ஆட்டோ வுக்குள் ஓட்டுநருடன் மொத்தம் 4 பேர் இருந்தனர். பின்னால் அமர்ந்தி ருந்தவர்கள் இருவரின் கையில் பெரிய பட்டாக் கத்திகள் இருந்தன. அதைக் காட்டி மிரட்டிக் கொண்டே அவர்கள் ஆட்டோவுடன் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.

ஆனாலும் சேகர் வேகமாக ஓடி ஆட்டோவுக்குள் கையை விட்டு ஒருவரின் சட்டைக் காலரை பிடித்து சாலையில் தூக்கி வீசினார். அவரை மடக்கிப் பிடித்து தனது காலால் அழுத்திய நிலையில் ஆட்டோவிலிருந்து குதித்த இன்னொருவர் சேகரின் முதுகில் பட்டாக் கத்தியால் வெட்டினார். அப்போதும் விடாமல் திரும்பியவர் கத்தியை கையால் பிடித்து சமாளித்தார். அப்போது இன்னொருவர் சேகரின் கழுத்தை நோக்கி வேகமாக கத்தியை வீசினார். நொடிப் பொழுதில் சேகர் விலகிக்கொண்டபோதும் கத்தி பட்டு காது அறுந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் 4 பேரும் ஆட் டோவில் ஏறி தப்பிவிட்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட் டத்தை அக்கம்பக்கத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளனர். பின்னர் படுகாய மடைந்த அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சேகருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காது ஒட்டப்பட்டுள்ளது.



இந்த நிலையில்தான் ‘தி இந்து’-வுக்காக சேகரைச் சந்தித்தோம். “எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமம். என் கண் முன்னே ஏதாவது அநியாயம் நடந்தால் என்னால் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. என்ன ஆனாலும் சரி என்னால் முடிந்த வரை தட்டிக் கேட்பேன். நேற்று முன்தினம் (திங்கள்) அதைத்தான் செய்தேன். அதே சமயம் இங்கே கூடி நின்று வேடிக்கைப் பார்த்தவங்களையும் நான் குறை சொல்ல மாட்டேன். எல்லோரும் என்னைப் போலவே இருக்கணும்னு எதிர்பார்க்கிறது முட்டாள் தனம். அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியம் இல்லையா. அவர்கள் சார் பாகத்தான் நான் போராடு வதாக நினைத்துக்கொள் கிறேன்.

அதேசமயம் இது ஒன்றும் எனக்கு புதிது அல்ல. ஒரு வருடம் முன்பு இரவு 11.30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் எம்.சி.என். நகரிலிருந்து எனக்கு போன் வந்தது. அங்கே பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு எங்கள் பகுதியை நோக்கி ஒருவர் ஓடி வந்ததாக தகவல் சொன்னார்கள். நான் உடனே சென்று தெருவில் நின்று நோட்டமிட்டேன். தூரத்தில் வேகமாக ஒருவர் சட்டையை மாற்றிக்கொண்டு பின்பு நிதான மாக நடந்து வந்தார். மெதுவாகப் பதுங்கி அவர் பின்னால் சென்று அப்படியே மடக்கிப் பிடித்தேன்.

உடனே அவர் சிறு கத்தியால் என்னைக் குத்தினார். ஆனாலும் விடாமல் அவரை பிடித்துவிட்டேன். அதற்குள் பொதுமக்கள் உதவிக்கு வந்து விட்டார்கள். தங்கச் சங்கிலி மீட்கப் பட்டது. அதற்கு முன்பாக எங்கள் பகுதியில் பூட்டப்பட்ட ஒரு வீட்டுக்கு வெளியே ஒருவர் சந்தேகமான முறையில் நின்றுகொண்டிருந்தார். உன்னிப்பாக கேட்டபோது அந்த வீட்டுக்குள் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. உடனே நான் அந்த வீட்டு உரிமையாளரிடம் போனில் தகவல் கொடுத்துவிட்டு பதுங்கிச் சென்று வெளியே நின்றிருந்தவரை மடக்கிப் பிடித்து சத்தம் போட்டேன். மக்களும் வந்துவிட்டார்கள். மொத்தம் 4 பேரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். அவர்களில் வி.ஐ.பி. ஒருவரின் மகனும் அடக்கம்” என்றார்.

அவரிடம், “இப்படி செய்யும்போது உங்களுக்கு பயமாக இல்லையா? நேற்றைய சம்பவத்தில் உங்கள் உயிரே பறிபோயிருக்கலாம் இல்லையா?” என்று கேட்டோம். “நான் காந்தி ஜெயந்தி அன்னைக்கு பிறந்தவன். காமராஜரின் நினைவுநாள் அது. நான் பிறந்து 5 வயதிலேயே என் அப்பா தவறிட்டார். என்னுடன் பிறந்தவர்கள் 5 பெண்கள், ஒரு பையன். நான்தான் வீட்டில் மூத்த மகன். என்னால் பள்ளிக்குச் சென்று படிக்க முடியவில்லை. சிறுவனாக இருந்தபோதே கிடைத்த வேலைக்குச் சென்று எனது குடும்பத்தை பராமரித் தேன். நானாகவே எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றுக் கொண்டேன். ஓய்வு நேரத்தில் கிடைக்கும் செய் தித்தாள்களை புத்தகங் களை எல்லாம் படிப்பேன். பகவத் கீதை, பைபிள் மற்றும் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் படித்தேன். அவற்றிலிருந்து நான் கற்றுக்கொண்டது எவை என்றால் - உண்மையாக இருப்பது; நேர்மையாக இருப்பது; தவறுகளுக்கு எதிராக போராடுவது. இதைத்தான் நான் செய்து வருகிறேன்.

சென்னைக்கு 20 வருடங்களுக்கு முன்பு வந்தேன். திருவான்மியூரில் சிமென்ட் கிடங்கில் மூட்டை தூக்கிப் பிழைத்தேன். அதில் ஓரளவு திருப்தியான வருமானம் கிடைத்தது. எனது 4 தங்கைகளுக்கும் தம்பிக்கும் திருமணம் செய்து வைத்தேன். ஒரு தங்கை உயிரோடு இல்லை. மற்ற அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். நானும் திருமணம் செய்துகொண்டு இந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன். 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். ஆண்டவன் கருணையால் நிம்மதியாக இருக்கிறது வாழ்க்கை” என்கிறார்.

இவரது மனைவி கலாவதி, கண் கலங் கிய நிலையில் நம்மை கையெடுத்து கும்பிட்டு, “இவரு போராட்டம் போராட் டம்ன்னு சொல்றாருங்க. எனக்கு பயமாக இருக்குது. எங்களோட பாது காப்புக்கு ஏற்பாடு செய்யுங்க. எங்க ளுக்கும் ரெண்டு குழந்தை இருக்கு இல்லையா” என்கிறார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. தமிழக அரசு சேகரை கவுரவிப்பதுடன் அவருக்கு பாதுகாப்பு அளிக்கவும் முன் வர வேண்டும். அப்போதுதான் பொது இடங்களில் இளம் பெண்கள் தாக்கப்படுவது போன்ற சம்பவங்களில் உதவிக்கு வருவதற்கு மக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள்.
தங்கை இறந்த சோகத்திலும் சேவை

சேகரின் ஒரு தங்கை இறந்துவிட்டார் என்று கூறியிருந்தார் இல்லையா? அது பெரும் சோகச் சம்பவம். அவரது பெயர் தனலட்சுமி. அவரை மும்பையில் திருமணம் செய்து கொடுத்திருந்தார். 1992-ம் ஆண்டு மும்பைக் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் இவரது தங்கையின் குடும்பத்தில் ஒருவர் விடாமல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். 7 மாதம் கர்ப்பமாக இருந்த இவரது தங்கையை மத வெறியர்கள் நடு ரோட்டில் நிற்க வைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொன்றார்கள்.

பதறி அடித்துக்கொண்டு மும்பைக்கு ஓடிய சேகருக்கு தனது தங்கையின் எரிந்த சடலம்தான் கிடைத்தது. அப்போதும் கலவரம் ஓயவில்லை. ஆனாலும், மனதை திடமாக்கிக்கொண்டு கலவரப் பகுதியில் 10 நாட்கள் சமூக சேவை செய்தார் சேகர். காயம்பட்ட சுமார் 100 பேரை மருத்துவமனையில் சேர்த்தார். ஏராளமான சிறுவர்களை மீட்டு காவல் நிலையங்களில் ஒப்படைத்தார்.

இது தவிர தனி நபராக நுகர்வோர் விழிப்புணர்வு விஷயங்களிலும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறார் சேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆறே நாட்களில் சிகப்பழகு பெறுவீர்கள்’ என்று விளம்பரம் செய்த ஒரு கீரீம் நிறுவனத்துக்கு எதிராக ஒரு பெண்ணை வைத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பிரபல டிவி தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். பொதுவெளியில் எது நடந்தாலும் சலனப்படாத பெருநகர சுயநல சமூகம் சேகரைப் பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


திரைக்கு பின்னால்: பின்னணிக் குரலுக்கும் விருதுகள் வேண்டும்!


ஷாலினி, தேவயானி, சுவலட்சுமி, ரம்பா, கெளசல்யா உள்ளிட்ட பல நாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து பிரபலமானவர் ஸ்ரீஜா ரவி. அவருடைய மகள் ரவீணா தற்போதுள்ள முன்னணி நாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார். ‘ப்ரேமம்' தெலுங்கு ரீமேக்கில் மடோனாவுக்குப் பின்னணிக் குரல் கொடுத்துவிட்டுச் சென்னை திரும்பியவரிடம் பேசிய போது...

பின்னணிக் குரல் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?

எனது பாட்டி, அம்மா இருவருமே பின்னணிக் குரல் கலைஞர்கள் தான். இந்த துறைக்குள் வர வேண்டும் என நினைக்கவில்லை. வாய்ப்பு வந்தது ஏற்றுக்கொண்டேன்.

முதல் படமான ‘சாட்டை' வாய்ப்பு எப்படி அமைந்தது?

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, அப்படத்துக்காக குரல் தேர்வு நடைபெற்றுவந்தது. யாருடைய குரலுமே நினைத்த மாதிரி வரவில்லை. எனது குடும்ப நண்பர் ஒருவர் ஒலிநுட்பப் பொறியாளராக (சவுண்ட் என்ஜினியர்) பணிபுரிந்தார். ஜா அக்காவின் மகள் இருக்கிறாள்; அவளுடைய குரல் இப்படத்துக்கு சரியாக இருக்கும் என்று அவர்தான் என்னை சிபாரிசு செய்தார். கல்லூரி முடிந்தவுடன் குரல் தேர்வுக்குச் சென்றேன். குரல் தேர்வு முடிந்தவுடன், “நாளை மாலை வந்து பேசிடுமா” என்று சொல்லிவிட்டார்கள். இதுதான் குரல் தேர்வு முறை என்பது எனக்கு அப்போது தான் தெரியும்.

அதற்குப் பிறகு ‘கத்தி', ‘அனேகன்', ‘ஐ', ‘தெறி' என உங்களுடைய பயணம் பற்றிச் சொல்லுங்கள்...

ஒவ்வொரு படத்துக்கும் குரல் தேர்வு இருக்கும். இயக்குநர் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு யாருடைய குரல் பொருத்தமாக இருக்கும் எனப் பார்ப்பார். கதாபாத்திரத்தின் வயதுக்கு ஏற்றவாறு யார் பேசுகிறார்கள் என முடிவு செய்து தேர்வு செய்வார்கள். கடவுளின் ஆசியாலும் அம்மாவின் அன்பினாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தன.

உங்களுடைய பின்னணிக் குரல் பயணத்தில் அம்மாவின் ஆலோசனை என்ன?

மலையாளப் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுக்கச் செல்லும்போது என்னுடன் வருவார்கள். சென்னையில் படித்து வளர்ந்ததால், தமிழ் எளிதாகப் பேசிவிடுவேன். வீட்டில் மட்டும்தான் மலையாளம் பேசுவேன். மலபார் வட்டார மலையாளம்தான் எனக்கு வரும். ஆனால், பின்னணிக் குரல் கொடுக்கும்போது அப்படிப் பேசக் கூடாது என்று அம்மா சொல்வார்.

மலையாள இயக்குநர்கள் பின்னணிக் குரலில் ரொம்பத் தெளிவாகப் பார்ப்பார்கள். மலையாளத்தில் இப்படி பேசக் கூடாது, இந்தக் காட்சிக்கு இப்படிப் பேச வேண்டும் என்று உடன் உட்கார்ந்து அம்மா சொல்லிக் கொடுப்பார். தமிழில் நான் டப்பிங் பேசும்போது அம்மா பார்த்ததில்லை. நானும் நீங்கள் வராதீர்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன்.

தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு, இதற்கு நீ இப்படிப் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்வார். அதையெல்லாம் கேட்டு அடுத்த படத்துக்குப் பேசப் போகும் போது சரி செய்துகொள்வேன்.

உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு?

ஒவ்வொரு படத்துக்கும் அம்மாவின் பாராட்டுக்காகக் காத்திருப்பேன். எனக்கு அதுதான் ரொம்ப முக்கியம். பின்னணிக் குரலுக்காக 5 முறை மாநில விருதுகள் வென்றிருக்கிறார்கள் எனும்போது அவர்கள்என்ன சொல்கிறார்கள் என்பதை ரொம்ப முக்கியமாகப் பார்ப்பேன்.

‘ஐ' இந்தி இசை வெளியீட்டு விழாவின் போது மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை சந்தித்தேன். ஏமி ஜாக்சனுக்கு நான்தான் பேசினேன். அப்போது “நீங்கதான் பேசியிருக்கிறீர்களா? ஸ்ரீ மேடத்தின் பெண்ணா நீங்க? பின்னணி இசை பண்ணும்போது கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. Keep your good job” என்றார். ரஹ்மான் சாரின் அவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

குரலை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

நான் எதுவும் பண்றதில்லை. உண்மையில் ஐஸ்கிரீம் எல்லாம் நிறையச் சாப்பிடுவேன். டப்பிங் பேசப் போகும்போது மட்டும் இடையே சுடு தண்ணீர் எடுத்துக்கொள்வேன்.

காட்சியமைப்புகளுக்குத் தகுந்தவாறு எப்படிக் குரலை மாற்றிப் பேசுவீர்கள்?

குரல் தேர்வில் நான் தேர்வானவுடன், நான் டப்பிங் பண்ணப் போகும் கதாபாத்திரத்தின் தன்மையை இயக்குநர் அல்லது உதவி இயக்குநர்கள் விளக்குவார்கள். அவர்கள் சொல்வதை முழுக்க உள்வாங்கி அதனைக் குரலில் எடுத்துக்கொண்டு வர வேண்டும். நம்முடைய காட்சிகளை மட்டும்தான் போட்டுக் காட்டி டப்பிங் பேசச் சொல்வார்கள். முழுப் படத்தை எல்லாம் காட்ட மாட்டார்கள்.

நீங்கள் அதிகமாகக் கஷ்டப்பட்டு பின்னணிக் குரல் கொடுத்த படம் எது?

மலையாளத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்' படத்துக்காக நயன்தாரா மேடத்துக்குப் பேசியதைத்தான் சொல்வேன். ஏனென்றால் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தார். அவ்வளவு வயது முதிர்ந்த கதாபாத்திரத்துக்கு அதற்கு முன்பு பேசியதில்லை. அம்மாதான் நயன்தாராவுக்கு மலையாளத்தில் எப்போதுமே பின்னணிக் குரல் கொடுப்பார். சில நாட்கள் கழித்து மலையாளத்தில் நயன்தாரா நடிப்பதால் அம்மா என்னை சிபாரிசு செய்தார். என்னுடைய டப்பிங்கை நயன்தாரா பார்த்துவிட்டு, அடுத்த படத்துக்கும் சிபாரிசு செய்தார்.

அப்படத்தின் பின்னணிக் குரல் பணியின்போது, கண்ணை மூடி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நினைத்துக்கொண்டு பேசு என்று அம்மா கூறினார். ஒவ்வொரு காட்சிக்கும் என்னைத் தயார் பண்ணிக்கொண்டு பேச வேண்டியதிருந்ததால் ரொம்ப முக்கியமான படமாக அதைப் பார்க்கிறேன்.

படங்களின் விமர்சனத்தில் நமது பணி குறித்து எதுவும் இடம் பெறுவதில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. என்னுடைய காலத்தை விட அம்மாவின் காலத்தில் விமர்சனத்தில் பின்னணிக் குரல் எப்படியிருந்தது எனச் சொல்லவே மாட்டார்கள். மாநில விருதுகள் கிடைத்தவுடன்தான் அனைவருக்கும் தெரிந்தது. இப்போதுதான் ஒரு சில விமர்சனங்களில் டப்பிங்கையும் சேர்த்து எழுதுகிறார்கள். ‘கத்தி', ‘ஐ', ‘அனேகன்' ஆகிய விமர்சனங்களில் என்னுடைய பெயர் வந்ததில் ரொம்ப சந்தோஷம். நிறைய விருதுகள் வழங்கும் விழாவில் டப்பிங் என்ற பிரிவே கிடையாது. அதிலும் சேர்த்தால் இன்னும் நிறைய மக்களுக்குத் தெரியவரும்.

நாயகியாகிவிட்டீர்களாமே? தொடர்ந்து பின்னணிக் குரல் கொடுப்பீர்களா?

என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நாயகி தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த்துடன் ‘ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நாயகியாக அறிமுகமாகிறேன். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. பின்னணிக் குரல் கொடுப்பதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட மாட்டேன். அதுவே என் முதல் பணி.

ஆர்-காம், ஏர்செல் இணைப்பு: உருவாகிறது புதிய நிறுவனம்

THE HINDU 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் (ஆர்காம்) ஏர்செல் நிறுவனமும் கடந்த வருட இறுதியில் இருந்து இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய அதிர்வலை காரணமாக இந்த இணைப்பு உறுதியாகி உள்ளது. இணைப்பு என்பது ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வாங்குவதாகவே இருக்கும். ஆனால் இந்த இணைப்பு கொஞ்சம் வித்தியாசமானது.

இரு நிறுவனங்களும் சரி சமமாக இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கப்போகின்றன. புதிய நிறுவனத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. புதிய நிறுவனத்தில் இரு நிறுவனங்களுக்கும் 50 சதவீத பங்குகள் இருக்கும். இயக்குநர் குழுவை இரு நிறுவனங்களும் சமமாக பிரித்துக்கொள்ளும். இரு நிறுவனங்களும் சேர்த்து புதிய தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்யும். தவிர புதிய நிறுவனத்தில் அனில் அம்பானி மற்றும் மேக்ஸிஸ் குழும நிறுவனர் ஆனந்த கிருஷ்ணன் இருக்கமாட்டார்கள் என்றும் தெரிகிறது. ஒழுங்குமுறை ஆணையங்கள், பங்குதாரர்கள் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதிக்கு பிறகு 2017-ம் ஆண்டில் இந்த இணைப்பு முழுமையடையும். புதிய நிறுவனத்தின் சொத்துகள் ரூ.65,000 கோடியாகவும், அதன் சந்தை மதிப்பு ரூ.35,000 கோடியாகவும் இருக்கும். இந்த இணைப்பு காரணமாக சில சாதகங்களும் உள்ளன. அதே சமயத்தில் சில சவால்களும் இருக்கின்றன.

கடன் குறையும்

தற்போது ஆர்காம் கடன் ரூ.40,000 கோடியாக இருக்கிறது. புதிய நிறுவனம் அமைப்பதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் கடன் குறையும். ஏர்செல் நிறுவனம் ரூ.14,000 கோடியும் ஆர்காம் ரூ.20,000 கோடி கடனையும் புதிய நிறுவனத்துக்கு மாற்றுகிறது. இந்த நிறுவனங்களுக்கும் கடன் குறைந்தாலும் புதிய நிறுவனத்தின் கடன் ரூ,34,000 கோடிக்கு மேல் இருக்கும். தவிர இரு நிறுவனங்களும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.7,600 முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.

இரு நிறுவனங்களும் இணைவதில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வைத்திருக்கும் இரண்டாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் இருக்கும். 448 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை உள்ளது. இவை 2033-35-ம் ஆண்டு வரை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சந்தை நிலை

தற்போது ஆர்காம் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவன மாகும். 11 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏர்செல் நிறுவனத்துக்கு 8.4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் இணைவதால் வாடிக்கையாளர் அடிப்படையிலான சந்தை மதிப்பு 18 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. இதன் மூலம் ஐடியா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் புதிய நிறுவனம் இருக்கும். முதல் இடத்தில் 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் நிறுவனமும், 19.8 வாடிக் கையாளர்களுடன் இரண்டாமிடத்தில் வோடபோன் நிறுவனமும் இருக் கின்றன.

சவால்கள்

இதுபோல சில சாதகமான விஷயங்கள் இருந்தாலும் சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏர்செல் மற்றும் ஆர்காம் நிறுவனத்தின் முக்கியமான வருமானமே குரல் வழி அழைப்புகள்தான். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ குரல் வழி சேவைகளை இலவசமாகக் கொடுக்கும் போது, புதிய நிறுவனம் டேட்டாவை நோக்கி செல்ல வேண்டும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சஞ்சய் கபூர் கூறியிருக்கிறார்.

இரு நிறுவனங்களும் இணைந்தது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், புதிய நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எல்லை இருக்கிறது என ஐடிஎப்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் இணைப்பு

இந்த இரு நிறுவனங்களும் இணைந்தாலும் இதுவே இந்த துறையின் இறுதியான இணைப்பு அல்ல என வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். டெலிகாம் நிறுவனங்களின் செயல்பாட்டு கட்டணத்தில் 30-40 சதவீதம் வரை ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு போய்விடும். சிறிய நிறுவனங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகம். அதனால் சிறிய நிறுவனங்கள் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியாது. ஏற்கெனவே இருந்த எம்டிஎஸ், ஸ்வான், ஸ்பைஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வெளியேறி விட்டன. இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் அதிகபட்சம் 6 நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் என பிட்ச் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பேங்க் ஆப் அமெரிக்காவும் இதே கருத்தை கூறியிருக்கிறது.

மற்ற நிறுவனங்கள் என்ன செய்யும், எவை சந்தையில் நீடிக்கும் என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.

ஏமாற்றம் அளிக்கிறது சௌம்யா வழக்கின் தீர்ப்பு!

Return to frontpage

கேரள மாநிலத்தில் இளம்பெண் சௌம்யா (23) ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.

எர்ணாகுளம் - ஷோரனூர் பயணிகள் ரயிலில் 2011 பிப்ரவரி 1 அன்று பெண்களுக்கான பெட்டியில் தனியாகச் சென்றிருக்கிறார் சௌம்யா. அந்தப் பெட்டி யில் ஏறிய கோவிந்தசாமி, சௌம்யா வைத்திருந்த கைப்பையைப் பறிக்க முயன்றிருக்கிறார். அவர் தடுக்க முற்பட்டபோது அவரைத் தாக்கியிருக்கிறார்.

பிறகு, ரயிலிலிருந்து தள்ளப்பட்ட நிலையில், சுயநினை வற்றுப்போன சௌம்யாவைப் பாலியல் வல்லுறவுக்கும் ஆட்படுத்தியிருக்கிறார் கோவிந்தசாமி. காணாமல்போன சௌம்யாவைப் பல இடங்களிலும் தேடிய போலீஸார், பிப்ரவரி 6 அன்று தண்டவாளத்தின் அருகே கிடந்த அவரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. கேரள மக்களைக் கொந்தளிக்க வைத்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது அரசு. பிரேதப் பரிசோதனை மருத்துவர், ‘சௌம்யா ரயிலிலிருந்து குதிக்கவில்லை, தள்ளப்பட்டிருக்கிறார்’ என்று காயங்களின் அடிப்படையில் அறிக்கை அளித்திருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த வேறு சிலர் அளித்த முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்ட னையாக மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனிப்பட்ட நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களைவிட, தடய அறிவியல்பூர்வமாகத் தரப்படும் ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளவை. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமல்போனது துரதிர்ஷ்டம். விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். கோவிந்தசாமி தரப்பில், அனுபவம் உள்ள பெரிய வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அவர் இந்த வழக்கில் காவல் துறையினர் விட்ட ஓட்டைகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறார்.

கேரள அரசோ, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதாட புதிய வழக்கறிஞரை அமர்த்தியிருக்கிறது. அவருக்கு இந்த வழக்கின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள நேரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

தீர்ப்பு சௌம்யா குடும்பத்தவருக்கு மட்டுமல்ல; நாட்டின் பெரும்பாலானோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யிருக்கிறது. அரிதினும் அரிதான இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனைப் பெறும் அளவுக்குத் தகுதி யானவர் அல்ல குற்றம்சாட்டப்பட்டவர் என்பதே பெரும் பாலானவர்களின் கருத்து. பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் இந்நாட்களில் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுப்பதாகத் தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் காவல் துறை, நீதித் துறை இரண்டும் ஒருங்கிணைந்து, விரைவாகச் செயல்பட வேண்டும்.

NEWS TODAY 23.12.2025