Thursday, November 10, 2016

When Chennai had money, no cash

TIMES OF INDIA

Usually, S Saravanakumar orders idli, sambar and coffee for breakfast. On Wednesday, though, the software engineer made do with a cup of coffee. The restaurant he frequented, like many others in the city, had pasted notices saying `500 and `1,000 currency notes would not be accepted, and requested exact change.

"I could order only coffee as I had only one `50 note," said Saravanakumar, a regular customer at Sangeetha restaurant in Mylapore. He was not the only one affected. After `500 and `1,000 notes were demonetised, the eating out and shopping scene in the city were particularly impacted, with many retailers refusing to accept the scrapped notes or even cash on delivery.

A few restaurants refused to accept cash altogether. Rain Drops, a part of KTDC hotel on Greams Road, pasted notices on the door saying the 'banned' notes would not be accepted. It also refused to accept cash for the lunch buffet, priced at `175. "The staff told us to pay by card," said a customer.

Restaurants also registered fewer footfalls. At Saravanas on Radhakrishnan Road, there were hardly any customers. "It has been dull since morning. Usually, the parking would be full during lunch hour but today it is vacant. We think it will take at least three days for things to settle down," said a staffer.

Customers logging into the website of food delivery start-up Swiggy were greeted with this message: 'Change' is great. Except for today. Use any one of our many payment options to place your order. COD has been paused temporarily."

Supermarkets and bakeries that wouldn't accept cards for purchases below `200 ensured their business wouldn't suffer by accepting cards even for amounts below `100.

Soon after the news broke on Tuesday night, many headed not just to ATMs and petrol bunks but also jewellery stores. Even the soaring price of gold on Wednesday didn't deter them from trying to turn their stashed away cash into yellow metal and many stores obliged. However, some like Tanishq sent out messages saying, as per RBI guidelines, their showrooms would not accept the demonetised notes.

Small roadside vendors took a hit, though. "I always avoid taking `500 and `1,000 notes because of the fake currency scare. We usually change it for lower denominations at the Koyambedu market at the end of the day," said Kanakavalli, a fruit vendor on C P Ramaswamy Road, Alwarpet. "Today, business has been very bad. I usually make about `4,000 a day, but today I haven't even crossed `300. Even my regular customers have bought fruits on credit and promised to pay later."

கருப்புப் பணத்துக்குக் கடிவாளம்!

By ஆசிரியர் | Published on : 10th November 2016 01:37 AM |

இப்படியொரு அதிரடி முடிவை பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்க முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்களும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுமே கூட எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் என்று தெரிந்தும், அவர்களது வெறுப்பையும் விரோதத்தையும் தானும் அரசும் சம்பாதித்துக் கொள்ளும் என்பதை உணர்ந்தும்கூட இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியாக வேண்டும்.
ரூ.500, ரூ.1,000-க்கான காகிதச் செலாவணியை ஒரு அதிரடி உத்தரவின் மூலம் செல்லாமல் ஆக்குவது என்பது எளிதில் எடுத்துவிடக் கூடிய முடிவல்ல. இதற்குப் பின்னால் தீவிரமான ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படியொரு திட்டம் அரசிடம் இருக்கிறது என்பதையும், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் ரகசியமாகப் பாதுகாப்பது என்பது அசாத்தியம். ஏதாவதொரு விதத்தில் அது வெளியாகிடும். ஊடகங்களுக்குக் கசிந்துவிடும். கருப்புப் பண முதலைகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு விடும். அதையும் மீறி, ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது என்றால் அதுவே மிகப்பெரிய வெற்றி.
சுதந்திர இந்திய சரித்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது துணிச்சலான நடவடிக்கை இது. பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகள் தேசியமயமாக்கலும், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேர்ந்த காலகட்டத்தில், பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டு, தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்திய பிரதமர் நரசிம்ம ராவின் முடிவு, உலக வல்லரசுகளின் எதிர்ப்பையும், அவர்கள் விதிக்க இருக்கும் பொருளாதாரத் தடையையும் நன்றாகவே உணர்ந்திருந்தும், 1998-இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு போக்ரானில் அணுஆயுத பரிசோதனை நடத்தி இந்தியாவை அணுஆயுத பலம் பொருந்திய நாடாக அறிவித்தது ஆகியவற்றிற்குப் பிறகு, இப்போது கருப்புப் பணத்துக்கும், கள்ளப் பணத்துக்கும் எதிராக நரேந்திர மோடி அரசால் எடுக்கப்பட்டிருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைச் செல்லாததாக்கும் இந்த முடிவு, சமூக விரோதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.
உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாலே போதும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும். இதைக் குறிவைத்துத்தான், நரேந்திர மோடி அரசு மறைக்கப்பட்ட வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. அதை பயன்படுத்தி கொண்டு கருப்புப் பணத்துக்கு வரி கட்டி சரி செய்து கொள்ள அரசு அளித்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் போனவர்கள், இப்போதைய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்காக நாம் ஏன் அனுதாபப்பட வேண்டும்?
இந்தியாவில் ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடி கருப்புப் பணம் புழங்குகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் வெறும் 1% பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள். அன்றைய புள்ளிவிவரப்படி, கணக்குத் தாக்கல் செய்யும் 2.87 கோடி பேர்களில், 1.62 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருப்பதாகக் கணக்குக் காட்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 26 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன.
இதைக் குறி வைத்துத்தான் மோடி அரசு, பரவலாக வங்கிக் கணக்குகள் தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுக்களின் மதிப்பு ஏறத்தாழ ரூ.16 லட்சம் கோடி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இதில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களின் அளவு மட்டுமே 85%. இந்தப் பணம் வங்கிப் பரிமாற்றமாக இல்லாமல் இருப்பதால்தான் கருப்புப் பணம் உலவ முடிகிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைத் தடாலடியாகச் செல்லாததாக்குவதால், ஒன்று அனைத்துப் பணமும் வங்கி வளையத்துக்குள் வர வேண்டும், அதற்குக் கணக்குக் காட்டப்பட்டு வருமானவரி கட்டப்பட வேண்டும். அப்படிக் கணக்குக் காட்ட முடியாவிட்டால் குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுக்களை அச்சடித்து உலவ விட்டிருக்கிறது. இப்போது அந்த நோட்டுக்கள் செல்லாததாகிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பட்டிருக்கிறது.
அரசு எதற்காகப் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரேயடியாக பணப் பரிமாற்றம் அனைத்தையும் வங்கிப் பரிவர்த்தனையாக மாற்றுவது சாத்தியமல்ல. அடுத்த சில ஆண்டுகளுக்கு, நாணயமான பரிவர்த்தனைக்கு உதவ புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதைப் படிப்படியாகக் குறைத்து வங்கிப் பரிமாற்றம் மூலம் மட்டுமே பெரிய தொகைகளுக்கான பரிமாற்றங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என்று தோன்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடந்திருக்கின்றன. எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கப் புதிய கரன்சி நோட்டுக்கள் அடிக்கப்பட்டுத் தயார் நிலையில் வங்கிகளுக்கு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாள்கள் சாமானிய மக்கள் சிறிது சிரமம் அனுபவிக்க நேரும்தான். ஆனால், கருப்புப் பணத்துக்கு நிரந்தரக் கடிவாளம் போடுவதற்கு நாம் ஒத்துழைத்துத்தான் தீர வேண்டும்.
சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையோ, சிரமமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், அதே நேரத்தில் கருப்புப் பண முதலைகள் தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்காமல் பார்த்துக் கொள்வதிலும் அரசு கவனமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் இந்த அளவுக்குத் திட்டமிட்டு ஒரு நடவடிக்கை மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்பதை நினைத்தால் மலைப்பு மேலெழுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாக சரித்திரம் இந்த முடிவைப் பதிவு செய்யப் போகிறது.
"கருப்பு வெள்ளை நிஜம்!' என்ற தலைப்பில் 14.10.2016 அன்று "தினமணி'யில் வெளிவந்த தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், "ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களே இல்லாமல் ஆக்குவது அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிப் பரிமாற்றமாக்குவது என்கிற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போட்டு விடலாம். ஆனால், இதற்கு எந்த அரசும் முன்வராது. அதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இதுதான் கருப்பு, வெள்ளை நிஜம்!' என்று எழுதியிருந்தோம்.
துணிச்சலுடன் நரேந்திர மோடி அரசு, கருப்புப் பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறது. இதுதான் கருப்பு வெள்ளை நிஜம்!

உன்னத மன்னர் திப்பு சுல்தான்

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 10th November 2016 01:36 AM  |

ஆடுகளாய் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைவிட, சிங்கமாக ஒரே நாள் வாழ்வது மேல்' என்ற வீர வரிகளின் விலாசமாய் நிற்பவன் தீரன் திப்பு சுல்தான்.
நவம்பர் 10 அன்று திப்பு சுல்தானுக்கு கர்நாடக அரசு விழாவெடுக்க முன்வந்ததும், அதைக் கடுமையாக எதிர்ப்போர் திப்பு சுல்தானை மதவெறி மன்னனாக சித்திரிப்பதும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி "திப்பு ஒரு மன்னன்தானே தவிர சுதந்திரப் போராட்ட வீரன் இல்லை. அவனுக்கு விழா எடுக்க அரசு ஆர்வம் காட்டுவது அவசியமா' என்று வினாத் தொடுத்திருப்பதும், தியாக வரலாறுகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டிய அவசியத்தையும், சொல்லப்படாவிட்டால் நிகழும் அபாயத்தையும் உணர்த்துகின்றன.
சென்னையிலே வால்டாக்ஸ்(Wall Tax) சாலை மிகப் பிரபலம். (Wall Tax) என்ற சுவர் வரி ஏன் விதிக்கப்பட்டது என்ற வரலாறு பலருக்கும் தெரியாது. "சென்னைப் பட்டணத்தில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் மீது, ஹைதர் அலி அடிக்கடி அதிரடித் தாக்குதல் தொடுத்து, அவர்களை அலற வைத்துக் கொண்டிருந்தார்.
ஹைதர் அலியின் படையெடுப்பைத் தடுக்க ஒரு நெடுஞ்சுவர் எழுப்பவும், அதற்கான நிதிக்காக விதிக்கப்பட்டதே வால்டாக்ஸ்' என்றும் தனது ஆய்வுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் தஸ்தகீர்.
திப்பு சுல்தானைத் தனது "யங் இந்தியா' இதழில் மிகவும் பாராட்டி எழுதியுள்ள தேசத் தந்தை காந்தியடிகள்,
"நல்லதொரு முஸ்லிமான அவர், மதுவிலும், மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராகவும் வாழ்ந்தார். வருமான இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை அமல்படுத்திய திப்பு ஓர் உன்னதமான மன்னர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசத்தின் வரலாற்றை The Discovery of India என்று எழுத்தோவியமாய்த் தீட்டிய பண்டித ஜவாஹர்லால் நேரு, "ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேரெதிரிகளாய் நின்றனர். படுதோல்விகளை பிரிட்டிஷாருக்கு பரிசளித்து, அவர்களின் ஆளுமைக் கனவுகளைத் தகர்த்து வந்தனர்' என்று புகழாரம் சூட்டுகிறார்.
"திப்பு விடுதலைப் போரின் முன்னோடி' என்ற முனைவர் வெ. ஜீவானந்தம் தொகுத்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்,
"மதவாதம் பெரும் நோயாகி, நமது சமுதாயத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பைத்தியக்காரத்தனமான மதவெறியும், மூர்க்கம் மிகுந்த வழிதவறிய சிந்தனைகளுமே இந்த அவலத்தின் காரணமாகும்.
இவர்கள் வரலாற்று நாயகர்களைக் கூட பொய்யான கதை கட்டி இனவெறியர்களாகவும், மதவெறியாளர்களாகவும் சித்திரிக்கிறார்கள். சிறந்த மனிதாபிமானியும், சமய ஒற்றுமை பேணியவருமான திப்பு கூட இத்தகைய அவதூறுகளிலிருந்து தப்பவில்லை.
திப்புவின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மசூதியும், ரங்கநாதர் ஆலயமும் அருகருகே எந்த பாதிப்பும் இன்றி, இன்னுமிருப்பதைக் காணலாம். திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் இந்த ஆலயம் அல்லவா முதல் பலியாகியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார்.
சிறந்த மன்னனாக, சீர்திருத்த நாயகனாக, அறிவியல் தொழில்நுட்ப ஆர்வலனாக, ஆன்மிகத் தேடல் உள்ளவனாக, விவசாயிகளின் தோழனாக, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் எதிரியாக, அனைத்து சமயத்தினர்க்கும் பொதுவானவனாக கல்வியாளனாக, களப் போராளியாக - இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட திப்பு சுல்தானை, தப்பு சுல்தானாகக் காட்டும் தகாத செயலுக்கு உந்து சக்தியாக இருப்பது எது என சிந்திக்க வேண்டும்.
"தன்மானமும், மண்மானமும் காக்க இஸ்லாமிய நிஜாமையும், கிறிஸ்தவ ஆங்கிலேயரையும், இந்து மராட்டியரையும் எதிர்த்தவன் திப்பு சுல்தான்' என்று குறிப்பிடுகிறார் குமரி அனந்தன்.
மார்பை மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டப் பெண்களின் நிலை கண்டு துடித்து, அதற்குக் காரணமான மரபையும், வறுமையையும் மாற்றியவன். ஆயுதத் தொழிற்சாலையின் கழிவான கந்தக அமிலம் காவிரியை மாசுபடுத்துவது கண்டு பொறுக்காமல், ஆலையையே இடம் மாற்றியவன்' என்று திப்பு சுல்தான் இந்தத் திருநாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை அழகுறப் பதிவு செய்துள்ளார் குமரி அனந்தன்.
திப்பு சுல்தான் பற்றி ஆவணங்களை லண்டன் அருங்காட்சியகத்தில் தேடிப் பிடித்து, ஒரு நூலை எழுதுகிறார் பகவான் எஸ். கித்வானி. இந் நூல்தான் பிற்காலத்தில் Sword of Tipu Sultan' என்ற பெயரில் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது.
இந்தத் தொடருக்குப் பெரும் நெருக்கடிகள் தரப்பட்டன. படப்பிடிப்பு நடந்த பிரிமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 55 பேர் மரணமடைந்தனர்.
அப்போதைய அரசு மல்கானியை இத் தொடரின் ஒரு நபர் தணிக்கையாளராக நியமித்தது. அவரது வற்புறுத்தலின்படி, ஆய்வுநூலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத் தொடர் முற்றிலும் ஒரு கற்பனைக் கதை என போடப்பட்டது.
திப்பு சுல்தானைப் பற்றிய கொடிய அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கொல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்த, ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய பள்ளிப் பாடநூலுக்கான கட்டுரையில், "திப்பு முஸ்லிமாக மாற வற்புறுத்தியதால் 3,000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஒடிஸா மாநிலங்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடிஸாவின் முன்னாள் ஆளுநருமான பி.என். பாண்டே, ஹரிபிரசாத்தைத் தொடர்பு கொண்டு, அவரது கூற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டபோது, அவரால் தர இயலவில்லை. பிறகு பாண்டேவின் முயற்சியால் அப்பாடப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தானின் மிக நெருங்கிய உதவியாளரான பூர்ணய்யா, ஒரு பிராமணர். அவர் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும் என்று சிலர் குற்றம் சாட்டியபோது, "யாரோ சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே நிந்திப்பது கூடாது' என்ற குர்ஆனின் கருத்தை எடுத்துரைத்து அவர்கள் கூற்றை மறுத்துள்ளார் திப்பு சுல்தான்.
சமய நிறுவனங்களுக்கு திப்புவின் ஆட்சியில், ஓராண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2,33,959 வராகன்கள். இதில் 2,13,959 வராகன்கள் இந்துக் கோயில்களுக்கு செலவிடப்பட்டது.
மூன்றாம் மைசூர் போரின்போது, பரசுராம் பாவே தலைமையில் படையெடுத்து வந்த இந்து வீரர்களைக் கொண்ட மராட்டிய படை சிருங்கேரி மடத்தை சூறையாடி 17 லட்சம் வராகன் மதிப்பிலான பொருள்களைக் களவாடிச் சென்றது. அப்போது பீடாதிபதியாக இருந்த சச்சிதானந்த பாரதியும், அவரது சீடர்களும் கர்க்கலாவிற்குத் தப்பிச் சென்றனர்.
மடத்தின் மூல விக்ரகமான தங்கத்தால் ஆன சாரதா தேவி சிலையும் கொள்ளை போனது. சிருங்கேரி மடத்திற்கு மராத்தியர்கள் செய்த கொடுமைக்கு இழப்பீடாகப் பெரும் பொருளுதவிகளை வழங்கி ஆறுதல் தந்தது திப்பு சுல்தான்தான்.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு திப்பு வழங்கிய 9.5 அங்குல உயரமுள்ள பச்சை மரகதலிங்கம் பாதுஷா லிங்கம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
திண்டுக்கல் போரின்போது, கோட்டையைப் பின்புறமிருந்து தாக்கினால் எளிதாக வீழ்த்தலாம் என்ற ஆலோசனை திப்புவுக்கு வழங்கப்பட்டது. அப்படித் தாக்கினால் அங்கிருந்த சிவன் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையறிந்து, அந்த வியூகத்தையே திப்பு கைவிட்டார்.
திப்புவின் ஆட்சியில் ஆளுநர் ஒருவர் காவிரி நீர் கீழ்பவானி பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுப்பணை கட்டினார். கீழ்பவானி விவசாயிகளான தமிழர்கள் திப்புவை சந்தித்து முறையிட்டனர்.
தமிழக விவசாயிகளின் நியாயப்பாட்டை ஏற்றுக் கொண்ட திப்பு, சூரியனும், சந்திரனும் உள்ளவரை, மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் தண்ணீரைப் பிறரைப் பாதிக்கும் வகையில் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி தடுப்பணையை உடைத்துள்ளார்.
நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய சமூக அநீதிகளை சரிசெய்ய அரசு முதலாளித்துவம்(State Capitalism) என்ற கோட்பாட்டை திப்பு சுல்தான் அறிமுகப்படுத்தினார். சோஷலிசத்தை ஐரோப்பா சிந்திக்கத் தொடங்கும் முன்பே அதை நடைமுறைப்படுத்தியவர் திப்பு சுல்தான்.
அருகமைப் பள்ளிகளே கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நம்பிய திப்பு ஆறு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் திறந்ததும், கானுயிர் காப்பகத்தை முதலில் நிறுவியதும், அவரது தொலைநோக்கையும், மக்களின் மீதான பற்றையும் காட்டுவன.
17 வயதில் படைத் தளபதியான திப்பு, 1767-ஆம் ஆண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படையை எதிர்த்துப் போரிட்டு முதல் வெற்றியை ருசித்த இடம் தமிழகத்தின் வாணியம்பாடி.
திப்புவைக் கொன்று, அவனது பிள்ளைகளை வேலூரில் சிறை வைத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். 1806-ஆம் ஆண்டு திப்புவின் பிள்ளைகள், வேலூர் புரட்சியை சிறையிலேயே நடத்தி, கோட்டையில் பறந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கி, புலிக்கொடியை பறக்கவிட்டனர்.
திகைக்க வைக்கும் தீரத்தை கொண்ட திப்பு சுல்தானைக் கொண்டாடுவதன் மூலம், இளைய தலைமுறை ஏற்றமிகு சிந்தனையையும், எழுச்சிமிகு தியாகத்தையும் இதயத்தில் பதியமிடும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும்

By DIN  |   Published on : 10th November 2016 05:29 AM 


செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் தற்போது செலுத்தும்போது, அந்தப் பணத்துக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதேசமயத்தில், மக்களிடம் தற்போது இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இரு வாரங்களுக்குள் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளவும், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செலுத்தப்படும் பணத்துக்கு கணக்குக் காண்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் மக்களுக்கு இருந்து வரும் சூழலில், இதுதொடர்பான விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்துள்ளார்.
இதுகுறித்து, தூர்தர்ஷன் செய்தித் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பணப்புழக்கத்தில் பெரும் பங்கு வகித்து வந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்திருப்பது, கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு மைல் கல் ஆகும். மேலும், இந்த அறிவிப்பால் ஊழலையும், கள்ளநோட்டு புழக்கத்தையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
தற்போது மக்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ கொடுத்து அவற்றுக்குப் பதிலாக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. இல்லையெனில், தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அவரவர் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறு வங்கிகளில் மாற்றப்படும் அல்லது செலுத்தப்படும் பணத்துக்கான மூல ஆதாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பணத்துக்கு எந்த வரிச்சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. அதேசமயத்தில், அன்றாடச் செலவுகளுக்காக வீடுகளில் இருக்கும் பணத்துக்கு (ரூ.50 ஆயிரம் வரை) எந்த ஆதாரமும் காண்பிக்கத் தேவையில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும், ஊழல்வாதிகளுமே பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக சம்பாதிப்பவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த அறிவிப்பு வெளியான முதல் இரண்டு வாரங்கள் மட்டும் வங்கிகளில் பணப் பரிமாற்றத்தில் சிறிது பாதிப்பு இருக்கும். பின்னர், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துவிடும் என்பதால், பணப் பரிமாற்றம் வழக்கம்போல் நடைபெறும்.
இந்த நடவடிக்கையால், நாட்டில் மின் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும். குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இருப்பதால் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிலை நீடிக்கும்போது, அதிக வரி செலுத்துவோர் வசிக்கும் நாடாக எதிர்காலத்தில் இந்தியா மாறும் என்றார் அருண் ஜேட்லி.





ரூ.500, ரூ.1000 நோட்டை மாற்ற படிவம் பூர்த்தி செய்வது அவசியம்: இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம்

By DIN  |   Published on : 10th November 2016 04:42 AM 

வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான சிறப்புப் படிவத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றுவதற்கு இந்த சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து அளிப்பது அவசியம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கிகளின் உயர் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
இன்று முதல்...: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) முதல் மாற்றிக் கொள்ளும் ஏற்பாடுகளை தமிழகம் உள்பட நாடு முழுவதும் வங்கிகள் அனைத்தும் செய்து தயார் நிலையில் உள்ளன.
சிறப்புக் கவுன்ட்டர்கள்: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும்.

சிறப்புப் படிவம் இலவசம்:

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு வைத்துள்ளோர் சிறப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை எந்த வங்கிக் கிளையிலும் அளித்து மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.
அடையாள அட்டை பிரதி அவசியம்: கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையின் பெயர், வாடிக்கையாளரின் பெயர், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச் சீட்டு ("பாஸ்போர்ட்'), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவற்றின் ஏதாவது ஒன்றின் பிரதியை சிறப்புப் படிவத்துடன் அளிப்பது அவசியமாகும். அடையாள அட்டையின் எண்ணை சிறப்புப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.எந்த வங்கிக் கிளை
யிலும்...: தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில்தான் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; மேலும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வங்கிக் கணக்குப் புத்தகம் ("பாஸ் புக்') தேவையில்லை.

ஒவ்வொரு நாளும் ரூ.4,000 அளவுக்கு பழைய நோட்டுகளை மாற்றும்போது சிறப்புப் படிவத்தை அளிப்பது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ள புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வெள்ளிக்கிழமை (நவ.11) முதல்தான் புழக்கத்துக்கு வர உள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாழக்கிழமை (நவ.10) மாற்றும் பொது மக்களுக்கு ரூ.100 எண்ணிக்கையில்தான் மாற்று நோட்டுகள் வழங்கப்படும்.
கணக்கில் பணம் செலுத்த...: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை;

வங்கிகளுக்கு இருப்பில் உள்ள அனைத்து பழைய ரூ.500, ரூ.1,000 பழைய நோட்டுகளை எடுத்துச் சென்று வழக்கம்போல் சேமிப்புக் கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது மிகவும் சிறந்தது; வாடிக்கையாளர்கள் பழைய ரூ,500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
பழைய 500, 1,000 ரூபாய் பறிமுதல் செய்ய உத்தரவு

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றால், வழக்கம்போல் பறிமுதல் செய்ய, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு கட்சியினரும், மாநிலம் முழு வதும் உள்ள, கட்சி நிர்வாகிகளை, மூன்று தொகுதிகளில் குவித்துள்ளனர். அவர்கள் ஓட்டல், திருமண மண்டபம், வீடு போன்றவற்றை வாடகைக்கு எடுத்து தங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில், அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது; அதன் அடிப்படையில், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.இம்முறை, அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இந்நிலையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், நேற்று முன்தினம் இரவு முதல் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால், தேர்தலில் பணத்தை வாரி இறைக்க தயாராக இருந்த, கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். எனினும், டிச., 30 வரை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதால், கையிருப்பில் உள்ள, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை, வாக்காளர்களுக்கு வழங்கலாமா என, ஆலோசித்து வருகின்றனர்.எனவே, வாகன சோதனையில் ஈடுபடும் அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை, பறிமுதல் செய்யாமல் இருக்கக் கூடாது; வழக்கம்போல், அவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
'பங்க்'குகளில் சில்லரைக்கு பதில் துண்டு சீட்டு

தாம்பரம்,: பெட்ரோல், 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தவர்களுக்கு, சில்லரைக்கு பதிலாக, துண்டு சீட்டே அளிக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகள், அஞ்சலகங்கள், பெட்ரோல் 'பங்க்'களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை, மேற்கு தாம்பரம், கடப்பேரியில் உள்ள தனியார் பெட்ரோல், 'பங்க்'கில், வாகன ஓட்டிகள் பலர் பெட்ரோல் போட சென்றனர். 'பங்க்' ஊழியர்கள், 'சரியான சில்லரை கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் போடப்படும்' என, தெரிவித்தனர்.அதே நேரம், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தள்ளி விடுவதற்காகவும், பலர் பெட்ரோல் போட வந்தனர். அவர்கள் முழு பணத்துக்கும் பெட்ரோல், டீசல் போட்டு சென்றனர்.சில வாகன ஓட்டிகள், 100, 200, ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என, 'பங்க்' ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சில்லரை பிரச்னையால், 'பங்க்' ஊழியர்கள், துண்டு சீட்டில், 'பங்க்' முத்திரையுடன், மீதி சில்லரை தொகையை எழுதி கொடுத்து, அனுப்பினர்.அடுத்தடுத்த நாட்களில், அந்த துண்டு சீட்டை காண்பித்து, அதில் உள்ள மீதி தொகைக்கு, வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு கொள்ளலாம் என, 'பங்க்' சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...